நாட்டுநடப்பு

திரைபாரதி
928 views
5 months ago
எட்டப்பர்களும் எடப்பாடிகளும்... அதிமுகவில் MGR மற்றும் ஜெ விசுவாசிகளுக்கு இடமில்லை! எடப்பாடி தன்னை முன்னிலைப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் எந்த ஓர் அரசியல்வாதியும் செய்யக்கூடியதுதான். ஆனால், கடந்துவந்த பாலத்தை அடித்து நொறுக்கும் வேலையை அவர் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக செய்துகொண்டிருக்கிறார். அதற்குத் தேவையான தொண்டர் பலம் அவருக்கு நிச்சயமாக இல்லை என்ற நிலையில் இது அவர் தனது அடிகளை அளந்து வைக்கத் தவறிவிட்டார் என்பதைக் காட்டுகிறது. இந்த மேற்கோளைச் சுட்டிக்காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒரு சட்டசபைக்கூட்டத்தில் ""Your days are numbered" என்று அண்ணாவை எதிர்த்து TN அனந்தநாயகி முழக்கமிட்டார். இது ஷேக்ஸ்பியரிடம் கடன் வாங்கிய வசனமாகும். அண்ணா சற்றும் இடைவெளி கொடுக்காமல் "My steps are measured"என பதிலளித்தார். அதுவும் ஷேக்ஸ்பியரின் வாசகம் என்பதுதான் ஹைலைட்! ஆனால், "கம்ப ராமாயாணத்தை எழுதிய சேக்கிழார்" என்று எடப்பாடி திருவாய் மலர்ந்தருளியது தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு செய்தி. இதற்கு "எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்" என திரைப்படம் ஒன்றில் வந்த குவிஸ் புரோகிராம் காட்சி ஒன்றில் விவேக் போட்டியாளரிடம் கேட்ட கேள்வி மேலானது. காமராஜர் என்ன இலக்கியம் பேசியா பெருந்தலைவர் ஆனார்? எடப்பாடிக்கு ஏன் இந்த விபரீத ஆசை? விஷயத்திற்கு வருவோம். ஜெ விசுவாசிகள் என்று அழைக்கப் பட்டவர்களில் மூவர் முக்கியமானவர்கள். 1. சசிகலா, 2. செங்கோட்டையன் & 3. OPS. "Last but not least" என ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. பதவி வந்தால் பவிசு தானாகவே வந்துவிடும் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், முதலமைச்சர் ஆன பின்பும் ஜெ அமர்ந்த நாற்காலியில் அமர வேண்டும் என ஆசைப்படாமல் இருந்தவர் OPS. இந்த மூவரில் யாராவது ஒருவரையாவது தன்னுடன் தக்கவைத்துக் கொள்வது தனது அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என்ற அடிப்படை அரசியல் ஞானம்கூட இல்லாமல் எடப்பாடி செயல்பட்டார். எடப்பாடி உருண்டு புரண்டு ஆட்சிக்கு வந்தது ஓர் அரசியல் விபத்து. தமிழக அரசியல் வரலாற்றின் தீராத ஒரு களங்கம். அதாவது MGR மற்றும் ஜெ அவர்களை மீறிய சக்தியாக தன்னை நிலைநிறுத்த வேண்டும் என திட்டமிட்டு எடப்பாடியாகிய அந்த சாணவாக்கியர் (இது சாணக்கியர் என்பதை குறிக்க வைரமுத்து குறிப்பிட்ட வட்டார வழக்கு) செயல்பட்டார். கொங்கு மண்டலத்தின் தன்னிகரற்ற தலைவர் என தன்னைத்தானே (டீசன்டான பாலிடீஷியன் செங்கோட்டையனை மட்டம் தட்டி) மறைமுகமாக பிரகடனப் படுத்திக்கொண்டு கொங்கு வாழ் தமிழினத்திற்கே இழுக்கைத் தேடித் தந்தவர் எடப்பாடி. நெல்மணிகளை புறந்தள்ளி நெற்பதர்கள் நீண்டகாலம் குதிருக்குள் குளிர்காய முடியாது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது. எட்டப்பர்களும் எடப்பாடிகளும் ஒரு நாளும் தலை நிமிர்ந்து நிற்க முடியாது! அவர்களால் அணையாத தீபங்களை அணைக்க முடியாது. ஒரு வேளை, ஒருவேளை... சூது வென்றால் சோதனைக்கு முடிவில்லை - (அதாவது, அதிமுகவின் சோதனைகளுக்கு)! பி.கு. எடப்பாடி தனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட அரசியல் பாதை எது என்பதை "கலைஞரின் பாதையில் எடப்பாடி!" என்ற எமது முந்தைய பதிவினைப் படித்தால் புலனாகும். படித்துவிட்டீர்களா திரைபாரதியின் "திசைகெட்ட பயணங்கள்" @ அமேசான் KDP? #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
திரைபாரதி
815 views
5 months ago
