ஃபாலோவ்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
22,392
போஸ்ட்
123,896
பின்தொடர்பவர்கள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
783 காட்சிகள்
குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( தொடர்ச்சி ) பகுதி 208 முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார் மந்திர ரூபமாக, இந்த உடலை இல்லை என்று பண்ணி, அப்ராக்ருதமான உயர்ந்த திருமேனியை அடைந்து பகவானை அர்ச்சிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆத்ம வஸ்துவே அணுதான்! அதற்கு கண், வாய், காது, மூக்கு - இதெல்லாம் கிடையாது. பசி, தாகம் இதெல்லாம் கிடையாது . சரீரத்துக்குத்தான் இதெல்லாம் . சரீரத்திற்குதான் பசி, தாகம் ஏற்படுகிறது. மனசிலே விகாரம் ஏற்படுகிறது . ஆத்மாவுக்கு தாகம் உண்டா ? ஆத்மா சாப்பிடுமா ? இதனால்தான் ரிபு ' நான் சாப்பிடவில்லை. எனக்கு தாகமில்லை' என்று பேசினார். அதற்கப்புறம் அவர் சொல்கிறார். . ஒரு புல்லாங்குழல் வித்வான் அழகாக வாசிக்கிறார். சிறு விரல்கள் தடவிப் பரிமாற, செங்கண் வாய் கொப்பளிக்க வாசிக்கிறார் ! ஷட்ஜ, ரிஷப காந்தாரி ஸ்வரங்களெல்லாம் வருகின்றன அதிலே . இப்போது பாருங்கள் .....வாயால் காற்றை ஊதுகிறாரே, அதிலே - அந்தக் காற்றிலே ஸரிகமபதநி என்பது உண்டா ? ஊதுகிறாரே காற்றிலே உண்டோ ? என்றால் கிடையாது! அந்தந்த த்வாரங்களுக்கு நேரே இவர் விரல்கள் பரிமாறுகின்றன. ஒரு இடத்திலே தூக்கினால் 'ஸ' என்று கேட்கிறது . இன்னொரு இடத்திலே ' க ' ... காற்றிலே ஸ ரி க கிடையாது. ஆனால் அந்தந்த த்வயத்திற்கும் வழியாக வருகிறது வெவ்வேறு ரூபத்தை அது அடைகிறது. அது போன்று தான் எல்லா ஜீவனும் ஒன்றாக இருந்தாலும் , பண்ணக்கூடிய புண்ய பாவத்திற்க்கேற்ப ஒன்று மனிதன் என்றும் மற்றொன்றைக் யானை என்று பிறக்கிறது. எப்படி ஸ ரி க என்கிற ஸ்வரங்களெல்லாம் பேதம் ஏற்படுகிறது அப்படி ஆகிருதியில் இத்தனை பேதங்கள் ஏற்படுகின்றன . ஆத்ம அத்வைதம் என்று இதற்கு பெயர். ஆத்மாக்கள் எல்லாம் உருவத்தில் ( அணு ) ஒன்றாகவே இருக்கும். ஆத்மாக்கள் பலவானாலும் பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருக்கும் . இதைத்தான் " ஆத்மாத்வைதம் " அதாவது " ஆத்ம அத்வைதம் " என்பர் பெரியோர்.tks nalini gopalan #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
1K காட்சிகள்
🕯️ நம்பிக்கை 🙏 ஒப்படைப்பு 💛 சுத்தமான மனசு ராயர் அருள் இருந்தா: முடியாத வேலை முடியும் மூடிய வாசல் திறக்கும் தடை பாதை ஆகும் நாம் ஓட வேண்டாம் — அவரை நம்பி நடந்தால் போதும். “ராயர் இருக்காரே… அதுவே பெரிய பலம்.” ✨🙏 #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
5.6K காட்சிகள்
🌹ஞானத்தின் அதிபதி ஹயக்ரீவர் *************** இந்த உலகில் அழியாத ஒரு செல்வம் இருக்கி றது என்றால் அது கல்விச் செல்வமே. எவர் ஒருவராலும் ஒருவரிடமிருந்து தட்டிப்பறிக்க வோ, திருடவோ முடியாத ஒன்று கல்விச்செ ல்வம் ஆகும். அத்தகைய பெருமை வாய்ந்த கல்விக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்குவது சரஸ்வதியை தான். ஆனால் அந்த சரஸ்வதிக்கே ஒரு குரு உண்டெ ன்றால் அது ஞானத்தின் அதிபதியான ஹயக் ரீவரே ஆவார். நான்கு வேதங்களின் துணை கொண்டு அவ்வேதங்கள் பின் தொடர நான் முகனான பிரம்மன் தனது படைத்தல் தொழி லை செய்து வந்தார். மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் பேராசையின் காரணமாக பிரம்மா விடம் இருந்த வேதங்களை குதிரை வடிவில் வந்து திருடி சென்றனர். 