Makkal Mugam
490 views
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் ஆட்சியரகம் எதிரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மேகதாது அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மாநிலத் தலைவர் டாக்டர். செ.கு. தமிழரசன் கண்டன பேருரையாற்றினார்
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், இந்திய குடியரசு கட்சி சார்பில் காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மிடும் கர்நாடகா அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மண்டல செயலாளர் இராசி. தலித் குமார் தலைமையிலும், மாவட்ட செயலாளர் பூமியை அசோக்குமார் வரவேற்புரை நிகழ்த்தி இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சி, மாநில தலைவர் டாக்டர். செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு கண்டன பேருரையாற்றினார். மேலும் மாநில நிர்வாகிகள், மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை, மாநில பொருளாளர் கௌரிசங்கர், மு மாநில து.தலைவர் ராமஜெயம், மு மாநில து.தலைவர் ஏகாம்பரம், மு.மா.கொ.ப.செ தன்ராஜ், மாநில துணைத்தலைவர் ரமேஷ்குமார், மா.தொ.ச. பொருளாளர் மலைராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடகா அரசை கண்டித்தும், தமிழக அரசு ஆதிதிராவிட நலத்துறை என்ற பெயரை சமூகநீதி துறை என பெயர் மாற்றயதை கைவிட்டு மீண்டும் ஆதிதிராவிட நலத்துறை என அறிவித்திடுக என்றும், தமிழகத்தில் தொடரும் ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தடுப்பு சிறப்பு சட்டம் ஏற்றவும், மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் ஆக்குக சிறப்பு திட்ட நிதியை தரவும் மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் முழு நிதியை பட்டியலின மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த மற்றும் தமிழகத்தின் உயர் கல்வி பயிலவும் எஸ்சி/எஸ்டி மாணவர்களின் கல்வி கட்டணத்தை எந்த விதமான நிபந்தனைகள் இன்றி அரசே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தி கட்சி பேனரை வைத்து கொடிகள் மற்றும் பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், குடியாத்தம் நகர் தலைவர் ராஜ்குமார், பேரணாம்பட்டு ஒன்றிய செயலாளர் ஜெய், கேள்விக்குப்பம் ஒன்றிய தலைவர் ரகு, செயலாளர் விஜயகுமார், அணைக்கட்டு ஒன்றிய செயலாளர்கள் வேலாயுதம், பேர்ணாம்பட்டு நகர செயலாளரும், செய்தி உதவி ஆசிரியருமான டாக்டர். கதிரேசன், காட்பாடி ஒன்றிய தலைவர் செந்தில், செயலாளர் மான் (எ) மனோகரன், வேலூர் மாவட்ட துணை தலைவர் மது, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், துணைத் தலைவர் வீரேந்தர், இணைச் செயலாளர் சின்னப்ப தாஸ், மாநகர தலைவர் சக்திவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன், மாவட்ட மா.ம. செயலாளர் சரத்குமார், மாவட்ட மகளிர் அணி தலைவர் பாண்டியம்மாள், மகளிர் அணி துணை தலைவர் அம்மு, திருப்பத்தூர் மாவட்ட தலைவர் தயாளன், பொருளாளர் மணவாளன், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் தமிழ்குசேலன், திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் தியாகு, ஆம்பூர் நகர தலைவர் சுரேந்தர், இராணிப்பேட்டை மாவட்ட துணை தலைவர் சுரேஷ், இராணிப்பேட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் ரஞ்சன், மாவட்ட துணை தலைவர் இரங்கநாதன், மாவட்ட துணை தலைவர் பரமசிவம், இளைஞரணி செயலாளர் ரூபன், நகர தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியாத்தம் நிர்வாகிகள் ராஜ்குமார், செய்தியாளர் எஸ் எம் மூர்த்தி, ஜெய், பிரசாந்த், அப்பு, சதீஷ்குமார், பாலாஜி, அஜித், நாட்டாமை மாணிக்கம், மகளிர் அணி: சுமதி, புவனேஸ்வரி, உமா, ஷர்மிளா, ஸ்ரீலதா, சைலா, கஸ்தூரி, சுகந்தி, சாந்தி, சுதாகுமாரி, கலைச்செல்வி, கனகா, சந்திரா, கலாதேவி, வேலூர் நிர்வாகிகள்: நடராஜன், சற்குணம், சுப்பிரமணி, பொன்னுரங்கம், மோகன்ராஜ், சுந்தரமூர்த்தி, குப்புசாமி, இராஜேந்திரன், பக்தராஜ், மதியழகன், கிரிதரன், விஜயன், ஜெகநாதன், அன்பரசன், பூவரசன், புத்தநேசன், ராஜேந்திரன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் வேலூர் மாவட்ட அமைப்பு செயலாளர் டி.சுரேஷ்குமார் நன்றியுரையாற்றி ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.
15 likes
9 shares