Fire in the Belly Without Fear in Mind If you are determined to achieve something, you must start now—as if there is no tomorrow and no time to waste. Only then will your words, “I have no time,” truly carry meaning. In such a state, paradoxically, you actually have enough time — time to think, to act, to create, to accomplish— everything except perhaps to get married, even you are retired! The truth is, there is time for everything in life, provided you precognize when the right time is. Otherwise, every initiative turns into an untimely or inauspicious one. Yet, to awaken your mind and set it ablaze with purpose, the excuse of “no time” should never exist. Saying, “I’ll do it tomorrow,” is the surest way to bury your dreams under the dust of procrastination. That tomorrow never comes. The difference between “no time” and “I’ll do it tomorrow” defines the two sides of the same coin — time management. Knowing which side you are playing with decides the worth of your time. And then comes the real spark — the fire in the belly. It is that burning determination that makes you restless until you act. It is what transforms thought into motion and passion into performance. Fire in the belly does not ask for free hours on the clock — it creates them. It redefines time, bending it to one’s will. But that fire alone is not enough unless it burns free of fear. Fear clouds vision; fire clears it. Fear delays; fire drives. A fearless mind ignited by passion can turn any limitation into a ladder. That is why success belongs not to the intelligent or the privileged, but to those who combine fire in the belly with freedom from fear. Ultimately, the formula for achievement is simple: think as if there’s no tomorrow, act as if there’s no fear, and live as if every second counts. When you work with such intensity, you don’t just manage time — you master it. "You are the Brand" https://www.amazon.in/dp #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு /B089F5TT1P
திரைபாரதி
959 views
5 months ago
கலைஞரின் பாதையில் எடப்பாடி! எடப்பாடி கடந்து வந்த அரசியல் பாதையை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், அவர் தனது அரசியல் வாழ்க்கையில், கலைஞருடைய வழிமுறையைக் கடைப்பிடித்து நடந்து வருவது நன்கு புரியும். அது "கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடிய கதை" என்பதும் தெரிய வரும். கலைஞருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் இணக்கமான தொடர்பு உண்டு. எடப்பாடி எப்படியோ உருண்டு புரண்டு முதல்வரானபின்தான் இவர் யார், இவர் எப்பேர்ப்பட்ட ஜெகதலப்பிரதாபன் என்று இதர கட்சியினருக்கு மட்டுமல்ல இவரது கட்சியனருக்கே தெரிய வந்தது. கலைஞர் தனக்கு கட்சியில் எதிரிகளாக இருந்த நெடுஞ்செழியன், MGR, மதியழகன், சத்தியவாணிமுத்து, கண்ணதாசன், க. ராசாராம் வைகோ போன்றவர்களை தயவுதாட்சண்யமின்றி ஒதுக்கித் தள்ளினார். இதில் பலர் கட்சியில் கலைஞருக்கீடான அனுபவம் கொண்டவர்களாக இருந்தவர்கள். எடப்பாடியும் கலைஞரைப் போலவே, சசிகலா, TTV, OPS, செங்கோட்டையன் போன்றவர்களை கட்சியில் இருந்து அகற்றினார். இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் எடப்பாடி முதல்வராவதற்கு காரணமாக இருந்தவர்கள் அல்லது அதற்கு தமது எதிர்ப்பினை வலிமையாக காட்டாமல் இருந்தவர்கள் என்பதை நாடறியும். இவர்களை அணைத்துச் செல்ல வேண்டும் என்று எடப்பாடி அவர்கள், காமராஜர் அல்லது MGR ஐப் போல நினைத்து செயல்பட்டதில்லை. காமராஜர் சொந்த விருப்பு பாராட்டாதவர். தன்னை எதிர்த்து அரசியல் செய்த சி. சுப்ரமணியம் அவர்களை, அவரது நிர்வாகத்திறன் மற்றும் நேர்மையை கருத்தில் கொண்டு காமராஜர் மந்திரி ஆக்கினார். MGR க்கு பழிவாங்கும் குணம் அதிகம் என்ற ஒரு கருத்தை உருவாக்கி அது திட்டமிட்டு பரப்பப்பட்டாலும், அரசியலில் அவர் பெருந்தன்மையுடன்தான் நடந்துகொண்டார். தன்னுடன் கருத்தில் முரண்பட்ட கண்ணதாசனை MGR அரசவைக் கவிஞர் ஆக்கினார். அவருக்கு ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடுகள் நிலவிய காலத்திலும், ஜெயலலிதாவின் திறமை மற்றும் துணிச்சலின் மீது நம்பிக்கை வைத்து அவரை ஆளாக்கினார். தன்னை வரைமுறையின்றி வசை பாடிய காளிமுத்து அவர்களை MGR அமைச்சராக்கி அழகு பார்த்தார். கலைஞர் தன்னை எதிர்த்தவர்களை தயக்கமின்றி ஒடுக்கினார் என்றால் அவருக்கு அதற்கான திறமையும், கட்சித் தொண்டர்களின் ஆதரவும் இருந்தது. புறக்கடை வழியாக வந்து கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றிய எடப்பாடிக்கு இது இரண்டும் இல்லை. MGR பெயரைச் சொல்லிக்கொண்டு சுயலாபத்துக்காக கலைஞர் பாதையில் நடந்து செல்லும் எடப்பாடி கட்சித் தலைமைக்கு பொருத்தமானவர் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. இன்று தமிழகம் மட்டுமல்ல அண்ணா திமுகவும் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. ஆனால், எடப்பாடி அவர்கள் அரசியல் சாதுரியமற்ற தனது நடவடிக்கைகளினால், TTV, OPS, செங்கோட்டையன் போன்றவர்களை விஜயின் த.வெ.க.வின் வளையத்திற்குள் தள்ளும் வரை ஓயமாட்டார் என்றே தெரிகிறது. அவர்கள் மூவருக்கும் எடப்பாடியை விட மக்களிடம் செல்வாக்கு அதிகம் என்பதை எடப்பாடியிடம் யார் சொல்வது? என்னத்தைச் சொல்றது? கூட்டணியெல்லாம் இவருக்கு தோதுப்பட்டு வராது. விஜயின் வீட்டு வாசல் திறப்பதற்காக காத்திருக்கும் எடப்பாடி, தனது வீட்டு வாசலில் காத்திருப்பவர்களை தொடர்ந்து உதாசீனம் செய்கிறார். எடப்பாடியின் பலவீனத்தை முழுமைம்யாக பலலமாக்கிக் கொள்கிற சூழ்நிலை இன்று சீமானுக்கு உள்ளது என்பதை எடப்பாடியின் வரலாற்றிலிருந்து சீமான் புரிந்துகொள்ளாவிட்டால் - அது அவருக்கு நஷ்டம் அவரது ஆதரவாளர்களுக்கு? பெரு நஷ்டம் தமிழகத்திற்கு? துரதிருஷ்டம்... படித்துவிட்டீர்களா? திரைபாரதியின் "திசைகெட்ட பயணங்கள்" @ அமேசான் KDP #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
திரைபாரதி
1K views
5 months ago
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? செய்தி: பொன்முடிக்கு மீண்டும் மணிமுடி! முந்நாள் அமைச்சர் பொன்முடி முந்தாநாள் பல்வேறு தளங்களில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு பல காரணங்கள் உள்ளன: வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழந்தார், இதனால் அமைச்சர் பதவி பறிபோனது. மேலும், சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் சென்ற ஏப்ரல் மாதம் அவர் நீக்கப்பட்டார்.  அதாவது குறிப்பாக, அவர் பெண்கள் குறித்து அருவருக்கத்தக்க முறையில் பேசியது தமிழகத்தில் பெரும் பிரச்சினையாக மாறியது. அவரது பேச்சுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பதவி நீக்கக் கோரியும் புகார்கள் அளிக்கப்பட்டன. அதன் காரணமாக, அவர் திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது மீண்டும் திமுக துணைப் பொதுச் செயலாளராக பொன்முடி அவர்களை நியமித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் மக்களின் மனதில் இயற்கையாகவே பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இதற்கு முதலிலேயே பதவியில் இருந்து நீக்காமலேயே இருந்திருக்கலாமே என்று கேட்கிறீர்களா? ஒருவேளை பொன்முடி மக்களுக்காக சிலபல தன்னலமற்ற சேவைகளை செய்து இந்த இடைப்பட்ட காலத்தில் உத்தமராகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழவும் ஒரு வாய்ப்பு உள்ளது. என்னத்தைச் சொல்றது? அவர் பேசிய பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த மக்களை அப்போதைய சூழ்நிலையில் சமாதானப்படுத்தும் நோக்கிலேயே அந்த பதவி பறிப்பு நாடகம் நடந்தது என இப்போது வெட்டவெளிச்சம் ஆனது! இதுதான் ஆனானப்பட்ட திராவிட மாடல் என்னதான் சொல்லுங்கள், எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் எடுத்த முடிவுகளில் இருந்து ஜெயலலிதா எப்போதும் பின்வாங்கியதில்லை என்பது நினைவுக்கு வருகிறது. அப்படியே ஒருவேளை ஏதாவது நடந்திருந்தாலும், அது மன்னித்துவிட்ட நடவடிக்கையாக இருக்குமே தவிர, அழுத்தத்திற்கு அடிபணிந்த நடவடிக்கையாக இருந்திருக்காது! கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? "திசைகெட்ட பயணங்கள்" https://www.amazon.in/dp/B0CH12RHGR #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
திரைபாரதி
695 views
5 months ago
USA: பேய் அரசாண்டால் பிணம் தின்னும் பாலிசிகள்! சர்க்கரை & இரத்த அழுத்தம்: விசா மறுப்புக்கு காரணமா? அமெரிக்காவில் தற்போது சர்க்கரை (Diabetes) மற்றும் இரத்த அழுத்தம் (BP) போன்ற உடல் நலக் குறைபாடுகள் விசா மறுப்புக்கான காரணமாக கருதப்படலாம் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இது நம்ப முடியாத அளவு பைத்தியக் காரத்தனம்! நோய் பரவல் எதுவும் இல்லாத நிலையை, "ஆபத்து" எனக் கருதுவது அரசியல் அறியாமையா அல்லது நிர்வாக முட்டாள்தனமா? அடுத்ததாக கண் கண்ணாடி போட்டவர்களையும் நரைமுடி உடையவர்களையும் தடை செய்யப் போகிறார்களா? உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) விலகி நின்ற அமெரிக்கா, உலக சுகாதார விவகாரங்களில் தலையிடும் தகுதி இழந்துவிட்டது. ஆனால் தங்களது தவறை மறைக்க உலகுக்கு தவறாகப் போதிக்கும் பழக்கம் அதற்கு உண்டு. 2020-இல் COVID-19 நெருக்கடியை WHO சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டைச் சொல்லி விலகியது — இது ஒரு சுயநலமிக்க வசதியான காரணம்! இப்போது அதே நாடு, சர்க்கரை மற்றும் பிபி போன்றவற்றை நோயாகச் சித்தரித்து விசா மறுப்பதென்பது நகைச்சுவையா, இல்லையெனில் அரசியல் பைத்தியமா? உண்மையில், இவை தொற்றுநோய்கள் அல்ல. கையாலோ, காற்றாலோ பரவாது. மன அழுத்தம், உணவு பழக்கம், உடல் இயக்கமின்மை போன்றவையால் ஏற்படும் வாழ்க்கை நிலைகள் மட்டுமே. அப்படியானால், கேள்வி இதுதான் — அமெரிக்கர்கள் அனைவரும் சர்க்கரையும் பிபியுமின்றி முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களா? எண்ணிக்கைகளைப் பார்ப்போம். 1999–2000 காலகட்டத்தில் அமெரிக்கர்களில் சர்க்கரை நோயின் விகிதம் 9.7% ஆக இருந்தது. 2021–2023 காலத்தில் அது 14.3% ஆக உயர்ந்துள்ளது! 2030க்குள் 54.9 மில்லியன் அமெரிக்கர்கள் சர்க்கரை நோயுடன் வாழ்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரத்த அழுத்தம் இன்று அமெரிக்கர்களில் 48.1% பேருக்கு உள்ளது — அதாவது பாதிக்குப் பாதி ஜனத்தொகை! இது மிகவும் கவலைக்குரியது, இவ்விரண்டு நிலைகளும் சேர்ந்து காணப்படும் எண்ணிக்கை 1999 முதல் 2018 வரை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அதாவது, கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் இரண்டும் உடையவர்களாகவே வாழ்கிறார்கள் — அவர்கள் வேலை செய்கிறார்கள், திருமணம் செய்கிறார்கள், வரி செலுத்துகிறார்கள், உலகம் முழுவதும் பயணம் செய்கிறார்கள். அப்படியிருக்க, அதே உடல்நிலை கொண்ட ஒரு வெளிநாட்டு நபரின் விசாவை மறுப்பது எத்தனை பெரிய முரண்பாடு? இரட்டைக் கொள்கை! நாட்டின் நுழைவு கொள்கை சுகாதார அடிப்படையில் தீர்மானிக்கப்படலாம். ஆனால் அது பகுத்தறிவுடன் இருக்க வேண்டும் — பைத்தியக்காரத்தனத்துடன் அல்ல. சர்க்கரை மற்றும் பிபி போன்றவை இன்றைய மனித வாழ்க்கையின் ஓர் அங்கமே. அவற்றை “தகுதி இல்லாமையின் சின்னம்” எனக் கருதுவது மருத்துவம் அல்ல; அறிவிலி அரசியல். அமெரிக்காவில் பாதி மக்கள் இதே நிலைகளுடன் வாழும் நிலையில், மற்றவர்களுக்கு நுழைவு மறுப்பது எந்த நியாயம்? உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகிய பிறகு, அமெரிக்கா தன்னையே “Who knows what” என்ற கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது இறுதியில் ஒரு புதிய விசா படிவம் போதும்: "உங்களிடம் சர்க்கரை, பிபி அல்லது பொதுவான புத்திசாலித்தனம் உள்ளதா? டிரம்ப் பின் மருத்துவ வரலாறு இரகசியமானது என்றாலும், அவர் இரத்த அழுத்தத்திற்கு இலக்கானவர். அதன் பேரில் அவருடைய வருகைக்கு இந்தியா அனுமதி மறுக்கலாமா? (அய்யய்யோ, அதெல்லாம் இல்ல... சும்மா... ஒரு பேச்சுக்கு...) பேய் அரசாண்டால் பிணம் தின்னும் பாலிசிகள்! படித்துவிட்டீர்களா? திரைபாரதியின் "திசைகெட்ட பயணங்கள்" @ அமேசான் KDP? #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
திரைபாரதி
1.9K views
5 months ago
“கிரிப்டோவுக்கு மேடை தயார்!” I. மேடை தயார் பணத்தின் வடிவம் இனி காகிதம் அல்ல; அது குறியீடுகள். அரசுகள் அல்ல, கணிதம் தான் அதன் ஆதாரம். இப்போது உலக பொருளாதாரத்தின் மேடை கிரிப்டோவுக்காக தயார் ஆகி வருகிறது. நூற்றாண்டுகளாக அமெரிக்க டாலர் உலக பொருளாதாரத்தை இயக்குகேக் சக்தியாக இருந்தது. ஆனால் இப்போது ஒரு மாறுபட்ட பாதை திறக்கப்பட்டுள்ளது. இனி கிரிப்டோ, டாலரின் நிழலில் நடக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டும் ஒரே மேடையில் இருந்தாலும், அவை வெவ்வேறு தாளத்தில் இயங்குகின்றன. பணம் ஒரு கருவி அல்ல — அது ஒரு கருத்து. கிரிப்டோ, அந்த கருத்தின் மூன்றாம் பரிணாமம். நம்பிக்கையின் மையத்தை அரசிலிருந்து மக்களிடமே மாற்றும் முயற்சி இது. மாறுபாடே வளர்ச்சியின் விதை — இதை திறந்த மனதுடன் ஒப்புக்கொள்வோம். II. தங்கத்தின் மாயை: தங்கம் என்றால் நம்பிக்கை. ஆனால் உலகளாவிய பரிவர்த்தனைகளுக்கு தங்கம் தற்காலத்தில் பொருத்தமற்றது. முதலில், சமமற்ற விநியோகம் — இந்திய குடும்பங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான டன் தங்கம் இந்தியப் பொருளாதாரத்துக்கு ஆதாரமாக அமைவது சாத்தியமா? இரண்டாவதாக, அனுபவத்திற்கும் நடைமுறைக்கும் இடையிலான தூரம் — டிஜிட்டல் யுகத்தில் டன் கணக்கில் தங்கம் நகர்த்துவது அபாயகரமானது மட்டுமல்ல சாத்தியமற்றது. மூன்றாவதாக, அரசியல் தலையீடு — மேலும் தங்கம் ஒரு நாட்டின் ஆதிக்கத்திற்குள் மாறிவிடும் அபாயம் எப்போதும் உள்ளது. நான்காவதாக, இது டிஜிட்டல் யுகம் — உலகம் இன்று தகவல்களின் அடிப்படையில் இயங்குகிறது; தங்கத்தில் அல்ல. தங்கத்தின் வெளிச்சம் இன்று நிதி உலகத்தை பிரகாசிக்க வைக்க முடியாது. கிரிப்டோ தான் புதிய ஒளி. III. கிரிப்டோ – நெல் மற்றும் பதர் கிரிப்டோ உலகம் எண்ணற்ற வாய்ப்புகளினால் நிரம்பியுள்ளது — சில அருமையானவை, சில குப்பைகள். நெல்லும் பதரும் போல இது. அவைகளில் சில நம்பிக்கையின் விதைகள். டீ-பை (DeFi), ஸ்மார்ட் கான்ட்ராக்ட்ஸ், டோக்கன்கள் — இவை அனைத்தும் “நம்பிக்கை” என்ற கருத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன. ஒவ்வொரு சிறந்த கிரிப்டோ திட்டமும் ஒரு சிந்தனையின் வடிவம். IV. எதிர்கால பாதை ஆப்பிள், அமேசான் போன்ற மூன்றாம் தலைமுறை தொழில்முனைவோர் உலகத்தை மாற்றியதைப்போல, புதிய கிரிப்டோ முயற்சிகளும் பணத்தின் மதிப்பு என்ற கருத்தை மாற்றி எழுதுகின்றன. ஆனால் பாதை ஒரே திசை — மையமில்லா உலகம். பழைய பாதைக்கு திரும்ப முடியாது. புதிய பாதைகளில் பல மறைந்து போகும்; சில நிலைத்து நிற்கும். சில அரசுகள் ஆரம்பத்தில் எதிர்த்தாலும், காலப்போக்கில் விதிகள் மாறும். ஆனால் தொழில்நுட்பம் தண்ணீரைப் போல தன் வழியைத் தேடும். V. இணையான உண்மைகள் பாரம்பரிய நிதி உலகம் கட்டுப்பாட்டை நம்புகிறது; கிரிப்டோ ஒருமித்த கருத்தை நம்புகிறது. Control vs Consensus. இரண்டும் இணைந்து இயங்கினால் தான் முன்னேற்றத்தின் ரயில் நகரும். புதிய மேடை தயார் — இது போராட்டத்திற்கல்ல; ஒத்துழைப்பிற்காக. இப்போதுதான் நாடகம் தொடங்கியுள்ளது! "திசைகெட்ட பயணங்கள்" https://www.amazon.in/dp/B0CH12RHGR #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
திரைபாரதி
822 views
5 months ago
அதற்கு ஒரு நோபல் பரிசு இல்லையா? வாய்ப்பே இல்லை ராசா. இதுதாண்டா ஜனநாயகம்... பாகிஸ்தானில் அவ்வப்போது மக்களாட்சி நிலவுவதாக ஒரு தோற்றம் கட்டமைக்கப் படுவது உண்டு. ஆனால், அடிப்படையில் நீண்ட நெடுங்காலமாக அந்த நாடு இராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தற்போது, அரசியலமைப்பு நீதிமன்றங்களை அமைப்பது, தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பது, நீதிபதிகளை இடமாற்றம் செய்வது போன்ற விஷயங்களிலும் இராணுவ மேலாதிக்கத்திற்கு வழிகோலும் வகையில் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என்று செய்திகள் வருகின்றன. அதாவது, ஜனநாயகச் சுவடுகளை முற்றிலும் அழித்துவிடுலது என்ற முனைப்புடன் பாக் இராணுவம் இன்று செயல்பட்டு வருகிறது. ஒரு பக்கத்து நாட்டில், அதுவும் குறிப்பாக பாக் போன்ற எதிரி நாட்டில் நடக்கும் இத்தகைய மாற்றங்கள் மக்களாட்சி வலுவாக வேரூன்றிச் செயல்படும் இந்தியா போன்ற அண்டைநாடுகளிலும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. உலக நாடுகளில் எத்தனையோ விதமான கூட்டணிகள் உள்ளன. ஆனால், ஜனநாயகத்தைக் காப்பதற்காக உலக ஜனநாயக நாடுகளின் அணி ஒன்று இதுகாறும் உருவாகாதது ஏன் என்று புரியவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்பை அமெரிக்க அரசியலமைப்பின் மூலம் அவரது பதவிக்காலம் முடிவதற்குள் தூக்கி எறியவில்லை என்றால், வரலாற்றில் அது உலகிலேயே ஒரு மோசமான அரசியலமைப்பு என்ற மாண்பை எய்தும் என்பதில் சந்தேகமே இல்லை! ஜனநாயகத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. பலவிதமான கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுடன் மனித குலத்தில் பல்வேறு குழுக்கள் இயங்கும்போது இந்தக் குறைகளைத் தவிர்ப்பது சாத்தியம் இல்லை. மேலும், ஜனநாயகத்தை விட உயர்வான அரசியலமைப்பு முறையை இந்த உலகம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஜனநாயகத்திற்கு எதிராக உலக அளவில் விளங்கும் அரசியல் சக்திகளை எதிர்த்துப் போராடுவது சாத்தியம் இல்லைதான். ஆனால், ஜனநாயக தீபம் எரிந்துகொண்டிருக்கிற நாடுகள் தங்களைத்தாமே காத்துக் கொள்வதற்கு ஒரு சர்வதேச அமைப்பு தேவை இல்லையா? ஜனநாயகம் To எதேச்சாதிகாரம் என்பது ஒரு வழிப்பாதை... மக்களிடையே விழிப்புணர்ச்சி இல்லாமல் போனதால் எதேச்சாதிகாரத்தில் ஒருமுறை சிக்கிய நாட்டில் மக்கள் மீண்டும் ஜனநாயகத்தை விரும்பினாலும், அதில் திரும்புவது சாத்தியம் இல்லை. வாய்ப்பே இல்லை ராசா... இந்த இலட்சணத்தில் உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகள் மோதல் போக்கில் இருப்பதால் யாருக்கு இலாபம்? டிரம்ப் இந்த நூற்றாண்டின் மோசமானதொரு அமெரிக்க ஜனாதிபதி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பேசுவதெல்லாம் பொய். அதையே திருப்பித் திருப்பிச் சொல்லும் அடாவடி. அதற்கு ஒரு நோபல் பரிசு இல்லையா? இல்லை. Repeat: வாய்ப்பே இல்லை ராசா. இதுதாண்டா ஜனநாயகம்... "திசைகெட்ட பயணங்கள்" https://www.amazon.in/dp/B0CH12RHGR #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
திரைபாரதி
785 views
5 months ago
Images of the Times: Disinhibited Social Engagement Disorder Disinhibited Social Engagement Disorder (DSED) is a little-known yet deeply concerning condition found among children. It is characterized by an unusual friendliness and lack of fear toward strangers. Children with this disorder often approach unfamiliar adults without hesitation, talk openly, and display an inappropriate level of trust. While some may see this as an innocent or charming trait, it can expose the child to serious risks. What makes the situation alarming is the assumption that nearly half of the children worldwide may show symptoms of this disorder—though no large-scale study has yet confirmed it. In most traditional societies, a strong network of family, neighbors, and community values acted as a natural safeguard for children. A child’s openness was balanced by the collective watchfulness of the society. But with the weakening of family ties, urban anonymity, and the growing influence of social media, that protective circle is shrinking. Parents today are busier than ever, and though they love their children dearly, the time they spend with them is limited. It is in this vacuum that Disinhibited Social Engagement Disorder finds fertile ground. Modern parents must therefore be more alert and protective. Childbirth itself is becoming rarer due to changing lifestyles and economic pressures. Children are now treated as precious assets — emotionally, socially, and even economically. Unfortunately, this has also given rise to dark markets that trade in child abduction and resale. News of missing children no longer shocks us because it appears so frequently. Yet, each case is a tragedy that reflects society’s collective failure to protect its most vulnerable members. Primary schools, too, carry a moral responsibility. Education must go beyond textbooks; it must include lessons in safety, awareness, and discernment. Teachers and administrators should be trained to recognize behavioral signs of DSED and to handle children with extra care. Police forces, on their part, need specialized units to investigate child theft and trafficking. Coordination between parents, schools, and law enforcement can form a strong barrier against such crimes. However, Disinhibited Social Engagement Disorder is not confined to childhood alone. If we look closely, even adults sometimes exhibit similar behavior — especially in politics. We trust leaders too easily, accept promises without verification, and follow slogans without questioning motives. Like children who believe every stranger’s smile, we, too, fall prey to charm and rhetoric. Our misplaced faith and lack of critical thinking make us politically “disinhibited.” In that sense, DSED becomes a mirror reflecting the psychological state of society at large. Ultimately, the disorder reminds us of two truths: that innocence, while beautiful, must be guided; and that trust, while essential, must be earned. Protecting children from emotional and physical harm begins with awareness — and perhaps, protecting our collective integrity as adults begins with it too. "Images of the Times" https://www.amazon.in/dp/B0DWLSSBQJ #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
திரைபாரதி
629 views
5 months ago
அண்ணே! இது பிளாக் மெயிலா? சர்வாதிகாரமா? "வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு." அப்படியானால்- "எமது திறமையான ஊழலற்ற ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்" என்ற உங்களுடைய "காலங்களைக் கடந்த" வசனம் பொய்யாகிவிட்டதே! இல்லை - தெரியாமல்தான் கேட்கிறோம், மேற்கண்ட வசனம் உண்மையாக இருந்தால், "தோற்றால் பதவி பறிப்பு" என்ற எச்சரிக்கை எதற்கு? உங்களின் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால் உங்களை மக்கள் எப்படி நம்புவார்கள்? "சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும்" என்று சொல்லாடல் ஒன்று உண்டு. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, இப்போது உங்களுடைய செயலாளர்களின் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது துரதிருஷ்டம்! "என்னத்த" கன்னய்யா: வேறே என்னத்தைச் சொல்றது? #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
திரைபாரதி
804 views
5 months ago
The Super Powers and Supermen In the modern world, political and economic power is not evenly distributed; it is organized, concentrated, and strategically aligned. Major international blocs such as the European Union (EU), BRICS, and Quad dominate discussions about trade, and diplomacy. Alongside them stand geopolitical alliances like NATO and the Shanghai Cooperation Organization (SCO) — each representing a different vision of global order. But beyond political strategy and military strength, there also exist cultural and heritage-based unions such as the African Union, the Arab League, ASEAN, and the Five Eyes Alliance—all built on shared history, geography, or ideology. The African Union unites 55 countries in pursuit of continental peace and economic progress, symbolizing Africa’s dream of self-sufficiency. The Arab League, with 22 member nations, connects the cultural and linguistic identity of the Arab world while attempting to find a collective political voice. ASEAN, in turn, represents Southeast Asia’s experiment in regional harmony, balancing between the giants of the East and the West. Meanwhile, the Five Eyes Alliance, composed of the English-speaking democracies of the United States, United Kingdom, Canada, Australia, and New Zealand, has evolved into one of the world’s most powerful intelligence-sharing networks. The saying “Birds of the same feather flock together” fits these alliances perfectly. Yet, beneath the surface of solidarity lies a different reality. Most of these organizations are subtly—or sometimes overtly—controlled by superpowers. The United States, Russia, and China have learned the art of using international institutions not merely for cooperation, but for dominance. Smaller nations, dependent on these powers for trade, technology, or defense, are often forced to align with their patrons, even when such alignment compromises their sovereignty. Economic aid, loans, and infrastructure projects become tools of influence. In many cases, diplomacy has become another form of dependency. Under these circumstances, globalization appears less as a unifying process and more as a sophisticated illusion. While the word implies openness, in practice it conceals competition and coercion. The superpowers compete for control over vital sea routes, energy corridors, and rare natural resources. They establish military bases in weaker nations under the guise of protection. What was once called globalization now resembles territorialization — a silent race to occupy, control, and command. The noble ideals of liberalization and free trade have also lost their essence. Markets may appear open, but tariffs, sanctions, and digital surveillance have created invisible borders. Every nation talks of cooperation, but every major power acts in self-interest. Control over land, cross-border rivers, and strategic waterways has become more important than peace itself. The world has thus entered a new phase of controlled chaos, managed by a few hands and justified by many mouths. And now, at the helm of these superpowers stand three men often described as supermen—charismatic, authoritarian, and unyielding. They represent strength to their followers, but fear their opponents. Each seeks to expand his nation’s sphere of influence while projecting an image of invincibility. But can the world truly progress when led by men obsessed with power? The wars in Palestine and Ukraine continue to bleed humanity, while several African and South American countries remain trapped in internal conflicts. Peace conferences and summits produce resolutions, not results. The global stage today looks less like the United Nations and more like a United Contest — where every nation must choose a side, or risk being sidelined. Super powers and supermen may dominate the world’s headlines, but they cannot dominate history forever. Empires rise and fall, yet the human desire for fairness, equality, and peace endures. Perhaps the real superman is not the ruler who commands armies, but the ordinary citizen who refuses to submit to injustice. When that realization dawns collectively, the world may finally become what globalization once promised — a shared home, not a divided battlefield. "Images of the Times" https://www.amazon.in/dp/B0DWLSSBQJ #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு