#sree lalithaa sagasranaamam.
*ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 239*
*இன்று நாம் அறிந்து கொள்ளும் திருநாமம்*
*... சந்த்ரவித்யா.....*
*🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱*
சந்த்ரவித்யா
""""""""""""""""""”""""”🙏🙏
சந்திரனால் உபாசிக்கப்பெற்ற வித்தைகளின் வடிவானவள் அன்னை ..
*விளக்கம் 🙏*
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
🔱அன்னையையே சந்த்ரவித்தை என்று சித்பவானந்தரும், சந்திரனால் உபாசிக்கப்பட்ட வித்தைகளின் உருவென்று பாஸ்கரராயர் உரையும் கூறுகின்றன. சூரியன் வெப்பம், ஒளி இரண்டையும் தருகிறான்; வெப்பமோ சிறிதளவேனும் துன்பத்தைத் தருவது. சந்திரனோ ஒளியை மட்டுமே தருகிறான். அதில் இனிமை மட்டுமே உண்டு. ஆதலால் சந்திரவித்தை என்பது அனைத்துவிதமாகவும் இன்பமே தரும் கலையாக இருக்கிறது. அத்தகைய வித்தைகளின் மொத்தமாகவும் அன்னையிருக்கிறாள் என்றும் பொருள் கொள்ளலாம். சந்திரனும் அத்தகைய இன்பம் தரும் கலைகளை/வித்தைகளையே உபாசித்ததாகக் கொள்ளலாம்239 வது திருநாமம் ஆகும் .,..
🌹🌹 ஐயா சிவசிவ அரகர அரகரா 🌹🌹
*🙏🙏🙏 ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி 🙏🙏🙏*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
🟩🟫🟩🟫🟩🟫🟩🟫🟩🟫🟩🟩🟫🟩🟫🟩🟫🟩🟫🟩🟫🟩