இன்றைய தேவ வார்த்தை today god's word

செ.சாா்லஸ் செபஸ்டின்
1K views
3 days ago
#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம் சிந்தனை* *“..அவர்களிடையே நான் இருக்கின்றேன்”* அது ஒரு சிற்றூரில் இருந்த பங்குக்கோயில். அதில், ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின், மறையுரையின்போது பங்குப் பணியாளர் ஒரு பெரியவரையும் ஓர் இளைஞரையும் அழைத்தார். அவர்கள் இருவரும் அவருடைய அழைப்பினை ஏற்றுத் திருப்பீடத்திற்கு முன்பு வந்தார்கள். அப்போது பங்குப் பணியாளர் அவர்கள் இருவரையும் தன்னுடைய வலப்புறமும் இடப்புறமும் நிற்கச் சொல்லிவிட்டு, தன்னுடைய இரண்டு கைகளையும் இயேசு சிலுவையில் விரித்து வைத்திருப்பதைப் போன்று விரித்து வைத்துக் கொண்டார். பின்னர் அவர் பெரியவரைப் பார்த்து, “நீங்கள்தான் தந்தையாம் கடவுள்” என்றார். இளைஞனைப் பார்த்து, “நீதான் வீழ்ந்து கிடக்கும் மானுடம்” என்றார். தன்னை, “இயேசு கிறிஸ்து” என்று சொன்னார். கோயிலில் திரண்டிருந்த மக்கள் அனைவரும் பங்குப் பணியாளர் என்ன செய்யப் போகிறாரோ என்று அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். பங்குப் பணியாளர் தனது வலப்புறமும் இடப்புறமும் இருந்த பெரியவரையும் இளைஞரையும் தன்னுடைய கை நன்றாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்ய, அவர் விரித்து வைத்திருந்த இரு கைகளையும் ஒன்றாகக் கொண்டு வந்தார். இதனால் வலப்புறமும் இடப்புறமும் இருந்த இருவரும் ஒருவரையொருவர் தொடும் அளவுக்கு அருகருகே வந்தார்கள். உடனே அவர் அவர்கள் இருவரையும் தன்னுடைய கையை விட்டுவிடச் சொல்லிவிட்டு, ஒருவர் மற்றவருடைய கைகளைப் பற்றிக்கொள்ளச் சொல்ல, அவர்களும் ஒருவர் மற்றவருடைய கைகளைப் பற்றிக் கொண்டார்கள். நடந்த எல்லாவற்றையும் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த இறைமக்களிடம் பங்குப் பணியாளர், “தந்தையாம் கடவுளுக்கும் வீழ்ந்து கிடந்த மானுடத்திற்கும் இடையே இயேசு இணைப்பாளராக இருந்து ஒப்புரவைக் கொண்டு வந்ததை அடையாள முறையில் உணர்த்தும் பொருட்டே, நான் இப்படியொரு செயலைச் செய்து காட்டினேன். எங்கே கடவுளுக்கு மனிதருக்கும், ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கும் இடையே ஒன்றிப்பு ஏற்படுகின்றதோ, அங்கேதான் கடவுள் இருக்கின்றார்” என்று தெளிவாய்ச் சொல்லி முடித்தார். ஆம், எங்கே மனிதர்கள் ஒன்றித்திருக்கின்றார்களோ அங்கேதான் கடவுள் இருக்கின்றார். அதையே இந்த நிகழ்வும் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம். *திருவிவிலியப் பின்னணி:* காணமற்போன ஆட்டினை – மனிதரை - எப்படி தேடிக் கொண்டு வரவேண்டும் என்ற பின்னணில் இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கின்றது. ஒரு மனிதர் பாவம் செய்கின்றபோது, அவரை எப்படி நல்வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்கு தனியாகவும், இருவர், மூவராகவும், அல்லது திருஅவையாகவும் சென்று அவரோடு பேசி, அவரை நல்வழிக்குக் கொண்டு வரலாம் என்று சொல்லும் இயேசு, இவ்வாறு ஒருவர் நல்வழிக்குக் கொண்டு வரப்படும்போது, சகோதரர் சகோதரிகள் நடுவில் ஒன்றிப்பு ஏற்படும்போது அங்கே தான் இருப்பதாகச் சொல்கின்றார். யூதர்களைப் பொறுத்தவரையில், பத்துப் பேர் இருந்தால், தொழுகைக் கூடத்தை நடத்தலாம் என்றொரு நியதி இருந்தது. இயேசுவோ, “இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன்” என்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரின் மாட்சி அல்லது அவரது உடனுறைதல் எருசலேம் திருக்கோயிலை விட்டு வெளியே செல்வதைக் குறித்து வாசிக்கின்றோம். இதற்கு முக்கியக் காரணம், மக்கள் கடவுளோடு ஒப்புரவாக இல்லை, சக மனிதர்களையும் அவர்கள் மனிதர்களாக நடத்தவில்லை. இறையன்பும் பிறரன்பும் இடத்தில்தான் கடவுள் இருப்பார். எனவே, நாம் கடவுளையும் அவரது சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்களையும் அன்பு, அவரது உடனுறைதல் நம் நடுவில் இருக்கச் செய்வோம். *சிந்தனைக்கு:*  உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில்தான் கடவுள் இருக்கின்றார்.  நாம் ஒவ்வொருவரும் அடுத்திருப்பவருக்குக் காவலாளிகள், அதனால் அவர்கள் வழி தவறிப்போகாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை.  மனிதருக்கு எதிராகச் செய்யும் பாவம் அனைத்தும் கடவுளுக்கு எதிராகச் செய்யப்படும் பாவமே. *இறைவாக்கு:* ‘அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கின்றார்’ (1 யோவா 4:8) என்பார் யோவான். எனவே, கடவுளையும் அடுத்திருப்பவரையும் உண்மையாய் அன்புசெய்து, கடவுளின் உடனுறைதல் நம் நடுவில் இருக்கச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம். *- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*
செ.சாா்லஸ் செபஸ்டின்
617 views
3 days ago
#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை காலை ஜெபம்* "அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை என்று போற்றுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்து பாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள். கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். அவரிடம் மன்றாட என் வாய் திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது". (திருப்பாடல் 66: 1-3a. 5,8. 16-17) கடவுளே! அனைத்து உலகின் வேந்தர் நீரே. இந்த காலை வேளையில் உம்மை வாழ்த்தி, போற்றி, வணங்கி, ஆராதிக்கின்றேன். இறைவா! நாங்கள் இருவர், மூவர் என்று கூடும் நேரங்களில், பிறரைப் பற்றி புறம் பேசிய தருணங்கள் ஏராளம். மற்றவரைக் குறைகூறி தீர்ப்பளித்த நேரங்களுக்காக, உம்மிடம் நாங்கள் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறோம். இனி இருவர், மூவர் நாங்கள் கூடும்போது, எங்களது உரையாடல்கள் உம்மைக் குறித்தும், உமது மாட்சியின் வல்லமையைக் குறித்தும், வல்லமையின் நிமித்தம் நடக்கும் புதுமைகளைக் குறித்தும் இருப்பனவாக. மேலும், பிறரைக் கூறித்து பேசும்போது, அவர்களது நிறைகளை மட்டும் பேசும், உயர்ந்த நேர்மையான உள்ளங்களை எங்களுக்குத் தந்தருளும். இயேசுவே! இன்று எங்களது எண்ணங்கள், தேவைகள், செயல்திட்டங்கள், அனைத்தையும் உம் திருக்கரத்தில் ஒப்படைக்கின்றோம். ஆண்டவரே! நீரே அவற்றை ஆசீர்வதித்து, உமது பாதையில் வழிநடத்தும். இன்று நாங்கள், யாருடைய மனதும் புண்படுத்தும் வகையில் நடக்காதிருக்கவும், மாறும் உலக அன்பிற்காக ஏங்காமல், என்றென்றும் வாழச்செய்யும் உமது நிலையான அன்பில் நாங்கள் நிலைத்திருந்து, களிகூரவும் செய்தருளும். இயேசு மரி! சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணகத்தில் இருக்கிற...(1) அருள் நிறைந்த...(3) பிதாவுக்கும், சுதனுக்கும்...(1) *ஆமென்.* #இன்றைய வசனம்
செ.சாா்லஸ் செபஸ்டின்
556 views
5 days ago
#இன்றைய வசனம் #இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை 📕*இன்றைய மன்னா*⛪ *10.08.2026* இயேசு,தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார் '. யோவான் 12:25,26 *இந்த திங்கள்கிழமை உங்களுக்கு ஆசிர்வாதமான நாளாக அமையட்டும்!* *"கிறிஸ்துவுக்குள் நிறைவாழ்வு ஊழியங்கள்"*
செ.சாா்லஸ் செபஸ்டின்
685 views
5 days ago
#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம் லாரன்ஸ் - திருத்தொண்டர், மறைச்சாட்சி விழா* இலத்தீன் மொழியில் 'லவுரென்சியுஸ்' என்றழைக்கப்படும் இப்புனிதர் (கிபி 225 – 258) உரோமை நகரத்தின் ஏழு திருத்தொண்டர்களில் ஒருவர். உரோமைப் பேரரசர் வலேரியன் கட்டவிழ்த்துவிட்ட கிறிஸ்துவ துன்புறுத்தலின்போது மறைசாட்சியாக உயிர் துறந்தார். தொடக்கத் திருஅவையில் திருத்தொண்டர்கள்தாம் ஆலயத்தின் சொத்துகளின் கண்காணிப்பாளர்களாகவும், தகுந்த பிறரன்புப் பணிகளுக்குப் பகிர்ந்துகொடுப்பவர்களாகவும் இருந்தனர். வரலாற்றில் இவரைப் பற்றிச் சொல்லப்படுகின்ற மூன்று நிகழ்வுகளை நாம் அறிவோம்: (அ) 'இவர்களே திருச்சபையின் சொத்துகள்'. பேரரசர் வலேரியன் திருச்சபையின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய விரும்பி ஒரு கட்டளை இடுகின்றார். திருஅவையின் சொத்துகள் அனைத்தும் பேரரசருக்கே என்ற கட்டளை வந்தவுடன், சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்குப் பகிர்ந்துகொடுத்துவிட்டு, எல்லா ஏழைகளையும் பேரரசரிடம் அழைத்துச் சென்று, 'இவர்களே திருச்சபையின் சொத்துகள்' என்று மொழிந்தார் லாரன்ஸ். (ஆ) திருத்தந்தை, ஆயர்கள், மற்றும் அருள்பணியாளர்கள் தலைவெட்டப்பட்டு இறந்தனர். இவரோ, சூடாக்கப்பட்ட இரும்புப் பலகையில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாகிக் கொலை செய்யப்பட்டார். இவரைப் பற்றி எழுதுகின்ற வரலாற்று ஆசிரியர்கள், 'இவர் துன்புற்றார், இவர் வறுத்து எடுக்கப்பட்டார், இவர் மறைசாட்சியானார்' என எழுதுகின்றனர். (இ) அருள்திரு. சாங்த்துலுஸ் என்பவர் புனித லாரன்ஸின் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பியபோது, வேலைக்காரர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லி, புனித லாரன்ஸிடம் வேண்டிக்கொண்டே கையிலிருந்த ஒற்றை ரொட்டியை வைத்து ஏறக்குறைய 10 நாள்களுக்கு அனைவருக்கும் உணவு கொடுத்தார். இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்' என்கிறார் இயேசு. முதல் வாசகத்தில், கொடுத்தலின் மேன்மை பற்றி கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகின்றார் பவுல். தான் இருக்கும் வரை இல்லாதவர்கள் அனைவருக்கும் தன்னிடம் இருந்ததைக் கொடுத்த புனித இலாரன்ஸ், இறுதியில் தன் உயிரையும் கொடுத்துவிட்டுக் கோதுமை மணியாக மடிகின்றார். ஏன் மனிதர்கள் கடவுளுக்காகவும், மறைக்காகவும் சாட்சிகளாக இறக்கின்றனர்? விவிலியத்தில் நாம் காணும் திருமுழுக்கு யோவான் தொடங்கி, நம் மண்ணில் உயிர்நீத்த புனித தோமா, புனித அருளானந்தர், புனித தேவசகாயம் பிள்ளை ஆகியோர் வரை நிறையப் பேர் மறைக்காக உயிர்துறந்துள்ளனர். இன்றும் பலர் உயிர்துறக்கின்றனர் – அருள்தந்தை ஸ்டேன் ஸ்வாமி போல. 'மறைசாட்சி' என்ற தமிழ்ச் சொல்லின் ஆங்கிலப் பதம், 'மார்ட்டர்.' இது கிரேக்கச் சொல்லான 'மார்ட்டிஸ்' என்பதன் நீட்சி. இது ஒரு சட்டரீதியான சொல். அதாவது, நீதிமன்றத்தில் ஒருவர் சார்பாக சான்று சொல்பவர், அல்லது தான் கண்டதை அப்படியே கூறுபவர் 'மார்ட்டிஸ்' என அழைக்கப்பட்டார். திருத்தூதர் பணிகள் 1:22இலும் நாம் இப்படிப்பட்ட பயன்பாட்டையே காண்கின்றோம். கிறிஸ்தவத்தில், இயேசுவுக்காகவும் இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கைக்கும் சான்று பகர்ந்து உயிர் துறந்தவர்களை நாம் மறைசாட்சியர் என அழைக்கின்றோம். இரம்பத்தால் அறுக்கப்பட்டு, கல்லால் எறியப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, நெருப்பிலிடப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு என பல நிலைகளில் துன்பங்கள் பட்டு இவர்கள் இறக்கின்றனர். 1 மற்றும் 2 மக்கபேயர் நூல்களிலும் நாம் மறைசாட்சியம் பற்றி வாசிக்கின்றோம். தெர்த்தூலியன் என்ற திருஅவை தந்தை, 'வேதசாட்சிகளின் இரத்தம் விசுவாசத்தின் வித்து' என்று மறைசாட்சியத்தை முதன்முதலாக இறையியலாக்கம் செய்கின்றார். அதாவது, மறைசாட்சியம் மற்றவர்களின் மனமாற்றத்திற்குக் காரணமாக அமைந்ததே தவிர, மற்றவர்களை ஒருபோதும் அச்சுறுத்திப் பின்வாங்கச் செய்யவில்லை. மறைசாட்சியர்கள் துணிவாகத் தங்கள் உயிரைக் கொடுக்க முன்வந்தபோது, மறையை மறுதலித்துப் பின்வாங்கிய நம்பிக்கையாளர்களும், பயத்தினால் நம்பிக்கையைத் துறந்தவர்களும் வரலாற்றில் உள்ளனர். இவர்களை மீண்டும் கிறிஸ்தவத்திற்குள் ஏற்பதா வேண்டாமா என்ற விவாதத்தில் திருஅவையில் பிளவும் ஏற்பட்டது. ஏன் சாதாரண மனிதர்கள் கடவுளுக்காக அல்லது தங்கள் நம்பிக்கைக்காக உயிர்துறக்கின்றனர்? (அ) தங்கள் உயிரைவிடப் பெரியதொன்றை அவர்கள் நம்பிக்கைக் கண்களால் பார்க்கின்றனர். (ஆ) தங்கள் நம்பிக்கை மற்றும் மதிப்பீடுகளோடு அவர்கள் சமரசம் செய்துகொள்ள மறுக்கின்றனர். (இ) மற்றவர்களின் அச்சுறுத்தலையும் மிஞ்சி நிற்கிறது அவர்களுடைய துணிச்சல். நாம் இன்றும் சின்ன சின்ன நிலைகளில் மறைசாட்சியர்களாக இருக்கின்றோம். தூக்கம் வந்தாலும் பொருட்படுத்தாமல் விவிலியம் வாசித்துவிட்டு, அல்லது செபமாலை செபித்துவிட்டு தூங்கச் செல்லும்போதும், நம்மிடம் உள்ளவற்றை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொடுக்கும்போதும், நோன்பு இருக்கும்போதும், பக்தி முயற்சிகளில் பங்கேற்கும்போதும், மற்றவர்களுக்குத் தீங்கு செய்யத் துடிக்கும் நம் எண்ணத்திற்குக் கடிவாளம் இடும்போதும், மற்றவர்களை மனதார மன்னிக்கும்போதும், யாரையும் தீர்ப்பிடாமல் இருக்கும்போதும், நம் வேலைகளைச் செய்யும்போதும், அன்றாடம் வரும் உடல், உள்ள துன்பங்களை ஏற்கும்போதும், நோய், முதுமை, தனிமை போன்ற நிலைகளில் உணரும் வலுவின்மையை ஏற்றுக்கொள்ளும்போதும் நாம் மறைசாட்சியர்களாகவே வாழ்கின்றோம். அன்றாடம் நாம் கோதுமை மணி போல இறந்து பிறக்கின்றோம். வலியை விரும்பி ஏற்றல் அனைத்தும் மறைச்சாட்சியமே. *- அருள்திரு. யேசு கருணாநிதி, மதுரை உயர்மறைமாவட்டம்.*
செ.சாா்லஸ் செபஸ்டின்
688 views
15 days ago
#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை சிந்தனை* *"இல்லத்திலே மதிப்பு"* இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, சில வேளைகளில் ஒருவருக்குத் தம் சொந்த வீட்டில்கூட மதிப்பு இருப்பதில்லை. பெற்றோரும். உடன் பிறந்தோரும் ஒருவரின் கனவுகளை, ஆர்வங்களை, ஆற்றல்களைப் புரிந்துகொள்ளாமல் ஏளனம் செய்வதையும், ஊக்கப்படுத்தாமல், குறைகூறி சோர்வடையச் செய்வதையும் பார்த்திருக்கிறோம். ஒருவேளை நமக்கேகூட அப்படி நடந்திருக்கலாம். இறைமகன் இயேசுவின் வாழ்விலும் இந்த அனுபவம் நிகழ்ந்திருக்கிறது என்பது நமக்கு வியப்பைத் தருகிறது. ஆறுதலும் தருகிறது. இயேசுவுக்கே இந்தக் கதி என்றால், நமக்கு எந்தக் கதி? இன்றைய வாசகம் இதனை மாற்றி அமைக்க அறைகூவல் விடுக்கிறது. நமது வீட்டில் நம்மோடு வாழும் சொந்தங்களைப் பற்றிச் சிறிது சிந்தித்து, முதலில் அவர்களை ஏற்கவும், மதிக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் கற்றுக்கொள்வோம். ஊhயசவைல டிநபiளெ யவ hழஅந என்ற வாக்கிற்கேற்ப நம் சொந்த இல்லத்தில் உள்ளோரை அன்பு செய்யவும், மதிக்கவும் இன்று உறுதி பூணுவோமா? மன்றாடுவோம்: தந்தையின் விருப்பப்படி வாழ்ந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். உமது சொந்த ஊரினர், உறவினர் உம்மை ஏற்றுக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் மறுத்த நிகழ்வு என் கண்களைத் திறப்பதாக. எனது சொந்தங்கள், உறவுகளை நிறை, குறைகளோடு ஏற்றுக்கொள்ளவும், பாராட்டி மதிக்கவும், அன்பு செய்யவும், ஊக்கப்படுத்தவும் எனக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். -- அருட்தந்தை குமார்ராஜா