sarvam maya

saravanan
706 views
25 days ago
#🕉️🔱சர்வம் சிவா மாயம்🔱 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥. *ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்கள்* ! - அதிசயமும் அருளும் நிறைந்த கனககிரீசுவரர் திருக்கோயில். 🛕✨ ஆன்மீக அன்பர்களே... திருவண்ணாமலை மாவட்டத்தில் நாம் தரிசிக்க வேண்டிய ஒரு அற்புதமான தலம் தேவிகாபுரம் கனககிரீசுவரர் திருக்கோயில். இந்த ஆலயத்தின் சில வியக்கத்தக்க சிறப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்: 🌟 அதிசய கருவறை: எங்குமே காண முடியாத தனிச்சிறப்பாக, இக்கோயிலின் கருவறையில் இரண்டு சிவலிங்கங்கள் அருகருகே வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். ⛰️ 365 படிக்கட்டுகள்: சுமார் 500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைக்கோயிலுக்குச் செல்ல 365 படிகள் உள்ளன. ஆண்டின் ஒவ்வொரு நாளையும் ஈசனின் நினைவோடு கடக்க வேண்டும் என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது. 🌸 சக்தி பீடம்: தேவியின் அருள் நிறைந்த சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழும் இத்தலத்தில், கீழே பெரியநாயகி அம்மன் தனி சன்னதியில் பிரம்மாண்டமாக வீற்றிருக்கிறார். 🕉️ பலன்கள்: * மன அமைதி தேடுபவர்களுக்கு இது ஒரு சொர்க்கம். திருமணத் தடை மற்றும் புத்திர பாக்கியம் வேண்டுவோரின் முக்கியப் பிரார்த்தனைத் தலம். பவுர்ணமி கிரிவலம் இங்கும் மிகவும் விசேஷமானது. விஜயநகரப் பேரரசு காலத்துச் சிற்பக்கலை அமைதியுடன் கூடிய ஆன்மீக அதிர்வுகளை உணர ஒருமுறையாவது தேவிகாபுரம் வாருங்கள்! 🙏 அமைவிடம்: தேவிகாபுரம், போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.
saravanan.
671 views
3 months ago
#🕉️🔱சர்வம் சிவா மாயம்🔱 . 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨 காட்டேரி அம்மன், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வழிபடப்படும் பழமையான கிராம காவல் தெய்வம். கட்டேறு / காட்டேரி என்ற சொல் காடு, எல்லை, காவல் என்ற பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. காட்டேரி அம்மன் பயமுறுத்தும் தெய்வம் அல்ல; எல்லை மீறினால் எச்சரிக்கும் காவல் சக்தி.” இயற்கையை மதிக்க, ஊர் ஒழுக்கத்தை காக்க, பலவீனர்களை பாதுகாக்க, உருவான கிராம வழிபாடு தான் கட்டேரி அம்மன். “தெய்வம் பார்க்கிறது” என்ற நம்பிக்கை மூலம்... சமூக கட்டுப்பாடு , ஒழுங்கு, இயற்கைக்கு மரியாதை, ஊர் ஒற்றுமை நிலைக்க இந்த பயம் கலந்த பக்தி நல்வழிபடுத்துகிறது ! மக்கள் வழக்கே பிரதானம் பூஜை முறை. கருவாடு, கறி சாதம் , முட்டை, கோழி ,ஆடு போன்றவையே காட்டேரிக்கு இஷ்ட படையல். சில ஊர்களில் பன்றியும் பலியிடுவார்கள். கிராம குலதெய்வ ஆலயங்களில் காட்டேரி ஓர் உப தெய்வமாக தனி சன்னதி கொண்டிருப்பாள். சிலருக்கு காட்டேரியே குலத் தெய்வமாக விளங்குகிறாள். இரவு நேரங்களில் அலறல் , கனவுத் தொல்லை, பேய் பிடிப்பு போன்ற துயரில் இருந்து நீங்க காட்டேரிக்கு வேண்டிக்கொண்டு ,பூசாரிடம் விபூதி வாங்கி பூசும் பழக்கம் கிராமங்களில் உண்டு. தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கவும், நோய்களைக் குணப்படுத்தவும், குழந்தைகளுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் உடல்நலக் கோளாறுகளை நீக்கவும் காட்டேரி அம்மனை வழிபடுவது வழக்கமாக உள்ளது. தமிழகம், இலங்கை மட்டுமல்லாது, பழங்காலத்தில் புலம்பெயர்ந்த பூர்வீக தமிழர்கள் ...குடியேறிய நாடுகளில் (திரினிடாட், கயானா, ஜமைக்கா, மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா) இன்றளவும் காட்டேரி வழிபாட்டை தொடர்ந்து வருகிறார்கள் என அறிய முடிகிறது. ஹரி ஓம் மஹா காளி 🟨🕉️. 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨
saravanan.
