Follow
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
22,403
Posts
130,707
Followers
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
601 views
7 hours ago
#கீதை_படியுங்கள்_பாதை_மாறுங்கள் 1. ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். தன்னலம் கருதா மக்கள் சேவையே மிகவுயர்ந்த யாகம் என சனாதன தர்மம் முன்மொழிகின்றது. இந்த உலகில் ஒருவரை ஒருவர் சாராமல் வாழ இயலாது, தேவைப்படுபவருக்கு உடனே உதவுவதே மிகவுயர்ந்த பண்பாகும். இவ்வாறு ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு நல்லிணக்கத்தோடு வாழ்வதால் மனிதர்களெல்லாம் உய்வு பெறுவர். (3:10) 2. அனைத்துச் செயல்களிலும் மிதமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். மிக அதிக நேரம் உறங்குவதோ அல்லது மிக குறைவான நேரம் உறங்குவதோ நலமற்ற செயலாகும். அதேபோல மிக அதிகமாக உண்பதும், உண்ணாமலே இருப்பதும் நலமற்ற செயலாகும். உணவு, உறக்கம், உடற்பயிற்சி, செயல் அனைத்திலும் மிதமான போக்கு உடையவர்கள் தியானத்தில் ஈடுபட்டால் அவர்களின் எல்லா துன்பங்களும் மறையும். (6:16) 3. எல்லா உயிர்களும் சமம் என்பதை உணர வேண்டும். ஈஸ்வரனின் படைப்பில் எல்லா உயிர்களும் சமம்தான். உயிரினங்களின் ஆன்மா, இறைவனின் சொரூபமானது. எனவே அடிப்படையில் எல்லா உயிர்களும் தெய்வீகமானவை. (9:29) 4. எல்லாருக்கும் இறைவனே தந்தை, இயற்கையே அன்னை, உலகமே ஒரு குடும்பம். எல்லா உயிர்களும் ஈசனின் சக்தியில் இருந்து வந்தவை. உயிர்களின் உடல் இயற்கையால் அளிக்கப்பட்டது. எனவே இந்த உலகமே ஒரு குடும்பம், நமக்கெல்லாம் ஈஸ்வரனே தந்தை இயற்கையே தாய். (14:4) #🙏பெருமாள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🛕ஆடி மாத வழிபாடு🔔
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
3K views
7 hours ago
*🌺விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள் !!🌸* "ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்...!" *அதாவது, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால், தர்மம் மீண்டும் தழைக்கும் என்பது தான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் மகிமை.* பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா..? என்று நாம் வியப்படையலாம். சாதாரண மனிதனாகிய நமக்கே பாலசுப்பிரமணியன் என்று பெயர் வைத்தால், பாலா, பாலு, சுப்பிரமணி, சுப்பி, மணி, மணியன் என்று பல பெயர்களால் அழைக்கும் போது, பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் இருக்காதா என்ன? இந்த ஆயிரம் பெயர்களைச் சொல்லி, பகவானை வேண்டினால், கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு. உடனே பார்வதி தேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவள் சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து, *""சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்? ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என்றால், அந்த நாமங்களை பண்டிதர்களால் சொல்ல முடியலாம்; படித்தவர்களால் சொல்ல முடியலாம்*. *ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?''* என்று கேட்டாள். ஈஸ்வரன் புன்னகைத்தார்.""தேவி... நீ சொல்வது சரிதான். ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு. *"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ர நாம தந்துல்யம் ராம நாம வரானனே'-* இப்படி மூன்று முறை சொன்னால் போதும். சஹஸ்ரநாமம் சொன்ன பலனை அடையலாம்'' என்று பார்வதி தேவியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் ஈஸ்வரன். சரி; இப்படிச் சொல்வதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்கலாம். *மரா... மரா... மரா... என்று சொல்லியே ராமநாமத்தை உச்சரித்த வேடனும் திருடனுமாக இருந்தவனே வால்மீகி மகரிஷியாக உயரவில்லையா?* *அது தான் ஸ்ரீராம நாம மகிமை.* மேலும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், *அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் சொல்லலாம்.*👌🏻 *முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால் பலன்களை அவன் தருவான்.👏👏🙏🏻🙏🏻🙏🏻* #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🙏பெருமாள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
