கள்ளகாதல் விவகாரம்

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
593 views
2 days ago
மைசூர் மாவட்டம் சரகுரு பகுதியில் கூலித் தொழிலாளி ஆன ஐவரப்பா என்பவர் கடந்த 16ஆம் தேதி சாலையோரம் பிணமாக கடந்தார்... முதலில் இது விபத்து எனத் தோன்றினாலும், ஜவரப்பாவின் உடலில் இருந்த காயங்கள் போலீசாருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின. மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ஜவரப்பாவின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோதுதான் அந்த திடுக்கிடும் 'கள்ளக்காதல்' பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. ஜவரப்பா தான் வேலை பார்த்து வந்த மேஸ்திரி சித்தேஷை, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மனைவி அம்ருதாவை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த அறிமுகம் நாளடைவில் அம்ருதா மற்றும் சித்தேஷ் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், இந்த விவகாரம் ஜவரப்பாவுக்குத் தெரியவந்துள்ளது. மனைவியைக் கண்டித்த ஜவரப்பா, தங்களது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பார் என்று கருதிய அந்த ஜோடி, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தது. திட்டமிட்டபடி, சித்தேஷ் தனது காரில் ஜவரப்பாவை மது குடிக்க அழைத்துச் சென்று, அங்கு அவரைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் விபத்து போலச் சித்தரித்து உடலை வீசிவிட்டுச் சென்றுள்ளார். தற்போது கைதான அம்ருதா மற்றும் சித்தேஷ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
627 views
4 days ago
புதுச்சேரி வில்லியனூர் அருகே ஊசுடு தொகுதி வாழப்பட்டாம்பாளையத்தைச் சேர்ந்த 53 வயதுடைய அமுதா என்ற பெண், தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தனது மகன்களைச் சந்தித்துவிட்டு வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற அவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததால், அவரது மகன் வடிவேலு வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அமுதாவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது தர்மபுரியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி பரந்தாமன் என்பவர் சிக்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட வேலை செய்தபோது அமுதாவிற்கும், பரந்தாமனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அமுதாவிற்கு பரந்தாமன் சுமார் 3.5 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். ஆனால், அமுதா ஹோட்டல் வேலைக்குச் சென்ற பிறகு பரந்தாமனுடனான தொடர்பைத் துண்டித்ததோடு, பணத்தைத் திருப்பித் தர மறுத்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பரந்தாமன், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி அமுதாவை நயமாகப் பேசி இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் மாவட்டம் பூத்துரை கிராமத்தில் உள்ள ஒரு முந்திரி தோப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பண விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திட்டமிட்டபடி தான் மறைத்து வைத்திருந்த கயிற்றால் அமுதாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது நண்பர் விஜய்யின் உதவியுடன், அமுதாவின் உடலை அங்கேயே குழிதோண்டிப் புதைத்துவிட்டுத் தப்பியோடியது விசாரணையில் அம்பலமானது. பரந்தாமன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அமுதாவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தக் கொடூரக் கொலையில் தொடர்புடைய பரந்தாமன் மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பணத் தகராறு மற்றும் கள்ளக்காதல் காரணமாக அரங்கேறிய இந்தப் படுகொலை புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
658 views
6 days ago
தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் பரகலா டவுனில் உள்ள சிஎஸ்ஐ காலனியைச் சேர்ந்த மடிகொண்ட சுமனுக்கும் (36), ரெகொண்டாவைச் சேர்ந்த லாவண்யாவுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். சுமன் ஒரு மெக்கானிக்காக பணிபுரிந்து குடும்பத்தை நடத்தி வந்தார், அதே சமயம் லாவண்யா நகராட்சியில் தூய்மை பணியாளராகப் பணிபுரிந்தார். லாவண்யா பணியிடத்தில் சந்தித்த மற்றொரு நபருடன் ஏற்பட்ட பழக்கம் திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது. இது அவரது கணவர் சுமனுக்கு தெரியவந்ததால் ​​இருவருக்கும் இடையே சண்டைகள் மூண்டன. தனது காதலனுடன் இருப்பதற்குத் தன் கணவர் தடையாக இருப்பதாக லாவண்யா உணர்ந்தார். இதனால் எப்படியாவது தன் கணவரைக் கொல்ல லாவண்யா தனது திட்டம் தீட்டினார். இதற்கிடையில் சுமனும் லாவண்யாவும் இந்த மாதம் 3 ஆம் தேதி வாரங்கலில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றனர். 4 ஆம் தேதி முதல் சுமன் காணாமல் போனதாக லாவண்யா தன் கணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். 6 ஆம் தேதி, லாவண்யா பரகலாவில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றபோது சுமனின் பெற்றோர் அவரைப் பற்றி விசாரித்தனர். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று லாவண்யா கூறியதால், சுமனின் தந்தை சாம்பய்யா 8 ஆம் தேதி பரகலா காவல் நிலையத்தில் சுமன் காணாமல் போனதாகப் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, காணாமல் போனவர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே முலுகு மாவட்டம் கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத வகையில் எரிந்தநிலையில் ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, சுமனின் செல்போனின் கடைசி சிக்னல் முலுகு மாவட்டம், கோவிந்தராவ்பேட் மண்டலத்தில் கிடைத்தது. இதையடுத்து, பரகலா மற்றும் பாசரா போலீசார் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அது சுமன் சடலம் தான் என்பதை உறுதி செய்த போலீசார், இதில் சிலர் சுமனை வாரங்கலில் இருந்து அழைத்துச் வந்து கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் மது அருந்த வைத்து, பீர் பாட்டில்களால் குத்திக் கொலை செய்து, சடலத்தை அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றிக் கொன்றதை கண்டறிந்தனர். இதனிடையே லாவண்யா நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரிடம் பிடித்து விசாரித்ததில் தன்னுடன் பணிபுரிந்த மற்றொரு பெண்ணின் உதவியுடன், கோவிந்தராவ்பேட்டைச் சேர்ந்த ஒரு நபருக்கு ரூ. 5 லட்சம் கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் லாவண்யா இரண்டு முறை சுமனைக் கொல்ல முயன்றதாகவும் இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்ததால் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து லாவண்யாவை கைது செய்த போலீசார் கொலை செய்த கூலிப்படையை சேர்ந்தவரை தேடி வருகின்றனர். லாவண்யா தான் சுமனை கொலை செய்ததை பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர், புதன்கிழமை இரவு பரகலா காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டணை பெற்று தரப்படும் என உறுதி அளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
739 views
9 days ago
விஜயவாடா அண்டு குண்டூர் மாவட்ட எல்லை பகுதியான துக்கிராலா மண்டபம் சிலுவூர் கிராமத்தில் நடந்த அதிர்ச்சிகரமான கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.... வெங்காய வியாபாரியான லோகம் சிவனகராஜு என்பவர், தனது மனைவி லட்சுமி மாதுரி மற்றும் அவரது கள்ளக்காதலன் கோபியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 2007-ல் திருமணமான இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், விஜயவாடா சினிமா திரையரங்கில் பணிபுரிந்த மாதுரிக்கு, கோபி என்பவருடன் ஏற்பட்ட தவறான உறவே இந்த கொடூரச் செயலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த மாதுரி, கடந்த ஜனவரி 18-ம் தேதி இரவு சிவனகராஜுவுக்கு வழங்கிய பிரியாணியில் சுமார் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். அவர் மயக்கமடைந்ததும், வீட்டிற்கு வந்த காதலன் கோபியுடன் இணைந்து மாதுரி இச்செயலை அரங்கேற்றியுள்ளார். கோபி சிவனகராஜுவின் மார்பின் மீது அமர்ந்து பிடித்துக்கொள்ள, மாதுரி தலையணையால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், கணவர் இறந்ததை உறுதி செய்த பிறகு, மாதுரி சற்றும் பதற்றமின்றி விடிய விடிய சடலத்தின் அருகிலேயே அமர்ந்து ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கழித்துள்ளார். அதிகாலையில் எதுவுமே தெரியாதது போல் நடித்த அவர், தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி அழுது நாடகமாடியுள்ளார். இருப்பினும், தம்பதியினரிடையே இருந்த தொடர் சண்டைகள் மற்றும் மாதுரியின் நடத்தையில் ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த அக்கம் பக்கத்தினர் இந்த மரணத்தை எளிதில் நம்பவில்லை. இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, சிவனகராஜுவின் காது மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்த காயங்களைக் கண்டு அவரது நண்பர்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். பிரேதப் பரிசோதனையில் அவர் மூச்சுத்திணறலால் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மாதுரியைக் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அவரது காதலன் கோபியும் தற்போது போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கள்ளக்காதலுக்காகக் கணவனைக் கொன்றுவிட்டு, சடலத்தின் அருகே ஆபாச வீடியோ பார்த்த பெண்ணின் செயல் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது...... #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
