23 shares
More like this
- ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️விஜயவாடா அண்டு குண்டூர் மாவட்ட எல்லை பகுதியான துக்கிராலா மண்டபம் சிலுவூர் கிராமத்தில் நடந்த அதிர்ச்சிகரமான கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.... வெங்காய வியாபாரியான லோகம் சிவனகராஜு என்பவர், தனது மனைவி லட்சுமி மாதுரி மற்றும் அவரது கள்ளக்காதலன் கோபியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 2007-ல் திருமணமான இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், விஜயவாடா சினிமா திரையரங்கில் பணிபுரிந்த மாதுரிக்கு, கோபி என்பவருடன் ஏற்பட்ட தவறான உறவே இந்த கொடூரச் செயலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த மாதுரி, கடந்த ஜனவரி 18-ம் தேதி இரவு சிவனகராஜுவுக்கு வழங்கிய பிரியாணியில் சுமார் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். அவர் மயக்கமடைந்ததும், வீட்டிற்கு வந்த காதலன் கோபியுடன் இணைந்து மாதுரி இச்செயலை அரங்கேற்றியுள்ளார். கோபி சிவனகராஜுவின் மார்பின் மீது அமர்ந்து பிடித்துக்கொள்ள, மாதுரி தலையணையால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், கணவர் இறந்ததை உறுதி செய்த பிறகு, மாதுரி சற்றும் பதற்றமின்றி விடிய விடிய சடலத்தின் அருகிலேயே அமர்ந்து ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கழித்துள்ளார். அதிகாலையில் எதுவுமே தெரியாதது போல் நடித்த அவர், தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி அழுது நாடகமாடியுள்ளார். இருப்பினும், தம்பதியினரிடையே இருந்த தொடர் சண்டைகள் மற்றும் மாதுரியின் நடத்தையில் ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த அக்கம் பக்கத்தினர் இந்த மரணத்தை எளிதில் நம்பவில்லை. இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, சிவனகராஜுவின் காது மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்த காயங்களைக் கண்டு அவரது நண்பர்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். பிரேதப் பரிசோதனையில் அவர் மூச்சுத்திணறலால் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மாதுரியைக் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அவரது காதலன் கோபியும் தற்போது போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கள்ளக்காதலுக்காகக் கணவனைக் கொன்றுவிட்டு, சடலத்தின் அருகே ஆபாச வீடியோ பார்த்த பெண்ணின் செயல் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது...... #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்1611
- ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️திருமலை: மலையில் உள்ள கோயிலுக்கு சென்றபோது வாலிபர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.... இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த தேவதாசனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(35). இவரது மனைவி ஹாசினி (30). இவர்களுக்கு 2024ம் ஆண்டு திருமணம் நடந்தது. மவுனிகா (2) என்ற மகள் உள்ளார். ரமேஷ் ஓசூரில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில் கடந்த 13ம்தேதி ஹாசினியின் தாய் வீடான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போயனப்பள்ளிக்கு 3பேரும் வந்தனர். மறுநாள் 3பேரும் மல்லப்பக்கொண்டா மலை மீதுள்ள மல்லேஸ்வர சுவாமி கோயிலுக்கு பைக்கில் ெசன்றனர். அப்போது ஆனால் 3பேரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மல்லப்பக்கொண்டா மலையில் கைக்கால்கள் கட்டிய நிலையில் ரமேஷ் வெட்டி கொல்லப்பட்டதும் ஹாசினியே தனது கள்ளக்காதலன் கங்காதர் என்பவருடன் சேர்ந்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஹாசினி, கங்காதர் உள்பட 6 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது ஹாசினி, கங்காதர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:... ஹாசினியும், போயனப்பள்ளியை சேர்ந்த கங்காதர் என்பவரும் பள்ளியில் படிக்கும்போதே நண்பர்கள். இருவரும் காதலித்துள்ளனர். இவர்களது காதலை ஏற்க மறுத்த பெற்றோர், ஹாசினிக்கு ரமேஷுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து பிரசவத்திற்காக தாய்வீட்டிற்கு வந்த ஹாசினி ஓராண்டாக அங்கேயே தங்கியிருந்தாராம். அப்போது ஹாசினிக்கும், கங்காதருக்கும் இடையே மீண்டும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். ஹாசினி, தனது கணவர் வீட்டிற்கு சென்றபின்னரும், கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதையறிந்த ரமேஷ் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் தங்களது கள்ளக்காதலுக்கு ரமேஷ் தடையாக இருப்பதால் அவரை கொல்ல இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த 13ம்தேதி ஹாசினி, கணவர் மற்றும் குழந்தையுடன் போயனப்பள்ளிக்கு வந்தார். மறுநாள் 3 பேரும் மல்லப்பக்கொண்டா மலை மீதுள்ள மல்லேஸ்வர சுவாமி கோயிலுக்கு பைக்கில் சென்றனர். மலைப்பாதை 3வது வளைவில் சென்றபோது ஹாசினி செல்போன் மூலம் கங்காதருக்கு லைவ் லோகேஷன் அனுப்பியுள்ளார். அதை பயன்படுத்தி கங்காதர் மற்றும் அவரது நண்பர்கள் ரமேஷை வழிமறித்து சரமாரி தாக்கியுள்ளனர். பின்னர் அவரை, வனப்பகுதிக்குள் இழுத்து சென்று கை, கால்களை கட்டிபோட்டு கத்தியால் வெட்டி கொன்றுவிட்டு அனைவரும் தப்பி சென்றனர். ஹாசினியும், அவரது குழந்தையுடன் கங்காதருடன் சென்றுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.... இதையடுத்து கங்காதர், ஹாசினி, கங்காதரின் நண்பர்களான பவன், சேகர், சந்தோஷ், சுரேந்திரா ஆகிய 6 பேரை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சாம்சன், சிவா ஆகியோரை தேடி வருகின்றனர். #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்1412
- ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தணிகைபோளூர் ஏரியில், கடந்த 5-ஆம் தேதி வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்..... போலீசாரின் தீவிர விசாரணையில், கொலையுண்டவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த டீ மாஸ்டரான ஹேமநாதன் (எ) சின்னா 23 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. கட்டிட வேலைக்குச் சென்ற இடத்தில், கவிதா என்ற பெண்ணுடன் ஹேமநாதனுக்கு ஏற்பட்ட கள்ளத்தொடர்பே இந்த கொடூரக் கொலைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது..... கவிதாவின் கள்ளத்தொடர்பை அறிந்த அவரது கணவர் சங்கர் மற்றும் கவிதாவின் மீது ஆசை கொண்ட மற்றொரு நண்பரான ஆட்டோ டிரைவர் ஆனஸ்ட் ஆகிய இருவரும் இணைந்து இக்கொலையை அரங்கேற்றியுள்ளனர். சம்பவத்தன்று கவிதாவின் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்த ஹேமநாதனை சமாதானம் செய்வது போல் ஆட்டோவில் அழைத்துச் சென்று, தணிகைபோளூர் ஏரிக்கரையில் வைத்து உருட்டுகட்டை மற்றும் கத்தியால் தாக்கி முகத்தை சிதைத்துக் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் சங்கர், கவிதா மற்றும் ஆனஸ்ட் ஆகிய மூவரையும் கைது செய்த அரக்கோணம் தாலூகா போலீசார், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்85
- ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️கட்டிடத் தொழிலாளியுடன் காதல் திருமணம்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத், மியாபூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மல்லானி பெண்டேஷ் (52). இவருக்கு ஏற்கனவே ஒரு மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர். மியாபூரில் சொந்தமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கொண்டுள்ள இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தன் முதல் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்தச் சூழலில், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யவதி (40) என்ற பெண், பெண்டேஷ் கட்டி வந்த புதிய கட்டிடம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர். வாடகைதாரருடன் கள்ளத்தொடர்பு: இவர்கள் வசித்து வந்த அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் நிஜாமாபாத்தைச் சேர்ந்த மதுசூதன் ரெட்டி (38) என்பவர் வாடகைக்குக் குடிவந்தார். நாளடைவில், சத்யவதிக்கும் மதுசூதன் ரெட்டிக்கும் இடையே திருமணத்திற்குப் புறம்பான கள்ள உறவு ஏற்பட்டது. இந்த விஷயம் பெண்டேஷுக்குத் தெரியவரவே, அவர் மதுசூதன் ரெட்டியைக் கடுமையான எச்சரித்து வீட்டை விட்டு உடனடியாகக் காலி செய்ய வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த சத்யவதி, தங்களின் ரகசிய உறவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கணவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார். இதற்கு அவரது காதலன் மதுசூதன் ரெட்டியும் சம்மதித்தார்..... தூக்க மாத்திரை கொடுத்துத் கொடூரக் கொலை: கொலை நடந்த விதம் (கடந்த ஆண்டு நவம்பர் 19): திட்டமிட்டபடி, சத்யவதி தனது கணவர் பெண்டேஷுக்குத் தூக்க மாத்திரைகள் கலந்த உணவைக் கொடுத்துள்ளார். உணவைச் சாப்பிட்ட பெண்டேஷ் மயக்கமடைந்து சுயநினைவை இழந்தார். உடனே சத்யவதியும், அங்குத் தயாராக வந்திருந்த காதலன் மதுசூதன் ரெட்டியும் சேர்ந்து, பெண்டேஷின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி, மூச்சுத்திணறடித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். காரில் கடத்தப்பட்ட சடலம் – மாநில எல்லையில் எரிப்பு: கொலைக்குச் சான்றுகள் எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்பதால், பெண்டேஷின் உடலை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு அண்டை மாநிலமான மகாராஷ்டிராவிற்கு விரைந்தனர். அங்குத் துல்ஜாபூர் அருகேயுள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் சடலத்தைத் தீ வைத்து எரித்துவிட்டுத் தப்பினர். உடல் பகுதியளவு மட்டுமே எரிந்திருந்த நிலையில், அதனை மீட்ட மகாராஷ்டிர போலீசார், அடையாளம் தெரியாத சடலம் எனக் கூறி சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். நாடகமாடிய மனைவி – சிக்கியது எப்படி? மறுபுறம், எதையும் காட்டிக்கொள்ளாத சத்யவதி, கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று மியாபூர் காவல் நிலையத்திற்குச் சென்று தன் கணவரைக் காணவில்லை என்று நாடகமாடிப் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையைத் திசைதிருப்ப, சங்கரெட்டி மாவட்டம் பேகம்பேட்டிலிருந்து பெண்டேஷ் கடைசியாகத் தன்னிடம் பேசியதாகச் சத்யவதி கூறினார். கொலையாளிகள் இருவரும் பெண்டேஷின் செல்போனைப் பறித்துச் சென்று, பேகம்பேட் பகுதியில் சுவிட்ச் ஆஃப் செய்து வீசியிருந்ததால் போலீசாரால் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினர்..... 8 மாத ரகசியத்தை உடைத்த போலீசார்: கணவர் காணாமல் போன பிறகும் சத்யவதி எவ்விதக் கவலையுமின்றித் தொடர்ந்து செல்போனில் நீண்ட நேரம் பேசியதும், அடிக்கடி சொகுசு விடுதிகள் மற்றும் பிற இடங்களுக்குச் சென்று வந்ததும் பெண்டேஷின் உறவினர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்..... இதனையடுத்து, சத்யவதியின் தொலைபேசி அழைப்புகளைக் (Call Records) கண்காணித்த போலீசார், அவரைப் பிடித்துத் தங்களின் பாணியில் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்த ரகசியத்தை ஒப்புக்கொண்டார். தற்போது சத்யவதி மற்றும் அவரது காதலன் மதுசூதன் ரெட்டி ஆகிய இருவரையும் மியாபூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மகாராஷ்டிர மாநில போலீசாரைத் தொடர்புகொண்டு, அங்கு மீட்கப்பட்ட பெண்டேஷின் சடலம் குறித்த விபரங்கள் மற்றும் வழக்குப் பிரதிகளையும் பெற்று அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் 1214
- ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்து ராஜக்கல் கூத்தாண்டவர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி தனலட்சுமி இவர்கள் இருவரும் 17 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். தனலட்சுமி திருமணம் முடிந்த பின் ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்ததாகவும், தற்போது ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லாமல் 8 மாதமாக பேரணாம்பட்டில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனலட்சுமி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக அவரது நடத்தையில் கணவர் விஜயகுமாருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மனைவி தனலட்சுமி கள்ளக்காதலனுடன் தனது மகளை அழைத்து கொண்டு ஆம்பூரில் உள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார். படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது தனலட்சுமி தனது மகளிடம், "அப்பாகிட்ட இத பத்தி சொல்ல கூடாது" எனத் தெரிவித்துள்ளார் ஆனால் தனலட்சுமியின் மகள், இது குறித்து தனது அப்பா விஜயகுமரிடம் அம்மா வேறுஒருவருடன் சினிமாவிற்கு சென்று, அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தனலட்சுமி மீது மீண்டும் கடும் கோபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று விஜயகுமார் தனது மனைவி தனலட்சுமி இரண்டு நாட்களாக காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என அங்குள்ள அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதையடுத்து அக்கம் பக்கத்தினர் விஜயகுமாரின் வீட்டருகே சென்றபோது கடுமையான துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் சமையலறையில் உள்ள ஸ்லாப்பின் மீது ரத்த கரையுடன் சாக்கு மூட்டை இருந்துள்ளது. அதனைத் திறந்து பார்த்தபோது தனலட்சுமி கை மணிக்கட்டுகள் அறுக்கப்பட்ட நிலையிலும் இரண்டு கால்கள் செல்போன் சார்ஜர் ஒயரால் கட்டப்பட்டு முகம் சிதைந்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்... #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்1013
- ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️தெலுங்கானா மாநிலம் மென்ஷன் மாவட்டம் பிசாரா பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் சுவாமி என்பவருக்கும், ஜோதி என்பவருக்கும் திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து ஆறு வயதில் மகளும்,ரெண்டு வயதில் ஹரி கிருஷ்ணா என்ற மகனும் இருந்தனர்..... திருமணமான சில மாதங்களிலேயே ஜோதிக்கு, தீகுலா கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய கள்ளக்காதல் உறவாக மாறியுள்ளது. கணவர் சுவாமி அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர்களுக்குச் செல்லும் நாட்களைப் பயன்படுத்திக் கொண்ட ஜோதி, தனது கள்ளக்காதலன் நவீனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் தனிமையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கம் போல கடந்த மே 29-ஆம் தேதி சுவாமி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், ஜோதி நவீனைத் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்தபோது, ஜோதியின் 2 வயது மகன் ஹரிகிருஷ்ணா தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஜோதியும், கள்ளக்காதலன் நவீனும் சேர்ந்து பிஞ்சு என்றும் பாராமல் குழந்தையைச் சரமாரியாகத் தாக்கி தூக்கி வீசியுள்ளனர். இதில் தலையில் பலத்த ரத்தக்கசிவு ஏற்பட்டு குழந்தை உயிருக்குப் போராடியதை அடுத்து, இருவரும் பதற்றத்துடன் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கொலையை மறைப்பதற்காக, ஜோதி தனது கணவர் சுவாமிக்கு போன் செய்து, குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். மனைவியின் பேச்சை நம்பிய சுவாமி, பதறியடித்து வீடு திரும்பிக் குழந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து அடக்கம் பண்ணியுள்ளார். ஆனால், சில நாட்களிலேயே ஜோதியின் நடத்தையில் சுவாமிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டின் சுவரில் இருந்த ரத்தக்கறையைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் கொண்டு அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குழந்தை இறந்ததாகக் கூறப்பட்ட நாளில் ஜோதி நவீனுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுவாமி, ஜோதியிடம் இதுகுறித்து நியாயம் கேட்க, அவர் முன்னுக்குப் பின்னாகப் பதிலளித்துள்ளார். இதையடுத்து, கடந்த ஜூன் 19-ஆம் தேதி சுவாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், ஜோதி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஜோதியைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள நவீனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கள்ளக்காதலுக்காகப் பெற்ற தாயே 2 வயது மகனைக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது...... #தகாத உறவு கள்ள காதல் பரிகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்2010
- ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️காமவெறியின் உச்சகட்டமாக கள்ளக்காதல் சேர்ந்து உன் தாய் தன் சொந்த குழந்தையை கொடூரமாக தரையில் அடித்து கொலை செய்துள்ளார்.... தங்களுக்குள் இருக்கும் கள்ளத்தொடர்புக்கு அந்தக் குழந்தை ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருதிய அந்தப் பெண், இந்த அரும்பாவச் செயலைச் செய்துள்ளார். தனியார் இடத்தில் தனது கள்ளக்காதலனைச் சந்திக்க முயற்சிக்கும் போதெல்லாம், குழந்தை தொடர்ந்து அழுது இடையூறு செய்ததாக அந்தப் பெண் காவல்துறையின் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடுமையான ஆத்திரத்தின் காரணமாகவே, குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்றதாக அந்தப் பெண் எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி ஒப்புக்கொண்டுள்ளார்.... #தகாத உறவு கள்ள காதல் பரிகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்1415
- ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி காமாட்சி (28). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் (64) என்பவருக்கும் இடையே கடந்த சில காலமாகப் பணம் கொடுக்கல் வாங்கல் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்ட மகேந்திரன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காமாட்சியை காட்டுமன்னார்கோவிலுக்கு வருமாறு கூறி, உல்லாசத்திற்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. முதியவரின் இந்த செயலால் ஆத்திரமடைந்த காமாட்சி, மகேந்திரனைச் செருப்பால் அடித்துள்ளார். மேலும், அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்த காமாட்சி, "இனிமேல் இப்படி நடந்துகொண்டால், இந்த வீடியோவை உனது உறவினர்களுக்கு அனுப்பிவிடுவேன்" என மிரட்டியுள்ளார். இருப்பினும், ஆத்திரம் தீராத காமாட்சி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த செருப்படி வீடியோவை மகேந்திரனின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மகேந்திரன் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். இந்நிலையில், இன்று காலை 7 மணி அளவில் காமாட்சியின் வீட்டிற்குச் சென்ற மகேந்திரன், அவரிடம் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கட்டையை எடுத்து காமாட்சியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காமாட்சி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காமாட்சியைத் தாக்கியபோது, அதனைத் தடுக்க முயன்ற அவரது தந்தை பாண்டுரங்கனையும் மகேந்திரன் கட்டையால் சரமாரியாகத் தாக்கினார். இதில் படுகாயமடைந்த பாண்டுரங்கன், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், காமாட்சியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோட முயன்ற கொலையாளி மகேந்திரனை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) ஜெயக்குமார், நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம்1316
- ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த வாட்டாத்திக்கோட்டை அருகே உள்ள மயில்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா (எ) தர்மராஜா(40). கார் டிரைவர். இவரது மனைவி அட்சயா(35). இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். பி.ஏ பட்டதாரியான அட்சயா, திருச்சி, கோவையில் பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வந்தார். தவெக தலைவர் விஜயின் தீவிர ரசிகை. சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு ஆதரவாக பல பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் திருச்சியில் பணி புரிந்த போது அட்சயாவுக்கும், ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் அடிக்கடி மயில்பாளையம் வந்து அட்சயாவை சந்திப்பார். இது தெரிந்ததால், ராஜா மனைவியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், வீட்டில் கள்ளக்காதலனுடன் மனைவி அட்சயா தனியாக இருக்கும் போது அவரது கணவர் கையும் களவுமாக பிடித்து மனைவியை தட்டி கேட்கிறார். மேலும் வீட்டில் உள்ள அவனை வெளியே வரச்சொல்லுமாறு கூறினார். அந்த நபர் வெளியே வந்ததும் அவரை தாக்கினார். பின் அந்த நபர், வீட்டை விட்டு ஓடுகிறார். இப்படி அந்த வீடியோ முடிகிறது.இதனிடையே ராஜா அழுது கொண்டே பேசும் மற்றொரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், ''தமிழக காவல்துறைக்கு வணக்கம். இன்று என் குடும்பமே அழிந்து போய் விட்டது. என் குழந்தையும் என்னுடன் சேர்ந்து சாகப்போகிறான். என் மனைவியை கத்தியால் கிழித்து போட்டு விட்டு வந்து விட்டேன். இது எல்லாத்துக்கும் காரணம் திருச்சியை சேர்ந்த ஜோஸ் என்பவர் தான். அவனால் எல்லாமே போய் விட்டது என்று வீடியோவில் பேசியுள்ளார். இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், மயில்பாளையத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் ராஜா-அட்சயா தம்பதியிடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி நடத்தையின் மீது சந்தேகப்பட்ட ராஜா கத்தியால் அட்சயாவின் வாய், கன்னம், உதட்டில் சரமாரியாக குத்தினார். பின்னர் அட்சயாவை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு மகனை தூக்கி கொண்டு தப்பியது தெரியவந்தது. படுகாயமடைந்த அட்சயா, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது தெரியவந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில் வல்லத்தில் மகனுடன் ராஜா இருப்பது தெரியவந்தது. அதன்படி தனிப்படை போலீசார் நேற்று வல்லத்துக்கு சென்று அங்கு மகனுடன் பதுங்கியிருந்த ராஜாவை கைது செய்து பட்டுக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்166
- ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️கிருஷ்ணகிரி பெல்லாரம்பள்ளியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ் குமார் (43). இவரது மனைவி பானுப்பிரியா (30). மகேஷ் குமார் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த நிலையில், பானுப்பிரியாவுக்கும் வேன் டிரைவர் பூவரசனுக்கும் (24) இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த மகேஷ் குமார், ஊருக்கு வந்து மனைவியைக் கண்டித்துள்ளார். கடந்த மே 10-ஆம் தேதி இரவு, மகேஷ் குமார் வீட்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பூவரசன் கத்தியுடன் வீட்டிற்குள் புகுந்து மகேஷ் குமாரை குத்தினார். தடுக்க வந்த மாமனார் செல்லப்பனையும் பூவரசனும், பானுப்பிரியாவும் சேர்ந்து மாறி மாறி குத்திக் கொலை செய்தனர். கொலையை மறைக்க ரத்தக்கறையைத் துடைத்தெறிந்த இருவரும், இரு சடலங்களையும் தனித்தனி சாக்கு மூட்டைகளில் கட்டினர். பின்னர், வீட்டில் இருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் சடலங்களை வைத்துக் கொண்டு நள்ளிரவில் புறப்பட்டனர். வழியில் பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கி, வெப்பாலம்பட்டி பகுதியில் வெவ்வேறு இடங்களில் சடலங்களை வீசி தீ வைத்து எரித்துள்ளனர். அடையாளம் தெரியாத நிலையில் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான நபர்களின் விவரங்களை வைத்து போலீசார் பானுப்பிரியாவிடம் விசாரித்தனர். ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவர், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கள்ளக்காதலனுக்காக ராணுவ வீரரான கணவரையும், வயதான மாமனாரையும் எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் இந்தச் செயல் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴189