இறை அடியான்☝️

SHEIK 🌺KSN🌺
3.5K views
11 days ago
"எங்களை மன்னிப்பாயாக, யா அல்லாஹ்" நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: மக்களே, நீங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேளுங்கள். நிச்சயமாக நான் அவனிடம் ஒரு நாளில் நூறு முறை பாவமன்னிப்பு கோருகிறேன்". அறிவிப்பாளர்: அக்ஹர் அல்-முசனி (ரலி). ஸஹீஹ் முஸ்லிம் 2702 "யாரேனும் ஒரு தீமை செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநீதம் இழைத்துவிட்டு, பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டால், அல்லாஹ்வை மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் காண்பார்" — அல்குர்ஆன்_அந்_நிஸா 4:110 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
9.7K views
12 days ago
மக்ரிப் நேரத்திலிருந்து இரவு நேரம் ஆரம்பமாகிறது. அந்த நேரத்தில் குழந்தைகள் வெளியே தனியாக விளையாட விடக்கூடாது. அவர்களை வீட்டுக்கு கூப்பிட்டு, பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். சூரியன் மறைந்ததும் ஷைத்தான்களும், தீய ஜின்களும் பூமியில் அதிகமாக நடமாடுகிறார்கள். அதனால் குழந்தைகளை பாதுகாக்க சொல்லப்பட்டுள்ளது. மக்ரிப் அதான் கேட்டதும் குழந்தைகளை வீட்டுக்கு வர சொல்லுங்க வீட்டு கதவை மூடுங்க, அல்லாஹ்வின் பெயரால் சொல்லுங்க குழந்தைகளுக்கு ஆயத்துல் குர்ஸி, மூன்று குல்கு வல்லாஹு சூராக்கள் ஓதி ஊதுங்க. பகல்ல விளையாடுவது தப்பில்லை. வெளிச்சம் இருக்கும்போது, பாதுகாப்பான இடத்தில் விளையாடலாம். ஆனா இருட்டியதும் வீடுதான் பாதுகாப்பான இடம். இறைவா! எங்கள் குழந்தைகளை பாதுகாப்பாயாக" — ஆமீன்.! 🤲 நம்ம வீட்ல இருக்குற குட்டீஸை இன்றையில் இருந்து மக்ரிப்க்கு முன்னாடியே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்க. இன் ஷா அல்லாஹ். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
659 views
25 days ago
நபி (ஸல்) அவர்கள் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் நோன்பு வைப்பதில் கவனம் செலுத்தி வந்தார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) [நூல் : திர்மிதி 745] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
3.2K views
26 days ago
அம்மா, அப்பா, உடன்பிறந்தவர், சொந்தம்... இவங்களோட நல்ல முறையில் நடந்து கொள்வது சாதாரண விஷயம் இல்ல. அது அல்லாஹ்வுக்கு செய்யும் இபாதத். தொழுகை, நோன்பு மட்டும் போதாது. உறவை பேணனும். நபி_ﷺ கூறினார்கள் "யார் தன் ரிஸ்க் விசாலமாகவும், ஆயுள் நீடிக்கவும் விரும்புகிறாரோ அவர் உறவை பேணட்டும்" — புகாரி 5986 யார் உங்கள விட்டு ஒதுங்கினாலும், நீங்க முதல்ல பேசுங்க. ஸலாம் சொல்லுங்க. அதுதான் உண்மையான பலம். அல்லாஹ் நம்ம உறவுகள்ல பரக்கத் தரட்டும். பிரிஞ்சு போன உள்ளங்கள சேர்து வைக்கட்டும். ஆமீன் 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
4.2K views
28 days ago
இந்த இறைவசனத்தை வாசிக்கும் போதே உடம்பு சிலிர்குது. அல்லாஹ்வோட அருகாமையை எவ்வளவு அழகா சுட்டி காட்டிருக்கு. உங்க கூட இருக்குற யார விடவும், உங்க நிழல விடவும் #அல்லாஹ் உங்களுக்கு பக்கத்துல இருக்கான். நீங்க தனிமையில் இல்ல. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
915 views
28 days ago
இஸ்லாம் காதலை தடுக்கல. ஆனா அதுக்கு கண்ணியமான வழிய காட்டுது. அதுதான் நிக்காஹ். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "திருமணம் என் ஸுன்னத் ஆகும். யார் என் ஸுன்னத்தை புறக்கணிக்கிறாரோ அவர் என்னை சேர்ந்தவர் அல்ல" — புகாரி 5063 "திருமணம் இது அல்லாஹ்வுக்காக ஆரம்பிக்கும் பயணம்" #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
4.3K views
1 months ago
நம்ம வாழ்கையில எதெல்லாம் மாறணும்னு நினைக்கிறோமோ... அதோட ஆரம்ப புள்ளி #தொழுகை தான். தொழுகை பழக்கமானா, நேரம் மரியாதைக்குரியதாகும் - 5 நேரம் #அல்லாஹ் கூப்பிடும்போது எல்லா வேலையும் விட்டுடுறோம் இதயம் சுத்தமாகும் - ஒவ்வொரு தொழுகையும் பாவங்களை கழுவுது பரகத் வரும் - நேரத்துல, ரிஸ்குல, உறவுல எல்லாத்துலயும் அல்லாஹ் பரகத் தருவான் வெற்றி தானா வரும் - ஏன்னா வெற்றிய கொடுக்கிறவன் கிட்ட நாம தினமும் 5 முறை பேசுறோம். #அல்லாஹ்_அல்குர்ஆன்ல சொல்றான்: "தொழுகையை நிலைநாட்டுங்கள். நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையும் விட்டும் தடுக்கும்" — #அல்குர்ஆன் 29:45 "யா அல்லாஹ், எங்களை தொழுகையை பேணுபவர்களாக ஆக்குவாயாக" ஆமீன் 🤍 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
7.8K views
1 months ago
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ #அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் #விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் #இரத்தபந்த_உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் ஒன்று #நல்லதைப்_பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6138) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
3.6K views
1 months ago
இறகு எவ்வளவு லேசா காத்துல மிதக்குதோ, அதே மாதிரி நம்ம மனசுல இருக்குற கவலை, பயம், கஷ்டம், வேதனை எல்லாம் #அல்லாஹ் இலகுவாக்கி தருவான்.! இன்ஷா #அல்லாஹ். "நிச்சயமாக சிரமத்துடன் எளிதும் இருக்கிறது" — #அல்குர்ஆன் சூரா அல்-இன்ஷிராஹ் 94:5 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1.5K views
1 months ago
குர்ஆன் இதற்கு என்ன பதில் சொல்கிறது: #அல்குர்ஆன் அத்தலாக் 65:3 وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ "எவர் #அல்லாஹ்வை நம்பி பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறாரோ, அவருக்கு அவனே போதுமானவன்." #அல்லாஹ்வே போதுமானவன் என்றால், வேறு எதற்கு பயப்பட வேண்டும்? #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️