உங்கள் ஆரோக்கியம்....இதோ

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.1K views
2 months ago
இன்றைய காலத்தில் நல்ல உடற்கட்டமைப்பு என்பது வெறும் உடல் ஆரோக்கியத்தின் அடையாளம் மட்டும் அல்ல. அது தன்னம்பிக்கை, சமூக மதிப்பு, அழகுணர்ச்சி ஆகியவற்றோடு இணைக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக இளம் வயதினர் அதிக அளவில் உடற்பயிற்சி நிலையங்களை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர். உறுதியான தசைகள், அகன்ற தோள்கள், சீரான உடல் வடிவம் வேண்டும் என்ற ஆசை, பலரையும் தொடர்ந்து பயிற்சி செய்யத் தூண்டுகிறது.உடலை மாற்ற வேண்டும் என்ற விருப்பம் தவறானது இல்லை. ஆனால் அந்த மாற்றம் விரைவில் கிடைக்க வேண்டும் என்ற அவசரம் தான் சிக்கலின் தொடக்கம். பல இளம் வயதினர் தங்களுடைய உடலின் சக்தி, மூச்சுத் திறன், இதயத்தின் தாங்கும் அளவு போன்றவற்றை புரிந்து கொள்ளாமல், முதல் நாளிலிருந்தே கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். உடல் தயாராக இல்லாத நிலையில் அதிக சுமை கொடுக்கும்போது, அதனால் முதலில் பாதிக்கப்படுவது இதயமே. காரணங்கள் இளம் வயதினருக்கு பிறவி இதய கோளாறுகள் (எ.கா., இதயத் திசுக்களின் தடித்தல், பிறவி இதயத் தமனிக் கோளாறுகள்) இருக்கலாம், அவை சாதாரண நாட்களில் அறியப்படாமல் இருக்கும். திடீர் கடுமையான உடற்பயிற்சி இதயத்தை அதிக சுமை ஏற்றி, மாரடைப்பை தூண்டும்.சில இளம் வயதினருக்கு மரபணு காரணமாக கொரோனரி தமனிகள் விறைப்பாக இருக்கலாம் அல்லது கால்சியம் படிந்து இருக்கலாம். உடற்பயிற்சியின் போது தமனிகள் விரிவடையாமை ரத்த ஓட்டத்தை குறைத்து, மாரடைப்பு ஏற்படும். போதைப்பொருள்/ஸ்டெராய்டு பயன்பாடு: ஜிம்மில் சிலர் பயிற்சிக்கு உதவும் போதைப்பொருட்கள்/அபினிகள் பயன்படுத்துவர். அவை ரத்த அழுத்தம் மற்றும் இதய சுமையை அதிகரிக்கும். உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன் உடலை தயார் செய்யாமல் பயிற்சி செய்வதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. உடலை சூடாக்காமல் (warm up) நேரடியாக கடினமான அசைவுகளில் ஈடுபடும்போது, ரத்த ஓட்டம் திடீரென மாறுகிறது. இதனால் ரத்த அழுத்தம் உயர்ந்து, இதயத் துடிப்பு கட்டுப்பாட்டை இழக்கும் வாய்ப்பு உருவாகிறது. இது சில சமயங்களில் திடீர் இதய பாதிப்பிற்கு காரணமாகிறது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படும் உடல் வளர்ச்சி தொடர்பான பொருட்களும் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. இவை இதயத் துடிப்பை இயல்பை விட அதிகரித்து, ரத்த நாளங்களில் கூடுதல் அழுத்தத்தை உருவாக்குகின்றன. இதனுடன் தூக்கமின்மை, மன அழுத்தம், ஒழுங்கற்ற உணவு பழக்கம் ஆகியவை சேர்ந்தால், இதயத்தின் செயல்திறன் மெதுவாக குறையத் தொடங்குகிறது. மேலும் சிலருக்கு ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, சர்க்கரை போன்ற பிரச்னைகள் இருப்பது தெரியாமலே இருக்கலாம். இத்தகைய நிலைகளில் உடல் நிலையை அறியாமல் கடுமையான உடற்பயிற்சி செய்தால், இளம் வயதிலேயே இதய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. இயன்முறை மருத்துவரின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதல் உடற்பயிற்சி செய்யும் போது உடல் சில எச்சரிக்கைகளை தரும். மார்பில் அழுத்தம், திடீர் மூச்சுத் திணறல், தலைசுற்றல், கண்கள் இருண்டுபோவது, வழக்கத்திற்கு மாறான அதிக வியர்வை போன்றவை தோன்றினால், அதை அலட்சியம் செய்யக்கூடாது. இது இதயம் தரும் எச்சரிக்கை. அந்த நேரத்தில் பயிற்சியை