ஃபாலோவ்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
22,417
போஸ்ட்
124,087
பின்தொடர்பவர்கள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
203 காட்சிகள்
ஸ்ரீ நரசிம்ம வைபவம்-- ----------------------------------------------------------------------------- ‘சிதாஷீர நியாயம்’னா என்ன? பாலில் சர்க்கரை போட்டு நாம் சாப்பிடுகிறோம். சர்க்கரையே சேர்க்காமல் ஒருவர் பாலே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சர்க்கரையே தெரியாது. சரியென்று பாலையே குடித்துக் கொண்டிருப்பார். பாலே தெரியாது. சர்க்கரை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் இன்னொருவர். அவர் சர்க்கரையை சாப்பிடுவார். ஆனால், பாலில் ஒரு நாள் சர்க்கரையைக் கலந்து சாப்பிட்டுவிட்டார் என்றால், அப்புறம் தனித்தனியாக சாப்பிடுவதற்கு எண்ணமே போகாது. சர்க்கரை இல்லாத பாலை சாப்பிடுவோமா? பால் இல்லாத சர்க்ரையைத்தான் சாப்பிடுவோமா? அதுபோல, மத்ஸ்யாவதாரம் மீனான அவதாரம். கூர்மாவதாரம் ஆமையான அவதாரம். வராகாவதாரம் பன்றியான அவதாரம். இவை மூன்றும் மிருகமாக மட்டுமே பிறந்தவை. நரசிம்மப் பெருமானுக்குப் பிற்பட்ட முதல் அவதாரம் வாமனாவதாரம். தேவனாகப் பிறந்தார். இந்திரனுக்குத் தம்பிதான் வாமனாவதாரம். பரசுராம, ராம, பலராமன், கல்கி இவை எல்லாமே மனுஷ்யனான அவதாரங்கள். நர – சிம்ஹர். அவர் மட்டுமே, ஒரு பக்கத்திலே மிருகமாக இருந்தார். மறுபக்கத்திலே மனிதனாக இருந்தார். கழுத்துக்கு மேலே சிங்க உரு. கழுத்துக்குக் கீழே மனித உரு. சேராத இரண்டைச் சேர்த்தார் எம்பெருமான் – பாலும் சர்க்கரையும் சேர்த்தாற்போலே. சேர்த்து அனுபவித்து விட்டோமென்றால் தனியாக மிருகாவதாரத்துக்கும் புத்தி போகாதாம்; தனியாக மனுஷ்யாவதாரத்துக்கும் புத்தி போகாதாம். இந்த நரசிம்மாவதாரத்தை, ஆழ்வார்கள் அனைவரும் ஆச்சர்யமாக அனுபவித்துள்ளார்கள். முக்கியமாக எம்பெருமான் அஹோபில திவ்யதேசத்திலே சேவை சாதிக்கிறார். அந்த நரசிங்கரையும் லக்ஷ்மி நரசிம்மராகப் பல இடங்களில் வணங்குகின்றோம். யோக நரசிம்ம சுவாமியாகப் பல இடங்களில் சேவை சாதிக்கிறார். என்றோ நடந்த நரசிம்ம அவதாரத்தை நாம் இழந்துவிட்டோம். அன்றைக்கு நாம் சேவிக்கவில்லையே என்ற குறை இருக்கிறதே அந்தக் குறை தீரத்தான், விக்கிரக வடிவில் எத்தனையோ திவ்ய தேசங்களில் எம்பெருமான் சேவை சாதிக்கிறார். அதில், பிரதான திவ்யதேசம் என்று பார்த்தால் அஹோபிலம். அஹோபிலம், நவ நரசிம்ம க்ஷேத்ரம் என்று பெயர்பெற்ற திவ்யதேசம். கீழ் அஹோபிலம்; மேல் அஹோபிலம். ஜ்வாலா நரசிம்மர், பாவன நரசிம்மர். பார்க்கவ நரசிம்மர், சத்ரவட நரசிம்மர்… என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நரசிம்மராக பகவான் அங்கே சேவை சாதிக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் ‘சோள சிம்மபுரம் கடிகாசலம்’ – ஒரு நாழிகைப் பொழுது அந்த மலையில் நாம் நின்று விட்டோமானால் அனைத்துப் பாபங்களும் நீங்கிப்போகும். அதிலும், கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமை என்று சொன்னால் அவ்வளவு கூட்டம். கால் வைக்க இடம் இருக்காது. நாற்பது ஐம்பதாயிரம் பேர் ஞாயிற்றுக்கிழமை தோறும் சேவிக்கிறார்கள். திருமங்கையாழ்வார் பாடினார் ‘மிக்கானை மறையாய்த் தெரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ் சேர் பொலி கின்னாப் பொன்மலையைத் தக்கானைக் கடிகத் தடம் குன்னின் மிசை இருந்த அக்காரக்கனியை அடைந்துய்ந்து போனேனே.’ அக்காரம் என்றால் சர்க்கரை. அந்த சர்க்கரையில் கனி செய்தால் எப்படி இருக்கும்? கர்நாடகத்தில் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு சர்க்கரையால் ஆன பொம்மையாகப் பழம் செய்து சீர் வைப்பார்கள். திருமங்கையாழ்வார் இதைத்தான் சொல்லியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு இவ்வளவுதானா பெருமாள் என்று நினைத்துவிட வேண்டாம். சர்க்கரையை விதையாக விதைக்க வேண்டுமாம். சர்க்கரையே மரமாக முளைக்க வேண்டுமாம். அந்த சர்க்கரை மரம் பழுக்க வேண்டுமாம். அந்தப் பழம்தான் சர்க்கரைப் பழமாம்! அதாவது அக்காரக்கனி! இது