📺 நவம்பர் 24 முக்கிய தகவல்கள்

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.1K views
4 months ago
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாதக, தவெக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (23-11-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், 'எஸ்.ஐ.ஆரை கொண்டு வரும் மம்தா பானர்ஜி எதிர்த்து மக்களை திரட்டி பேரணி நடத்தினார். அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் யார் இருக்கிறது?. பூத் லெவல் ஆபிசரை போட்டது யார்?. திமுக தானே?' என்று ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், எஸ்.ஐ.ஆரை தேர்தல் ஆணையம் தானே நடத்துகிறது? என்று கேள்வி எழுப்பினார். உடனே ஆவேசப்பட்டு எழுந்து நின்ற சீமான், 'உனக்கு என்ன தம்பி பிரச்சனை? டேய், அரசு தேர்தல் ஆணையத்தை கேட்கிறதா? தேர்தல் ஆணையத்தை, அரசு கேட்கிறதா? முதலில் உனக்கு என்ன பிரச்சனை? இங்கே தள்ளி வா... காமெடி பன்னிட்டு அலையாதீங்க...' என்று கோபமாகப் பேசினார். அப்போது, நீதிமன்றத்தில் திமுக வழக்கு போட்டிருக்கிறதே? என அந்த செய்தியாளர் குறுக்கே கேள்வி எழுப்பினார். அதற்கு சீமான், 'நீதிமன்றத்தில் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறோம் என்று வழக்கு போட்டார்களா?' என்று கூறி அந்த செய்தியாளரை நோக்கி, 'உன்னை இன்னைக்கு இல்ல, ரொம்ப நாளா பார்க்கிறேன். உனக்கு எதாவது பைத்தியம் ஆகிடுச்சா? கேள்வி கேள்வியா கேளு' என்று கோபப்பட்டு பேசினார். அதற்கு அந்த செய்தியாளர், 'மரியாதையா பேசுங்க..' என்று கூற உடனே சீமான், 'டேய் நீ முதல்ல, மரியாதையா கேள்வி கேளுடா.. கேள்வி கேட்க வேணாம் நீ முதல்ல போடா. ஒரு மைக்கை தூக்கிட்டு கேமரா எடுத்துட்டு வந்தா பெரிய வெங்காயமாடா?. போடா...' என்று ஒருமையில் அநாகரிகமாகப் பேசினார். #📺 நவம்பர் 24 முக்கிய தகவல்கள் #🔴இன்றைய முக்கிய செய்திகள்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
951 views
4 months ago
மலேசியா மற்​றும் சுமத்ரா தீவு​களுக்கு இடைப்​பட்ட மலாகா ஜலசந்​தி​யில் உரு​வாகி​யுள்ள காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி அதே இடத்​தில் நீடிக்​கிறது. இது மேற்​கு, வடமேற்கு திசை​யில் நகர்ந்து தீவிரமடைந்து வங்​கக் கடலில் புய​லாக மாறும் என்று வானிலை வல்​லுநர்​கள் கணித்​துள்​ளனர். அதே​நேரத்​தில், மலாகா ஜலசந்தி தாழ்வு பெரிய அளவுக்கு தீவிரம் அடை​யாமல், அதே இடத்​தில் நீடிக்​கவே அனைத்து வானிலை காரணி​களும் சாதக​மாக உள்​ளன. எனவே, தெற்கு அந்​த​மான் வழி​யாக எதிர்​பார்க்​கும் காற்​றழுத்த தாழ்​வுநிலை இப்​போதைக்கு வர வாய்ப்​பில்​லை. மாறாக, குமரிக்​கடலை ஒட்​டிய பகு​தி​யில் நிலை​கொண்​டிருந்த காற்​றழுத்த தாழ்​வுநிலை தற்​போது இலங்கை அருகே நீடிக்​கிறது. இது இன்று அல்​லது நாளை (நவ.24, 25) தாழ்வு மண்​டல​மாக தீவிரமடை​யும். இதன் காரண​மாக, தமிழகத்​தில் பெய்​து​வரும் மழை இன்​றும், நாளை​யும் சற்று தீவிரமடை​யும். மேலும், அனைத்து மாவட்​டங்​களுக்​கும் பரவலான மழைப்​பொழிவை கொடுக்​கும். டெல்டா மற்​றும் தென் மாவட்​டங்​களில் கனமழை பெய்​யும். கடலோரம் மற்​றும் தென் மாவட்ட மேற்​குத் தொடர்ச்சி மலைப் பள்​ளத்​தாக்​குப் பகு​தி​களில் அதி கனமழைக்கு வாய்ப்​புள்​ளது. இன்று (நவ 24) சென்னை உள்​ளிட்ட வட கடலோரப் பகு​தி​களில் விட்​டு​விட்டு மித​மான மழை இருக்​கும். இலங்கை அருகே உரு​வாகி​யுள்ள காற்​றழுத்த தாழ்வு வரும் 27-க்​குப் பிறகு காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக தீவிரமடைந்து காவிரி டெல்டா மாவட்​டங்​கள் மற்​றும் வட கடலோர மாவட்​டங்​களின் கரைக்கு நெருக்​க​மாக நகர்ந்​து, 3 நாட்​களுக்கு டெல்டா மாவட்​டங்​கள் முதல் சென்​னை, திரு​வள்​ளூர் வரை இடை​வி​டாது அதிக மழைப்​பொழிவை கொடுக்​கும். அதே​நேரத்​தில், வட உள்​மாவட்​டங்​களில் கன மற்​றும் மிக கனமழை​யும், பிற மாவட்​டங்​களில் அதிக மழை​யும் பெய்​யும். நாகை