
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
httpsm.facebook.comd.muthuprakashref=bookmark
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 18.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
தேவர் துயரமெல்லாம் தீர்ப்போங்கா ணென்றுசொல்லி
மேவலர்கள் போற்றும் விசயவை குண்டராசர்
தகப்ப னுடபதத்தில் சரண மிகப்பணிந்து
உகப்பரனார் நோக்கி உரைக்கிறா ரன்போரே
என்னை பிதாவே மாதாவே யென்தாயே
எல்லா விவரமதும் எடுத்துரைத்தீ ரென்றனக்கு
நல்லோரே நானினித்தான் நடக்க விடைதாரும்
பண்டுள்ள ஆகமம்போல் பால்வண்ணர் பெற்றிடும்வை
குண்டர் தெச்சணமே கொள்வார்தான் பள்ளியென
ஆதியா கமப்படியே அனுப்பிவையு மம்புவியில்
சோதிமணியே சுவாமி யெனத்தொழுதார்
.
விளக்கம்
==========
தேவர்கள் துன்பங்களை எல்லாம் தீர்த்து விடுவேன் என்று உறுதி சொல்லிவிட்டு வானோர்கள் போற்றும் சக்தி கொண்ட வைகுண்டர் தமது தந்தையின் பாதங்களில் விழுந்து சரணடைந்து மிகவும் பணிவுடன் தந்தை நாரணரை நோக்கி தந்தையே என்னை ஈடேற்றிப் பாதுகாத்துவரும் உயர்ந்தவரே எல்லாருக்கும் அரசனே, தாய் போன்றவரே, சோதி மணியே, எனக்குத் தேவையான எல்லா விவரங்களையும் தெளிவாக எடுத்துரைத்தீர். இனி நான் பூமிக்கு நடந்து செல்ல விடை தருவீராக. மேலும் பால்வண்ணராகிய ஈசரின் சகல சக்திகளையும் பெற்றிடும் வைகுண்டர் தெச்சணாபூமியில் பள்ளி கொள்ளுவார் என்னும் முன்னாலுள்ள ஆகம விதியின்படி என்னை அனுப்புவீராக என்று கூறித் தொழுதார்.
.
.
அகிலம்
========
உடனே மகனை உவந்துமுகத் தோடணைத்துக்
கடலின் சிறப்பைக் கண்டாயோ என்னுசொல்லி
மகனே வுனைவிட்டு மறுவூரு வாழ்வேனோ
நகமுஞ் சதையும்போல் நான்வருவே னுன்கூட
எத்தனை கோடி இயல்தர்மஞ் செய்துவுன்னைப்
பெற்றெடுத்தே னுன்கூட பிறகே வருவேனப்பா
நீயொருவ னெனக்கு நிலையென்று காணுமுன்னே
தாயில்லாப் பிள்ளையைப்போல் தட்டழிந்தே னென்மகனே
.
விளக்கம்
==========
உடனே, வைகுண்டரைத் திருமால் தமது முகத்தோடு அணைத்து, மகனே நீ அகக்கடலின் சிறப்புகளைக் கண்டாயா? உன்னை விட்டு விட்டு நான் வேறு ஊரில் வாழ முடியுமா? நகமும் தசையும் போன்று உன்னுடன் நானும் வருவேன். எத்தனையோ முறையான தருமங்களைச் செய்து உன்னைப் பெற்றெடுத்தேன். நான் உன்னைத் தொடர்ந்து வருவேன். உன்னை நான் என் நிலையான வாரிசாகப் பெற்றெடுக்கும் முன்பாகத் தாயில்லாப் பிள்ளையைப் போலத் துன்பமுற்றேன்.
.
.
அகிலம்
========
மகனே வுனைக்கண்டு மனச்சடவெல் லாந்தீர்ந்தேன்
சுகமேபோய் வாவெனவே சொல்லி யனுப்புவேனோ
உன்கூட நானும் ஓடி வருவேனப்பா
என்கூட வுன்தாயும் ஏகி வருவாள்காண்
என்று தாய்தகப்பன் இவர்கள் வழிகொள்ளவே
கண்டு வைகுண்டர் கனமாய் மனமகிழ்ந்து
நீங்கள் வருவதுதான் எனக்குவெகு சந்தோசம்
தாங்கி வருவேன் தமியேனுங்கள் பாதமதை
.
விளக்கம்
==========
மகனே உன்னைப் பெற்றெடுத்த பிறகே என் மனத் துயரங்கள் எல்லாம் தீர்ந்தன. இத்தகைய என்னை சுகமாகப் போய் வா என்று கூறி எளிதாக அனுப்ப முடியுமா? மகனே உன்னுடன் நானும் ஓடி வருவேன். அப்படி உன்னுடன் நான் ஓடி வந்தால் என்னோடு உன் தாய் இலட்சுமியும் ஓடி வருவாள் என்பதை அறிந்து கொள்ளுவாயாக என்று வருத்தி உரைத்தார். இதைக் கேட்ட வைகுணடர், அதிகமாக மன மகிழ்ச்சி கொண்டு, தந்தையே, நீங்களும் என்னுடன் வந்தால் அதனால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே உண்டாகும். உங்கள் பாதங்களை நான் தாங்கிய வண்ணம் அழைத்துச் செல்லுவேன் என்றார்.
.
.
அகிலம்
========
அப்போது நாரா யணர்மகனே யாவிமிக
இப்போ தென்பாலகனே இயம்புகிற புத்தியைக்கேள்
.
விளக்கம்
==========
வைகுண்டரின் இதமான மொழிகளைக் கேட்ட நாராயணர் தம் மகனைக் கட்டியணைத்து, மகனே, இப்போது நான் சொல்லுகிற புத்திமதிகளையும் கேட்பாயாக என்றார்.
.
.
அகிலம்
========
சீமை யதுகாணச் செல்லோங்கா ணுன்கூட
வாமை மகனே வருவோமுன் கண்காண
மகனே நீநடக்க வைகுண்டம்வை குண்டமென
உகமீ ரேழுங்காண உரைத்துவிடு யாமமது
.
விளக்கம்
==========
இவ்வுலக மக்களைக் காண உன் கண் காணும்படியாக உன்னோடே வருவேன். இது உண்மை. மகனே, தருமயுகம் வரப் போகிறது என்று பதினான்கு உலகங்களும் கேட்கும்படியாகச் சத்தமிட்டுக் கூறி யுகமுடிவு பற்றியும் உரைத்து விடு.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 17.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
வேறு
======
சந்திர சுந்தர தந்திர மந்திர சாமிசீர் பாலகனோ
தாயக மாயக நாயக மாகிய தாண்டவ சங்கரனோ
சுந்தர சந்திர யந்திர குஞ்சித சூரியப்பிர பாலகனோ
சூரனோ வீரனோ மாதனோ நீதனின் சூலகலா திபனோ
.
விளக்கம்
==========
குளுமையான சந்திரனுக்கும் அழகுக்கும், தந்திரங்களுக்கும், மந்திரங்களுக்கும் சுவாமியாகிய சிறப்பான வைகுண்ட குழந்தை இது. எல்லாவற்றுக்கும் தாயகமாகவும், மாயகமாகவும், நாயகமாகவும் இருக்கும் தாண்டவச் சங்கரன் என்பவர் இவ்வைகுண்ட குழந்தையே ஆவார். அழகாகவும், குளுமையாகவும், சுந்தரமாகவும், சந்திரனாகவும், மந்திர யந்திரமாகவும், பரிமாமித்திருக்கும் சூரியப் பிரகாசமான அழகு நாராயணருடைய பாலன் இந்த வைகுண்டர். இந்தக் குழந்தை சூரியன் போன்று பிரகாசிப்பவனாகவும், சாந்த முள்ளவனாகவும், பெரியவனாகவும், நீதியுள்ளவனாகவும் குலம் போன்ற ஆயுதக் கலைகளில் மகா வல்லவனாகவும் இருப்பவர் இந்த வைகுண்டர் ஆவார்.
.
.
அகிலம்
========
தந்திர மந்திர இந்திர சுந்தரின் சந்ததி சந்ததியோ
சகடவெலி சண்டரை அகடவெலி செய்திடும் சுக்கிர விக்கிரனோ
கொந்தரி சந்ததின் தந்திர சுந்தர கோசல நாயகனோ
கொடுகலி யறவொரு கடுமுனை கொண்டருள் குலவெங்கிட குண்டமோ
.
விளக்கம்
==========
வைகுண்டர் தந்திரங்களும், மந்திரங்களும், இந்திர சாலங்களும் தெரிந்த சுந்தரமுள்ள திருமாலின் சந்ததிக்கும் சந்ததியாவார். அசுத்த வலிமிக்க கலியாகிய தீயோனையும் அவன் அநீதியையும் பலி செய்து அழிக்க வந்த புண்ணியம் பொருந்திய வீரனே இவ்வைகுண்டர். பூங்கொத்துக்களை அணிந்த நாராயணரின் சந்ததியான வைகுண்டர் மாயத் தந்திரங்களும், அழகும் பெற்ற கோசலை நாட்டை ஆட்சி புரிந்த இராமனே ஆவார். கொடுமையான கலியன் முழுதும் அழிய ஒரு கடுமையான முனை கொண்டு தாக்க அருள் பெற்று உலாவரும் வெங்கடாசல பதியாகிய வைகுண்டர் இவர்.
.
.
அகிலம்
========
சுத்தனோ கர்த்தனோ நித்தனோ அத்தனோ துலங்கும் தங்கரனோ
சூரனோ வீரனோ தீரனோ நாதனோ சூரியப்பிரகாச வீதனோ
விரனோ காரனோ தாரனோ சாரனோ வெங்கிட ரங்கிடனோ
விகடக டகடக டகுட டடமருள் வேதவிக்கிர சுக்கிரனோ
.
விளக்கம்
==========
சுத்தனாகவும், எல்லாம் கற்ற நித்தியனாகவும், எல்லாரிலுமிருந்து பேசுவோனாகவும், துலங்குகின்ற சங்கரனே இந்த வைகுண்டர். சூரனாகவும், வீரனாகவும், தீரனாகவும், நீதிமானாகவும், சூரியப்பிரகாசமுடைய சாந்த புருஷனாகவும், காரனாகவும், தாரனாகவும், இனிமை பொருந்தியவனாகவும் காட்சியளிக்கும் இவ்வைகுண்டர் எங்கு இடர் உருவாகுமோ அங்குத் தோன்றி அந்த இடரைப் போக்கிடுவார். தொந்தரவும், அநீதிகளும் அதிகமாகப் பொருந்திய பொல்லாங்குகளை எல்லாம் பலியிட்டு அருளிய புண்ணியன் இந்த வைகுண்டர்.
.
.
அகிலம்
========
தீரனோ காரனோ சீரனோ வீரனோ செந்திலம்பதிவளர் சந்திரனோ
திகதிக தரிகிட செகமுக மருள்புரித் திக்கிர விக்கிரனோ
நீதனோ கீதனோ வீதனோ மாதனோ நீதவெங் கோகுலனோ
நெகிடுகலி யகடற விகடுகுடல் கருவற நெக்கிர விக்கிரனோ
.
விளக்கம்
==========
தீரனாகவும், பாதுகாவலனாகவும், பெருமை பொருந்தியவனாகவும், வீரனாகவும், செந்திலம்பதியில் வளர்கின்ற சந்திரனாகவும் இருப்பவர் இந்த வைகுண்டர். வைராக்கியம், கடுமையான வேகம் இவற்றுக்கு இருப்பிடமும் இருக்கையுமாக இருக்கும் வைகுண்டர் இந்த உலகத்தில் காட்சியளிக்கும் கலியுகத்தின் எல்லாத் திசைகளிலும் அமர்ந்து அருள் புரிவார். நீதிமானாகவும், உயரிய குணமுடையவனாகவும், சாந்தனாகவும், பெரியவனாகவும், நீதிக்குப் பெரியவனான கோகுல வாசனாகிய கண்ணன்தான் இவர். நெருப்புக் குண்டமான கலியின் வடிவை அழித்துக் கருமை பொருந்திய சுருட்டான உடலையுடைய கலியன் குலம் முழுவரும் அழித்து உருக வைக்கும் வீரத்திலகன் இவர்.
.
.
அகிலம்
========
இப்படி ஒளவை மாது இயல்புதா லாட்டக் கண்டு
செப்படி முனிமா ரெல்லாம் சிவவைந்தர் பதத்திற சென்று
முப்படி முறைபோல் தேவர் முக்கந்தன் பள்ளி கொள்ள
அப்படித் தேவ ரெல்லாம் அவரிசை கூற லுற்றார்
.
விளக்கம்
==========
இவ்வடியாக சரசுபதி இதமாகத் தாலாட்டு பாடியதைக் கண்டு, அடியார்கள் என்று சொல்லப்படும் முனிமார் எல்லாரும் வைகுண்டர் பாதத்தில் சென்று வணங்கினர். பாரம்பரிய முறைபோல் தொட்டிலில் வைகுண்டர் பள்ளி கொள்ள, தேவர்கள் எல்லாரும் இசை பாடலானார்கள்.
.
.
.
அகிலம்
========
பள்ளி உணர்த்தல்
===================
பல்லவி
=========
பள்ளியுணராய்-சிவமருகா நீ
பள்ளியுணராய்
.
விளக்கம்
==========
சிவனின் மருமகனே, நீ அறிதுயில் விட்டு எழுவாயாக.
அகிலம்
========
சரணம்
=======
பள்ளியு ணராய்நீ தெள்ளிமை யாகவே
பாற்கடல் மீதினில் தாக்குட னுதித்தவா
வெள்ளி யுதித்திடப் பள்ளி யுணர்த்தவும்
வேதநா ராயணர் சீதகோ பாலர்க்குக்
கொள்ளி யெனவந்த வைகுண்டக் கோவனே
கோவேங் கிரிவள ரீசர் மருகோனே
வள்ளி மணவாளர் வளர்செந்தூர் வாரியில்
வந்து பிறந்துநல் தெச்சணம் புகுந்தவா
பள்ளியுணராய்-சிவமருகா நீ
பள்ளியுணராய்
.
விளக்கம்
==========
வைகுண்டா, நீ துயில் விட்டு எழுவாயாக, பாற்கடல் மீது விரைவாகத் தோன்றி வந்தவனே, நீ தெளிவுடன் துயில் விட எழுவாயாக. வானத்தில் வெள்ளி உதித்ததும், துயில் கொள்ளுகின்ற வேத நாராயணர் சீதகோபாலர்க்குச் சந்தியாக வந்த வைகுண்டமாகிய தலைவனே, கோவேங்கிரியல் அமர்ந்திருக்கும் ஈசருடைய மருமகனே, வள்ளியின் மணவாளன் முருகன் வாழ்கின்ற திருச்செந்தூர்க் கடலில் வந்து பிறந்து நல்ல தெச்சணம் சென்றிட வரும் வைகுண்டா, நீ துயில் விட்டு எழுவாயாக. சிவனின் மருமகனே, நீ துயில் விட்டு எழுவாயாக.
.
.