மாதிரி நடக்குமா என்று அடியேனைக் கேட்க வேண்டாம். சர்க்கரையை விதைத்து அது மரமாகிப் பழுக்க வேண்டுமானால், அந்தக் கனி எவ்வளவு மதுரமாக (இனிமையாக) இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இதற்கு ‘அபூதோபமா’ என்று பெயர். இல்லாததை உவமையாகச் சொல்வது. அப்படிப்பட்ட அக்காரக்கனி பெருமாள் கடிகாசலத்திலே எழுந்தருளியுள்ளார். அதேபோலக் காஞ்சிபுரத்திற்கு அருகிலே வந்தால் வேளுக்கை ஆளரி. வேளுக்கை என்பது அந்த ஊரின் பெயர். ஆள் என்றால் மனிதன். அரி என்றால் சிங்கம். ஆளரி, கோளரி என்ற இரண்டும் கலந்த வடிவிலே அங்கு சேவை சாதிக்கிறார். திருநாங்கூருக்கருகிலே திருவாலி திருநகரி. அங்கு பஞ்ச நரசிம்மர்கள் சேவை சாதிக்கிறார்கள். இதுபோல் அடியார்கள் தன்னை சேவிக்க வேண்டும் என்றும், தன் தரிசனத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காகவும்தான் லக்ஷ்மி நரசிம்மனாய், யோக நரசிம்மனாய் பற்பல திவ்ய தேசங்களில் பெருமாள் சேவை சாதிக்கிறார். பிரதானமாய் சென்னைப் பட்டினத்துக்குப் போகிறோம். திருவல்லிக்கேணியில் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அங்கு பார்த்தசாரதி மூலமூர்த்தி. நின்ற திருக்கோலம். அவருக்கு நேர் பின்புறம் தெள்ளிய சிங்கப் பெருமான். ‘தெள்ளிய சிங்கத் தேவை திருவல்லிக் கேணி கண்டேனே’ என்பது திருமங்கையாழ்வார் பாசுரம். பெருமாள் ரொம்பவும் தெளிவாய் இருக்கிறாராம். லக்ஷ்மி நரசிம்மனாய் இருக்கிறார்; யோக நரசிம்மனாய் இருக்கிறார்; தெள்ளிய சிங்கப் பெருமானாய் இருக்கிறார். அவருடைய பெருமை யாருக்குத் தெரியும்? ஒருத்தருக்கும் தெரியாது. சிங்கப் பெருமான் பெருமை சொல்லி முடியாது என்றே நம்மாழ்வார் ஆனந்தப்படுகிறார். எங்குமுளன் கண்ணனென்ன மகனைக் காய்ந்திங்கில்லையாலென்று இரணியன் தூணுடைப்ப அங்கப்போதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே ஒவ்வொரு ஆழ்வாரும் இந்தப் பெருமானை ஒவ்வொரு கோணத்திலிருந்து அனுபவித்திருக்கிறார்கள். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #📸பக்தி படம் #✨கடவுள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
3K காட்சிகள்
♦️♦️இன்று தை மாத சுவாதி நட்சத்திரம். 🚩கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம வடிவங்கள் 1. அகோபில நரசிம்மர் : உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே. 2. பார்க்கவ நரசிம்மர்: மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.) 3. யோகானந்த நரசிம்மர்: மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள்ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர். 4. சத்ரவத நரசிம்மர்: கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம். 5. க்ரோத (வராக) நரசிம்மர்: பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ளனர். இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத்தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம். 6. கராஞ்ச (சாரங்க) நரசிம்மர்: மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளார். கராஞ்ச மரத்தடியில் கோவில் கொண்டு, கையில் வில்லேந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றார். 7. மாலோல நரசிம்மர்: "மா' என்றால் லட்சுமி."லோலன்” என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார். அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார். 8. பாவன நரசிம்மர்: பவனி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும். 9. ஜ்வாலா நரசிம்மர்: மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன. #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #📸பக்தி படம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
818 காட்சிகள்
