நட்புடன் இருப்போம் நலமாய் வாழ்வோம்

𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
541 views
21 hours ago
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 பங்குனி உத்திரம்... பங்குனி உத்திரம் என்பது முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரத நாள் என்பது அனைவருக்கும் தெரியும். பங்குனி மாத வளர்பிறையில் வரும் உத்திரம் நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் சேர்ந்த நாளையே பங்குனி உத்திரம் நாளாக கொண்டாடுகிறோம். பல தெய்வீக திருமணங்கள் இந்த நாளில் நடைபெற்றதால் இந்த நாள் சிறப்புக்குரியது என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தெய்வீக திருமணங்கள் நடைபெற்ற நாள் என்பதை தாண்டி பல சிறப்புகள் இந்த பங்குனி உத்திரம் திருநாளுக்கு உண்டு. பங்குனி உத்திரம் நாளுக்குரிய சிறப்புகள் இதுவரை உங்களுக்கு தெரியாது என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். சிவனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதன், ரதியின் வேண்டுதலால் மீண்டும் உயிர்பெற்றது இந்த நாளில் தான். மதுரை மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கு திருமணம் நடைபெற்றது இந்த நாளில் தான். முருகனை மணப்பதற்காக தவம் செய்த வள்ளி, நம்பியின் மகளாக அவதரித்தது இந்த நாளில் தான். காஞ்சி காமாட்சி ஆற்று மணலில் லிங்கம் செய்து வழிபட்டு, சிவனின் அருளை பெற்றது இந்த நாளில் தான். மஹாபாரதத்தில் அர்ஜூனன் அவதரித்தது பங்குனி உத்திர நாளில் தான். ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதர், ரங்கநாயகி தாயாருடன் திருமண கோலத்தில் காட்சி தருவதும் இந்த நாளில் தான். வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய திருக்காட்சியை காண முடியாது.
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
6.6K views
1 days ago
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 Success isn't about luck; it's about nailing these 3 things: 1️⃣ Desire – Know what you want and why it fires you up. 2️⃣ Action – Take tiny steps daily towards your goal. 3️⃣ Consistency – Keep showing up, no matter what. Results will follow 😊.
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
825 views
3 days ago
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 வெற்றிக்கு வெறும் எண்ணங்களோ நல்ல நோக்கங்களோ போதாது, செயலும் முயற்சியும் அவசியம். நோக்கமும், செயலும், விடாமுயற்சியும் காரண காரிய விதியின் வழிகாட்டுதலுடன் ஒன்றிணையும்போது தான் உண்மையான மாற்றம் நிகழ்கிறது. வெறும் எண்ணங்களைக் கொண்டிருப்பதோ அல்லது நல்ல மனிதராக இருப்பதோ வெற்றியை உறுதி செய்துவிடாது; ஒருவர் தொடர்ச்சியான முயற்சியிலும் செயலிலும் ஈடுபட வேண்டும். சரியான நேரத்தில், சரியான அளவில் எடுக்கப்படும் சிறிய, திட்டமிட்ட செயல்களாலேயே வாழ்க்கை முன்னேறுகிறது.
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
1.3K views
24 days ago
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 Every day should indeed be Women's Day. While March 8th is a significant symbolic moment for global reflection, the true aim is to normalize respecting, supporting, and valuing women in our daily actions. #HappyWomensDay
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
976 views
25 days ago
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது : தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று... "சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்" இதன் விளக்கம் :- இரவில் நித்திரை செய்யாதவர்கள் தன்உடலில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும். எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர். "உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு" கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச் செய்து உண்ட உணவுகள் எளிதில் ஜீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும். வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும. இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும். சித்தர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் நன்மைக்காகவே இருக்கும்… நம் வாழ்க்கை நம் கையில்… நாம் எவ்வாறு நல் வழிகளை பின்பற்றுகிறோமோ அவ்வாரே நமக்கு நன்மைகளும் கிடைக்கும்… வாழ்க வளமுடன் நலமுடன்… சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்... நல்லதை பகிருங்கள்… அனைவரும் பயன் பெறட்டும்…