நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!!

முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
6K views
11 days ago
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! மக்கள் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் இடம் எண் :1/201 பெரியார் தெரு அன்னியூர் கானை ஒன்றியம் 31.7.2026 வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் நடைபெற்றது தலைமை: மு. ஆரியசாமி விவசாய அணி மாநில செயலாளர் அவர்கள் முன்னிலை: விவசாய அணி மாவட்ட செயலாளர்கள் சு. ஏழுமலை, மற்றும் ஜா.ஷோவுக்கத்அலி மற்றும் விழுப்புரம் மாவட்ட தலைவர்.மு. அப்துல் ஹக்கீம். விழுப்புரம் மாவட்ட பொருளாளர். வி எம் நகரி ரஞ்சித்.ஆகியோரின் ஏற்பாட்டிலும் காணை ஒன்றிய செயலாளர் ஆ. மணிகண்டன் வரவேற்புரையாற்றினார் மேலும் கூட்டத்தில் க. செல்வம் வானூர் தொகுதி செயலாளர் மற்றும் வீ. நடராஜன் வானூர் தொகுதி அமைப்புச் செயலாளர். மற்றும் விக்கிரவாண்டி தொகுதி தலைவர் ரா. சின்னையன் கலந்து கொண்டனர் சிறப்புரை:வி. எம். நகரி ரஞ்சித். நன்றி உரை:சமூக போராளி முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்கள் வழங்கினார் விழுப்புரம் நகர செயலாளர் முகமது சுஹைல் உடனிருந்தார் இந்தக் கூட்டத்தின் வாயிலாக கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் முஸ்லிம் மக்கள் கழகத்தின் 1.மாநில பொதுச்சாளராக அன்னியூர் சேர்ந்த மு. ஆரியசாமி, 2.மாநில விவசாய அணி செயலாளர் சு. ஏழுமலை. 3.விழுப்புரம் மாவட்ட செயலாளராக வி எம் நகரி கிராமத்தைச் சேர்ந்த க. செல்வம். 4.விழுப்புரம் மாவட்ட அமைப்பாளராக வி மாத்தூர் வீ. நடராஜன். ஆகியோர் இந்த கூட்டத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் மேலும் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தீர்மானம்: 1)வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு, உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கும் தமிழகத்தில் மக்களுக்காக ஆட்சி பொறுப்பேற்று சிறப்பாக நடத்தி வருகின்ற தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து முஸ்லீம் மக்கள் கழகத்தினுடைய ஆதரவை தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தீர்மானம்: 2)கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் விசாரணை கைதிகளாக இருந்து வருகின்ற முஸ்லிம் சேவாசிகளை மறைந்த அரசியல் தலைவர்களுடைய பிறந்தநாள் அன்று விடுதலை செய்ய வேண்டுமென்று முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது தீர்மானம்: 3)தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த 2013 ,2017, 2019,2022. ஆகிய ஆண்டு நடைபெற்ற தகுதி தேர்வுகள் போன்றுமீண்டும் மீண்டும் தேர்வு எழுதி பலமுறை தேர்ச்சி பெற்ற 25,515 இன்னும் பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கின்றனர் இத்தகைய தேர்வியலார்கள் 13 ஆண்டுகளாக காத்திருக்கும் சூழ்நிலையில் இவர்களின் குடும்ப சூழ்நிலையும் ஏழ்மையும் எண்ணிப் பார்த்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை எண்ணி அவர்களின் கல்வித் தகுதி வீணாகாத வகையில் அவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனத்தை தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கிட ஆவணம் செய்ய வேண்டும் என முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கேட்டுக் கொள்கிறது... இது தொடர்பாக தமிழக முதல்வரை நேரில் சந்திக்கும் பொழுது கோரிக்கை மனுவாக அளிக்கப்படுவதாகும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
603 views
20 days ago
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! குப்பை குவியலை உடனே அகற்ற வேண்டும்: மாவட்ட ஆட்சியருக்கு முஸ்லிம் மக்கள் கழகம் கோரிக்கை விழுப்புரம், ஜூலை 22: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியின் அலட்சியமான செயல்பாடால் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு நிலவி வருவதாகக் குற்றம்சாட்டி, உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூகப் போராளி நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டிவனம் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், குறிப்பாக ராஜாங்குளம் பெருமாள் கோவில் தெரு, ஈராச்சந்து பூங்கா சுற்றுப்பகுதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் குப்பைகள் தேங்கி அசுத்தமான சூழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குப்பைக் குவியல்களால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், அப்பகுதி மக்களும் சுகாதார பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதுடன், தொற்று நோய்கள் பரவும் சூழலும் உருவாகியுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். திண்டிவனம் நகராட்சியின் மெத்தனப் போக்கை முஸ்லிம் மக்கள் கழகம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நகராட்சி நிர்வாகத்திற்கு உரிய உத்தரவு பிறப்பித்து, நகரின் அனைத்து பகுதிகளிலும் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், திண்டிவனத்தை குப்பையற்ற, தூய்மையான நகரமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூகப் போராளி நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
627 views
1 months ago
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் – போராட்டங்களால் வடிவெடுத்த சமூகப் போராளியின் வாழ்க்கைப் பயணம். திண்டிவனம்: சமூக நீதி, மனித உரிமை, மத நல்லிணக்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பல ஆண்டுகளாகப் போராடி வரும் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர், சமூகப் போராளி முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்களின் வாழ்க்கைப் பயணம் பல சவால்களையும் சாதனைகளையும் உள்ளடக்கியதாகும். முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் 28.11.1968 அன்று செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் அப்துல் சுபான் ஷாஹிப் – மெஹகுருன் பீ தம்பதியருக்கு பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. குடும்பச் சூழ்நிலையால் தாயார் மற்றும் சகோதரிகளுடன் திண்டிவனத்திற்கு குடிபெயர்ந்து, பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டார். வறுமையின் காரணமாக முறையான கல்வியைத் தொடர முடியாமல், சிறுவயதிலேயே டீக்கடையில் வேலை செய்து வாழ்க்கையை முன்னெடுத்தார். பின்னர் டீ மாஸ்டராகவும், பிரியாணி சமையல் மாஸ்டராகவும் பணியாற்றி தன்னம்பிக்கையுடன் முன்னேறினார். இஸ்லாமிய மார்க்கத்தை ஆழமாக அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் தப்லீக் ஜமாஅத் பணிகளில் இணைந்து, பல்வேறு மார்க்கப் பயணங்களில் பங்கேற்றார். அதன் மூலம் மனிதநேயம், ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்பு குறித்த ஆழ்ந்த புரிதலைப் பெற்றார். பொது வாழ்வின் மீது கொண்ட ஈடுபாட்டால் மறைந்த பழனி பாபா தலைமையிலான ஜிஹாத் கமிட்டியில் இணைந்து, 1990 முதல் திண்டிவனம் நகரத் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் பல்வேறு சமூக, மனித உரிமை மற்றும் பொதுநலப் போராட்டங்களில் தீவிரமாக செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து, 09.12.2020 அன்று முஸ்லிம் மக்கள் கழகம் என்ற அமைப்பை நிறுவி, சமூக ஒற்றுமை, மனித உரிமைகள், பெண்களின் கண்ணியப் பாதுகாப்பு, பழங்குடியின மக்களின் உரிமைகள், காவிரி நீர் பிரச்சினை, பொதுநலக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள் இயக்கங்களை முன்னெடுத்தார். முன்னாள் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஜெ . ஜெயலலிதா. முன்னாள் முத்துவேல் கருணாநிதி மு. க .ஸ்டாலின் . திண்டிவனம் பேராசிரியர் கல்யாணி. மறைந்த திராவிட கழக க.மு. தாஸ். ஆசிரியர் கந்தசாமி. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஐயா டாக்டர் ராமதாஸ். முனைவர் தொல். மறைந்த ஆசிரியர் மு. கந்தசாமி. திருமாவளவன், பழ. நெடுமாறன், திண்டிவனம் இடிமுரசு இஸ்மாயில் . குளத்தூர் மணி, பேராசிரியர் புகழேந்தி, பேராசிரியர் காரல் மார்க்ஸ். உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல பொதுநலப் போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். சமூகப் பணிக்காக பலமுறை அரசியல் கைதியாக சிறை சென்ற அனுபவமும் அவருக்கு உண்டு. சமூகச் சேவையைப் பாராட்டி, 2015 ஆம் ஆண்டு இந்திய அமைதி பல்கலைக்கழகம் (சர்வதேச அமைப்பு) சார்பில் "சிறந்த சமூக சேவகர்" என்ற அங்கீகாரத்துடன் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு தமக்கும் சகாக்களுக்கும் எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொண்டு, நீதிமன்றங்களில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். "ஜாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி அனைவரும் ஒரே தாய் பிள்ளைகள்; அனைவரும் தமிழர்கள்" என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் மக்கள் கழகத்தை வழிநடத்தி வருகிறார். குடும்ப வாழ்விலும் சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் அவர், மனைவி மற்றும் ஆறு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரது மூத்த மகள் ஜை. யாஸீன் பேகம், எம்.எஸ்.சி. (பயோகெமிஸ்ட்ரி) முடித்து முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இளைய மகள் ஜை. ஆயிஷா பேகம், பி.காம். முடித்து எல்.எல்.பி. படித்து வருகிறார். அவரது மகன்களில் மூவருக்கு திருமணம் நடைபெற்று, அவர்கள் தங்களது குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். வறுமை, வேதனை, போராட்டம் ஆகியவற்றைத் தாண்டி சமூக நீதிக்காக தன்னலமின்றி உழைத்து வரும் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்களின் வாழ்க்கைப் பயணம், இன்றைய இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் சமூகப் பொறுப்பின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
619 views
1 months ago
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! அன்புப் பரிசு – கேவரு தானியத்தை பெற்றுக்கொண்ட முனைவர் ச.சு.ஜைனுதீன் வாழ்த்து வானூர், ஜூன் 22, 2026: முஸ்லிம் மக்கள் கழகத்தின் வானூர் தொகுதி தலைவரும், வி.எம். நகரி கிராமத்தைச் சேர்ந்தவருமான திரு. க. செல்வம் அவர்கள், தன்னுடைய விவசாய நிலத்தில் விளைந்த கேவரு தானியத்தை இன்று (22.06.2026) முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூக போராளியும் நிறுவனத் தலைவருமான முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் வந்து வழங்கினார். அன்பும் மரியாதையும் கலந்த இந்த விவசாயப் பரிசை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்கள், திரு. க. செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், “விவசாயத்தில் தொடர்ந்து நல்ல விளைச்சலும் அதிக லாபமும் கிடைக்க வேண்டும். உங்கள் குடும்பம் என்றும் சுபிட்சமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும்” என்று கூறி, அவர்களது குடும்ப நலன் மற்றும் வளமான வாழ்க்கைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். இந்த நிகழ்வு விவசாயிகளின் உழைப்பிற்கும், சமூக ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது. விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்கள் தெரிவித்த வாழ்த்துகள் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றன. “விவசாயம் வளர்ந்தால் நாடு வளரும்; விவசாயி உயர்ந்தால் சமூகம் உயர்வடையும்” என்ற கருத்தை உணர்த்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.