ஃபாலோவ்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
22,370
போஸ்ட்
123,771
பின்தொடர்பவர்கள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
678 காட்சிகள்
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் நரசிம்மரை சேவிப்போம்... 🌟 1200 வருடப் பழமையான அதிசய திருத்தலம்!!! 38 சாளக்ராமங்களை அணிந்த அபூர்வ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்! 📜 நாளை என்பதே இல்லாத நரசிம்மர் – சென்னை ராமாபுரம் திருத்தல வரலாறு “நாளை என்பது நரசிம்மரிடம் கிடையாது” என்பது வெறும் சொல்லல்ல… பக்தர்கள் அனுபவத்தில் உணர்ந்த ஒரு நிதர்சனமான உண்மை! அப்படிப்பட்ட அருள் அவதாரமாக நரசிம்மர் வீற்றிருக்கும் மிகப் பழமையான அதிசயத் திருக்கோயில் ஒன்று சென்னை – ராமாபுரத்தில் இன்றும் உயிரோடு திகழ்கிறது. 🏛️ 1200 ஆண்டுகள் பழமை – பல்லவர் காலத் திருக்கோயில் அமிர்தவல்லி தாயார் சமேத ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில் 👉 சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு 👉 பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்ம வர்மனால் நிர்மாணிக்கப்பட்டது. ஒரு காலத்தில் சென்னையின் புறநகர் பகுதியாகக் கருதப்பட்ட போரூர் அருகே உள்ள ராமாபுரம், இன்று ஆன்மீகச் செழிப்புடன் பக்தர்களை ஈர்க்கும் முக்கிய தலமாக விளங்குகிறது. 🌿 பாழடைந்த கோயிலிலிருந்து பக்தி மையமாக… ஒரு காலகட்டத்தில், இந்த திருக்கோயில் 👉 பராமரிப்பில்லாமல் 👉 பாழடைந்த நிலையில் 👉 யாரும் வருகை தராத சூழலில் இருந்தது. ஆனால்… ✨ பக்தர்களின் உழைப்பு, நம்பிக்கை, நரசிம்மரின் அருள் இவை அனைத்தாலும், இன்று 👉 கோயில் செழிப்படைந்து 👉 தீவிர வழிபாட்டு மையமாக மாறியுள்ளது. 🛕 ஐயங்கார் தெரு & பிருந்தாரண்ய க்ஷேத்திரம் கோயிலுக்கு செல்லும் தெரு பண்டைய காலத்திலிருந்தே “ஐயங்கார் தெரு” என்று அழைக்கப்படுகிறது. 👉 இது, ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக இப்பகுதியில் வசித்ததற்கான வரலாற்றுச் சான்றாகும். மேலும், இப்பகுதியில் ஒரு காலத்தில் பெரிய துளசி தோட்டம் இருந்ததால், 👉 இந்த முழுப் பகுதியும் “பிருந்தாரண்ய க்ஷேத்திரம்” என்று போற்றப்படுகிறது. 🦁 38 சாளக்ராமங்களை அணிந்த அபூர்வ நரசிம்மர் இந்தத் திருக்கோயிலின் மிகப்பெரிய சிறப்பம்சம்: ✨ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் 38 சாளக்ராம மாலையை அணிந்து அருள்பாலிப்பது! 👉 அவற்றில் ✔️ 25 சாளக்ராமங்கள் – ஸ்ரீ சந்தான கோபால சாளக்ராமங்கள் ✔️ மீதமுள்ளவை – ஸ்ரீ லக்ஷ்மி நாராயண சாளக்ராமங்கள் இது இந்தியாவிலேயே அரிதாகக் காணப்படும் ஒரு அபூர்வ ஆன்மீக அம்சமாகும். 🌸 திருமேனி தோற்றம் – அருள் வடிவம் ஆனந்த விமானத்தின் கீழ் அமர்ந்து அருள்புரியும் நரசிம்மர்: 🔸 மேலிரு கைகளில் – சங்கு & சக்கரம் 🔸 கீழ் இடது கை – மடியில் அமர்ந்துள்ள மகாலட்சுமி தேவியின் இடுப்பைச் சுற்றி 🔸 வலது கை – அபய ஹஸ்தம் 👉 மிகுந்த வரசித்தியுடன், அருளும் – காக்கும் – கருணை புரியும் நரசிம்மராக பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். 🏛️ மண்டபங்கள் & சன்னிதிகள் 🔹 மகாமண்டபம் த்வஜஸ்தம்பம் பலி பீடம் கருடன் மகாமண்டப தூண்களில் 👉 அஷ்ட லட்சுமிகள் 👉 அனந்த சயன பெருமாள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளனர். 🔹 நுழைவாயில் தும்பிக்கை ஆழ்வார் சன்னிதி நாகர் சன்னிதி 🔹 அர்த்த மண்டபம் அமிர்தவல்லி தாயார் சன்னிதி ஆஞ்சநேயர் சன்னிதி 👶 சந்தான பாக்கியம் தரும் திருத்தலம் குழந்தை பாக்கியம் வேண்டி பல தம்பதியர் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறார்கள். 👉 சந்தான கிருஷ்ணர் பூஜை இங்கு மிகப் பிரசித்தம். 🔸 தம்பதியரின் கைகளில் சந்தான கிருஷ்ணர் விக்ரகம் கொடுக்கப்படும். 🔸 “கிருஷ்ணரே எங்களுக்குக் குழந்தையாக பிறக்க வேண்டும்” என்று வேண்டுதல். 🔸 வெண்ணை & தேன் நிவேதனம் செய்து அதே பிரசாதமாக தம்பதியருக்கு வழங்கப்படுகிறது. 🔔 பூஜைகள் & திருவிழாக்கள் 👉 வைகானச ஆகமம் படி பூஜைகள் நடைபெறுகின்றன. ✨ விசேஷ நாட்கள்: வைகுண்ட ஏகாதசி ஸ்ரீராம நவமி கிருஷ்ண ஜயந்தி அனுமத் ஜயந்தி நரசிம்ம ஜயந்தி 👉 அமாவாசை & பௌர்ணமி நாட்களில் உத்ஸவர் நரசிம்மர் ஊர்வலம். 👉 ஆனி மாதம் பிரம்மோத்ஸவம் மிக விமரிசையாக நடைபெறும். 🕰️ தரிசன நேரம் 🕉️ காலை: 7.30 – 10.00 🕉️ மாலை: 5.30 – 8.30 #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️ஜோதிட பரிகாரங்கள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
708 காட்சிகள்
கருட காயத்ரி மந்திரம்..!! கருடனை வழிபடும் போது கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது. சக்தி தரும் கருட மந்திரம்: ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம். அந்த கருட மந்திரம்: தத்புருஷாய வித்மஹே ஸீபர்ண பக்ஷாய தீமஹீ தன்னோ கருட ப்ரசோதயாத்!! #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #✨கடவுள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #📸பக்தி படம்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
26.2K காட்சிகள்
🌹தைப்பூசம் ஸ்பெஷல் - 10 ******************************** அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப் பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமா கும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்வார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவே ற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடு கள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவி ல்களிலும், எல்லா சிவன் கோவில்களிலு ம் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுக ளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவி ல்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். வரலாறு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர் கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில் லை.எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானி டம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்க ளின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்க ளால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தி ல் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவி ல்களைக் காட்டிலும் வெகுச்சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப் பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்க ளைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர் கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம். தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர் கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கு கின்றனர்.சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றா டம் பாராய ணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழி பாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவ தற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெ ருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருக னடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். 🌹கந்தா சரணம்.... ஷண்முகா சரணம்.... 🌹31.01.2026... நேசமுடன் விஜயராகவன்.... #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✡️தோஷ பரிகாரங்கள் #🙏🔥தைபூசம் ஸ்பெஷல்🔥🙏