619 views
7 hours ago
#கிருஷ்ணரின்_விஸ்வரூபம்_அர்ஜுனனுக்கு மட்டும் ஏன் காட்டப்பட்டது? போர்க்களத்தில் களைத்துப்போயிருந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் வெறும் வார்த்தைகளால் அறிவுரை கூறவில்லை. அவர் யார் என்பதை நேரடியாக அவனுக்குக் காட்டினார். திவ்யம் தாதாமி தே சக்ஷுஹ - உன்னுடைய சாதாரண கண்களால் உன்னால் காண முடியாது, அதனால் நான் உனக்கு தெய்வீக தரிசனத்தை அளிக்கிறேன். ஏன் அர்ஜுனனுக்கு மட்டும்? 1. அவர் வெறும் நண்பர் மட்டுமல்ல, அவர் ஒரு உண்மையான நர ரிஷி. கிருஷ்ணரும் நாராயணரும். பழைய தோழர்கள். 2. அவனது ஆசையை மாற்ற வார்த்தைகள் போதுமானதாக இல்லை. படைப்பு, இருப்பு மற்றும் அழிவு அனைத்தும் அவருக்கே உரியவை, அவற்றைக் காணும்போது மட்டுமே நீ உறுதியாக நம்புவாய். 3. வேதங்களைப் படிப்பதாலோ, தவம் செய்வதாலோ அல்ல, வேறு எந்த அம்சமும் இல்லாத பக்தியால் மட்டுமே நீ என்னைக் காண முடியும் என்று கிருஷ்ணரே கூறுகிறார். அர்ஜுனனிடம் அந்த பக்தி இருந்தது. எனவே, விஸ்வரூபம் ஒரு காட்சி அல்ல. அது, 'நானும் என்னுடையதும்' என்ற சிறிய எண்ணத்திலிருந்து, 'எல்லாம் அவரில் உள்ளது' என்ற மாபெரும் உண்மைக்கு அர்ஜுனனை எழுப்புவதற்கான கதவாக இருந்தது. ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ராதா 🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🛕ஆடி மாத வழிபாடு🔔 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
599 views
7 hours ago
#கிருஷ்ணரின்_விஸ்வரூபம்_அர்ஜுனனுக்கு மட்டும் ஏன் காட்டப்பட்டது? போர்க்களத்தில் களைத்துப்போயிருந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் வெறும் வார்த்தைகளால் அறிவுரை கூறவில்லை. அவர் யார் என்பதை நேரடியாக அவனுக்குக் காட்டினார். திவ்யம் தாதாமி தே சக்ஷுஹ - உன்னுடைய சாதாரண கண்களால் உன்னால் காண முடியாது, அதனால் நான் உனக்கு தெய்வீக தரிசனத்தை அளிக்கிறேன். ஏன் அர்ஜுனனுக்கு மட்டும்? 1. அவர் வெறும் நண்பர் மட்டுமல்ல, அவர் ஒரு உண்மையான நர ரிஷி. கிருஷ்ணரும் நாராயணரும். பழைய தோழர்கள். 2. அவனது ஆசையை மாற்ற வார்த்தைகள் போதுமானதாக இல்லை. படைப்பு, இருப்பு மற்றும் அழிவு அனைத்தும் அவருக்கே உரியவை, அவற்றைக் காணும்போது மட்டுமே நீ உறுதியாக நம்புவாய். 3. வேதங்களைப் படிப்பதாலோ, தவம் செய்வதாலோ அல்ல, வேறு எந்த அம்சமும் இல்லாத பக்தியால் மட்டுமே நீ என்னைக் காண முடியும் என்று கிருஷ்ணரே கூறுகிறார். அர்ஜுனனிடம் அந்த பக்தி இருந்தது. எனவே, விஸ்வரூபம் ஒரு காட்சி அல்ல. அது, 'நானும் என்னுடையதும்' என்ற சிறிய எண்ணத்திலிருந்து, 'எல்லாம் அவரில் உள்ளது' என்ற மாபெரும் உண்மைக்கு அர்ஜுனனை எழுப்புவதற்கான கதவாக இருந்தது. ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ராதா 🙏 #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✨கடவுள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
18.3K views
16 hours ago
#ஆடி அமாவாசை 🌑நாளை 12.08.2026 ஆடி அமாவாசை. ****************************************** 🚩ஆடி அமாவாசையில் பித்ரு லோகத்தில் இருந்து வரும் முன்னோர்கள். ஆடி அமாவாசை நாள் முன்னோர்களை வணங்க மிகச்சிறப்பான நாள். தட்சிணா யன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமா வாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். இந்த ஆண்டின் ஆடி அமாவாசை வரும் 28 ஆம் தேதி வியாழக்கிழமை கடைபிடிக்கப் படுகிறது. பித்ரு லோகத்தில் இருந்து நம்மை காண வரப்போகும் நம்முடைய முன்னோர்களை எப்படி வரவேற்பது? ஆடி அமாவாசை நாளில் என்ன தானம் கொடு ப்பது என்று பார்க்கலாம். ஒரு மனிதன் தன் வாழ்வில் ஐந்து பேரைக் காக்க வேண்டும் என்று வள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார். "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.." தென்புலத்தார், தெய்வம், விருந்தினன், உறவினர்கள் மற்றும் தன் குடும்பம் ஆகி ய ஐவரையும் காக்க வேண்டிய கடமை ஒரு மனிதனைச் சேர்கிறது. இந்த ஐவரில் முதலாவதாகத் குறிப்பிடுவது தென்புலத் தார் எனப்படும் பித்ருக்களையே. அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, நல்ல காரியங்கள் எல்லாவற்றை. யும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம் என்று கூறுவார்கள். நம் முன்னோர்களுக்கு இன்றைய தினம் எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பண ம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. 