Iniya Iru Malargal

saravanan
932 views
14 days ago
#vaalkkay malargal மலர்கள்: மே 2 கவலை ஏன்? பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் என்பனவற்றில் பேராசை கொண்டு, கற்பனையால் சில வரவுகளை எதிர்பார்ப்பார்கள் அல்லது பிறரிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். செயலுக்குத் தக்க விளைவு என்பது இறையாற்றலின் திருவிளையாடலாக இருக்கிறது. இந்த உண்மையறியாமல் செயலின்றிக் கற்பனையால் ஒரு விளைவை எதிர்பார்ப்பதும், கடமைக்கும் உறவுக்கும் பொருந்தாமல் பிறரிடமிருந்துஒன்றை எதிர்பார்ப்பதோ அல்லது ஆசையின் பெருக்கத்தால் அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பதோ வெற்றியடைவதில்லை. இது இயற்கை நியதி. சிந்தனையின்றி இயற்கை நியதிப்படி அமைந்த விளைவுகளை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்பார்த்த ஆசையையும் அப்படியே வைத்துக் கொண்டு, ஏமாற்றத்தையும் ஒப்புக் கொள்ளாமல், ஏற்படும் மனப்பிணக்குதான் கவலை. இங்கு கடமைகளை ஒட்டி, செயல்களையொட்டித் திட்டமிட்ட விளைவுகளை எதிர்பார்ப்பது தவறாகாது. இது கடமையைச் சார்ந்ததாகும். கற்பனை எதிர்பார்ப்பும் நீதியான தோல்வியும் பற்றியே இங்கு சிந்திக்கிறோம். தோல்வி தான் இயற்கை நீதியென்று ஒப்புக் கொண்டால் தனது தவறு என்ற எதிர்பார்ப்புக் கலைந்து போகும். இந்த இரண்டையுமே ஒன்றோடு மற்றொன்றைச் சேர்க்காமல் வைத்துக் கொண்டு இரு நினைவுகளுக்கு மத்தியிலே மனதை வைத்துக் கொண்டு வருந்துவது தான் கவலை. எனவே, ஒருவர்படும் கவலையும் உள் ஒன்றிருக்கப் புறம் ஒன்று நினைக்கும் பொருந்தா மனநிலையே. இந்நிலையும் அறிவின் வளர்ச்சியைத் தடுக்கும். அறிவின் வளர்ச்சியுடைய உயிர்தான் ஆக்க வாழ்வு பெற முடியும். அறிவின் மதிப்புக் குறையாமல் உயிர் போனாலும் சரி அதை ஏற்றுக் கொள்வோம். அறிவு கெட்டு உயிர் நீடித்துப் பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு. - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹
saravanan
1K views
17 days ago
#vaalkkay malargal மலர்கள்: ஏப்ரல் 29 அறிவாட்சித்தரம் மனித இன வாழ்வில் விஞ்ஞானம் வளர்ந்திருக்கின்றது. விரைவான போக்குவரத்துச் சாதனங்களும், விரைவாகச் செய்திகள் பரவும் வசதிகளும் பெருகியுள்ளன. உலகில் எந்த மூலையில் எந்த இடத்தில் ஒரு மனிதனால், ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அது உலகில் எந்த மூலையில் வாழும் மக்களுக்கும் விரைவாகப் பரவும் வசதி பெருகியுள்ளது. பொருளாதாரம், அரசியல், மதம் என்ற மூன்று துறைகளாலும், மனித இன வாழ்க்கையும், பண்பாடும் ஒன்றிணைக்கப்பட்டும், பாதுகாக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும் வருகின்றன. இந்தச் சூழ்நிலைகளை மனதில் கொண்டு சிந்தித்துப் பார்த்தால், மனித இனத்திற்குப் பறித்துண்டு வாழும் முறை பொருந்தாது என்பதை உணரலாம். தேவையும் இல்லை. பழக்கப் பதிவுகளாலும், சிந்தித்துத் தெளிவு பெற்றுத் திருந்தி வாழ முடியாத தேக்கமுற்ற மனநிலையாலும், தேவையே இல்லாத துன்பமே விளைக்கும் தீய செயல்கள் மனித வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலைமை மாற வேண்டுமெனில், உலக அறிஞர்கள் பலர் கூடிச் சிந்தித்து. திட்டமிட்டு, கூட்டாகச் செயல் புரிய வேண்டியுள்ளது. உண்மையை