#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! அன்புப் பரிசு – கேவரு தானியத்தை பெற்றுக்கொண்ட முனைவர் ச.சு.ஜைனுதீன் வாழ்த்து வானூர், ஜூன் 22, 2026: முஸ்லிம் மக்கள் கழகத்தின் வானூர் தொகுதி தலைவரும், வி.எம். நகரி கிராமத்தைச் சேர்ந்தவருமான திரு. க. செல்வம் அவர்கள், தன்னுடைய விவசாய நிலத்தில் விளைந்த கேவரு தானியத்தை இன்று (22.06.2026) முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூக போராளியும் நிறுவனத் தலைவருமான முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் வந்து வழங்கினார். அன்பும் மரியாதையும் கலந்த இந்த விவசாயப் பரிசை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்கள், திரு. க. செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், “விவசாயத்தில் தொடர்ந்து நல்ல விளைச்சலும் அதிக லாபமும் கிடைக்க வேண்டும். உங்கள் குடும்பம் என்றும் சுபிட்சமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும்” என்று கூறி, அவர்களது குடும்ப நலன் மற்றும் வளமான வாழ்க்கைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். இந்த நிகழ்வு விவசாயிகளின் உழைப்பிற்கும், சமூக ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது. விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்கள் தெரிவித்த வாழ்த்துகள் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றன. “விவசாயம் வளர்ந்தால் நாடு வளரும்; விவசாயி உயர்ந்தால் சமூகம் உயர்வடையும்” என்ற கருத்தை உணர்த்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.
15 shares

More like this