அகிலம்
========
வேக முடனொரு சந்தத்து ளாடியே
மேதினி யோர்க்குப காரங்கள் செய்யவே
ஆகாத்த பேர்களை அக்கினியில் தள்ளவும்
ஆகின்ற பேர்க்குப காரங்கள் செய்யவும்
தாகத்துக் கானதோர் தண்ணீர் கொடுத்துநீர்
சஞ்சல நோய்பிணி யஞ்சற்குத் தீர்க்கவும்
ஏகத்துட னாளும் நாரண வேந்தர்க்கு
எம்பி யெனவரும் தம்பிரா னானவா
பள்ளியுணராய்-சிவமருகா நீ
பள்ளியுணராய்
.
விளக்கம்
==========
மிகவும் வேகமாக ஓம் என்னும் சத்தத்தினுள் ஆடிக் கொண்டே இவ்வுலகோர்க்கு உதவிகள் செய்யவும், ஆகாத தீய எதிரிகளை அக்கினியில் தள்ளவும், நல்லவர்களுக்கு நன்மை செய்யவும், தாகத்திற்குரிய தண்ணீரினால் மனச் சஞ்சலம் முதலிய நோய்களையும் வேறு பிணிகளையும் அச்சமின்றித் தீர்க்கவும் நாரண வேந்தர்க்கு இன்று ஒரே குழந்தை என வந்து பிறந்த வைகுண்ட மூர்த்தியே நீ துயில் விட்டு எழுவாயாக. சிவனின் மருமகனே, நீ துயில் விட்டு எழுவாயாக.
.
.
அகிலம்
========
மூர்க்கன் கலியுக ராசனைத் தட்டியே
முடுமுடுக்கஞ் செய்த மூர்க்கரை வெட்டியே
ஆர்க்கமு டன்புவி யைம்பத்தாறு சீமையும்
அடக்கியொரு சொல்லுக் குடைக்குள்ளே யாளவும்
காக்காமகா தர்ம கற்பையுங் காக்கவே
கர்த்தனரி கிருஷ்ணர் புத்திர ராய்வரும்
தாக்கத் திறம்வளர் வைகுண்ட ராசரே
தர்மமதி லுறையும் பொறுமைக் குலதீரா
பள்ளியுணராய்-சிவமருகா நீ
பள்ளியுணராய்
.
விளக்கம்
==========
மூர்க்கனாகிய கலியுகக்க கலியரசனை அழித்தும் கொடுமை செய்யும் அரக்கர்களை வெட்டியும் ஆரவாரத்துடன் அன்பத்தாறு தேசங்களையும் அடக்கி ஒரு குடைக்குள் ஒரே சொல்லுக்குக் கீழ் அரசாளவும், கற்பைக் காத்தல் என்னும் மகாதருமத்தைச் செய்திடவும், தோன்றிய எல்லாவற்றுக்கும் கர்த்தனான அரிகிருஷ்ணருடைய புத்திரராகச் சக்தி பெற்ற உயர்வான வைகுண்டராசரே, தருமபதியில் வாழும் பொறுமைக் குலத்தின் தலைவனே வைகுண்டா, நீ துயில் விட்டு எழுவாயாக. சிவனின் மருமகனே, நீ துயில் எழுவாயாக.
.
.
அகிலம்
========
தம்பில மானகு றோணிகுண் டோமனைத்
தத்தியாத் தில்லைமல் லாலனைச் சூரனை
வம்பு இரணிய ராவண சூரனை
மகோதர னானது ரியோதனப் பாவியைக்
கொம்பிலுங் கெம்பிலும் அம்பினாற் கொன்றதோர்
கோபால கிருஷ்ண குழந்தைவை குண்டரே
நம்பின அன்பருக் குபகார சாலியே
நாரணா சீமைக் கரிவரி யானவா
பள்ளியுணராய்-சிவமருகா நீ
பள்ளியுணராய்
.
விளக்கம்
==========
தமது பலத்துக்குச் சமபலமான குறோணி, குண்டோமசாலியன் மிகுந்த சக்தியுடைய தில்லைமல்லாலன், சூரன், வம்பு பிடித்த இரணியன், இராவணன் என்னும் அரக்கன் மகோதரன் என்னும் பாவி துரியோதனன் ஆகியயோரைக் கொம்பினாலும், ஆரவாரத்துடன் எழும்பியும், அம்பினாலும், கொன்று அழித்த கோபாலகிருஷ்ணருடைய குழந்தையாகிய வைகுண்டரே, உன்னை நம்பினவருக்கு உதவியாக நிற்பவரே, நாராயணா, இவ்வுலகுக்குத் திருமாலின் துன்ப விதியைத் தீர்ப்பவனாக இருக்கின்றவனே, வைகுண்டா, நீ துயில் விட்டு எழுவாயாக. சிவனின் மருமகனே, நீ துயில் எழுவாயாக.
.
அகிலம்
========
பள்ளிதா னுணர்த்தத் தேவர் பரிவுடன் கேட்டு வைந்தர்
தெள்ளிவை குண்ட ராசர் சிந்தையி லன்பு கூர்ந்து
நள்ளிய தேவ ரார்க்கும் நயமுடன் தயவ மீந்து
துள்ளியே தகப்பன் பாதம் தொழுதவர் வணங்கிச் சொல்வார்
.
விளக்கம்
==========
இப்படியாகத் தேவர்கள் தம்மைத் துயில் எழச் செய்யப் பாடியதைக் கருணையுடன் கேட்டு வைகுண்டர் தம் மனதில் அவர்கள்பால் அன்பு கொண்டு துயில் விட்டு எழுந்து, அருகில் நின்ற தேவர்கள் எல்லார்க்கும் நல்ல பல ஆசிகளும் கொடுத்தார். பிறகு தமது தொட்டிலிலிருந்து துள்ளிக் குதித்தெழுந்து தமது தகப்பனாராகிய நாராயணரின் பாதங்களை வணங்கிச் சொல்லலுற்றார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 16.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
பொறுமைப் பெரியோனோ வைகுண்டனோ பெரிய பூமேடைக் கொலுவீரனோ
தரும வரம்புகள் தவறாமலே தரணி யரசாளும் வைகுண்டரோ
திராசு நிறையிலுந் துல்லியமாய்ச் செங்கோல் செலுத்தவே வந்தவரோ
மிராசு மூவர்க்கு முதன்மைதானோ மூலச் சிவமணி குருநாதனோ
.
விளக்கம்
==========
பொறுமையுடைய பெரியோனே இந்த வைகுண்டர். பெரிய பூமேடைகளில் கொலுவிருக்கும் வீரனாக தரும வரம்புகளுக்கு எந்தத் தவறும் வராவண்ணம் இவ்வுலகை அரசாளும் வைகுண்டர் இவர். தராசு நிறையைவிடத் துல்லியமாக நீதியைச் செலுத்தி உலகைப் பரிபாலிக்க வந்த வைகுண்டர் இவர். முதுமையான மூவருக்கும் முதல்வனாகவும், மூலக் சிவமணி குருநாதனாகவும் இருப்பவர் இந்த வைகுண்டர்.
.
.
அகிலம்
========
சான்றோர் கைகட்டிச் சரணங்கூறத் தரணி யொருகுடைக் காள்வானோ
ஆண்ட மணிநாதன் நாரணர்க்கு ஆன மதலையாய் வந்தவரோ
வைய மளந்ததோர் நாரணர்க்கு மதலை யெனவந்த வைகுண்டரோ
தர்மப் பதியாளும் வைகுண்டரோ சாணர்க் கனுகூல மானவரோ
.
விளக்கம்
==========
இந்த வைகுண்டர் சான்றோர்கள் கைகளைக் கட்டிக் கொண்டு சரண கோசம் கூறிடத் தருமயுகத்தை ஒரு குடையின் கீழ் ஆளுபவர். மணி நாதன் ஆகியா நாரணர்க்கு குழந்தையாக வந்தவரே இந்த வைகுண்டர். இவ்வுலகை அளந்த நாராயணருக்குக் குழந்தையாகப் பிறந்தவர். தருமபதியை ஆளுகின்ற சாணார்க்கு அணுகூலமானவர்.
