அய்யோ அடிபட்டு ரோட்ல கேடக்குராரே 🥲

சிவா. ம
5K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
எங்க ஊர் கும்மிடிப்பூண்டியில் நடந்த விபத்து எங்களுக்கு தெரிந்தவர்கள் #சாலை விபத்து
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
849 காட்சிகள்
6 மாதங்களுக்கு முன்
கோவை மாவட்டம், பி.என்.புதூர், சாஸ்திரி 1வது தெருவைச் சேர்ந்தவர் ஷாரூண்(23). புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராகுல் ஜெபஸ்டியான்(23). திருப்பத்தூர் மந்தைவெளி அருகேயுள்ள குறும்பேரியைச் சேர்ந்த முகிலன்(23). தூத்துக்குடி தெர்மல் நகர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருத்திக்குமார்(23). திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சரண்(24). இவர்கள் 5 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் 5 பேரும் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து தெர்மல்நகரில் உள்ள கிருத்திக்குமார் வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். காரை ஷாரூண் ஓட்டியுள்ளார். தூத்துக்குடியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. தெற்கு பீச் ரோட்டில் படகு குழாம் அருகே கார் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறத்தில் உள்ள மரத்தின் பக்கவாட்டில் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஷாரூண், ராகுல் ஜெபஸ்டியான், முகிலன் ஆகியோர் உடல் நசுங்கி பலியாகினர். படுகாயமடைந்த கிருத்திக்குமார், சரண் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பத்து குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #🔴இன்றைய முக்கிய செய்திகள் #😱சாலை விபத்து #தூத்துக்குடி
S. Ramachandran
625 காட்சிகள்
6 மாதங்களுக்கு முன்
விபத்து: 20 பேர் பலி கர்னூல் அருகே நடந்த பயங்கர விபத்து * தனியார் பயண பேருந்து பைக் மீது மோதியது * தீ சில நொடிகளில் பரவியது * 20 பயணிகள் பலி * உடல்கள் தரையில் கருகின * 12 பேர் பாதுகாப்பாக இருந்தனர் * பட்டியலிடப்படாத குழந்தைகளின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை * இறந்தவர்களில் பெரும்பாலோர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் கர்னூல் நகரின் புறநகரில் உள்ள சின்னடேகூர் அருகே ஒரு பயங்கர விபத்து நடந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில், ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்குச் சென்ற தனியார் பயண பேருந்து ஒரு மோட்டார் சைக்கிளை மோதியது. இந்த விபத்தில், தீப்பிடித்து பேருந்தை மூழ்கடித்தது. ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்தது. ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் பயணித்த 20 பேர் உயிருடன் எரிந்தனர். தீயின் தீவிரம் காரணமாக, பயணிகள் வெளியே வர நேரமில்லை. பேருந்தின் பின் இருக்கையில் இருந்தவர்கள் ஜன்னல்களை உடைத்து 12 பேர் பாதுகாப்பாக வெளியே வந்தனர். இறந்தவர்கள் அனைவரும் பெங்களூருவைச் சேர்ந்த கர்நாடகாவாசிகள் மற்றும் பெங்களூருவில் குடியேறிய தெலுங்கு மக்கள். இறந்த பட்டியலில் இல்லாத குழந்தைகள் யாராவது இருக்கிறார்களா? போலீசார் விசாரித்து வருகின்றனர். பேருந்து மோட்டார் சைக்கிளில் மோதியதால் விபத்து ஏற்பட்டதா? வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? போலீசார் விசாரித்து வருகின்றனர். #உயிர் பலி #சாலை விபத்து