விளங்கிக் கொள்ளவும், பழக்கப் பதிவுகளை மாற்றிப் பறித்துண்ணும் வாழ்விலிருந்து திருத்தம் பெறவும் உதவக்கூடிய ஆன்மீகக் கல்வி உலகமெங்கும் பரவ வேண்டும். முதலில் அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும், பொருள்துறைத் தலைவர்களும், கல்வித்துறைத் தலைவர்களும் பிரம்மஞானம் எனும் உயர் அறிவு பெற வேண்டும். ஏனெனில் இத்தகைய தலைவர்களுடைய வாழ்க்கை வழியையே துணைகொண்டும், அடிபற்றியும் மக்கள் வாழ்வு நடைபெற்று வருகிறது. பிரம்ம ஞானம் எனும் அறிவின் பேரொளிதான் மனிதனை முதலில் விலங்கினச் செயல் பதிவுகளிலிருந்து விடுவிக்கும். மேலும் புலன் கவர்ச்சிகளில் மயக்கமும், பறித்துண்ணல் என்ற தீயவினைப் பதிவுகளும் எந்த அளவில் குறைகின்றனவோ, அந்த அளவுக்குப் பிரம்ம ஞானம் தானாக ஒளிவிடத் தொடங்கும். படிப்படியாக, பிரம்மமே தானாக இருக்கும் “அறிவாட்சித் திறம்” உண்டாகும். - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹
saravanan
1.2K views
24 days ago
#vaalkkay malargal மலர்கள்: ஏப்ரல் 22 பற்றறிவு, கற்றறிவு, முற்றறிவு தூலம், சூக்குமம், காரணம் என்ற மூன்று சொற்களைக் கேட்டிருப்பீர்கள். இவற்றுள் தூலமாகியது உடல், சூக்குமகாகியது உயிர், காரணம் என்பது பிரம்மம் அல்லது மெய்ப்பொருள். இந்த உடலுக்கு மையப்புள்ளி, சுற்று வட்டம் இரண்டும் உண்டு. அதாவது உடலுக்கு எல்லை உண்டு. உயிருக்கும் மையப்புள்ளி உண்டு; ஆனால் அதனுடைய சுற்றுவட்டம் ஒரு எல்லைக்குள் அடங்காது. மெய்ப்பொருளுக்கோ மையப்புள்ளியும் இல்லை, சுற்று வட்டமும் இல்லை. அந்த உயிருக்கு மனமானது விரியும் போது அது பிரம்மம் வரையில் போவதனால் சுற்றுவட்டம் இல்லை. ஆனால் பிரம்ம நிலைக்கு மையப்புள்ளியும் இல்லை, சுற்று வட்டமும் இல்லை. இங்கு பிரம்மமே அறிவாக இருப்பதனால் அந்த பிரம்மம் என்ற நிலையிலே முற்றறிவு (Total Consciousness). அது உயிராக வந்ததனால் இயங்கிப் பெற்ற சுற்றறிவு (Character) இதுவரையில் இயங்கிப் பெற்ற பதிவுகள் அனைத்தையும் அடக்கமாகக் கொண்டது. அதற்கும் மேலே இந்த உடல் வரையில் நின்று புலன்கள் மூலமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது அது பற்றறிவு. இவ்வாறாகத் தானே பற்றறிவு, கற்றறிவு, முற்றறிவு என்று மூன்றாகச் சொல்லலாம். இந்த மூன்று நிலையிலும் எங்கேயும் இருப்பது அறிவு ஒன்றுதான்; இருக்கும் நிலைக்குத் தகுந்தவாறு, அதனுடைய தன்மைக்குத் தகுந்தவாறு வேறுபடுகின்றது. தெளிவினாலே, தவத்தினாலே, பல பிறவிகள் எடுத்த தொடர்பினாலே அவர்களுடைய Character இந்த மூன்று நிலையிலே எங்கே வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால், விகிதாச்சாரம் என்ன? அந்தந்த இடத்தில் ஏற்பட்ட பதிவு அழுத்தம், வலுவு எந்த விகிதாச்சாரத்தில் இருக்கிறதோ அந்த அளவு அதிகமாக இருக்கும். - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹
saravanan
1.2K views
1 months ago