4.3K views
4 months ago
#🕉️🔱சர்வம் சிவா மாயம்🔱 . 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨 மயிலாப்பூர் ஆஞ்சநேயர் திருவள்ளுவர் கோயிலுக்கு அருகில் ஒரு பிரபலமான ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரிக்கு அருகிலுள்ள பகவான் ஆஞ்சநேய சுவாமி கோயில் சென்னையின் பழமையான ஆஞ்சநேயர் கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில் நாற்பது மற்றும் ஐம்பதுகளில் "தண்ணீர் துறை ஆஞ்சநேயர் கோயில்" என்று பிரபலமாக அறியப்பட்டது, ஏனெனில் இந்த கோயில் "தண்ணீர் துறை" காய்கறி சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது. அந்த நாட்களில் சென்னை முழுவதும் ஆஞ்சநேயருக்கு பிரத்யேகமாக மிகக் குறைவான கோயில்கள் மட்டுமே இருந்தன. தற்போது மைலாப்பூரில் மூன்று ஆஞ்சநேயர் கோயில்கள் இருப்பதால் இந்த கோயில் லஸ் ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறது. பல வழிகளில் தனித்துவமானது: இந்தக் கோயிலின் பகவான் ஆஞ்சநேய சுவாமி பல வழிகளில் தனித்துவமானவர். பிரம்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர், ஸ்ரீ கிருபானந்த வாரியார் போன்ற பல அறிஞர்கள் இந்தக் கோயிலுக்கு அருகிலுள்ள சமஸ்கிருதக் கல்லூரியில் ராமாயணம் குறித்து சொற்பொழிவு ஆற்றியுள்ளனர். ராமநாமம் எங்கு எழுதப்பட்டாலும் அங்கு இருக்கும் பகவான் ஆஞ்சநேய சுவாமி, கோயிலிலிருந்தே ராமாயணத்தைக் கேட்டுள்ளார். 🟨🕉️. 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨
saravanan.
15.7K views
4 months ago
#🕉️🔱சர்வம் சிவா மாயம்🔱 . 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨 *சோழபுரம் பைரவர் ஆலய தரிசனம்*.. மிகப்பழமையான ஆலயம் ஊரெங்கும் இருக்கும் 64பைரவர்களையும் ஒரே சமயம் வணங்குவது சாத்தியமா? சாத்தியம் தான். பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் மூல மூர்த்தியான சிவனே பைரவேஸ்வரர் எனும் பெயரில் கோயில் கொண்டுள்ள தலம். அது தான் கும்பகோணம்- சென்னை சாலையில் 13கிமி தூரத்தில் உள்ள சோழபுரம் .இதன் பழைய பெயர் பைரவபுரம்.இங்கு ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய சிவலிங்கத் திருமேனியைத் தரிசனம் செய்வதால் பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் மூர்த்தியாக பைரவேஸ்வரராக ஈஸ்வரன் தோன்றிய தலம். இத் தலத்தில் நிறைய மகான்கள் சித்தி அடைந்துள்ளனர், இக்கோவிலில் அஷ்ட புஜ பைரவர் சிலை உள்ளது , இங்கு 64 பீடங்கள் உள்ளது இந்த 64 பீடங்களிலும் 64 பைரவர்களும் அமர்ந்து பூஜையும் , தியானமும் செய்வதாக நம்ப படுகிறது , ராமாயண காலத்தில் ராவணன் கடுமையாக தவம் இருந்து நவகிரகங்களை கட்டி போட்டான், நவகிரகங்களில் சக்தி வாய்ந்த சனி பகவானும் செய்வதறியாமல் திகைத்தார் . இத்தல ஸ்ரீ பைரவேஸ்வரிடம் தன் கடமையை செய்ய உதவி செய்யுமாறு வேண்டினார், இத்தலத்தில் அவருக்கு குளிகன் ( மாந்தி ) என்னும் மகன் பிறந்தார் .குளிகன் பிறந்த அந்த நேரமே ராவணன் அழிவு காலம் என்று ஸ்ரீ ராமர் போர் தொடுத்து ராவணனை அழித்தார் என்று தல புராணம் சொல்கிறது பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் இங்கு பைரவ யோக முறையில் தவம் செய்துள்ளார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதிமூலம் இந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் தான். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம். பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்கு தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்து செல்கிறார்கள். இந்த பைரவரை வழிபட்டால், பித்ரு தோசம், பித்ரு சாபங்களில் பல வருடங்கள் பாதிக்கப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமலிருப்பவர்களும், பில்லி, சூன்யம்,செய்வினை,ஏவல்,மாந்திரீகம் போன்ற பிரச்சினைகளும் அகலும். தேய்பிறை, அஷ்டமியில் மாலை நேரம் அபிஷேக அலங்காரங்களுடன் வழிபாடு நடத்தப்படுகிறது. தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் சனிக்கு குருவாக விளங்குபவரர் இந்த பைரவர் தான் அதனால் சனிக்கிழமை சிறப்பு கால தேவன் என்று அழைக்கப்படுபவர் ஸ்ரீமஹா காலபைரவப் பெருமான்! இவரை பல கோடி ஆண்டுகளாக தியானித்து பைரவ சித்தராக ஆனவர்தான் ஸ்ரீ வாரதாரகர் என்ற சித்தர் ஆவார்; ஆலயமூர்த்திகள் .... கருவறையில் இறைவன் பைரவேஸ்வரர் பெரிய லிங்கமாக கம்பீரத்துடன் உள்ளார், இறைவி தென்புறம் நோக்கியபடி உள்ளார். கருவறை வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் மாடங்களில் உள்ளனர். கருவறை கோஷ்ட்ட தெய்வங்களாக விநாயகர், நடராஜர், கங்காளமூர்த்தி, தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், ஆலிங்கன மூர்த்தி, துர்க்கை, அஷ்டபுஜ பைரவர் ஆகியோர் உள்ளனர். 🟨🕉️🟨🕉️🟨🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊶⊷⊷❍ 𝑴K ❍⊶⊶⊷✶* 🟨🦚🟨🦚🟨🦚🟨
saravanan.
743 views
4 months ago
#🕉️🔱சர்வம் சிவா மாயம்🔱 . 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨 யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீ நிறைந்தாய்; தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ; பூத மைந்தும் ஆனாய்-காளி!-பொறிக ளைந்தும் ஆனாய்; போத மாகி நின்றாய்-காளி!-பொறியை விஞ்சி நின்றாய் தில்லை காளி என்கிற பெயரிலேயே உக்கிரமாக அமர்ந்த மூர்த்தி! கருவறை புகைப்படம் பிடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் நிம்மதியான தரிசனம் நண்பர்களும் பெற பகிர்கிறேன்! 🟨🕉️. 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨
saravanan.
676 views
5 months ago
#🕉️🔱சர்வம் சிவா மாயம்🔱 . 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨 *திருப்போரூர் அருகே உள்ள தையூர்: அழகீஸ்வரராய் அருளும் ஈசன், வழக்குகளில் வெற்றி தரும் முருகன்....* சென்னை - பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது தையூர். காரப்பாக்கத்திலிருந்து சுமார் இரண்டரை கி.மீ. தொலைவிலும் மகாபலிபுரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது. வைகாசி விசாகத்தன்று இங்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் கலந்துகொள்ளும் திருமணமாகாத இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், மாசி சிவராத்திரி ஆகியவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயம் காலை 7:30 முதல் 9:30 மணி வரையிலும்; மாலை 6 முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். 😯😟😯😟😯 திருச்செந்தூரில் முருகப்பெருமான் சிவபெருமானை யுத்தம் முடிந்தபின் வழிபட்டார். அவரே யுத்தம் தொடங்கும் முன் வழிபட்ட தலம் தையூர். முருகப்பெருமான், திருப்போருரிலே தாரகாசுரனுடன் வான் மார்க்கமாக போரிடுவதற்கு முன்பாக, இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்கிறது தலபுராணம். திருவையாறு, திருமயிலை போல இவ்வூரிலும் சப்த சிவத்தலங்கள் இருந்திருக்கின்றன என்றால் இத்தலத்தின் மகிமையை என்னவென்று சொல்வது?! `தை' என்றால் அலங்காரமான என்று பொருள் கொள்ளலாம். இங்குள்ள ஈசன் அழகீஸ்வரர் என்ற திருநாமத்தோடே அருள்பாலிக்கிறார். பெயருக்கேற்ப இங்கே ஈசனின் திருக்கோலம் நம் மனதை மயக்குகிறது. சந்நிதியில் நின்ற கணத்தில் நம் மனதில் கவலைகள் எல்லாம் பறந்து மனம் இலகுவாகிறது. இதையே தமிழில் மிக அழகாக, 'முருகீஸ்வரர்' என்கிறார்கள். ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று இந்த ஈசனை `அழகிய சொக்கனார்' என்று குறிப்பிடுகிறது. முற்காலத்தில் நிலவளமும் நீர்வளமும் நிறைந்த அற்புதபூமியாகத் திகழ்ந்திருக்கிறது இந்த தையூர். கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் புகழ்பெற்ற திருக்கோயில் திருவிடந்தை நித்தியகல்யாண பெருமாள் கோயில். இந்த ஆலயத்தில் தையூர் அழகீஸ்வரர் கோயில் குறித்த 6 கல்வெட்டுகள் முக்கியமானவை. அவற்றில் மூன்று கல்வெட்டுகள், முதலாம் ராஜராஜன் காலத்திற்கும் முற்பட்டவை. அவற்றில் இவ்வூர் `தலசயனபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது. ஆலய முகப்பில் உள்ள மண்டபத் தூணில் முருகன் மயில் மீது ஏறி, வில் அம்போடு போர் புரிய புறப்படும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. பிற்கால பல்லவர்கள் காலத்தில் இவ்வாலயம் கட்டப்பட்டதற்குச் சாட்சியாக, இங்கிருக்கும் பிள்ளையார் மற்றும் சண்டிகேஸ்வரர் திருமேனிகள் காட்சியளிக்கின்றன. மூலவர் முருகீஸ்வரர், கிழக்கு நோக்கிய கருவறையில் காட்சியளிக்கிறார். கருவறை முகப்பில் இரு புறமும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில், ஆலயத்தில் நந்தா விளக்கு வைத்தவர்களின் உருவங்களும் செதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கருவறை முகப்பு, அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் வியாக்கிரபாதரின் உருவம் காணப்படுகிறது. விமானம் ஒரு கோபுரத்தைப் போல் மூன்றடுக்கு கொண்டதாக விளங்குகிறது. மகா மண்டபத்தில் மணல் கல்லாலான முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். மணல்கல்லுக்கு `தைஜகம்' என்று ஒரு பெயருண்டு. இந்த முருகனை வழிபட்டால் பகைவர் பற்றிய பயம் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும் என்கிறார்கள். மேலும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. தொடர்ந்து 9 திங்கட்கிழமைகள் இவரை வழிபட்டுவந்தால் கடன் பிரச்னைகள் விலகி செல்வ வளம் சேரும் என்பதும் நம்பிக்கை. முருகனைச் சுற்றி தேவியர், சண்டிகேஸ்வரர், மற்றொரு முருகன், மகாவிஷ்ணு, பராசக்தி, காலபைரவர், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர். அம்பாள் மரகதாம்பிகை, தனிச் சந்நிதியில் அருள்கிறாள். பக்தர்களை நாடிச் சென்று அருள்புரிவதில் இந்த அம்பிகைக்கு நிகரில்லை. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மணிக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. ஓரு நாள் அந்தப் பெண்ணின் கனவில் தோன்றிய மரகதாம்பிகை, 'தையூருக்கு வந்தால், குழந்தை வரம் தருவேன்' என அருளியிருக்கிறாள். இங்கு வழிபட்டுச் சென்ற ஓர் ஆண்டில் அப்பெண்ணுக்கு இரட்டைக் குழ்ந்தைகள் பிறந்தனவாம். தையூரைப் பற்றிய பண்டைய தகவல்கள், `உத்தண்டன் கோவை' எனும் சிற்றிலக்கிய நூல் வாயிலாக வெளிப்படுகின்றன. இது பல பகுதிகளாகச் சுவடி வடிவில் கிடைத்ததனால், இதன் ஆசிரியர் யாரென உறுதிபட அறியமுடியவில்லை. உத்தண்டன் என்பவன் இந்தப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன். இவன் காலத்தில் இவ்வூர் எத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்தது என்பதை இந்நூல் குறிப்பிடுகிறது. 🟨🕉️. 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨
saravanan.
