SHEIK 🌺KSN🌺
1K views • 2 days ago
நோன்பு பொறுமையைக் கற்றுத் தருகிறது, பொறுமை சுவனத்திற்கு வழிவகுக்கிறது."
இதை நபி ﷺ அவர்கள் மிக அழகாக கூறினார்கள்:
"நோன்பு பொறுமையில் பாதி"
- சுனன் திர்மிதி 3519
ஏன் தெரியுமா?
பொறுமை என்றால் மூன்று வகை என்று உலமாக்கள் சொல்வார்கள். மூன்றையும் ஒரே நேரத்தில் நோன்பு கற்றுத் தரும்.
1) பசி இருக்கிறது, சாப்பாடு, தண்ணீர் பக்கத்தில் இருக்கிறது, யாரும் பார்க்கவில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. அல்லாஹ் பார்க்கிறான் என்ற பயம், இது தான் தக்வா.
2) வணக்கத்தில் பொறுமை,
பசியோடு இருந்தும் தொழுகிறோம், குர்ஆன் ஓதுகிறோம். உடல் சோர்வாக இருந்தும் அல்லாஹ்வுக்காக தொழுகையில் நிற்கிறோம்.
3. கஷ்டத்தில் பொறுமை:
பசி, தாகம், களைப்பு, கோபம் வரும் நேரத்தில் கூட "நான் நோன்பாளி" என்று நம்மை கட்டுப்படுத்துகிறோம்.
இந்த பொறுமை தான் சுவனத்திற்கு அழைத்துச் செல்லும்.
அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்:
"பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றி முழுமையாக வழங்கப்படும்."
- அல் குர்ஆன் 39:10
மற்ற எல்லா வணக்கத்திற்கும் ஒரு கூலி உண்டு - 10 மடங்கு, 700 மடங்கு. ஆனால் நோன்புக்கும், பொறுமைக்கும் கூலியை அல்லாஹ் "கணக்கின்றி" தருவான்.
அதனால் தான் நபி ﷺ அவர்கள் கூறினார்கள், நோன்புக்குரிய கூலியை பற்றி அல்லாஹ் சொல்கிறான்:
"நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி தருவேன்" - புகாரி
நோன்பு இல்லாமல் பொறுமை இல்லை, பொறுமை இல்லாமல் சுவனம் இல்லை.
வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும்.
இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:👇
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
23 shares