அய்யா வைகுண்டர் {1008}

D Muthu Prakash, Kanchipuram 💐
993 views
21 days ago
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 04.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== விஞ்சையருளல் தொடர்ச்சி ======================== விள்ளாத ஞாயம் மேல்ஞாய மென்மகனே துள்ளாத யானை துடியானை யென்மகனே அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே . விளக்கம் ========== சொல்லாமலே சொல்லும் மௌன மார்க்கம் மிகவும் உயர்ந்த மார்க்கம் ஆகும். துள்ளாத யானை மிகுந்த துடிப்புள்ள யானையாக இருக்கும். அதுபோல அறிவுள்ள என்மகனே, அடக்கம் மிகவும் பெரியது ஆகும். உலக நியாயத்தைப் புறக்கணித்துக் கடந்து செல்ல நினையாதே. கற்றவர்களைப் புறக்கணிக்காதே. . . அகிலம் ======== நன்றி மறவாதே நான்பெரிதென் றெண்ணாதே அண்டின பேரை அகற்ற நினையாதே ஆபத்தைக் காத்து அகலநீ தள்ளாதே சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும் . விளக்கம் ========== செய்த நன்றியை மறக்காதே. நான் தான் பெரியவன் என்று எண்ணாதே. உன்னைச் சார்ந்து வாழத் துடிப்பவரை அகற்றிவிட எண்ணதே. ஆபத்தைக் காத்து, அவர்களைப் புறக்கணிக்காது வாழ்வு கொடு. தான் அழியக்கூடிய அளவு துன்பம் வந்தாலும் எந்தவிதமான சாபத்தையும் யாருக்கும் கொடுக்காதே. . . அகிலம் ======== கோபத்தைக் காட்டாதே கோளோ டிணங்காதே பாவத்தைக் காணாதே பகட்டுமொழி பேசாதே பசுவை யடைத்துப் பட்டினிகள் போடாதே விசுவா சமதிலே விரோதம் நினையாதே . விளக்கம் ========== உன் கோபத்தை யாரிடமும் காட்டாதே. பிறருடைய கோள் வார்த்தையால் தவறு செய்துவிடாதே. பாவச் செயல்களையும் பாவிகளையும் பார்க்காதே. வெளி வேசமான மொழிகளைப் பேசாதே. பசுவை அடைத்து வைத்துப் பட்டினி போடாதே. உன்னையே நம்பி உன்னிடத்தில் விசுவாசமாக இருப்பவரிடம் எந்தவித விரோத மனப்பான்மையையும் காட்டாதே. . . அகிலம் ======== எளியோரைக் கண்டு ஈந்து இரங்கிடுநீ அழிவென்ற பேச்சு அனுப்போல் நினையாதே தொட்டுப் பிடியாதே தோர்வைவைத்துக் காணாதே விட்டுப் பிடியாதே வெட்கமதைக் காணாதே . விளக்கம் ========== எளிய மனிதர்களைக் கண்டால் அவர்களுக்காக இரங்கி ஏதாவது பொருளைக் கொடுத்து உதவி செய். எந்த வகையிலும் எவருக்கும் எந்தப் பொருளுக்கும் அழிவைக் கொடுக்கும் வகையில் எண்ணத்தைச் செலுத்தாதே. தீயவர்களிடம் தொட்டுப் பிடித்துப் பேசவோ அதிக நேரம் பார்த்துக் கொண்டே பேசவோ செய்யாதே. யாரையாவது விட்டு யாரையாவது அழைத்து வந்து வீண் பேச்சுப் பேசாதே. . . அகிலம் ======== வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே பரம்பூமி கண்டு பாவித் திருமகனே இத்தனை புத்தி எடுத்துரைத்தே னென்மகனே . விளக்கம் ======== பிறர் வெட்கப்படும் காரியங்களை நீ கண்ணால் காணாதே. மனித வரம்பு முறைகளையும் சிறந்த வழி முறைகளையும் தவற விட்டு வாழாதே. நீ பரம்பொருள் வாழும் தருமபூமியைக் கண்டு அதே நினைவில் நல்ல நிலை நிற்பாயாக. இத்தனை புத்திமதிகளையும் உனக்கு எடுத்துரைத்தேன். . . அகிலம் ======== புத்தி விபரீதமாய்ப் பின்னுமா ராயாதே சட்ட மறவாதே தன்னளவு வந்தாலும் நட்டங் காணாதே நாடாள்வா யென்மகனே . விளக்கம் ========== நான் சொன்ன புத்திமதிகளை விபரீதமாக ஆராய்ந்து பார்க்காதே. உன் உயிர் அழியும் அளவு துன்பம் வந்தாலும்கூட நான் கூறிய சட்ட முறைகளை மறந்துவிடாதே. எந்தக் காரியத்தையும் தோல்விவரும் என்று எண்ணாதே. நீ தருமபூமியை ஆட்சி புரிவாய் என் மகனே. . . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
1.1K views
1 months ago
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 22.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= அப்போது தான்பிறந்த அந்தவைகுண் டருரைப்பார் இப்போ தென்பிதாவே என்னையீன்றே யெடுத்துப் பருவமதாய் வளர்த்துப் பகர்ந்தீரே ஞாயமெல்லாம் உருவுபிர காசமதாய் உபதேசஞ் செய்தீரே தங்க முடிவேந்தே தகப்பனே நீர்கேளும் பொங்கு கடல்துயின்ற புண்ணியரே நீர்கேளும் . விளக்கம் ========= சிறு குழந்தையான வைகுண்டர், திருமாலை நோக்கி, என் தந்தையே, என்னை பெற்றெடுத்து, அறிவு நிலையை வளர்த்து, இந்த உபதேசங்களை எல்லாம் மிகவும் தெளிவாக அருளினீரே, இருப்பினும், தங்க முடித்தலைவனே, என் தந்தையே பொங்கும் கடலில் பள்ளி கொள்ளும் புண்ணியரே, நான் கூறுபவற்றைக் கேட்பீராக. . . அகிலம் ======= என்னுடைய முத்துயரம் எல்லா மிகக்கழித்து நன்னமுத மாக நன்மகவாய்ச் செய்தீரே இன்னுங் கலியுகத்தில் இருக்கப் போச்சொல்லீரே . விளக்கம் ========= என் முந்தைய வினைகளை எல்லாம் அழியச் செய்து நல்ல அமிர்தம் போன்று என்னை உமது குழந்தையாக மாற்றம் செய்தீர். இவ்வளவு செய்து என்னை உருவாக்கிய பிறகு கலியுகத்தில் வாழ்வதற்குப் போகச் சொல்லுகின்றீரே! . . அகிலம் ======= உன்னை யறியாமல் ஊன்கலியி லுள்ளோர்கள் என்னை மிகப்பழித்து ஏசுவானே நீசனெல்லாம் . விளக்கம் ========= உமது உண்மை நிலை அறியாமல் கீழ்த்தரமான கலி பிடித்த உலகில் உள்ள நீசர்கள் என்னை அதிகமாகப் பழி கூறி ஏசுவார்களே? . . அகிலம் ======= அல்லாமல் முன்பெற்ற அவர்களுட பேரைச்சொல்லிப் பொல்லாத நீசனெல்லாம் பேசி யடிப்பானே . விளக்கம் ========= மேலும் என்னை முதலில் பெற்றெடுத்த என் தாய் தந்தையருடைய பெயரைச்சொல்லி அந்தப் பொல்லாத நீசர்கள் அடிப்பார்களே? . . அகிலம் ======= சூத்திர விஞ்சை தொழிலை யறியாமல் யூத்திர நீசனெல்லாம் ஒழுங்குதப்பி மாழ்வானே . விளக்கம் ========= உமது சூட்சுமத்தை அறிய முடியாத நீசர்கள் ஒழுங்கு தப்பி அழிவார்களே? . . அகிலம் ======= நம்முடைய சாதி நம்மைமிகக் காணவந்தால் செம்மைகெட்ட நீசன் சிதற அடிப்பானே . விளக்கம் ========= நம் சான்றோர் சாதி என்னை அன்புடன் காண வந்தால் மேன்மை இல்லாத நீசர்கள் அவர்களைச் சிதறி ஓடும்படி அடித்திடுவார்களே? . . அகிலம் ======= ஆனதால் நம்சாதி அகலநின்று வாடிடுமே ஏனமென்ன சொல்லுகிறீர் என்னுடைய நாயகமே . விளக்கம் ========= அதனால் நம் சான்றோர் சாதி நம்மை விட்டு அகன்று நின்று மனம் வாடிடுமே? இவற்றை எல்லாம் நீக்குவதற்கு நீவிர் என்ன வழி கூறப் போகிறீர். . . அகிலம் ======= முன்னென்னைப் பெற்ற மொய்குழலார் வம்மிசங்கள் என்னேது வாலே இயல்புபெற வேணுமல்லோ . விளக்கம் ========= தலைவரே, என்னை ஏற்கெனவே பெற்றெடுத்த தாயினுடைய சான்றோர் சாதி வம்ச வழியினரும் என் பிறப்பின் மூலமாக நல்ல வாழ்வு பெற வேண்டும் அல்லவா? . . அகிலம் ======= அல்லாமல் முன்னம் அணங்கொரு பெண்ணிணங்க நல்லோர் மனசு நல்லணங்குக் கேகொடுத்து மேலும் பதவி மிகக்கொடுக்க வேணுமல்லோ . விளக்கம் ========= மேலும், எனக்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட பெண்ணுக்கு அவள் உள்ளம் மகிழும்படி சிறப்பான மனதைக் கொடுத்து அவளுக்குச் சிறந்த தெய்வப்பதவி கொடுக்க வேண்டும் அல்லவா? . . அகிலம் ======= இப்படியே நல்ல இயல்பு பெறஅருளி எப்படியு மென்னைவந்து ஏற்கவரும் நாளும் எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமென்றார் பொல்லாத பேர்மாளப் போவதுவுஞ் சொல்லுமென்றார் . விளக்கம் ========= இப்படி எல்லாரும் அருள் கொடுத்து எவ்வகையிலும் என்னை வைகுண்டத்துக்கு அழைக்க வரும் நாளையும் ஏனைய விபரங்களையும், நீசர்கள் அழிவது பற்றியும் விபரமாய்ச் சொல்லும் என்றார். . . தொடரும்… அய்யா உண்டு.