#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #💥ஓம் ந ம சி வா ய💥 அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை*
புரிசை அகத்தீஸ்வரர் திருக்கோயில், புரிசை, அனக்காவூர் (வழி), செய்யாறு வட்டம் – . திருவண்ணாமலை மாவட்டம்
இறைவன்: அகத்தீசுவரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி
‘புரிசை’ என்னும் பெயரில் இரண்டு ஊர்கள் உள்ளன. 1. வந்தவாசிக்கும் செய்யாற்றுக்கும் இடையில் உளளது. 2. தக்கோலம் அருகில் உள்ளது. சுந்தரர், தம் தேவாரத்துள் கூறும் பொன்னூர் நாட்டுப் பொன்னூர், இவ்வூருக்கு அருகில் இருப்பதாலும், புரிசை நாட்டுப் புரிசை என்று, பொன்னூரை அடுத்துப் புரிசையைச் சுந்தரர் குறிப்பிடுவதாலும், முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள வந்தவாசியை அடுத்துள்ள புரிசையே வைப்புத் தலமாகும்.
இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். செய்யாறு – வந்தவாசி சாலை வழியில் செய்யாற்றில் இருந்து தென் கிழக்கே 10 கி.மீ. தொலைவில் புரிசை அமைந்துள்ளது. #ஈசனைதேடிகுழு2026-- தமிழ் நாடு வந்தவாசிக்கும் செய்யாற்றுக்கும் மத்தியில் உள்ளது. சாலையில் ‘புரிசை’ என்ற பெயர்ப் பலகையுள்ள இடத்தில் திரும்பி ஊருள் விசாரித்து செல்ல வேண்டும்.
சுவாமியை தரிசிக்க உள்ள சாளரத்தின் உட்புறத்தில் அகத்தியர் வழிபடும் சிற்பம் உள்ளது. கருவறையின் வெளிப்புறத்தில் – மகாமண்டபச் சுவரில் நாயன்மார்களின் வரலாற்றுச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன.
மேலும் காமதகனம், இராவணன் கயிலையை எடுப்பது போன்ற புராணச் சிற்பங்களும், சிவமூர்த்தங்களும் உள்ளன.
அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம்: அகத்தியப் பெருமான் வடக்கிலிருந்து தென்னகம் குறிப்பாகத் தமிழகம் வந்தபோது 108 இடங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சிவலிங்கங்கள் யாவும் அதிக அளவில் தொண்டை நாட்டில் உள்ளன. இந்த ஊரில் உள்ள சிவலிங்கமும் ஸ்ரீஅகத்தீசுவரர் என்கிற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலை மூன்று நிலைகளும் ஐந்து கலசங்களும் கொண்ட ஒரு ராஜகோபுரமும் அலங்கரிக்கின்றன.
சுயம்புலிங்கம், நீண்டுயர்ந்த பாணம். கருவறையில் ஈசனை அகத்தியர் வழிபடும் நிலையில் அவர் உருவம் உள்ளது. கருவறை கோஷ்ட மூர்த்திகளாக துர்க்கை, பிரம்மன், மகா விஷ்ணு, தட்சிணாமூர்த்தியும் சண்டிகேசுவரரும் கோயில் கொண்டுள்ளனர்.
திருமணத்தலம்: நந்தி மண்டபத்தின் இடப்புறம் அம்பாள் அகிலாண்டேசுவரி சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் அங்குச, பாசம், அபய, வரத முத்திரைகள் தாங்கி கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறாள். அம்பாள் கிழக்கு நோக்கிக் காட்சியளிப்பதால் திருமணத்தலமாகக் கருதப்படுகிறது. #ஈசனைதேடிகுழு2026-- இருவரும் எதிர் எதிரே மாலை மாற்றும் நிலையில் இருப்பதால் இங்கே வந்து வழிபடுவோருக்குத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
சென்னையிலிருந்து 105 கி.மீ. தொலைவிலும் செய்யாறிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் இந்தத் திருத்தலம் உள்ளது.