இன்றைய தேவ வார்த்தை today god's word

isaac finney
668 views
7 days ago
#இன்றைய தேவ வார்த்தை today god's word #பைபிள் வசனம் #🌎பொது அறிவு #பிராத்தனை #bible 🔥இன்றைய தேவ வார்த்தை🔥 God's word for you today🔥#tamilchristiansongs #tamilbibleverse #whatsappstatus #tamilchristiansongs #tamilchristian #tamilchristiansong #tamilchristianyouthnetwork #christian #tamilchristianonline #tamil #tamilchristianquotes #tamilchristianworship #jesus #tamilgospel #mohanclazarus #tamilworship #johnjebaraj #tamilchristiannetwork #jesusredeems #tamilchristians #jesuschrist #tamilchurch #song #dailymanna #jesuscalls #tamilchristiancommunity #jesuslovesyou #bible #tamilbible #tamilchristiansongsmessages #bibleverse #joelthomasraJ #christiansongs #berchmans #gerssonedinbaro # #biblequotes #malayalam #johnjebarajsongs #tamilchristianyouth #christ #verseoftheday #christianity #bhfyp #tamilchristianmedia #bennyjoshua #john #bensamuel #amen #tamilsongs #jesussaves #tamilworshipsongs #worship #tamilchristianstatussong #faith #tamilchristiansongsandwords #gospel #praisethelord #god #jebaraj #christiansong #christmas #tamilchristian #tamilchristiansong #tamilchristiansongs #tamilchristianonline #tamilchristianyouthnetwork #tamilchristianworship #tamilchristiannetwork #tamilchristiancommunity #tamilchristianmusic #tamilchristianwedding #tamilchristianverses #christiantiktok #tamilchristiansongs #tamilchristiansong #jesuslovesyou #beautifulgod #jesuswantsyou #heisrisen #tamilchristianyouthnetwork #tamilmessage #christian #beautiful #tamiljesussonglyrics #healing #beleiverofchrist #belovedjesus #jesus #jesuscares #caringgod #tamilshortmessage #reels #creator #instagramreelsindia❤️❤️ #tamil #tamilchristianonline #tamilbibleverse #tamilgospel #tamilchristianquotes #tamilchristianworship #jesuschrist #tamilchristiannetwork #johnjebaraj #tamilchristians #mohanclazarus #bible #bibleverse #tamilworship #jesusredeems #tamilchurch #tamilbible #jesuscalls #tamilchristiancommunity #tamilchristiansongsmessages #song #dailymanna #ks #kirisamuel #simsonkirijan #kirijan04 #foryoupage❤️❤️ #foryoupage #srilankan #foryou #vavuniya #fypシ #walkwithjesus #france🇫🇷 #fyppp #jesuscomingsoon #1millionaudition #loveyoujesus✝️✝️ #amen🙏 #instagramreelsindia❤️ #todaybibleverse #mohanclazuras_message #tamilbibleverses #tamilbibleverseoftheday #jesusredeemsministries #tamilbiblemessage #tamilchristianwhatsappstatus #tamilchristianwhatsappstatussong #tamilgospelsongs #tamilmethodistchurch #ianjeevan #tamilgrandma #indiangrandma #indianpatti #indianchristian #tamilverse #verseoftheday #goodfriday #resurrection #dailyverseoftheday #tamilgospelsong #ınstagood #photography #godfatherofbrokenheart #jesusquotes #motivationtamil #tamilsonglyrics #tamilmotivationalvideos #chosen #tamilchristianmedia #tamilchristianmemes #tamilchristianyouth #christiansong #dailyverse #jesussongs #dailystatus #bennyjoshua #santhosh #tamilchristiantiktok #tamiltiktok #bealiveinchrist #viral #trending #trendingtiktok #trendingedit #srilanka #jaffna #love #bitiblequotes #amen #tamilchristianvibes #tamilbibletoall #fyp #bgm_daily_songs #bgm_hits_ #christianyouth #christiansongs #christianblogger #christianyoungadults #tamil_christian_song #tamil_christian_quotes #christianministry #christiannetwork #youthchristian #christianyouthministry #jesuslovesyou❤️ #berchmans #malayalam #bhfyp #sunday #walkwithjesusdaily #walkwithjesuschrist #walkwithjesuseveryday #tamilchristianworship #tamilbibleverse #tamilchristiansongs #johnjebaraj #mohanclazarus #jesusredeems #tamilchristianquotes #tamilchurch #tamilchristianonline #tamilchristiancommunity #samelijah #jesus #tamilchristian #nehemiahroger #srilankantamil #tamilgospelgod #tamilchurch #tamilworship #tamilbible #tamilchristianonline #tamilchristianyouthnetwork #tamilchristianonlinenetwork #tamilchristianstatus #tamilchristianonlinemessages #tamilchristiansermon #tamilchristianquotes #tamilchristianmesseage #tamilchristians #tamilchristianmedia #tamilchristiansongmesssage #allnationschurchindia #timothysharanwe #timothysharansong #christian #tamil #tamilchristiansongs #tamilchristiansong #tamilbibleverse #tamilchristiannetwork #tamilchristianworship #tamilgospel #tamilchristiansongsmessages #johnjebaraj #song #jesusredeems #biblequotes #jesuslovesyou #verseoftheday #bible #joelthomasraj #gerssonedinbaro #mohanclazarus #bhfyp #jesus_beats__ #timothysharan🔥😼 #jesuslover #tamilchristiancommunity #tamilchristianyouth #tamilchristianmusic #tamibibleverse #tamilgospelsong #tamiltiktok #tamilgospelcover #tamilchristianbgm #jesusiscalling #jesuschrist #jesusfirst #jesusquotes #jesusisalivenever #timothysharanjesus #tamilstatus #tamilsong #god #faith #believe #love #cross #memes #gloriouslordjesus #eelamviews #katchatheevu #world #love #instagram #photography #travel #nature #life #instagood #india #art #like #follow #photooftheday #beautiful #photo #music #travelphotography #europe #usa #picoftheday #happy #explore #naturephotography #fashion #likeforlikes #beauty #lifestyle #followforfollowback #bhfyp #earth #instadaily #amazing #of #style #peace #people #sky #covid #cute #ig #a #insta #italy #motivation
செ.சாா்லஸ் செபஸ்டின்
717 views
8 days ago
*🔸நற்செய்தி சி #இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம் ந்தனை* *"மனித ஞானமும் - கடவுளின் ஞானமும்"* எல்லாராலும் ஞானி என்று கருதப்பட்ட ஒருவர் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக பலரும் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்து போனார்கள். ஒருநாள் அவரைப் பார்ப்பதற்காகப் பெருந்திரளான மக்கள் வந்திருந்தார்கள். அவர்கள் அவரை சூழ்ந்துகொண்டு, தங்களுக்கு ஏதாவது போதிக்குமாறு அவரிடம் கேட்டார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர், தனக்கு இடப்பக்கம் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். பின்னர் அவர் வலப்பக்கம் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். சிறிது நேரம் இடைவெளிக்குப் பின்பு அவர் தனக்குப் பின்னால் அமர்ந்திருந்தவர்களையும், தனக்கு முன்னால் அமர்ந்திருந்தவர்களையும் பார்த்தார். மீண்டுமாக சிறிதுநேரம் அமைதி நிலவியது பின்னர் அவர் மேலயும் கீழேயும் பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் அவரது ஒவ்வொரு செயலையும் பார்த்துவிட்டு, ‘என்னவொரு ஞான நிறைந்த போதனை’ என்று வியந்து, கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தார்கள். நீதிமொழிகள் நூல் சொல்வது போல், பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவன் (நீமொ 17: 28) எனக் கருதப்படலாம். ஆனால், அவன் உண்மையில் ஞானமுள்ளவன் கிடையாது. இன்றைய இறைவார்த்தை யார் ஞானமுள்ளவர் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம். *திருவிவிலியப் பின்னணி:* இன்றைக்குப் பலரும் தங்களை ‘ஞானி’ என நினைத்துக் கொள்கின்றார்கள், அல்லது காட்டிக் கொள்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஞானியா? என்பது மிகப்பெரிய கேள்வி. “தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்” (இச 21: 23) என்ற இறைவார்த்தையின் அடிப்படையில், சிலுவை உலகினரின் பார்வையில் மடமையாகக் கருதப்பட்டது. ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் பவுல், “மனித ஞானத்தைவிடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது” என்கிறார். எனில், சிலுவையில் அறையைப்பட்ட கிறிஸ்துவே கடவுளின் ஞானமாக வல்லமையாக இருக்கின்றார். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த இறைஞானத்தை ஒருவர் பெறவேண்டும் என்றால், அவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்மீது நம்பிக்கை வைக்காமல், இறைஞானத்தைப் பெறுவது சாத்தியமில்லாது. இன்றைய நற்செய்தி வாசகம் இறைஞானத்தோடு செயல்பட்டால் விண்ணரசில் நுழையலாம், விண்ணக விருந்தில் கலந்து கொள்ளலாம் என்ற சிந்தனையைத் தருகின்றது. பொதுவாக யூதர்களின் திருமண நிகழ்வு மணமகள் வீட்டிலிருந்து தொடங்கும். மணமகன் மணமகளின் வீட்டிற்கு வந்தபிறகு (அது எந்த நேரமாகவும் இருக்கலாம்) பவனி தொடங்கி மணமகன் வீட்டை அடையும். அதன்பிறகு திருமண விருந்து தொடங்கும். இதற்காக மணமகளின் தோழிகள் ஆயத்தமாய் இருக்க வேண்டும். நற்செய்தியில் இயேசு சொல்லும் உவமையில் வரும் ஐந்து தோழிகள் அறிவிலிகளாக இருக்கின்றார்கள். இவர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு, அவரது வருகைக்கு ஆயத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அடையாளம். முன்மதியுடைய தோழிகளோ ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவருடைய வருகைக்காக ஆயத்தமாக இருந்தவர்களுக்கு அடையாளம். யாரெல்லாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ, அவர்களுக்கு அவர் இறைஞானத்தைத் தருகின்றார். அதைக் கொண்டு அவர்கள் முன்மதியோடு செயல்பட்டு, ஆண்டவரின் அரசில் நுழைகின்றார்கள். எனவே, இறைஞானம் நமக்குக் கிடைக்க இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம். *சிந்தனைக்கு:*  ஆண்டவரைப் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்  உலக அறிவு கடவுளுக்கு முன்பு ஒன்றுமே இல்லை.  கடவுளுக்கு முன்பாகத் தாழ்த்தி கொள்வோரைக் கடவுள் தனது அருளால் உயர்த்துவார். *இறைவாக்கு:* ‘என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம்’ (பிலி 3: 8) என்பார் புனித பவுல். எனவே, இயேசுவைப் பற்றிய அறிவே ஒப்பற்ற செல்வம் என உணர்ந்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
செ.சாா்லஸ் செபஸ்டின்
724 views
12 days ago
*🔸 புனித பர்த்தலமேயு – திருத்தூதர் விழா* #இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை இன்று திருச்சபையானது திருத்தூதரான தூய பார்த்தலமேயுவினுடைய விழாவைப் பெருமகிழ்வுடன் கொண்டாடி மகிழ்கின்றது. விவிலியத்தில் இவரைப் பற்றிய செய்தி மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்தி நூல்களில் திருத்தூதர்களுடைய அட்டவணைப் பகுதியிலும், யோவான் நற்செய்தி முதல் அதிகாரத்திலும் (யோவா 1:43-51) திருத்தூதர் பணிகள் நூல் முதல் அதிகாரத்தில் ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைகிறபோதும் வாசிக்கின்றோம். உழுதநிலத்தின் மகன்’, ‘நத்தனியேல்’ என்று அழைக்கப்படக்கூடிய இவரைக் குறித்துத்தான் ஆண்டவர் இயேசு, “இவரே உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர் (யோவா 1:47) என்று குறிப்பிடுகிறார். கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த தூய ஜெரோம் குறிப்பிடும்போது, “ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு இவர் இந்தியாவிலுள்ள கொங்கணம் கடற்கரைப் பகுதியிலும், மும்பை கடற்கரைப் பகுதியிலும் நற்செய்தி அறிவித்துவிட்டு, அங்கிருந்து அர்மேனியா சென்று, அங்கே நற்செய்தி அறிவிக்கும்போது மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்” என்று கூறுவார். மைக்கேல் ஆஞ்சலோ ரோம் நகரில் இருக்கக்கூடிய சிஸ்டைன் பேராலயத்தில் வரைந்த ஓவியத்தில் தூய பார்த்தலமேயு உடலிலிருந்து உரிக்கப்பட்ட தன்னுடைய சதையைத் தாங்கி நிற்பது போன்ற படம் வரையப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். இவருடைய விழாவைக் கொண்டாடுகிற வேளையில் இவர் நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத் தருகிறார் என்று சிந்தித்துப் பார்ப்போம். முதலாவதாக தூய பார்த்தலமேயு இயேசுவின் மீது கொண்ட அளவுகடந்த அன்பால், நற்செய்தி அறிவிப்பிற்காக தன்னுடைய உயிரையும் கொடுக்க முன்வருகிறார். “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்” என்ற ஆண்டவர் இயேசுவின் அழைப்பை ஏற்று அர்மேனியாவில் நற்செய்தி அறிவித்தார். அப்படி நற்செய்தி அறிவிக்கும்போது அர்மேனியா நாட்டு மன்னன் பொலிமியுஸ் நற்செய்தியால் தொடப்பட்டு, தூய பார்த்தலமேயுவிடமிருந்து திருமுழுக்குப் பெற்றார். ஆனால் இது பிடிக்காத மன்னனின் சகோதரன் அஸ்தியாஜெஸ் என்பவர் இவரை உயிரோடு தோலுரித்து, சிலுவையில் தலைகீழாக அறைந்து கொன்று போட்டான். நற்செய்தி அறிவிக்கின்றபோது புனிதர் அனுபவித்த துன்பத்தைப் போன்று நாமும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கலாம். ஆனால் கிறிஸ்துவின் அன்பு நம்மை எந்நாளும் காத்துக்கொள்ளும் என்பதில் நாம் நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். பவுலடியார் உரோமையருக்கு எழுதிய மடல் 8:35 ல் கூறுவார், “கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்ககூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்கமுடியும் என்பார். ஆம் கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம் காத்து வழிநடத்துகிறது என்பதை உணர்ந்தால் எவ்வகை சவாலையும் நாம் துணிவோடு எதிர்கொள்ளலாம். தூய பார்த்தலமேயுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளகூடிய இரண்டாவது பாடம் கள்ளம், கபடற்றவர்களாய் வாழ்வதுதான். ஆண்டவர் இயேசு இவரைக் குறித்து கள்ளம் கபடற்றவர் என்று சொன்னார் என்றால் நிச்சயம் இவர் குழந்தையைப் போன்று தூயவராக, தூய மனத்தினராக வாழ்ந்திருக்கவேண்டும். மத் 5:8 ல் வாசிக்கின்றோம், “தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்” என்று. ஆம் தூய மனத்தோரால்தான் கடவுளை முழுமையாகக் காண முடியும். மேலும் இங்கே கள்ளம் கபடற்ற உள்ளம் அல்லது தூய உள்ளம் என்பதை, பிறர் துன்பத்தைக் கண்டு இரங்கிடும் உள்ளம் என்பதாகவும் புரிந்துகொள்ளலாம். நற்செய்தியிலே ஆண்டவர் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்யும்போது ஒரு சிறுவன்தான் முதலில் மனமிரங்கி தன்னிடம் இருந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொடுக்க முன்வருகிறான். அவன் மக்கள்மீது மனமிரங்கி இருக்கலாம். இதைபோன்று தூய பார்த்தலமேயுவும் புன்புறும் மக்களைக் கண்டு மனமிரங்கி உதவி இருக்கவேண்டும். ஒரு கற்பனைக் கதை. கணவன், மனைவி ஒரே ஒரு குழந்தை என்றிருந்த அழகான வீட்டிற்கு தந்தைவழி தாத்தா வந்தார். பேரனுடன் தங்கி இருந்து, தன் கடைசி நாட்களைக் கழிக்க ஆசைகொண்ட அவருக்கு கண்கள் சரியாகத் தெரியவில்லை. கைகளும் பொருட்களை எடுக்கையில் நடுக்கம் கொண்டன. அந்த அளவுக்கு முதுமையின் தாக்கத்துடன் அவர் இருந்தார். ஒருநாள் இரவுஉணவின்போது வீட்டில் எல்லாரும் ஒன்றாக, மேசையில் அமர்ந்து உணவு உட்கொள்ளும்போது தாத்தா கரண்டியை கையில் எடுக்கையில் கைதவறி கரண்டி கீழே விழுகிறது. பால் குடிக்க கோப்பையைப் பிடிக்கையில் கை நடுக்கத்தில், பால் மேசை விரிப்பில் சிந்தி விடுகிறது. அவர் உணவு உண்ணும் போதும் உணவும் கீழே சிந்துகிறது. இதனால் கணவனும், மனைவியும் எரிச்சல் அடைந்தனர். தொடர்ந்து தாத்தாவை பொறுத்துக் கொள்ள முடியாத அவர்கள், தங்களுடைய மேசையில் அவரை அமர வைக்காமல் ஓரமாய் அவருக்கென்று ஒரு தனி மேசையில் சாப்பிட வைத்தனர். அவர் சாப்பிடும் பாத்திரம் கீழே விழுந்து உடையாமல் இருக்க மரத்தால் ஆன பாத்திரங்களில் உணவு கொடுத்தனர். இப்படியாக நாட்கள் நகர்ந்தன. நடக்கும் அத்தனை விஷயங்களையும் பேரன் அமைதியாய் பார்த்துக்கொண்டே இருந்தான். எல்லாரும் ஒன்றாக அமர்ந்துச் சாப்பிட, தாத்தா மட்டும் தனி மேசையில் சாப்பிட்டு வந்தார். தான் ஒதுக்கப்பட்டு விட்டோம் என்ற ஏக்கம் அவர் கண்களில் தெரிந்தது. ஒரு நாள் அந்த வீட்டுக்குழந்தை (தாத்தாவின் பேரன்) மரத்துண்டுகளை வைத்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த அவனுடைய தந்தை மகனிடம், "தம்பி என்ன விளையாடுறிங்க?" என்று அன்பாய் கேட்டார். அதற்கு குழந்தை, "நான் இந்த மரத்துண்டுகளை வைத்து 2 பாத்திரங்கள் செய்கிறேன்பா. நான் பெரியவன் ஆனதும் உங்களுக்கும், அம்மாவுக்கும் சாப்பிட கொடுக்க வேண்டுமல்லவா. அதற்குத் தான் இது" என்று ஒருபோடு போட்டது. தந்தையால் பேச முடியவில்லை. கண்கள் கண்ணீரில் ததும்பியது. தான் என்ன தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. குற்ற உணர்ச்சி மேலிட்டவராய் மறுநாளிலிருந்து தாத்தாவுக்கும் அவர்கள் அமரும் மேசையிலே உணவு பரிமாறப்பட்டது. பக்கத்திலேயே நின்று தாத்தா சாப்பிடும் வரை அவர்கள் கவனித்துக் கொண்டார்கள். குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள் நம்மைக் கூர்ந்து கவனிக்கிறார்கள்; கள்ளம் கபடற்ற தங்களது உள்ளத்தில் பிறரது துன்பத்தைக் கண்டு இரங்கும் மனத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆகையால் தூய குழந்தைகளைப் போன்று; புனித பர்த்தலமேயுவைப் போன்று கள்ளம் கபடற்ற மனத்தினராய், பிறருக்கு இரங்கும் உள்ளத்தினராய் வாழ்ந்து, இயேசுவின் நற்செய்தியை அறிவிப்போம். இறையருள் பெறுவோம். *- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.* #இன்றைய வசனம்
செ.சாா்லஸ் செபஸ்டின்
734 views
18 days ago
#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம் இணைந்து செபிப்போம்,* *ஆண்டவரே இயேசுவே, என் புகழிடமானவரே! உம்மை துதிக்கின்றேன். இன்னலினின்று என்னை விடுவித்தவரே! நன்றியோடே உம்மை புகழ்ந்து, என் வாயார பாடுகின்றேன். எனக்கு அறிவு புகட்டி என்னை வழிநடத்துபவரே, உமக்கு நன்றி கூறுகின்றேன்.* *உம்மை சந்தித்த இளைஞன் முகவாட்டத்துடன் சென்றான்; காரணம், உமது கட்டளையை நிறைவேற்ற இயலாத அளவில், அவன் உலகின் செல்வத்தின் மீது ஆசை வைத்திருந்தான் என்று, இன்றைய இறைவார்த்தையில் வெளிப்படையாக எனக்கு அறிவுரை தருபவரே. என் வாழ்நாட்களில் பல தடவைகளில், உலக மோகங்களை விட்டு உம்மை பின் செல்ல இயலாத, பலவீன பிள்ளையாக இருக்கின்றேன். இயேசுவே! உமது நாமத்திற்காய் என் ஆசையை விட்டுவிடவும், உமது நாமத்திற்காய் என் சிற்றின்பங்களை விட்டு, உம்மை தேடியோடி வரும் பிள்ளையாக என்னை மாற்றும். இயேசுவே! நீரே என் தலைவர்! உம்மை அன்றி வேறு செல்வம் எனக்கு இங்கில்லை என்பதை மனதில் இருத்தவும்; விண்ணகத்தில் அழியாத செல்வம் சேர்க்கவும்; உமது ஞானத்தால் ஒளி தந்து என்னை வழி நடத்துங்கப்பா.* *ஆண்டவரே இயேசுவே! இன்றைய நாளில் என்னை, அமைதியான நீர் நிலைகளுக்களுக்கு அழைத்து செல்லும்; செல்வம் என்ற முட்செடிகள் என் ஆன்மீக வாழ்வை பாதிக்காமல் இருக்க, உமது அருள் தாருமப்பா. நல்ல நிலத்தில் வீழ்ந்த விதையைப் போல, நூறு மடங்காய் பயன் தரும் பிள்ளையாக என்னை உருமாற்ற வேண்டும் என்று, இயேசுவின் தூய நாமத்தால் செபிக்கின்றேன். ஆமென்.* *நன்றி - தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம்.✍🏼🌹*