முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
564 views • 9 hours ago
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! மக்கள் கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக ஜ. ஹபீப் முஹம்மது நியமனம்
விழுப்புரம், ஆக.16:
முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த ஜ. ஹபீப் முஹம்மது அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூக போராளி நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்கள் வெளியிடப்பட்டுள்ள நியமன அறிவிப்பில், “இன்று முதல் (16.08.2026) முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக ஜ. ஹபீப் முஹம்மது நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் இப்பொறுப்பை ஏற்று, சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்க்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளின்படி தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்கள் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சமூகநீதி வளர்ச்சி பெறவும், தர்மம் நிலைநாட்டவும், அனைத்து மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என நியமன அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் பணியிலும், சமூக நலப் பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டு, அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில் புதிய மாநில பொதுச் செயலாளர் தனது பொறுப்பை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்தை முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜ. ஹபீப் முஹம்மது ஏற்றுக்கொண்டு, மக்கள் நலனுக்காகவும் சமூக முன்னேற்றத்திற்காகவும் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
என்று இதன் மூலம் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்
என்றும் மக்கள் பணியில் சமூக போராளி முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்கள்
8 likes
6 shares