3K views
5 months ago
#🕉️🔱சர்வம் சிவா மாயம்🔱 . 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨 *அருள்மிகு சிங்காண்டீஸ்வரர் திருக்கோயில், திருவூர்*. இறைவன் : சிங்காண்டீசுவரர் இறைவி : உத்பலாம்பிகை விருட்சம் : வில்வம் தீர்த்தம் : முனி (ரிஷி) தீர்த்தம் ஆகமம் : சிவாகமம் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் இருப்புப் பாதையில் செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது திருவூர் என்னும் கிராமம். தன் பெயரிலேயே "திரு" என்ற அடைமொழியைக் கொண்ட இந்த ஊரில் மிகப் பழைமையான அருள்மிகு சிங்காண்டீசுவரர் திருக்கோயில் உள்ளது. புனிதமான "கூவம்" நதிக்கரை யின் வடகரைத் தலமாக இத்தலம் அமைந்துள்ளது. கூவம் நதியில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் திருத்தலம் அமைந்துள் ளது. திருக்கோயிலில் உள்ள லிங்கம் "ரிஷ்ய சிருங்கர்" என்ற முனிவரால் அமைக்கப்பட்டு வணங்கப்பட்டதால் இந்த லிங்க மூர்த்திக்கு "சிங்காண்டீஸ்வரர்" என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. இத்தலத்தின் அம்பிகை "உத்பலாம்பிகை" என்று வணங்கப்படுகின்றார். ரிஷ்ய சிருங்கரால் இறைவனுக்கு நீராட்டு செய்ய அமைக்கப்பட்ட தீர்த்தம் " முனி (ரிஷி) தீர்த்தம்" என்று வழங்கப்படுகின்றது. ஆனால், இந்த தீர்த்தம் பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது. தல விருட்சமாக ஈசனுக்கு உகந்த வில்வம் உள்ளது. இக்கோயிலின் கருவறையில் ஈசன் சிங்காண்டீசுவரர் கிழக்குத் திருமுகமாக பக்தர்களுக்கு திருக்காட்சி அளிக்கின்றார். ராஜகோபுர வாயிலை அடுத்து மகா மண்டபமும், முன் மண்டப மும் உள்ளன. மகா மண்டபத்தில் உள்ள தூண்கள் அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் சோழர் மற்றும் பிற்காலப் பாண்டியர் களின் கலைத்திறனுக்குச் சான்றாக அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் இத்திருக் கோயிலைச் சார்ந்த துர்க்கை, பைரவர், விஷ்ணு போன்ற சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுகளில் இறைவனது திருநாமம் "ரிஷ்ய சிங்கீசுவரர்" எனவும் இத்திருத்தலம் "பெருமளையூர்" எனவும் வழங்கப்பட்டுள்ளது. இப்பெருமளையூர் தற்போது "பெருமாள்பட்டு" என்று மருவி வழங்கப்படுகினறது. இக்கல்வெட்டின் மூலம் "உலகளந்த சோழ சதுர்வேதி மங்கலமான பெருமுளையூர்" ஈக்காடு கோட்டத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகின்றது. பிற்காலப் பாண்டியர்களின் திருப்பணி முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு தொடங்கி தெலுங்குச் சோழ மன்னனான விஜய கண்ட கோபாலன் கல்வெட்டு மற்றும் விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகள் வரையில் மொத்தம் 12 கல்வெட்டுத் தொடர்கள் இத்தலத்தில் உள்ளன. கிபி 13- ஆம் நூற்றாண்டில் இப்பகுதி முழுவதும் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. சோழ மன்னர்களின் பலம் குறைந்த பின் மதுரையை ஆண்ட பாண்டியர்கள், சோழ மன்னர்களை வெற்றி கொண்டு இந்தப் பகுதிகளை தங்களது ஆட்சி எல்லைக்குள் கொண்டு வந்தனர். அக்காலத் தமிழகத்தின் வடக்கு எல்லையான திருவேங்கடம் வரை உள்ள நிலப்பகுதிகள் பாண்டிய மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவர்களின் ஆட்சிக் காலத்தில் தங்கள் பங்குக்கு இப் பகுதிகளில் உள்ள பல கோயில்களை புதியதாக நிர்மாணித்தும் செங்கல் தளிகளை கற்றளியாகப் புதுப்பித்தும் திருப்பணி செய்தனர். முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி. 