Follow
திரைபாரதி
@thiraibharathi
1,860
Posts
2,386
Followers
திரைபாரதி
457 views
2 hours ago
ஒரே ஒரு பொய்யில எல்லாம் போச்சி! Audio Track: https://drive.google.com/file/d/1dYx5csnbjTUkNjCo8TdfmrNrSsPhsVDa/view?usp=drivesdk இது நடந்து 20 வருடங்கள் இருக்கலாம். அப்போதே செல்போன் பிரபலமாகிவிட்டது என்று சொல்லி நமச்சிவாயம் சார்வாள் கச்சேரியை ஆரம்பித்தார்: ஊர் பேர் ஞாபகம் இல்லை, களக்காடு பக்கத்துல சின்ன ஊரு. அங்கன இருந்து அண்ணன் தம்பிக ரெண்டு பேரு மெட்ராஸ் ஹார்பர்ல காண்ராக்டர் ஒருத்தருகிட்ட வேலை கிடைச்சி சேந்தாக, பெறகு கல்யாணம் காட்சியெல்லாம் ஆச்சி. ரெண்டு பேருக்கும் தாம்பரத்துல வீடு. ஒரு நாள் காலைல பெரியவன் கருப்பசாமி குளிச்சிட்டு இருக்கான். அவனுக்கு போன் வருது. பொண்டாட்டி போன எடுத்தா. ஹலோ! "இது கருப்பசாமி வீடுதானே?" ஆமா, என்ன விஷயம்? "அவரோட மாமா முருகேசன் அவருகிட்ட பேசணும்னு சொல்றார்." அவர் வீட்டுல இல்லை. போனை கட் செய்து விடுகிறாள். அவளுக்கு எப்படி இருக்கிறீர்கள், எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று கேட்கக்கூட விருப்பம் இல்லை. நாம் சர்வ சாதாரணமாக குழந்தைகளின் எதிரிலேயே பொய் சொல்கிறோம். அதிர்ஷ்ட தேவதையே போனில் வந்து நமது வீட்டிற்கு வருவதற்கு வழி கேட்டாலும், எடுத்த எடுப்பிலேயே, "நாங்கள் வீட்டில் இல்லை, வெளியூரில் இருக்கிறோம்" என்று சொல்வதுதானே நமது வழக்கம்? கிட்டத்தட்ட இங்கும் அதுதான் நடந்தது. பிறகு முருகேசனுக்கு, கூட வந்த பிரயாணி கருப்பசாமியின் தம்பி வெள்ளப்பாண்டிக்கு போனை போட்டு கொடுக்கிறார். அவரிடம் வெள்ளப்பாண்டி, "மாமா நீங்க வீட்டுக்கெல்லாம் தேடி வராதீக. நெல்லை எக்ஸ்பிரஸ்லதானே வந்தீக? அதே பிளாட்பாரத்துல ஏதாச்சும் ஒரு பெஞ்சில உக்காந்திருங்க. இன்னிக்கு ஞாயத்துக்கிளமதான, நானே வந்து கூட்டியாறேன்" என்று சொல்லிவிட்டான். வீட்டுக்கு வந்த மாமா குளித்து சாப்பிட்டுவிட்டு "செத்த நேரம் படுக்கிறேன், சாய்ந்தரம் கருப்பன் வீட்டுக்கு போவோம்" என்று சொல்லிப் படுத்தவர் மீளா தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். வெள்ளப்பாண்டிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மனைவியின் யோசனைப்படி முதலில், அவர் கொண்டுவந்த மஞ்சப்பையில் என்ன இருக்கிறது என்று பார்க்கிறார்கள். பையில் 2000 ரூபாய் கட்டுகள் மூன்று, அதாவது ₹6 லட்சம், சில்லறையாக ஒரு நாலாயிரத்தி சொச்சம், தங்கத்தினாலான தாலிக்கொடி, இரண்டு கம்மல் ஆகியவை இருந்தன. அண்ணனை கூப்பிட்ட வெள்ளப்பாண்டி பணம் மற்றும் நகை விஷயத்தைப்பற்றி மூச்சு விடாமல் மறைத்துவிட்டு, "இப்போது என்ன செய்வது?" என்று கேட்கிறான். கருப்பசாமி யோசனையுடன், "மாமாவுக்கு (தாய் மாமன்) நேரடி வாரிசு கிடையாது. அவரோட அண்ணன் தம்பிகளுக்குள்ளயும் பேச்சுவார்த்தை கிடையாது என்ன செய்யலாம்?" என்று கேட்கிறார். அதற்கு வெள்ளப்பாண்டி, "அப்பிடின்னா இங்கேயே கரண்ட் மயானத்துல எரிச்சி காரியம் பண்ணிட்டு பெரியமாமாவுக்கு தாக்கல் மட்டும் சொல்லிறலாம். மத்த ஏற்பாடுகள நானே பாத்துக்கிறேன்" என்று சொன்னதும் கருப்பசாமிக்கு பரம சந்தோஷம். முருகேசன் காடுகரைகளை வித்துட்டு பணத்தை ரெண்டா பிரிச்சி தங்கச்சி பசங்களுக்கு குடுத்துட்டு போகணும்னு வந்திருக்கார். அத வாங்குற கொடுப்பினை கருப்பசாமிக்கு இல்லை! ஒரே ஒரு பொய்யில எல்லாம் போச்சி! வீட்டுல இருந்துட்டே இல்லேன்னு சொன்ன சங்கதியும் கருப்பசாமி உளறுனதுல வெளுத்துருச்சி! Gillette Guard Shaving Razor #Ad https://link.amazon/B02hnXF40 #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