முதல் திரு​வள்​ளூர் வரை மழைப் பாதிப்பு ஏற்​படலாம். இலங்​கை​யைக் கடந்து தமிழகத்​தின் வட கடலோரம் வரை புயல் பாதிப்பு இல்​லாத மழை தரும் நிகழ்​வாக இது இருக்​கும். மழை பாதிப்பை தடுக்க முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்​டிய நிலை ஏற்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். #🌪️🌪️ புதிய புயல் அந்தமானில் 🌀🌀⛈️⛈️ #🌪🌀வருகிறது புதிய புயல் 🌀🌪 #📺 நவம்பர் 24 முக்கிய தகவல்கள் #🔴இன்றைய முக்கிய செய்திகள்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1K views
4 months ago
இன்றைய காலக்கட்டத்தில் மோசடிகள் புதுபுது டிசைன்களில் அரங்கேறுகின்றன. மக்கள் விருப்பத்தை அறிந்து அதே ரூட்டில் நம்பும்படியாய் நடித்து பல மோசடிகள் நடப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக ஆன்லைனில் இதுபோன்ற மோசடிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. மேட்ரிமோனியல் இணையதளம் ஆன்லைன் லாட்டரி, பரிசு விழுந்துள்ளதாக கூறி ஏமாற்றுவதில் தொடங்கி மணப்பெண், மணமகன் தேடுவதில் வரை மோசடி நீள்வதை பார்க்க முடிகிறது. மேட்ரிமோனியல் வெப்சைட்களில் மணமகன் தேடும் பெண்களை குறிவைத்து சென்னை இளைஞர் மோசடியில் ஈடுபட்டு அதிரவைத்துள்ளார். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம். சென்னை தாம்பரத்தில் கஸ்தூரிபாய் நகர் என்ற இடம் உள்ளது. இங்குள்ள கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் கோபிநாத். 24 வயதான இவர் தன்னை ஒரு தொழில் அதிபர் போல காட்டிக்கொண்டு டிப்-டாப் உடைகளுடன், விலை உயர்ந்த கார்கள் முன்னாடி புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை மேட்ரிமோனியல் இணையதளங்களில் பதிவு செய்துள்ளார். உல்லாசம் அனுபவித்து ஏமாற்றம் தன்னை ஒரு தொழில் அதிபர் போல காட்டிக்கொண்டதால், ஐடி, மருத்துவம் என நன்கு படித்த பெண்களும் இவரை நம்பி இவரது வலையில் வீழ்ந்துள்ளனர். கோபிநாத்தை திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் பெண்களிடம் நைசாக பேசி பணம் பெற்று, அவர்களுடன் உல்லாசமும் அனுபவித்துவிட்டு ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் உள்ள மேட்ரிமோனியல் தளங்களில் தனது மன்மத விளையாட்டுகளை கோபிநாத் அரங்கேற்றி வந்த நிலையில், சென்னை ஐடி பெண் ஒருவர் அளித்த புகாரால் வசமாக சிக்கியுள்ளார். 12-க்கும் மேற்பட்டபெண்களிடம் அதாவது, கோபிநாத் விளம்பரத்தை பார்த்த ஐடி பெண் ஒருவர், தனது குடும்பத்தினர் மூலமாக திருமணத்திற்கு பேசியுள்ளார். கோபிநாதும் விருப்பம் தெரிவித்த நிலையில், அந்த பெண் போனில் பேசியுள்ளார். பல நாடுகளில் தொழில் நடத்தி வருவதாக கதை விட்ட கோபிநாத், திடீரென ஒருநாள் தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாகவும், வீட்டில் வேலை செய்பவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று ரூ.20 ஆயிரத்தை கூகுள் பேவில் வாங்கியுள்ளார். அதன்பின்னரும் பல்வேறு பொய்களை சொல்லி லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு சந்தேகம் வரவே தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி வாயிலாக கண்காணித்துள்ளார். அப்போதுதான் கோபிநாத் ஒரு மோசடி பேர்வழி என தெரியவந்துள்ளது. உடனே தாம்பரம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையை அடுத்து கோபிநாத் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 2 லேப்டாப்கள், செல்போன்களை ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பெண் மருத்துவர் உள்பட 12-க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோபிநாத் பண மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். போலீசார் அவரது மடிக்கணினிகள், செல்போன்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். #📺 நவம்பர் 24 முக்கிய தகவல்கள் #🔴இன்றைய முக்கிய செய்திகள் #விழிப்புணர்வு எச்சரிக்கை பதிவு #😭காதலித்து ஏமாற்றும்😭 #ஏமாற்றும் காதல்