நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!!

முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
577 views
19 days ago
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! மக்கள் கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக ஜ. ஹபீப் முஹம்மது நியமனம் விழுப்புரம், ஆக.16: முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த ஜ. ஹபீப் முஹம்மது அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூக போராளி நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்கள் வெளியிடப்பட்டுள்ள நியமன அறிவிப்பில், “இன்று முதல் (16.08.2026) முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக ஜ. ஹபீப் முஹம்மது நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் இப்பொறுப்பை ஏற்று, சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்க்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளின்படி தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சமூகநீதி வளர்ச்சி பெறவும், தர்மம் நிலைநாட்டவும், அனைத்து மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என நியமன அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் பணியிலும், சமூக நலப் பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டு, அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில் புதிய மாநில பொதுச் செயலாளர் தனது பொறுப்பை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜ. ஹபீப் முஹம்மது ஏற்றுக்கொண்டு, மக்கள் நலனுக்காகவும் சமூக முன்னேற்றத்திற்காகவும் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இதன் மூலம் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மக்கள் பணியில் சமூக போராளி முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்கள்
முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
597 views
19 days ago
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! மக்கள் கழகத்தின் மாநில விவசாய அணி தலைவராக மு. ஆரியசாமி நியமனம் விழுப்புரம், ஆக.16: முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில விவசாய அணி தலைவராக மு. ஆரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், கானை ஒன்றியம், அன்னியூர் கிராமத்தில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நடைபெற்ற முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மு. ஆரியசாமி மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், குடும்பப் பொறுப்புகள் மற்றும் விவசாயப் பணிகளை கருத்தில் கொண்டு, அவரது கோரிக்கையை ஏற்று, ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் மாநில பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றி, மாநில விவசாய அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சாதி, மத பேதமின்றி அனைத்து விவசாயிகளின் உரிமைகளையும் ஆட்சியாளர்களிடமிருந்து கழகத்தின் மூலம் பெற்றுத்தர பாடுபட வேண்டும் எனவும், முஸ்லிம் மக்கள் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளின்படி ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி, சமூக நீதி, சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை முஸ்லிம் மக்கள் கழகத்தின் மக்கள் பணியில் சமூகப் போராளி முனைவர் ச.சு. ஜைனுதீன் அறிவித்துள்ளார்.
முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
2.3K views
21 days ago
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! மஸ்ஜீதே தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் 80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா திண்டிவனம், ஆக.15: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் என்-3 கசாயி மியான் தெருவில் அமைந்துள்ள மஜீத்தே தாருஸ்ஸலாம் பள்ளிவாசல் வளாகத்தில் 80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் பொருளாளர் ஹாஜி முஹம்மத் யஹ்யா தலைமை வகித்தார். ஹாஜி அபுதாஹிர், ஹாஜி பஷீர், ஹாஜி அப்துல் காதர், பள்ளியின் மொய்தினார் ஆபீஸ் நவ்ஷத் ஆலம், ஆர்.எம்.ஜி. முஹம்மத் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முத்தவல்லி ஹாஜி அகமது அக்பர் அலி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஹாஜி அப்துல் வஹ்ஹாப் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பள்ளியின் இமாம் மௌலானா முஹம்மது ஹாரூன், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட மறைந்த தியாகிகளின் வரலாற்றையும், அவர்களின் தியாகங்களையும் எடுத்துரைத்தார். நிகழ்வில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூகப் போராளியும் நிறுவனத் தலைவருமான முனைவர் ச.சு. ஜைனுதீன் வாழ்த்துரை வழங்கினார். மேலும் ஏ.டபிள்யூ. ரஃவ்ப், மாமு பஷீர், அப்சல், ஜாகிர் உசேன், சித்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமிய மக்களின் பங்களிப்பு, தியாகம், உணர்வுகள் மற்றும் உரிமைகளை வெளிப்படுத்தும் வகையில் விழா சிறப்பாக நடைபெற்றது.