முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! மக்கள் கழகத்தின் மாநில விவசாய அணி தலைவராக மு. ஆரியசாமி நியமனம்
விழுப்புரம், ஆக.16:
முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில விவசாய அணி தலைவராக மு. ஆரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கானை ஒன்றியம், அன்னியூர் கிராமத்தில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நடைபெற்ற முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மு. ஆரியசாமி மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குடும்பப் பொறுப்புகள் மற்றும் விவசாயப் பணிகளை கருத்தில் கொண்டு, அவரது கோரிக்கையை ஏற்று, ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் மாநில பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றி, மாநில விவசாய அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சாதி, மத பேதமின்றி அனைத்து விவசாயிகளின் உரிமைகளையும் ஆட்சியாளர்களிடமிருந்து கழகத்தின் மூலம் பெற்றுத்தர பாடுபட வேண்டும் எனவும், முஸ்லிம் மக்கள் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளின்படி ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி, சமூக நீதி, சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நியமனத்தை முஸ்லிம் மக்கள் கழகத்தின் மக்கள் பணியில் சமூகப் போராளி முனைவர் ச.சு. ஜைனுதீன் அறிவித்துள்ளார்.