மஹா சிவராத்திரி ஸ்பெஷல் 1 ************************************* ♦️தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்களின் பெருமைகள்♦️ ♦️ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள். ******************************************* 1,தஞ்சை – பிரகதீஸ்வரர் 2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர் 3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர் 4,திருபுவனம் – கம்பேஸ்வரர் ♦️சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள். ************************************** 1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம் 2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம் 3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம் 4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம் 5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம் 6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம் 7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம் 8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம் 9, திருவல்லம் – வில்வாரண்யம் 10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம் ♦️சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள். ************************************* 1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை 2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை 3, திருவானைக்கா – உச்சிகால பூஜை 4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை 5, மதுரை – இராக்கால பூஜை 6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை ♦️காசிக்கு சமமான ஸ்தலங்கள். ******************************** 1, திருவெண்காடு. 2, திருவையாறு. 3, மயிலாடுதறை. 4, திருவிடைமருதூர். 5, திருச்சாய்காடு. 6, ஸ்ரீவாஞ்சியம். 7, விருத்தாசலம். 8, மதுரை. 9, திருப்புவனம் ♦️தருமநூல்கள் 18. ******************* கடவுளால் வகுத்தது தருமத்தை பற்றி மட்டும் உபதேசித்தது. 1.மனு, 2.அத்தி, 3.விண்டு, 4.வாசிட்டம், 5.யமம், 6.ஆபத்தமம், 7.யாஞ்ஞ வற்கியம், 8.பராசரம், 9.அங்கீரசம், 10.உசனம், 11.காத்தியாயனம், 12.சம்பவர்த்தம், 13.வியாசம், 14.பிரகற்பதி, 15.சங்க்லிதம், 16.சாதாதபம். 17.கௌதம், 18.தக்கம். ♦️பாரதத்தின் முக்தி ஸ்தலங்கள். ********************************* 1,காசி 2,காஞ்சி 3,மதுராபுரி 4,அரித்துவார் 5,உஜ்ஜையினி 6,அயோத்தி 7,துவாரகை. ♦️பாரதமே பரமசிவம். ********************** 1,திருப்பரும்பதம் – தலை உச்சி 2,திருக்கேதாரம் – நெற்றி. 3,காசி – புருவநடு 4,பிரயாகை – நெஞ்சு 5,தில்லை – இதயம் 6,திருவாரூர் – மூலம். ♦️முக்தி தரும் ஸ்தலங்கள். ************************** திருவாரூர் – பிறக்க முக்தி காசி – இறக்க முக்தி திருவண்ணாமலை – நினைக்க முக்தி சிதம்பரம் – தரிசிக்க முக்தி வேதாரண்யம் – தீர்த்தமாட முக்தி மதுரை – கூற முக்தி அவினாசி – கேட்க முக்தி. ♦️ஐந்து அற்புதங்கள். ********************* 1, ஆவுடையார் கோவில் கொடுங்கை. 2, கடாரங்கொண்டான் மதில் 3, திருவீழிமிழலை வௌவ்வால் ஒட்டிமண்டபம் 4, தஞ்சாவூர் கோபுரம் 5, திருவலஞ்சுழி பலகணி ♦️திவசம் சிறப்பு இடம் {பிதுர்கடன் கொடுக்க சிறப்பு ஸ்தலம்.} *********************************************** காசி, கயா {விஷ்னுபாதம் ஆலமரம்} திருவெண்காடு – ஆலமரத்தடி {ருத்ரபாதம்} பத்ரிநாத், திருக்கோகர்ணம், பவானி, திலதர்ப்பணபுரி, செதிலப்பதி, {தசரதன்,ஜடாயுக்கு இராமன் லட்சுமனன் தர்ப்பணம் செய்தது.} இராமேஸ்வரம், துவாரகாபுரி, பூம்புகார், இடும்பாவனம், சங்குமுகேஸ்வரர். ♦️12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும். ****************************************** 1, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. – பிரம்மா, சித்திரை, ஐப்பசி பிறக்கும் காலம் விஷு {விஷாவகன் – பிரம்மா} 2, வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி – விஷ்ணு. பிறக்கும்நேரம் விஷ்ணுபதி புண்ணிய காலம். 3, ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி – சிவம். பிறக்கும் நேரம் “ஷடசீதி” {ஷடாங்கன் – சிவன்} ஆடி மாதப் பிறப்பு தட்சிணாயன – புண்ணியகாலம் – சூரியன் தெற்கு பயனிப்பது. தை மாதப் பிறப்பு உத்தராயண – புண்ணியகாலம் – சூரியன் வடக்கு நோக்கி பயனிப்பது. ♦️பெரிய தேர்கள் உள்ள ஸ்தலங்கள். ************************************** திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுதூர், திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சி, மதுரை. ♦️பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள். *************************************** 1, கேதாரம் – இமயம் {கேதாரேஸ்வரர்} 2, சோமநாதம் – குஜராத் {சௌராஷ்டிரம்,சோமநாதேஸ்வரர்} 3, மகாகாளேசம் – உஜ்ஜையினி {மகா காளேஸ்வரர்} 4, விஸ்வநாதம் – காசி {விஸ்வநாதேஸ்வரர்} 5, வைத்தியநாதம் – {மகாராஷ்டிரம், வைத்தியனாதர்} 6, பீமநாதம் – {மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.} 7, நாகேஸ்வரம் – {மகாராஷ்டிரம், தாருகாவனம், நாகேஸ்வர்} 8, ஓங்காரேஸ்வரம் – மத்தியப்பிரதேசம் {அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்} 9, த்ரயம்பகம் – {மகாராஷ்டிரம், கௌதம்} திரயம்பகேஸ்வரர். 10, குசுமேசம் – மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர். 11, மல்லிகார்ஜுனம் – {ஆந்திரம்} ஸ்ரீசைலம் – மல்லிகார்ஜுனர். 12, இராமநாதம் – இராமேஸ்வரம் {தமிழ்நாடு} ♦️சப்த விடங்கத் ஸ்தலங்கள். ***************************** 1, திருவாரூர் – வீதிவிடங்கர் – அஜபா நடனம். 2, திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம். 3, நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம். 4, திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம். 5, திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம். 6, திருவாய்மூர் – நீல விடங்கர் – கமல நடனம். 7, திருமறைக்காடு – புவனி விடங்கர் – ஹம்ஸபாத நடனம். ♦️பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும். *********************************************** 1, திருநெல்வேலி – தாமிர சபை – ந 2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம 3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி 4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ 5, மதுரை – வெள்ளிசபை – ய ♦️♦️ஓம் நம்சிவாய .... ♦️♦️திருச்சிற்றம்பலம்.... 🌹07.02.2026... நேசமுடன் விஜயராகவன்.... #✨கடவுள் #✡️ராசிபலன் #📸பக்தி படம் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
740 காட்சிகள்
மஹா சிவராத்திரி ஸ்பெஷல் 1 ************************************* ♦️தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்களின் பெருமைகள்♦️ ♦️ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள். ******************************************* 1,தஞ்சை – பிரகதீஸ்வரர் 2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர் 3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர் 4,திருபுவனம் – கம்பேஸ்வரர் ♦️சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள். ************************************** 1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம் 2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம் 3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம் 4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம் 5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம் 6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம் 7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம் 8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம் 9, திருவல்லம் – வில்வாரண்யம் 10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம் ♦️சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள். ************************************* 1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை 2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை 3, திருவானைக்கா – உச்சிகால பூஜை 4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை 5, மதுரை – இராக்கால பூஜை 6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை ♦️காசிக்கு சமமான ஸ்தலங்கள். ******************************** 1, திருவெண்காடு. 