sinthanay thulirgal

saravanan.
491 காட்சிகள்
18 மணி நேரத்துக்கு முன்
#thannambikkay thulirgal விருப்பமா அவமானப்படுங்கள். என்னை நானே யாரென்று புரிய எனக்கு தேவைப்படும் ஓர் ஆயுதம் தான் அவமானம்! இது உண்மை என்பது போல், அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும். அவமானங்கள் தான், நம்மை திசை மாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்த அவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது. வெற்றியாளர்களின் ஆரம்பக் கட்ட அடித்தளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். அவர்கள் உயருவதற்கான படிக்கட்டுகளில் இந்த அவமானத்திற்கும், ஓர் இடம் இருந்திருக்கும். நம்மை அவமானப்படுத்துவோரை பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது. இது இழிவும் அல்ல; ஒரு பாடம். நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு. உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள். ஏற்பட்ட அவமானங்களுக்காக குமைந்து கொண்டிருக்காதீர்கள். நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும் போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத் தான் செய்யும். நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்துத் தான் ஆக வேண்டும். நம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகின்றனரே என்று, செடி ஒருநாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை; அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. "அந்தக் குப்பையை தனக்கான உயிர்ச் சத்தாக எடுத்துக் கொண்டு, பூக்களை, காய், கனிகளைத் தருவதில்லையா!" நாம் அந்தச் செடியைப் போல இருக்க வேண்டாமா? மற்றவர்களின் ஏளனங்களையும், அவமானங்களையும் உரமாக ஏற்று, வெற்றி நோக்கிச் செல்ல வேண்டாமா?*ன உங்களுடைய குறைகளைச் சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியைப் பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர்! ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… ‘நம்மை இவ்வளவு அவமானப் படுத்துகின்றனரே…’ என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். சோர்ந்து போகாதீர் அப்படி ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றியாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள். எல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என, எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தைக் கண்டு சோர்ந்து போய், அந்த காரியத்திலிருந்து விலகி விடுவது. மனித இனத்தைத் தவிர, மற்ற ஜீவராசிகள் எதையும் அவமானமாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதன் தான் ஒரு விஷயத்தில் அவமானப்பட்டால் துவள்வதும், அந்த வேலையே வேண்டாமென ஓடிப் போவதை வழக்கப்படுத்திக் கொள்கிறான். சாதிக்க விருப்பமா மனதை பக்குவபடுத்துங்கள் ( அவமானப்படுங்கள்)😊😊😊
saravanan
880 காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
#vaalkkay malargal மலர்கள்: மே 2 கவலை ஏன்? பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் என்பனவற்றில் பேராசை கொண்டு, கற்பனையால் சில வரவுகளை எதிர்பார்ப்பார்கள் அல்லது பிறரிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். செயலுக்குத் தக்க விளைவு என்பது இறையாற்றலின் திருவிளையாடலாக இருக்கிறது. இந்த உண்மையறியாமல் செயலின்றிக் கற்பனையால் ஒரு விளைவை எதிர்பார்ப்பதும், கடமைக்கும் உறவுக்கும் பொருந்தாமல் பிறரிடமிருந்துஒன்றை எதிர்பார்ப்பதோ அல்லது ஆசையின் பெருக்கத்தால் அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பதோ வெற்றியடைவதில்லை. இது இயற்கை நியதி. சிந்தனையின்றி இயற்கை நியதிப்படி அமைந்த விளைவுகளை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்பார்த்த ஆசையையும் அப்படியே வைத்துக் கொண்டு, ஏமாற்றத்தையும் ஒப்புக் கொள்ளாமல், ஏற்படும் மனப்பிணக்குதான் கவலை. இங்கு கடமைகளை ஒட்டி, செயல்களையொட்டித் திட்டமிட்ட விளைவுகளை எதிர்பார்ப்பது தவறாகாது. இது கடமையைச் சார்ந்ததாகும். கற்பனை எதிர்பார்ப்பும் நீதியான தோல்வியும் பற்றியே இங்கு சிந்திக்கிறோம். தோல்வி தான் இயற்கை நீதியென்று ஒப்புக் கொண்டால் தனது தவறு என்ற எதிர்பார்ப்புக் கலைந்து போகும். இந்த இரண்டையுமே ஒன்றோடு மற்றொன்றைச் சேர்க்காமல் வைத்துக் கொண்டு இரு நினைவுகளுக்கு மத்தியிலே மனதை வைத்துக் கொண்டு வருந்துவது தான் கவலை. எனவே, ஒருவர்படும் கவலையும் உள் ஒன்றிருக்கப் புறம் ஒன்று நினைக்கும் பொருந்தா மனநிலையே. இந்நிலையும் அறிவின் வளர்ச்சியைத் தடுக்கும். அறிவின் வளர்ச்சியுடைய உயிர்தான் ஆக்க வாழ்வு பெற முடியும். அறிவின் மதிப்புக் குறையாமல் உயிர் போனாலும் சரி அதை ஏற்றுக் கொள்வோம். அறிவு கெட்டு உயிர் நீடித்துப் பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு. - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹
saravanan
956 காட்சிகள்
14 நாட்களுக்கு முன்
#vaalkkay malargal மலர்கள்: ஏப்ரல் 29 அறிவாட்சித்தரம் மனித இன வாழ்வில் விஞ்ஞானம் வளர்ந்திருக்கின்றது. விரைவான போக்குவரத்துச் சாதனங்களும், விரைவாகச் செய்திகள் பரவும் வசதிகளும் பெருகியுள்ளன. உலகில் எந்த மூலையில் எந்த இடத்தில் ஒரு மனிதனால், ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அது உலகில் எந்த மூலையில் வாழும் மக்களுக்கும் விரைவாகப் பரவும் வசதி பெருகியுள்ளது. பொருளாதாரம், அரசியல், மதம் என்ற மூன்று துறைகளாலும், மனித இன வாழ்க்கையும், பண்பாடும் ஒன்றிணைக்கப்பட்டும், பாதுகாக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும் வருகின்றன. இந்தச் சூழ்நிலைகளை மனதில் கொண்டு சிந்தித்துப் பார்த்தால், மனித இனத்திற்குப் பறித்துண்டு வாழும் முறை பொருந்தாது என்பதை உணரலாம். தேவையும் இல்லை. பழக்கப் பதிவுகளாலும், சிந்தித்துத் தெளிவு பெற்றுத் திருந்தி வாழ முடியாத தேக்கமுற்ற மனநிலையாலும், தேவையே இல்லாத துன்பமே விளைக்கும் தீய செயல்கள் மனித வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலைமை மாற வேண்டுமெனில், உலக அறிஞர்கள் பலர் கூடிச் சிந்தித்து. திட்டமிட்டு, கூட்டாகச் செயல் புரிய வேண்டியுள்ளது. உண்மையை விளங்கிக் கொள்ளவும், பழக்கப் பதிவுகளை மாற்றிப் பறித்துண்ணும் வாழ்விலிருந்து திருத்தம் பெறவும் உதவக்கூடிய ஆன்மீகக் கல்வி உலகமெங்கும் பரவ வேண்டும். முதலில் அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும், பொருள்துறைத் தலைவர்களும், கல்வித்துறைத் தலைவர்களும் பிரம்மஞானம் எனும் உயர் அறிவு பெற வேண்டும். ஏனெனில் இத்தகைய தலைவர்களுடைய வாழ்க்கை வழியையே துணைகொண்டும், அடிபற்றியும் மக்கள் வாழ்வு நடைபெற்று வருகிறது. பிரம்ம ஞானம் எனும் அறிவின் பேரொளிதான் மனிதனை முதலில் விலங்கினச் செயல் பதிவுகளிலிருந்து விடுவிக்கும். மேலும் புலன் கவர்ச்சிகளில் மயக்கமும், பறித்துண்ணல் என்ற தீயவினைப் பதிவுகளும் எந்த அளவில் குறைகின்றனவோ, அந்த அளவுக்குப் பிரம்ம ஞானம் தானாக ஒளிவிடத் தொடங்கும். படிப்படியாக, பிரம்மமே தானாக இருக்கும் “அறிவாட்சித் திறம்” உண்டாகும். - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹
saravanan
465 காட்சிகள்
17 நாட்களுக்கு முன்
#thannambikkay thulirgal நீண்டு கொண்டே போனால் சலிப்பு ஏற்படும் என்பதாலே நிறைய கதாபாத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது விதி.*_ _ஒரு மனிதர் ஒரு கலைஞரிடம் கேட்டார்,_ _கல்லிலிருந்து இவ்வளவு அழகான பொருட்களை நீங்கள் எப்படி உருவாக்குகிறீர்கள்_ _*அதற்கு அவர் பதிலளித்தார். அழகு ஏற்கெனவே அங்கே மறைந்துள்ளது.*_ _*நான் தேவையற்ற கல்லை மட்டும் அகற்றுகிறேன்.*_ _அதுபோல உங்கள் மகிழ்ச்சி உங்களுக்குள்ளேயே மறைந்துள்ளது._ _உங்கள் கவலைகளை மட்டும் நீக்கி விடுங்கள்._
saravanan
1.2K காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
#vaalkkay malargal மலர்கள்: ஏப்ரல் 22 பற்றறிவு, கற்றறிவு, முற்றறிவு தூலம், சூக்குமம், காரணம் என்ற மூன்று சொற்களைக் கேட்டிருப்பீர்கள். இவற்றுள் தூலமாகியது உடல், சூக்குமகாகியது உயிர், காரணம் என்பது பிரம்மம் அல்லது மெய்ப்பொருள். இந்த உடலுக்கு மையப்புள்ளி, சுற்று வட்டம் இரண்டும் உண்டு. அதாவது உடலுக்கு எல்லை உண்டு. உயிருக்கும் மையப்புள்ளி உண்டு; ஆனால் அதனுடைய சுற்றுவட்டம் ஒரு எல்லைக்குள் அடங்காது. மெய்ப்பொருளுக்கோ மையப்புள்ளியும் இல்லை, சுற்று வட்டமும் இல்லை. அந்த உயிருக்கு மனமானது விரியும் போது அது பிரம்மம் வரையில் போவதனால் சுற்றுவட்டம் இல்லை. ஆனால் பிரம்ம நிலைக்கு மையப்புள்ளியும் இல்லை, சுற்று வட்டமும் இல்லை. இங்கு பிரம்மமே அறிவாக இருப்பதனால் அந்த பிரம்மம் என்ற நிலையிலே முற்றறிவு (Total Consciousness). அது உயிராக வந்ததனால் இயங்கிப் பெற்ற சுற்றறிவு (Character) இதுவரையில் இயங்கிப் பெற்ற பதிவுகள் அனைத்தையும் அடக்கமாகக் கொண்டது. அதற்கும் மேலே இந்த உடல் வரையில் நின்று புலன்கள் மூலமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது அது பற்றறிவு. இவ்வாறாகத் தானே பற்றறிவு, கற்றறிவு, முற்றறிவு என்று மூன்றாகச் சொல்லலாம். இந்த மூன்று நிலையிலும் எங்கேயும் இருப்பது அறிவு ஒன்றுதான்; இருக்கும் நிலைக்குத் தகுந்தவாறு, அதனுடைய தன்மைக்குத் தகுந்தவாறு வேறுபடுகின்றது. தெளிவினாலே, தவத்தினாலே, பல பிறவிகள் எடுத்த தொடர்பினாலே அவர்களுடைய Character இந்த மூன்று நிலையிலே எங்கே வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால், விகிதாச்சாரம் என்ன? அந்தந்த இடத்தில் ஏற்பட்ட பதிவு அழுத்தம், வலுவு எந்த விகிதாச்சாரத்தில் இருக்கிறதோ அந்த அளவு அதிகமாக இருக்கும். - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹
saravanan
625 காட்சிகள்
22 நாட்களுக்கு முன்
#sinthanay thulirgal ! சுத்தியல் ஒன்றுதான் மிக வலிமையானவன் என்று நினைத்துக் கொண்டு இருந்தது. ஒருநாள் சாவி தொலைந்து விட்ட பூட்டைத் திறக்க நினைத்து அந்த சுத்தியலை எடுத்துப் பூட்டை அடித்தான் வீட்டுக்காரன். பூட்டிற்குக் கொஞ்சம் காயம் ஏற்பட்டது. ஆனால் பூட்டு உடையவில்லை. அவன் மீண்டும் அடித்தான்; ஆனாலும் பூட்டு திறக்கவில்லை. அப்போது அவன் மனைவி “பூட்டை உடைக்காதீர்கள்; சாவி கிடைத்து விட்டது” என்று கத்திக்கொண்டே ஓடி வந்தாள். அவன் சாவியை வாங்கிப் பூட்டை மிக எளிதாகத் திறந்து விட்டான். சாவியையும் சுத்தியலையும் அருகிலேயே வைத்து விட்டுப் போய்விட்டான். சுத்தியலுக்கோ மிக அவமானமாக இருந்தது. “மிக வலிமையான நம்மால் திறக்க முடியாத பூட்டை, இந்தச் சிறிய சாவி திறந்து விட்டதே” என்று வருந்தியது. சுத்தியல் சாவியிடம் பேச்சுக் கொடுத்தது. “நான் உன்னைவிட மிகவும் #வலிமையானவன்; ஆனால் நான் பூட்டைத் திறக்க மிகவும் கஷ்டப்படுகிறேன். நீ என்னைவிட மிகவும் #எளிமையானவன்; ஆனால் எளிதில் பூட்டைத் திறந்து விட்டாயே; என்ன காரணம்?” என்று சுத்தியல் சாவியிடம் கேட்டது. அதற்கு சாவி சொன்னது “நீ என்னைவிட பலசாலிதான். ஆனால் நீ பூட்டை உடைக்க அதன் தலையில் தட்டுகிறாய். அதனால் அதுவும் தன் பலத்தைக் காட்டி உன்னை எதிர்க்கிறது. எனவே உனக்கு பூட்டைத் திறப்பது கடினமான வேலையாகிறது.” “நான் பூட்டைத் திறக்க அதன் இதயத்தைத் தொடுகிறேன். பூட்டும் என்னைப் புரிந்து கொண்டு திறந்து கொடுக்கின்றது; எனவே என் வேலை எளிதாகின்றது.” என்று சாவி சொன்னது. நாமும் மற்றவர் #மனம் என்னும் பூட்டைத் திறக்க, #அதிகாரம் என்னும் சுத்தியல் கொண்டு அடிக்காமல் #அன்பு என்னும் சாவியைப் பயன்படுத்தலாமே! 😊😊😊
saravanan
698 காட்சிகள்
26 நாட்களுக்கு முன்
#sinthanay thulirgal *சிந்தனை துளிகள்* 🤔 *மரணம் எங்கும் இருப்பது!* ஆனால், அது தனக்கில்லை என்று தான் ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்... மனித மனதின் மாபெரும் ஆழமான மோசடி இதுதான்... *மரணம் பற்றிய உண்மையை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்காதவரை, அந்த மோசடியில் தான் அகப்பட்டுக் கொள்வோம்..!!* *--ஓஷோ* 🍁🪻🍁🪻🍁🪻🍁🪻
saravanan
1.2K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#vaalkkay malargal மலர்கள்: ஏப்ரல் 6 எண்ண அலைகள் இயற்கையை உணர்ந்து அறவழி ஒழுகி அறியாமையைத் தீய்க்க வல்ல ஒரு மதிப்புள்ள உயர் மனிதனாக இருந்தும் தன் தகைமையும், இயற்கையாற்றலின் இயக்க நியதியும் அறியாமல், மனிதன் தனது எண்ண ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். தன் தேவை, தற்கால இன்பம் என்ற அளவில் குறுகி உணர்ச்சி வயமாகிப் பிறர்க்கும், பிற்காலத்திற்கும் தீமை விளைவிக்கும் வகையில் செயல் புரிகிறான். பிறரைத் தாக்கி தீமை விளைவிக்கும் எண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்கிறான். தன்குடும்பம், சமுதாயம், வேறு நாட்டு மக்கள் இவர்கள் மேல் சினம், வெறுப்பு, பகை கொண்டு அவன் எண்ண அலைகள் எப்போதும் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறான். இவ்வெண்ண அலைகள் அணு ஆற்றலாகவே பரவி, மனித இன உடல்களிலும், மூளையிலும் பொருந்தா உணர்வுப் பதிவுகளாகவும்அமைகின்றன. இப்பதிவுகளைப் பாவப் பதிவுகள் என்றும் சாபம் என்றும் அறிவறிந்த முன்னோர்கள் கூறியுள்ளனர். இயற்கை நியதியறியாமை என்ற மருளால் மனிதன் மனிதனுக்குப் பகையாகி பொதுவாக, சமுதாயமே சாபத்துக்குள்ளாகின்றது. ஒவ்வொருவரும் பிறருக்குத் துன்பமளிக்க வேண்டும் என்று விரும்புவதும், அதற்குத் துணிந்து செயல்புரிவதும், பெரும்பாலான மக்களிடம் இயல்பாக வளர்ந்து வருகின்றது. மனித எண்ண ஆற்றல் இயற்கை ஆற்றலின் ஒரு பகுதி இயக்கமே என்று முன்னரும் விளக்கியிருக்கின்றேன். அதன் விளைவு என்னவாகும்? மனித குல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும் பெருகும். இயற்கைச் சீற்றம், போர், மழையின்மை இவ்வாறாக இயற்கை ஆற்றலும், மனித ஆற்றலும் கூடி மனித எண்ண ஆற்றலால் தீய விளைவுகளாகின்றன. மனிதன், மனிதன் மதிப்பை உணர்ந்து பிறர்க்குத் துன்பமளிக்காமலும், இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும், எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்று மனமார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹
saravanan
569 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#sinthanay thulirgal தெரியாதவனும்.*_ _*சிந்திக்கத் தெரியாதவனும்.*_ _*வாழ்வில்*_ _*சிறப்பு பெறுவதே இல்லை.*_ _உண்மையைப் பேசி_ _வாழ்வதே_ _சிறந்ததொரு தர்மம்._ _பொருத்தமாகப் பொய் பேசக் கூடியவர்கள் தான் கடைசி வரை யோக்கியவராகவே‌ இருந்து வருகிறார்கள்._ _*நீங்கள் கோபமாக இருக்கும்போது,*_ _*உங்கள் வார்த்தைகள் அம்புகளாகின்றன.*_ _*நீங்கள் கவனத்துடன் இருக்கும்போது,*_ _*உங்கள் வார்த்தைகள் பாலங்களாகின்றன.*_ _பொறுமை எவ்வளவு முக்கியம் என்பதை பொறுமையாக தான் கற்றுத் தருகிறது இந்த வாழ்க்கை._ _*ஒவ்வொரு அமைதியான வாழ்க்கைக்குப் பின்னாலும் ஏராளமான தியாகங்கள் உள்ளன.*_ _உங்கள் மன அமைதிக்கான திறவுகோலை மற்றவர்கள் பிடித்துக் கொள்ள அனுமதிக்காதீர்கள்._
saravanan
609 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#sinthanay thulirgal எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும் உறங்கிக்கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும்...!!! வாழ்க்கை ஒரு போராட்டம் அல்ல — ஒரு இயக்கம். நீ நகர்ந்தால் பாதை உருவாகும். நீ நின்றால் தடைகள் பெரிதாகும். முயற்சி செய்யும் மனிதனுக்கு மலை கூட வழி விடும். ஆனால் செயலற்ற மனிதனுக்கு சிறிய தடையும் பெரிய சிறையாக மாறும். --- 1️⃣ செயல் தான் வாழ்க்கையை நகர்த்தும் சக்தி நீ எவ்வளவு கனவு கண்டாலும், எவ்வளவு திட்டமிட்டாலும், அது செயலாக மாறவில்லை என்றால் வாழ்க்கை முன்னேறாது. எழுந்து ஒரு சிறிய அடியை எடுக்கும் தருணமே மாற்றத்தின் ஆரம்பம். --- 2️⃣ முதல் அடி எடுத்தால் பயம் குறையும் தொடங்கும் முன் எல்லாம் கடினமாக தோன்றும். ஆனால் நீ ஒரு முயற்சி எடுத்தவுடன், அந்த பயம் மெதுவாக குறையும். செயலே பயத்தை உடைக்கும். --- 3️⃣ முயற்சி செய்தால் பாதை தெளிவாகும் நீ ஆரம்பிக்கும் முன் முழு பாதையும் தெரியாது. ஆனால் நடக்கத் தொடங்கினால், அடுத்த அடி தானாக தெரியும். வாழ்க்கை அப்படித்தான் — அது நடக்கிறவர்களுக்கு மட்டுமே திசை காட்டும். --- 4️⃣ செயலற்ற நிலை மனதை சிறைபிடிக்கும் நீ எதையும் செய்யாமல் இருந்தால், உன் மனம் பயம், சந்தேகம், சோம்பல் ஆகியவற்றால் நிரம்பிவிடும். அந்த நிலை தான் உண்மையான சிறை. --- 5️⃣ சிறிய முயற்சி பெரிய தடைகளை உடைக்கும் மலை பெரியதாக தோன்றலாம். ஆனால் அதை ஏறும் மனிதன் அதை துண்டுகளாகப் பார்க்கிறான் — ஒரு அடி, ஒரு மூச்சு, ஒரு முயற்சி. அந்த சிறிய முயற்சிகள் சேர்ந்து மலை கூட தாண்டப்படலாம். --- 6️⃣ சோம்பல் மெதுவாக வாழ்க்கையை கட்டுப்படுத்தும் சிலந்தி வலை முதலில் பலவீனமாக தோன்றும். ஆனால் அது மெதுவாக பிடிக்கும். அதுபோல் சோம்பல், தாமதம், அலட்சியம் — இவை மெதுவாக உன் வாழ்க்கையை கட்டுப்படுத்தும். --- 7️⃣ செயலில் இருக்கும் மனிதன் வாய்ப்புகளை காண்பான் நடக்கிற மனிதன் சுற்றி இருக்கும் வாய்ப்புகளை கவனிப்பான். நின்று கொண்டிருப்பவன் பிரச்சனைகளையே அதிகமாக காண்பான். --- 8️⃣ முயற்சி தன்னம்பிக்கையை உருவாக்கும் நீ முயற்சி செய்யும் ஒவ்வொரு தருணமும் உன் மனதில் “நான் செயலில் இருக்கிறேன்” என்ற நம்பிக்கையை உருவாக்கும். அந்த நம்பிக்கை உன்னை தொடர்ந்து நகர்த்தும். --- 9️⃣ வாழ்க்கை இயக்கத்தில் தான் உயிருடன் இருக்கும் நீர் ஓடினால் தான் சுத்தமாக இருக்கும். நின்றால் துர்நாற்றம் வரும். அதுபோல மனிதனும் செயல்பட்டால் தான் வளர்ச்சி அடையும். --- 🔟 எழும் மனிதனுக்கு உலகம் உதவும் நீ உண்மையாக முயற்சி செய்ய ஆரம்பித்தால், சூழ்நிலைகள் கூட மெதுவாக உனக்கு சாதகமாக மாறும். உலகம் முயற்சி செய்பவர்களுக்கு வழி கொடுக்கும். --- 🌄 முடிவுரை நிற்காதே. சோம்பிக்காதே. தொடங்கு. எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கிக்கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும்...!!! ஒரு அடி போதும். பாதை உருவாகும். நீ நகர்ந்தால் — உலகம் உன்னுடன் நகரும். 🔥🚀✨ 🌹🌹🌹