🌹பித்ரு தர்ப்பணம் செய்யும் நாட்கள் ***************************************** பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தி யேகமாக ஆறு நாட்கள் உள்ளன. அவை உத்தராயண புண்ணிய காலம் என்று சொல்லும் காலத்தின் தொடக்கமான தை மாதம் முதல்நாள், சிவராத்திரி, தட்சிணா யன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தின் முதல் நாள், ஆடி அமாவா சை, சித்திரை மாதம் முதல் நாள், அட்சய திருதியை ஆகிய நாள்கள் சிராத்தம் கொடுப்பதற்குப் பிரத்தியேகமான நாட்க ளாகும். இந்த நாட்களில் நாம் சில பொரு ட்களைத் தானமாக தர வேண்டும். 🌹ஆடி அமாவாசை தர்ப்பணம் ********************************** ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தி ல் நம்முடைய முன்னோர்களான பித்ருக்க ள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத் துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத் திருக்கிறோம் என்பதைத் தெரிவிப் பது போலவும், அவர்களை பூமிக்கு வரும் படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். நம்முடன் தங்கியிருக்கும் முன்னோர்கள் நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மகாளாய அமாவா சை நாளாகும். அன்றைய தினமும் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன் னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்கு செல்லும் நாள் தை அமாவாசை. நம்முடன் வந்து ஆறு மாத காலம் தங்கியிருந்த முன்னோர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும். 🌹முன்னோர்கள் மகிழ்ச்சி ***************************** அமாவாசை தினத்தில் முன்னோர்களையு ம் தாய், தந்தையர்களையும் யார் வழிபடு கிறார்களோ, அவர்களின் பிள்ளைகளுக் கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அமாவாசை நாளில்தான் சந்திரன் சந்தோ ஷம் அடைகிறாராம். மனோகாரகன் சந்திரன் சந்தோஷமடைந்தால் நம்முடைய மனதும் சந்தோஷம் அடையும். மகிழ்ச்சி யான மனதுடன் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே நிச்சயம் வெற்றி பெறும். சந்திரன் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாக கூறியிருக்கிறார்கள். 🌹முன்னோர்களை வரவேற்போம் ************************************** முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடிய தான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத் து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டி னை சுத்தம் செய்து வீடுகளில் விளக்கேற் றி நம்மை காண வரும் முன்னோர்களுக் கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவே ற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள். 🌹எள் தானம் ************** எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். திலம் என்றால் விஷ்ணோர் அம்ச சமுத்பவ:' என்று பொருள். விஷ்ணு விலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமா க தோன்றியது எள். திலம் என்று சொல்ல 0ப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. 🌹பித்ருசாப நிவர்த்தி ************************ அமாவாசை நாளில் ஆடை தானம் செய்வ தால் வாழ்வில் வேண்டிய பலன் உண்டா கும். புதிய ஆடைகளை தானம் செய்வதா ல் ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். உங்கள் பணியில் வரும் தடைகள் அனை த்தும் நீங்கும். பசு தானம் மிகவும் முக்கிய த்துவம் வாய்ந்தது. பித்ருசாப தோஷங்க ள் விலகும். எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வதால் பித்ருக்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. 🌹அன்னதானம் முக்கியம் ****************************** நோய் தொல்லையால் அவதிப்படுபவர்க ள் அமாவாசை நாளில் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் சகல விதநோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பின்னர் ஏழைகளுக்கும் இயலாதவர்களு க்கும் அன்னதானம் கொடுப்பது சிறப்பு. அமாவாசை நாளில் உணவின்றி தவிப்ப வர்கள்,ஏழைகள், பசியோடு இருப்பவர்க ளைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள். நம்முடைய வழிபாடும், தானமும் உள்ளன் போடு இருந்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும். 🌹🌹12.08.2026... நேசமுடன் விஜயராகவன்.... #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏🏼ஓம் நமசிவாய #🛕ஆடி மாத வழிபாடு🔔 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