திரைபாரதி
596 views
10 hours ago
சந்தி சிரிக்கும் திராவிட மாடல்! Audio Track: https://drive.google.com/file/d/1pUz5uUBXz7QwH3g0_J2-ghsbxT8aUU8D/view?usp=drivesdk அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையில்வைத்து திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்தும் சாராய ஆலைகளைப் பற்றிப் பேசினார். அதற்கு, அவர்கள் முறைப்படி உரிமம் பெற்று தொழில் செய்வதாக திமுக தரப்பில் இருந்து பதிலளிக்கப்பட்டது. பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சட்டப்படி தொழில் செய்கிறார்களா, சட்டவிரோரோதமாகச் செய்கிறார்களா என்பதைப் பற்றி இல்லை. திமுக எப்படி மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கும், என்பதுதான் இதில் தொக்கி நிற்கும் கேள்வி. வைகோவின் மகன் சிகரெட் விற்பனை செய்தால் தவறு. திமுக MPக்கள் சாராய ஆலைகள் நடத்துவது சரி! இதுதான் திராவிட மாடல் பேசும் நியாயம். வைகோவின் மகன், தான் செய்த தொழிலை எப்போதோ விட்டுவிட்டார். திமுக MPக்கள் அதைச் செய்வார்களா? அடுத்து, திமுக கட்சி லாட்டரி அதிபரிடமிருந்து பெற்ற நன்கொடை பற்றியும் ஆதவ் அர்ஜுனா கேள்வியை எழுப்பினார். அதற்கு திமுகவினர் சொன்ன பதில் என்ன? மற்ற கட்சிகள் அதிலும், குறிப்பாக பாஜக பெற்றதைப்போல சட்டபூர்வமாக கட்சிக்கு நிதி பெறப்பட்டதாக கூறப்பட்டது. பாஜக ஒரு தேசியக்கட்சி. மாநிலத்துக்கு மாநிலம் விதிமுறைகள் வேறுபடுகின்றன. இதில் பாஜகவுடன் திமுகவை ஒப்பிட்டுப் பேச முகாந்திரம் இல்லை. திமுக செய்வதெல்லாம் நியாயம், திமுகதான் சமூகநீதியைத் தூக்கிப் பிடிக்கிற கட்சி என்று பேசிக்கொண்டு, பிரச்சினை என்று வந்ததும் பிற கட்சிகளின் பின் ஒளிந்துகொள்ள நினைப்பது ஏன்? கவுண்டமணி காமெடியில் வருவது போல புண்ணுக்கு புனுகு போடும் "திராவிடமாடல்" டெலிபோன் ஒயர் அறுந்துபோய் நாளாகிவிட்டது. விஜய்க்கு பேசத்தெரியவில்லை, ஆட்சி செய்யும் திறமை இல்லை என்று திமுகவினர் பேசுவதில் பிரயோஜனமில்லை. திமுக தலைவர்களின் ஜெகஜ்ஜாலப் பேச்சு மற்றும் ஆட்சித் திறமை விஜய்க்குத் தேவையில்லை! #திமுக #திராவிடமாடல் #விஜய் #தவெக #DMK #வைகோ #TVK Samsung Galaxy M36 5G #Ad https://link.amazon/B0fIIgc3Y #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
திரைபாரதி
862 views
19 hours ago