🌹வேதங்களை மீட்டவர் *********** இதன்காரணமாக உலகம் படைத்தலின் அர்த்தமே இல்லாமல் இருள் சூழ்ந்தது. எனவே பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் சென்று முறையி ட்டார். இதையடுத்து மகாவிஷ்ணு குதிரை முகம், மனித உடல், சூரியனை விஞ்சக்கூடிய ஒளி, கண்களாக சூரிய சந்திரர்கள், கண் இமைகளாக கங்கை மற்றும் சரஸ்வதி, தெய்வ ஒளி வீசும் வடிவம் ஆகியவற்றுடன் திருவடிவ ம் கொண்டு அரக்கர்களிடம் இருந்து வேதங்க ளை மீட்க சென்றார். அந்த அரக்கர்களிடம் இருந்து வேதங்களை மீட்கவே உலகம் இருள் அகன்று ஒளி உண்டா கியது. அசுரர்கள் கை பட்டதால் பெருமை குன்றியதாக வேதங்கள் நினைத்தன. எனவே தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரை முகத்துடன் இருந்த பெரு மாள் உச்சி முகர்ந்தார். இதனால் அவரது மூச்சுக்காற்றால் வேதங்கள் புனிதமடைந்தன. அசுரர்களிடம் போரிட்டதன் காரணமாக ஹயக்ரீவர் உக்கிரமாக இருந்ததா ல் அவரை குளிர்விக்க லட்சுமியை அவரது மடியில் அமர்த்தினார். இதனால் அவர் லட்சுமி ஹயக்ரீவர் என அழைக்கப்படுகிறார். வேதங்களை மீட்டவர் என்பதால் அவர் கல்வி க்கு தெய்வமாகின்றார். கல்வி உள்ள இடத்தி ல் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால் லட்சுமியை இடது பக்கம் அமர்த்தியிருக்கிறார் 🌹சரஸ்வதியின் குரு ********** கல்விக் கடவுள் சரஸ்வதி. அந்த சரஸ்வதிக்கே கல்வி அறிவை கொடுத்தவர் ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவர். அவரை தரிசித்தால் படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்திய டைந்து கல்வியில் சிறந்து விளங்குவர். எனவே தங்களது குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷங்கள் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ, கல்வியறி வு பெருக வேண்டி விரும்பினால் மாதம்தோ றும் வரும் திருவோண நட்சத்திரத்தில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி அருள்பா லிக்கும் ஹயக்ரீவருக்கு நடைபெறும் சிறப்பு திருமஞ்சன அலங்கார பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் நோட்டு, பேனா, தேன் மற்றும் ஏலக்காய் மாலையுடன் வந்து ஹயக்ரீவருக்கு சாத்தி பூஜையில் வைக்கப்பட்டு அபிஷேகம் செய்யலாம். இதில் அபிஷேகம் செய்த தேனை தோஷம் உள்ள குழந்தைக்கு கொடுத்து தொடர்ந்து ஹயக்ரீவரை பூஜித்து வந்தால் உடனடியாக தோஷம் நீங்கும். மேலும் பூஜையில் வைத்து அபிஷேகம் செய்ய ப்பட்ட தேனை குழந்தைகளின் நாவில் தடவி விட்டு ஹயக்ரீவரர் மந்திரத்தை தொடர்ந்து மனதில் செபிக்க செய்தால் குழந்தைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து வருவர். 🌹மந்திரம் ****** ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்கிருதிம், ஆதாரம் ஸர்வவித்யானாம், ஹயக்ரீவ முபாஸ்மஹே பொருள்: ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக, மாசற்ற ஸ்படிக மணி போன்ற திருமேனியுடன் எல்லா கலைகளுக்கும் உறை விடமாக குதிரை போன்ற திருக்கழுத்தை உடைய எம்பெருமானை வணங்குகிறோம். #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏கிருஷ்ணா #🙏பெருமாள்
See other profiles for amazing content