கிரகங்களில் முழு வலிமையானது
கேது கிரகம் மட்டுமே.....
எனென்றால் அது சன்னியாசி கிரகம்.
சன்னியாசி என்றால்.?
சாமியாராக போவது அல்ல.
ஒருவர் தான் வாழும் வாழ்வில் எது நடந்தாலும் பரவாயில்லை என நினைக்க வைக்கும்
பக்குவஞானம் அடைந்தவர்.
கேது பகவான்
நவக்கிரகங்களில்
முதன்மையானவர்..
புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும்,
குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட
கேதுவே பலம் வாய்ந்தவர்.
குணத்தில்....
வஞ்சகம் சூழ்ச்சி தற்பெருமை
சூதுவாது தெரியாத சாத்வீக குணங்களை தருகின்ற
சாது கிரகம்.
சித்தர்களை குறிப்பதும் கேது தான்.
சித்தன் போக்கு சிவன் போக்கு என்று இருக்க வைப்பவரும் கேதுதான்.
எனவே..
கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.
இவர்கள் இப்படி சாதுவாக இருப்பதினாலேயே,,
ஒருசில குடும்பங்களில் பல பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்..
கேதுவின் அருள்பார்வை அவ்வளவு எளிதில் ஒரு ஜாதகருக்கு கிடைக்காது.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை.
அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை.
என்பதற்கேற்ப
கேதுவின் அருள்பார்வை கிடைப்பது கடவுள் வரமளிப்பது போன்றதற்க்கு சமம்.
கேது தரும் தெளிந்த ஞானத்தையும்,
கேது கற்றுக் கொடுக்கும் படிப்பினையும்
கேது கொடுக்க்கூடிய எதையும்......
எந்த கிரகத்தாலும் தட்டி பறிக்க முடியாது எனும் ரீதியில்
ஜாதகரை சிந்திக்க வைக்கும்.
எனவே..
கேது பகவான்
ஒருவருடைய ஜாதகத்தில்
சுபத்துவமாக இருக்கும் பட்சத்தில்
ஜாதகர்
பல வெற்றிகளை பெற்றிருந்தாலும்
வாழ்க்கையில் உயரிய நிலைக்கு வந்தாலும்
அடக்கத்துடனும்
அமைதியுடனும்
இருந்து..
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
தன்னடக்கத்துடன் இருப்பார்கள்.
ஏனெனில்...
கேது எனும் நிழல் கிரகத்திற்க்கு அதி தேவதையாக வருபவர்....
கடவுள்களின் முதல்வனான
வெற்றியின் சொரூபமான
பிள்ளை எம்பெருமானான
அடக்கம் அமைதியின் முழு உருவமான
கடவுள் கணபதி
என்பதால்.
ஜாதகர்....
தனிமை விரும்பிகளாகவும்
சாந்த சொரூபிகளாகவும்
கடவுள் தன்னுடன் இருப்பதைப் போன்ற ஒரு
உயரிய உணர்வுடன் இருப்பார்கள்.
___________________________________________
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
P #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை arampurusha
புதன் கேது இணைவு பலன் என்ன என்று எளிதாக கேட்டு விடலாம்..
ஆனால் அதற்குள் ஒளிந்திருக்கக் கூடிய ஆழமான சூட்சமம் என்பது வேறு..
ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால்.?
புதன் அறிவு காரகன்
கேது ஞானகாரகன்.
புதன் ஜீவாத்மாவை போல நிரந்தரம் இல்லாதது.
கேது பரமாத்மாவை போல நிரந்தரமானது.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்...
கேதுவின் கட்டுப்பாட்டிற்குள் தான் புதன் வர வண்டும்.
புதனின் கட்டுப்பாட்டிற்குள் கேது வர மாட்டார்.
அதாவது..
நிரந்தரமான ஒன்று நிரந்தரம் இல்லாத ஒன்றை
எவ்வாறு பெருமைப்படுத்துகிறது எவ்வாறு சிறுமைப்படுத்துகிறது
என்பதே
புதன்கேது இனைவின் கேள்வியாகும்.
அந்த வகையில்.....
புதன் கேது உடன் இணைந்து புதனை தாண்டிய கேதுவால் புதன் சூட்சம வலுவில் இருக்கும் போது புதனின் காரகத்துவமான கல்விஅறிவை பெருக்குவார். புத்திசாலித்தனத்தை பெருக்குவார்.
புதன் கேது உடன் இணைந்து புதனை நோக்கி வருகின்ற கேதுவால் அதாவது பதனை கிரகணப்படுத்தும் நோக்கத்தில் வருகின்ற கேதுவால்.கல்வி அறிவு புத்திசாலித்தனத்தை தரவிடாமல் கேது சுருக்குவார்.
குறிப்பாக...
இந்த இணைவு எந்த பாவகத்தில் நிகழ்ந்துள்ளது
என்பதை பொருத்தும்.
சுபத்துவ பாபத்துவ அடிப்படையை பொருத்தும்..
மாறுபடும்.
அதாவது புதன் கேது இணைவு ஓடு கிரகணத்திலிருந்து...
கூடவே நல்ல ஸ்தானங்களில் அமர்ந்திருந்து..
சுபத்துவமும் அடைந்திருந்தால்
அளப்பரிய கல்வியை தரும்
கல்விக்கு ஏற்ற பணியை தரும்
பணிக்கு ஏற்ற மரியாதையையும்
புகழையும் தரும்.
சுருக்கமாக..
கல்வி கற்கும் காலத்திலும்
சிறந்த மாணவர் என்கிற புகழ் பெறுவார்கள்.
கல்வி கற்று பணியில் அமர்ந்த போதிலும் ..
இவர்களுடைய புத்திசாலித்தனத்தை பற்றி சிலாகித்து பேசி மகிழ்ந்து.
இவர்களுடைய புத்திசாலித்தனத்தினால் கிடைக்கக்கூடிய லாபத்தின் அடிப்படையில் அதற்குரிய மரியாதையையும் தந்து புகழவும் செய்வார்கள்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
7810022628
சம்சாரம் போனால் சகலமும் போச்சு...
இங்கே 'சம்சாரம்' என்பது நாம் வாழும் வாழ்க்கையின் அஸ்திவாரமாகவும் அச்சாணியாகவும் விளங்கக்கூடிய மனைவியை குறிக்கும்.
ஒருவருடைய ஜாதகத்தில் இல்லற வாழ்வு சிறப்பாக அமைந்தால் மட்டுமே மற்ற எல்லா பாக்கியங்களும் யோகங்களும் முழுமை பெறுகின்றன..
அந்த வகையில்...
ஜோதிடத்தில் மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன்.
சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் பலமாக இருந்தால் மட்டுமே 'மகாலட்சுமி கடாட்சம்' கிட்டும்.
சுக்கிரன் பலம் பெற்று இருக்கக்கூடிய ஜாதகத்தில் மனைவி மகிழ்ச்சியாக இருப்பார்.
செல்வமும் சேரும்.
மேலும்...
ஏழாம் பாவகம் களத்திர ஸ்தானம்.
ஜாதகத்தில் 7-ம் இடம் என்பது வாழ்க்கைத்துணையை மட்டுமல்ல,..
நாம் அன்றாடம் சந்திக்கும் மக்கள் ,மற்றும் கூட்டுத் தொழிலையும் , செய்கின்ற வேலையையும், இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர்களையும் குறிக்கும்.
ஒருவருக்கு 7 ஆம் பாவகம் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில்..
அது , அவரது சமூக உறவுகளில் நல்லிணக்கத்தையும் பாதிக்கும்.
மேலும் பொருளாதார கஷ்ட நஷ்டங்களையும் ,இன்ப துன்பங்களையும் இது போன்ற மனதில் உள்ள பாரத்தை பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர்களையும் நல்ல முறையில் தர மறுக்கும்.
மேலும் சந்திரன் என்பது தாயை குறிக்க கூடிய கிரகமாக இருந்தாலும்...
பொதுவாக பெண் கிரகம் என்பதாலும்...
தாய்க்குப்பின் தாரம் என்பதாலும்...
ஜாதகத்தில் சந்திரனும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்."
என்கிற சித்தர் பெருமான்களின் கூற்றின் அடிப்படையில்...
ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது என்பது,
அவனது மனதை அவள் அமைதிப்படுத்த முடியும்.
பொதுவாக
வீட்டில் அமைதி இல்லையெனில், சமுதாயத்திடமும்,தொழிலிலும் கவனம் சிதறி சகல விஷயங்களிலும் குழப்பமும் கலக்கமும் அதன் மூலம் நஷ்டமும் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படும்.
எனவேதான்...