பிரபலங்களின் விவாகரத்தில் உள்ள சிக்கல்கள்... இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து என்பது சாதாரணமாக நடக்கிற விஷயம்தான். ஆனால் சில விவாகரத்துக்கள் சமூகத்தில் அதிகம் பேசப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. அவை சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்ற பிரபலங்களுடைய விவாகரத்துகள். முதலில் பிரபலங்கள், குறிப்பாக அரசியல்வாதிகள் 24 மணி நேரமும் மீடியா வெளிச்சத்தில் இருப்பவர்கள். அவர்களுடைய விவாகரத்தைப் பற்றி அந்த காலகட்டங்களில் தேவையற்ற பல செய்திகள் அல்லது ஹேஷ்யங்கள் உலாவருவதைத் தடுக்க முடிவதில்லை. பிரபலங்களுக்கும் சாதாரண மக்களைப்போல உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பது சகஜம். ஆனால், சாதாரண மக்களுக்கு கிடைக்கும் ஆலோசனைகள் அவர்களுக்கு கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை சொல்வதற்கு பல்வேறு காரணங்களால் யாரும் முன்வருவதில்லை. சொல்லப்போனால், அவர்களிடம் இதைப்பற்றி பேசுவதற்கே மற்றவர்கள் தயங்குவார்கள். அதை விட அதைப் பற்றி பிரபலத்தின் கருத்து எதுவாக இருக்கிறதோ, அதையே சரியான கருத்து என்று ஏற்றி விடுபவர்களே அதிகம்! அவர்களது பெற்றோர்களின் கருத்தும் குடும்பம் மற்றும் உறவுமுறை கோணத்தில்தான் இருக்கும்; ஆகையால் இதில் பொதுவாக, அவர்களுடைய விருப்பத்தைத் திணிக்கவே முயல்வார்கள். இந்தப் பிரச்சினையை எதார்த்தமாக அணுகுவதே சிறப்பாக இருக்கும். விவாகரத்தே சரியான தேர்வு என்று அவர்கள் ஒரு கட்டத்தில் முடிவெடுத்திருந்தால், அதன்படி நடப்பதே உசிதம் எனலாம். அதை மறுபரிசீலனை செய்து ஒட்டவைக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த புரிதல் மட்டும் இருந்துவிட்டால் எல்லாம் நலமே! சொல்லப்போனால், ஒட்டுப்போடுவது நீண்டகால அணுகுமுறையில் தீராத பிற பிரச்சினைகளையே உருவாக்கும். அந்த பிரபலங்களை மீடியா தொடர்ந்து கண்காணித்து வரும். தேவையில்லாத கதைகளைக் கட்டிவிட்டு அவருடைய நடத்தைக்கு களங்கம் விளைவித்து, அவருக்கு துரோகி என்று பழி சுமத்தப் பார்ப்பார்கள். தேர்தல் சமயத்தில் கிசுகிசுக்கள் ரெக்கைகட்டிப் பறக்கும். அதுமட்டுமல்ல, இது கணவன் மனைவி ஆகியோரைத் தவிர குழந்தைகளையும் குடும்பத்தினரையும் பாதிக்கும்; அரசியலை வெகுவாக பாதிக்கும். இதை கணவன் மனைவி இருவருமே உணர்ந்து, கலந்து பேசி இதற்கு இடம் கொடுக்காதபடி கண்ணியமாகப் பிரிவதற்கு முயல்வது நல்லது. சுமுகமான பிரிவுகளினால் உறவுகள் மேம்படுமே தவிர சீர்குலையாது. மேலும் அந்த பிரபலங்களுடைய குழந்தைகளின் தேவையில்லாத மனஇறுக்கத்திற்கும் சஞ்சலங்களுக்கும் தீர்வு கிடைக்கிறது. அதுமட்டுமல்ல, தொழில் மற்றும் அரசியல் எதிரிகள் நாளை தனிப்பட்ட விஷயங்களில் மறைமுகமாகத் தலையிட்டு சதித்திட்டங்கள் தீட்டுவதும் தவிர்க்கப்படுகிறது. மொத்தத்தில் Reunion என்ற மகிழ்ச்சியான செய்தி ஒருநாள்தான் இருக்கும். ஆனால் அதன்பின் சம்பந்தப்பட்டவர்கள் அனைருமே காலமெல்லாம் சிக்கல்களில் சிக்கித் தவிப்பது போலாகிவிடும். எது எப்படி இருந்தாலும் இது தனிப்பட்ட இருவரின் முடிவு. மற்றவர்களுக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? எனவே, அதில் யாரும் தலையிடுவதற்கில்லை! எது எப்படியோ, நல்லதே நடக்கட்டும், நல்லபடி நடக்கட்டும்! Lux Cozi T Shirts #Ad https://amzn.to/4f6mqvg #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
திரைபாரதி
493 views
22 hours ago
