👨மோடி அரசாங்கம்

Arunachalam
768 views
6 days ago
பாஜகவின் ஆட்டம் 2029ல் இந்திய மக்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்! இதை அரசியல் கட்சிகளும் உணரவேண்டும்! இந்திய பொதுஜனங்களும் உணரவேண்டும்! பாஜக நினைத்ததை சாதித்து வருகிறது! அமித்ஷா இந்த நாட்டை மதவாத நாடாக ஆக்காமல் விடமாட்டார்! ஒருவேளை 2029ல் பாஜக வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்தால் அதுவே இந்தியாவின் கடைசி தேர்தலாக இருக்கும்! தேர்தலாணையம் என்கிற ஒன்றையே மக்கள் மறந்துதான் ஆகவேண்டும்! எதிர்போரையெல்லாம் பொய்வழக்குகளை போட்டு ED CBI மூலமாக சிறையில் பூட்டுகிறார்கள்! இல்லையேல் அந்த கட்சியையே இரண்டாக உடைத்தெறிகிறார்கள்! 2026ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களே சாட்சி! பணத்துக்காக! சுயநலத்திற்காக! பதவியாசைக்காக அடையாளம் காட்டியே கட்சியையே காட்டிக்கொடுத்துவிட்டு எதிர்முகாமான பாஜகவில் ஐக்கியமாகிவிடுகிறார்கள்! ஏனென்றால்! இங்கே பல கட்சிகள் கொள்கைகளை துறந்து சுயநலத்திற்காக யாராருக்கோ குடைபிடிக்கவும் தயங்கியதில்லை! அஇஅதிமுக திரிணாமுல் காங்கிரஸ்! இப்படி பல கட்சிகளை புறவாசல் மூலமாகவும்! அமலாக்கத்துறை சோதனைகள் மூலமாகவும் மிரட்டி உடைத்தெறிகிறார்கள்! மிஞ்சிப்போனால் பணத்திற்கு இசையாத எந்த கட்சிகளும் இன்று இல்லையென்பதுதான் நிலையே! சரி! விஷயத்துக்கு வருவோம்! பாஜகவின் மிகப்பெரிய தேர்தல் வெற்றிக்கான ஆயுதமே தேர்தலாணையம்! EVM! ஜால்ரா ஊடகங்கள்! எந்நாளும் அடிமாடுகளாய் சொன்ன சொல் தட்டாமல் சொன்னதை செய்துகொடுக்கிற IAS IPS லாபிகள்! இவற்றோடு உச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை இவையெல்லாமே மத்தியில் ஆளும் பாஜகவுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தே இயங்குகிற கொடுமைதான் நாட்டில் ஏற்படுகிற பொருளாதார பின்னடைவுக்கு காரணங்கள்! படித்த! படித்துக்கொண்டிருக்கிற எத்தனையெத்தனை இளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளே கேள்விக்குறியாக நிற்கிறது! இந்திய இளைஞர்களின் சீரழீவு சிந்தனைக்கு மூன்று காரணங்கள்! ஒன்று மதவாதத்தை தழுவி தன்னை நாசப்படுத்திக்கொள்கிறான்! மற்றொன்று சினிமா மோகத்தில் வீழுகிறான்! இதைவிட மிகக்கொடுமை சாதிவெறியில் ஊறியே திளைக்கிறான்! இது அகலாதவரை எக்காலத்திற்கும் விடிவில்லை! இப்போதாவது சிந்திப்பார்களா? வடமாநில படித்த இளைஞர்கள் இப்போதுதான் சிந்திக்கத்தொடங்கியிருக்கிறான்! அங்கே அவனுமே விழித்துக்கொண்டான்! ஆனால் தென்னிந்தியா தளத்திலோ! சிந்தனையாளனாக இருந்தவன் இப்போது சிந்தனையற்றவனாக சினிமா மோகத்திலே சுருண்டுபோய் வீழ்கிறான்! 