🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏

திருநீற்றுச் சுவடு
1.2K காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #பக்தி #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🙏ஏகாதசி🕉️ மாசி_மக_திருத்தேரோட்டத்தின் முதல் நிகழ்வு கொடியேற்றத்துடன் தொடங்கியது #ருத்ராட்சம் மாலை அணிந்து கொண்டு அழகிய திருமுகத்துடன் ஆனந்த தரிசனம் தருகிறாள் அன்னை மேச்சேரி_ஶ்ரீபத்ரகாளி_அம்மன் 🙏🪷🙏
திருநீற்றுச் சுவடு
1.1K காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏 மாரியம்மன்* வரலாறு: சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சாணம் பெருக்க வந்த இருக்கன்குடி கிராமத்தை சார்ந்த பெண் ஒருத்தி, கூடையை வைத்துச் சாணம் பொறுக்கி சேர்த்திருக்கிறாள். ஓரளவு சாணம் சேர்ந்த பின்பு, அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்று இருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. அப்பொழுது அவள் சாமி வந்து ஆடியிருக்கிறாள். சாமியாடிய அந்தப் பெண், அந்தக் கூடை இருக்கும் இடத்தில், சிலையாகப் புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து, கோயில் அமைத்து வணங்கினால், அனைத்து வேண்டுதல்களையும், நிறைவேற்றித் தருவதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு, மக்கள் அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்துக் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர். கோயில் அமைந்துள்ள இடம் வைப்பாறு, அர்ச்சுனன் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே, மணல் திட்டாயிருக்கும் இடத்தில், இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி, பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, கோயில்களில், மாரியம்மன், இடது காலை மடித்து, வலது காலைத் தொங்கவிட்டபடிதான் இருப்பார். ஆனால் இந்தக் கோயிலில் இருக்கும் மாரியம்மனோ, "இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும், அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது" என்பதற்கேற்ப, வலது காலை மடித்து, இடது காலைத் தொங்கவிட்டிருக்கிறார். இந்த அமைப்பே, 'இருக்கன்குடி மாரியம்மனின் மிகப்பெரிய சிறப்பம்சம்' என்கின்றனர் ஆன்றோர். இருக்கன்குடி பெயர்க் காரணம் கோயிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுனன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு, இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால், 'இரு கங்கை' குடி என்று இருந்து, பின்னாளில் அது, 'இருக்கன்குடி' என்றாகி விட்டது. இந்த அர்ச்சுனன் நதி, புராணப் பெருமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. அர்ச்சுனா நதி உருவான வரலாறு பஞ்சபாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம் செய்த போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் ஒரு பகுதியான சதுரகிரி மலைக்காடுகளில் சில காலம் தங்கி இருந்தனர். அக்காலத்தில் தினசரி காலை,மாலை நீராடி இறைவனை பூசனை செய்ய நீர் ஊற்று காணாது வருந்தியபோது, அர்ச்சுனன் சூரிய உதயமாகும் நேரத்தில் கங்காதேவியை மனத்தில் தியானித்து,வருணாஸ்திரத்தினால் பூமியைப் பிளந்தார். பூமியின் அடியிலிருந்து கங்காபிரவாகமாக நீர் எழும்பி வழிந்தது. பஞ்சபாண்டவர்கள் அனைவரும் இந்நதியில் நீராடி ,நித்ய அனுட்டானங்களைச் செய்தனர். அன்று முதல் இந்த ஆறு அர்ச்சுனா நதி என்று பெயர் பெற்றது.மற்ற புண்ணிய நதிகளில் மாதம் தோறும் நீராடிப் பெறும் பயனை, இந்நதியில் ஒரு முறை நீராடுவதாலேயே பெறலாம் என்று நாரதர் கூறியுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த புண்ணிய நதியில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம். இந்த ஆற்றை உருவாக்கியது அர்ச்சுனன் என்பதால், இதற்கு 'அர்ச்சுனன் ஆறு' என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். வழிபாட்டு முறைகள் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வருபவர்கள் விளக்கு போடுதல், அம்மனுக்குப் புடவை சாத்துதல், பூஜை செய்தல் போன்ற வழக்கமான வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். அக்கினிச் சட்டி எடுத்தல், ஆயிரங்கண் பானை எடுத்து வலம் வருதல் போன்றவை மூலம் அம்மனை வழிபடுகின்றனர். இங்கு, குழந்தையில்லாதவர்கள், குழந்தை வேண்டி தொட்டில் கட்டி வேண்டுகின்றனர். உடல் குறைபாடுள்ளவர்கள், உருவம் செய்து வைத்து வழிபடுகின்றனர். இவை தவிர, கயிறு குத்துதல், ஆடு, கோழி பலியிட்டு, அசைவ உணவு சமைத்து, அன்னதானம் செய்தல் போன்றவையும் செய்யப்படுகின்றன. (பொதுவாக எந்த மாரியம்மன் கோயில்களிலும், ஆடு, கோழி போன்றவற்றை உயிர்ப் பலியிடும் வழக்கம் கடைப் பிடிக்கப்படுவதில்லை. இந்தக் கோயில்களில் இருக்கும் 'கருப்பசாமி' போன்ற காவல் தெய்வங்களுக்குத்தான் உயிர்ப்பலியிடும் வழக்கம் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில், இது மாரியம்மனுக்குச் செய்யும் வேண்டுதலாகிக் கொண்டிருக்கிறது.) சிறப்பு விழாக்கள் ஆடி, தை, பங்குனி மாதங்களில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தென் மாவட்டங்களின் பல ஊர்களிலிருந்தும் அதிகமான மக்கள் வருவதால் இந்த நாட்களில் மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் கோயிலுக்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். தற்போது ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களிலும் அதிகமான மக்கள் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். துணைக் கடவுள்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வாழவந்தம்மன், ராக்காச்சி அம்மன், பேச்சியம்மன், முப்பிடாரியம்மன் போன்றவர்களுக்கும் காவல்தெய்வமான கருப்பசாமிக்கும் துணைக் கோயில்கள் உள்ளன. போக்குவரத்து மதுரையிலிருந்து - கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் நகர் இருக்கிறது. இங்கிருக்கும் பேருந்து நிலையத்திலிருந்து, இருக்கன்குடிக்கு நகரப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரயில் பயணத்தில் மதுரை யிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோயில் செல்லும் வழியில் இருக்கும் சாத்தூர், விருதுநகர் போன்ற ஊர்களுக்குச் சென்று, அங்கிருந்து, பேருந்து மூலமாக இருக்கன்குடிக்குச் செல்லலாம்.✍🏼🌹
திருநீற்றுச் சுவடு
1.3K காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் தாயாக வழிபடப்படும் பண்ணாரி அம்மனின் அருட்சிறப்புகள்!* ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம் அருகே அமைந்துள்ளது பண்ணாரி அம்மன் கோயில். இது கிராமப்புற மக்களின் ஆழமான பக்தி, பாரம்பரியம் மற்றும் கிராம தேவி வழிபாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான கோயிலாகும். கோயிலின் இடம் மற்றும் முக்கியத்துவம்: பண்ணாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பண்ணாரி என்ற சிறிய கிராமத்தில் உள்ளது. இது ஈரோடு மாவட்டத்துக்கும் நாமக்கல் மாவட்டத்துக்கும் இடையே காடுகளால் சூழப்பட்ட ஒரு இயற்கை பசுமைமயமான பகுதியில் அமைந்துள்ளது. தாய்மார்கள் வழிபாட்டின் ஒரு வடிவமான பண்ணாரி அம்மன், அந்நகரிலுள்ள மக்களால் ‘கிராமத்தாயே’ எனக் கருதப்படுகிறார். அம்மனின் தோன்றல் குறித்து மக்களிடையே பரவலாக பரவியுள்ள கதை: பண்டைக் காலத்தில், பண்ணாரி பகுதியில் இருந்த மக்கள் அரக்கர்களாலும், வனவிலங்குகளாலும் பெரும் சிரமங்களை சந்தித்து வந்தனர். இயற்கை பேரழிவுகளும், நோய்களும் அவர்களை சந்தித்துக்கொண்டிருந்தது. அப்போது அந்தக் கிராமத்தின் அருகே உள்ள ஒரு புனிதக் காட்டில், பளிச்சென்ற ஒளி ஒன்று தோன்றியதை சிலர் கண்டார்கள். அந்த ஒளி அம்மன் உருவில் தோன்றயது. அந்த சக்தி தன்னை, ‘பண்ணாரி அம்மன்’ என அறிமுகப்படுத்தி, இப்பகுதியைத் தாம் காப்பாற்ற வந்ததாக கூறினாள். அதோடு, அந்தப் புனித இடத்தில் தானாகவே ஒரு சிலை வெளிப்பட்டது. இதுவே ’மூலஸ்தான அம்மன்’ என்று கருதப்படுகிறது. மக்கள் மீது அம்மன் காட்டிய அருள்: கிராமத்தை வாட்டி வந்த நோய்கள், பஞ்சம், மற்றும் சக்தி குறைவுகள் அனைத்தும் அகன்று, மக்கள் நிம்மதியாக வாழத் துவங்கினர். அம்மனின் அருளின் மக்கள் அவளைத் தாயாகக் கொண்டாடத் தொடங்கினர். கோயில் திருவிழாக்கள்: ஆடி மாத திருவிழா (ஜூலை - ஆகஸ்ட்): இது மிகவும் பிரம்மாண்டமான விழா. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். அலங்கார அம்மன், தேர் உத்ஸவம் மற்றும் நாள்பட்ட பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் காணிக்கை, முளைப்பாரி மற்றும் வெட்டிக்கொடி போன்ற வைபவங்களில் பங்கேற்கிறார்கள். ஏறுகாலை வழிபாடு, பூஜைகள் மற்றும் முடி காணிக்கை போன்றவை இங்கு மிகவும் பரவலாக நடைபெறும். சிறப்பு வழிபாட்டு மரபுகள்: அம்மனுக்கு கோழி, ஆடு, கரும்பு, வெற்றிலை மற்றும் பொங்கல் நைவேத்தியம் போன்ற பலவிதமான காணிக்கைகள் இடப்படும். குறிப்பாக, புண்ணிய நாட்களில் பண்ணாரி அம்மன் கோயிலில் முழுக்கண் கும்பாபிஷேகம், ஹோமம் போன்ற சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இங்கு மாத வழிபாடு சிறந்த முறையில் நடைபெறுவதால், குழந்தைப் பிரசவம், நோய் நொடிகள், குடும்ப அமைதி போன்ற நலன்கள் வேண்டி பக்தர்கள் விரதம் இருந்து வருகிறார்கள். சுற்றுப்புற சூழல்: இந்தக் கோயில் தற்காலிக காடுகளால் சூழப்பட்டு இயற்கையின் மடியில் அமைந்துள்ளது. அருகில் உள்ள சத்தியமங்கலம் வனப்பகுதி மற்றும் பெரியாறு போன்ற இடங்கள் இதன் சுற்றுச்சூழலை மேலும் அழகுபடுத்துகின்றன. மற்ற விசேஷங்கள்: நட்சத்திர மற்றும் அமாவாசை நாட்களில் இந்தக் கோயிலுக்கு அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர். பண்ணாரி அம்மன் கோயில் கருவறை மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. பண்ணாரி அம்மன் கோயில் என்பது ஒரு கிராமத் தாயை குறிக்கும் சக்தி தெய்வ வழிபாட்டின் உயிர்ப்பும், பாரம்பரியத்தின் வெளிப்பாடுமாகும். இக்கோயில் பக்தர்கள் மனதில் பயம் நீங்கி, நம்பிக்கையையும் வலிமையையும் அளிக்கும் சக்திமிக்க தலமாக இது வலியுறுத்தப்படுகிறது.🌹 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏
திருநீற்றுச் சுவடு
1.2K காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
திருநீற்றுச் சுவடு
994 காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 மாவட்டம் அழகர்மலை அருகில் உள்ள அருள்மிகு ஶ்ரீ நூபுரகங்கை ராக்காயி அம்மன் 🙏🙏 *பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது, வேட்டுவர் குலத்தெய்வமான ராக்காயி கோவில். இங்கு நூபுர கங்கை தீர்த்தம் விழுகிறது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது *மதுரையின் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றான, அழகர் கோயிலின் அடிவாரத்திலிருந்து 4-k.m. தொலைவுடைய (கடல் மட்டத்திலிருந்து 1,400-அடி உயரம்) அழகர்மலை (பழமுதிர்ச்சோலை) உச்சியில், விசேஷ தீர்த்தமான 'நூபுர கங்கை' உற்பத்தியாகும் மாதவி மண்டபத்தில், அழகர்மலையின் அதிதேவதையாக, நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றாள் *பார்வதி தேவியின் அம்சமானவளாகவும், ஸ்ரீ அழகர் பெருமாள் மற்றும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியின் அன்பு தங்கையாகவும் போற்றப்படும் ராக்காயி அம்மன், (புராணங்களில்) அங்கீர்சாச முனிவரின் மகளாகவும், காஷ்யப முனிவரின் மருமகளாகவும் கருதப்படுகின்றாள். *ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக நூபுரகங்கை புனித தீர்த்தம் அறியப்படுகிறது. இந்த தீர்த்தம் உற்பத்தியாகும் இடம் பல ஆராய்ச்சிகளுக்கு இடையிலும் கூட இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். *யானையின் துதிக்கைப் போல, பருமனாக அமைந்த கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்தில் வந்து விழுகின்றது, இந்த நூபுர கங்கை தீர்த்தம். இந்தத் தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதாக இத்தீர்த்தம் விளங்குகிறது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது ‘சிலம்பாறு’ என்றும் அழைக்கப்படுகிறது. சோலைமலையின் கீழ் வீற்றிருக்கும் அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசி யாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. ஆற்று நீரின் ருசியும், ஆற்று நீரால் விளையும் தானியங் களின் ருசியும் மிகுந்திருப்பதால் இதற்கு ‘தேனாறு’ என்றும் பெயர். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான ‘சம்பா தோசை’ தயார் செய்யப்படுகிறது *அழகர் மலையின் காவல் தெய்வமாகவும், அங்குள்ள அனைத்து நீர்நிலைகளுக்கும் பிரதான தெய்வமாக உள்ள ஸ்ரீ ராக்காயி அம்மன், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் வாழும் பல நூறு குடும்பங்களின் குல தெய்வமாக போற்றி வழிபடப்படுகின்றாள். ஸ்ரீ ராக்காயி அம்மன். *இத்தலத்திலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது, அனுமார் தீர்த்தம். இங்கே ஓர் அனுமன் கோவில் இருக்கிறது. இதற்குச் சற்று மேல், கருட தீர்த்தம், கருடர் கோவில் இரண்டும் இருக்கின்றன. அதன் பக்கத்தில் பாண்டவ தீர்த்தமும், கோவிலும் இருக்கிறது. மலையில் வட பக்க சரிவில், பெரிய அருவி தீர்த்தம் உள்ளது. அழகர் கோவிலுக்குச் சிறிது வடக்கே உள்ளது உத்தர நாராயண வாவி தீர்த்தம். இந்த தீர்த்தத்தினால் தான் கோவில் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும், சமையலும் செய்ய வேண்டும் என்பது ஐதீகம் *ஆறுபடை வீடுகளில், கடைசி படை வீடான பழமுதிர்சோலையில் வீற்றிருக்கும் எம்பெருமான் முருகனை தரிசனம் காணும் முன், முருகன் ஆலயத்திற்கு சற்றே அருகில், 70-சிறிய படிகளே உள்ள இத்திருத்தலத்திற்குச்சென்று, முதலில் ஆதிகாலமாக கண்ணுக்கு புலப்படாத இடத்திலிருந்து வந்து விழுந்திடும் மூலிகை சக்தி நிறைந்த 'நூபுர கங்கை' எனும் புனித தீர்த்தத்தில் நீராடி அல்லது குறைந்தபட்சம் அந்த தீர்த்த நீர் சிறிதளவாவது உடம்பில் தெளித்திட்ட பின்னர், ராக்காயி அம்மனை வழிபாடுசெய்து, அதன்பின்னரே பழமுதிர்சோலை கந்தனை தரிசிக்க வேண்டும் என்பது காலம்காலமாக உள்ள முறையான வழக்கம் *வாமன்னாக வந்து மாவலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் தானமாக பெற்று விஷ்வரூபதரிசனம் தந்து ஈரடியில் மண்ணும்,வின்னும் அளக்கும்பொழுது, வின்னுக்கு உயர்ந்த பெருமாளின் பாத்த்தை பிரமதேவன் தன் கமண்டல நீரால் கழுவி பூஜித்த நீரால் பெருக்கெடுத்தது ஆகாச கங்கை அதனை பகீரதனின் வேண்டுகோளை ஏற்று சிவன் தன் சடாமுடியில் தாங்கி பூமியில் இறக்கிவிட்டதுதான் கங்கைஆறு. பெருமாளின் காற்சிலம்பில் பட்டு தெறித்து விழுந்த்துதான் சிலம்பாறு அதாவது நூபுர கங்கை. *வெள்ளிக்கிழமை வழிபாடு தலவிசேஷம்.அதில் கலந்து கொண்டால் மன தைரியம் கூடிடும் என கூறப்படுகிறது *வாழ்க்கையில் முக்கிய சடங்காக நிகழ்த்தப்படும் திருமண வைபவம் நிகழ்ச்சி ஆண்,பெண் இருவரும் இங்கு நீராடிய பின்னரே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உள்ளது #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
திருநீற்றுச் சுவடு
948 காட்சிகள்
6 மாதங்களுக்கு முன்
#🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ————————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் நாடகசாலைத் தெரு அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயிலில் இன்று *மாசி மாதம் திருவோணம்* நட்சத்திரத்தை முன்னிட்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. அலங்காரத்தில் அருள்மிகு *ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீதிருவேங்கடமுடையான்*. *ஓம் நமோ நாராயணாய* 🙏
திருநீற்றுச் சுவடு
6.8K காட்சிகள்
6 மாதங்களுக்கு முன்
#🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 மாவட்டம் அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் பற்றி தெரிந்து கொள்வோம்_* .... . *22.02.2026 ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேக சுப தினம்* .... திருப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, பிப்ரவரி 22}ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. கரூர்-திருச்சி சாலை குளித்தலையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அய்யர்மலை அமைந்துள்ளது. 😯😟😯😟😯 மலை மீது அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த சிவதலம் அய்யர்மலை அருள்தரும் சுரும்பார்குழலி சமேத ரத்தினகிரீசுவரர் கோயில். இறைவன் சுயம்பு மூர்த்தம். பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 64-ஆவது தேவார திருத்தலம். மன்னன் ஒருவன் தமது நவரத்தின கிரீடம் காணாமல் போனதால் ஈசனைத் துதிக்க, வயதான அந்தணர் ஒருவர் ரத்தினகிரீசுவரரிடம் அந்த கிரீடம் உள்ளதாய் தெரிவிக்க, மன்னன் ரத்தினகிரீசுவரரிடம் வந்து தமது மணிமுடியைத் தருமாறு வேண்டினார். வேதியர் வடிவில் வந்த இறைவன், இங்குள்ள கொப்பரையை முழுமையாக காவிரி நீர் கொண்டு நிரப்பினால் மணிமுடியைத் தருவதாகச் சொல்ல, மன்னன் எவ்வளவோ முயன்றும் கொப்பரை நிரம்பாததால் கோபம் கொண்டு வேதியரை வாளால் வெட்ட முயற்சித்தார். வேதியர் சிவலிங்கத்துக்குள் மறைய, வெட்டு லிங்கத்தில் பட்டு குருதி பீறிட்டது. தெய்வக் குற்றத்துக்கு ஆளானதை எண்ணி அஞ்சிய மன்னன் தன்னைத் தானே வெட்டிக்கொள்ள முயற்சிக்க, இறைவன் அவனைத் தடுத்து ஆட்கொண்டு மணிமுடியையும் கொடுத்தருளினார். சுவாமி மேல் வெட்டுத் தழும்பு உள்ளதை இன்றும் காணலாம். கோயில் கல்வெட்டுகளில், "இறைவர் மாணிக்க மலை மகாதேவர், மாணிக்க மலை உடைய நாயனார், திருமாணிக்க மலை உடைய தம்பிரான் ஆனார். இறைவி திருக்காம கோட்டமுடைய பெரிய நாச்சியார்' என்ற திருநாமங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இங்குள்ள பொன்னிடும் பாறைக்கு முன்புறம் உள்ள கம்பத்தைச் சுற்றி நூலால் கட்டி பில்லி, சூனியம், ஏவல், பல்வேறு தடைகள் நீங்க பிரார்த்தனை செய்யப்படுகிறது. தெரிந்து கொள்வோம்.... 🙏🙏🙏🙏🙏