அறம் செய விரும்பு Audio Track: https://drive.google.com/file/d/1kd2MzemTvHRFjL5ZjiBYXPt110UIYLD4/view?usp=drivesdk Transcript: "ஊழல் கட்சி என்று விஜய்யால் விமர்சிக்கப்பட்ட அதிமுகவினரின் ஆதரவை தவெக அரசு பெறுவது அறமா?" என்று திமுக கேட்டது. சரி, அப்படிப் பேசிய கையோடு, "திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது" என்றது நகைச்சுவை! விஜய் திமுகவை எப்படி விமர்சித்தார்? தீய சக்தி என்றுதானே! ஆட்சி திமுக தயவில் நடந்தால் அது அறம். அதே அதிமுக தயவில் நடந்தால் மறம், பேரம்! அது சரி, இப்போது யார் தயவில் ஆட்சி நடக்கிறது? #விஜய் #தவெக #திமுக #Vijay #TVK #DMK Samsung Galaxy M36 5G #Ad https://link.amazon/B0fIIgc3Y #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
திரைபாரதி
564 views
1 days ago
"மைனஸ் பூஜ்யம்" மதிப்பெண்! முன்பு, தமிழாசிரியர் அவதாரமெடுத்து "சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம்" என்று திருவாய் மலர்ந்தருளிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இப்போது, கணித ஆசியராக வேடம் தரித்து தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை விமர்சிக்கும் போதுதான் இந்த "மைனஸ் பூஜ்ஜியம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். கணிதத்தில் பூஜ்யத்திற்கு நேர்மறை அல்லது எதிர்மறை மதிப்பு கிடையாது; அது நடுநிலையான எண். தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டணி அரசின் முதல் பொது பட்ஜெட்டை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அதற்கு "பூஜ்ஜியம்" மதிப்பெண் கொடுத்தார். பின்னே, பூஜ்யத்தின் மதிப்பைப்பற்றித் தெரியாதவர்கள் எல்லாம் பட்ஜெட் போட்டால் எப்படி? அதற்கு அடுத்த நாள் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்தவொரு புதிய அறிவிப்போ, பயிர்க்கடன் தள்ளுபடியோ இல்லை என்று கூறி, "பொது பட்ஜெட்டுக்கே பூஜ்ஜியம் கொடுத்தேன், இந்த பட்ஜெட் அதைவிட மோசமாக ஏமாற்றுவதால் இதற்கு 'மைனஸ் பூஜ்ஜியம்' தான் கொடுக்க முடியும்" என்று விமர்சித்துள்ளார். பின்னே, வருடாவருடம் நகைக்கடன், பயிர்க்கடன், கல்விக்கடன் எல்லாம் கொடுக்கவேண்டும். கொடுத்த கையோடு அவை தள்ளுபடி செய்யப்படவேண்டும். தள்ளுபடி செய்த கடன்கள் இவர் தலைமீதா விழப்போகிறது. மீண்டும் மக்கள் தலையில்தானே விழப்போகிறது! ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜரால் செல்லமாக அழைக்கப்பட்ட திமுகவும் அதிமுகவும் இன்று ஒன்று சேர்ந்து விஜய் அரசை எதிர்ப்பதில் கூட்டணிபோட்டு செயல்படுகின்றன. #தவெக #திமுக #அதிமுக #விஜய் #TVK #DMK #ADMK #Vijay Lux Men's Votton Vests #Ad https://link.amazon/B09Iz8MJq #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
திரைபாரதி
595 views
1 days ago
சர்வதேச பீர் தினம்: வரலாறும் சுவாரசியங்களும் Audio Track: https://drive.google.com/file/d/1hL_aJLQ_C653iunLWPPAjQVHgRWhNh-b/view?usp=drivesdk Transcript: உலகளவில் அதிகம் பருகப்படும் பானங்களில் ஒன்றான பீர், உலகின் மிகப்பழமையான பானங்களில் ஒன்றாகும். சுமார் கிமு 5000 ஆண்டிலேயே மெசபடோமியா மற்றும் பண்டைய எகிப்தில் தானியங்களை நொதிக்க வைத்து பீர் தயாரித்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பீரின் சிறப்பைப் போற்றும் வகையில் ஜூலை 30 மற்றும் இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சர்வதேச பீர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளவில் விற்பனையில் சீனாவின் 'ஸ்னோ பீர்' (Snow Beer) முதலிடத்தைப் பிடிக்கிறது. தனிநபர் பீர் பயன்பாட்டில் செக் குடியரசு உலகளவில் முதலிடத்திலும், இந்தியாவில் கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன. "தண்ணி" என்றாலே நமக்கு கர்நாடகத்துடன் போட்டிதான்! இந்திய சந்தையில் 'கிங்ஃபிஷர்' (Kingfisher) தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. கேஸ்கெட் பீர் (Cask Beer): செயற்கை கார்பன் டை ஆக்சைடு வாயு அழுத்தமின்றி, மரப் பீப்பாய்களில் இயற்கையாக நொதிக்க வைக்கப்பட்டு பம்புகள் மூலம் நேரடியாகப் பரிமாறப்படும் பீர் 'உயிருள்ள பீர்' (Live Beer) என்றழைக்கப்படுகிறது. பெங்களூர் பப் படத்தைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறதுதானே? பீரில் உள்ள அதிகப்படியான கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடிவயிற்றில் கொழுப்பாகப் படிவதால், வயிறு முன்நோக்கிப் புடைத்திருப்பதை 'பீர் பெல்லி' (Beer Belly) என்று செல்லமாக அழைப்பர். மிதமான பயன்பாடு சில நன்மைகளைத் தந்தாலும், அளவுக்கு மீறினால் பீர் உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்காக அமையும். #InternationalBeerDay #BeerHistory #CaskBeer #BangalorePubCulture #BangalorePubs #CraftBeer #BeerFacts #Kingfisher #BeerLover #சர்வதேசபீர்தினம் Axe Deodorant Body Spray #Ad https://link.amazon/B0fBcLsrt #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
திரைபாரதி
587 views
1 days ago
உடல் ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷம் Audio Track: https://drive.google.com/file/d/1FlKKw5l0VEunG8tsBLCJDwTptuUyVFcp/view?usp=drivesdk Transcript: நாம் உடலையும் பேணவில்லை... உள்ளத்தையும் பேணவில்லை! சாப்பாட்டிற்கு அடுத்தபடி, பல் துலக்குவது மற்றும் குளிப்பது மட்டும் உடலைப் பேணுவதாக அமையாது. அதுவும் கண்டதை தின்கிறோம், அதையும் ஒழுங்காகத் தின்பதில்லை. நொறுங்கத் தின்றால் நூறு ஆயுள் என்றாலும், குருட்டுக் கோழி தவிட்டை விழுங்குவது போல அவசரம் அவசரமாக விழுங்குகிறோம். "உணவே மருந்து, மருந்தே உணவு" என்றார் திருமூலர். நாம் ருசிக்கு அல்லது கடமைக்கு (Belly filling) உண்கிறோம். அதனால் காலப்போக்கில் உணவைவிட அதிகமாக மருந்தை எடுத்துக்கொள்கிறோம். பல சமயங்களில் மருந்து சாப்பிடவேண்டுமே என்பதற்காக உணவையும் கொஞ்சம் கஷ்டப்பட்டு சாப்பிடுகிறோம். நமது உடலும் ஒரு எந்திரம் போன்றதுதான். அதற்கு எரிபொருள் வேண்டும். அதுதான் உணவு. அதுவும் தரமானதாக இருக்கவேண்டும். மெஷினுக்கு தேய்மானம் ஏற்படுவதைப்போல எலும்பும் சதையும் தேய்மானத்திற்கு ஆட்படுகின்றன. வயது ஏற ஏற புதிய செல் வளர்ச்சி சன்னஞ்சன்னமாக குறைகிறது; சித்திரை மாதத்து வெயிலும் பொறுக்காது, கார்த்திகை மாதத்து மழையும் ஆகாது. பொறாமை, கோபம், கவலை மட்டுமல்லாமல் அதிகநேர செல்போன் பயன்பாடும் நமது உடல்நலத்தை பாதிக்கிறது. ஒரு மெஷினை துடைக்கிறோம். முக்கியமான பாகங்களை பார்த்துப்பார்த்து செப்பனிடுகிறோம். தேவைப்படும் இடங்களில் எண்ணெய் போடுகிறோம். பலர் பயபக்தியுடன் அதற்கு சூடம் ஏற்றி வழிபடுவதுண்டு. அந்த மெஷினுக்குள்ள மரியாதை விலை உயர்ந்த நம் உடலுக்கில்லை. உண்மையிலேயே நமது உடலுறுப்புக்கள் விலை உயர்ந்தவை. சமயங்களில் அவை கிடைப்பதில்லை என்பதால் விலைமதிப்பற்றவை. நமது உடலின் பாகங்கள் எவ்வளவு விலை உயர்ந்தவை என்பதை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களை கேட்டுப் பாருங்கள். இதயம், கல்லீரல், கண்கள் என்று தனித்தனி விலை! உதாரணத்திற்கு, சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவு, மருத்துவமனை, அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு ஆகியவற்றைப் பொறுத்து, பொதுவாக ₹18,00,000 முதல் ₹35,00,000 வரை ஆகிறது. நாம் நமது குழந்தைகளிடம் உடல்நலம் பேணல் பற்றிய விழிப்புணர்சியை உருவாக்குகிறோமா? பெரும்பாலும், "இல்லை" என்பதே பதிலாக இருக்கும். உடற்பயிற்சியும் யோகாவும் எத்தனை குழந்தைகள் தினசரி செய்கின்றன? உடலைப் பேணவேண்டும் என்ற உறுதியுடன் இருக்கும் பொருட்டு நாம் உள்ளத்தைப் பேணவில்லை என்பதே உண்மை! அப்படி பேணுவது உண்மையாக இருந்தால் போதை மற்றும் புகைபிடித்தல் கலாச்சாரமும் வளருமா? Video courtesy: cottonbro studio - Pexels #உடல்நலம் #உணவுப்பழக்கம் #ஆரோக்கியவாழ்வு #உடல்பேணுதல் #HealthyLifestyle #HealthyEating #Wellness #HealthAwareness Lux Cozi Men's Cotton Boxers #Ad https://link.amazon/B0gea9UUa #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
திரைபாரதி
803 views
2 days ago
அதிக விளக்கம்... அதிக ஆபத்து! Audio Track: https://drive.google.com/file/d/17Z-waWnaesSV7rV1TxS9YXdsu6aN_iKU/view?usp=drivesdk எல்லோரிடமும் உங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டிய அவசியமில்லை. யாரும் விளக்கம் கேட்கவில்லை என்றால், விளக்கம் கொடுக்காதீர்கள். கேட்டாலும், தேவையான அளவுக்கு மட்டும் சொல்லுங்கள். தேவைக்கு அதிகமாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், உங்களைப் பற்றிய கூடுதல் தகவலை மற்றவர்களிடம் ஒப்படைக்கிறது. பின்னர் அதே வார்த்தைகளே உங்களுக்கு எதிரான ஆயுதமாக மாறலாம். வரலாறு இதை பலமுறை நிரூபித்துள்ளது. அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், வாட்டர்கேட் ஊழலில் தனது தொடர்பை மறைக்க நீண்ட விளக்கங்களையும், தொடர்ச்சியான செய்தியாளர் சந்திப்புகளையும் நடத்தினார். ஆனால் அந்த விளக்கங்களே அவரது முரண்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன. இறுதியில், அவர் தானே பதிவு செய்த ரகசிய ஒலிப்பதிவுகள் அனைத்தையும் அம்பலப்படுத்தி, பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளின. மகாபாரதத்தில் சிசுபாலனின் கதையும் இதே உண்மையைச் சொல்கிறது. சிசுபாலனின் தாயிடம், நூறு தவறுகள் வரை மன்னிப்பேன் என்று கிருஷ்ணர் வாக்குக் கொடுத்திருந்தார். சிசுபாலன் தொடர்ந்து அவமதித்துக் கொண்டே இருந்தான். கிருஷ்ணர் அமைதியாக ஒவ்வொரு அவதூறையும் எண்ணிக்கொண்டிருந்தார். அந்த அமைதியை பலவீனம் என்று எண்ணிய சிசுபாலன் 101-வது முறை அகங்காரத்துடன் பேசிய மறுகணமே சுதர்சன சக்கரம் பாய்ந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே பாடத்தைச் சொல்லுகின்றன. உங்களுடைய மிகப் பெரிய எதிரி, பல நேரங்களில் உங்கள் நாக்குதான். அமைதி என்பது பலவீனம் அல்ல; அது முதிர்ச்சியின் அடையாளம். பேச வேண்டிய நேரத்தில் மட்டும் பேசுங்கள். அதுவும் அளவாகப் பேசுங்கள். நினைவில் கொள்ளுங்கள்: மற்றவர்கள் எறியும் கல்லைவிட, நாமே பேசும் வார்த்தைகள்தான் பூமராங் ஆகி நம்மை அதிகமாகக் காயப்படுத்தும். சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை என்பது கண்ணதாசன் வாக்கு! Gillette Guard Shaving Razor #Ad https://link.amazon/B02hnXF40 #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
திரைபாரதி
478 views
2 days ago
தங்கம் தென்னரசுவின் கவலை... தமிழகத்தின் நிதி நிலைமை யாருடைய கவலை? Audio Track: https://drive.google.com/file/d/11Y-l3iKzAJySaipZ9WY1JMi9bQ_5VA5g/view?usp=drivesdk Transcript: மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நியாயமான கேள்விதான்! ஆனால் அவருக்கு ஒரு கேள்வி... திமுக ஆட்சிக்காலத்திலேயே தமிழகம், ஒன்றிய அரசு நிர்ணயித்த கடன் வரம்பை கிட்டத்தட்ட எட்டிவிட்ட நிலையில், மேலும் கடன் வாங்கி இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் சிறந்த நிதி நிர்வாகமா? தவெக அரசுக்கு நிதி நிர்வாகம் குறித்து ஆலோசனை வழங்கும் இவர், முந்தைய அரசு திறமையாக நிதியை நிர்வகிக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறாரா? மதுபான விற்பனையில் அரசுக்குச் சேர வேண்டிய வருவாய் இப்போது முறையாக அரசின் கஜானாவுக்குச் சென்றால், அதை வரவேற்க வேண்டாமா? அதுபோகட்டும்... பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை உயர்வு, ஊரக வேலைத்திட்டத்தில் 150 நாட்கள் வேலை, மணமகளுக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஒன்றையாவது தங்கம் தென்னரசு பெரிய மனதுடன் பாராட்டியதாகக் கேள்விப்பட்டோமா? எதிர்க்கட்சியின் வேலை என்ன? அரசிடம் நிதி இல்லை என்றால், “ஏன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை?” என்று கேட்பது... நிதியைச் சிக்கனமாக நிர்வகித்தால், “ஏன் அதிகமாகச் செலவு செய்யவில்லை?” என்று கேட்பது... நாட்டின் நிதி நிலைமையைப் பற்றியா எதிர்க்கட்சி கவலைப்படுகிறது? ஆட்சியை எப்படியாவது குறை சொல்லவேண்டும். அடுத்து, "திமுக ஆட்சியின் திட்டங்கள் மீது தவெக ஸ்டிக்கர்" என்று ஸ்டாலின் அங்கலாய்ப்பு. திட்டங்களுக்கு கலைஞர் பெயரை காலத்திற்கும் வைத்திருக்கவேண்டுமா? கட்சி குடும்பமானதுபோல, அரசு குடும்பமாக முடியுமா? #தமிழ்நாடு_அரசியல் #தவெக #திமுக #தங்கம்தென்னரசு #தமிழகபட்ஜெட் #கடன்சுமை #தேர்தல்வாக்குறுதிகள் #நிதிநிர்வாகம் Samsung Galaxy M36 5G #Ad https://link.amazon/B0fIIgc3Y #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
திரைபாரதி
550 views
2 days ago