1251-1284) கி.பி. 1261-ல் திருவூர் கோயில் கற்கோயிலாகத் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதனை "ஒழுகரை" எனப்படும் குலோத்துங்க நல்லூரைச் சார்ந்த திருவண்ணாமலை உடையான் என்பவன் கட்டியுள்ளான். இவன் "வெண்பையூர்" என்றும் "துகடூர்" என்றும் வழங்கப்படும் இடத்தின் தலைவன் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதே மன்னனின் ஆட்சி ஆண்டைச் சார்ந்த மற்றொரு கல்வெட்டில் இவன் "மலையன் திருவண்ணாமலை உடையான்" என்றும் வழங்கப்பட்டுள்ளான். இம் மன்னனின் 18- ஆவது ஆட்சி ஆண்டில் ஒழுகரையைச் சார்ந்த "குலத்தறையன்" ஆகிய "பெரியாண்டவன்" என்ற வணிகன் இக்கோயிலுக்கு நிலத்தினை தேவதானமாக அளித்துள்ளான். பாண்டிய மன்னர்களின் காலத்தில் திருவூர் கோயில் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றுள்ளன. பாண்டிய மன்னர்களுக்குப் பின்னர், தெலுங்குச் சோழ மன்னனான விஜய கண்ட கோபாலனின் 18 -ஆம் ஆட்சியாண்டில் இக்கோயில் கணக்குகள் பிச்சாண்டவனான வில்லவரையன் என்பவனால் சரி செய்யப்பட்டுள்ளன. அப்போது "அயத்தூர்" என்ற தேவதான கிராமம் இம்மன்னனின் 17 ஆம் ஆட்சி ஆண்டு வரை கோயில் கணக்கில் விடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைச் சரி செய்ததுடன், அதிலிருந்து கிடைத்த வருவாயைக் கொண்டு இத்திருக்கோயிலில் சித்திரை மாதத்தில் "சித்திரைத் திருவிழா" நடத்த பயன்படுத்தப்பட்டுள்ளதை யும் கல்வெட்டுகள் தெரிவிக் கின்றன. கோயிலின் நுழைவு வாயிலில் உள்ள விஜயநகர அரசர் சாளுவ வம்சத்தினைச் சார்ந்த திம்மைய தேவரின் கல்வெட்டில் இவருக்கு முன்னர் ஆட்சி புரிந்த திப்பைய தேவரின் நினைவாக கி.பி. 1502- ஆம் ஆண்டு இவ்வூர் பொது மக்களும், கேசவராயன் என்பவனும் நியாயக் கட்டணமாக அளிக்க வேண்டிய தொகைக்கு தென்னந்தோப்பினை வாங்கிக் கோயிலுக்குத் தானமாக அளித்துள்ள செய்தி காணப் படுகிறது. கி.பி. 1519 -ல் விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவ ராயரின் தளபதி "இம்மடி திருமலை நாயக்கரும்" திருவூர் பொதுமக்களும் சேர்ந்து திருவூரின் அருகில் உள்ள வரதராஜப்பட்டு, மகா மண்டலப் புருஷன்பட்டு ஆகிய கிராமங்களிலிருந்து வசூலிக்கப்பட்ட தண்ணீர் வரியாகிய ஆறு கழஞ்சு பொன்னைக் கோயிலுக்கு வழங்கியுள்ளனர். கல்வெட்டில் தமிழ் நிகண்டு கிருஷ்ணதேவராயர் காலத்தில் தமிழ் நிகண்டினை தொகுத்தவர் மகா மண்டலப் புருஷன் என்பவர் ஆவார். இவரது பெயரால் மகா மண்டலப் புருஷன் பட்டு என்று ஒரு கிராமத்திற்கு பெயரிடப் பட்டுள்ளது. கிருஷ்ணதேவ ராயரின் கி.பி. 