திருநீற்றுச் சுவடு
617 views
2 days ago
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #✡️ஜோதிட பரிகாரங்கள் சிறிய வீட்டில் வசித்தால், "அதோ அந்த பங்களா இருக்கிறதே! அதைப்போல பெரிய வீடு ஏதாவது அமையாதா" என ஏங்குகிறார்.வீட்டில் வசதிகள் அதிகமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இதோ ஒரு சம்பவம். தேவலோக அரசன் இந்திரன், எந்த உலகத்திலும் இல்லாத அளவு ஒரு பெரிய மாளிகை கட்டும்படி தேவலோக சிற்பி விஸ்வகர்மாவுக்கு உத்தரவிட்டான். விஸ்வகர்மா ஒரு மாளிகையை கட்ட ஆரம்பித்தார். இந்த சமயத்தில் நாரதர் அங்கு வந்தார் அவரிடம் மாளிகை கட்டுமான பணியை காட்டிய இந்திரன்,"இதைவிட பெரிய மாளிகையை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?" எனக் கேட்டான். "இந்திரா! இந்தக் கேள்விக்கு என்னை விட சிறந்த பதில் தருபவர் ரோமச முனிவர். அவர் வயதில் பெரியவர். பல உலகங்களுக்கும் சென்று வந்தவர் அவரிடம் கேள்"என சொல்லி சென்றுவிட்டார். அந்த சமயத்தில் ரோமசர் அங்கு வந்தார். அவரது தலையில் ஒரு சிறிய பாய் மட்டும் இருந்தது. அவரிடம் இந்திரன், "இந்த பாய் எதற்கு? பெரிய வீடு கட்டி அதில் தங்க வேண்டியதுதானே" என கேட்டான். "இந்திரா! இந்த சிறிய உடலை மழை வெயிலில் இருந்து பாதுகாக்க இது போதும் என் உடலில் உள்ள ரோமங்கள் முழுவதும் உதிர்ந்தால்தான் எனக்கு இறப்பு வரும். இதுவரை மார்பில் ஒரு காசு அளவு மட்டுமே ரோமம் உதிர்ந்திருக்கிறது. 16 இந்திரர்கள் வாழும் காலம், பிரம்மாவுக்கு ஒரு நாள். அப்படி 365 பிரம்ம நாட்கள் கழிந்த பிறகு தான் ஒரு ரோமம் உதிரும். அப்படி குறைந்த நாட்கள் வாழப்போகும் எனக்கு எதற்கு வீடு?" என்றார். எண்ணிப் பார்க்க முடியாத நாட்கள் வாழ போகிற ஒருவர் கூட, அடக்கமாக தன் வாழ்நாள் பற்றி பேசுகிறார். வீடு தேவை இல்லை என்கிறார். குறைந்த காலமே வாழப் போகும் தனக்கு எதற்கு பெரிய வீடு என யோசித்த இந்திரன், மாளிகைப் பணியை அத்துடன் நிறுத்தி விட்டான். நமது சிறிய உடலுக்கு சிறிய இடமே போதும் என்பதை உணர்த்துகிறது இந்த சம்பவம். #பக்தி #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