கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️

A.Navajothi Arunkumar
584 views
1 months ago
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️கருமேகத்தில் முக்கியெடுத்தும் முழுமதி கறையாவதில்லை. மோகத்தில் முக்கியெடுத்தும் துறவியவன் தடம்புரள்வதில்லை அடிஆலத்தில் கிடைக்கையிலே... அலைகளது ஆடவில்லை... / வடிவுடலுக்குள் உயிர் உள்ளவரை வெறுமையது நமக்கில்லை.../ கடப்போம்! நடப்போம் கவலைகளைத் துடைப்போம்! கருணை உள்ளவன் கடவுளென்ற பெயரில்... கல்லிலும் முள்ளிலும் முற்றிலும் முழுமையென... கலந்திருக்க, கவலைஎதற்கு?தோழா? நமக்குத் துயரம்கூட திருவிழா... / கவிதை மழை அ. நவஜோதிஅருண்✍️
A.Navajothi Arunkumar
3.2K views
1 months ago
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ பித்துப் கவிதை பிடித்து பிதற்றிட வானம்.... கண்ணீரில்.. மத்துவைத்துக் கடைந்தார்போல் மண்.... செந்நீர்க் குழம்பாகிட... மேற்குத் தொடர்ச்சி மலையின் மேகச்சேலை கலைத்திடக் காற்று.... குளிர்ச்சியில் குறுகுறுத்து கைகள்இறுகிட நானும்.... பார்த்திருக்கும் வானும்.... தூறலது தூவ... துயரமது நழுவ... சாரலது சல்லடையாய் தெரித்திட.... சந்தோஷத்தில் மழை மேகம் குலுங்கிட... தலையை மட்டுமல்ல.... உள்ளிருக்கும் மனதையும் மலய்ச்சியாய் குளிர்ச்சியில் குளிப்பாட்டிட... மழை நாள் என்றுமே.. மாபெரும் வரமே.. ⛈️ கவிதை மழை அ. நவஜோதி✍️
A.Navajothi Arunkumar
570 views
4 months ago
❤❤❤❤❤ #கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ காதலில் மட்டுமல்ல... மொபைலிலும் இதை வாங்க மனிதர்கள் படும் பாடு/ குறியீட்டின் அடிமைகளாய் நாம் ❤ வாங்க வேலை செய்பவருக்கும், போடுபவருக்கும் கால விரையம். என்று தெரிந்தும் வாங்க.... நினைப்பதும்/ போட... நினைப்பதுமானக் குறியீடு❤ பிடித்தவைகளைவிட, பிடித்தவர்களுக்கே... போடப்படும். அட்டூழியக் குறீயீடு❤ நிராகரிக்க தராமலும், ஆதரவுக்கு தருவதுமான மனஉலைச்சல் குறீயீடு❤ சிறந்தவைவிட கவர்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்க கைவசக் குறியிடு ❤ அடிக்கடி வந்ததா? என்று ஆவலைத் தூண்டிக் கவலை /மகிழ்ச்சித்தரும் குறியீடு. ❤ வரிகளாக எழுதவிடாமல் வடிவமாக வந்து வாட்டும்குறியீடு❤ போட்டாபோடு! போடாட்டிபோ,..! என்றுசொன்ன ஒரு அரசியல் வாதி போல்.. அப்புறப்படுத்த முடியாதக் குறீயிடு/❤ ஆயிரமாயிரம் எழுத்துக்களால் எதையாவது எழுதிவைத்து. இது ஒன்றை வாங்க... நம்மை பாடாய்படுத்தும் குறீயீடு/❤ குறிக்கோள்களை எல்லாம்குறுக்கி இதன்பின்னே அலையவைத்த மாயைக்குறியீடு/❤ அனுதினமும் நம்மை பாடாய் படுத்தும் ஆபத்தான குறீயிடு.. ❤ காதலில் மட்டுமல்ல. மொபைல் பாஷையிலும். ஆட்டிப்படைக்கும் குறியீடு ❤ யோகா நேரத்தை, உடற்பயிற்சி நேரத்தை, தியான நேரத்தை, உடல்கவன நேரத்தை, உலகின் அறிவுத் தேடலின் நேரத்தை எல்லாம்... தின்றுவிட்ட அபாயக் குறியீடு❤ மனிதமூளையை நிரப்பிய... இதயக் குறியீடு❤ அலைக்கழிக்கும் லைக்ஸ் குறியீடு❤ இப்போதும் பார்க்கிறேன்... மீண்டும்இதற்கு எத்தனை❤வரும் வாராது என ... 😂 எதிர்ப் பார்பின் கேள்விக்குறியோடு❤❤❤ ❤நவீன அடிமைகள் நாங்கள்❤ கவிதைமழை அ. நவஜோதி✍️
A.Navajothi Arunkumar
562 views
4 months ago
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ . நடைபெறும் அமெரிக்கப் போரில் அடுப்பெரிக்க, விறகுதானே வேண்டும். பிறகு ... எனதுஇதயம் எதற்கடி? தேடுகிறாய்/ பயங்கரவாதியவள் அ.நவஜோதி அருண்✍️
A.Navajothi Arunkumar
579 views
4 months ago
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ விட்டு விட்டுபெய்ததனால் பூமியது *ஈரவிழி* குண்டுங்குழி நிரப்பியதால் சாலையது *ஈரவிழி/* பரவிவிரவி பெய்ததனால்... பசுமையது *ஈரவிழி/* பறக்கையிலே பெய்ததனால் பறவைக்கண்கள் *ஈரவிழி* வானை நோக்கிப் பார்த்தனால் பார்வையது *ஈரவிழி* உற்சாகமாய்ப் பெய்ததனால் உழவன் கண்கள் *ஈரவிழி* கைக்கொட்டி துளிகள் உடைக்கக் குழந்தைக் கண்கள் *ஈரவிழி* தூறலிலே நீவரவே... துடிப்பாய் பார்க்க., எனது கண்கள் *ஈரவிழி* துள்ளுகின்ற வானும், மழை அள்ளுகின்ற மண்ணும்... மகிழ்ச்சியோடு விளையாட, தெருக்களெல்லாம் *ஈரவிழி* ஈரவிழி. துயரமல்ல/ தூறல் மழையின் தெறிக்கும் துளி அது *மகிழ்ச்சியின் மழைத்துளி*.../ கவிதை மழை அ நவஜோதி அருண்✍️
A.Navajothi Arunkumar
580 views
4 months ago
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ தலைப்பு; 💐💐💐💐💐*உயிர்ப்பு* ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; பூவுக்குள் மலர்ச்சி சாவுக்குள் மௌனம் உயிர்ப்போடிருக்கும்/ கருவறைக்குள் குழந்தை/ சிறையறைக்குள் சிந்தனை உயிர்ப்போடிருக்கும்/ தேர்தலுக்குள் இலவசம்! வியாபாரத்தில் தந்திரம்! உயிர்ப்போடிருக்கும்/ கடவுள் வேண்டுதலில் நம்பிக்கை! கணவன் சீண்டுதலில் காதல்! உயிர்ப்போடிருக்கும் கவிஞனுக்குள் கற்பனை. கலைஞனுக்குள் திறமை எப்போதும்.... உயிர்ப்போடிருக்கும்/ காதலுக்குள் மோதல்! வீழ்தலுக்குள் விழிப்பு! உயிர்ப்போடிருக்கும்/ எழுத்துக்குள் இலக்கணம்! தலைக்கனத்தில் ஆணவம் என்றும்.... உயிர்ப்போடிருக்கும்/ பிறப்புக்குள் இறப்பு/ இறப்புக்குபின் வெறுமை உயிர்ப்போடிருக்கும். செல்களுக்குள் உயிர்ப்பு! காலத்துக்குள் மூப்பு... உயிர்ப்போடு உடன்வரும்/ மனிதனுக்குள் நோக்கம்.! இறைவனுக்குள் ஆக்கம்! என்றும் உயிர்ப்பாய்த் தொடரும் உயிர்ப்புக்கு முற்றுக் கிடையாததால்..... உயிர்போடே இருக்கும். நன்றி வணக்கம்🙏 அ. நவஜோதி அரு ண்✍️