அய்யா வைகுண்டர் {1008}

D Muthu Prakash, Kanchipuram 💐
678 views
2 days ago
#அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 14ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 13.08.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம்: ------------ என்னோடு கன்னி ஏலமே சொன்னபடி தன்னோ டினங்கள் தலைவன்மா ரேழ்வரையும் எடுத்துக் கொடுத்து இளமுலைப்பால் தானூட்டி கொடுத்து இகனைக் கூறிக்கோ என்மகனே . விளக்கம்: ========== என் அன்பு மகனே, ஏற்கெனவே என்னிடம் ஏழு கன்னிகளும் தங்கள் குழந்தைகள் ஏழினையும் கேட்டு உள்ளனர். அதன்படி நீ அக்குழந்தைகளை எடுத்துக் கொடுத்து அவர்களுடைய இளமையான முலைகளிலிருந்து பால் குடிக்க செய்து இந்த யுகத்தின் முன் விதி நிகழ்ச்சிகள் இவை என்று அவர்களிடம் கூறிக் கொள் என் மகனே. . . அகிலம்: ----------- இப்படியே பெண்கள் இன்னுஞ்சில பேர்களுண்டு அப்படியே அவரவர்க்கு அந்தந்த வேடமிட்டு வகைவகையாய் வேசம் மாறி யுருவெடுத்துத் திகையாம லவர்க்குச் சொல்லு முறைபோலே கலியாணக் காட்சி கணக்குத்தீர் வைமுறையும் வலியானக் கலியில் வாழ்வைமிகக் கொண்டாடிச் . விளக்கம்: -------------- இப்படி நீ திருமணம் செய்து கொள்ள வேண்டிய பெண்கள் இன்னும் சிலபேர் உள்ளனர். அப்படி அப்படியே அவரவர்களுக்கு ஏற்ற வகையில் அந்தந்த வேடத்தை நீ புனைந்து அவர்கள் மனம் கலங்காதபடிக்கு, அவர்களுக்கு வேண்டிய வழிமுறைகளையும் சொல்லி, அதுபோல் கல்யாணக்காட்சி, வரதட்சணை, கணக்குத் தீர்வை இவற்றை முறையாக பேசி வலிமையான இக்கலியுகத்தில் உன் வாழ்வை நல்ல முறையில் கொண்டாடி வாழந்து வா. . . அகிலம்: ----------- சாம்பசிவக் கோலம் சாருமஞ்ச ணைக்கோலம் ஆம்பக் குறக்கோலம் ஆடிமிகக் கழித்து முற்றுந் திருநாள் முழுது மிகநடத்திப் . விளக்கம்: -------------- சாம்பசிவக் கோலம், சாரும் மஞ்சணைக் கோலம், ஆம்பக் குறக்கோலம் போன்றவற்றை எடுத்து நன்றாக ஆடி மகிழ்ந்து முழுவதுமுள்ள திருநாள்களை நல்ல முறையில் நடத்தி வா. . . அகிலம்: ----------- பத்தும் பெரிய பாலர்தங்கள் வீடேகி விருந்து மிகவும் விரைவாகத் தானருந்தி திருந்து புகழ்கிளைபோல் சிலவீட் டமுதருந்தி பிச்சைபோ லுமருந்தி பெண்வழிச்சோ றுமருந்தி மிச்சமாய்ப் புவியில் வேண்டும் பவிசுடனே . விளக்கம்: -------------- முப்பூ நிலை அடையத் தகுதி பெற்ற சான்றோர்கள் வீட்டிற்கு சென்று அவர்கள் தருகின்ற விருந்தினை மகிழ்ச்சியுடன் ஏற்று உயர்வான புகழ் பெற்ற உறவினர் போன்றவர்கள் தரும் விருந்தையும் ஏற்றுக் கொள். . . அகிலம்: ------------ பிச்சைபோ லுமருந்தி பெண்வழிச்சோ றுமருந்தி மிச்சமாய்ப் புவியில் வேண்டும் பவிசுடனே வெற்றியி டம்மானம் விருதுக் கொடிகள்கட்டிப் புத்திர ரானோர்க்குப் பிழைக்கும்வலு புத்திசொல்லிப் பாடித்தீர் வைதீர்த்துப் பரசோ தனைபார்த்து . விளக்கம்: -------------- பிச்சை ஏற்று உண்பதைப் போன்று மிகவும் தாழ்மையுடன், அவர்கள் தரும் உணவை ஏற்று உன் பெண் வழி உறவினர் வீட்டிலும் அன்னம் உண்டு, இவ்வுலகில் உனக்குப் பிடித்த இன்பங்களை அனுபவித்து இடம்மான மேளமிட்டு விருதுக் கொடிகள் கட்டி, உன் குழந்தைகளாகப் பிறந்தவர்களுக்கு அவர்கள் பிழைக்கின்ற உயர்வான புத்திகளைச் சொல்லி உபதேசித்து நன்மை தீமைகளை எடுத்து கூறி அவர்கள் குறை நிறைகளைப் பரிசோதித்து வாழ்ந்து வா. . . அகிலம்: ------------ ஆடித்தீர் வைதீர்த்து ஆண்பெண் மிகவேகண்டு நல்லாண்டு கண்டு நாடும் மங்கையரைச் செல்லக் கலியாணம் செய்து சிறப்புடனே செந்தா மரையா ளுடனே சிறப்பிருந்து ஆனை கன்றீணி அதினா லுலகமெல்லாம் தானாக நீயும் தலைவ னெனச்சமைந்து முரணிக் கலியழிய முச்சுடரு மொன்றாவாய்த் . விளக்கம்: -------------- உன்னைப் பரம்பொருளாகப் பாவித்து ஆடி ஆண், பெண்களுக்கு நடுத்தீர்ப்பு செய்து நல்ல ஆண்டு ஒன்றில், உன்னை நாடும் பூவைப் போன்ற மங்கையர்களை அன்புடன் திருமணம் செய்து சிறப்புடன் செந்தாமரைப் பூவில் இருக்கும் இலட்சுமியுடனும் இருந்து, கொத்துக் கொத்தான கூந்தலையுடைய கன்னியரோடும் மகிழ்ச்சியோடு கூடி, இல்லற வாழ்க்கையில் ஆனையைப் போன்ற பலமுள்ள குழந்தைகளைப் பெற்றெடுத்து, அதனால் இவ்வுலகம் எல்லாம் நீயேயாகக் காட்சி அளித்து எல்லாருக்கும் தலைவனாக அமர்ந்து அரக்கத்தனமான கலி அழிய முப்பொருளும் ஒரு பொருள் ஆவாய். . . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
532 views
3 days ago
