
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
httpsm.facebook.comd.muthuprakashref=bookmark
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 10.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
அல்லாமற் கேளு அரிநாரணா என்மகனே
நல்லோராய்ப் பெண்கள் நாடியெண்ணக் கூடாது
வல்லோராய் நந்தன் வம்மிசத்தில் வந்திருந்தார்
அப்பெண்ணார்க் கெல்லாம் அதிகப்பலன் தாறோமென்றேன்
.
விளக்கம்
==========
அது மட்டுமல்லாமல் அரி நாராயணனே என் மகனே, யாராலும் விரும்பி அடைய முடியாத அளவு கற்பு வல்லமையுள்ள சில பெண்டிர் நான் நந்தன் வம்சத்தில் வல்லவனான கண்ணனாக தோன்றியபோது என்னை விரும்பினர். அவர்களுக்கு இந்த யுகத்தில் அதிக வாழ்வு தருவதாக வாக்குறுதி சொன்னேன்.
.
.
அகிலம்
========
இப்பெண்ணார் சிலர்கள் இன்னமங்கே தோன்றிவந்தால்
ஆனதால் பெண்ணார்க்கு அழகுகொடு என்மகனே
.
விளக்கம்
==========
அந்தப் பெண்கள் இங்குப் பிறந்து உன்னை நாடினால் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி வாழ்வு கொடு.
.
.
அகிலம்
========
நின்ற தவசு நிறைவேறி னால்மகனே
ஒண்டொடியார் சிலரை உன்பாரி தானாக்கி
நன்மைகொடு என்மகனே நாரணா நாடாள்வாய்
உன்னை நினைத்தோர்க்கு உதவிகொடு என்மகனே
கட்டை விடாதே கருத்துள்ள என்மகனே
.
விளக்கம்
==========
உன்னுடைய தவசு நிறைவேறினால் பிரகாசமான வளையல் அணிந்த கன்னிப் பெண்கள் சிலரை உன் மனைவியாக்கி அவர்களுக்கு வேண்டிய நன்மைகளையும் செய்து கொடு என் மகனே. நீ நாடாளப் போகின்றாய். உன்னை எப்பொழுதும் நினைப்பவருக்கு எல்லா உதவிகளும் செய்து கொடு என்மகனே. ஆனால் உன் கட்டுப்பாடான வாழ்வை மட்டும் விட்டுவிடாதே.
.
.
அகிலம்
========
சட்ட மறவாதே சாஸ்திரத்துக் குற்றவனே
பெண்பாவம் பாராதே பேணியிரு என்மகனே
கண்பாரு கண்மணியே கன்னி கணவருக்கு
இன்னமொரு சூத்திரம் இயம்புகிறே னென்மகனே
.
விளக்கம்
==========
வைகுண்டா நான் கூறிய உபதேச சட்டத்தை மறந்துவிடாதே. ஆனாலும் நான் கூறிய பெண்களை ஏற்றுக் கொள்வது பாவம் என்று ஒதுக்கித் தள்ளி விடாதே. அவர்களையும் பேணிப் பாதுகாத்து அவர்கள் விருப்பியதைச் செய்து கொடு. என் கண்மணியே கன்னிகளுக்குக் கணவனாகப் போகும் வைகுண்டா நான் உனக்கு இன்னும் ஓர் இரகசிய உபதேசம் கூறுகிறேன். என் கண்களை நோக்கிக் கவனமாகக் கேட்பாயாக.
.
.
அகிலம்
========
துன்ன மறியத் தோற்றுவிப்பேன் சாதிதோறும்
அன்புவன்பு பார்க்க ஆரா ரிடத்திலும்போய்
உன்புதுமை சொல்லி உடலை மிகஆட்டி
சாதிசா திதோறும் சக்கிலி புலச்சிவரை
ஆதிச்சா திமுதலாய் ஆராதனை காட்டுவிப்பேன்
.
விளக்கம்
==========
சக்கிலியன் வரை உன்னை அறியும்படி மேலோனாக உன்னை தோற்றுவிப்பேன். உன்னிடத்தில் யார் அன்பு வைத்திருக்கிறார்? யார் பகைமை கொண்டுள்ளார்? என்று அறிய சான்றோர் சாதி முதல் சக்கிலிச்சி புலச்சி வரை எல்லா சாதிகளிலும் உள்ளவர்களின் .
.
.
தொடரும்... அய்யா உண்டு.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
ஒருவருந் தாங்கரிது உன்கை குவித்தாக்கால்
குருதெய்வம் நீயே கோவே குலக்கொழுந்தே
இன்ன முனக்கு இயம்புகிற விஞ்சையதும்
பொன்னம் மகனே பூராய மாய்க்கேளு
.
விளக்கம்
==========
நீ கைக்குவித்துக் கும்பிட்டால் ஒருவராலும் பொறுக்க முடியாது. குரு தெய்வம் எல்லாம் நீயே. அரசே, என் குலக்கொழுந்தே, என் மகனே, இன்னும் சில உபதேசங்கள் கூறுகிறேன் முழுவதுமாகக் கேள்.
.
.
அகிலம்
========
சாதி பதினெட்டும் தலையாட்டிப் பேய்களையும்
வாரி மலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு
வரத்தை மிகவேண்டி வைத்துக்கொள் ளென்மகனே
.
விளக்கம்
==========
பதினெட்டுச் சாதிகளின் பெயர்களையும் தலையாட்டும் பேய்களையும், அள்ளியெடுத்து மலைகளிலும் தீயிலும் தள்ளி அழித்துவிடு. அவற்றின் வரங்களையும் சக்தியையும் வாங்கி வைத்துக்கொண்டு அவற்றை அழித்து விடு.
.
.
அகிலம்
========
சரத்தை மிகவாங்கித் தானனுப்புப் பேய்களையும்
உட்கோள் கிரகம் உறவுகெட்ட பேர்முதலாய்க்
கட்கோள் கருவைக் காணாதே சாபமிடு
செல்வம் பொருந்திச் சிறந்திரு என்மகனே
.
விளக்கம்
==========
என்மகனே, உபக்கிரகங்களையும், கிரகங்களையும் அவற்றிற்குத் தொடர்பில்லாத பெயர்களையும், கிரகநிலை கண்டு உருவாக்கும் மந்திரப் பொருள்களையும் காணாது ஒதுங்கிவிடச் சாபம் கொடு. மகனே, நீ சகல விதமான செல்வங்களையும் பெற்று சிறந்து வாழ்வாயாக.
.
.
அகிலம்
========
கொல்லென்ற பேச்சுக் கூறாதே என்மகனே
ஒவ்வொன்றைப் பார்த்து ஊனு ஒருசாபம்
செவ்வென்ற பேச்சுச் செப்பியிரு என்மகனே
உரைத்த விஞ்சையெல்லாம் உனக்குப்போது மோமகனே
.
விளக்கம்
==========
கொல் என்னும் சொல்லைப் பயன்படுத்தாதே மகனே. கொல்லப்படுகின்ற உயிர்கள் கொல்லப்படாதிருக்க அல்லது பலியிடப் படாதிருக்க ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சாபம் கொடுத்து நீக்கிவிடு. தூய்மையான பேச்சையே நீ பேசிக் கொண்டு வாழ்ந்து வா. இதுவரை நான் உனக்குக் கூறிய உபதேசங்கள் போதுமா மகனே.
.
.
அகிலம்
========
விரைத்தமுள்ள வைகுண்டா விற்பனவா நீகேளு
நீபோ யிருக்கும் இடங்களில் என்மகனே
அன்பான பஞ்சவர்கள் அங்கேவுண் டென்மகனே
முன்னே பிறந்த உகத்துக் குகங்களெல்லாம்
என்னைவிட் டகலாது இருந்தார்கள் பஞ்சவர்கள்
ஆனதா லிப்போது யானும்நீ யானதினால்
மானமுள்ள பஞ்சவரை மகனேமுன் விட்டுக்கொள்ளு
.