1.3K views
17 hours ago
🌑நாளை 12.08.2026 ஆடி அமாவாசை. ****************************************** 🚩ஆடி அமாவாசையில் பித்ரு லோகத்தில் இருந்து வரும் முன்னோர்கள். ஆடி அமாவாசை நாள் முன்னோர்களை வணங்க மிகச்சிறப்பான நாள். தட்சிணா யன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமா வாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். இந்த ஆண்டின் ஆடி அமாவாசை வரும் 28 ஆம் தேதி வியாழக்கிழமை கடைபிடிக்கப் படுகிறது. பித்ரு லோகத்தில் இருந்து நம்மை காண வரப்போகும் நம்முடைய முன்னோர்களை எப்படி வரவேற்பது? ஆடி அமாவாசை நாளில் என்ன தானம் கொடு ப்பது என்று பார்க்கலாம். ஒரு மனிதன் தன் வாழ்வில் ஐந்து பேரைக் காக்க வேண்டும் என்று வள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார். "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.." தென்புலத்தார், தெய்வம், விருந்தினன், உறவினர்கள் மற்றும் தன் குடும்பம் ஆகி ய ஐவரையும் காக்க வேண்டிய கடமை ஒரு மனிதனைச் சேர்கிறது. இந்த ஐவரில் முதலாவதாகத் குறிப்பிடுவது தென்புலத் தார் எனப்படும் பித்ருக்களையே. அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, நல்ல காரியங்கள் எல்லாவற்றை. யும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம் என்று கூறுவார்கள். நம் முன்னோர்களுக்கு இன்றைய தினம் எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பண ம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. 🌹பித்ரு தர்ப்பணம் செய்யும் நாட்கள் ***************************************** பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தி யேகமாக ஆறு நாட்கள் உள்ளன. அவை உத்தராயண புண்ணிய காலம் என்று சொல்லும் காலத்தின் தொடக்கமான தை மாதம் முதல்நாள், சிவராத்திரி, தட்சிணா யன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தின் முதல் நாள், ஆடி அமாவா சை, சித்திரை மாதம் முதல் நாள், அட்சய திருதியை ஆகிய நாள்கள் சிராத்தம் கொடுப்பதற்குப் பிரத்தியேகமான நாட்க ளாகும். இந்த நாட்களில் நாம் சில பொரு ட்களைத் தானமாக தர வேண்டும். 🌹ஆடி அமாவாசை தர்ப்பணம் ********************************** ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தி ல் நம்முடைய முன்னோர்களான பித்ருக்க ள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத் துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத் திருக்கிறோம் என்பதைத் தெரிவிப் பது போலவும், அவர்களை பூமிக்கு வரும் படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். நம்முடன் தங்கியிருக்கும் முன்னோர்கள் நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மகாளாய அமாவா சை நாளாகும். அன்றைய தினமும் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன் னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்கு செல்லும் நாள் தை அமாவாசை. நம்முடன் வந்து ஆறு மாத காலம் தங்கியிருந்த முன்னோர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும். 🌹முன்னோர்கள் மகிழ்ச்சி ***************************** அமாவாசை தினத்தில் முன்னோர்களையு ம் தாய், தந்தையர்களையும் யார் வழிபடு கிறார்களோ, அவர்களின் பிள்ளைகளுக் கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அமாவாசை நாளில்தான் சந்திரன் சந்தோ ஷம் அடைகிறாராம். மனோகாரகன் சந்திரன் சந்தோஷமடைந்தால் நம்முடைய மனதும் சந்தோஷம் அடையும். மகிழ்ச்சி யான மனதுடன் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே நிச்சயம் வெற்றி பெறும். சந்திரன் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாக கூறியிருக்கிறார்கள். 🌹முன்னோர்களை வரவேற்போம் ************************************** முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடிய தான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத் து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டி னை சுத்தம் செய்து வீடுகளில் விளக்கேற் றி நம்மை காண வரும் முன்னோர்களுக் கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவே ற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள். 