தமிழ்த்தேசியம்

Rationalist
950 views
2 months ago
இன்று ஈரோடு... தமிழர்களுக்கு, ஒன்றிய அரசு பணியிடங்களில் வேலையை நிராகரிக்கும் பாஜக அரசு, இந்தியை, இந்தி நபர்களை தமிழர்கள் மீது திணிக்கிறது. தமிழர்களுக்கான பணியிடங்களில் வடநாட்டு இந்தி பேசும் மாநிலத்திலிருந்து ஆட்களை நியமனம் செய்கிறார்கள். இதையெதிர்த்த மே17 போராட்டம், தோழர் சிவா திலீபன் அவர்களின் விருப்பப்படி முழுவீச்சுடன் தொடர்கிறது. தமிழர்களே தயக்கம் ஏன்? தடைகளை உடைத்து அன்னைத் தமிழ் காக்க வாருங்கள்! #இந்தி திணிப்பு #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு தமிழருக்கே! #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம்
Rationalist
607 views
2 months ago
இதுதான் மே17 இயக்கம் நடத்தும் 'இந்தி அழிப்பு போராட்டம்' உருவாக்கிய கேள்வி. "...ஏன் இந்தி, எதற்காக திணிக்கப்படுகிறது.. எங்கே எங்கள் தமிழர்களுக்கான வேலைகள்? .." இதைத்தான் மே17 இயக்கம் எழுப்பியது. இதை இன்று சாமானிய தமிழர்கள் கேட்கிறார்கள். இந்த கேள்வியை சாமானிய மக்களிடம் கொண்டு சென்றதில் மே17 இயக்கத்தின் போராட்டம் வெற்றியடைந்திருக்கிறது. பாஜக, நாம்தமிழர் கும்பல்களால் அவதூறுகள் பரப்பப்பட்டாலும், தமிழர்கள் மே17 இயக்கத்தின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். "எமது இளைஞர்களுக்கு ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஏன் வேலை மறுக்கப்படுகிறது? ஏன் இந்தி பேசுபவருக்கு தமிழ்நாட்டு வேலைகளில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது?.." மே17 இயக்கம் எழுப்பிய கேள்வி சாமானிய தமிழ் மக்களிடமிருந்து எழுகிறது. பாஜக தலைவரிடம் நேரடியாக, துணிச்சலாக கேள்வி எழுப்பிய அந்த மூதாட்டி எம் தமிழன்னையின் குரல். அந்த தாயார், தமிழிசையை நோக்கி தொடர்ந்து கேள்வியை எழுப்பி இருக்கிறார். இதனால் அவரை கூட்டத்திலிருந்து பாஜகவினர் அப்புறப்படுத்தியுள்ளார்கள் பாஜகவை அம்பலப்படுத்தி, தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்திய அந்த அன்னைக்கு எமது புரட்சிகர வாழ்த்துகள். எளிய சாமானிய உழைக்கும் மக்களுக்கு எமது கோரிக்கைகள் சென்றடைந்திருக்கின்றன என்பதே எமது போராட்டத்தின் வெற்றி. தோழர் சிவா திலீபன் தன்னை கொடையாக கொடுத்து வலுப்படுத்திய போராட்டத்தின் நியாயம் மக்களை சென்றடைந்துள்ளது. பதில் சொல் சங்கிகளே? எங்கே எங்கள் வேலை? ஏன் இங்கே இந்தி? எமது வேலைகளை வடநாட்டானுக்கு தாரை வார்க்கும் பாஜகவே பதில் சொல்! மே17 இயக்கத்தின் போராட்டம் தொடரும்.. தமிழ்த்தேசிய அரசியலின் சமரசமற்ற இயக்கமாக எமது தோழர்கள் போராட்டத்தை தொடர்வார்கள். #தமிழ்நாடு தமிழருக்கே! #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம் #தமிழின எதிரி RSS-பாஜக #இந்தி திணிப்பு
Rationalist
751 views
2 months ago
வடநாட்டு பொருளாதார வணிகப் படையெடுப்பும் ஆதிக்கமும் தென்னாட்டில் இப்பொழுது வலுத்துக்கொண்டு வருவதால் வடநாட்டவர்க்கு எளிதான இந்தி இங்கு பரவுமேயானால் மேலும் மேலும் இந்த படையெடுப்பு வளர வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்பது மட்டுமல்லாமல் ஊர்தோறும் சவுகார்பேட்டைகள் தோன்ற வழியேற்படும். ஏராளமான பொருள் வலிவுபடுத்த வடநாட்டாரும் மேலும் மேலும் அந்த குடியேறி விடுவார்கள். தென்னாடு - திராவிடம் - தமிழகம் என்றென்றும் நிலைத்த அடிமையாக வாழும்படி நேரிடும். இது வரலாறு கற்பித்து வரும் பாடமாகும் - நாவலர் நெடுஞ்செழியன் நூல்: மொழிப் போராட்டம் #தமிழ்த்தேசியம் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழின எதிரி RSS-பாஜக #இந்தி திணிப்பு #📺அரசியல் 360🔴
Rationalist
1.1K views
2 months ago
மோடியின் கடந்த வருகையின் போது, "... தமிழ்நாட்டு ரயில் நிலையங்களில் திணிக்கப்பட்ட இந்தியை மாற்றிடுங்கள், இல்லையெனில், ஆதிக்க இந்தியை நாங்கள் அழித்திடுவோம்.." எனும் போராட்டத்தை மே17 நடத்தியது. அறிவித்ததை போல, இன்றைய மோடி வருகையின் போது மே17 தோழர்கள் இந்தியை அழித்தோம். சொன்னதைச் செய்தோம். இன்று 11-03-2026 முதல் மொழிப்போரில் ஈகியரான தாலமுத்துவின் நினைவுநாள். இந்த நாளில், மோடியின் வருகையை முன்னிட்டு போராட தொடங்கினோம். சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகக்ளை அழித்து முழக்கமிட்டோம். வெகுசன மக்கள் எங்களோடு இணைந்து முழக்கமிட்டார்கள். ஒரு தம்பதியினர் எங்களது போராட்ட பேனரை கையில் ஏந்திக் கொண்டனர். பயணிகளாக காத்திருந்தவர்கள் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர். மக்கள் மெளனமாக நின்று கவனிக்கவில்லை, எங்களுடன் கைகோர்த்தார்கள். மக்களின் புரட்சிகர மனநிலை குன்றவில்லை. போராட்டம் விரிவடையுமெனும் நம்பிக்கை பிறந்தது. இந்தி திணிப்பை தமிழர்கள் ரசிக்கவில்லை. இந்தி திணிப்பால் வேலைவாய்ப்பு பறிபோவதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். "..ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு தேர்வுகள் இந்தி-ஆங்கிலத்தில் மட்டும் இருக்கின்றன..இதனால் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் எளிதாக தேர்ச்சி பெற்று ஒன்றிய அரசு வேலைகளை ஆக்கிரமிக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். வங்கிகள், ரயில்வே, இன்சூரன்ஸ், என்.எல்.சி, வருமானவரி, சுங்கவரி என அனைத்து இடங்களிலும் இந்தி பேசும் மாநிலத்தவர்களே அதிகம். பஞ்சாப், மராத்தியம், வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலத்தவர்களும் தேர்வாவதில்லை... ஆகவே இந்தி கற்றுக்கொண்டாலும், நமக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பதை மோடி அரசு உறுதி செய்திருக்கிறது. இதனால் தான் சொல்கிறோம், இந்தி ஒழியட்டும், தமிழ் வெல்லட்டும்..." என முழக்கமிட்டு உரை நிகழ்த்திய போது வெகுமக்கள் கைதட்டினார்கள், ஆமோதித்தார்கள்... இந்த எழுச்சிகரமான போராட்டத்தில் சென்னை பார்க் நிலையத்தில் இருந்த இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன. போராட்டத்தில் பங்கெடுத்து தீவிரமாக போராடிய தோழர் சிவா திலீபன் ரயில் முன் சென்று தம்மையே கொடுக்க முயன்று, படுகாயமுற்று உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். போர்க்குணத்தோடு நடந்த இப்போராட்டம் குறித்து பெரும்பாலான முன்னணி ஊடகங்களில் கவனப்படுத்தும் செய்தியை காண இயலவில்லை. ஓரிரு வரி செய்திகளாக சில ஆளும்கட்சி ஆதரவு சேனல்கள் ட்வீட் போட்டிருந்தன. திராவிடம் -பெரியார் என பேசும் பெரும்பாலான ஊடகங்கள் வரி செய்தியாகக் கூட வெளியிடவில்லை. திடீர் பெரியாரிஸ்டு யூட்யூபர்களும் செய்தியாக்கவில்லை. போலி தமிழ்த்தேசியவாதிகள் பார்ப்பன கடப்பாரையை கெட்டியாக பிடித்துக்கொண்டு, இந்தி திணிப்பை கண்டுகொள்ளாமல் வாய்மூடி நிற்பது வழக்கமான விடயம் தான். அதிகாரத்தில் இல்லாத அமைப்புகள் கார்ப்பரேட் ஊடகத்தவரை நம்பி இயங்க இயலாது. பெரியாரிய, முற்போக்கு தமிழ்த்தேசிய தோழமைகள், சனநாயக ஆற்றல்கள் இதுபோன்ற போராட்ட செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமென வேண்டுகிறேன். உங்களது சமூக வலைதளங்கள் வழியே இச்செய்திகள் மக்களை சென்று சேர உதவிடுங்கள். நமக்கு நாமே ஊடகமாக வேண்டும். சனாதன எதிர்ப்பு போரில், சமரசமற்று மே17 இயக்கம் களத்தில் நிற்கிறது. கைகோர்க்க வாருங்கள். #தமிழ்_வெல்க #இந்தி_ஒழிக #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #தமிழ்நாடு தமிழருக்கே! #📺வைரல் தகவல்🤩 #💪 மே17 இயக்கம்