1527- ஆம் ஆண்டில் இம்மடி திருமலை நாயக்கரின் தளபதியான சதாசிவ நாயக்கர் என்பவர் திருமலை எனப்பட்ட திருவூர் சிங்கீசுவரம் உடைய நாயனார் கோயிலுக்கு மடவிளா கமாக வீடு கட்ட நிலத்தினை இவ்வூர் மக்களிடமிருந்து வாங்கி வழங்கியுள்ளார். விஜயநகர ஆரவீடு வம்சத்தின் வழிவந்த வெங்கடாத்ரி மன்னர் இக்கோயிலில் உள்ள கரிய மாணிக்கப் பெருமாளுக்கு திருவூர் மற்றும் பெருமுளைப்பட்டு ஆகிய கிராமங்களில் இருந்து பெறப்பட்ட வருவாயை தேவதானமாக வழங்கியுள்ளார். இதில் சிவராம நரசப்பநாயக்கர் என்பவர் அரசரின் பிரதானியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். சிங்கீசுவரமுடையார் கோயிலின் கருவறை முக மண்டபத்தினைத் திருவூரைச் சார்ந்த அணுக்கி புருஷோத்தமன் பட்டர் வரதன் என்பவர் கி.பி. 14- ஆம் நூற்றாண்டில் நிர்மாணித்து ள்ளார். இதற்கு ஈடாக, அட்டகப் பிள்ளையார் என்ற பிள்ளையார் கோயிலில் இரவில் தீபம் ஏற்றவும், வழிபாட்டுக்காகவும் சிங்கீசுவரமுடையார் கோயிலில் இருந்து தனக்குச் சேர வேண்டிய பணம் மற்றும் நெல்லினை தானமாக வழங்கியுள்ளார். இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் அட்டகப் பிள்ளையார் கோயில் தற்போது கூவம் ஆற்றின் மேற்குக் (?)கரையில் உள்ள சிறிய பிள்ளையார் கோயிலாக இருக்கலாம் என்று கருதப்படு கின்றது. விஜயநகர மன்னர்களின் காலத்தில் இத்திருக்கோயிலுக்கு மூன்று நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. ராமேசுவரர், திருநாகேசுவரர், ஜம்புகேசுவரர், ரிஷ்ய சிங்காண்டீசுவரர் போன்ற சிற்பங்கள் அர்த்தமண்டபத்தில் உள்ள ஒரு தூணின் நான்கு பக்கங்களிலும் காணப்படு கின்றது. சிறந்த பரிகாரத் தலம் மூல நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களுக்கு சிறந்த பரிகாரத்தலமாக திரூர் சிங்காண் டீசுவரர் திருத்தலம் திகழ்கின்றது. பொதுவாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களை மணம் செய்தால் மாமனாருக்கு ஆகாது என்று ஒரு நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்படுகின்றது. ஆனால் ஜோதிடபூர்வமாக இது குறித்து எந்த ஆதாரமும் இல்லை. இதனை பல ஜோதிடர்கள் விவரித்தாலும் மக்கள் புரிந்து கொள்ளாமல் மூல நட்சத்திரம் என்றாலே அந்த ஜாதகம் வேண்டாம் என்று சொல்லி விடுகின்றனர். இக்காரணங்களால் திருமணத் தடை உள்ள அன்பர்களும் புத்திர பாக்கியம் வாய்க்காத அன்பர்களும் பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில் ஒரு கலசத்தில் நீர் எடுத்து திருக்கோயில் பிராகாரத்தில் மூன்று முறை வலம் வந்து நந்தி எம்பெருமானுக்கு கலச நீரை அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்கின்றனர். இதனால் மணமாகாதவர்களுக்கு திருமணம் உடனே கை கூடுவதாக வும் குழந்தைப் பேறு இல்லாதவர் களுக்கு அவர்களது இல்லங்க ளில் விரைவில் மழலை ஒலி கேட்பதாகவும் தெரிவிக்கின்றனர் பலனடைந்த அன்பர்கள். இத்திருக்கோயிலில் உள்ள ஆறுமுகப் பெருமானுக்கு கந்தசஷ்டியின் போது சூரசம்மார விழா சிறப்பாக நடைபெறுகின் றது. பங்குனி உத்திர விழாவும் இத்தலத்தில் நடைபெறும் சிறப்பான விழாவாகும். இந்தியாவின் முதல் கூட்டுறவு சங்கம் 1904- ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஊரும் திரூர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். திருக்கோயில் காலை 6.00 மணி முதல் 8:30 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். 🟨🕉️. 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨
saravanan.
732 views
5 months ago
#🕉️🔱சர்வம் சிவா மாயம்🔱 . 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨 *சகல வல்லமையும் தரும்* *சதுர தாண்டவ நடராஜர்*! இருகால்களையும் தரையில் ஊன்றிய நிலையில், சடாமுடியை முடிந்து, கால்களின் கீழே முயலகன் இல்லாத சதுர தாண்டவ நடராஜர் என்ற ஆதிரை நாயகனின் திருக்கோலம் இருக்குமிடம் தெரியுமா? அனைத்து கோவில்களிலும் நடராஜர் காலைத் தூக்கி வைத்தபடி ஆடிய கோலத்திலேயேதான் பார்த்திருப்போம். ஆனால் திருச்சி மாவட்டம் குமாரவயலூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் அபூர்வமாக இருகால்களையும் தரையில் ஊன்றிய நிலையில், சடாமுடி முடியப்பட்டும், கால்களின் கீழே முயலகன் இல்லாத, ஆரம்ப நிலையிலான சதுர தாண்டவக் கோலத்தில் "சதுர தாண்டவ நடராஜர் "என்ற நாமத்துடன் அற்புதத் திருமேனியராகக் காட்சி தருகிறார் ஸ்ரீநடராஜப் பெருமான். சிவனார் தாண்டவமாடிய தலங்களில் ஒன்று என்பதால், இந்தத் தலத்தை உப விடங்கத் தலம் என்கிறார்கள்! சிவனார் ஆடிய 108 தாண்டவங்களில் முதன்மையான சதுர தாண்டவக் கோலத்தில் இங்கே காட்சி தரும் ஸ்ரீநடராஜ பெருமானை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! சிதம்பரம் தலத்தில் தில்லை அம்பலவாணனுக்குச் செய்யப்படுவது போலவே,இங்கு அனைத்து ஆராதனைகளும் "சதுர தாண்டவ நடராஜருக்கு" செய்யப்படுகின்றன. கால்கள் இரண்டையும் மடக்கி, முன்னும் பின்னுமாக சதுர வடிவில் வைத்தபடி ஆடும் அரிய கோலத்தில் காட்சி தரும் சதுர தாண்டவ நடராஜரை தரிசித்து வணங்குவது சிறப்பான பலனைத் தருமாம்! நடராஜருக்கு உகந்த ஆறு அபிஷேக காலங்களில் இவரை வணங்குவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திர நாளில், இங்கு வந்து "சதுர தாண்டவ நடராஜருக்கு "அபிஷேகம் செய்து வணங்கினால், நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் . முக்கியமாக, திருவாதிரை நாளில், சதுர தாண்டவ நடராஜரை வணங்கினால், பெரும் வல்லமையும் பேராற்றலும் பெறுவர்; எவரையும் வெல்லும் திறன் அதிகரிக்கும்; கலைகளில் ஆர்வமும் திறனும் ஏற்படும். தவிர, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் மார்கழித் திருவாதிரையிலும் மற்ற தமிழ்மாத திருவாதிரை நட்சத்திர நாட்களிலும் இங்கு வந்து அம்பலவானனை ஆத்மார்த்தமாக வேண்டி வழிபட்டால்,அவர்களது ஜாதகத்தில் உள்ள அனைத்து கிரக தோஷங்கள் யாவையும் விலக்கி அனைத்து வரங்களையும் தந்தருள்கிறார் இந்த அபூர்வமான ஆதிரை நாயகன்! ஆதிரை நாயகன் அபூர்வமான,அற்புதமான சதுர தாண்டவ திருமேனியராகக் காட்சி தரும் படம் 🟨🕉️🟨🕉️🟨🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊶⊷⊷❍ 𝑴K ❍⊶⊶⊷✶* 🟨🦚🟨🦚🟨🦚🟨
saravanan.
738 views
5 months ago
#🕉️🔱சர்வம் சிவா மாயம்🔱 . 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨 கும்பகோணம் நாச்சியார்கோயில் ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ திருநறையூர் நம்பி பெருமாள் திருவடிகளே சரணம் ... !!! . மேதாவி முனிவருக்கு வாக்களித்தபடி, திருமால், இத்தலத்தில் தாயாருக்கே முன்னுரிமை அளித்து அருள்பாலிக்கிறார். அதன்படி தாயரை மையப்படுத்தியே கருவறை அமைக்கப்பட்டுள்ளது. பெருமாளைவிட சற்று முன்புறம் தாயார் நின்ற கோலத்தில் அருள்கிறார். . வீதியுலா செல்லும்போதும் தாயாருக்குப் பின்னரே பெருமாள் எழுந்தருள்கிறார், தாயாருக்கே முதலில் திருமஞ்சனம் நடைபெறுகிறது. அனைத்தையும் தாயாரே நிர்வாகம் செய்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக, கையில் கிளி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி தாயார் அருள்பாலிக்கிறார். . திருமாலுக்கும் வஞ்சுளவல்லிக்கும் கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடைபெறுகிறது. அப்போது திருமால், தான் இத்தலத்தில் மனைவி சொல் கேட்டு நடப்பவராக இருப்பதால், கருடாழ்வாரே முன்னின்று பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று அவரிடம் கூறுகிறார். அதை ஏற்ற கருடாழ்வார், இத்தலத்தில் பிரதான மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிராட்டி பெயரால், இத்தலம் ‘நாச்சியார் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. . ஆண்டுதோறும் இத்தலத்தில் நடைபெறும் கல்கருட சேவை, புகழ் பெற்றதாகும். 🟨🕉️. 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