# 🙏 சிவன் பக்தன் 🙏🕉️🫀💯💞📿🤗

🫂 тнαℓαραтнι 🫂νιʝαу 🫂 αииα
1.7K views
1 days ago
#📿 ஓம் நமசிவாய 🕉️அன்பே சிவம் 🤗⚛️✡️ #🙏நமசிவாய ஓம்✨ #🕉️ எல்லா 🤗புகழும் 📿ஈசன் ஒருவனுக்கே 🌍⚛️💯✡️ ##🕉️ சிவனை நினை 🕉️📿சிவனே துணை 📿🤗 ## 🙏 சிவன் பக்தன் 🙏🕉️🫀💯💞📿🤗
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.4K views
27 days ago
AI indicator
காலை சிவசிந்தனை ===================== எந்த பிறவி எடுத்தால் என்ன? சிவபக்தியே முக்கியம் ============================ ஆதிசங்கரர் சிவானந்த லஹரி பாடல்=10 நரத்வம்....... தேன வபுஷா || மனிதப்பிறவியோ,தேவப் பிறவியோ,அல்லதுமலைகளிலும்,காடுகளிலும்அலைந்துதிரியும்மிருகங்கள்,கொசு,பசு,புழு,பறவைபோன்றஎந்தப் பிறவியாயினும் ஏற்படட்டும்.பரமேஸ்வரா எப்பொழுதும் உன்னுடைய திருவடித்தாமரைகளை விட்டுநீங்காமல்இருந்து தியானம் செய்து அந்தபேரானந்த வெள்ளத்தில் விளைய மகிழும் உள்ளம் மட்டும்வாய்க்குமானால், எத்தகையஉடலைப் படைத்தால்தான் என்ன குறைவு நேர்ந்துவிடப் போகிறது? அப்பர் பெருமான்தேவாரம் =========================== பாடல் எண்: 8 புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தரவேண்டும் இவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கியிருந்தருள் செய்பாதிரிபுலியூர்ச் செழுநீர் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே- பொருள்; இந்தப் பூவுலகில் வழிபடுவோர் எல்லோரிடத்திலும் இரக்கம் கொண்டு கருணை புரியும் செம்மேனி அம்மானே! கங்கை நதியை செஞ்சடையில் வைத்து, திருப்பதிரிப் புலியூரில் இருந்து கொண்டு அருள் புரியும் பெம்மானே! நான் புழுவாகப் பிறந்தாலும் உன்னை மறவாதிருக்க வரம் தா என்று அப்பர் பெருமான் இறைஞ்சுகிறார். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.2K views
27 days ago
AI indicator
காலை சிவசிந்தனை ==================== ஸ்ரீ பத்மமஹாபுராணம் கூறும் துரீயசிவம்: --------------------------------------------------------- பத்மமஹாபுராணத்தின்,பாதாளகாண்டத்தில் 108ஆம் அத்யாயத்தில் ஸ்ரீ ஶம்புவானவர் ஸ்ரீராமரிடம் பஸ்மம் தயாரிக்கும் முறை பற்றி விளக்குகிறார்.முதலில் துரீயமூர்த்தியான ஸதாசிவரிடமிருந்து மும்மூர்த்திகள் தோன்றியதை விளங்குகிறார். ஶம்பு கூறினார், ====÷========== 5.108.2-8.ஹே ராமா!நான் உனக்கு அனைத்து பாபங்களையும் அழிக்கவல்லதான பஸ்மம் எவ்வாறு தோன்றியது என்பதையும்,அதனை நினைத்தாலும்,அதைப்பற்றிக் கூறினாலும் என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் கூறுகிறேன். ஹே நராதிபகவனமாகக் கேட்பாயாக.ஒருவரேயானவரும்,ஶாஶ்வதமானவரும்,ப்ரஹ்மாவால் வணங்கப்படுபவரும்,முக்கண்ணரும்,குணங்களுக்கு ஆதாரமும்,குணங்களுக்கு அப்பாற்பட்டவரும்,அக்ஷரமும்,அவ்யயருமான ஸதாஶிவரானவர்,ஒருமுறை தன்னுள் இருக்கும் மூன்று குணங்களையும் கண்டு,ஸ்ருஷ்டியை ஆரம்பிக்க விருப்பம் கொண்டார். அம்மூன்று குணங்களும் மூன்று வேதங்கள் என்று அறியவேண்டும்.தன்னை மூன்றாகப் பிரித்துக்கொண்டு,அந்த இடத்தையும் மூன்றாகப் பிரித்துத்,தனது வலதுபக்கத்தில் மகனான ப்ரஹ்மாவைப் படைத்தார்,இடதுபக்கத்தில் ஹரியைப் படைத்தார்.தனது முதுகுப்பக்கத்திலிருந்து மஹேஶானரைப் படைத்தார்,இவ்வாறு வலிமையானவரான அவர் மூன்று மகன்களைப் படைத்தார்.அம்மூவரும் பிறந்த உடனேயே ப்ரஹ்மா,விஷ்ணு,மஹேஶ்வரர் எனும் மூன்று தெய்வங்களாக ஆனார்கள்.அவர்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு கூறினர்,"நீங்கள் யார்? நாம் யார்?"அம்மூன்று மகன்களிடமும் சிவபெருமான் கூறினார்,"நீங்கள் அனைவரும் எனது மகன்கள்,நான் உங்களின் தந்தை".ஹே புத்ரர்களே!அனைத்து செயல்களுக்கும் காரணமாக அமைந்த இம்மூன்று குணங்களையும் ஏற்பீர்களாக. " 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.3K views
28 days ago
AI indicator
காலை சிவ சிந்தனை =========================== 140.    ஓம் ராமேஸ்வராய நம. (வேதஸார சிவ ஸஹஸ்ர நாமம்) ராமனின் தலைவன் -சிவபெருமான் உமா ஸம்ஹிதையில், ராமபிரான் கோதாவரி தீரத்தில் அனேக லிங்கப்ரதிஷ்டைகளை செய்து வழிபட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது. ப்ரஸித்தம். ராமகிரி ======= பத்ம புராணத்திலும் கோதாவரி கரையிலுள்ள ராமகிரியில் ஓர் சிவாலயம் ராமபிரானால் நிர்மாணிக்கப்பட்டு பூசிக்கப் பெற்றது. ஸேதுபந்த க்ஷேத்ரமான ஸ்ரீராமேஸ்வரத்திலும் ராமநாதனாக ராமபிரானால் ஸ்தாபிக்கப் பெற்று ஜோதிர் லிங்கமாய் ஒளிரும் நிலை ப்ரஸித்தமன்றோ? 'தவஸ்ரியே மருதோ மர்ஜயந்த ருத்ரயதே ஜனி: சாருசித்ரம்' என்று ஸ்ருதி.வாக்கியம். ராமஸ்ய ஈய்வர: ராமேன கோதாவர்யாதௌ பஹூனி லிங்கானி ப்ரதிஷ்டாபிதானி இதி உமாஸம்ஹிதாயாம் ப்ரஸித்தம் | கிஞ்ச பாத்மேபுராணேஃபி - அத ராமகிரௌ ராம: புண்யே கோதாவரீ தடே! ஸ்ரிவலிங்கம் ப்ரதிஷ்டாப்ய இதி ப்ரஸித்தம் | ஸ்ஸிவலிங்க ப்ரதிஷ்டாதா இதி ஸ்ரீராமவிஷய ஸ்துதிரபி ப்ரஸித்தா | ஸேதுபந்தே ராமேஸ்வர ராமநாத இதி ஸ்ஸிவஸ்ய ராமேஸ்வரத்வமிதி ப்ரஸித்தமேவ | தவர்ரியே மருதோ மர்ஜயந்த ருத்ரயதே ஜனி: சாருசித்ரம் இதி ஸ்ருதி: II =========================== ராமாயணம் ========== ராமேஸ்வரம் =========== அத்ர பூர்வம் மஹாதேவ: ப்ரஸாதமகரோத் ப்ரபுரிதி ராவணவதானந்தரம் புஷ்பகமாருஹ்ய ஸீதயா லக்ஷ்மணேன் வானரேந்த்ரஸ்ச ஸஹ அயோத்யாம் ப்ரதி நிவர்த்தமானஸ்ய ராமஸ்ய ஸ்வஸ்தாபித ஸிவலிங்கம் ப்ரதர்ஸ்ய கதனம்ஸ்ரீமத்ராமாயணே இதன் பொருள் :- இவ்விடத்திலே மஹாதேவர் தனக்கு அருளியதால் ப்ரபு இவர் என ராவணவதம் ஆன பின்னர் புஷ்பக விமானமதில் அமர்ந்து ஸீதை லஷ்மணருடன் வானரர்க்கதிபதி சுக்ரீவருடன் கூடியவராக அயோத்தி திரும்புகையில் ஸ்தாபிக்கப் பெற்றவர் ஸ்ரீ ராமேஸ்வரன் என ஸ்ரீ மத் ராமாயணம் கூற்று. சிவ ஸஹஸ்ரநாம பாஷ்யத்திலிருந்து.... 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள் #ஓம் நமசிவாய