2029ல் நடக்கிற பாராளுமன்ற தேர்தலுக்குள்ளே இங்குள்ள இந்திய அரசியல் கட்சிகளும்! பொதுமக்களும் தேர்தலாணையத்தை எதிர்த்தும் EVMஐ எதிர்த்தும் போராடவில்லையென்றால் இந்தியாவில் பாஜகவே 700/848தொகுதிகளை EVM மூலமாக கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும்! பிறகென்ன இந்தியா இந்துராஷ்டிரமாக பெயர் மாறும்! இந்துக்கள் தவிர வேறு யாருக்கும் குடியுரிமை வாழ்வாதார உரிமையில்லை என்கிற நெலமை கண்டிப்பாக வரும்! அதுமட்டுமல்ல! பிறமதத்தின் வழிபாட்டுத்தலங்களே இல்லாத காட்டுமிராண்டி சட்டத்தையுமே நிறைவேற்றுவர்! அதற்கான முன்னோட்டம்தான் மேற்குவங்கம்! தமிழ்நாடு கேரளாவை குறிவைத்து EVM தில்லுமுல்லுகளால் செயற்கையான வெற்றியையும் தோல்வியையும் செய்து காட்டியிருக்கிறார்கள்! இனிமேலும் EVMஐ ஒழிக்க போராட மனமில்லை என்றால் இந்திய வெகுஜன மக்களனைவரும் காவிக்கூட்டத்திற்கு அடிமையாக வாழவேண்டிய நிலையை எதிர்கொள்ள தயாராகவே வேண்டும்! SIR என்பதே பித்தலாட்டத்தை செய்ய தொடங்கப்பட்ட முதல் தாக்குதல்! இரண்டாவதாக EVMமூலமாக நடத்திய! நடத்தப்போகும் தில்லுமுல்லு திரைமறைவு நாடகங்கள் நாட்டையே சூறையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஏனிந்த கட்சிகள் EVMஐ எதிர்த்துப்போராட துணிவற்றுப்போய் கிடக்கிறதென்பதே புரியவில்லை!? ஞானேஷ்குமார் தலைமைத்தேர்தலாணையராக இருக்கிற வரை எந்தத் தேர்தல் நடந்தாலும்! அது நேர்மையாக நடந்தேற வாய்ப்பில்லை! உச்சநீதிமன்றமே இன்று அமித்ஷாவின் கட்டுப்பாட்டுக்குள் தகிண்டு சுருண்டுகொண்டு இருக்கையிலே நீதியாவது! நியாயமாவது! ஒரு புடலங்காயும் விளையப்போவதில்லை! தேர்தலாணையத்தை உச்சநீதிமன்றம்தான் இன்றுவரை அதன் தில்லுமுல்லுகளில் இருந்து பாதுகாத்து காப்பாற்றிக்கொண்டிருக்கிறது! நீதித்துறை மூலமாக தேர்தலாணையத்தை எதிர்த்து எந்த வழக்கு போட்டாலும் இனிமேல் எதுவுமே ஆகப்போவதில்லை! வேறென்னதான் வழி? பிரதான இந்திய எதிர்க்கட்சிகள்! பொதுமக்கள்! மனசாட்சியுள்ள எஞ்சியுள்ள பத்திரிக்கையாளர்கள்! இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து ஒருவகையிலான பொதுப்போராட்டத்தை நடத்தினாலொழிய EVMஐ ஒழிக்க முடியாது! தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பது கதைக்காகுமா? நந்தினி என்கிற ஒற்றைப்பெண்மணி தொடர்ந்து EVMஐ எதிர்த்துப்போராடி வருவதை நாம் ஏன் ஆதரிக்கவில்லை? இனிமேலாவது போராட்ட முன்னெடுப்பை தொடங்காவிடில் குடியுரிமையே கேள்விக்குறியாகிவிடும்! பின்னரெங்கே வேலைவாய்ப்பு! புடலங்காய் எல்லாம்...!? 2029க்குள் EVMதேர்தல் முறையை அகற்றியே ஆகவேண்டும்! இதுமட்டும் நடந்தால் இந்தியாவில் எல்லாமே எல்லோருக்கும் என்கிற சமத்துவம் நிலவும்! இங்கே ஒன்றை சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்! பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான மறைமுகமான அண்மைகாலமாக புரிதலும் இனக்கமும் இருந்துவருகிறது! காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளை இனைத்தே களமிறக்கி போராட வேண்டும்! மாநில கட்சிகளை அழிக்கிற அஜென்டாவை காங்கிரஸ் கைகளில் பாஜக ஒப்படைத்துள்ளது! காங்கிரஸ் எவ்விதத்திலும் நம்பகமான கட்சியல்ல! புதிதாக