#vaalkkay malargal மலர்கள்: ஏப்ரல் 6 எண்ண அலைகள் இயற்கையை உணர்ந்து அறவழி ஒழுகி அறியாமையைத் தீய்க்க வல்ல ஒரு மதிப்புள்ள உயர் மனிதனாக இருந்தும் தன் தகைமையும், இயற்கையாற்றலின் இயக்க நியதியும் அறியாமல், மனிதன் தனது எண்ண ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். தன் தேவை, தற்கால இன்பம் என்ற அளவில் குறுகி உணர்ச்சி வயமாகிப் பிறர்க்கும், பிற்காலத்திற்கும் தீமை விளைவிக்கும் வகையில் செயல் புரிகிறான். பிறரைத் தாக்கி தீமை விளைவிக்கும் எண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்கிறான். தன்குடும்பம், சமுதாயம், வேறு நாட்டு மக்கள் இவர்கள் மேல் சினம், வெறுப்பு, பகை கொண்டு அவன் எண்ண அலைகள் எப்போதும் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறான். இவ்வெண்ண அலைகள் அணு ஆற்றலாகவே பரவி, மனித இன உடல்களிலும், மூளையிலும் பொருந்தா உணர்வுப் பதிவுகளாகவும்அமைகின்றன. இப்பதிவுகளைப் பாவப் பதிவுகள் என்றும் சாபம் என்றும் அறிவறிந்த முன்னோர்கள் கூறியுள்ளனர். இயற்கை நியதியறியாமை என்ற மருளால் மனிதன் மனிதனுக்குப் பகையாகி பொதுவாக, சமுதாயமே சாபத்துக்குள்ளாகின்றது. ஒவ்வொருவரும் பிறருக்குத் துன்பமளிக்க வேண்டும் என்று விரும்புவதும், அதற்குத் துணிந்து செயல்புரிவதும், பெரும்பாலான மக்களிடம் இயல்பாக வளர்ந்து வருகின்றது. மனித எண்ண ஆற்றல் இயற்கை ஆற்றலின் ஒரு பகுதி இயக்கமே என்று முன்னரும் விளக்கியிருக்கின்றேன். அதன் விளைவு என்னவாகும்? மனித குல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும் பெருகும். இயற்கைச் சீற்றம், போர், மழையின்மை இவ்வாறாக இயற்கை ஆற்றலும், மனித ஆற்றலும் கூடி மனித எண்ண ஆற்றலால் தீய விளைவுகளாகின்றன. மனிதன், மனிதன் மதிப்பை உணர்ந்து பிறர்க்குத் துன்பமளிக்காமலும், இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும், எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்று மனமார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹
saravanan.
818 views
3 months ago
#vaalkkay malargal மலர்கள்: பிப்ரவரி 12 அன்பும், கருணையும் இயற்கையை ஆராய்ந்து பார்த்தால் அன்பும், கருணையும் தான் எங்கும் எதிலும் அமைந்திருக்கக் காணலாம். அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ, மனத்தாலோ தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது. அப்படி இணைந்துள்ள மற்றொன்றுக்குத் தனது ஆற்றலைத் தொடர்ந்து அளித்துக் காத்து வருவது கருணை. ஒரு முட்டையைப் பாருங்கள். அதிலுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றிணைத்து அதன் ஓடு பிடித்துக் கொண்டிருக்கிறது. இது அன்பு. முட்டைக்குள்ளிருக்கும் மஞ்சட்கருதான் குஞ்சு ஆக உருவாக இருக்கிறது. அந்த மஞ்சட்கருவுக்கு அதனைச் சுற்றியுள்ள வெள்ளைக்கரு தேவையான எல்லாப் பொருட்களையும் அளித்து நலமளிக்கிறது. இதுபோன்றது கருணை. ஒரு மாமரத்தில் பிஞ்சு விடுகிறது. அதனைச் சிறு காம்பின் மூலம் விழுந்து விடாமல் மரமானது பிடித்துக் கொண்டிருக்கிறது. இது அன்பு. அவ்வாறு பிடித்துக் கொண்டே பிஞ்சு வளர்வதற்குத் தேவையான ரசாயண நீரை அந்த மரம் பாய்ச்சிக் கொண்டே இருக்கிறது. அதுதான் கருணை. உயிரினங்களில் ஒரு குழந்தையைப் பெற்ற தாய் அதனை எப்போதும் தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டோ அல்லது அது பிரிந்து போய்விடாமல் கண்காணித்துக் கொண்டோ இருக்கிறாள் இது அன்பு. அதே காலத்தில் அந்தக் குழந்தை வளர்வதற்கும், வாழ்வதற்கும் தேவையான பால், உணவு இவைகளை அது வளர்ச்சி பெறும் வரையில் ஊட்டிக் கொண்டே இருக்கிறாள். இது கருணை. - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹
saravanan.