ஒரு ஜாதகத்தில் பெண் கிரகங்களான...
சுக்கிரனும் சந்திரனும் மேலும் களத்திர பாவகமான 7 ஆம் இடமும் மிக மிக முக்கியம் என்பதை... பெரியவர்கள் சம்சாரம் போனால் சகலமும் போச்சு என்று
சூசகமாகவும் சூட்சமமாகவும் கூறியுள்ளார்கள்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
வக்கிரம் அடைந்த குருவின் பார்வை பற்றிய விளக்கம்....
பொதுவாக
முழுமையான இயற்கை சுபர் என்று வர்ணிக்கப்படும் குரு பகவானின் பார்வையை பற்றி விளக்கவே தேவையில்லை ஏனெனில் அது நன்மையையே செய்யும்...
இருந்த போதிலும்...
நீச்ச குருவின் வலிமைக்கும். உச்ச குருவின் வலிமைக்கும் உள்ள வித்தியாசத்தை போல.
வக்கிர குருவிற்க்கென்று தனித்துவம் உண்டு.
ஒருவருக்கு குரு திசை நடந்தால்..?
தோராயமாக முதல் எட்டு வருடத்திற்கு... குருவின் மூலத்திரிகோண வீடான தனசு வீட்டின் ஆதிபத்தியத்தை எடுத்து நடத்துவார்.
பிறகு மீன வீட்டின் ஆதிபத்தியத்தை எடுத்து நடத்துவார்.
அதே குரு...
வக்கிரமாகியிருந்து தசை நடந்தால்.?
முதலில் மீன வீட்டின் ஆதிபத்தியத்தை எடுத்து நடத்துவார்.
அதன் பிறகு தனுசு வீட்டின் ஆதிபத்தியத்தை எடுத்து நடத்துவார்.
என்கிற ரீதியில்....
ஒரு ஜாதகத்தில் குரு வக்கிரமாகி இருந்து...
அவருடைய பார்வையானது..
லக்னத்திற்கோ ,ஏதேனும் ஒரு பாவகத்திற்கோ, அல்லது தசை நடத்திக் கொண்டிருக்கின்ற கிரகத்திற்கோ.. குருவின் பார்வை விழும் பட்சத்தில்...
உங்களுடைய லக்னத்திற்கு
மீனம் எந்த பாவமாக வருகிறதோ...
அந்த பாவகாதிபதியின் பார்வையை பெற்றிருப்பது போலவே அது அமையும்.
உதாரணமாக ....
மேஷ லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு தன்னுடைய லக்னத்திற்க்கு வக்கிரமடைந்த குரு பார்வை கிடைக்கும் பட்சத்தில்...
பாக்ய அதிபதி லக்னத்தை பார்ப்பதாக என்ன வேண்டுமா?
விரையாதிபதி லக்னத்தை பார்ப்பதாக என்ன வேண்டுமா.?
என்றால்.
விரையாதிபதி பார்ப்பதாகவே கொள்ள வேண்டும்.
அதேபோல...
மேலும் ஒரு உதாரணமாக...
கடக லக்னத்திற்கு அட்டமாதிபதி சனி திசை நடக்கும் போது...
வக்கிரமடைந்த குருவின் பார்வை சனியின் மீது விழுகும் போது...
கடக லக்னத்திற்கு பாக்கிய அதிபதியின் பார்வையைப் போல செயல்பட்டு வெளிநாட்டிற்கு அனுப்புமா.? என்றால் ...கிடையாது...
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல...
ஏற்கனவே அட்டமாதிபதி தசையில் அவதிப்பட்டு கொண்டிருக்கிற ஒருவரிடம் கடன் நோய் எதிரி என்கிற ஆறாம் ஆதிபத்திய பலனையும் சேர்த்து அனுபவிக்க வைக்கும்...
இந்த பதிவு...
வக்கிரம் அடைந்த குருவின் பார்வை பலனை
புரிந்து கொள்ள மட்டுமே
இதுவே இறுதி நிலை அல்ல.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
ஐந்தில் கேது இருந்தும் குழந்தை பிறப்பது எப்படி.?
பொதுவாக..
ஐந்தில் கேது இருந்தால்.?
புத்திர பாக்கியம் இல்லை என்று சொல்லிவிட முடியாது.
அதற்கு...
பலவிதமான பகுப்பு ஆய்வுகள் தேவை.
அதில் சில..
பொதுவாக ஐந்தாம் இடம் என்பது புத்திர ஸ்தானம் மட்டுமல்ல,பூர்வ புண்ணிய ஸ்தானமும் கூட.
பூர்வ புண்ணிய அதிபதி பாதிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில். குழந்தை பிறப்பது மட்டுமல்ல நல்லொழுக்கம் உள்ள குழந்தையாகவும் பிறக்கும்.
சரி..
இதில் கவனிக்க வேண்டியது.
ஐந்தாம் அதிபதிக்கு உரிய கிரகம் எது என்பதே...
ஐந்தாம் பாவக அதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்தால்...
ஐந்தாம் பாவகமும் பாவக அதிபதியும் குருவின் தொடர்பை பெற்று.
ஐந்தாம் அதிபதியின் தசையில் சந்தான பாக்கியம் உண்டாகும்.
ஒருவேளை...
ஐந்தாம் பாவக அதிபதி
இயற்கை பாவ கிரகமாக இருந்தால் லக்கினத்திற்கு மறைவு ஸ்தானமான 3,6,8,12 போன்ற வகையில் மறைந்து ஆட்சி உச்சம் நட்புவீடு போன்ற வகைகளில் அமர்ந்து.
குருவின் தொடர்பு அல்லது லக்னத்திற்கு திரிகோணாதிபதியின் தொடர்பை பெற்று தசை நடத்தும் பட்சத்தில்..
புத்திர பாக்கியம் உண்டாகும்.
ஒருவேளை ஐந்தில் அமர்ந்த கேது திசையே நடக்கிறது என்றால்.?
கேதுவிற்கு ஐந்தில் அதாவது
லக்னத்திற்கு ஒன்பதாம் இடத்தில்
குரு அமர்ந்து...
குருவின் பார்வையைப் பெற்ற கேது தசையிலும் புத்திர சம்பத்து உண்டாகும்.
மேலும்...
புத்திர காரகன் குரு பகவான்
லக்னத்திற்கு 11 ஆம் அதிபதியுடன் இணைந்திருக்க...
இரண்டிற்கும் மேற்பட்ட மழலைச் செல்வங்கள் வீட்டில்
தவழ்வார்கள்.
#✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
சுழலும் கிரகங்கள் யாவும் உனை கைவிட்டால்..?
உன்னை சுமக்கும் பூமி கூட உனை சுமக்க மறுப்பது போல் தோன்றும்.
கட்டிய மனைவி அல்லது கட்டிய கணவன், பெற்ற பிள்ளைகளும் உற்றார் உறவினர் நண்பர்களும் மனித கற்சிலையாக மாறிவிடுவர்.
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும் உன்னிடம் அந்நியமாக நடந்து கொள்வார்.
பெற்ற தகப்பன் என்ன.?படைத்த பிரம்மனே எதிரி போல தெரிவார்.
இந்நிலையில்....
ஆதியும் அந்தமும் இல்லாத
பரம்பொருளின் மைந்தனான.
ஞானக்கொழுந்தான
முழுமுதற் கடவுளான
நவகிரகங்களை அடக்கி ஆளுகின்ற
தும்பிக்கையுடன் இருக்கின்ற
ஸ்ரீ விநாயகப் பெருமானை
முழு நம்பிக்கையுடன்
நாள்தோறும் வணங்கிடு.
தடைகள் விலகி
கிரகங்கள் ஒவ்வொன்றாக உனக்கு வழி விடுவதை போன்ற உணர்வை....
உனக்குள் நீ உணர்வாய்.
அனைவரும் கிரகங்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும்
அனைத்து கிரகங்களும் இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
எனவே...
ஒருவரை...கிரகங்கள்... அவருடைய ஜாதகத்தின் வழியாக
மோசமான கிரக அடைவுகள் மூலமாகவோ.
தொடர்ந்து அவயோக தசா புத்திகளை அனுபவிக்க வைப்பதன் மூலமாகவோ...
அந்த நபரை...
கிரகங்கள் அனைத்தும் கைவிடும் போது.!!
இறைவனின் கையை இறுக பற்றிக் கொள்ள...
அந்த நபர்...
இறைவனின் நேரடி கட்டுப்பாட்டிற்கு செல்வார்.
சுருக்கமாக...
விநாயகர் ....
மூன்று முறை தன் தாய் தந்தையரை சுற்றி வந்து பழத்தை பெற்றுக் கொண்டார்.
நீ மூன்று முறை விநாயகரை சுற்றி வந்து அரை குடம் நீரால் குளிர்வித்து அரைமுழம் அருகம்புல்லினால் அலங்கரித்து திருநீர் அணிந்து சரணாகதி அடைந்து உனக்கான கோரிக்கையை வைத்தால்.
அடுத்த கணமே உன்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற தயாராகி விடுவார்.
தூய உள்ளம் படைத்த
ஞான ஊற்றின் பேரொளியான
அன்பு கருணை அமைதியின் வடிவான..
அதி அற்புதம் நிறைந்த
அதிசய பிள்ளையார்.
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஏழில் சனி திக்பலத்துடன் சுபத்துவம் இன்றி இருந்தால்..? கணவனால் அல்லது மனைவியால் அல்லது நண்பரால் ...என்னற்ற அவமானங்கள் ஏற்படும்.
ஏழில் சனி திக் பலத்துடன் பாவத்துவம் அடைந்திருந்தால்.? கணவனால் அல்லது மனைவியால் அல்லது நண்பரால் அசிங்க அவமானம் மற்றும் துரோகத்துடன் கூடிய ஆபத்தும் உண்டு.
ஏழில் சனி திக்பலத்துடன் பாவத்துவமும் சுபத்துவமும் அடைந்திருந்தால்...கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் புரிதல் இல்லாத நிலை ஏற்பட்டு அதன் மூலம் சண்டை சச்சரவுகள் அதன் மூலம் பிரிவும் ஏற்பட்டு இறுதியில் சேருவர்.
ஏழில் சனி திக் பலத்துடன் சுபத்துவம் அடைந்திருந்தால்...
கணவனை புரிந்து கொள்ளக் கூடிய மனைவியும்.
மனைவியை புரிந்து கொள்ளக்கூடிய கணவனும்.
கணவனாக இருந்தால் பொறுமையான மனைவியும்.
மனைவியாக இருந்தால் பொறுமையான கணவனும்.
அமையப்பெற்று....
கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும்
பெருமையும் புகழும் உண்டாகி
நீண்ட நாள் இணை பிரியாத கணவன் மனைவியாக பிறர் கண் படும் படி
ஜாடிக்கு ஏற்ற மூடியாக
வாழ்வார்கள்.
உங்கள் ஜாதக #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
சூரியன் மற்றும் சந்திரனுக்கு நடுவில் ராகு அல்லது கேது இருந்தால்.?.
பொதுவாக...
இந்த அமைப்பில் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேது உடன் இணைந்து இருப்பது என்பது..பித்ரு மாத்ரு தோஷம் என இரு தோஷத்தையும் ஏற்படுத்தும்.
அதாவது
ஆன்ம பலம் மற்றும் மனோபலம் இன்றி செய்யும்.
ஒரு சேர உடல் நலக்குறைவையும்.மனக் குழப்பத்தையும் தரக்கூடிய ஒரு அமைப்பாகும்.
மேலும்....
சூரியன் தந்தையை குறிப்பதால்,. தந்தையின் உடல்நிலை அல்லது தந்தையுடன் அல்லது தந்தையுடனான உறவில் பாதிப்புகள் இருக்கலாம்.
பூர்வீக சொத்துக்களில் சிக்கல் வரலாம்.
குறிப்பாக சூரியன் அரசு அரசாங்கம் அதிகாரம் போன்றவற்றை குறிப்பதால் அது சம்பந்தப்பட்ட தடைகள் தாமதங்கள் ஏற்படுத்தும். மேலும் அரசு வேலை அல்லது அரசாங்க சலுகைகள் கிடைக்காது என்று தெரிந்திருந்தும். அரசு வேலை கிடைக்க வேண்டும் அதை அடைந்தே தீர வேண்டும் என்கிற வேட்கையை ஏற்படுத்தும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது டிகிரி இடைவெளி....
சூரிய சந்திரனுக்கு நடுவில் ராகு அல்லது கேது 12 டிகிரி இடைவெளியில் இருந்தால்.?
அது ...கிரகணத்தின் ஆரம்பமே அன்றி முழுமையான கிரகணம் அல்ல..
முழுமையான கிரகணம் என்பது சூரிய சந்திரனுக்கு நடுவில் இருக்கக்கூடிய ராகு அல்லது கேது ஐந்து டிகிரி முதல் ஜீரோ டிகிரி வரையில் இருப்பதாகும்.
பொதுவாக கிரகணமடைந்த கிரகத்திற்கு விமோசனம் இல்லை..என்றாலும்.!!
சுபத்துவத்தின் அடிப்படையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.
மேலும் பொதுவாக....
12 டிகிரி இடைவெளியில் இருந்தால்,.?
சூரியன் முழுமையாக வலுவிழக்கவில்லை.!!இருப்பினும்,...
ஜாதகருக்கு...
அவ்வப்போது தேவையற்ற பயம் மற்றும் குழப்பம் இருக்கவே செய்யும்.
அதேபோல...
சந்திரனும் 12 டிகிரி இடைவெளியில் இருந்தால்.? சந்திரனும் தன்னுடைய வலுவை முழுமையாக இழக்காது.!!
இருப்பினும் இது ஒரு மனப்போராட்டமான அமைப்பாக இருக்கும்,
கூடவே...
ராகு அல்லது கேதுவை கடந்து சந்திரன் சென்றிருப்பதால் ஜாதகருக்கு பின்னாளில் மிகப்பிரகாசமான தெளிவு பிறக்கும்.
என்கிற அமைப்பில் எடுத்துக் கொள்ளலாம்.
சுருக்கமாக
இது போன்ற அமைப்பில் இருக்கக் கூடியவர்களுக்கான பொதுவான பலன் என்பது..
தேவையற்ற கவலைகள், அதீத கற்பனை , அளவுக்கதிகமான பயம், தூக்கமின்மை,
இதனால் தெளிவற்ற முடிவுகளை எடுக்க வைக்கும்.
அதே சமயம்...
இந்த அமைப்பு உள்ளவர்கள் மிகவும் புத்திசாலியாகவும், நுணுக்கமான விஷயங்களை கவனிப்பவர்களாகவும் இருப்பார்கள். அப்படி இருந்தாலும் அந்த புத்திசாலித்தனத்தை சரியான நேரத்தில் பயன்படுத்த தடுமாறுவார்கள்.
என்பதே
சரியாக இருக்கும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர் #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
ஆட வைப்பவர் ராகு
ஆடியவரை அடக்குபவர் சனி.
ஆட விடாமல் தடுப்பவரும்
கேது.
ஆடி ஓய்ந்தவரை
ஓய்ந்து அடங்கியவரை
அடங்கி வாடியவரை
வாடி நின்றவரை
அரவணைப்பவரும்
கேது.
பூமியில் நிரந்தரமாக தங்கி விடப் போகிறோம் என்கிற ஒரு பொய்யான மாய பிம்பத்தை ஏற்படுத்தி மாய கற்பனையில் மிதக்க வைத்து...
அவசர அவசர அவசரமாக அனைத்தையும் தன் வசம்
வைத்துக்கொண்டு கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்
என்கிற எண்ணத்தை தந்து
அதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய வைத்து....
ஆடு ஆடு ஆடு என்று ஆட வைப்பவர் ராகு.
பேயாட்டம் ஆடியவரை
அடங்கு அடங்கு அடங்கு என்று
அறிவுரை கூறாமல்...
அடிக்கும் அடியில் செய்த அத்தனை பாவங்களும் ஆடிய அத்தனை ஆட்டங்களும் கண்முன்னே வரிசையாக காட்சிகளாக
காட்டி..
மரண அடியை கொடுத்து
முடக்கி விடுவார்
சனி பகவான்.
வீணாக ஏன்...
ஆடுவானேன்
ஆடியதால் ஏன் அடிபட்டு அவதிப்படுவானேன்..
அவதிப்பட்டு பின் அழுவானேன்...
என்கிற தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வைத்து...
எதிலும் அதிக பற்றுடன் இருக்கக் கூடாது என்கிற புரிதலை ஏற்படுத்தி...
எதுவும் உண்மை இல்லை
என்கிற உண்மையை உணர வைத்து.
ஞானம் எனும் அமிர்தத்தை
கொடுத்து...
அந்த ஞானத்தை
ஞான உணர்வை
பிறருக்கும் பகிர்ந்து
தர வேண்டும்....
ஞானத்தை உணர வைத்து
புரிய வைக்க வேண்டும்
என்று கற்றுத் தருபவர்
கேது பகவான்.
உங்கள் ஜாதக #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628












