#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! மஸ்ஜீதே தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் 80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா திண்டிவனம், ஆக.15: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் என்-3 கசாயி மியான் தெருவில் அமைந்துள்ள மஜீத்தே தாருஸ்ஸலாம் பள்ளிவாசல் வளாகத்தில் 80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் பொருளாளர் ஹாஜி முஹம்மத் யஹ்யா தலைமை வகித்தார். ஹாஜி அபுதாஹிர், ஹாஜி பஷீர், ஹாஜி அப்துல் காதர், பள்ளியின் மொய்தினார் ஆபீஸ் நவ்ஷத் ஆலம், ஆர்.எம்.ஜி. முஹம்மத் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முத்தவல்லி ஹாஜி அகமது அக்பர் அலி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஹாஜி அப்துல் வஹ்ஹாப் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பள்ளியின் இமாம் மௌலானா முஹம்மது ஹாரூன், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட மறைந்த தியாகிகளின் வரலாற்றையும், அவர்களின் தியாகங்களையும் எடுத்துரைத்தார். நிகழ்வில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூகப் போராளியும் நிறுவனத் தலைவருமான முனைவர் ச.சு. ஜைனுதீன் வாழ்த்துரை வழங்கினார். மேலும் ஏ.டபிள்யூ. ரஃவ்ப், மாமு பஷீர், அப்சல், ஜாகிர் உசேன், சித்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமிய மக்களின் பங்களிப்பு, தியாகம், உணர்வுகள் மற்றும் உரிமைகளை வெளிப்படுத்தும் வகையில் விழா சிறப்பாக நடைபெற்றது.
22 likes
25 shares

More like this