856 views
3 months ago
#vaalkkay malargal மலர்கள் - பிப்ரவரி 11 மனித நேயம் இன்றைய வாழ்க்கை நிலையைக் கவனிக்கும்போது நாம் தெரிந்தோ, தெரியாமலோ சில கருத்துக்களை நம் மனத்தில் பதிய வைத்துக் கொள்ளுகிறோம். நட்புறவை வளர்க்கும் சில கருத்துக்களை ஏற்று வருகிறோம். அதோடு சில வெறுப்புணர்ச்சியூட்டும் கருத்துக்களையும் நாம் பதிவு செய்துகொண்டு வருகிறோம். மொத்தத்தில் பார்த்தால் உலகில் நட்புணர்ச்சியைவிட வெறுப்புணர்ச்சி தான் அதிகமாகக் காணப்படுகிறது. கட்சிப்பற்று காரணமாக, சாதிப்பற்று காரணமாக, நாட்டுப்பற்று, குடும்பப் பற்று காரணமாகவும் வெறுப்புணர்ச்சியே வளர்க்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். இந்த வெறுப்புணர்ச்சி பெரிதும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே எழக் காண்கிறோம். ஒருவர் செய்கிற காரியமோ, பேசுகிற பேச்சோ நமக்குப் பிடிக்காத காரணத்தால் கோபம் எழும்போதே அது மூளையிலுள்ள சிற்றறைகளைத் தாக்கி வெறுப்புணர்ச்சியைப் பதிவு செய்துவிடுகிறது. கணவன் – மனைவி உறவில் இவ்வித வெறுப்புணர்வு ஏற்பட்டுவிடுமானால் அந்தக் குடும்பத்தில் ஒருபோதும் அமைதி இருக்காது. ஒருவரை ஒருவர் சபித்துக் கொள்வதாகத்தான் இருக்கும். ஆனால், இதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. இதனால் ஒருத்தருக்கொருத்தர் தமக்கே தம் குடும்பத்திற்கே தீமை விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும்; மதித்து நடக்க வேண்டும். கூடுமானவரை ஒருவரை ஒருவர் எப்போதும் வாழ்க! வாழ்க! என்று வாழ்த்திக் கொண்டே இருக்கவேண்டும். அப்போது தான் நேசம் வளரும்; வெறுப்பு நீங்கும்; நன்மை ஏற்படும். - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹
saravanan.
846 views
3 months ago
#vaalkkay malargal மலர்கள்: பிப்ரவரி 2 இனிமையான வாழ்வுக்கு இன்றியமையாத சாதனம் மனித வாழ்வுக்கு இறையுணர்வு மிகவும் அவசியமானது. இறையுணர்வு என்பது நம்பிக்கை. அது என்ன நம்பிக்கை (Faith) என்றால் “ஒரு பெரிய சக்தியானது பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது; அது என்னுள்ளும் இருக்கத்தான் வேண்டும்; நான் பிறப்பதற்கு முன்னேயும் இருந்தது, எனக்குப் பின்னலேயும் இருக்கும். அந்த சக்தி முன்னும் பின்னுமாக எல்லா இயக்கங்களையும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்றால், இப்பொழுதும், எப்பொழுதும் அது ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டுதானே இருக்கும்” இவ்வாறு நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி முழுமையாக இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையின் மேல் செயல்களை ஒழுங்கு செய்து கொள்வதுதான் “மதம்” (Religion) என்பதாகும். அதற்கும் மேலாக எவ்வாறு அந்தப் பரம்பொருள் நிறைந்த ஒன்று, மாறாத ஒன்று, எல்லாவற்றையும் சரியாக இயக்கிக் கொண்டிருக்கிறது, அது நமக்குள்ளாக எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது, நாமாக எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்து, அதிலேயே உறைந்து, அதுவே தானாக, தானே அதுவாக இருப்பது தான் “ஞானம்”. - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