உடனே நிறுத்தி, மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம். அனைவருக்கும் ஒரே மாதிரியான உடற்பயிற்சி திட்டம் பொருந்தாது. ஒருவரின் வயது, உடல் எடை, முன் இருந்த உடல்நலப் பிரச்னைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் பயிற்சி தேர்வு செய்யப்பட வேண்டும். பிறரை பார்த்து போட்டியாக பயிற்சி செய்வது அல்லது குறுகிய காலத்தில் உடலை மாற்ற வேண்டும் என்ற அவசரம், இதயத்திற்கு தேவையற்ற ஆபத்தை உருவாக்கும். உடலை வலுக்கட்டாயமாக மாற்ற முடியாது. உடலைக் கேட்டு, அதன் சக்தியை புரிந்து கொண்டு, மெதுவாக முன்னேறினால் தான் உண்மையான ஆரோக்கியம் கிடைக்கும். இதயத்தை பாதுகாத்தால் தான் உடல் முழுவதும் பாதுகாப்பாக இருக்கும். FITT அடிப்படையில் பாதுகாப்பான உடற்பயிற்சி திட்டம் F (Frequency)- எத்தனை முறை? *வாரத்தில் 3-5 நாட்கள் மட்டும் பயிற்சி செய்யுங்கள் * ஒவ்வொரு பயிற்சிக்கும் இடையே 1 நாள் ஓய்வு அவசியம். I (Intensity)- எவ்வளவு கடினம்? *மிதமான அளவில் தொடங்குங்கள் *பேச முடியும் அளவில் பயிற்சி செய்யுங்கள் (மூச்சு வாங்கினால் கடினமானது) *படிப்படியாக தீவிரத்தை அதிகரிக்கவும். T (Time)- எவ்வளவு நேரம்? *தொடக்கத்தில்: 20-30 நிமிடங்கள் மட்டும் *மெதுவாக 45 நிமிடங்கள் வரை அதிகரிக்கலாம் *1 மணி நேரத்திற்கு மேல் தேவையில்லை. T(Type)- என்ன பயிற்சி? கலவையான பயிற்சிகள் செய்யுங்கள்: *நடை/ஓட்டம் (இதயத்திற்கு) *எடை தூக்குதல் (தசைகளுக்கு) *நீட்சி பயிற்சிகள் (stretching) பாதுகாப்பான உடற்பயிற்சி வழிமுறைகள் 1. மருத்துவ ஆலோசனை *உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெறுங்கள் *குடும்பத்தில் இதய நோய் வரலாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தால் கண்டிப்பாக பரிசோதனை செய்யுங்கள் 2. மெதுவாகத் தொடங்குங்கள் *முதல் நாளிலிருந்தே அதிக சுமை ஏற்றாதீர்கள். *உடல் பழகும் வரை படிப்படியாக தீவிரத்தை அதிகரிக்கவும் *உடற்பயிற்சி ஒரு போட்டி அல்ல – நீண்டகால பயணம் என நினைவில் கொள்ளுங்கள். 3. சூடாக்கலும், சீராக்கலும் *பயிற்சிக்கு முன் 5-10 நிமிடம் உடலை சூடாக்குங்கள் (வார்மப்) *பயிற்சிக்கு பின் 5-10 நிமிடம் உடலை சீராக்குங்கள் (கூல் டவுன்) *இந்த இரண்டு படிகளையும் தவிர்க்காதீர்கள். 4. உடலின் சைகைகளை கவனியுங்கள் *மார்பு வலி, மூச்சுத் திணறல், அதிக சோர்வு, தலைசுற்றல் ஏற்பட்டால் உடனே நிறுத்துங்கள் *"வலி வரும் வரை செய்" என்ற கொள்கையை தவிர்க்கவும் 5. சமநிலை வாழ்க்கை முறை *போதுமான தூக்கம் (7-8 மணி நேரம்) *சீரான உணவு (புரதம், நார்ச்சத்து, திரவம்) *மன அழுத்த மேலாண்மை (யோகா, தியானம்). 6. பொது பாதுகாப்பு வழிமுறைகள் *உடற்பயிற்சிக்கு போதிய தண்ணீர் அருந்துங்கள் *சரியான ஆடை மற்றும் காலணிகள் அணியுங்கள். #📢 பிப்ரவரி 11 முக்கிய தகவல் 🤗 #உங்கள் ஆரோக்கியம்....இதோ #இலவச ஆலோசனை - உங்கள் ஆரோக்கியம் மேம்படும்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
783 views
2 months ago
குழந்தைகள் மற்றும் பருவ வயதினர்கள் (5-17 வயது) தினமும் குறைந்தது 60 நிமிடங்கள் மிதமான முதல் தீவிர உடலுறுப்புப் பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்கள் பள்ளிக்குச் செல்லும் நடை, விளையாட்டு, படியேறுதல், வெளியே விளையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம். இதன் நன்மைகள் உடல்நலத்தை மட்டுமல்லாமல், மனநலன், தூக்கம், உணர்ச்சித்திறன், கற்றல் திறன் மற்றும் எடை கட்டுப்பாடுகளையும் மேம்படுத்துகிறது. இந்த வயதுக்குட்பட்டவர்கள் தினமும் சுமார் 