Follow
திரைபாரதி
@thiraibharathi
1,849
Posts
2,414
Followers
திரைபாரதி
324 views
1 hours ago
நேற்று, இன்று, நாளை... Audio Track: https://drive.google.com/file/d/1FNO36RqiPbHbRrSNM88GBRo_8b_wQW1J/view?usp=drivesdk நிகழ்காலச் சூழ்நிலைகளுடன் ஒன்றியும் அதற்கு இயைந்தும் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை. அனுபவம், அனுபவம் என்று சொல்கிறோமே அது நிகழ்காலத்தில் வாழும் வாழ்க்கையில்தான் கிடைக்கிறது. இது சற்று குழப்பமாகத் தெரிந்தாலும், இதுதான் வாழ்க்கையின் எளிமையான தத்துவம். உண்மையில் கடந்தகாலமும் எதிர்காலமும் நிகழ்காலத்தை சதா அரித்துக்கொண்டே இருக்கின்றன என்பதை நாம் உணராமல் போவதுதான் குழப்பத்திற்குக் காரணம். நீங்கள் மனச்சோர்வுடன் (Stress) இருந்தால் கடந்த கால வாழ்க்கை நினைவுகளில், கவலையுடன் (Anxiety) இருந்தால், எதிர்காலம் பற்றிய எண்ணங்களில், அமைதியாக இருந்தால், நிகழ்காலத்தில் ஒன்றியும் இருக்கிறீர்கள் என்று கொள்ளலாம்! இப்போது சொல்லுங்கள், வாழ்நாளில் நாம் விழித்திருக்கும் நேரத்தில், எத்தனை சதவீதம் நமது எண்ணங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறது? வேலைபார்ப்பவர்களுக்கு வேலையின் மீதும், படிப்பவர்களுக்கு படிப்பின் மீதும், உல்லாசப் பயணத்திற்கு வந்தவருக்கு உல்லாசத்தின் மீதும் மனம் முழுமையாக இருக்கிறதா? சினிமாவுக்கு வந்த மாணவன், "படிப்பதை விட்டு வந்தோமே" என்று கவலைப்படுகிறான். படிக்கிறவன், "இன்று படத்திற்கு போகமுடியவில்லையே, நாளைக்கு எப்படிப் போவது?" என்று கவலைப்படுகிறான். வேலையில் இருக்கும் ஒருவன், நேற்று மனைவியுடன் போட்ட சண்டையை எண்ணி சோர்வுடன் இருக்கிறான். இன்னொருவன் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் திருமணத்தைப் பற்றிக் கவலைப்படுகிறான். நாம் பெரும்பாலும் நமது எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் கடந்த காலத்திலும் எதிர்காலத்திலுமே வாழ்கிறோம். இதனால் நாம் நிஜத்தில் வாழ்கிற நிகழ்காலம் சுருங்குகிறது. அதற்கு என்ன பொருள்? நம்மை அறியாமல் நமது வாழ்க்கை மனச்சோர்வும் கவலைகளும் மிக்கதாக மாறிக்கொண்டிருக்கிறது! அதிகப்படியான சோர்வும் மனக்கவலையும் (Stress and Anxiety) உடல் ரீதியான பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மனமும் உடலும் இணைந்தவை என்பதால், மன அழுத்தம் அதிகரிக்கும் போது அது பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. கடந்த காலத்தை மாற்றி எழுதமுடியாது. எதிர்கால நிகழ்வுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், நாம் எதைச் செய்துகொண்டிருக்கிறோமோ அதில் மனதொன்றி, அதைச் சிறப்பாகச் செய்யும்போது சோர்வும் கவலைகளும் தாமாகவே அகல்கின்றன, ஆரோக்கியம் மேம்படுகிறது. எதிர்காலமும் நம்பிக்கை அளிப்பதாக அமைகிறது. #நிகழ்காலம் #வாழ்க்கைத்தத்துவம் #மனஅமைதி #சிந்தனைகள் #LiveInThePresent #Mindfulness #LifeLessons #PresentMoment Gillette Guard Shaving Razor #Ad https://link.amazon/B02hnXF40 #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
திரைபாரதி
506 views
1 days ago
கேள்வியும் பதிலும் Audio Track: https://drive.google.com/file/d/1P5zJoObyMSGzP8-02857fEZubms3M73f/view?usp=drivesdk யாரிடமும் கேள்வி கேட்காமல் இருந்தால் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் நேராது. அது எப்படி? வாழ்க்கை என்பது கேள்விகளாலும் பதில்களாலும் பின்னப்பட்ட ஒரு சுவாரசியமான வலை. "எங்கே போறீங்க?", "என்ன பண்றீங்க?" என்று நாம் வீசும் ஒவ்வொரு வினாவும், சுழன்று வந்து நம்மையே தாக்கும் பூமெராங் (Boomerang) போன்றது! நாம் ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்கும்போது, அந்த உரையாடலின் கதவை நாமே தட்டித் திறக்கிறோம். அவர் தரும் பதிலைத் தொடர்ந்து, "ஏன்?", "எப்போது?" என அடுத்தடுத்த கேள்விகள் பிறக்கின்றன. இதன் விளைவு? எதிர்முனையிலிருந்தும் கேள்விகள் கணைகளாகப் பாயத் தொடங்கும். "நான் பதில் சொல்லிட்டேன், இப்போ உன்னோட முறை!" என்ற பிணைப்பு அங்கே தானாக உருவாகிவிடுகிறது. ஆனால், கேள்விகள் கேட்காத மௌனம் ஒரு அசாத்தியமான கவசம். நீங்கள் மற்றவர்களின் எல்லைக்குள் நுழையாமல் அமைதி காக்கும் போது, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் வந்து கேள்வி கேட்கும் உரிமையை மற்றவர்களும் மெதுவாக இழக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், கேள்விகளை விதைக்காத நிலத்தில் பதில்கள் என்ற சுமை முளைப்பதில்லை. தேவையில்லாத வினாக்களைத் தவிர்க்கும்போது, தேவையில்லாத விளக்கங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். நிம்மதியான அமைதி வேண்டுமா? கேள்விகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்; பதிலளிக்கும் கடமையிலிருந்து விடுபட்டு வாழுங்கள்" #வாழ்க்கைதத்துவம் #மௌனம் #சிந்தனை #தமிழ்வரிகள் #தத்துவங்கள் #அமைதி #வாழ்வியல் Gillette Guard Shaving Razor #Ad https://link.amazon/B02hnXF40 #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
திரைபாரதி
519 views
1 days ago
நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்கிறோம்? Audio Track: https://drive.google.com/file/d/1reRuWhHD_5c3pIV1-iCWFfDLioegUBgE/view?usp=drivesdk இயக்கம்தான் நமது சுறுசுறுப்புக்கு ஆதாரம். நமது சுறுசுறுப்புதான் மகிழ்ச்சிக்கு ஆதாரம். அதாவது, நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நமது உடல் மற்றும் மூளை சீரான இயக்கத்தில் இருக்கவேண்டும். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒருவர் மனமகிழ்ச்சியுடன் இருக்க வேண்டியதும் அவசியம். அதே போல, மனமகிழ்ச்சிக்கும் உடல் ஆரோக்கியம் முக்கியம். இன்று நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதற்கு நாம் செய்கிற வேலைகள் நம்மை இன்று மட்டுமல்லாமல் நாளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்கிறோம்? உதாரணமாக, நாம் செய்கிற உடற்பயிற்சி இன்று நம்மை புத்துணர்ச்சியுன் வைத்திருக்கிறது. நாம் தொடர்ந்து செய்கிற உடற்பயிற்சி நம்மை ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மேலும் உடற்பயிற்சி செய்யும்போது நமது கவனமும் அதில் இருப்பதால், உடலும் உள்ளமும் ஒன்றிச்செயல்படுகிறது. "An idle mind is the devil's workshop" என்று ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு. அதாவது, "ஒரு சோம்பேறியின் மனம் சாத்தானின் பட்டறை" ஆகிறது. மனம் சதா எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கக்கூடியது. மனதின் சிந்தனைகளை நாம் சரியான திசையில் திருப்பாவிட்டால், தீய எண்ணங்கள் புகுந்து தீய சிந்தனைகளை வளர்க்கின்றன. ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் B.A. படித்த ஒருவர் தொலைதூரக்கல்வியில் M.A. படிக்கிறார் என்றால், தினமும் படிப்பதற்கு நேரத்தை செலவிடுகிறார். அதனால் அவர் தனது அறிவையும் தகுதியையும் வளர்த்துக் கொள்கிறார். நாளை படிப்பை முடிக்கும்போது மகிழ்ச்சி அடைகிறார். உத்தியோக உயர்வு கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி. அது மட்டுமில்லை! படிப்பதற்கு வயது ஏது? இவர் படிப்பதைப்பார்த்து இவரது பிள்ளைகள் ஆர்வத்துடன் படிக்கிறார்கள். பிள்ளைகள் நல்ல முறையில் வளர்வதைக் காண்பதும் மகிழ்ச்சிதானே? நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்கிறீர்கள்? #மகிழ்ச்சி #உடற்பயிற்சி #ஆரோக்கியம் #சுறுசுறுப்பு #மனஅமைதி#புத்துணர்ச்சி #வாசிப்பு #சுயமுன்னேற்றம் DENVER Deodorant For Men #Ad https://link.amazon/B0bQkPIuJ #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
திரைபாரதி
544 views
2 days ago
“பரந்தூர் விமான நிலையம் வேண்டும்!” என்று பரந்தூர் மக்கள் கேட்பார்களா? Audio Track: https://drive.google.com/file/d/1MbrZ6-eGNR5r8uOy5FCBajRjI7qf1bUx/view?usp=drivesdk Transcript: பரந்தூர் விமான நிலையம் வருமா, வராதா என்ற விவாதத்தில் தமிழகத்தின் பொருளாதார நன்மை, வளர்ச்சி, முதலீடு போன்றவற்றைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால், இந்தத் திட்டத்தினால் நேரடியாகப் பயனடையக்கூடிய பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார மக்களின் எதிர்காலமும் அடங்கியுள்ளது என்ற நேர்மறையான கண்ணோட்டத்திலும் இதை அணுகலாம். விமான நிலையம் வரவில்லை என்றால், அவர்களுக்கு கிடைக்கவிருந்த வேலைவாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தனியார் முதலீடுகள் இல்லாமல் போகாதா? அப்படியானால், “பரந்தூர் விமான நிலையம் வேண்டும்!” என்று அந்தப் பகுதி மக்களே ஒருநாள் கேட்கும் நிலை உருவாகாதா? விமான நிலையம் வந்தால் நிலத்தின் மதிப்பு உயர்வது மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். விமான நிலையத்தைச் சுற்றி தொழில், வணிகம், ஓட்டல்கள், கிடங்குகள், போக்குவரத்து, சேவை நிறுவனங்கள் எனப் பல துறைகளில் தனியார் முதலீடுகள் பெருகும். சாலை, ரயில், மெட்ரோ போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் வேகமாக வளரும். ஆனால், திட்டம் கைவிடப்பட்டால் இந்த வாய்ப்புகளில் பெரும்பகுதி அந்தப் பகுதி மக்களுக்குக் கிடைக்காமல் போகலாம். எனவே, “விமான நிலையம் வேண்டாம்” என்பதற்குப் பதிலாக, “நியாயமான நிபந்தனைகளுடன் விமான நிலையம் வேண்டும்” என்று பரந்தூர் மக்கள் கோர முடியாதா? தமிழகத்தின் நலனைவிட அரசு தரப்போகும் அதற்கான விலை அதிகமாக இருக்குமா? மனமிருந்தால் மார்க்கமுண்டு. சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றி, திட்டத்தை மீண்டும் பரிசீலிக்கக் கோரலாம். அந்தத் தீர்மானத்தில் ஏக்கருக்கு அதிக இழப்பீடு, குடும்பத்தினரின் கல்வித்தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு, உள்ளூர் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி, குடிநீர் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட சிறப்பு உள்கட்டமைப்பு திட்டங்கள், இடம்பெயரும் குடும்பங்களுக்கு முழுமையான மறுவாழ்வு ஆகியவற்றை வலியுறுத்தலாம். பரந்தூர் மக்களுக்கும் தமிழகத்தின் வளர்ச்சியின் மீது அக்கறை உள்ளது. விமான நிலையம் வளர்ச்சியின் கருவியாகவும், மக்கள் நலன் அதன் அடித்தளமாகவும் இருக்கட்டும். பரந்தூர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களுடைய முழு ஆதரவுடன் தமிழகத்திற்குத் தேவையான விமானநிலையத்தை அமைக்க முடியாதா? தமிழக முதல்வர் மனது வைத்தால் நிச்சயம் முடியும். நல்லதே நடக்கட்டும்! #பரந்தூர் #தமிழகவளர்ச்சி #பரந்தூர்விமானநிலையம் #சென்னைவிமானநிலையம் #உள்கட்டமைப்பு #மெட்ரோரயில் #தொழில்வளர்ச்சி #சென்னை #தனியார்முதலீடு #வளர்ச்சி #வேலைவாய்ப்பு #மக்கள்நலன் #நியாயமானஇழப்பீடு #வளர்ச்சிப்பாதை Ramraj Cotton Trunk #Ad https://link.amazon/B05obeIny #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
திரைபாரதி
560 views
2 days ago
முடிவுகளின் விளைவுகளும்... மௌனத்தின் விலையும்! Audio Track: https://drive.google.com/file/d/1vPjOVwCi1voZIQ7xsts_2BpPktBAeWPB/view?usp=drivesdk Transcript: "Every decision as well as indecisiveness has consequences." "வாழ்க்கை என்பது நாம் எடுக்கும் முடிவுகளால் ஆனது" என்கிறார் உலகப் புகழ்பெற்ற தத்துவஞானி ஜீன் பால் சார்த்தர் (Jean-Paul Sartre). ஆனால், நாம் எந்த முடிவையும் எடுப்பதில்லை (Indecisiveness) என பேசாமல் இருப்பதும் கூட ஒரு முடிவுதான் என்பதை பல நேரங்களில் நாம் உணர்வதில்லை. அர்ஜுனன் யுத்த களத்தில் தேங்கி நின்றபோது கிருஷ்ணர் கீதையை உபதேசித்தார். செயல் படாமல் தயங்கி நிற்பது, தவறான செயலை விட ஆபத்தானது. நாம் எடுக்கும் ஒவ்வொரு துணிச்சலான முடிவுக்கும் ஒரு விளைவு உண்டு. அதேபோல், "பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று தள்ளிப்போடும் ஒவ்வொரு நொடிக்கும் ஒரு விலை உண்டு. "சும்மா இருப்பதே சுகம்" என்ற தாயுமானவரின் சொல்லாடல் ஆன்மீக அமைதிக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால், லௌகீக வாழ்க்கையின் முடிவெடுக்கும் தருணங்களில் சும்மா இருப்பது சுகமல்ல; அது பெரும் சுமை. முடிவெடுத்துத் தோற்பது உங்களை அனுபவசாலியாக்கும். ஆனால், பயந்துபோய் முடிவெடுக்காமல் தேங்குவது உங்களை அதே இடத்தில் முடக்கிவிடும். காலம் நமக்காகக் காத்திருப்பதில்லை. எனவே, தயக்கங்களைத் தகர்த்தெறியுங்கள். துணிந்து முடிவெடுங்கள். வெற்றி உங்கள் வசம்! உங்கள் வாழ்க்கையை நீங்களே வடிவமைத்துக் கொள்ளுங்கள். Video courtesy: A125.Studio - Pexels #முடிவுகள் #தயக்கம் #வெற்றிப்பாதை #வாழ்க்கைதத்துவம் #DecisionMaking #LifeLessons Lux Cozi T Shirts #Ad https://amzn.to/4f6mqvg #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
திரைபாரதி
714 views
3 days ago
காசு வந்தா தமிழ்... இல்லாட்டி English! இதெல்லாம் இந்த வருடத்தில் (2026) வெளியான தமிழ்ப் படங்களின் பெயர்கள்! Love Insurance Kompany (LIK) Blast Con City DC: The Bloody Valentine GDN Vishwanath & Sons Demonte Colony 3 Gatta Kusthi 2 Sardar 2 குஸ்தி, சர்தார் ஆகியவை தமிழ்ச் சொற்கள் இல்லை. 'தமிழ் எங்கள் மூச்சு'... ஆனா மூச்சு திணறுது! தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று மேடைகள்தோறும் அரசியல் கட்சிகள் மக்களை கிச்சு கிச்சு மூட்டி வருகின்றன. ஆனால், நடைமுறையில் நாம் காண்பது கலாச்சாரச் சீரழிவு என்பதே எதார்த்தம். ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் எல்லைகளைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள மக்களைப் படம் எளிதாகச் சென்றடைய உதவுகிறது என்பது சொத்தை வாதம். ஆங்கிலத்தில் பெயர் வைத்துவிட்டாலும் அதே தமிழர்கள்தானே படத்தை பார்க்க வேண்டும்? ஆங்கிலேயர்களுக்கா படம் எடுக்கிறார்கள்? ஆங்கிலப் பெயர்கள் இளைஞர்களை அதிகம் ஈர்க்கும் என்பது தயாரிப்பாளர்களின் எண்ணம். தமிழ் இளைஞர்களைப் பற்றி இதைவிட மோசமான ஒரு மதிப்பீடு இருக்கமுடியாது. ஆங்கிலப் பெயர்கள் விளம்பரங்களில் கவர்ச்சியாகவும் எளிதாகவும் இருக்கிறது என்றால் ஆங்கிலத்திலேயே படத்தை எடுக்கலாமே? முன்பு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு கிடைத்ததுண்டு; அது நீக்கப்பட்ட பின் ஆங்கிலப் பெயர்கள் வைக்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. காசுதான் கலாச்சாரத்தை கடையேற்றவேண்டிய நிலை... #தமிழ்படங்கள் #TamilCinema #தமிழ்மொழி #TamilTitles #Kollywood #TamilCartoon #SocialSatire #TamilMovies2026 #தமிழ்வளர்ப்போம் Ramraj Cotton Shirts #Ad https://link.amazon/B0eTJx8xr #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
திரைபாரதி
577 views
3 days ago
பஸ்ஸும் தண்ணியிலே... படகும் தண்ணியிலே... சாலை மறைந்து நீர் பரவ, பஸ் படகாய் மாறியதே... படகு கரையோரம் காத்திருக்க, பஸ் நீரில் நீந்தியதே... நீர் சூழ்ந்த பாதையிலே, புதுவித அனுபவம் கிடைத்ததே... #மழைவெள்ளம் #புதுக்கவிதை Denver Perfume for Men #Ad https://link.amazon/B08WBmeTV #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
திரைபாரதி
628 views
3 days ago
மகளுக்காக ஒரு புதிய வாழ்க்கை... Audio Track: https://drive.google.com/file/d/1O4tYgxcpqyGkK4LVnHQiSggi1V55FHEP/view?usp=drivesdk Transcript: பஞ்சாயத்து நடக்கிறது. ராதிகாவின் அப்பாவும் அம்மாவும் எதிரெதிர் திசையில் இருக்கிறார்கள். நடந்த பஞ்சாயத்தில் இருவரும் கிட்டத்தட்ட விவாகரத்து செய்யும் முடிவை எட்டிவிட்டார்கள். ராதிகா தனியாக அமர்ந்திருக்கிறாள். பஞ்சாயத்து தலைவர் முடிவை அறிவிக்க எழுகிறார். நீங்கள் இருவரும் விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கிறீர்கள். பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் உங்களுடைய மகள் தன்னுடைய பராமரிப்பில்தான் இருக்கவேண்டும் என்பதில் இருவருமே கராறாக இருக்கிறீர்கள். ராதிகாவும் விவரம்தெரிந்த பெண் என்பதால் அதை அவளே முடிவு செய்யட்டும். ராதிகா எழுந்து "பஞ்சாயத்தார் என்னுடைய கருத்தை இன்னும் கேட்கவில்லையே!" என்கிறாள். நீ என்ன சொல்கிறாய் அம்மா? "நான் அம்மா அப்பா இருவரிடமும் மூன்று கேள்விகள் கேட்க விரும்புகிறேன்." தாராளமாகக் கேளம்மா! "என்னைப் பெற்றதில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கனா? என்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினீர்களா? நான் உங்களை கடைசிவரை காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கையில் என்னை உங்களுடன் வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா?" ராதிகாவின் கேள்விளுக்கு நீங்கள் சொல்கிற பதில்களை வைத்துதான் ராதிகா மட்டுமல்ல பஞ்சாயத்தாரும் ஒரு முடிவுக்கு வரவேண்டும். எனவே, பூசி மெழுகாமல் "ஆம்" அல்லது "இல்லை" என்று மட்டும் தனித்தனியாக பதில் கூறவும். இருவரும் ராதிகா கேட்ட முதல் இரண்டு கேள்விகளுக்கு "ஆம்" என்றும், மூன்றாவது கேள்விக்கு "இல்லை" என்றும் பதில் சொல்கிறார்கள். ராதிகா, உன் பெற்றோர் நீ கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டார்கள். இப்போது நீ என்ன சொல்கிறாய்? "முதல் கேள்விக்கான பதில் உண்மை என நம்புகிறேன். இரண்டாவது கேள்விக்கான பதில், "ஆம்" என்பது உண்மையாக இருந்தால், நான் மகிழ்ச்சியாய் இருப்பது "சேர்ந்து வாழும் அவர்களுடன் நான் வாழ்வதில்" இருக்கிறது. மூன்றாவது கேள்விக்கு இல்லை என்று அவர்கள் கூறுவது ஆறுதல் அளிக்கிறது. எனவே, அவர்கள் சேர்ந்துவாழ விரும்பாவிட்டால் நான் அவர்களில் ஒருவருடைய பராமரிப்பில் வாழ விரும்பவில்லை; விடுதியில் இருக்கிறேன்." உங்களுடைய பெண் சொல்வதைக் கேட்டீர்களா? உங்களால் பிரிந்து இருக்க முடியும் என்றால், உங்களைப் பிரிந்து அவளாலும் இருக்க முடியும் என்று தெளிவாகக் கூறிவிட்டாள். மூன்றுபேரும் மூன்று திசைகளில் செல்வதாக முடிவெடுக்கிறீர்களா? ராதிகாவின் அப்பாவும் அம்மாவும் அவளை நோக்கி ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள். விவாகரத்து பத்திரங்கள் கைநழுவி கீழே விழுகின்றன. நீங்கள் இருவரும் 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்ததற்கு ராதிகா சாட்சி. அவள் மிகவும் புத்திசாலி. அவளுடைய கேள்விகளின் பதில்தான் இந்த புதிய வாழ்க்கை. நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து, பழையதை மறந்து மகளுடன் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன். Lux Cozi T Shirts #Ad https://amzn.to/4f6mqvg #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
திரைபாரதி
543 views
4 days ago
ஆடாமல் ஜெயித்தோமடா! Audio Track: https://drive.google.com/file/d/1G8vxBrIWeMl3vBpGwL2YbH0VDr6j97aq/view?usp=drivesdk Transcript: ஆடிய ஆட்டமென்ன... பேசிய வார்த்தையென்ன... அப்படிப்பட்டவர்கள் ஒருநாள் - ஆட்டம் போடாதவர்களிடமும் அதிகம் பேசாதவர்களிடமும் தாம்பாளத்தில் வெற்றியை வைத்து அவர்களிடம் தாரை வார்ப்பதுண்டு... "நாங்கள் ஆடாமல் ஜெயித்தோமடா!" என்பது இதுதான். அதிலிருந்தும் தோற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்வது இல்லை. இதுதான் உலக நடைமுறை! காலம் வேகமானது மட்டுமல்ல, கெட்டவர்களுக்கு மோசமானதும்கூட! "ஆவதுபோல் ஆகிக்கெடும்" என்பது ஒரு சொலவடை மட்டுமல்ல, எக்குத்தப்பாகச் ஒருசில நேரங்களில் அது "எதிர்பாராமல்" பலித்துவிடுவதும் உண்டு... அதன் பிறகும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டும் பழைய ஆட்டத்தையே ஆடிக்கொண்டும் இருந்தால், "ஆட்டம் முடிந்தது" என்று தெரியாமல் இன்னும் மயக்கத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதானே பொருள்? Ramraj Cotton Shirts #Ad https://link.amazon/B0eTJx8xr #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
திரைபாரதி
616 views
5 days ago
அது நமது கட்டுப்பாட்டில் இல்லவே இல்லை... இடைவெளியில்லாமல் அலையலையாக எழும் நினைவுகளை ஒரு நேர் பாதையில் நிலை நிறுத்துவது என்பது ஒரு சவாலான வேலை. நமது நினைவுகளால் விழைகின்ற எண்ணங்களும் சிந்தனைகளும் நமது செயல்பாடுகளை தீர்மானிக்கின்றன.   நினைவுகள் தன்னிச்சையாக எழுகின்றன. அந்த வேலை நம்மைக் கேட்டோ அல்லது நமது விருப்பப்படியோ நடப்பதில்லை. இதயம் துடிப்பதையும் மூச்சு விடுவதையும் எவ்வளவு முயற்சி செய்தாலும் நம்மால் நிறுத்த முடிவதில்லை. அப்படியே, கடலலைகள் போல மாறி மாறி எழும் நினைவலைகளையும் அடக்க முடிவதில்லை. ஆனால், கொஞ்சம் பயிற்சி செய்தால் அவற்றை நல்ல எண்ணங்களாகவும் சீரிய சிந்தனைகளாகவும் மடைமாற்ற முடியும்.   பொதுவாக எல்லோர் மனதிலும் எழக்கூடிய ஒரு கேள்வி, அதனால் நமக்கு என்ன நன்மை என்பதே. பொதுவாக, ஆதாயம் கருதியே எதையும் செய்ய வேண்டும் என்று மனிதன் நினைக்கிறான். உதாரணமாக, இயற்கையை ரசிப்பது, சுற்றுச்சூழலை பேணுவது, பிறருக்கு நம்மால் முடிந்த உதவியை உளமாறச் செய்வது ஆகியவற்றால் நமக்கு என்ன நன்மை?    மனதைத் திசை திருப்புவது ஒரு வேலை என்று நினைப்பதால் பிரதிபலனை எதிர்பாராமல் நாம் அதைச் செய்வதில்லை! மனதை அதன் போக்கில் விட்டுவிடுகிறோம். அதனால் விளையும் எண்ணங்கள் நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் பாதிக்கக்கூடும் என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.   நமது மனம் தறிகெட்டு ஓடி எதையெதையோ நினைக்கிறது, அல்லது நடந்த ஒரே சம்பவத்தை மீண்டும் மீண்டும் நினைத்து அசைபோடுகிறது. அதனால் மனம் நிம்மதியின்றி அலைபாய்கிறது அல்லது இரத்தக் கொதிப்பு அதிகமாகிறது. நமது எண்ணங்கள் நம் வசப்படும்போது, நிதானம் கைகூடுகிறது வாழ்க்கை வசப்படுகிறது. நமது கவலைகள் பெரும்பாலும் நமது வாழ்க்கையில் நடப்பதற்கான வாய்ப்புகளே இல்லாத பிரச்சினைகள் பற்றியே!   அவசர வேலையாக ஊருக்குப் போக வேண்டும். மனமெங்கும் எதை எதைப்பற்றியோ எண்ணங்கள், தேவையற்ற சிந்தனைகள். நமது பயங்கள் யாவுமே தேவையற்ற சிந்தனைகளின் பிள்ளைகளே. கடைசியில் பஸ்ஸில் எறி அமர்ந்த பின், முன்பதிவுச் சீட்டை வீட்டிலேயே மறந்து போய் விட்டுவிட்டது நினைவுக்கு வருகிறது.   தீய எண்ணங்கள் போதை மருந்தைப் போன்றது. எளிதாகத் தொற்றிக் கொள்ளும். அவற்றை சுலபத்தில் உதறித் தள்ள முடியாது. தேவையற்ற சிந்தனைகளை களைகளாக மனதில் வளர்வதற்கு நாம் இடம் கொடுக்கும்போது, அங்கு நல்ல சிந்தனைகள் முளைப்பதற்கு இடம் இல்லாமல் போகிறது.    இறை வழிபாடும் இசையும் மனதை ஒருமுகப் படுத்த வல்லது எனினும், அதில் நம்மால் முழுமையாக ஒன்றிவிட முடிவதில்லை. மனம் அலைபாய்கிறது. ஒரு பாதையில் செல்லும்போது அனிச்சையாக கண்கள் காண்கின்றன, கால்கள் நடக்கின்றன, மனதில் என்னென்னவோ எண்ணங்கள். நேற்று நாம் சென்ற பாதையில் இருக்கும் ஒரு கடைக்குச் செல்ல இன்று நாலு பேரிடம் வழி கேட்கிறோம்.   நாளை, பாதையில் நடந்து செல்லும்போது, ஒரு ஈடுபாட்டோடு வருவோர் போவோர், வாகனங்கள், நடக்கிற நிகழ்வுகள், கேட்கிற குரல்கள், கடைகளில் தென்படுகிற பொருட்கள் ஆகியவற்றை கவனித்துக் கொண்டு செல்வதற்கு முயன்று பாருங்களேன்! குறைந்த பட்சம் இதுவரை முயன்று பார்க்காத இதை நீங்கள் செய்யும்போது, அதுவும் எளிதல்ல எனப் புரியும். அதாவது, நமது மனம் நமது கட்டுப்பாட்டில் சுத்தமாக இல்லை என்பதை உணர்வீர்கள்! Video courtesy: Hatice Baran - Pexels #நினைவுகள் #எண்ணங்கள் #சிந்தனை #மனஅமைதி #மனநலம் #மனக்கட்டுப்பாடு   Denver Perfume for Men #Ad https://link.amazon/B08WBmeTV #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