sree lalithaa sagasranaamam.

saravanan.
1.1K காட்சிகள்
23 மணி நேரத்துக்கு முன்
#sree lalithaa sagasranaamam.   *ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 239* *இன்று நாம் அறிந்து கொள்ளும் திருநாமம்* *... சந்த்ரவித்யா.....* *🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱* சந்த்ரவித்யா """"""""""""""""""”""""”🙏🙏 சந்திரனால் உபாசிக்கப்பெற்ற வித்தைகளின் வடிவானவள் அன்னை .. *விளக்கம் 🙏* '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' 🔱அன்னையையே சந்த்ரவித்தை என்று சித்பவானந்தரும், சந்திரனால் உபாசிக்கப்பட்ட வித்தைகளின் உருவென்று பாஸ்கரராயர் உரையும் கூறுகின்றன. சூரியன் வெப்பம், ஒளி இரண்டையும் தருகிறான்; வெப்பமோ சிறிதளவேனும் துன்பத்தைத் தருவது. சந்திரனோ ஒளியை மட்டுமே தருகிறான். அதில் இனிமை மட்டுமே உண்டு. ஆதலால் சந்திரவித்தை என்பது அனைத்துவிதமாகவும் இன்பமே தரும் கலையாக இருக்கிறது. அத்தகைய வித்தைகளின் மொத்தமாகவும் அன்னையிருக்கிறாள் என்றும் பொருள் கொள்ளலாம். சந்திரனும் அத்தகைய இன்பம் தரும் கலைகளை/வித்தைகளையே உபாசித்ததாகக் கொள்ளலாம்239 வது திருநாமம் ஆகும் .,.. 🌹🌹 ஐயா சிவசிவ அரகர அரகரா  🌹🌹 *🙏🙏🙏 ஓம்  லலிதாம்பிகை தாயே போற்றி 🙏🙏🙏* 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 🟩🟫🟩🟫🟩🟫🟩🟫🟩🟫🟩🟩🟫🟩🟫🟩🟫🟩🟫🟩🟫🟩
saravanan
1.1K காட்சிகள்
10 நாட்களுக்கு முன்
#lalithaa sagasranaamam. *ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 238* *இன்று நாம் அறிந்து கொள்ளும் திருநாமம் *...மனு வித்யா...* 🙏🙏 ஓம் சக்தி பராசக்தி 🙏🙏 மனு வித்யா : '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' மனுவினுடைய வித்யைக்கு ஆதரமாக இருக்கிறாள் அன்னை.... *விளக்கம் 🙏* ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' இந்த திருநாமத்துக்கு வியாக்கியானம் என்னவென்றால் மனுவினுடைய வித்யைக்கு ஆதரமாக இருக்கிறாவள் அன்னை... பன்னிரண்டு பேர் அன்னையின் மிகப் பெரிய பக்தர்கள் அவர்களுள் முதல் பக்தர் மனு.. மனு ஸ்லோகம்: 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 மனு: சந்திர குபேரச்ச லோபாமுத்ரா  ச  மன்மத: அகஸ்திர் அக்னிர்யச்ச இந்திர: ஸ்கந்த சிவஸ் ததா குரோத பட்டாரகோ தேவ்யா த்வாதசாமீ உபாஸகா...||| இந்த ஸ்லோகம் மனுவைப் பற்றியது ஆம் ஸ்லோகத்தில் மனுவின் பெயர்தான் முதலில் வருகிறது.மிகப்பெரிய அன்னை உபாஸகர் மனு.அதனால் அன்னை மனு வித்யா.அவருடைய வித்தையின் ஆதாரமாக இருக்கக்கூடியவள் அன்னை.       இந்த திருநாமத்தை நாம் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்க்கலாம்.மனு என்று சொன்னாலே மனிதர்களுக்குத் தலைவன் என்று பொருள். மானுடத்தின் தலைவன் - பிரதிநிதி என்பதாக அந்தப் பெயர் வந்தது.. மனுவித்யா என்று சொல்கிறபோது மனிதர்களாகிய நாம் உணர்ந்து கொண்டிருக்கக்கூடிய வித்யை - புரிந்து கொண்டிருக்கக்கூடிய வித்யை - எதுவானாலும் அதன் ஆதாரமாக இருக்கக்கூடியவள் அன்னை.இதுவே அன்னையின் பெருமையை கூறும் 238 வது திருநாமம் ஆகும்..... 🌹🌹 ஐயா சிவசிவ அரகர அரகரா 🌹🌹 🙏🙏 ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி 🙏🙏 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 🟩⬛🟩⬛🟩⬛🟩⬛🟩⬛🟩🟩⬛🟩⬛🟩⬛🟩⬛🟩⬛🟩
saravanan
636 காட்சிகள்
22 நாட்களுக்கு முன்
#sree lalithaa sagasranaamam. *ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 237* *🙏🙏 ஓம் சக்தி பராசக்தி 🌼🌼* இன்று நாம் அறிந்து கொள்ளும் திருநாமம்..!! மஹா சதுஷ்ஷஷ்டிகோடி யோகினீ கணஸேவிதா அறுபத்து நான்கு கோடி யோகினிகளால் துதிக்கப்படுபவள். *விளக்கம் 🙏* """""""""""""""""""""” மஹா  சதுஷ்ஷஷ்டிகோடி யோகினீ கணஸேவிதா 🔱அன்னையின் ஶ்ரீசக்ரத்தில் முதல் ஆவரணமாகிய த்ரைலோக்கிய சக்கரத்தில் ப்ராம்ஹீ முதலாம் எட்டு மாத்ருகா சக்திகளும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் அம்சங்களாக ஒருவருக்கு எட்டென மொத்தம் அறுபத்து நான்கு அம்சங்களாக யோகினீக்கள் உண்டு. இந்த அறுபத்து நான்கு யோகினீக்களுக்கும் அவரவர அம்சங்களாய் கோடி யோகினீக்கள் உண்டெனவும், அத்தகைய பெரும் அளவிலான யோகினீக்களால் அன்னை சேவிக்கப்படுகிறாள் என்கிறது இந்த நாமம். பாஸ்கர் ராயர் உரையிலேயே மேலும் தந்த்ர ராஜம் என்கிற க்ரந்தத்தை மேற்கோளாகக்காட்டி த்ரைலோக்கிய சக்கரம்போன்றே ஒன்பது ஆவரணங்களிலும் இருப்பதால் மஹத் என்னும் சொல் அந்த ஐந்நூற்றி எழுப்பதாறு கோடிகளையும் குறிப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது இவ்வளவு யோகினீ கணக்கூட்டங்களால் அன்னை சேவிக்கப்படுகிறாளாம். சில உரைகளில் சதுஷ்ஷஷ்டிகோடி அறுநூற்றுநாற்பது கோடியென்றும் சொல்லப்படுகிறது.இதுவே அன்னையின் பெருமையை கூறும் 237 வது திருநாமம் ஆகும்... *🌹🌹 ஐயா சிவசிவ அரகர அரகரா 🌹🌹* *🙏🙏🙏 ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி 🙏🙏🙏* 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 🟪🟢🟪🟢🟪🟢🟪🟢🟪🟢🟪🟪🟢🟪🟢🟪🟢🟪🟢🟪🟢🟪
saravanan
12.2K காட்சிகள்
29 நாட்களுக்கு முன்
#sree lalithaa sagasranaamam. *ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 236* *இன்று நாம் அறிந்து கொள்ளும் திருநாமம்* *..சதுஷஷ்டிகலாமயி...* சதுஷஷ்டிகலாமயி அறுபத்து நான்கு வித்தைகள்/கலைகள் மயமாய் இலங்குபவள் ) *விளக்கம்🙏* """"""""""""""""""""""" ப்ரபஞ்சத்தில் ஞானங்களை அபராவித்தை, பராவித்தை எனபிரிக்கலாம். பரப்ருமத்தை அடையக்கூடிய ப்ரும்மஞானத்திற்கு வழிகாட்டக்கூடிய வகையில் முறையாக இறைப்பொருளுக்கு அர்ப்பணம் செய்ய, அபராவித்தைகள் பராவித்தையாகின்றன. அபராவித்தைகள் அதாவது அபராகலைகள் எண்ணிக்கையில் அறுபத்து நான்காகும். இவற்றை முழுமையாக பாஸ்கரராயர் உரைப் பட்டியலிட்டிருக்கிறது. கலைகளைப் பண்படாதவர்கள் அவற்றைப் புலனுகர்வைத் தூண்டும் வகையிலும், அனுபவிக்கும் வகையிலும் பயன் செய்யும்போதும் கொள்ளும்போதும் அவை கேவலம் ஜீவனோபாயத்துக்காகின்றன. தெய்வ வழிப்பாட்டுக்காகவும், மனத்தைப் பண்படுத்துதலுக்காகவும் செய்யப்படும்போது, பரஞானம் சித்தியாகிறது. இந்த அறுபத்து நான்கு கலைகளாக அம்மையே இலங்குகிறாள். கலைகளும், கலைகள் வழியாய் ஜீவர்கள் பரஞானம் கிடைத்து, பரத்தோடு ஒன்றுவதற்கும் செய்பவள் அன்னையே.... 🌹🌹 ஐயா சிவசிவ அரகர அரகரா 🌹🌹 🙏🙏 ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி🙏🙏 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪
saravanan
667 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#sree lalithaa sagasranaamam. *ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 235* *இன்று நாம் அறிந்து கொள்ளும் திருநாமம்* *..சதுஷ்ஷஷ்டி உபசாராட்யா..* சதுஷ்ஷஷ்டி உபசாராட்யா🌹🌹 அறுபத்து நான்கு உபசாரங்களால் ஆராதிக்கப்படக் கூடியவள் அன்னை.. *விளக்கம்🙏* """"""""""""""""""""""" அன்னையைப் பூஜிக்கும்போது பலவிதங்களில் உபசாரங்கள் செய்து பூஜிப்பது வழக்கம். கணக்கு வகையில் இவை அறுபத்து நான்காம்; இவற்றுள் ஆசனம், அர்க்யம், ஸ்நானம், ஆடை அணிவித்தல், ஆபரணங்கள் பூணுவிப்பது, ஆடல், பாடல், ஜபம், த்யானம் என்பவை இந்த பட்டியலில் காணப்படும் சிலவாம். தீவிர பக்தியில் ஈடுபடாதவர்களுக்கு இத்தகைய கிரியாபரமான உபசாரங்கள் தேவையாகின்றன. பக்தி வளர்ந்து பரிபக்குவமடைகையில், இவை குறைந்து, மறைந்துவிடுகின்றன. படிநிலைகளில் கீழே இருக்கும் பக்தர்களுக்கு இவையெல்லாம் இருப்பது முன்னேற்றத்துக்குத் தேவையாகின்றன.இதுவே அன்னையின் பெருமையை கூறும் 235 வது திருநாமம்... *🌹🌹 ஐயா சிவ சிவ அரகர அரகரா🌹🌹* *🙏🙏 ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி🙏🙏* 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 🟪🔶🟪🔶🟪🔶🟪🔶🟪🔶🟪🟪🔶🟪🔶🟪🔶🟪🔶🟪🔶🟪