12,000-16,000 அடிகள் வரை நடைபயிற்சி செய்யலாம். மத்திய வயதினர்கள் (18-64 வயது) தினமும் 7,000-10,000 அடிகள் நடைபயிற்சி செய்வது நல்லது. விருப்பமானால், 30-60 நிமிடங்கள் வேகமாக நடக்கலாம். இதனால் இதயத் துடிப்பும் உயரும், இதய ஆரோக்கியம் உறுதியாகும். எல்லோரும் ஒரே நேரத்தில் 60 நிமிடங்கள் தொடர்ந்த நடப்பது அவசியம் இல்லை; தேவையானவர்கள், பயிற்சியை சிறிய நேரங்கள் பிரித்து நாள் முழுவதும் செய்யலாம். முதியோர் (65 வயதுக்கு மேல்) தினமும் 4,000-7,500 அடிகள் நடக்கலாம். முதியோரின் உடல்நிலை மற்றும் எடைப்பிரச்சனையை கருத்தில் கொண்டு, 20-30 நிமிடங்கள் நடைபயிற்சி போதுமானது. இதன் முக்கிய நோக்கம், உடல் அசைவு சரியாக இருக்குதல் மற்றும் விழுப்பிழை ஏற்படாமல் இருக்குதலாகும். 2025-ல் வெளியான லேன்செட் ஆய்வில், 88 தனித்தனி ஆய்வுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் 1.6 லட்சம் பெரியவர்கள் பங்கேற்றனர். இதில் தினமும் 7,000 அடிகள் நடப்போரை தினமும் 2,000 அடிகள் நடப்போருடன் ஒப்பிட்ட போது, ஞாபக மறதி 38%, மன அழுத்தம் 22%, இதய பிரச்சனைகள் 25%, டைப் 2 நீரிழிவு 14% குறைவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நிபுணர்கள் குறிப்பதைப் போல, சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், நீரிழிவு நோயாளிகள், மூட்டு வலி அல்லது பிற உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனைப் பெறாமல் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. புதிதாக நடப்பது தொடங்கும் அனைவரும், ஆரம்பத்தில் 10-15 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம் மற்றும் உடல்நிலை மேம்படும் போல அதனை படிப்படியாக அதிகரிக்கலாம். இல்லையெனில், மூட்டு வலி அல்லது சோர்வு ஏற்படக்கூடும். மொத்தத்தில், நடைப்பயிற்சி என்பது உடல் மற்றும் மனநலத்தையும் ஒரே நேரத்தில் மேம்படுத்தும் எளிய மற்றும் குறைந்த செலவிலான உடற்பயிற்சி. வயதுக்கேற்ப, உடல்நிலை, ஆரோக்கிய நிலை மற்றும் தினசரி செயற்பாடுகளை கருத்தில் கொண்டு நடைப்பயிற்சி அளவை திட்டமிடுவது தான் நன்மைகளைக் அதிகரிக்கும் முக்கியமான வழி. 10,000 அடிகள் என்ற பொதுவான எண்ணம் கட்டாயம் அல்ல; ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அளவிலேயே பயிற்சி போதுமானது #🏋️உடற்பயிற்சி #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #உங்கள் ஆரோக்கியம்....இதோ
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
681 views
2 months ago
விஷயம் மூக்கு முடி (Nose hair). பலர், மூக்கு முடியை அசிங்கமாக கருதி, அதை வெட்டுவது அல்லது அகற்றுவது என ஒரு பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்தச் சிறிய செயல், நம் உடலுக்குள் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பெரும்பாலானவர்கள் மூக்கு முடி முக அழகைக் கெடுக்கும் ஒரு தேவையற்ற விஷயமாகவே பார்க்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், மூக்கு முடி என்பது உங்கள் உடலின் முதல்நிலை பாதுகாப்பு அரண். ஒரு கட்டடத்திற்கு எப்படி பாதுகாப்புச் சுவர் முக்கியமோ, அதேபோல் உங்கள் நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்திற்கு மூக்கு முடிதான் பாதுகாப்புச் சுவர். இது எப்படி வேலை செய்கிறது? நீங்கள் சுவாசிக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத ஆயிரக்கணக்கான கிருமிகள், தூசுகள், மகரந்தத் துகள்கள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒவ்வாமை காரணிகள் கலந்துள்ளன. இவை நேரடியாக நுரையீரலுக்குச் சென்றால், சளி, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை வலி போன்ற பல நோய்கள் வரும். இந்த ஆபத்தான துகள்களை நுரையீரலுக்குச் செல்லாமல் தடுக்கும் ஒரு வடிகட்டியாக மூக்கு முடி செயல்படுகிறது. ஆம்! சுவாசிக்கும் காற்றை சுத்திகரிக்கும் முதல் இடம் உங்கள் மூக்கு முடிகள்தான்! மூக்கு முடியை அகற்றுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன? நீங்கள் மூக்கு முடியை வெட்டும்போதோ அல்லது பிடுங்கும்போதோ, மூக்கின் உட்புறச் சவ்வில் (Mucus Membrane) சிறிய கீறல்கள் அல்லது காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தச் சிறிய காயங்கள் வழியாக, காற்றில் உள்ள பாக்டீரியாக்கள் எளிதாக உடலுக்குள் நுழைந்து, தீவிர நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம். இது மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சனை, மூக்கு புண் எனப் பல அவஸ்தைகளை ஏற்படுத்தும். நம் முகத்தில், மூக்கு மற்றும் வாய் பகுதியைச் சுற்றியுள்ள ஒரு பகுதி மரண முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஏற்படும் எந்த நோய்த்தொற்றும் நேரடியாக மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களுடன் தொடர்பு கொண்டது. மூக்கு முடியை அகற்றும்போது ஏற்படும் நோய்த்தொற்றுகள், சில சமயங்களில் மூளைக்குச் சென்று, மிக ஆபத்தான மூளைக்காய்ச்சல், மூளை கட்டி போன்ற உயிர்க்கொல்லி நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும், இது மிகவும் அரிது. மூக்கு முடிகள் மகரந்தம், தூசு மற்றும் பிற அலர்ஜி காரணிகளை உள்ளே விடாமல் தடுக்கும் ஒரு தடுப்புச் சுவராகும். இந்த முடிகளை அகற்றும் போது, அலர்ஜியை ஏற்படுத்தும் துகள்கள் எளிதாக நுரையீரலை அடைந்து, அலர்ஜி, சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசம் சார்ந்த பிரச்சனைகளைத் தீவிரப்படுத்தலாம். மூக்கு முடிகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தைச் சீராகப் பராமரிக்க உதவுகின்றன. இவை இல்லாமல் போனால், மூக்கின் உட்புறம் வறண்டு போய், மூக்கடைப்பு, மூக்கில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக குளிர்காலத்தில் இந்த நிலை மோசமடையலாம். பயோஹேக்கிங்: உடலின் சக்தியை 10 மடங்கு அதிகரிக்க நவீன வழி! மூக்கு முடியை எப்படிப் பராமரிப்பது? மூக்கு முடியை முழுமையாக அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, அதைச் சீர்செய்யும் முறைகளைப் பின்பற்றலாம். மூக்கு முடி வெட்டுவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'நோஸ் ட்ரிம்மர்கள்' சந்தையில் கிடைக்கின்றன. இவை பாதுகாப்பான முறையில், வெளிப்புறமாகத் தெரியும் முடிகளை மட்டும் வெட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது உங்கள் சருமத்தில் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கும். எச்சரிக்கை: அடிக்கடி பாராசிட்டமால் மாத்திரை எடுக்குறீங்களா? ஆபத்தில் முடியலாம் ஜாக்கிரதை! சாதாரணக் கத்தரிக்கோலை வைத்து மூக்கு முடியை வெட்டுவதைத் தவிருங்கள். இதனால் மூக்கின் உள்ளே காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மூக்கு முடியைப் பிடுங்குவது அல்லது வேக்ஸிங் செய்வது மிக ஆபத்தானதாகும். இது வேர்ப்பகுதியைப் பாதித்து நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் #🌿ஆரோக்கிய தகவல் #ஆரோக்கிய செய்திகள் #உங்கள் ஆரோக்கியம்....இதோ
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
641 views
2 months ago
எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் ஒரு நாள் இரவில் திடீரென காலமானார். "நேற்று, நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், நல்லாத்தானே இருந்தார்! அவர் ஏன் திடீரென்று இறந்தார்?" காரணம்? நீங்கள் கழிப்பறைக்குச் செல்ல இரவில் எழுந்தவுடன், அது பெரும்பாலும் விரைவாக நடக்கும். நீங்கள் உடனடியாக படுக்கையில் இருந்து குதித்து எழும் போது, மூளைக்கு இரத்த ஓட்டம் இருக்காது. "மூன்றரை நிமிடங்கள்" ஏன் மிகவும் முக்கியம்? நள்ளிரவில், சிறுநீர் கழிக்கும் ஆசை உங்களை எழுப்பும்போது, ​​திடீரென்று எழுந்ததன் மூலம், மூளை இரத்த சோகையாக இருக்கும், மேலும் இது இரத்தம் இல்லாததால் இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது. மூன்று நிமிடங்கள் மற்றும் ஒன்றரை நிமிடங்கள் பயிற்சி செய்வது நல்லது, அவை யாதெனில்?: 1. நீங்கள் எழுந்ததும், ஒன்றரை நிமிடம் படுக்கையில் இருங்கள். 2. அடுத்த அரை நிமிடத்தில் படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்; 3. உங்கள் கால்களைக் குறைத்து, படுக்கையின் விளிம்பில் அரை நிமிடம் உட்கார்ந்து கொள்ளுங்கள். மூன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் மூளை இனி இரத்த சோகைக்கு ஆளாகாது, உங்கள் இதயம் பலவீனமடையாது, இது வீழ்ச்சி மற்றும் திடீர் மரணம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். இதை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் இது நிகழலாம். #உங்கள் ஆரோக்கியம்....இதோ #உடல் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
744 views
2 months ago
நாம் பாரம்பரியமாகச் சாப்பிடும் இட்லி, தோசை போன்றவை சிறந்த உணவுகள் என்றாலும், அவற்றை மட்டுமே தினமும் உண்பது ஆரோக்கியத்திற்குப் போதுமானதல்ல. குறிப்பாக வளர்ந்தவர்கள் மற்றும் முதியவர்கள் தங்கள் காலை உணவில் மாவுச்சத்தைக் குறைத்து, புரதச்சத்தை அதிகரிக்க வேண்டும் என டாக்டர் சிவராமன் வலியுறுத்துகிறார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு நாம் காலை உணவை எடுத்துக்கொள்ளும் முறை பற்றி அவர் பேசிய வீடியோ தமிழ் ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. பயறு வகைகள்: சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பருப்பு காய்கறிகள்: கேரட், பீன்ஸ் போன்ற நறுக்கிய காய்கறி துண்டுகள் முட்டை: புரதத்திற்காக இரண்டு முட்டைகள் சைவப்பிரியர்களுக்கு: முட்டைக்கு மாற்றாக பன்னீர் அல்லது பால் சிறுதானியங்கள்: கருப்பு உளுந்து அல்லது மாப்பிள்ளை சம்பா அரிசியில் செய்த இட்லி/தோசை செய்முறை: புரதச்சத்து நிறைந்த சுண்டல்: முதல் நாள் இரவே ஊறவைத்த சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பருப்பை வேகவைத்து, குறைந்த அளவு எண்ணெய் மற்றும் தாளிப்பு சேர்த்து சுண்டலாகத் தயார் செய்து கொள்ளவும். காய்கறி கலவை: காய்கறிகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேகவைத்தோ அல்லது சூப் செய்தோ எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகளை வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் சூப் போலப் பருகுவது அதிகச் சத்தைக் கொடுக்கும். முட்டை/பன்னீர் சேர்த்தல்: அசைவம் சாப்பிடுபவர்கள் இரண்டு முட்டைகளை ஆம்லெட் போட்டோ அல்லது வேகவைத்தோ சேர்த்துக் கொள்ளலாம். முட்டை சாப்பிடாதவர்கள் பன்னீர் போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம். #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #உங்கள் ஆரோக்கியம்....இதோ