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 14ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 12.08.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம்: ------------ சத்தகன்னி மாரைத் தான்வருத்தி மாலையிட்டுக் கலியாண மங்களங்கள் காட்சித் திருநாளும் . விளக்கம்: ========== ஏழு கன்னிகளையும் நீ வரவழைத்து அவர்களுக்கு மாலை இட்டுத் திருமணம் செய்து, அக்காட்சியோடு திருநாள் நடத்து. . . அகிலம்: ========= சலியாமற் காசுத் தந்தவர்க ளுண்டானால் வேண்டிநீ தர்மம் விரைவாய் நடத்தியிரு . விளக்கம்: ========== அத்திருவிழாவிற்காக எந்தச் சோர்வுமின்றிப் பொருள் ஈந்தவர்கள் உண்டானால் அவர்களிடம் நீ தாராளமாகப் பெற்று கொண்டு அதற்குரிய தருமத்தினை விரைவாக நீ செய். . . அகிலம்: ========= ஆண்டத் திருநாள் அதுமுடக்கம் வராமல் பிச்சிவெள்ளை பச்சரிசி மிளகிலை தேங்காயும் மிச்சம்பழஞ் சந்தனமும் மிகுபன்னீர் வாடைகளும் மேற்கட்டி கட்டி மிகுவா யலங்கரித்து மாற்கட்டுச் செய்து மகிழ்ச்சை டம்மானமிட்டு . விளக்கம்: ========= ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்ற திருநாள்கள் எவ்வித முடக்கமுமின்ற நீ செய், பிச்சிப்பூ, வெள்ளைப் பச்சரிசி, மிளகு, இலை, தேங்காய், எலுமிச்சைப்பழம் சந்தனம், நல்ல பன்னீர், மணமான பொருள்கள் ஆகியவை வைத்துக் கோவிலின் மேலே அலங்காரக் கட்டுக் கட்டி அதிகமாக அலங்கரித்து அங்கே சிறு வீடு போன்று கட்டிப் பிணைத்து, மகிழ்ச்சியாக இடம்மான மேளம் இட்டு இப்படியே ஏழு நாள்களும் திருநாள் நடத்து. . . அகிலம்: ======== இந்தப் படியாய் ஏழுநாளுந் திருநாள் அந்தப் படிசெய்து அவனியி லாடிக்களித்து எல்லா முறையும் இயல்பாகக் கொண்டாடி . விளக்கம்: ========== இந்த வகையாகத் திருவிழா நடத்தி இவ்வுலகில் ஆடி மகிழ்ந்து எல்லா வகைகளையும் உன் மனதுக்குப் பிடித்த வகையாக்க் கொண்டாடு. . . அகிலம்: ========= நல்லாண்டு தேதி நல்லதிவ சம்பார்த்துத் தெய்வகன்னி மாரைத் தெய்வச்சான் றோரிடமே மெய்வரம் பான மனுமுறைபோல் தான்பேசிக் கொடுக்கல்வாங் கல்முறையும் கூறி மிகக்கேட்டுத் . விளக்கம்: ========= நல்ல ஆண்டு, தேதி, கிழமை ஆகியவற்றைக் கணித்துப் பார்த்து, அச்சமயத்தில் ஏழு தெய்வக்கன்னிகளையும் திருமணம் செய்வதற்காகச் செல்வ வளம் பொருந்திய சான்றோர் மூலமாக ஓர் உண்மையான எல்லைக்குள் மனித விதிகளுக்கு உட்பட்டு வரதட்சணை பேசி கொடுக்கல் வாங்கல்களை நியாயமாகப் பேசி கேட்டு வாங்கிக் கொள். . . அகிலம்: ========= துடுக்கான நல்ல தோகைக்குண மும்பார்த்து பார்த்துன் னருகில் பணிவிடைகள் செய்யுகின்ற தோற்றுகின்ற சீசனுடத் தொல்முறை யும்பார்த்து பரிய முறையும் பாவையர்கள் தம்முறையும் சரியா யுலகோர் சங்கை யதுபோலே தங்க நிறமானத் தர்மத் தலைவாநீ மங்கள மதாக மாலையிடு என்மகனே . விளக்கம்: ========== திறமையோடு அதிக கூந்தலையுடைய பெண்ணின் குண நலன்கள் எல்லாம் பார்த்துத் தெரிந்து கொள். பிறகு, உன் சீசர்களுடைய கருத்துக்களையும் அறிந்து அப்பெண்டிர்களின் உறவு, ஒழுக்கம் போன்ற முறைகளையும் அறிந்து கொள். தங்க நிறத்தையுடைய அறங்களுக்கு எல்லாம் தலைவனே, எந்தவிதச் சதியும் செய்யா மக்கள் கூடி வாழ்வதைப் போன்ற கூட்டத்தாரின் முன்னிலையில் நீ மங்களமாக அவர்களைத் திருமணம் செய்து மாலை இடு என் மகனே. . . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
589 views
4 days ago
#அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 14ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 11.08.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம்: ------------ அருகில்வைத்த மாமுனியை அழைத்தார் திருமாலும் துரிதமுடன் மாமுனிகள் சுவாமி யெனத்தொழுதார் இந்தநாள் வரைக்கும் இவரிருந்த நற்றவசு சந்தமோ வீணோ தாமுரைப்பீர் மாமுனியே . விளக்கம்: =========== ஞானமுனி, கலைமுனி ஆகிய இருவரையும் சாட்சிகளாக விசாரிக்க எண்ணிச் சாட்சிமொழி கூற நாராயணர் அவர்களை அழைத்தார். முனிவர்கள் விரைவாக நாராயணரின் அருகில் வந்து, சுவாமி அடியார்களை அழைத்தத காரணம் என்ன என்று வினவினர். உடனே திருமால், முனிவர்களே, இந்த நாள்வரையும் வைகுணடர் இருந்து நல்ல தவம் நிரந்தரம் ஆனதா? வீணானதா? என்பது பற்றி விளக்கி கூறுங்கள் என்றார். . . அகிலம் ======== அப்போ முனிகள் ஆதி யடிபணிந்து தப்பெருநா ளில்லை தவத்துக் குறுதியுண்டு நூலொழுக்க மல்லாமல் நுண்ணிமைகள் தப்பவில்லை மாலொழுக்க மல்லாமல் மனதுவே றில்லையையா தப்பாத தவத்தில் சண்டித் தடிநீசன் சிப்பாயி விட்டுச் சுவாமி தனைப்பிடித்து முடித்தலையைப் பின்னி முழுநீசப் பாவியவன் அடித்து விலங்கில் அவன்கொண்டு வைத்தனனே வைத்துப்பல வேதனைகள் மாநீசன் செய்ததல்லால் மெய்த்தபுகழ் மாலே இவர்மேலே குற்றமில்லை என்று முனிமார் இசையத் திருமாலும் கொண்டுபோய் நீசன் கோட்டிசெய்த ஞாயமெல்லாமல் இருக்கட்டு மந்த இழிநீசன் செய்ததெல்லாம் குருக்கட்டு முறையின் குணத்தைமிகச் சொல்லுமென்றார் . விளக்கம் ========= அப்போது முனிவர்கள் திருமாலின் பாதங்களைத் தொழுது வணங்கி, சுவாமி வைகுண்டர் தவத்தில் எந்தத் தவறும் இல்லை. அத்தவத்தினால் மன உறுதி பெற்றார். முன் ஆகமங்கள் சொல்லும் நல்ல ஒழுக்கங்களைப் பின் பற்றயது அல்லாமல் அவர் சிறுபொழுதுகூட தவறு இழைக்கவில்லை. திருமாலின் ஒழுக்கங்களைப் பின் பற்றியது தவிர வேறு எங்கும் மனம் செல்லவில்லை. தவறு வராத தவத்தின்போது சண்டித் தடி நீச அரசன் தனது சிப்பாயியை விட்டுச் சுவாமியைப் பிடித்துத் தலை முடியைப் பின்னின, அடித்து விலங்கில் பிணைத்துச் சிறையில் வைத்துவிட்டான். இவ்வாறு சிறையில் வைத்துப் பல வேதனைகளை மாநீசன் செய்தான். இருப்பினும் அதற்கு மாறாக இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று கூறினர். . அப்பொழுது திருமால், முனிவர்களே, வைகுண்டரை நீசன் கொண்டு போய்ச் செய்த துன்ப நியாயங்கள் சொல்லியது போதும். இனி, குருவாகிய இவரின் கட்டுப்பாடான தவ ஒழுக்கங்களைப் பற்றித் தெளிவாகச் சொல்லுவீர்களாக என்று கூறினார். . . அகிலம் ======== உடனே முனிகள் உள்ள மிகமகிழ்ந்து படபடென நின்று பணிந்து மிகப்போற்றித் தப்பில்லை யையா தவத்தி லொருபங்கமில்லை என்று முனிகள் இகபரத்துக் குத்தமமாய் அன்று உரைக்க அதகத் திருநெடுமால் . விளக்கம்: ========== உடனே, முனிவர்கள் விரைவாக நிமிர்ந்து நின்று, அவரைப் பணிந்து துதித்து, அய்யா, இவர் தவத்தில் எந்தத் தவறும் குறையும் இல்லை. நல்லவை உருவாகியதே அல்லாமல் நியாயக் கேடாக எதுவும் இல்லை என்று இந்த யுகத்துக்கும் பரலோக வாழ்வுக்கும் உத்தமத் தன்மை உள்ளதாக அவர் தவத்தைச் சிறப்பித்துக் கூறினர். . . அகிலம்: ------------ வைகுண்டருக்கு திருமால் உபதேசித்தல் ====================================== நல்ல தெனவே நன்மகனைத் தானாவி செல்ல மகனே செகலத்துகுள் வாநீயென மகனை மிகக்கூட்டி வாரிக்குள் ளேநடக்கத் தவமுனிவ ரெல்லாம் சங்கீதம் பாடிவர பாவாணர் பாட பரமுனிவர் தாம்பாட நாவாணர் போற்ற நாரா யணர்மகனை . . விளக்கம்: ========== வைகுண்டரின் தவச்சிறப்பை முனிகள் கூறியதும் திருமால், மிகவும் நல்லது என்று கூறி தம் மகன் வைகுண்டரைக் கட்டிப் பிடித்து அணைத்து, என் அன்பு மகனே, நீ என்னுடன் கடலுக்குள் வருவாயாக என்று அழைத்தார். பிறகு வைகுண்டரைத் தன்னோடு கூட்டிக் கொண்டு கடலினுள் நடந்து சென்றார். அப்போது தவமுனிவர்களும், பாவாணர்களும் பரமுனிவர்களும் சங்கீதம் பாடி வந்தனர். நாவாணர்கள் துதித்தனர். . . அகிலம்: ======== பாற்கடலி லுள்ள பாலமிர்தந் தான்வருத்தி ஆர்க்க முடனே அருமைமக னைமூழ்க்கி அழுக்கைத் துடைத்து அஞ்சாட்சர மருளி முழுக்காட்டி மகனை உகந்தமுகத் தோடணைத்து . விளக்கம்: ========== அச்சமயம் திருமால் பால் கடலில் உள்ள பாலமிர்த்த்தை வருத்தி மிகவும் பேறு பெற்ற தம் அருமை மகனை அதனுள் மூழ்கச் செய்தார். தம் மகன் மேலிருந்த அழுக்கைத் துடைத்து, சிவாய நம என்னும் சூட்சம பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்து அருளினார். உடம்பெல்லாம் உதறி, முந்தைய துன்பம் எல்லாம் போக்கி, மகிழ்ச்சியான தம் முகத்தோடு அணைத்துக் கொண்டார். . . அகிலம்: ======== வேதப் புரோகி விளங்கி மிகவாழ்த்த நீதம் நிறைந்த நீலநிற மண்டபத்தில் தங்க மணியரங்கில் சமையக் கொலுவதிலே மங்காத ஈசுரரும் மாதவனுந் தேவர்களும் சத்தி யுமையும் சரசு பதிமாதும் முத்தியுள்ள தேவர் முனிமார் ரிஷிமாரும் எல்லோரும் நன்றாய் இறைஞ்சி முறையுமிட நால்லோர்க் ளெல்லாம் நாடி மிகஇருக்க வல்ல திருமால் மகனை முகம்நோக்கி . விளக்கம்: ========= அப்பொழுது வேதம் ஓதும் புரோகிதர்கள் அங்கே தோன்றி வாழ்த்திக் கொண்டிருக்க, சரியான பரிமாணத்துடன் செய்யப்பட்ட நீல நிறமான மண்டபத்தில், தங்கத்தாலான மணியால் ஆகிய அரங்கில், எல்லாரும் அமர உருவாக்கப்பட்ட உல்லாச மண்டபத்தில், எப்போதும் அழிவில்லா ஈசுரரும், மாதவனும், தேவர்களும், சக்தி உமையும், சரசுவதியும், முனிவர்களும் ரிஷிகளும் எல்லாரும் இறைஞ்சி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தனர். நல்லோர்கள் எல்லாரும் அவரை நாடி அருகிலிருந்த அச்சமயம் எல்லாமை பொருந்திய திருமால் வைகுண்டருடைய முகத்தை நோக்கி கூறலானார். . . அகிலம்: ======== முட்டப்பதி விஞ்சை: ------------------------------ செல்ல மகனே சிறந்ததேதி வந்ததினால் திருநாள் நடத்தித் தெருவீதி தான்வரவும் . விளக்கம்: ========= அன்பு மகனே, இப்பொழுது நீ தவம் முடித்துச் சரியான நாள் வந்த காரணத்தால், இனி நீ திருநாள் நடத்தி தெரு வீதிகளில் உலா வா. . . அகிலம்: ======== ஒருவாரந் தன்னில் ஒருநா ளிடைவிடாமல் நித்தந் திருநாள் நீநடத்தி யென்மகனே . விளக்கம்: ========== இனி, ஒரு வாரம் இடைவெளி இல்லாமல் தினந்தோறும் திருவிழா நடத்து என் மகனே. . . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
673 views
5 days ago
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 14ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 10.08.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம்: ------------ என்னைத் தவத்துக்(கு) இருத்தியிது நாள்வரையும் இன்ன மிரங்கலையோ என்தவசு காணலையோ அன்றருளித் தந்த ஆண்டு திகையலையோ இன்று முதற்கலியில் யான்போக வில்லையையா நம்மாற் கலியில் நனின்றிருக்கக் கூடாது சும்மா எனைநீங்கள் சோலிபண்ணக் கூடாது . விளக்கம்: ========== தந்தையே, என்னை இதுநாள்வரையும் தவத்துக்காக இருத்தி விட்டு வந்த உம்முடைய மனம் இன்னும் இரங்கவில்லையா? என்னுடைய தவத்தின் உண்மையை நீர் காணவில்லையா? அன்றைக்கு உபதேசித்த ஆறு ஆண்டுகள் இன்னும் முடியவில்லையா? இன்று முதல் அந்த கலி சேதத்திற்கு என்னால் போக முடியாது. என்னால் கலியில் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. மீண்டும் மீண்டும் என்னை வேலை வாங்க வேண்டாம். . . அகிலம்: ======== நன்றிசற்று மில்லா நாற வெறுங்கலியில் கொண்டென்னை வைத்துக் கோலமது பாராதேயும் இனியென்னாற் கூடாது இக்கலியி லேயிருக்கப் பனிதவழு மாயவரே பகர்ந்தமொழி மாறாமல் ஆறு வருசம் அவனித் தவசிருந்தேன் தாறுமா றுண்டானால் சாட்சியோ டேகேளும் என்று வைகுண்டர் இத்தனையுஞ் சொல்லிடவே நன்றினிய மகனை நல்லமுகத் தோடணைத்து . விளக்கம்: ========= நன்றி சிறிதும் இல்லாத மோசமான கலி வாழும் தேசத்தில் என்னை வைத்துவிட்டு என்னுடைய துன்பக் கோலத்தைத் தாங்கள் பார்த்து கொண்டிருக்க வேண்டாம். இனி என்னால் இக்கலியில் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. குளுமையான மாயவரே தாங்கள் உபதேசித்த உபதேசம் சிறிதுகூட மாறாமல் ஆறு வருடங்களாக கலி தேசத்தில் தவம் இருந்தேன். நான் ஏதாவது குற்றம் குறைகள் செய்திருந்தால் இந்த சாட்சிகளான முனிவர்களிடம் கேட்பீராக. என்று வைகுண்டர் இவ்வளவையும் சொல்லி முடித்தார். இவற்றை அமைதியாக கேட்ட நாராயணர், நல்ல இனிய மகனாகிய வைகுண்டரைத் தம்முடைய அழகான முகத்தோடு அணைத்து வைகுண்டரிடம் பேசலானார். . . அகிலம்: ======== கண்ணே மணியே கருவூலமே கனக மணியே ரத்தினமே விண்ணே வொளியே கற்பகமே வேதச் சுடரே விளக்கொளியே மண்ணே ழளந்த மலர்பதத்தில் வந்தே குதித்த மலர்க்கொழுந்தே இண்ணே முதலா யுனக்குநல்ல இயல்பே யாகு தென்மகனே . விளக்கம்: ========= என் கண் போன்றவனே, வைகுண்டமணியே, எல்லாவற்றுக்கும் கருப்பொருளே, உயர்வான கனகமணியே, இரத்தினமே, ஆகாயமயம் ஆனவனே, ஜோதிவடிவே, கற்பகமே, வேதச் சுடரே, விளக்கு ஒளியே, இவ்வுலகை அளந்த திருமால் ஆகிய என் இலட்சுமிதேவின் வயிற்றில் வந்துதித்த மலர்க் கொழுந்தே, இன்று முதலாய் உனக்கு நல்ல நிலைகள் உருவாகும். . . அகிலம்: மகனே தவத்துள் ளிருக்கையிலே வருமோ செல்வ மாரார்க்கும் செகமே ழறியத் தவமுடித்துச் சென்றால் சிவனுக் ககமகிழ்ந்து தவமே முடித்த நினைவதுபோல் சகல கருமங் கைகூடும் அகமே யுனக்கு அருளினது அனுப்போல் தவறா தருள்மகனே . விளக்கம்: ========== மகனே, கடினமான தவத்தினுள் இருக்கின்றபொழுது யாருக்காவது உயர்ந்த செல்வமாகிய பேறு வந்து கிடைக்குமா? இந்த உலகம் ஏழும் அறியும்படியாக நீ தவத்தை முடித்துக் கொண்டு சிவனிடம் சென்றால் சிவன் அகம் மகிழ்ந்து தவத்தில் நீ நினைத்த காரியங்கள் எல்லாம் நினைத்தபடி கைக்கூடி வரும்படி செய்வார். என் மனம் அறியும்படியாக நான் கூறுகின்றவை சிறு அணு அளவுகூட தவறாமல் நடந்து வரும். . . அகிலம்: ======= செல்ல மகனே சீமானே நீகேளு நல்ல மகனே நாரணா நீகேளு தவவேடம் பூண்டு தவமா யிருக்கையிலே சிவஞான மல்லால் செல்வம்போல் காணாது தவசு நிறைவேறித் தமோதரர்க் கேற்று பவிசு மிகவேண்டிப் பலன்பெற்று வாழ்வார்கள் . விளக்கம்: ========= என் மகனே, சீமானே, நாராயணனே, நான் இன்னும் சொல்லுபவற்றைக் கேட்பாயாக. நீ தவவேடம் பூண்டு தவத்தில் இருக்கின்ற சமயத்தில் சிவ ஞானம்தான் மேன்மையாக நிற்குமே அல்லாது, வேறு எந்தவகையான செல்வமும் உனக்குச் சித்தி ஆகாது. உன்னுடைய தவமானது நிறைவேறி வெற்றி பெற்று அது தாமோதரனார் ஏற்கும்படியாக அமையுமானால் எல்லா வகையான செல்வங்களும் பெற்று எல்லாப் பலன்களையும் அனுபவித்து, நிலைத்து வாழ்வாய் மகனே. . . அகிலம்: ======== மகனே நீயிருந்த மகாதவத் தின்பெருமை செகமீதே சொல்லத் தொலையுமோ என்மகனே கள்ள யுகத்தைக் காணாம லேயறுத்து உள்ள நடுஞாயம் உகத்தீர்ப்புச் செய்துமிக ஆகாத்த தெல்லாம் அழித்து நரகிலிட்டு வாகாய்க் குழிமூடி வாசல் தனைப்பூட்டி மாறிய தில்லாமல் வங்கிஷமுந் தானொழித்து வேறுவகை செய்து மேலுமொரு நல்லுகமாய்த் தரும யுகமாய்த் தாரணிக்க மாயருளிப் . விளக்கம்: ========= நீ இருந்த பெரிய தவத்தின் பெருமையைப் பற்றி எடுத்துச் சொல்ல முயன்றால் இவ்வுலகில் அதைச் சொல்லித் தீர்ப்பது முடியுமா? இந்தக் கள்ளத் தன்மையுள்ள கலியுகத்தைக் காண முடியாவண்ணம் வெற்றியோடு அழிக்கவும், கலியுகத்தின் முடிவில் நடுத்தீர்ப்பு செய்யவும் தகுதி இல்லாதவரை எல்லாம் அழித்து நரகில் போட்டு நரகக் குழியை மூடி, அதன் வாசலைப் பூட்டவும், அது மட்டுமல்லாமல் துன்பங்களை எல்லாம் ஒழித்து வேறு வழிமுறைகள் செய்து, நல்ல தருமயுகத்தை உருவாக்கவும், . . அகிலம்: ======== பொறுமை மனுவாய்ப் பெரியசான் றோர்வழியை அன்பாக வைத்து ஆள முடிசூடிப் பண்பாக வேண்டும் பவிசு மிகவாகச் சாகா வுலகத் தர்ம பதியாள வாகாய்த் தவசு வகுத்து முடிக்கையிலே ஆங்கார மாமோ ஆணுவங்க ளங்காமோ ஓங்கார மாமோ உற்ற தவசதுக்கு தவசு நிறைவேறி தான்வந்த தாலேயினி பவிசு வுனக்குப் பகருகிறேன் கேளெனவே . விளக்கம்: ========== பொறுமைக் குலம் ஆகிய உயர்வான சான்றோர் குலத்தை ஆள முடி சூட்டவும் அவர்களுக்குச் சிறந்த பண்புகளையும் செல்வச் செழிப்புகளையும் கொடுக்கவும், சாகாத நிலையில் உள்ளோர் வாழும் உலகமாகிய தருமபதி ஆளவும், நீ பக்குவமாகத் தவத்தை முடித்து உள்ளாய். இச்சமயம் உனக்கு இந்த அகங்காரம் என்னும் ஆணவம் உருவாகலாமா? இந்தத் தவம் முடித்த பிறகு ஓங்காரமாகச் சத்தம் இடலாமா? எனவே, அமைதியாய் இரு, நீ தவம் நிறைவேறி வந்த காரணத்தால், இனி உனக்கு வரப் போகின்ற செல்வச் செழிப்பான வாழ்வைப் பற்றிக் கூறுகிறேன் கேட்பாயாக. . . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
695 views
6 days ago
#அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 14ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.08.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம்: ------------ வரம்வேண்டி நம்மிடத்தில் வைத்தந்தப் பேய்களையும் குரமாய் மலையில் கொண்டு எரியவைத்தேன் ஆயிரத் தெட்டு ஆன திருப்பதியில் வாயிதமாய் வாழும் வாய்த்ததே வர்தமக்கு ஞாயமில்லை பூசை நல்லாடு தீபவெலி . விளக்கம்: ========= வாழுவதற்காக என்னிடம் வரம் வேண்டி வந்த பேய்களை எல்லாம் சேர்த்து மலையில் அனுப்பி ஓலம் இடும்படி எரிந்து அழியச் செய்தேன். ஆயிரத்து எட்டாம் ஆண்டு திருச்செந்தூர்க் கடலில் விஞ்சை பெற்று வைகுண்டராகி தாமரைப்பதியில் இதமான வாழ்வைப் பெற்ற வைகுண்ட சுவாமிக்கு இனிமேல் பூசை, நல்ல ஆடு, கிடா, போன்ற உயிர்பலி தீபாராதனை போன்றவை தேவை இல்லை. . . அகிலம் : ========= தேயமதி லுங்களுக்குத் தேரோட்டமு முதலாய் ஏற்கப் படாதினிமேல் இராச்சியத்தி லுள்ளவர்தாம் மார்க்க வைகுண்ட வல்லாத்தான் வந்ததினால் பூசை படைப்புப் பெலிதீப மேராமல் வாச முடனே மறைந்திருங்கோ நீங்களெனச் சட்டமிட்டு வைத்தேன் தரணிபுற் பூண்டுவரை . விளக்கம்: ========== எனவே, இத்தேசத்தில் உள்ள தெய்வங்களும், தேரோட்டம் முதல் பூசைகளும், பலிகளும் ஏற்கக்கூடாது. இனிமேல் இவ்வுலகில் உள்ளவர்களும் சான்றோருக்கு என ஒரு நல்ல வழியைப் ஏற்படுத்த வலிமை பொருந்திய வைகுண்டர் பிறந்து வந்ததனால், பூசை, படைப்புகள், பலி, தீபாராதனை போன்ற காரியங்களை ஏற்றுக் கொள்ளாமல் புகழோடு மறைந்திருந்து வாழ்ந்து வாருங்கள் என்று சிறப்பான சட்டங்களைக் கொடுத்து வந்தேன். . . அகிலம்: ======== மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும் வையகத்தை யாளும் மாநீச னுமறிய மெய்யாய் விரித்து விளம்பிமிகச் சட்டமிட்டேன் இத்தனை சட்டம் இட்டவர்த்த மானமெல்லாம் மத்திய மாய்வைத்த மாமுனியோ டேகேளும் . விளக்கம்: ========== இவ்வுலகில் இச்சட்டங்களைப் புல் பூண்டுவரையும் மட்டை மருந்து இலைகளும் மலை கடல், வாசுகிப் பாம்பு போன்றவையும் கலியுகத்தை ஆளுகின்ற பெரிய நீசனும் அறியும்படி உண்மையாகத் தெளிவுடன் சொல்லி விரைவாகச் சட்டங்கள் செய்து வைத்தேன். இவ்வாறாக நான் இட்ட சட்டங்களைப் பற்றி நம் இருவருக்கும் நடு நாயகச் சாட்சியாய் நிற்கும் முனிகள் மூலம் கேட்டுப் பார்ப்பீராக. . . அகிலம்: ======== அல்லாமற் பூமிதனில் அவர்களறி யாதபடி வல்லாமை யாய்க்காசி வழங்குமிலை பாக்குவரை நானாசை கொண்டு நருட்களிடம் வாங்கினதை வானாசை யுள்ள மாமுனியோ டேகேளும் . விளக்கம்: ========== அதுமட்டுமல்லாது இவ்வுலகில் மக்கள் எல்லாரும் அறியாதபடி என்னுடைய சிறந்த திறமைக்காக வழங்கிய காசு, பணம் போன்றவற்றையும், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் கூட நான் ஆசைகொண்டு அவர்களிடம் வாங்கியது உண்டா? என்பதைப் பற்றியும் வேத லோகத்தின் மேல் ஆசையுள்ள அந்த மாமுனிவர்களிடம் கேட்பீராக. . . அகிலம்: ======== சதுராய் நருளறிய நல்லவெகு அற்புதங்கள் இதுக்காய் கிணற்றில் ஏகாச்சிலை யுங்காட்டி இருந்தேன் தவசாய் என்னுடைய நாயகமே பொருந்தாத காரியங்கள் புத்திக் குளறிமிகச் செய்துமிகக் காணாது செய்ய மணிவிளக்கே நிசமிதுவோ என்று நீரவரோ டேகேளும் . விளக்கம்: ========= நான்கு திசைகளிலுள்ள மக்கள் அறியும்படியாகச் சிறப்பான பல அற்புதங்களை முத்திரிக் கிணற்றினுள் ஒப்பற்ற சிலை உருவாக எடுத்துக் காட்டி நான் அங்கே தவத்தில் இருந்து வந்தேன். என்னுடைய தலைவனே, நான் ஏதாவது தாங்கள் ஏற்றுக் கொள்ளாத செயல்களை அறிவு மயங்கிச் செய்ததாக நீர் நினைப்பீர் என்றால் அது உண்மை தானா? என்று இந்த முனிவர்களிடம் நீர் கேட்டுப் பார்ப்பீராக. . . அகிலம்: ======== இத்தனையுந் தர்மமதாய் யான்செய் திருக்கையிலே புத்திகெட்ட நீசன் பொல்லாதான் வந்தெனையும் கட்டி யடித்துக் கைவெடி யாலிடித்து இட்டிறுக்கி வைத்தான் இரும்பு விலங்கதிலே நஞ்சிட்டுத் தந்தான் நாடுஞ்சா ராயமதில் கொஞ்சுங் கடுவாய்க் கூட்டி லடைக்கவென்றான் . விளக்கம்: ========== நான் செய்தவை எல்லாம் மக்களுக்குத் தருமமாகச் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது அறிவுகெட்ட நீசன், பொல்லாத கலியரசன் அங்கே வந்து என்னைக் கட்டி இழுத்து அடித்துத் துப்பாக்கியினால் இடித்து, இறுக்கி கட்டி வைத்தான். இரும்பு விலங்கினில் என்னை இணைத்துச் சாராயத்தில் நஞ்சினை இட்டுத் தந்தான். என்னைச் சிறிதுநேரம் கடுவாய்க் கூட்டினுள் அடைக்க செய்தான். . . அகிலம்: ========= நீச னவன்சாதி நிசமாகத் தான்கூடி ஏசி யெனைப்பழித்த இடறுசொல்லக் கூடாது ஐயோ அவர்கள் அடித்த அடிகளெல்லாம் வையம் பொறுக்காதே மாநீசன் செய்தவினை மாந்திர தந்திரத்தால் வஞ்சனைகள் செய்தெனையும் கோந்திர மாகக் கொல்லவகை செய்தார்கள் பாவிகள் செய்த பலவினைகள் சொல்லவென்றால் தாவு முலகில் தாலமதி லோலையில்லை . விளக்கம்: ========== உண்மையாகவே நீசனாகிய அவனுடைய சாதியினர் எல்லாரும்கூடி என்னைப் பழித்து ஏசி செய்த துன்பங்கள் எல்லாம் சொல்லித் தீரா. அய்யோ, அவன் என்னை அடித்த அடிகளையும் இன்னும் அவன் செய்த துன்பமான செயல்களையும், இந்த உலக மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். . அந்த நீசர்கள் தம்முடைய மந்திரத்தாலும், தந்திரத்தாலும் வஞ்சனைகள் செய்து என்னை அவற்றுக்கு நடுவே அகப்படச் செய்து கொல்வதற்கு வழி முறைகள் செய்தார்கள். அந்த பாவிகள் செய்த செயல்களை எல்லாம் நான் சொல்லி எழுத வேண்டும் என்றால், நாம் நடமாடி கொண்டிருக்கின்ற இவ்வுலகில் உள்ள பனை மரங்களின் ஓலைகள் அத்தனையும் போதா. . . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
585 views
7 days ago
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 14ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 08.08.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம்: ------------ அய்யா முட்டப்பதி அடைதல்: =========================== கைக்குள்ளே நின்ற கரியசீ சன்மாரில் மெய்க்குள் ளறிய விளம்பினா ரெம்பெருமாள் இன்றைத் திவசம் இசைந்தமுட் டப்பதியில் நன்றிப்போ போக நல்மணிக ளாகுதெனச் . விளக்கம்: ========= வைகுண்டர் தம் அருகில் நின்ற கருமை நிறம் பொருந்திய சீடர்களை நோக்கி, சீடர்களே, இன்றைக்கு நம் மனதுக்கு விருப்பமான முட்டபதியை நோக்கிச் செல்ல நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் மட்டும் அறியும்படியாக சொன்னார். . . அகிலம்: ======== சொல்ல அறிந்து சீசன்மார் தாமகிழ்ந்து நல்லதெனச் சொல்லி நாடி யவரிருக்க அன்றிரா தன்னில் ஆரு மறியாமல் நன்றினிய சீசன் நாலுபேர் தாமறிய வந்த முனியும் வளர்ந்த இருமுனியும் சொந்தமுடன் நாதன் தொட்டில் மிகஏறி சீசன்மார் காவிச் சிணமாய் மிகநடக்க வாசமுள்ள மாமுனிவர் வலமிடமுஞ் சூழ்ந்துவரத் துடியாகத் தொட்டில் சுவாமி மிகஇருந்து வடிவான முட்டப் பதிதலத்தில் வந்தனரே . விளக்கம்: ========== இந்த இரகசியத்தை அறிந்த சீசன்மார் மகிழ்ச்சியுற்று மிகவும் நல்லது எனச் சொல்லி அங்கே காத்து இருந்தனர். அன்று இரவு யாரும் அறியாதவண்ணம் இனிய சீசர்கள் நான்கு பேர்களும், அவர்கள் அறியும்படியாகத் தம்மை அழைக்க வந்த முனிகளும் தம்முடனேயே இருந்து வளர்ந்து வந்த இரண்டு முனிவர்களும் தாம் தன்னந்தனியாகத் தொட்டிலின் மேல் ஏறிட சீசன்மார் தொட்டிலைச் சுமந்தவண்ணம் மிகவும் விரைவாக முட்டப்பதி நோக்கி நடந்தனர். அதிக வாசம் பொருந்திய முனிவர்கள் சூழ்ந்து வர, மிகவும் மகிழ்ச்சியாகச் சுவாமி தொட்டிலில் இருந்து முட்டப்பதி இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தார். . . அகிலம்: ======== முட்டப் பதியில் முகுந்த னரிநாதன் கிட்ட வருகும் கிருஷ்ணர்வந்து சேர்ந்திடவே மகனை மிகக்கண்டு மாவிருப்பத் தோடிளகி உகமாள வந்த உடையமக னேயுனத சடமெல்லாம் வாடி சடைப்பானே னென்மகனே வடவெல்லா மென்னோடு வகுத்துரைநீ யென்மகனே கண்ணே மணியே கருத்துள்ள நாயகமே . விளக்கம்: ========= இவ்வாறு வைகுண்டர் முட்டப்பதி வந்தடைந்தவுடன் நாராயணர் தம் அருகில் வந்து கொண்டிருந்த தம் மகன் வைகுண்டரைக் கண்டு மிகுந்த விருப்பத்தோடு தம் இடத்தை விட்டு எழுந்து வைகுண்டரை நோக்கி, இக்கலியுகத்தை அழித்துத் தருமயுகத்தை ஆள வந்த என் மகனே, உன் உடம்பு முழுவதும் வாடிக் களைப்பாய் இருப்பதன் காரணம் என்ன? என் மகனே, உன்னுடைய துன்பங்களை எல்லாம் என்னிடம் வகை வகையாகப் பிரித்துக் கூறுவாயாக, என் கண்ணே, மணியே, என்மேல் கருத்துள்ள தலைவனே என்றார். . . அகிலம்: ========= விண்ணே வொளியே வேதத் திருவிளக்கே கலியில் மிஇருந்து கலக்க மிகஅடைந்த மெலிவெல்லாஞ் சொல்லி விளம்புநீ யென்மகனே அடித்ததா ருன்னை அவனிதனில் பேயனென்று கடுத்தமது செய்தக் கலக்கமெல்லாஞ் சொல்லுவென்றார் . விளக்கம்: ========== ஆகாயமே, ஒளியே, வேதத் திருவிளக்கே, கலியினுள் இருந்து நான் அடைந்த மனக் கலக்கத்திற்குக் காரணமான துன்பங்களை எல்லாம் தெளிவாக என்னிடம் எடுத்துக் கூறுவாயாக. உலகில் உன்னைப் பேயன் என்று கூறி அடித்தவன் யார்? என்பது போன்ற கடினமான கொடுமைகளையும், துன்பங்களையும் என்னிடம் எடுத்துக் கூறுவாயாக என்று கூறினார். . . அகிலம்: ======== சொல்லென்று மாலும் சிவமு மெடுத்துரைக்க வல்லபெல மான வைகுண்ட ரேதுரைப்பார் செந்தூர்க் கடலில் செகலதுக்குள் ளென்னைவைத்து முந்த எனக்கு மொழிந்த வுபதேசம் கப்பாம லாறு வருசந் தவசாக மெய்ப்பாவின் பாலருந்தி வீடுசொத் தெண்ணாமல் கலிக்காசி யாசை கனாவில் நினையாமல் அலிக்கியானப் பெண்ணின் ஆசை யணுகாமல் பக்கக் கிளையாசை பாவித் தினிதாசை அக்கத்தி னாசை அனுப்போல் நினையாமல் . விளக்கம்: ========= இவ்வாறு திருமால் கூறவும், சிவனும் அதை ஆமோதித்தார். எனவே வைகுண்டர் நாராயணரை நோக்கி, தந்தையே, திருச்செந்தூர்க் கடலினுள் வைத்து என்னை உமது மடி மீது இருத்தி, முன்பு எனக்குக் கூறிய உபதேசங்களில் எந்த வகைத் தவறும் வராவண்ணம் ஆறு வருடங்களாகத் தவமிருக்கத் தொடங்கினேன். அப்பொழுது உண்மையாகவே, நான் பசுவின் பாலை அருந்தினேன். வீடு, சொத்து போன்றவற்றை எண்ணாது, கலியுகத்தில் உள்ள காசு, பணத்திற்காக என் கனவில் கூட ஆசை கொண்டு நினையாது, ஞானத்திற்கு எதிரான பெண் ஆசை என்னிடம் அணுகாதவாறு அகற்றி, பக்கத்தில் வாழும் சுற்றத்தாரின் மேல் உள்ள ஆசை, வேறு இனிய ஆசைகள், பொன்னாசை ஆகியவற்றைச் சிறு அணு அளவுகூட நினைத்துப் பார்க்காமல் வாழ்ந்தேன். . . அகிலம்: ======== நல்ல துணியாசை நளின மொழியாசை சொல்லினிய ஆசை தீன்பண்டத் தினாசை தேய்ப்புக் குளிப்புச் சிறந்த பொருளாசை தாற்பரிய மானச் சந்தோசத் தினாசை பூமியா சைமுதலாய்ப் பேராசை யும்வெறுத்துச் . விளக்கம்: ========== நல்ல துணி அணியும், ஆசை, நளினமான மொழி பேசும் ஆசை, இனிய சொல் கேட்கும் ஆசை, தின்பண்ட ஆசை, நன்றாகக் குளிக்கின்ற ஆசை, சிறப்பான பொருள்கள் மேலுள்ள ஆசை, உண்மை உள்ளவரோடு சந்தோசம் கொள்ளும் ஆசை போன்ற ஆசைகளையும் பூமி ஆசை முதல் பேராசைகளையும் வெறுத்தேன். . . அகிலம்: ======== சாமி யுமதருளால் தொல்புவியி லுள்ளோர்க்குத் தண்ணீரா லெத்த சர்வ வியாதிமுதல் மண்ணிலுள்ளோர் யார்க்கும் வாய்த்ததர்ம மாகவேதான் நோய்தீர்த்து வைத்ததல்லால் நேட்டமொரு காசறியேன் வாழ்வில்லாப் பேர்க்கு வாழ்வு மிகக்கொடுத்தேன் தாழ்வடைந் தோர்க்குத் தாழ்வை விலக்கிவைத்தேன் பிள்ளை யில்லார்க்குப் பிள்ளை மிகக்கொடுத்தேன் கள்ளமெல்லாம் நீக்கிக் கழிவை வரத்தைவைத்தேன் . விளக்கம்: ========= சுவாமியின் அருளால் மக்களுக்குத் தண்ணீரால் எல்லா வியாதிகளையும் எனக்கு வாய்த்த அறமாக கொண்டு நீக்கி வந்தேன். அப்படி அல்லாமல் நான் எனக்காக எந்தவிதப் பொருளைச் சேர்ப்பதிலும் கருத்துக் கொள்ளவில்லை. அப்படித் தேடிய ஒரு காசைக்கூட நான் அறியவில்லை. வாழ்வு இல்லா மக்களுக்குச் சிறந்த வாழ்வு செய்து கொடுத்தேன். வாழ்வில் தாழ்வு அடைந்த அன்பர்களுக்குத் தாழ்வை நீக்கி வைத்தேன். பிள்ளை இல்லா பெண்களுக்குப் பிள்ளை உருவாக அருளைக் கொடுத்தேன். கள்ளத் தனமான எண்ணத்தை எல்லாம் மாறச் செய்து பேய்களிடம் இருந்த வரங்களை என்னிடம் ஒப்படைக்கச் செய்தேன். . . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
5.1K views
1 months ago
AI indicator
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 12ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.07.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – . அகிலம்: ======== கலியரசனுக்குப் பூவண்டர் உபதேசம் தொடர்ச்சி =================================================== காரண மான மாயன் கலியுகம் வருகென் றெண்ணி நாரணன் பயந்து வோடி நல்மலை யேறி மானாய் வாரண நாத னம்பால் வல்வேட னெய்து செத்தான் தாரணி வாறே னென்று தவலோகஞ் சேர்ந்தான் மாயன் . விளக்கம்: ========= எல்லாவற்றுக்கும் காரணமான நாராயணர் கலியுகம் தோன்றி விட்டது என்று எண்ணிப் பயந்து ஓடிக் கடைசியில் ஓர் உயர்வான மலையிலே ஏறி மானாக உருவெடுத்து ஓடினார். அப்பொழுது அழகு பொருந்திய நாராயணரை ஒரு வலிமை பொருந்திய வேடன் ஒருவன் தனது அம்பால் எய்த காரணத்தால் அக்கண்ணன் இறந்தார். இவ்வாறு இறப்பு எய்திய கண்ணன் பூலோகத்திற்கு வர மாட்டேன் என்று கூறித் தவலோகத்தை அடைந்தார். . . அகிலம்: ======== அப்படிக் கொத்த மாயன் அவனியில் மனுப்போல் வாரான் இப்படி யிவன்தான் சொன்ன இகழ்ச்சியை எங்கே கண்டோம் கப்பிடிச் சாணான் கையில் கைக்கூலி வேண்டிக் கொண்டு இப்படி மழுப்ப வந்தாய் ஏதடா செய்தி யென்றான் . விளக்கம்: ========= அப்படிப்பட்ட மாயன் பூமியில் மனிதனைப் போல் வரமாட்டான். எனவே, இப்படி இவன் சொன்ன இகழ்ச்சி மொழியை நாம் எங்குக் கண்டோம்? கருப்புக்கட்டி செய்யும் சாணானின் கையிலிருந்து கைக்கூலியை வாங்கிக் கொண்டு இப்படிக் கூறி என் பேச்சினைப் புரட்ட வந்து விட்டாயே. அப்படி அல்லாமல் வேறு காரணம் உண்டா? உடனே சொல் என்று வினவினான். . . அகிலம்: ======== மழுப்பில்லைக் கேளுங் கேளும் மாண்டுநான் போனா லென்ன வழுப்பில்லை யுனக்குத் தூண்டல் வளருதே யவரி டத்தில் கழுத்திலே யுனது கையால் கத்தியை வாங்கி வைப்பாய் முழுத்தில்லை யானா லென்சொல் மேல்வீசை யரிந்து தாறேன் . விளக்கம்: ========= ஆயிடையன் சீற்றத்துடன் மன்னனே, உன் பேச்சைப் புரட்டவில்லை. என் உயிரே போனால் என்ன? கேள். வைகுண்டரிடம் குற்றம் இல்லை. உன் உயிரை அழிப்பதற்குரிய தூண்டில் அவரிடமே வளர்ந்து கொண்டிருக்கிறது. அறிந்து கொள். உன் கழுத்தில் உன் கையாலே உன்னை அழிக்கும் கத்தியை வாங்கி வைத்து உள்ளாய். இது முழுவதும் உண்மை ஆகாவிடில் என் உதட்டின் மேலிருக்கும் மீசையை அரிந்து தருவேன் என்று சபதமிட்டான். . . அகிலம்: ======== ஆனையும் படையு முன்றன் அரண்மனைக் கோவில் காலும் சேனையுங் குடையும் வியாழச் செல்வமுஞ் சிறப்போ டெல்லாம் ஏனமு மிகவே தோற்று எரிந்துநீ கரிந்து சாவாய் நானிதைச் சொல்ல வில்லை நாரண ருரைத்தா ரென்றான் . விளக்கம்: ========= உன் ஆனைப்படை அரண்மனை, கோவில் தேர்ச்சக்கரம், சேனை, வெற்றிக்குடை, யானைச் செல்வம், ஆகியவற்றின் சிறப்புகள் எல்லாமும், ஆயுதங்களும் விரைவாக உன்னை விட்டு நீங்கி மனம் எரிந்து துன்பப்பட்டுச் சாவாய். நான் இதைச் சொல்லவில்லை. நாராயணர் உரைத்ததைச் சொல்லுகிறேன் என்று கூறி முடித்தான். . . அகிலம்: ======== என்றிவன் சொன்ன போது ஏங்கியே வுளறிப் பின்னும் பொன்னுற வகையி னாலே புத்தியி லறியா வண்ணம் கொண்டிவன் தன்னைப் போடுங் கொடுவிலங் கதிலே சிங்கத் தண்டிகை யெடுத்து வாரும் சாணெனச் சாமி பார்க்க . விளக்கம்: ========= இவ்வாறாக ஆயிடையன் அரசனிடம் சொன்னபொழுது, கலியரசன் இவற்றை எல்லாம் கேட்டு மனம் ஏங்கி வாய் உளறி, தன்னுடைய அழியப் போகின்ற விதியினால் உண்மை நிலையைத் தனது புத்தி மூலம் அறியாமல் அங்கு நின்ற தளபதியை நோக்கி, இந்த ஆயிடையனை அழைத்துக் கொண்டு கடுமையான விலங்கிட்டுச் சிறையிலே போடுங்கள் என்று கட்டளை இட்டு, சேவர்களை நோக்கி, சேவர்களே, நான் சாணாச் சுவாமி என்று கூறப்படுகின்ற அந்தச் சாணானைப் பார்க்க வேண்டும். எனவே உடனடியாகச் சிங்க முகப் பல்லக்கை எடுத்து வாருங்கள் என்று கட்டளை இட்டான். . . தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008}