உருவாகியுள்ள காக்ரோச் ஜனதா பார்ட்டி கட்சி நீட்தேர்வை எதிர்த்துமட்டுமே போராடி என்ன பயன்? நீட்தேர்வை ஒழிக்கப்படவேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை! ஆனால் நீட்தேர்வை மட்டுமே ஒழித்தால் இந்தியாவிலுள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிட்டிவிடுமா? CJP கட்சி EVMஐயும் எதிர்த்து போராடினால் ஏனைய கட்சிகளும் அதனை LEADERSHIP ஏற்கவைத்து மூன்றாவது வலிமையான அணியை அமைக்க முடியும்! ஆனால் இன்றுவரை நீட்தேர்வை மட்டுமே பிடித்துக்கொண்டு குரங்கு தொங்குவதுபோல் தொற்றிக்கொண்டிருப்பதால் என்ன பயன்!? மந்திரியை நீக்கிவிட்டால் போதுமா? அவரில்லையென்றால் மற்றொரு அடிமையை அந்தயிடத்திலே அமரவைப்பார்கள் என்பது தெரியாதா? இங்கே அரசமைப்பு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அரசியல் மாற்றமும் ஏற்பட வேண்டும்! அரசியல் மாற்றம் நிகழவேண்டுமானால் தேர்தலே நியாயமாக! நடுநிலையோடு நடக்க வேண்டும்! அந்த தேர்தலே நடுநிலை நியாயமாக நடக்கவேண்டுமானால் 2029க்குள்ளே EVMஐ முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்!! தமிழ்நாட்டையே! மேற்குவங்கத்தையே! EVMஆல் நிகழ்த்தப்பட்ட மாற்றத்தால் நிலைகுலைந்த ஆட்சியை உருவாக்கியதே அமித்ஷாவின் EVM திருவிளையாடல்கள்தான்! திராவிட இனமான தலைவர் திரு மு.க.ஸ்டாலின் தோற்றுப்போகக்கூடியவரா? தோற்கடிக்கப்பட்டார் என்பதே உண்மை! சதிகள் பாதி! மதிபிறழ் பாதி! மீதி EVMம் செய்த சூதுவிளையாட்டும்! திமுக EVMஐ எதிர்த்து சிறுபொறியை தட்டிவிட்டால் போதும்! இந்தியாவே போராடும்! இதை திமுகழகம் இப்போ செய்யவில்லை என்றால்? இனியெப்போதும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது! உள்ளதை உரக்கச்சொல்வோம்! நல்லதே நடக்கட்டும்! - MD Unis #👨மோடி அரசாங்கம்
Arunachalam
3.1K views
7 days ago
தலித் சமுதாயத்தை பொது தொகுதியில் நிற்க வைத்தோம் என திமுக -அதிமுக பெருமையாக பேசுகிறார்கள் .....இதை கோட்பாட்டின் அடிப்படையில் பேசுகிறீர்களா அல்லது பரிதாபத்தின் அடிப்படையில் பேசுகிறீர்க்ளா ? என்று காபந்து அமைச்சர் வன்னி பேசி இருக்கிறார்! தலித்துகளுக்கு என்ன செஞ்சிங்க? நீங்க எல்லாம் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமான்னு கலைஞர் கேட்டார் ன்னு வன்னி வாய்கூசாம பொய் பேசி (அது பொய் என்று திருமா சொன்னார்) பரப்பிய பொழுது : பொத்திகிட்டு இருப்பானா திமுகாகாரன் , இந்த இந்த தொகுதியில் பட்டியல் சமுதாய திமுகவினர் பொது தொகுதியில் போட்டியிட்டு வென்றார்கள் என்று சொல்லத்தான் செய்வோம்! இல்லன்னு சொல்லுவானுங்க , பொய் பேசாத திமுக செஞ்சிருக்குன்னு ஆதாரத்தோடு சொன்னா, அயோ சொல்லிட்டாங்க சொல்லிட்டாங்கன்னு கதறுவானுங்க! அதே போல் வன்னி இன்னைக்கு: விசிகாவுக்கு அமைச்சரவை கொடுத்தது தான் தலித் நலன் ன்னு பேசுறார் , அப்ப விசிக ஒரு சாதி கட்சின்னு ஆணித்தரமான சட்டமன்றத்தில் பதிய வச்சதா தான் பொருள் : திமுக ல இருக்குற தலித், திமுக அமைச்சர் ஆவது தலித் நீதி ஆகாதாம்! இன்னொன்றும் சொல்லியாக வேண்டும் : கிராமத்தில் வெள்ளை சட்டை போட்டால் பரிதாப அடிப்படையில் திராவிட கட்சிகள் பார்ப்பதாக ஒரு தொனியை பேசி இருக்கிறார்! அப்படியே அந்த பக்கம் இன்னொரு புது ராஜ்மோகன் : செஞ்சோம் ,செஞ்சோம் ன்னு சொல்லுறாங்க ,எல்லாம் அம்பேதகர் கொடுத்த உரிமைன்னு கதறுறார் ,யாரு யா இல்லன்னு சொன்னது ! மொத்தத்தில் இந்த இரு பறையர் சாதி அமைச்சர்கள் சொல்ல வருவது : திராவிட ஆட்சிகள் ,தலித்துகளுக்கு ஏதும் செய்யவில்லை ,அம்பேத்கார் தான் எல்லாம் செய்தார் என்பதே நோக்கமாக புரிந்து கொள்ள முடிகிறது,என்ற புள்ளியை நோக்கி நகர்த்துறாங்க! செஞ்சதை சொன்னா சொல்லி காட்டுறோம் என்பாங்க ! மொத்தத்தில் பாஜகவுக்கு எப்படி : வேலூர் இப்ராகிம் ,தடா பெரியசாமி ,L முருகனோ அதே போல் விஜய் கட்சிக்கு : முஸ்தபா ,வன்னி ,ராஜ்மோகன் கோடரி காம்புகள் போல்! ராஜ்மோகன் கூட விடலாம் அவிங்க கட்சிக்கு விசுவாசமா பேசுது , வன்னியரசு வெற்றிக்கு உழைத்த அண்ணன் உதயநிதி யை எதிரில் வைத்துக்கொண்டு எப்படி இவ்வாறு பேசமுடிகிறது! #👨மோடி அரசாங்கம்
Arunachalam
663 views
9 days ago
பரந்தூர் விமான நிலையத்திற்கு திமுக ஆதரவு ஏன்? - ஒரு வர்க்கக் கோணப் பார்வை முன்னுரை இந்தியாவில் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்தபோது, "இவையெல்லாம் அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்திற்காகத்தானே?" என்று கேள்வி எழுப்பிய திமுக, தமிழ்நாட்டின் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தவுடன் அதை முழுமூச்சாக ஆதரித்தது. கொள்கை அளவில் முரண்பாடாகத் தெரியும் இந்த நிலைப்பாடு, மார்க்சிய வர்க்கக் கோணத்தில் பார்த்தால் முதலாளித்துவக் கட்சிகளின் இயல்பான செயல்பாடே என்பது தெளிவுறும். 1. வருமானக் கணக்கும் வர்க்க அரசியலும் விமான நிலையங்கள் அமைப்பதால் மாநில அரசுக்கு நேரடியாகப் பெரிய அளவில் வருமானம் கிடைப்பதில்லை என்பதை சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய அனுபவமே நமக்கு உணர்த்துகிறது. மாநில அரசுக்கு நேரடி வருவாய் இல்லாதபோதும், பரந்தூர் போன்ற திட்டங்களை முதலாளித்துவக் கட்சிகள் ஆதரிப்பதன் பின்னணியில் வர்க்க நலன்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளிலிருந்து ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்குப் பொருட்களை விரைவாக ஏற்றுமதி செய்ய முதலாளிகளுக்கு விமானப் போக்குவரத்துத் தேவைப்படுகிறது. மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்படும் இத்தகைய உள்கட்டமைப்புகள், இறுதியில் கார்ப்பரேட் முதலாளிகளின் மூலதனப் பெருக்கத்திற்கே பயன்படுகின்றன. 2. நில ஊக வணிகமும் அரசியல் லாபமும் துவக்கத்தில் எதிர்ப்புத் தெரிவிப்பது போலக் காட்டிவிட்டு, பின்னர் திட்டத்தை தீவிரமாக ஆதரிப்பதற்குப் பின்னால் நில ஊக வணிகம் (Land Speculation) முக்கியக் காரணியாக அமைகிறது. விமான நிலையம் அமையப்போகும் பகுதியைச் சுற்றியுள்ள நிலங்களை ஆக்கிரமிப்பதும், ரியல் எஸ்டேட் வணிகம் மூலம் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதும் ஆளும் வர்க்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இதன் மூலம் ஒருபுறம் கார்ப்பரேட்களுக்குச் சேவை செய்வதும், மறுபுறம் கட்சி சார்ந்த பின்னணியில் லாபம் அடைவதும் சாத்தியமாகிறது. 3. அறிவியல், வளர்ச்சி மற்றும் இயற்கையின் சமநிலை அறிவியல் கண்டுபிடிப்புகளும் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளும் ஆக்கப்பூர்வமான பக்கத்தையும், தேக்கநிலை அல்லது அழிவுப் பக்கத்தையும் கொண்டுள்ளன. வளர்ச்சி என்பது யாருக்கானது என்பதே இங்கு பிரதானக் கேள்வி. லாப நோக்கமும் இயற்கை அழிவும்: முதலாளித்துவத்தின் வரம்பற்ற லாப வெறியால் விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் அழிக்கப்படும்போது ஏற்பாடும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், சென்னை வெள்ளம் போன்ற பேரழிவுகளாக உருவெடுக்கின்றன. உழைக்கும் மக்களின் பாதிப்பு: இயற்கைச் சீற்றங்களால் பெரும் பாதிப்பைச் சந்திப்பது சாமானிய உழைக்கும் மக்களே தவிர, உயர்முடி முதலாளிகள் அல்ல. முடிவுரை தொழில்நுட்ப வளர்ச்சியை முற்றிலும் எதிர்ப்பது பிற்போக்குத்தனமானது; அதேபோல முதலாளிகளின் லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட அனைத்துத் திட்டங்களையும் "வளர்ச்சி" என்ற பெயரில் ஏற்றுக்கொள்வதும் தவறானது. பரந்தூர் போன்ற திட்டங்கள் உழைக்கும் மக்களுக்குப் பயன்படுகிறதா அல்லது முதலாளிகளின் மூலதனத்தைக் குவிக்கும் கருவியாகச் செயல்படுகிறதா என்பதை வர்க்கக் கண்ணோட்டத்தோடு பரிசீலிப்பதே முறையான அணுகுமுறையாகும். #👨மோடி அரசாங்கம்
Arunachalam
876 views
15 days ago
தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் தவெகவின் பட்ஜெட் – 2: மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பில் (Transmission) தனியார் நுழைய அனுமதி மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பில் தனியார் முதலாளிகளை அனுமதிக்கும் தவெக அரசின் PPP திட்டம், பொதுப் பணத்தில் உருவாக்கப்பட வேண்டிய மின்சார உள்கட்டமைப்பிலிருந்து கிடைக்கும் நீண்டகால வருவாயைத் தனியாருக்கு உத்தரவாதப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அரசிடம் பணம் இல்லை என்ற காரணத்தை முன்வைக்கும் அரசு, தனியார் நிறுவனங்கள் கடன் பெற்று முதலீடு செய்து உருவாக்கும் கட்டமைப்புக்கான கடனையும், வட்டியையும், இலாபத்தையும் இறுதியில் மக்கள் மின் கட்டணமாகச் செலுத்தும் நிலையை உருவாக்குகிறது. மின்சார உற்பத்தியில் தனியார்மயத்தால் ஏற்பட்ட சுமையைத் தொடர்ந்து, தற்போது மின் பரிமாற்றக் கட்டமைப்பிலும் தனியார்மயத்தின் அடுத்த கட்டம் தொடங்குகிறது.... #👨மோடி அரசாங்கம்