2, திருவையாறு. 3, மயிலாடுதறை. 4, திருவிடைமருதூர். 5, திருச்சாய்காடு. 6, ஸ்ரீவாஞ்சியம். 7, விருத்தாசலம். 8, மதுரை. 9, திருப்புவனம் ♦️தருமநூல்கள் 18. ******************* கடவுளால் வகுத்தது தருமத்தை பற்றி மட்டும் உபதேசித்தது. 1.மனு, 2.அத்தி, 3.விண்டு, 4.வாசிட்டம், 5.யமம், 6.ஆபத்தமம், 7.யாஞ்ஞ வற்கியம், 8.பராசரம், 9.அங்கீரசம், 10.உசனம், 11.காத்தியாயனம், 12.சம்பவர்த்தம், 13.வியாசம், 14.பிரகற்பதி, 15.சங்க்லிதம், 16.சாதாதபம். 17.கௌதம், 18.தக்கம். ♦️பாரதத்தின் முக்தி ஸ்தலங்கள். ********************************* 1,காசி 2,காஞ்சி 3,மதுராபுரி 4,அரித்துவார் 5,உஜ்ஜையினி 6,அயோத்தி 7,துவாரகை. ♦️பாரதமே பரமசிவம். ********************** 1,திருப்பரும்பதம் – தலை உச்சி 2,திருக்கேதாரம் – நெற்றி. 3,காசி – புருவநடு 4,பிரயாகை – நெஞ்சு 5,தில்லை – இதயம் 6,திருவாரூர் – மூலம். ♦️முக்தி தரும் ஸ்தலங்கள். ************************** திருவாரூர் – பிறக்க முக்தி காசி – இறக்க முக்தி திருவண்ணாமலை – நினைக்க முக்தி சிதம்பரம் – தரிசிக்க முக்தி வேதாரண்யம் – தீர்த்தமாட முக்தி மதுரை – கூற முக்தி அவினாசி – கேட்க முக்தி. ♦️ஐந்து அற்புதங்கள். ********************* 1, ஆவுடையார் கோவில் கொடுங்கை. 2, கடாரங்கொண்டான் மதில் 3, திருவீழிமிழலை வௌவ்வால் ஒட்டிமண்டபம் 4, தஞ்சாவூர் கோபுரம் 5, திருவலஞ்சுழி பலகணி ♦️திவசம் சிறப்பு இடம் {பிதுர்கடன் கொடுக்க சிறப்பு ஸ்தலம்.} *********************************************** காசி, கயா {விஷ்னுபாதம் ஆலமரம்} திருவெண்காடு – ஆலமரத்தடி {ருத்ரபாதம்} பத்ரிநாத், திருக்கோகர்ணம், பவானி, திலதர்ப்பணபுரி, செதிலப்பதி, {தசரதன்,ஜடாயுக்கு இராமன் லட்சுமனன் தர்ப்பணம் செய்தது.} இராமேஸ்வரம், துவாரகாபுரி, பூம்புகார், இடும்பாவனம், சங்குமுகேஸ்வரர். ♦️12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும். ****************************************** 1, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. – பிரம்மா, சித்திரை, ஐப்பசி பிறக்கும் காலம் விஷு {விஷாவகன் – பிரம்மா} 2, வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி – விஷ்ணு. பிறக்கும்நேரம் விஷ்ணுபதி புண்ணிய காலம். 3, ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி – சிவம். பிறக்கும் நேரம் “ஷடசீதி” {ஷடாங்கன் – சிவன்} ஆடி மாதப் பிறப்பு தட்சிணாயன – புண்ணியகாலம் – சூரியன் தெற்கு பயனிப்பது. தை மாதப் பிறப்பு உத்தராயண – புண்ணியகாலம் – சூரியன் வடக்கு நோக்கி பயனிப்பது. ♦️பெரிய தேர்கள் உள்ள ஸ்தலங்கள். ************************************** திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுதூர், திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சி, மதுரை. ♦️பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள். *************************************** 1, கேதாரம் – இமயம் {கேதாரேஸ்வரர்} 2, சோமநாதம் – குஜராத் {சௌராஷ்டிரம்,சோமநாதேஸ்வரர்} 3, மகாகாளேசம் – உஜ்ஜையினி {மகா காளேஸ்வரர்} 4, விஸ்வநாதம் – காசி {விஸ்வநாதேஸ்வரர்} 5, வைத்தியநாதம் – {மகாராஷ்டிரம், வைத்தியனாதர்} 6, பீமநாதம் – {மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.} 7, நாகேஸ்வரம் – {மகாராஷ்டிரம், தாருகாவனம், நாகேஸ்வர்} 8, ஓங்காரேஸ்வரம் – மத்தியப்பிரதேசம் {அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்} 9, த்ரயம்பகம் – {மகாராஷ்டிரம், கௌதம்} திரயம்பகேஸ்வரர். 10, குசுமேசம் – மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர். 11, மல்லிகார்ஜுனம் – {ஆந்திரம்} ஸ்ரீசைலம் – மல்லிகார்ஜுனர். 12, இராமநாதம் – இராமேஸ்வரம் {தமிழ்நாடு} ♦️சப்த விடங்கத் ஸ்தலங்கள். ***************************** 1, திருவாரூர் – வீதிவிடங்கர் – அஜபா நடனம். 2, திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம். 3, நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம். 4, திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம். 5, திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம். 6, திருவாய்மூர் – நீல விடங்கர் – கமல நடனம். 7, திருமறைக்காடு – புவனி விடங்கர் – ஹம்ஸபாத நடனம். ♦️பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும். *********************************************** 1, திருநெல்வேலி – தாமிர சபை – ந 2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம 3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி 4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ 5, மதுரை – வெள்ளிசபை – ய ♦️♦️ஓம் நம்சிவாய .... ♦️♦️திருச்சிற்றம்பலம்.... 🌹07.02.2026... நேசமுடன் விஜயராகவன்....? #மஹா சிவராத்திரி #🔍ஜோதிட உலகம் 🌍 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
2.3K காட்சிகள்
இன்று 07.02.2026 தேய்பிறை சஷ்டி **************************************** கந்தசஷ்டி கவசம் விளக்கம் ****************************** கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்தி லிருந்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிக ள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலு ம் முருகனையே சுவாசித்தார். அவர் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த கவசத்தை தினம் காலையிலும் மாலை யிலும் ஓத முருக னே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமா வுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவண பவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவர். நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத் தைப் பார்ப்போம். கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்றும் எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும். அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளு ம், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவ ர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெ ல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார். அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனைப உடம்பில் தான் எத்தனை பாகங்கள்ப காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்கு புனிதவேல், கண்ணி ற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவி களுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனை வேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத் திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முது கிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபி க்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலி ல் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன. அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந் துகாக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ள து. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னால் ஓடி ஒளிந்து விடும் என்கிறார். அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண் பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல் லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார். பின் மிருகங்களைப் பார்ப் போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளு ம் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார். நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத் தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதி கள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும். கந்தா சரணம்... ஷண்முகா சரணம்.... 07.02.2026.. நேசமுடன் விஜயராகவன்.... #✨கடவுள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️ராசிபலன் #🙏ஆன்மீகம் #📸பக்தி படம்
See other profiles for amazing content