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. Audio Track: https://drive.google.com/file/d/1pnjewFvmBa4bF-wzLlgp5TB6CA2UiRxR/view?usp=drivesdk இது தொன்மையான தமிழ் வழக்கு. இது அமெரிக்கா - ஈரான் போரில் நிரூபணமாகியுள்ளது. அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் நவீன தொழில்நுட்பங்களில் அதிநவீன ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள், நீர்மூழ்கித் தாக்குதல் படகுகள் மற்றும் நிலத்தடி அணுசக்தி வசதிகள் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இது பழைய கதை. அடுத்து Saturation Attack என்பது ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான குறைந்த விலை Shahed ட்ரோன்களையும் அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் ஒட்டுமொத்தமாக ஏவுவது. முதலில் வரும் மலிவான ட்ரோன்களை அழிக்க பேட்ரியாட் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு தீர்ந்துவிடுகின்றன. அந்த இடைவெளியில் முக்கிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்குகின்றன. இதுவும்கூட பழைய கதைதான். அடுத்து, ஈரானின் நவீன ஏவுகணைகள் வான்வெளியில் பயணிக்கும்போது, தங்களைப் போன்றே தோற்றமளிக்கும் பல போலிகளை (Decoys) ரிலீஸ் செய்கின்றன. THAAD ரேடார்களால் உண்மையான ஏவுகணை எது, போலி எது என்று கண்டறிந்து தடுப்பதற்குள் நிஜ ஏவுகணைகள் இலக்கை அடைந்துவிடுகின்றன. சூப்பர்சோனிக் வேகம் மற்றும் சூழ்ச்சித் திறன், அதாவது Terminal Maneuvering திறன் கொண்ட ஏவுகணைகள் இன்று முக்கியமான அச்சுறுத்தல்கள் ஆகும். வழக்கமான ஏவுகணைகள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும். அதை தாட் அமைப்புகள் எளிதாகக் கணித்து அழித்துவிடும். ஈரானின் புதிய ஏவுகணைகள் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்தவுடன் தங்களின் திசையையும் வேகத்தையும் நொடிக்கு நொடி மாற்றும் திறன் கொண்டவை. இதனால் பேட்ரியாட் அமைப்புகளால் அவற்றைக் குறிவைக்க முடிவதில்லை. சமீபத்திய மோதல்களில், ஜோர்டான் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களில் நிறுத்தப்பட்டிருந்த இந்த பாதுகாப்பு வளையங்களை மீறி ஈரானிய ஏவுகணைகள் வெற்றிகரமாகத் தாக்கியுள்ளன. அமெரிக்காவின் ஒரு பேட்ரியாட் தடுப்பு ஏவுகணையின் விலை சுமார் $4 மில்லியன் டாலர் ஆகும். ஈரான் தொடர்ந்து ஏவும் ஏவுகணைகளை அழிக்க அமெரிக்காவிடம் போதிய அளவில் வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் இருப்பு இல்லை என்று அமெரிக்கா கவலை! ஈரானின் 'ஃபத்தாஹ்' ஏவுகணைகள் (Fattah 1 & Fattah 2) ஒலியை விட 13 முதல் 15 மடங்கு வேகத்தில் பாய்ந்து சென்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு வளையங்களை உடைக்கும் திறன் கொண்டவை. ஈரானில் இருந்து இஸ்ரேல் அல்லது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களை ஏழே நிமிடங்களுக்குள் இந்த ஏவுகணைகளால் அடைய முடியும். இதனால் எதிரி நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் திட்டமிட சில நொடிகள் மட்டுமே கிடைக்கிறது. அமெரிக்காவின் அதிநவீன THAAD மற்றும் Patriot போன்ற ரேடார் அமைப்புகளால் தங்களின் பாதையைத் தொடர்ந்து மாற்றும் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் குறிவைப்பது கடினம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. #THAAD #Patriot #SupersonicMissiles Lux Cozi T Shirts #Ad https://amzn.to/4f6mqvg #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை