#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! மக்கள் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் இடம் எண் :1/201 பெரியார் தெரு அன்னியூர் கானை ஒன்றியம் 31.7.2026 வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் நடைபெற்றது தலைமை: மு. ஆரியசாமி விவசாய அணி மாநில செயலாளர் அவர்கள் முன்னிலை: விவசாய அணி மாவட்ட செயலாளர்கள் சு. ஏழுமலை, மற்றும் ஜா.ஷோவுக்கத்அலி மற்றும் விழுப்புரம் மாவட்ட தலைவர்.மு. அப்துல் ஹக்கீம். விழுப்புரம் மாவட்ட பொருளாளர். வி எம் நகரி ரஞ்சித்.ஆகியோரின் ஏற்பாட்டிலும் காணை ஒன்றிய செயலாளர் ஆ. மணிகண்டன் வரவேற்புரையாற்றினார் மேலும் கூட்டத்தில் க. செல்வம் வானூர் தொகுதி செயலாளர் மற்றும் வீ. நடராஜன் வானூர் தொகுதி அமைப்புச் செயலாளர். மற்றும் விக்கிரவாண்டி தொகுதி தலைவர் ரா. சின்னையன் கலந்து கொண்டனர் சிறப்புரை:வி. எம். நகரி ரஞ்சித். நன்றி உரை:சமூக போராளி முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்கள் வழங்கினார் விழுப்புரம் நகர செயலாளர் முகமது சுஹைல் உடனிருந்தார் இந்தக் கூட்டத்தின் வாயிலாக கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் முஸ்லிம் மக்கள் கழகத்தின் 1.மாநில பொதுச்சாளராக அன்னியூர் சேர்ந்த மு. ஆரியசாமி, 2.மாநில விவசாய அணி செயலாளர் சு. ஏழுமலை. 3.விழுப்புரம் மாவட்ட செயலாளராக வி எம் நகரி கிராமத்தைச் சேர்ந்த க. செல்வம். 4.விழுப்புரம் மாவட்ட அமைப்பாளராக வி மாத்தூர் வீ. நடராஜன். ஆகியோர் இந்த கூட்டத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் மேலும் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தீர்மானம்: 1)வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு, உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கும் தமிழகத்தில் மக்களுக்காக ஆட்சி பொறுப்பேற்று சிறப்பாக நடத்தி வருகின்ற தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து முஸ்லீம் மக்கள் கழகத்தினுடைய ஆதரவை தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தீர்மானம்: 2)கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் விசாரணை கைதிகளாக இருந்து வருகின்ற முஸ்லிம் சேவாசிகளை மறைந்த அரசியல் தலைவர்களுடைய பிறந்தநாள் அன்று விடுதலை செய்ய வேண்டுமென்று முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது தீர்மானம்: 3)தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த 2013 ,2017, 2019,2022. ஆகிய ஆண்டு நடைபெற்ற தகுதி தேர்வுகள் போன்றுமீண்டும் மீண்டும் தேர்வு எழுதி பலமுறை தேர்ச்சி பெற்ற 25,515 இன்னும் பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கின்றனர் இத்தகைய தேர்வியலார்கள் 13 ஆண்டுகளாக காத்திருக்கும் சூழ்நிலையில் இவர்களின் குடும்ப சூழ்நிலையும் ஏழ்மையும் எண்ணிப் பார்த்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை எண்ணி அவர்களின் கல்வித் தகுதி வீணாகாத வகையில் அவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனத்தை தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கிட ஆவணம் செய்ய வேண்டும் என முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கேட்டுக் கொள்கிறது... இது தொடர்பாக தமிழக முதல்வரை நேரில் சந்திக்கும் பொழுது கோரிக்கை மனுவாக அளிக்கப்படுவதாகும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
82 likes
61 shares

More like this