721 views
14 days ago
தெலுங்கானா மாநிலம் அம்மன் பள்ளி சேர்ந்த பானி பூரி வியாபாரி சித்தாரட்டி வயது 35 இவருடைய மனைவி கவிதா (29). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.... இந்நிலையில், திருப்பதியைச் சேர்ந்த பவன்குமார் ரெட்டி என்பவருடன் கவிதாவுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடை வில் கள்ளக்காதலாக மாறியதை அடுத்து, கடந்த மாதம் 27-ம் தேதி கவிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளைத் தவிக்க விட்டுவிட்டுத் தனது காதலனுடன் ஜட்செர்லா பகுதிக்குச் சென்றுவிட்டார். மனைவியைக் காணவில்லை எனச் சித்தாரெட்டி அளித்த புகாரின் பேரில், ஜட்செர்லாவில் இருந்த கவிதாவை போலீசார் கண்டுபிடித்தனர். சித்தாரெட்டி, காவலர் காதிர் என்பவருடன் காரில் சென்று கவிதாவைச் சந்தித்துத் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அப்போது, "காதலனை விட்டு வர முடியாது" எனக் கூறி கவிதா தனது கணவரை ஆவேசமாகத் திட்டியுள்ளார். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கவிதா தனது கணவருடன் வரச் சம்மதித்தார். காரில் காவலர் முன் இருக்கையில் அமர, பின் இருக்கையில் சித்தாரெட்டி, கவிதா மற்றும் அவரது காதலன் பவன்குமார் அமர்ந்து பயணம் செய்தனர். சதாசிவபேட்டை அருகே காரை நிறுத்தி டீ குடித்தபோது, ஆத்திரத்தில் இருந்த சித்தாரெட்டி அங்குள்ள ஒரு கடையில் மறைமுகமாகக் கத்தி ஒன்றை வாங்கியுள்ளார். மீண்டும் பயணம் தொடர்ந்த சில நிமிடங்களில், சித்தாரெட்டி மறைத்து வைத்திருந்த கத்தியால் கவிதாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்தினார். ரத்தம் பீறிட்டுத் தெறிக்க, காவலர் தடுத்தும் பலனின்றி கவிதா காரிலேயே துடிதுடித்துச் சரிந்தார். படுகாயமடைந்த கவிதாவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சித்தாரெட்டியைத் தற்கொலை முயற்சி மற்றும் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தனர். காவல்துறையினரின் முன்னிலையிலேயே இந்த விபரீதம் நிகழ்ந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #ஏப்ரல் 09 முக்கிய தகவல்🤔
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
922 views
18 days ago
பெங்களூருவில் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது நெருங்கிய நண்பரான அன்பழகனைத் தனது மனைவி மோனிஷாவிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். நாளடைவில் அந்த அறிமுகம் கள்ளக்காதலாக மாறவே கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இவர்களின் ரகசியத் தொடர்பு கிருஷ்ணமூர்த்திக்குத் தெரியவந்ததையடுத்து அவர் மனைவியைக் கண்டித்ததால் ஆத்திரமடைந்த காதலர்கள் அவரைக் கொல்லப் பயங்கரத் திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த கிருஷ்ணமூர்த்திக்குத் தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்து மோனிஷா மயக்கமடையச் செய்துள்ளார். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது தனது காதலன் அன்பழகனை வரவழைத்து இருவரும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியைத் துடிதுடிக்கக் கொலை செய்துள்ளனர். மறுநாள் காலையில் அவர் இயற்கை மரணம் அடைந்துவிட்டதாக நாடகமாடி உடலை அடக்கம் செய்ய முயன்றபோது உறவினர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில் அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில் சிக்கிய மோனிஷாவும் அன்பழகனும் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கிருஷ்ணமூர்த்தியைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். அறிமுகம் செய்து வைத்த நண்பனே மனைவியுடன் சேர்ந்து வாழ்வாதாரமாக இருந்த கணவனைக் கொன்ற செய்தி அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது கொலைக் குற்றவாளிகளான மோனிஷா மற்றும் அன்பழகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஒரு நிமிடம் காட்டிய மோகத்தால் ஒரு குடும்பமே சிதைந்து போனது அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம் #😊Positive Stories📰 #📢 ஏப்ரல் 5 முக்கியதகவல்கள் 👍