.
.
அகிலம்
========
அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு அதிக விதிகொண்டுப் பிறந்தவரோ
சாணாக் குடிகுல நாயகமோ தர்மந் தழைக்கவே பிறந்தவரோ
தோணாத் துறைகொண்டு வந்தவரோ துவரா பதியாளப் பிறந்தவரோ
ஏழு யுகபரக் கணக்கையெல்லாம் எடுத்து நடுத்தீர்க்கப் பிறந்தவரோ
.
விளக்கம்
==========
அலைந்து அலைந்து துன்புற்ற சான்றோர்களின் துன்பத்தை மாற்ற முழு சக்தியும் கொண்டு பிறந்தவர் இவ்வைகுண்டர். வைகுண்டர் சாணார்க் குலத்தின் நாயகன். தருமம் செழித்துக் தழைக்க பிறந்தவர். இவர் தோணாத பொருளைத் தொடர்ந்து கண்டு அந்த வழியைச் சான்றோர்கள் காணும் வகையில் கொண்டு வந்தவர். துவாராபதி ஆளப் பிறந்தவர். ஏழு யுகக் கணக்குகளையும் சேர்த்தெடுத்து நடுத்தீர்ப்புக் கேட்கப் பிறந்தவர்.
.
.
அகிலம்
========
ஆளும் வைகுண்டப் பதியாளவே அரிய வைகுண்டம் பிறந்தவரோ
வீர வீராதி வீரன்தானோ வீர சூரனா ரீன்றகண்ணோ
சூர சூராதி சூரன்தானோ சூர சூரனார் பெற்றகண்ணோ
நாத நாரணர் பெற்றகண்ணோ நாக மணிநாதன் பெற்றகண்ணோ
.
விளக்கம்
==========
தருமபூமி ஆகிய வைகுண்டபதியை ஆட்சி புரிய இந்த அருமை பொருந்திய வைகுண்டர் பிறந்தவர். இந்த வைகுண்ட குழந்தை வீராதி வீரன்தான். வீரசூரரான திருமால் பெற்ற கண் போன்றவன் தான். சூராதி சூரணானவன் தான் நாதத்திலிருந்து தோன்றிய நாராயணர். இது நாகமணிநாதன் பெற்ற குழந்தை.
.
.
அகிலம்
========
சீதக் குணநாதன் பெற்றகண்ணோ சீதை மணவாளன் பெற்றகண்ணோ
மேக நிறத்தண்ண லீன்றகண்ணோ மேலோர் போற்றும்வை குண்டக்கண்ணோ
ஏகச் சிவநாதன் பெற்றகண்ணோ இறவா திருமூர்த்தி பெற்றகண்ணோ
.
விளக்கம்
==========
செம்மையான உயர்ந்த குணங்களை உடைய நாராயணர் பெற்ற குழந்தை இவர். சீதையின் கணவன் பெற்ற குழந்தை இவர். மேகத்தின் நிறத்தினை உடையவர் பெற்ற குழந்தை இவர். மேலோர் அனைவரும் போற்றும் வகையில் பிறந்த வைகுண்டர் இவர். எங்கும் பரந்து இறவாத திருமூர்த்தியான சிவனுடைய மைத்துனர் பெற்ற குழந்தை இவர் ஆவார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 15.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
மகரச் சீதையாள் வயிற்றுலுற்ற வளர்ந்த வைகுண்ட மாமணியோ
அகரச் சிவகோபுர மழகுபதி அதிகப் பதிகெண்டு வந்தவரோ
தங்கக் கோபுரம் தளிர்மரமும் சதுர மேடைகள் கண்டவரோ
சங்க மகிழவே வந்தவரோ சகல கலைதமி ழாய்ந்தவரோ
.
விளக்கம்
==========
மகர இலட்சுமியின் வயிற்றில் குழந்தையாக உருவாகி வளர்ந்து வைகுண்ட மாமணியாக மாறப் போகிறவர் இவர்தாம். அகரமாகிய சிவகோபுர அழகுபதியாகிய அதிக பதிகள் கண்டு வந்தவர் இந்த வைகுண்டர் ஆவார். தங்கக் கோபுரமும் தளிர் மரமும் சதா மேடைகளும் கண்டு சங்கக் கூட்டம் மகிழ சகல கலைத் தமிழும் ஆயந்தவராய் வந்த வைகுண்டர் இவர்.
.
.
அகிலம்
========
உலகம் பதினாலு மொருகுடைக்குள் ஒருசொல் மொழிக்காள வந்தவரோ
இலகு பிரகாச சுவடுகொண்டு இலங்கும் பதியாளப் பிறந்தவரோ
வம்புக் கலியுகக் குலமறுத்து வைந்தப் பதியாள வந்தவரோ
அம்புக் கணையொன்று மில்லாமலே அறுக்க வந்தாரோ கலிதனையும்
.
விளக்கம்
==========
உலகம் பதினாலும் ஒரு குடைக்குள் ஒரு சொல்லுக்குளக் கீழ் ஆள வந்த வைகுணடர் இவரே. பிரகாசமாகத் தோன்றி எல்லாம் அமையப் பெற்று விளங்கும் தருமபதி ஆளப் பிறந்த இவர் வம்பான கலியுகக் குலத்தை அம்பு கணை ஒன்றும் இல்லாமல் அழித்துத் தருமபதி ஆள வந்தவர் இவர் ஆவார்.
.
.
அகிலம்
========
கூடப் படைகள்துணை யில்லாமல் குறும்பை யடக்கவே வந்தவரோ
சாடத் தலையாரி யொன்றில்லாமல் சதைக்க வந்தாரோ கலியுகத்தை
வாளு மாயுத மெடுக்காமலே வதைக்க வந்தாரோ கலியுகத்தைக்
கோளு பேய்களைக் கிரகங்களைக் கொல்ல வரம்பெற்ற வைகுண்டரோ
.
விளக்கம்
==========
இந்த வைகுண்டர் எந்தவிதப் படையும் இல்லாது கலியின் குறும்புத் தன்மையை அடக்க வந்தவர். இவர் தம்மோடு போரிடத் தலையாரி முதலிய எந்தவித ஆயுதமும் இல்லாமல் கலியுகத்தை அழிக்க வந்தவர். இவர் கோள் மூட்டும் பேய்களையும் கிரகங்களின் சக்தியையும் அழிக்க வரம் பெற்று வந்தவர்.
.
.
அகிலம்
========
சாணாக் குருநாத வைகுண்டரோ சாதி தற்காக்குந் தலையாரியோ
காணாக் கருவான கருமூலமோ கர்த்தன் கர்த்தாதிக் கடவுள்தானோ
நீசக் குலங்களைக் கருவறுக்க நெடிய நாரணர் பெற்றகன்றோ
தோசப் புழுச்சாதி குலமறுக்கத் திருமால் நாரணர் பெற்றகன்றோ
.
விளக்கம்
==========
சாணார் இனத்தின் குரு நாதனாகியவர் இந்த வைகுண்டர். இவர் சாணார்ச் சாதிக்குத் தற்காப்புச் செய்யும் சக்தியை அளித்த ஒப்பில்லாத தலைவர். சாணார்களுக்குக் கருவானக் குருமூலம். கர்த்தன், கர்த்தாதி கர்த்தனாகிய கடவுள் நீசக் குலங்களைக் கருவறுக்க வேண்டி நெடிய நாரணர் பெற்றெடுத்த குழந்தை இந்த வைகுண்டர். தோசம் பொருந்திய புழுச் சாதிகளாகிய கலிச் சாதியைக் கூண்டோடு அழிக்கத் திருமால் பெற்றெடுத்த குழந்தை இந்த வைகுண்டர்.
.
.
அகிலம்
========
சீமை மைம்பத்தாறு தேசமெல்லாம் சொல்லொன் றுள்ளாள வந்தவரோ
நாமம் பெரியதோர் வைகுண்டரின் நாமம் பெறவோங்க வந்தவரோ
தெய்வப் பாலர்கள் சிறந்துபோற்றச் சீமை யரசாள வந்தவரோ
மெய்வ ரம்பதின் முறைநடத்தி மேன்மைச் செங்கோல் முடிதரித்து
.
விளக்கம்
==========
இந்த வைகுண்டர் ஐம்பத்தாறு தேசங்கள் எல்லாம் தமது சொல் ஒன்றின் கீழ் ஆள வந்தவர். வைகுண்டரின் நாமம் உயர்வு பொருந்திய சிறந்த நாமம். இவர் அதைப் பெற்று மக்களுக்கு உயர்வு செய்ய வந்தவர். தெய்வப் பாலர்களாகிய சான்றோர்கள் சிறப்பாகப் போற்றத் தருமபூமியை அரசாள வந்தவர். இவர் உண்மையான கட்டுப்பாடுகளை முறையாக நடத்தி மேன்மை பொருந்திய செங்கோல் முடி தரித்துத் தருமயுகம் ஆள வந்தவர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 14.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
தாலாட்டு
==========
தார தரதர தாராரோ தார தரதர தாராரோ
நாராயணர் தானோ தாராரோ நல்ல நாராயண வைகுண்டமோ
காரணர் தானோ வைகுண்டமோ கயிலாச நாதக் கண்மணியோ
செல்வ முதலான சீமானோ சிவசிவ சிவ சிவமுதலோ
அல்ல லகற்றியே அரசாளும் அரியோன் மிகப்பெற்ற அரிதானோ
.
விளக்கம்
==========
சரசுபதி, கண்மணி போன்ற வைகுண்டராசரை அறி துயில் கொள்ளத் தாலாட்டு பாடினாள் - வைகுண்டரை தாலாட்டுப் பாடிப் பள்ளி கொள்ளச் செய்தல்:
=======================================================
வைகுண்டராகிய நாராயணர் நல்ல தன்மையான நாராயணர் ஆவார். அவர் எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா, தருமபதியாள்வார். கயிலாச நாதனின் கண்மணி போன்றவர். செல்வத்துக்கெல்லாம் முதலான சீமான் ஆவார். சிவமும் சிவமாகிய முதல் பொருளும் இவர் ஆவார். இவ்வுலகின் யுகத் துன்பங்களை அகற்றி அரசாட்சி புரிந்து வரும் திருமால் பெற்ற அரியேதான் இவ்வைகுண்டர்.
.
.
அகிலம்
========
தெய்வப் பெருமாள்தான் பெற்றகன்றோ சீதை மாதுதான் பெற்றகன்றோ
மெய்ய னரிநாதன் பெற்றகன்றோ விஷ்ணு மகாபரன் பெற்றகன்றோ
ஈசர் மைத்துனர் பெற்றகன்றோ இறவா திருமாது பெற்றகன்றோ
மாயத் திருவுளம் பெற்றகன்றோ மான வைகுண்ட ராசக்கன்றோ
.
விளக்கம்
==========
தெய்வபெருமாள் ஆகிய திருமாலும் அழகான இலட்சுமிதேவியும் இணைந்து பெற்ற உயிர்தான் இவ்வைகுண்டர். மெய்ப்பொருளான அரிநாதனும் விஷ்ணு மகாபரனுமாகிய நாராயணர் பெற்ற உயிர்தான் இந்த வைகுண்டர். ஈசரின் மைத்துனராகிய திருமாலும், இறவாத்தன்மையுள்ள இலட்சுமியும் பெற்றெடுத்த உயிரே இந்த வைகுண்டர். மாயத்தன்மையுள்ள திருமால் பெற்றெடுத்த மானமுள்ள வைகுண்டராசனாகிய குழந்தை இவ்வைகுண்டர்.
.
.
அகிலம்
========
வேதக் குருநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ
சீதக் குருதாயா ரீன்றகன்றோ தெய்வ வைகுண்ட ராசக்கன்றோ
கிருஷ்ண மகாநாதன் பெற்றகன்றோ கிருபைக் குருநாதக் கண்மணியோ
விஷ்ணு மகாநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ
.
விளக்கம்
==========
வேதங்களில் நிறைந்துள்ள திருமாலும் வீரமுள்ள இலட்சுமியும் இணைந்து பெற்ற குழந்தை இது. சீதக்குருவுக்கும் தாயாரான இலட்சுமி பெற்ற குழந்தை இது. அழகுபொருந்திய வைகுண்டராசராகும் குழந்தை இது. அன்பு குழந்தை இது. விஷ்ணு மகாநாதன் பெற்ற குழந்தை இது. வீர இலட்சுமி பெற்ற குழந்தை இந்த வைகுண்டர் ஆவார்.
.
.
அகிலம்
========
நாட்டுக் குடையதோர் நாரணரின் நல்ல பாலனோ வைகுண்டனோ
ஏட்டு முதலானோ தாராரோ ராச வைகுண்ட ராசர்தானோ
மூலச் சிவநாதன் பெற்றகன்றோ உலகை யொருகுடைக் காள்வானோ
நாலு வேதமும் தாண்டிமுறை நடத்தி யொருகுடைக் காள்வானோ
ஒருமை மனத்துடை யுத்தமர்க்கு உற்ற பதவிகள் கொடுப்பவனோ
தருமத் திறவானோ தாராரோ தங்க வைகுண்டத் தாட்டீகனோ
.
விளக்கம்
==========
நாட்டுக்குடைய சிறப்புப் பொருந்திய நாராயணரின் நல்ல பாலன் இந்த வைகுண்டர். மூலச் சிவனுடைய மைத்துனர் பெற்ற குழந்தை இவ்வைகுண்டர். இவர் உலகை ஒரு குடைக்குள் ஆளுவார். நான்கு வேதங்களும் தாண்டி எல்லா முறைகளும் நடத்தி ஒரு குடைக்குள் ஆட்சி புரியக் கூடிய வைகுண்டர் இவர். மனதை ஒருநிலையாக கொண்டு உள்ள உத்தமருக்கு உற்ற பதவிகளைக் கொடுப்பவர் இவர். தருமத்தை ஆளும் திறமை மிக்கவர் இந்த வைகுண்டர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 13.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
அய்யாநா ராயணரும் ஆதிவை குண்டமென
மெய்யா யுரைத்து விளங்கவே வாழ்த்தலுற்றார்
.
விளக்கம்
==========
உடனே, உயர்வு பொருந்திய வேதம் அறிந்தோர்கள் வைகுண்டரை நோக்கி வாழ்த்துக்கள் கூறத் தொடங்கினர்.
.
.
அகிலம்
========
மகனே வுன்தேகமதில் வைத்த நிறங்களெல்லாம்
உகமழியு முன்னே ஒருவர்கண் காணாதென
அகமே வைத்து அகமகிழு என்மகனே
வைகுண்ட மென்றுமிக வாழ்த்தக் குருநாதன்
மெய்குண்டத் தோர்கள் மேலோர்கள் வாழ்த்தலுற்றார்
.
விளக்கம்
==========
அய்யா நாராயணரும், ஆதி வைகுண்டம் என உண்மையுடன் எல்லாருக்கும் புரியும்படி வாழ்த்தலுற்றார். மகனே, உன் தேகத்தில் நான் உருவாக்கியுள்ள சிறப்பான குண நலன்கள் எல்லாம் இந்த கலியுகம் அழிவதற்கு முன்பு ஒருவர்கூட கண்ணால் காண முடியாது என்பதைத் தெரிந்து உன் மனதில் மனமகிழ்ச்சியுடன் வாழ்வாயாக. நீ வைகுணடம் எனப் பெயர் பெறுவாயாக என்று வாழ்த்தினார். பிறகு ஈசர் தேவலோகத்தோர் இதர மேலோகத்தவர்கள் எல்லாரும் வைகுண்டரை வாழ்த்த ஆரம்பித்தனர்.
.
.
அகிலம்
========
மகரவுந்தி விட்டு வைகுண்டந் தான்பிறந்து
சிகரமுனி தேவருட சிறப்பதிலே வந்தவுடன்
தேவர் திருவானோர் சென்றெடுத்து வைகுண்டரை
மூவர்தே வர்மகிழ்ந்து முதலோனைக் கைகுவித்து
ஏந்தி யெடுத்து இளந்தொட்டில் மீதில்வைத்துச்
சாந்தி கழித்துத் தவலோகச் சட்டையிட்டுச்
சீதை மயக்கமெல்லாம் தீர்ந்திடவே சாபமிட்டு
.
விளக்கம்
==========
மகர இலட்சுமியின் வயிற்றிலிருந்து வைகுண்டர் பிறந்து சிகர முனியுடனும், தேவர்களுடனும் சிறப்பாக வெளியே வந்தார். உடனே, தேவர்களும் மேன்மையான வானோர்களும் வைகுண்டரைச் சென்று எடுத்தனர்.
மூவர்களும் தேவர்களும் மகிழ்ச்சியுற்று முதலோனாகிய வைகுண்டரைக் கைக்குவித்து கும்பிட்டுக் கையினால் ஏந்தி கழித்து தவலோகத்தினருக்குரிய சட்டை இட்டு வைகுண்டரைப் பெற்றெடுத்த இலட்சுமியின் மயக்கம் எல்லாம் தீர்த்திட வேண்டிய உத்தரவுகள் பிறப்பித்தனர்.
.
.
அகிலம்
========
வீரரையும் வந்து வீரலட்சு மியெடுத்து
மடிமீதில் வைத்து மாதுசர சோதியுடன்
குடியான பேரும் கொண்டங் ககமகிழ்ந்து
பொன்தொட்டி லிட்டுப் பொற்சீதை தாலாட்ட
பைங்கொடி யாள்சரசு பதிமாது தாலாட்டத்
தேவரிஷி வானோர் தேவரம்பை மாதரெல்லாம்
சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுப் பின்பாட
ஈசர்முதல் சங்கம் எண்ணி மனமகிழச்
சார்சர சுபதியாள் தாலாட்ட வேதுணிந்தாள்
.
விளக்கம்
==========
பிறகு வைகுண்ட வீரரை வீர இலட்சுமி அன்போடு எடுத்துத் தனது மடி மீது வைத்து சரசுவதியிடமும் அவளோடு குடி கொண்டிருக்கும் பிரம்மனிடமும், பேசி மனம் மகிழ்ந்து வைகுண்டரைப் பொன் தொட்டிலில் இட்டுத் தாலாட்டினாள்.
அடுத்து பசுமையான கொடியிடையாள் சரசுவதி தாலாட்டுவதற்காகத் தேவரிஷி வானோர், தேவரம்பை, மாதர்கள் ஏனைய சீவசெந்துகள் எல்லாரும் சிறப்பான பாடலைப் பின் பாடலாகப் பாடினர். ஈசர் முதல் ஏனைய கூட்டத்தினர் கண்டு மனம் மகிழ்ந்தனர். சரசுபதி வைகுண்டரைத் தாலாட்டினாள்.
.
.
அகிலம்
========
பொன்மணிப் பதியி னுள்ளே புனலரி கிருஷ்ணர் பெற்ற
தண்மணிப் பாலன் தன்னைத் தங்கமாந் தொட்டி லிட்டு
மின்மணி கொடிசேர் கன்னி விளங்கிய சோதி மாது
கண்மணி வைந்த ராசர் காணத்தா லாட்டி னாளே
.
விளக்கம்
==========
பொன்னாலும் மணிகளினாலும் அமைக்கப்பட்ட பதியினுள்ளே, ஞான மயமாகிய அரிகிருஷ்ணர் பெற்ற குளிர்ச்சி பொருந்திய மணியைச் சூடிய குழந்தை வைகுண்டரைத் தங்கத் தொட்டிலில் கிடத்தி, மின்னல் போன்று பிரகாசிக்கின்ற மணிகள் கோத்த கொடியை அணிந்த கன்னித்தன்மை விளங்கும் சோதியாகிய சரசுபதி, கண்மணி போன்ற வைகுண்டராசரை அறி துயில் கொள்ளத் தாலாட்டு பாடினாள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 12.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
அதன்மேல் மகனே யானுனக்குச் சொல்வதுகேள்
இதின்மே லுனக்கு ஏகவியா ழம்வரும்
சந்தோச மாகுதுகாண் உனைச்சார்ந்த அன்போர்க்கு
எந்துயர மெல்லாம் ஏகுதுகா ணென்மகனே
அதுவரையும் நீதான் அன்பா யிருமகனே
.
விளக்கம்
==========
இவற்றுக்கெல்லாம் மேலாக இன்னும் உனக்கு ஓர் உபதேசம் கூறுகிறேன். கேட்பாயாக. இங்கிருந்து நீ போன பிறகு நல்ல காலம் உனக்கு வரும். உன்னைச் சார்ந்திருக்கும் அன்பர்களுக்கும் சந்தோசமான காலம் வரும். காண்பாயாக. என் துயரங்கள் எல்லாம் இன்னும் சிறிது காலத்தில் உன் மூலம் நீங்கப்போகிறது. அதுவரையும் நீ எல்லாரிடமும் அன்பாக இருப்பாயாக.
.
.
அகிலம்
========
எதுவந் தாகிடினும் எண்ணம்வையா தேமகனே
சுறுக்கிட்டு யானும் ஒவ்வொன்றாய்த் தோன்றவைப்பேன்
.
விளக்கம்
==========
தீமை வந்தாலும் சரி, அந்தத் தீயதில் உன் சிந்தனையைச் செலுத்தாதே. நான் சீக்கிரமாக இவற்றை ஒவ்வொன்றாய் உண்டாக்குவேன்.
.
.
அகிலம்
========
இறுக்கும் இறைகளெல்லாம் இல்லையென்று சொல்லிடுநீ
வேண்டா மிறைகள் வேண்டாமென்று சொல்லிடுநீ
ஆண்டார் மகனே அதிகத் திருமகனே
நல்ல மகனே நான்வைத்த விஞ்சையெல்லாம்
செல்ல மகனேவுன் சிந்தையிலே பற்றினதோ
.
விளக்கம்
==========
மகனே மக்களைத் தொல்லைப்படுத்திப் பூஜை கேட்பதாகக் கூறப்படும் தெய்வங்கள் இவ்வுலகில் இல்லை என்று கூறிவிடு. அத்தகைய தெய்வங்கள் இவ்வுலகுக்குத் தேவை இல்லை என்றும் மக்களிடம் கூறி விடு. செல்ல மகனே, நான் கூறி உபதேசம் எல்லாம் உன் மனதில் பதிந்து உள்ளனவா?
.
.
அகிலம்
========
போதுமோ விஞ்சை புகலணுமோ என்மகனே
சாருமொரு விஞ்சை தான்சொல்வேன் கேள்மகனே
முவ்விஞ்சை வைத்தேன் உலகமறி யாதவிஞ்சை
இவ்விஞ்சை மாத்திரமே இனம்பிரித்துச் சொல்லாதே
பெற்றோர்கள் கண்டுகொள்வார் பேசரிய என்மகனே
கற்றோர்கள் கண்டுகொள்வார் கண்ணே திருமகனே
.
