Arunachalam
693 views • 5 days ago
திரும்பவும் ஆரம்பிச்சிட்டார், சுப்பிரமணியசாமி!
கொஞ்ச நாட்களாக என்ன ஆனார்னே தெரியாமல் அடங்கிக் கிடந்தார்….!
இப்ப எக்ஸ் பக்கத்துல ஏகத்துக்கும் மோடிக்கு டென்சன் ஏத்திட்டார்.
மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து எத்தனை தீவிரவாத தாக்குதல்கள் நடந்திருக்குன்னு துல்லியமாக தன் எக்ஸ் தளத்தில் பதிவு போட்டு மோடியின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்துள்ளார், சுப்பிரமணியசாமி.
2014 – கதுவா லாரி கடத்தல் தொடங்கி பராண்டா மோர் நிலக்கண்ணி வெடிப்பு, ஆர்னியா தற்கொலைத் தாக்குதல், உரி தற்கொலைத் தாக்குதல், கதுவா காவல் நிலைய தற்கொலைத் தாக்குதல்,
பதான்கோட் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல்,
பாரமுல்லா தாக்குதல், அமர்நாத் யாத்திரை தாக்குதல், புல்வாமா தாக்குதல், அனந்த்நாக் தாக்குதல், ஸ்ரீநகர் தாக்குதல்…..என 2025 –ல் நடந்த பகல்காம் தாக்குதல் வரை 27 சம்பவங்களை பட்டியலிட்டு எதிர்கட்சிகளுக்கு தீனி போட்டுள்ளார் சாமி.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட மோடியை இந்த அளவுக்கு டேரா கிழித்து தொங்க போட முடியாது என்ற அளவுக்கு ஏற்கனவே மோடியை கடுமையாக விமர்சித்தவர் தான் சாமி.
''மோடி ஒரு விளம்பரப் பிரியர்''
''நாட்டின் வளர்ச்சியில் எந்த அக்கறையும் இல்லாதவர்''
''பொருளாதாரம் குறித்து அடிப்படை அறிவோ, ஞானமோ மோடிக்கு கிஞ்சித்தும் இல்லை''
''நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதில் மோடி அரசு முற்றிலும் தோற்றுவிட்டது.''
''வெளி நாட்டு கொள்கை விவகாரங்களில் மோடி தைரியமில்லாதவர். பயந்தாங்கொள்ளி.''
''சர்வதேச அரங்கில் நமது நாட்டின் நலனைவிட தன் இமேஜை பில்ட்டப் பண்ணுவதில் தான் கவனம் செலுத்துகிறார்.''
''சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கண்டு மோடி ரொம்பவே பயப்படுகிறார். அமெரிக்க அதிபர் டிரம்பை கண்டு அஞ்சி அவரது அரசியல் அழுத்தங்களுக்கு கட்டுப்பட்டு, இந்திய நலன்களை காவு கொடுக்கிறார்.''
''மோடியின் தலைமை இந்திய ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல, பாஜகவிற்கே பேராபத்தாகும்.''
''மோடி ஒன்றுமே தெரியாத மக்காக இருப்பதால் அவருக்கு திறமையானவர்களைக் கண்டால் பயம் வருகிறது.''
''இப்படியாக பிரதமர் மோடி தலைமைக்கு எதிராகச் சுப்பிரமணியசாமி பல்வேறு மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் தனது கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வந்தார்.''
இதனால் மோடி மிகவும் மனம் புண்பட்டார்.
''சுப்பிரமணியசாமியை கொஞ்சமாவது அடக்கி வையுங்கள்'' என மோடி பலமுறை ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடம் முறையிட்டுவிட்டார்.
அவர்களோ, ''நாங்க சொல்றோம். ஆனால், அவர் எங்க பேச்சுக்கெல்லாம் கட்டுபடறவர் அல்ல..'' என்று சொல்லிவிட்டார்கள்!
சுப்பிரமணியசாமி ஆர்.எஸ்.எஸ் தலைமை சொல்றதே என்று ஓரிரு மாதங்கள் அமைதி காப்பார். பிறகு மீண்டும் விமர்சனக் கணைகளை வீசு ஆரம்பித்துவிடுவார்.
இதனால் ஒருகட்டத்தில் மோடி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, வேற யாராக இருந்தாலும் அவங்க கதை எப்போதோ முடிக்கப்பட்டிருக்கும். நான் ரொம்ப பொறுமையாக இருக்கிறேன். நீங்க அவரையும் சும்மா இருக்கச் சொல்லுங்க என ஆர்.எஸ்.எஸ் தலைமையிடம் மன்றாடி இருக்கிறார்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஒரு வகையில் இதில் மகிழ்ச்சி. நம்மாலேயே கட்டுப்படுத்த முடியாத மோடியை சுப்பிரமணியசாமி துணிச்சலாக எதிர்க்கிறார். சுப்பிரமணியசாமிக்காகவாவது இவர் கொஞ்சம் பயப்படுவது நல்லதே…என சாமிக்கு பெரிதாக எதுவும் அழுத்தம் தருவதில்லை.
காரணம், சாமி சொல்வதில் உண்மை இல்லாமலில்லை…என்பது மட்டுமல்ல, சுப்பிரமணியசாமி ஆர்.எஸ்.எஸ்சை பொறுத்த வரை மிக முக்கியமானவர் என்பது மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் பெரிய தொடர்புகளும், நட்பு வட்டாரமும் கொண்டவர் என்பதும் காரணமாக இருக்கலாம்.
எப்படியோ, தன்னை யாருமே வீழ்த்த முடியாது என இறுமாப்புடன் இருக்கும் மோடிக்கு இப்படியேனும் ஒரு செக் இருப்பது நல்லது தான்.
சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
14 shares