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
2.2K காட்சிகள்
🌹தைப்பூசம் ஸ்பெஷல் - 10 ******************************** அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப் பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமா கும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்வார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவே ற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடு கள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவி ல்களிலும், எல்லா சிவன் கோவில்களிலு ம் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுக ளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவி ல்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். வரலாறு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர் கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில் லை.எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானி டம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்க ளின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்க ளால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தி ல் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவி ல்களைக் காட்டிலும் வெகுச்சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப் பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்க ளைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர் கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம். தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர் கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கு கின்றனர்.சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றா டம் பாராய ணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழி பாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவ தற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெ ருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருக னடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். 🌹கந்தா சரணம்.... ஷண்முகா சரணம்.... 🌹31.01.2026... நேசமுடன் விஜயராகவன்.... #🕉️ஓம் முருகா #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️கந்த சஷ்டி கவசம் #🔍ஜோதிட உலகம் 🌍
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
886 காட்சிகள்
ஆன்மீக சிந்தனைகள்... *************************************************** சர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்று ஏன் பெரியவர்கள் சொன்னார்கள்? ---------------------------------------------------------------------------------- ஆன்மிகம் என்பது அற்புதமான அனுபவம் (INNER EXPERIENCE). சமயம் என்பது ஆன்மிகத்தைப் புரிந்து கொள்வதற்கான ஒரு வழிமுறை. ஒரு அதிகாரி. கோபம் பொசுக்கென்று வரும். அலுவலகத்தில், குடும்பத்தில், உறவுகளில் சிடுசிடு வென இருப்பார். ஆனால், கோயிலுக்குப் போவார். அனுஷ்டானங்களை விடமாட்டார். ஈவு இரக்கம் இருக்காது. சமய அறிவு உடையவர்கள்கூட ஆன்மிக உணர்வு இல்லாதவர்களாக இருப்பார்கள். ஒருவர் வைணவராகவோ, சைவராகவோ, வேறு சமய நெறி சார்ந்தவராகவோ இருக்கலாம். ஆனால், சமய நெறிக்குள் இருக்கக்கூடிய ஆன்மிகத்தைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது பின்பற்றவில்லை என்று இருந்தால், அந்த சமயம் அவருக்கு எவ்விதத்திலும் பயன்படாது. சமய நூல்களை படித்திருந்தால், அதைப் பற்றி விளக்குவதில் ஆர்வமும் ஆற்றலும் இருக்கும். ஆனால், அதன் ஆத்மாவாகிய ஆன்மிகத்தைப் புரிந்து கொண்டு, பின்பற்ற முடியவில்லை என்று சொன்னால், பிரயோஜனம் இல்லை. கேட்பவர்கள் சுவாரஸ்யமாகக் கேட்பார்களே தவிர, மனதில் தைக்காது. சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது. பேசுபவர்களுக்கு பிரபல்யத்தையும் செல்வத்தையும் வேண்டுமானால் அள்ளி வழங்கலாம். சமயம் என்பது ஒரு பெட்டி. ஆன்மிகம் என்பது அந்தப் பெட்டியில் இருக்கக்கூடிய சாஸ்வதமான பொருள். பெட்டி முக்கியம்தான் என்றாலும்கூட, பெட்டியைவிட பொருள் முக்கியம். பொருளைக் காப்பாற்றுவதற்காகத் தான் பெட்டியையும் நாம் போற்றுகின்றோம். சமய நெறி போற்றப்படுவதற்கும் பின்பற்றப்படுவதற்கும் அது காட்டும் பொருள்தான் முக்கியம். ஒரு சின்ன உதாரணம்; சைவத்தைப் பின்பற்றுகின்றார் ஒருவர். சைவத்தின் அடிப்படையான விஷயத்தைக் கேட்டால், ``சிவப் பரம் பொருள்தான் முழு முதல் கடவுள். அவரையே நம்புகின்றோம். அதற்கான வழிமுறைகளாகிய தேவார திருவாசகங்களைப் பாடுவது, விபூதி அணிவது, சிவன் கோயில்களில் சென்று வழிபடுவது, சிவனுக்குரிய விரதங்களைப் பின்பற்றுவது என இப்படிச் செய்கின்றோம்’’ என்பார். இது சரிதான். இதில் ஒரு தவறும் கிடையாது. ஆனால், அந்த சிவன் எப்படிப்பட்டவன்? அவனுடைய குணம் என்ன என்று சொன்னால் ஒரே வரியில் சொல்லிவிடலாம். அன்புதான் சிவன். எந்தெந்த இடத்திலே அன்பு பிரவாகமாக இருக்கிறதோ, அந்த இடத்திலே சிவபெருமான் இருக்கிறார். (அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே) ஒரு வைணவரிடத்திலே இதே கேள்வியைக் கேட்டால் அவர், ``மகாவிஷ்ணுதான் பரம்பொருள்’’ என்று பலபடியாகச் சொல்லுவார். வைணவ நெறியின் அடிப்படையான விஷயம் அதுதான். ஆனால், ஒரு வைணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நஞ்சீயர், ஒரு விளக்கத்தைத் தருகின்றார். ``எவர் மனதிலே பிறருடைய துன்பங்களைக் கண்டு இயல்பாகவே இரக்கம் பிறக்கிறதோ அவர் வைணவன்’’ என்கின்றார். இதை இப்படி எடுத்துக் கொள்ளலாம். எப்படி அன்பே சிவம் என்று சைவர்கள் எடுத்துக் கொள்கின்றார்களோ, அதைப் போலவே அன்பே வைணவம் என்று வைணவர்கள் எடுத்துக் கொள்கின்றார்கள். இங்கே சிவபெருமான் பரம்பொருளாக, வழிபடக்கூடிய கடவுளாக இருக்கிறார் என்பது சைவ நெறியின் அடிப்படைத் தத்துவமாகவும், மகாவிஷ்ணுவே பரம்பொருளாகவும் வைணவர்கள் வழிபடக்கூடிய கடவுளாகவும் இருக்கிறார் என்பது வைணவத்தின் அடிப்படைத் தத்துவமாக இருந்தாலும்கூட இரண்டும் பொதுவான ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டுகின்றது. அதுதான் உயிர்களிடத்திலே அன்பு. தினசரி சங்கல்பம் சொல்கின்ற பொழுது, ஸ்மார்த்தர்களும் வைணவர்களும் ``சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’’ என்று சொல்லி முடிப்பார்கள். சிவகோத்திரத்தைச் சார்ந்தவர்கள், ``சர்வம் சிவமயம் ஜகத்’’ (இந்த உலகங்கள் எல்லாம் சிவபெருமான் வடிவமாகவே இருக்கின்றன) என்று சங்கல்பம் சொல்வார்கள். ஆனால், இதை நாம் மனப்பூர்வமாகச் சொல்லுகின்றோமா, இல்லை உதட்டில் இருந்து சொல்லுகிறோமா என்பது முக்கியம். ஒரு மந்திரமோ, தியானமோ முழுமையான பலனைத் தரவேண்டும் என்றால், அதற்குத் திரிகரண சுத்தி அவசியம். (மனம், மொழி, மெய்) அதனால்தான் எந்த விஷயம் செய்யும் பொழுதும், மனதை ஒரு நிலையிலே நிறுத்துவதற்காக பிராணாயாமத்தைச் செய்துவிட்டு மந்திரப் பிரயோகங்களைச் செய்வார்கள். அப்படிச் செய்யும் பொழுது, மந்திரத்தினுடைய வீரியம் பன் மடங்காக இருக்கும் நாம் எதிர்பார்த்த பலனைத் தரும். சர்வம் விஷ்ணு மயம் ஜகத், சர்வம் சிவமயம் ஜகத் என்று சொல்வது சரிதான். ஆனால், நடைமுறையில் நாம் இதை எப்படிப் பின்பற்றுகிறோம் என்பது முக்கியம். ஆன்மிகத்துக்கு பொருத்தமாக, இணக்கமாக, நம்முடைய சடங்குகள் இருக்கும் வரை, அந்தச் சடங்குகளால் நமக்கு ஆத்ம உஜ்ஜீவனம் கிடைக்கும். நம்முடைய ஆன்மா பலப்படும். நாம் சொல்வது நடக்கும். நம்முடைய பிரார்த்தனைகள் பலிக்கும். இதனைத்தான், ஆன்ம பலம் (SPIRITUAL POWER) என்பார்கள். அதற்குள்தான் சடங்குகள் (RITUAL) இருக்கின்றன. ஆனால், அந்தச் சடங்குகளுக்குள் ஆன்ம விஷயத்தைப் புகுத்தவில்லை என்று சொன்னால், அதில் உள்ள ஆன்மா (SPIRIT) விலகி வெறும் சடங்காகவே (RITUAL) இருக்கும். சமீபத்தில் திருப்பாவை உபன்யாசம் செய்த பொழுது, ஒரு செய்தியைச் சொன்னேன். பகவான் வரவில்லை வரவில்லை என்றெல்லாம் சொல்லுகின்றோமே, யோசித்துப் பாருங்கள், பகவான் வரவில்லை என்று நாம் எப்படி சொல்லுகின்றோம்? ஒரு பெரிய ஆன்மிகச் சொற்பொழிவுக்கு பகவானே வந்து உட்கார்ந்தாலும், இவர் பகவான்தான் என்பதைத் தெரிந்து கொள்ளுகின்ற ஆற்றல் நிஜமாகவே நமக்கு இருக்கிறதா? சோமாசிமாற நாயனார் வரலாற்றிலே பரிந்துரைத்த சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளிடம் சிவபெருமான் சொல்லுகின்றார்; ``சோமாசிமாற நாயனாரிடத்திலே நேரடியாக ``நிறை அவி’’ (பூர்ணாகுதி) பெறுவதற்கு நான் செல்கின்றேன். ஆனால், என்னை அவர் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார். அங்கே இருக்கக் கூடிய வைதிகர்கள் எல்லாம் யாரோ ஒரு வேடன் ஆசாரக் குறைவோடு இங்கே வருகிறார் என்று ஓடிய பொழுது ``வந்திருப்பவர் சாட்சாத் அந்த சிவபெருமான்தான்’’ என்று சோமாசி மாற நாயனார் புரிந்துகொண்டார். வேதம் படித்த வைதிகர்களுக்கே வந்திருப்பது சிவபெருமான் என்று தெரியாத பொழுது, நம்மைப் போன்ற சாதாரண மக்களால் எப்படி பகவான் என்று புரிந்து கொள்ள முடியும்? ``சங்கு சக்கர கதாபாணி’’ என்று புராணம் மஹாவிஷ்ணுவை வர்ணிக்கிறது. இப்பொழுது ஒருவர் சங்கு சக்கர கதை தரித்து பஞ்சாயதங்களோடு வந்தால், அவர் மகாவிஷ்ணு என்று எப்படி நாம் தெரிந்துகொள்ள முடியும்? ஏதோ நாடக அரங்கில் இருந்து வேஷம் கலைக்காமல் வந்திருக்கிறார் என்று தானே நினைத்துக் கொள்வோம். அப்படியானால் நமக்கு இறைவனே நேரில் வந்தாலும் புரிந்துகொள்ள முடியாது. அவர் ஆடு மாடாகக்கூட வரலாம். பாம்பாக வரலாம். பரதேசியாக வரலாம். குழந்தையாக வரலாம். எப்படி வந்தாலும் நம்மால் அவரைப் புரிந்து கொள்ள முடியாது. இப்பொழுதுதான் சர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்ற வார்த்தையின் அர்த்தம் வருகிறது. எப்பொழுது நம்மால் தனித்து இவர்தான் இறைவன் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லையோ, அப்படியானால் இறைவனைப் புரிந்து கொள்வதற்கு ஒரு வழி வேண்டும் அல்லவா! அதுதான் சர்வம் விஷ்ணு மயம் ஜகத். எல்லாவற்றையும் இறைவனாக நினைப்பதுதான் சர்வ விஷ்ணு மயம் ஜகத் என்று பெரியவர்கள் சொன்னார்கள். நிஜ ஆன்மிகம் என்பது இதைப் புரிந்துகொண்டு பின்பற்றுவதுதான் சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்... ➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️ #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✡️தோஷ பரிகாரங்கள்
See other profiles for amazing content