🌹எள் தானம் ************** எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். திலம் என்றால் விஷ்ணோர் அம்ச சமுத்பவ:' என்று பொருள். விஷ்ணு விலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமா க தோன்றியது எள். திலம் என்று சொல்ல 0ப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. 🌹பித்ருசாப நிவர்த்தி ************************ அமாவாசை நாளில் ஆடை தானம் செய்வ தால் வாழ்வில் வேண்டிய பலன் உண்டா கும். புதிய ஆடைகளை தானம் செய்வதா ல் ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். உங்கள் பணியில் வரும் தடைகள் அனை த்தும் நீங்கும். பசு தானம் மிகவும் முக்கிய த்துவம் வாய்ந்தது. பித்ருசாப தோஷங்க ள் விலகும். எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வதால் பித்ருக்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. 🌹அன்னதானம் முக்கியம் ****************************** நோய் தொல்லையால் அவதிப்படுபவர்க ள் அமாவாசை நாளில் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் சகல விதநோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பின்னர் ஏழைகளுக்கும் இயலாதவர்களு க்கும் அன்னதானம் கொடுப்பது சிறப்பு. அமாவாசை நாளில் உணவின்றி தவிப்ப வர்கள்,ஏழைகள், பசியோடு இருப்பவர்க ளைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள். நம்முடைய வழிபாடும், தானமும் உள்ளன் போடு இருந்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும். 🌹🌹12.08.2026... நேசமுடன் விஜயராகவன்.... #🌸 ஆடி மாத ஸ்டேட்டஸ்🙏 #✡️தோஷ பரிகாரங்கள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏பெருமாள் #🙏அம்மன் துணை🔱
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
1.1K views
17 hours ago
#எமலோகம். பூமியில் வாழ்ந்த ஒருவன், இறந்ததும் எமலோகம் வந்தான். அப்போது, எமதருமன் அவன் அருகில் வந்து, ஆதுரத்துடன் அவனுடைய தோளைத்தொட்டான். நடுநடுங்கிப் போனான் வந்தவன். ஆனால், எந்த முரட்டுத்தனமும் எமதருமனிடம் இல்லை; அந்த மானிடனின் தோளை மிருதுவாகத்தான் பற்றிக்கொண்டான். அதில் தனது வலுவையெல்லாம் எமதருமன் காட்டவில்லை. முகத்திலும் எந்தக் குரூரமோ ஆவேசமோ இல்லை. மாறாக, எமதருமனின் கண்களிலும் முகத்திலும் மெல்லிய சோகம்தான் படர்ந்திருந்தது. அந்தச் சோகம் அவனுடைய குரலிலும் எதிரொலித்தது. வந்தவனின் தோளைப் பற்றிக்கொண்டு, மிகுந்த கனிவான, கருணை அடர்ந்திருந்த குரலில், ''எத்தனை வருடங்களாகப் பூமியில் இருந்தாய் நீ? இருபது வருடம் இருந்திருப்பாயா? முப்பது வருடங்கள் வாழ்ந்திருப்பாயா? அறுபது எழுபது வருடங்கள் வரை பூவுலகில் இருந்தவனா நீ? சரி, இத்தனை வருடங்களாக பூமியில் இருந்திருக்கிறாயே? ஒரு முறை, ஒரேயொரு முறை 'கேசவா’ என்று ஏன் உச்சரிக்கவில்லை? உன் நாக்கு 'கேசவா’என்று உச்சரிக்க ஏன் மறுத்தது? கேசவனைப் பற்றிய சிந்தனை உனது புத்திக்குள் எட்டவே இல்லையா? உன் மனதில் ஒருமுறைகூட, கேசவனின் திருநாமத்தைச் சொல்லவேண்டும் என்று தோன்றியதே கிடையாதா? என்னுடைய ஊரான எமலோகத்துக்கு ஒருவன் வருகிறான் என்றால், சந்தோஷப்பட மாட்டேன், நான்! 'அடடா... என்ன கொடுமை இது!’ என்று வருந்தத்தான் செய்வேன். வாழ்வில், ஒருமுறையேனும் கேசவனின் திருநாமத்தைச் சொல்லியிருந்தால், இப்போது நீ இங்கே வந்திருக்கவேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது. தண்டனை பெறுவதைவிட, தண்டனை கொடுப்பதுதான் ரொம்பவே கஷ்டமான காரியம். கேசவ நாமத்தைச் சொல்லாததால், இப்போது உனக்கும் கஷ்டம்; உனக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமே என்பதால், எனக்கும் கஷ்டம்!'' என்று கனிவுடன் சொன்னாராம் எமதருமன். 'கேசவன்’ எனும் திருநாமத்தின் வலிமையைப் புரிந்து கொண்டீர்களா? அந்தத் திருநாமத்தைச் சொல்வதால் கிடைக்கிற மோட்ச பலனை அறிந்துகொண்டீர்களா? எங்கே... சொல்லுங்கள், கேசவா... கேசவா... கேசவா! Pl #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✡️தோஷ பரிகாரங்கள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✨கடவுள்