Follow
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
22,950
Posts
127,015
Followers
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
567 views
7 hours ago
#ஸ்வாதி யாருக்கெல்லாம் #விபத்து , #வதை ,#பிரத்தியக்கு தாரை இல்லாம சுப தாரையா வருதோ அவங்க எல்லாருக்குமே நரசிம்மர வழிபட வழிபட கடன் குறையும். #ஆனந்தவர்மன் தாரை அட்டவணைய கொஞ்சம் கவனிங்க. ஆனா ஒரே நாள்ல நிறைய நரசிம்மர் கோயில்களுக்கு போகனும். அதுல தான் விஷயமே இருக்கு. வாழ்க்கைல ஒரு ஸ்வாதி நட்சத்திர நாள்லயாச்சும் நிறைய நரசிம்மர் கோயில்களுக்கு போங்க‌. போயிட்டு வந்தவுடனே ஒரு மேஜிக் நடக்கும். விழுப்புரம், சீர்காழி, திண்டுக்கல்ல நிறைய நரசிம்மர் கோயில்கள் இருக்குன்னு ஏற்கனவே பதிவிட்டுருந்தேன். நன்றி. #நரசிம்மர் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #✨கடவுள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
931 views
8 hours ago
✨️✨️✨️மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா 2026✨️✨️✨️ ​முக்கிய நிகழ்வுகள்: ​ஏப்ரல் 19, 2026: கொடியேற்றம் (காலை 10:35 - 10:59 மணிக்குள்) ​ஏப்ரல் 26, 2026: மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ​ஏப்ரல் 27, 2026: திக்குவிஜயம் ​ஏப்ரல் 28, 2026: மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் (காலை 08:35 - 08:59 மணிக்குள்) ​ஏப்ரல் 29, 2026: மாசி வீதிகளில் தேரோட்டம் ​மே 01, 2026: கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் ​தினசரி வாகன ஊர்வலம்: காலை (வாகனம்) இரவு (வாகனம்) ஏப் 19 காலை :கொடியேற்றம் மாலை :கற்பக விருட்சம், சிம்ம வாகனம் ஏப் 20 காலை :சப்பரம் மாலை பூத வாகனம், அன்ன வாகனம் ஏப் 21 காலை:சப்பரம் மாலை: கைலாச பர்வதம், காமதேனு வாகனம் ஏப் 22 காலை : தங்கப் பல்லக்கு (வில்லாபுரம் பயணம்) மாலை:வில்லாபுரத்தில் இருந்து திரும்புதல் ஏப் 23 காலை :சப்பரம் மாலை:தங்கக் குதிரை வாகனம் ஏப் 24 காலை:சப்பரம் இரவு:தங்க ரிஷபம், வெள்ளி ரிஷப வாகனம் ஏப் 25 காலை:சப்பரம் இரவு:நந்திகேஸ்வரர், யாளி வாகனம் ஏப் 26 மாலை:பட்டாபிஷேகம் வெள்ளி சிம்மாசன வாகனம் ஏப் 27 காலை:சப்பரம் இரவு:இந்திர விமானம் (திக்குவிஜயம்) ஏப் 28காலை: திருக்கல்யாணம் இரவு:யானை வாகனம், பூப்பல்லக்கு ஏப் 29 காலை :தேரோட்டம் இரவு:சப்தாவர்ணம் சப்பரம் ஏப் 30 - இரவு:தேவேந்திர பூஜை (வெள்ளி ரிஷபம்) #🪔புத்தாண்டு பூஜை விதிமுறைகள் 🛐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
578 views
10 hours ago
மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போரின் ஒரு நாளில் கௌரவர்களின் படைகள் அர்ஜுனனைச் சுற்றி வளைத்துத் தாக்கிக் கொண்டிருந்தன. அன்று அர்ஜுனன் தனது காண்டீபத்தை ஏந்தி மிகத் தீவிரமாகப் போர் புரிந்து கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில், எதிரிகளின் அம்புகள் மழையெனப் பொழிந்தன. அர்ஜுனன் அனைத்தையும் எதிர்த்து தாக்குதல்கள் நிகழ்த்தினான். தேரோட்டியாக இருந்த கிருஷ்ணர் அர்ஜுனனை அந்த அம்பு மழையிலிருந்து காப்பதற்காகத் தேரை மிக லாவகமாகச் செலுத்தினார். அர்ஜுனனின் மிகச்சிறந்த பாதுகாப்பு அரணாகவே கிருஷ்ணர் விளங்கினார். உலகை காப்பவனே அர்ஜுனனை காக்கும் போது அம்புகள் என்ன செய்து விட முடியும் காண்டீபதாரியை? இருப்பினும் அர்ஜுனன் தன் வீரத்தால் தன்னை தானே தன்வசம் இழந்தான். கர்வம் கொம்புகள் முளைக்க துவங்கின. நானே இந்தப் போரை நடத்துகிறேன் என் அம்புகளே வெற்றியைத் தீர்மானிக்கின்றன என்ற எண்ணம் அவனுக்குள் மெல்லத் தலைதூக்கியது. தேரின் வேகத்தை இன்னும் அதிகரிக்கச் சொல்லி அவன் கிருஷ்ணருக்குக் கட்டளையிட்டுக் கொண்டே இருந்தான். ஒரு சமயம் எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்கக் கிருஷ்ணர் தேரைத் திருப்பியபோது வேகத்தைக் குறைப்பதாக எண்ணிய அர்ஜுனன் தன் கையில் இருந்த வில்லால் கிருஷ்ணரின் முதுகில் தட்டினான். அன்று மாலை போர் முடிந்து கூடாரத்திற்குத் திரும்பியபோது, கிருஷ்ணர் தனது மேலாடையைக் கழற்றினார். அவரது முதுகில் ரத்தக் காயங்களும் தழும்புகளும் இருந்தன. இதைக் கண்டு பதறிப்போன அர்ஜுனன், "மாதவா இது எப்படி நடந்தது? உன்னைத் தாக்கிய அந்த வீரன் யார்? சொல், இப்போதே அவனை அழித்து விடுகிறேன். என்று கிருஷ்ணனையும் தன்னால் காப்பாற்றிவிடமுடியும் என்று இன்னும் அறியாமையில் பிதற்றி கொண்டிருந்தான். கோபத்தில் கொதித்தெழுந்தான். ஆனால் ஶ்ரீகிருஷ்ணர் அமைதியாகச் சிரித்துக்கொண்டே சொன்னார். அர்ஜுனா இது எதிரிகளின் அம்பு தந்த காயம் அல்ல. போர்க்களத்தில் நீ உன்னையும் அறியாமல் உன் வில்லால் என் முதுகில் அடித்தாயே, அந்த அடிதான் இது. நீ அம்புகளை எய்து கொண்டிருந்தபோது, அந்த அம்புகளின் பாதிப்பு உன்னைத் தாக்காமல் இருக்க நான் என் முதுகைக் கேடயமாக ஆக்கிக் கொண்டேன். நீ உன் வில்லால் என்னைத் தட்டியதை ய் போரின் மும்முரத்தில் நீ மறந்திருக்கலாம். ஆனால் என் பக்தன் தரும் ஒவ்வொரு வலியையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்கிறேன். இதைக் கேட்ட அர்ஜுனன் நிலைகுலைந்து போனான். தான் செய்த தவறை உணர்ந்து கிருஷ்ணரின் கால்களில் விழுந்து அழுதான். நான் போர் புரிகிறேன் என்ற அவனது கர்வம் சுக்குநூறானது. தான் எய்த ஒவ்வொரு அம்பிற்குப் பின்னாலும் கிருஷ்ணரின் உழைப்பும், தியாகமும் இருப்பதை அவன் உணர்ந்தான். இது அர்ஜுனன் மட்டுமல்ல உலக வாழ்க்கையில் சிக்கி தவிக்கும் நாம் அனைவருக்கான் பாடமும் தான். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாமே காரணம் என்று நினைக்கும் போது கர்வம் பிறக்கிறது. ஆனால் நமக்குத் தெரியாமலேயே நமக்கான பாரத்தை இறைவன் சுமந்து கொண்டிருக்கிறான் என்பதை உணரும்போது மட்டுமே முழுமையான சரணாகதி பிறக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! #கிருஷ்ணர் #அர்ஜுனன் #மகாபாரதம் #கிருஷ்ணலீலை #ஆன்மிகக்கதைகள் #பக்தி #குருக்ஷேத்திரம் #பகவத்கீதை #தமிழ்ஆன்மிகம் #பாரதப்போர் # #சகுனி #பீஷ்மர் #கர்ணன் #குந்திதேவி #ezhuthusiddhar #ஆன்மிகம் #இதிகாசம் #இதிகாசங்கள் #LordKrishna #Arjuna #Mahabharata #KrishnaLeela #SpiritualTamil #TamilStories #HinduMythology #Devotion #KrishnaWisdom #Kurukshetra #lordkrishna #srikrishnar #kadhaisolli #tamilspiritual #SpiritualTamil #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🪔புத்தாண்டு பூஜை விதிமுறைகள் 🛐 #✨கடவுள் #🙏பெருமாள்