விளக்கம்
==========
கண்ணே, திருமகனே நான் கூறியுள்ள உபதேசங்களில் உலக மக்கள் எளிதில் அறிய முடியாத மூன்று இரகசிய உபதேசங்களை உனக்குத் தந்துள்ளேன். அவற்றைத் தெளிவாக இனம் பிரித்து கூறினாலும் இந்தக் கடைசி உபதேசத்தை மட்டும் தனியாகப் பிரித்து விளக்கிச் சொல்லிவிடாதே. இதன் உன்மையை அனுபவம் மூலம் அடைந்தவர்களும் உண்மை அறிவோடு கற்றவர்களும் அறிந்து கொள்வர்.
.
.
அகிலம்
========
கண்ணே மகனே திருமகனே கமலப் பூமா கரிமகனே
எண்ணே யெழுத்தே என்மகனே இறையோர் தொழவே வருமகனே
ஒண்ணே மகனே உயர்மகனே உடைய மகனே கண்மணியே
தண்ணே மகனே தவமகனே சாகா திருக்குஞ் சலமகனே
.
விளக்கம்
==========
திருமால் வைகுண்டரை நோக்கி, கண்ணே, என் மகனே, தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் இலட்சுமிதேவியின் கரிய மகனே, எண்களுக்கும் எழுத்துக்களுக்கும் மூலமாய் இருப்பவனே, இறையோரும் தொழும்படியாக வருகின்ற மகனே, கலியுகத்தில் என் ஏகப்புதல்வனே, உயர்வான மகனே, எல்லாமுடைய மகனே, கண்மணியே, குளிர்ச்சி பொருந்திய தவத்தினால் வந்த மகனே, சாகாது நிலைத்திருக்கும் கடலில் பெற்ற மகனே.
.
.
அகிலம்
========
மகனே தவமே மரகதமே மாதவம் பெரிய மலரோனே
தவமே யுனதுள் வைத்தவிஞ்சை தானே போது மோமகனே
எகமேழ் மகிழ வந்தவனே என்றன் மகனே வளர்வையென
உகமே ழளந்தோ ருரைத்திடவே உயர்ந்த மறையோர் வாழ்த்தினரே
.
விளக்கம்
==========
தவப்பொருளே, மரகதமே, மாதவம் புரிந்து சகஸ்ரார மலரை அடைந்தவனே, உன் மனதுக்கு ஏற்கும்படி சொல்லிய உபதேசங்கள் போதுமானதாக இருக்கிறதா? இல்லையெனில் இன்னும் தேவை உண்டா? இவ்வுலகு மகிழும்படி இங்கு வந்து தோன்றியவனே, என்னுடைய மகனே, நீ நல்ல முறையில் வாழ்ந்து வளர்ந்து வருவாயாக என்றுரைத்தார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 11.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
காட்டுவிக்குஞ் சொரூபம் கண்டிரு என்மகனே
ஆட்டுவிப்பேன் நால்வேதம் அதிலும்நான் மாயமிட்டு
துலுக்கன்வீ டானதிலும் சூதாட்டுப் பார்த்திடுவேன்
கிலுக்கமொன்று செய்வேன் கீழுமேலும் நடுவும்
பதறித் தெளியும் பார்த்திரு என்மகனே
.
விளக்கம்
==========
நான் காட்டும் சொரூபத்தை நீ கண்டு மகிழ்ச்சியோடு இரு. நான்கு வேதங்களைக் கற்ற பிராமணர்களின் இல்லங்களில் உள்ளவர்களையும் துலுக்கனுடைய வீடாக இருந்தாலும் அவர்களையும் ஆட்டுவித்து அவர்களுடைய சூதான வார்த்தைகளை வெளிப்படுத்துவேன். என் மகனே, அடுத்ததாக இவ்வுலகம் முழுவதும் அதிர்ச்சியடையும் செயல் ஒன்றைச் செய்யப் போகின்றேன். அதனால் மக்கள் பதறித் தெளிவு அடையர். இதைப் பார்த்து இருப்பாயாக.
.
.
அகிலம்
========
நீபெரிது நான்பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று
வான்பெரி தறியாமல் மாள்வார்வீண் வேதமுள்ளோர்
.
விளக்கம்
==========
வீணான வேத சாத்திரம் கொண்டவர்கள் இறைவன் எங்கும் நிறைந்தவன் என்று அறிய முடியாமல் நான் பெரியவனா? இல்லை நீ பெரியவனா? என்று முடிவு எடுத்து விடுவோம் என்று கூறித் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள்.
.
.
அகிலம்
========
ஒருவேதந் தொப்பி உலகமெல்லாம் போடுஎன்பான்
மறுத்தொருவே தஞ்சிலுவை வையமெல்லாம் போடுஎன்பான்
அத்தறுதி வேதம் அவன்சவுக்கம் போடுஎன்பான்
.
விளக்கம்
==========
அவர்களுக்குள் ஒரு பிரிவினர் தம்முடைய தொப்பியை உலக மக்கள் எல்லாம் அணியுங்கள் என்பர். இன்னும் ஒரு பிரிவினர் சிலுவையை இந்த உலக மக்கள் எல்லாரும் அணியுங்கள் என்பர். அது மட்டுமல்லாம் அழிவு நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் அவர்கள் தமது லோவாவையும் அணியச் சொல்லுவர்.
.
.
அகிலம்
========
குற்ற முரைப்பான் கொடுவேதக் காரனவன்
ஒருவர்க் கொருவர் உனக்கெனக் கென்றேதான்
உறுதி யழிந்து ஒன்றிலுங்கை காணாமல்
குறுகி வழிமுட்டி குறைநோவு கொண்டுடைந்து
மறுகித் தவித்து மாள்வார் சிலபேர்கள்
ஓடுவார் சிபேர் ஒழிவார் சிலபேர்கள்
கேடு வருமே கேள்விகேளாப் பேருக்கெல்லாம்
.
விளக்கம்
==========
கொடிய வேதக்காரனை அவன் பிறரைக் குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பான். அந்த இரு வேதங்களை உடையவர்களும் மக்களை மதம் மாற்ற உனக்கு எனக்கு என்று போட்டியிடுவர்.
இவ்வாறு சிலர் மதம் மாற்ற போட்டியிட்டு முடியாமையால் உறுதி அழிந்து ஒரு வகையிலும் பலன் காணாமல் அவர்களுடைய வயிறு பிழைக்கும் வழிகள் எல்லாம் குறுகிக் கடைசியில் நோய்கள் கண்டு துன்புற்று மனம் நொந்து தவிப்படைந்து அழிவர். சிலர் ஓடிடுவர். சிலர் ஒளிந்து கொள்வர். ஏன்? எதற்கு? போன்ற கேள்விகள் எல்லாம் கேட்டு விளக்கம் தெரிந்து கொள்ளாதவர்கள் எல்லாரும் கேடு வந்து அழிவர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 10.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
அல்லாமற் கேளு அரிநாரணா என்மகனே
நல்லோராய்ப் பெண்கள் நாடியெண்ணக் கூடாது
வல்லோராய் நந்தன் வம்மிசத்தில் வந்திருந்தார்
அப்பெண்ணார்க் கெல்லாம் அதிகப்பலன் தாறோமென்றேன்
.
விளக்கம்
==========
அது மட்டுமல்லாமல் அரி நாராயணனே என் மகனே, யாராலும் விரும்பி அடைய முடியாத அளவு கற்பு வல்லமையுள்ள சில பெண்டிர் நான் நந்தன் வம்சத்தில் வல்லவனான கண்ணனாக தோன்றியபோது என்னை விரும்பினர். அவர்களுக்கு இந்த யுகத்தில் அதிக வாழ்வு தருவதாக வாக்குறுதி சொன்னேன்.
.
.
அகிலம்
========
இப்பெண்ணார் சிலர்கள் இன்னமங்கே தோன்றிவந்தால்
ஆனதால் பெண்ணார்க்கு அழகுகொடு என்மகனே
.
விளக்கம்
==========
அந்தப் பெண்கள் இங்குப் பிறந்து உன்னை நாடினால் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி வாழ்வு கொடு.
.
.
அகிலம்
========
நின்ற தவசு நிறைவேறி னால்மகனே
ஒண்டொடியார் சிலரை உன்பாரி தானாக்கி
நன்மைகொடு என்மகனே நாரணா நாடாள்வாய்
உன்னை நினைத்தோர்க்கு உதவிகொடு என்மகனே
கட்டை விடாதே கருத்துள்ள என்மகனே
.
விளக்கம்
==========
உன்னுடைய தவசு நிறைவேறினால் பிரகாசமான வளையல் அணிந்த கன்னிப் பெண்கள் சிலரை உன் மனைவியாக்கி அவர்களுக்கு வேண்டிய நன்மைகளையும் செய்து கொடு என் மகனே. நீ நாடாளப் போகின்றாய். உன்னை எப்பொழுதும் நினைப்பவருக்கு எல்லா உதவிகளும் செய்து கொடு என்மகனே. ஆனால் உன் கட்டுப்பாடான வாழ்வை மட்டும் விட்டுவிடாதே.
.
.
அகிலம்
========
சட்ட மறவாதே சாஸ்திரத்துக் குற்றவனே
பெண்பாவம் பாராதே பேணியிரு என்மகனே
கண்பாரு கண்மணியே கன்னி கணவருக்கு
இன்னமொரு சூத்திரம் இயம்புகிறே னென்மகனே
.
விளக்கம்
==========
வைகுண்டா நான் கூறிய உபதேச சட்டத்தை மறந்துவிடாதே. ஆனாலும் நான் கூறிய பெண்களை ஏற்றுக் கொள்வது பாவம் என்று ஒதுக்கித் தள்ளி விடாதே. அவர்களையும் பேணிப் பாதுகாத்து அவர்கள் விருப்பியதைச் செய்து கொடு. என் கண்மணியே கன்னிகளுக்குக் கணவனாகப் போகும் வைகுண்டா நான் உனக்கு இன்னும் ஓர் இரகசிய உபதேசம் கூறுகிறேன். என் கண்களை நோக்கிக் கவனமாகக் கேட்பாயாக.
.
.
அகிலம்
========
துன்ன மறியத் தோற்றுவிப்பேன் சாதிதோறும்
அன்புவன்பு பார்க்க ஆரா ரிடத்திலும்போய்
உன்புதுமை சொல்லி உடலை மிகஆட்டி
சாதிசா திதோறும் சக்கிலி புலச்சிவரை
ஆதிச்சா திமுதலாய் ஆராதனை காட்டுவிப்பேன்
.
விளக்கம்
==========
சக்கிலியன் வரை உன்னை அறியும்படி மேலோனாக உன்னை தோற்றுவிப்பேன். உன்னிடத்தில் யார் அன்பு வைத்திருக்கிறார்? யார் பகைமை கொண்டுள்ளார்? என்று அறிய சான்றோர் சாதி முதல் சக்கிலிச்சி புலச்சி வரை எல்லா சாதிகளிலும் உள்ளவர்களின் .
.
.
தொடரும்... அய்யா உண்டு.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
ஒருவருந் தாங்கரிது உன்கை குவித்தாக்கால்
குருதெய்வம் நீயே கோவே குலக்கொழுந்தே
இன்ன முனக்கு இயம்புகிற விஞ்சையதும்
பொன்னம் மகனே பூராய மாய்க்கேளு
.
விளக்கம்
==========
நீ கைக்குவித்துக் கும்பிட்டால் ஒருவராலும் பொறுக்க முடியாது. குரு தெய்வம் எல்லாம் நீயே. அரசே, என் குலக்கொழுந்தே, என் மகனே, இன்னும் சில உபதேசங்கள் கூறுகிறேன் முழுவதுமாகக் கேள்.
.
.
அகிலம்
========
சாதி பதினெட்டும் தலையாட்டிப் பேய்களையும்
வாரி மலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு
வரத்தை மிகவேண்டி வைத்துக்கொள் ளென்மகனே
.
விளக்கம்
==========
பதினெட்டுச் சாதிகளின் பெயர்களையும் தலையாட்டும் பேய்களையும், அள்ளியெடுத்து மலைகளிலும் தீயிலும் தள்ளி அழித்துவிடு. அவற்றின் வரங்களையும் சக்தியையும் வாங்கி வைத்துக்கொண்டு அவற்றை அழித்து விடு.
.
.
அகிலம்
========
சரத்தை மிகவாங்கித் தானனுப்புப் பேய்களையும்
உட்கோள் கிரகம் உறவுகெட்ட பேர்முதலாய்க்
கட்கோள் கருவைக் காணாதே சாபமிடு
செல்வம் பொருந்திச் சிறந்திரு என்மகனே
.
விளக்கம்
==========
என்மகனே, உபக்கிரகங்களையும், கிரகங்களையும் அவற்றிற்குத் தொடர்பில்லாத பெயர்களையும், கிரகநிலை கண்டு உருவாக்கும் மந்திரப் பொருள்களையும் காணாது ஒதுங்கிவிடச் சாபம் கொடு. மகனே, நீ சகல விதமான செல்வங்களையும் பெற்று சிறந்து வாழ்வாயாக.
.
.
அகிலம்
========
கொல்லென்ற பேச்சுக் கூறாதே என்மகனே
ஒவ்வொன்றைப் பார்த்து ஊனு ஒருசாபம்
செவ்வென்ற பேச்சுச் செப்பியிரு என்மகனே
உரைத்த விஞ்சையெல்லாம் உனக்குப்போது மோமகனே
.
விளக்கம்
==========
கொல் என்னும் சொல்லைப் பயன்படுத்தாதே மகனே. கொல்லப்படுகின்ற உயிர்கள் கொல்லப்படாதிருக்க அல்லது பலியிடப் படாதிருக்க ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சாபம் கொடுத்து நீக்கிவிடு. தூய்மையான பேச்சையே நீ பேசிக் கொண்டு வாழ்ந்து வா. இதுவரை நான் உனக்குக் கூறிய உபதேசங்கள் போதுமா மகனே.
.
.
அகிலம்
========
விரைத்தமுள்ள வைகுண்டா விற்பனவா நீகேளு
நீபோ யிருக்கும் இடங்களில் என்மகனே
அன்பான பஞ்சவர்கள் அங்கேவுண் டென்மகனே
முன்னே பிறந்த உகத்துக் குகங்களெல்லாம்
என்னைவிட் டகலாது இருந்தார்கள் பஞ்சவர்கள்
ஆனதா லிப்போது யானும்நீ யானதினால்
மானமுள்ள பஞ்சவரை மகனேமுன் விட்டுக்கொள்ளு
.
விளக்கம்
==========
இன்னும் தேவையானால் நல்ல மக்களை உருவாக்கப் போகின்ற வைகுண்டா கேட்பாயாக.
என் மகனே, நீ போயிருக்கும் எல்லா இடங்களிலும் அன்பு பூண்ட பஞ்சபாண்டவர் துணை இருப்பர். முன்பு நான் பிறந்த எல்லா யுகங்களிலும் என்னைவிட்டு அகலாது என்னுடன் வாழ்ந்தவர்கள் அந்த பஞ்சவர்கள். வைகுண்டராகிய இந்தப் பிறவியிலும் நான் நீயாக இருப்பதால் அந்த மானமுள்ள பஞ்சவர்களை உனக்குப் பாதுகாப்பாக உன் முன்பாக நிறுத்திக் கொள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩











