கள்ள😜காதல்😍😘

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
654 views
7 days ago
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே, தவறான தொலைபேசி அழைப்பு மூலம் ஏற்பட்ட கள்ளக்காதலால், 10 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட மனைவியும் அவரது காதலனும் ஊர்ப் பஞ்சாயத்தில் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... ககுடி கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவருக்கும் ஷோபா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஷோபாவின் செல்போனுக்கு வந்த தவறான அழைப்பு மூலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி நாயக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளுக்கு நாள் தீவிரமடைந்த இந்த கள்ளக்காதலால் மயங்கிய ஷோபா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் பிஞ்சுக் குழந்தைகளைத் தவிக்கவிட்டு பாலாஜி நாயக்குடன் ஓட்டம் பிடித்தார்.... மனைவியைக் காணவில்லை என்று சிரஞ்சீவி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இருப்பினும், அண்மையில் கள்ளக்காதலால் கணவர்கள் படுகொலை செய்யப்படும் செய்திகளைக் கண்டு எச்சரிக்கையான சிரஞ்சீவி, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தேடிக்கொண்டே மனைவியையும் தீவிரமாகத் தேடி வந்தார். இறுதியில் ஷோபாவும் பாலாஜி நாயக்கும் பெங்கிலபள்ளியில் தங்கியிருந்து, குப்பத்தில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டதை சிரஞ்சீவி கண்டுபிடித்தார். உடனடியாக உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இருவரையும் பிடித்து பஞ்சாயத்தார் முன் ஆஜர்படுத்தினார்.... கோயிலில் நடந்த கிராமப் பஞ்சாயத்து விசாரணையின் போது, சிரஞ்சீவியை வழியிலிருந்து அகற்றுவதற்காக அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவலைக் காதலன் பாலாஜி நாயக் ஒப்புக்கொண்டார். சிரஞ்சீவியின் சுதாரிப்பால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு அவர் உயிர் தப்பினார். முதலில் புகாரைக் தீவிரமாக விசாரிக்காத காவல்துறை மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், காவல் துணைக் கண்காணிப்பாளர் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் :
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
627 views
7 days ago
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் அருகே அரசு பேருந்தில் இளைஞர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து தண்டராம்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு வழியாக திருப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது, கொளமஞ்சனூர் பகுதியில் உள்ள புத்து கோவிலில் கற்பூரம் ஏற்றுவதற்காக சிறிது நேரம் பேருந்தை நிறுத்தி உள்ளார் ஓட்டுநர். அப்போது பேருந்தில் பயணம் செய்த இருவர் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஆனானந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதே வேளையில் இருசக்கர வாகனத்தின் பின் தொடர்ந்துவந்த மேலும் சிலர் பேருந்தில் ஏறி தாக்குதலில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் தாக்குதலால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். சரமாரி அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த சிவசங்கர், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தண்டராம்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தண்டராம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா, செல்போன் சிக்னல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். இந்த விசாரணையின் போது சிவசங்கருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேகா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரேகாவும் சிவசங்கரும் ஊரை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து திருப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரேகாவின் கணவர் ரகு மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து தாக்குதலை நடத்தியது தெரிய வந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்..... இதையடுத்து அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ரகு, கண்ணக்குருக்கை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், வேளானந்தல் கிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி மற்றும் மாதவன், ஆடையூர் பகுதியை சேர்ந்த சுகுமார் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது ரகுவின் மனைவி ரேகாவை நான்காண்டுகளுக்கு முன்பு சிவசங்கர் மூன்று மாத கைக்குழந்தையை விட்டுவிட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து திருப்பூரில் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவசங்கர் வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு வந்துவிட்டு மீண்டும் திருப்பூர் செல்வதற்காக திருவண்ணாமலையில் பேருந்தில் ஏறி பயணம் செய்தார். இதனை அறிந்த ரகு தனது நண்பர்களிடம் கூறி சிவசங்கரை பின் தொடர்ந்து சென்றனர். அவர் ஏறிய பேருந்தில் இரண்டு நபர்கள் ஏறி நோட்டமிட்டு கொண்டிருந்தனர். ஆளில்லாத இடத்தில் சிவசங்கரை வெட்டுவதற்காக திட்டம் தீட்டப்பட்டிருந்தது. ஆனால் திடீரென பேருந்து கோவில் அருகே நின்றதால் அங்கேயே வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டோம் எனவும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பகையின் காரணமாக வெட்டப்பட்டதாக போலீசாரிடம் கைது செய்யப்பட்ட நபர்கள் தெரிவித்தனர்.... மேலும் வெட்டு காயங்கள் அடைந்த இளைஞர் சிவசங்கர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அரசு பேருந்தில் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
835 views
28 days ago
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பரம்பை பகுதியை சேர்ந்தவர் வேணு (31). இவர் வேறொரு மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்..... இந்நிலையில் வேணு இன்று நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது, தனது மனைவியை 5வருடங்களுக்கு காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு தற்போது நான்கரை வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவரது முயற்சியால் மனைவிக்கு கற்பகோடு அங்கன்வாடியில் ஆசிரியர் வேலை வாங்கி கொடுத்துள்ளார். வேலைக்குச் சேர்ந்த இரண்டு மாதங்களிலேயே, பேருந்து ஓட்டுநராக பணிபுரியும் வில்வின் என்ற இளைஞருடன்அவரது மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஊர் சுற்றி வந்துள்ளனர்.... மேலும் அந்த அங்கன்வாடி மையத்தில் வைத்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இது அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிய வந்துள்ளது. அவர்கள் கண்டித்தும், அதை பொருள் படுத்தாமல் குழந்தைகள் முன்பே முகச்சுளிப்பை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் குறித்து மனைவியிடம் தட்டிக்கேட்டபோது, தகராறு ஏற்பட்டள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹50,000 ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு, தனது நான்கரை வயது குழந்தையை தவிக்க விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் தப்பியோடியுள்ளார்.... மேலும் நாகர்கோவிலில் வைத்து நேரில் சந்தித்த அவளது கள்ளக்காதலன் வில்வின், அந்த பெண்ணின் கணவரையும், குழந்தையையும் கொலை செய்து விடுவதாகவும், இருவரும் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறி மிரட்டி உள்ளார். இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலையிட்டு, தனக்கும் தனது குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், திருடப்பட்ட நகைகளை மீட்டுத் தர வேண்டும் எனவும் வேணு தனது புகாரில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்