விளக்கம்
==========
இன்னும் தேவையானால் நல்ல மக்களை உருவாக்கப் போகின்ற வைகுண்டா கேட்பாயாக.
என் மகனே, நீ போயிருக்கும் எல்லா இடங்களிலும் அன்பு பூண்ட பஞ்சபாண்டவர் துணை இருப்பர். முன்பு நான் பிறந்த எல்லா யுகங்களிலும் என்னைவிட்டு அகலாது என்னுடன் வாழ்ந்தவர்கள் அந்த பஞ்சவர்கள். வைகுண்டராகிய இந்தப் பிறவியிலும் நான் நீயாக இருப்பதால் அந்த மானமுள்ள பஞ்சவர்களை உனக்குப் பாதுகாப்பாக உன் முன்பாக நிறுத்திக் கொள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 08.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
தந்த வரங்கள் தவறாது தருணஞ் சடையுந் தரைமீது
எந்தன் மீது மறவாதே என்னாண் டருளு மிறையோனே
அந்தன் மீது மறவாதே ஆயா னெனவே அறிவில்வைத்துச்
சிந்தை மகிழ்ந்து முறைநடந்தால் சிவனு முனக்குள் வசமாமே
.
விளக்கம்
==========
நான் தந்த வரங்கள் பொய்க்காது. நீ தரைமீது சடைவாறும் நேரத்தில் கூட என்மேல் வைத்திருக்கும் எண்ணத்தை மறவாதே. அதுபோல் என்னை ஆண்டு அருளும் இறையோனே, அந்தம் இல்லாதவன் (சிவன்) மீதும் உன் நினைவை மறவாமல் வைத்திரு. மேலும் அவரே உன்னை வழி நடத்தும் குரு என்னும் நினைவையும் எப்போதும் அறிவில் வைத்து மனம் மகிழ்ந்து இரு. இந்த உன் உபதேச முறைப்படி நடந்தால் சிவன் கூட உனக்குள் அடங்கி விடுவார்.
.
.
அகிலம்
========
தாயா ரோடு சிவமாது சரசு பதியே பொன்மாது
நேயா மாதர் மடமாது நீணில மறிய வந்துனது
பூசா பலன்கள் சொல்லிமிகப் புலம்பித் திரிவார் துயர்தீர
மாயா திருக்கு மகனேவுன் மனமே மகிழ்ந்து மகிழ்ந்திருவே
.
விளக்கம்
==========
உன் தாயார் இலட்சுமிதேவியும் பார்வதிதேவியும் சரசுவதியும், பூமாதேவியும் அன்பில்லாப் பெண்டிர்களும், இவ்வுலகம் எல்லாம் அறியும்படியாக உன்னிடம் வந்து தத்தமக்கு வேண்டிய பூஜை முதலியவற்றைச் சொல்லித் தங்கள் துயரங்கள் தீருவதற்காகப் புலம்புவார்கள். எப்பொழுதும் அழியாதிருக்கும் என்மகனே, உன் மனம் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வா.
.
.
அகிலம்
========
சொல்ல எளிதோ என்மகனே சொல்லா தனேகம் தோன்றுமினி
வெல்ல எளிதோ என்மகனே மேலோரா ராரா லும்
கொல்ல எளிதோ வுனைமகனே கோவேங் கிரியின் கோனாலும்
வெல்ல எளிதோ வுனைமகனே மேலாங் கண்ணே மிகவளராய்
.
விளக்கம்
==========
என் மகனே, நான் சொல்லுகின்ற உபதேசங்களை யாராலும் எளிதாகச் சொல்ல முடியாது. நான் சொல்லாத பல உபதேசங்கள் உனக்கு இனிமேல் இதன் மூலம் தோன்றும். இனி மேலோகத்தார் யாராலும் உன்னை வெல்ல முடியாது. கோவேங்கிரி அரசனான ஈசராலும்கூட உன்னை இனிக் கொல்லவும் முடியாது. இத்தகைய மேலான உன்னை யாராலும் இனி வெல்ல முடியாது. அத்தகைய உயர்ந்தவனாக நீ ஆகிவிட்டாய். நீ நன்றாக வளர்ந்து வாழ்வாயாக.
.
.
அகிலம்
========
இந்தப் படியே நாரணரும் இயம்ப மகவு ஏதுரைக்கும்
கந்த னுறுவே லென்றகப்பா கடியா வுனது படிநடக்க
எந்தப் படியோ நான்றமியேன் ஏதோ அறியப் போறேனெனச்
சிந்தை மகிழ்ந்துத் தகப்பனுட திருத்தாள் பிடித்துச் செப்பலுற்றார்
.
விளக்கம்
==========
இப்படியாக திருமால் உரைத்திடவும், வைகுண்டர் அவரை நோக்கி, கந்தனாக உருவெடுத்த என் தந்தையே, நான் உமது உபதேசப்படி நடந்து வெற்றி கொள்வது, கடினமான ஒன்றாகுமா? நான் தனியனாக எந்த வழியில் இவற்றைத் தெளிவாக அறியப் போகிறேனோ? என்னும் சந்தேக வினாக்களைக் கூறி மனம் வருத்தித் தந்தையாகிய திருமாலின் பாதங்களைப் பிடித்துக் கூறினார்.
.
.
அகிலம்
========
தன்னம் பெரிய தாட்டீக வைகுண்டரும்
என்னசொல்வீ ரென்றனக்கு என்றகப்பா நீரெனவே
வணங்கிப் பதம்பூண்டு மாதாவை யுந்தொழுது
இணங்கி யிவர்கேட்க ஏதுசொல்வார் நாரணரும்
.
விளக்கம்
==========
தனக்கு நிகர் தானேயான பலம் பொருந்தி வைகுண்டர், திருமாலிடம், என் தந்தையே, நீ என்ன பதில் கூறப் போகிறீர்? என்று வினவி, அவர் பாதங்களைக் கட்டிப் பிடித்து வணங்கி தாய் இலட்சுமிதேவியையும் தொழுது அன்புடன் கேட்க நாராயணர் உரைக்கலுற்றார்.
.
.
அகிலம்
========
நாராணா வைகுண்டா நன்மகனே என்னையினி
வாரணமே நீவணங்கி மகனே கைசேராதே
நீகை குவித்தால் எனக்குமிகத் தாங்கரிது
தானீத னான சர்வபரா என்மகனே
.
விளக்கம்
==========
நாரணா, வைகுண்டா நல்லமகனே, யானை போன்ற சக்தி உள்ளவனே, இனிக் கையெடுத்துக் கும்பிடாதே. நீ கைக்குவித்துக் கும்பிட்டால் என்னால் பொறுக்க முடியவில்லை. நீயே நாரணனாகிச் சர்வபரனும் ஆகிய என்மகனே,
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 07.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
ஆர்க்கு மிகவீந்தால் அந்தத்தர்ம மேகொதிக்கும்
போர்க்கு நினைத்தாரைப் பெலிகொடுக்குந் தர்மமது
தன்மந்தான் வாளு சக்கரங்க ளல்லாது
தின்மையது கேடு செப்பக்கே ளென்மகனே
.
விளக்கம்
==========
எவர்க்கும் அதிகமாகக் கொடுத்தால் அவ்வாறு கொடுத்தவனின் தருமசெயல் மேலும் மேலும் பொங்கி எழும்பிக் கொண்டே இருக்கும். போர் செய்து உன்னை அழிக்க நினைத்தவரை அத்தருமம் பலி கொடுத்து விடும். ஆகவே, தருமந்தான் வாளும் சக்கரமும் ஆகமேயல்லாது வேறு ஒன்றுமில்லை. நீ தீமை செய்தால் அத்தீமை உனக்கே கேடாக வந்து அமையும். இன்னும் நான் கூறுவதைக் கேட்பாயாக என்மகனே.
.
.
அகிலம்
========
சாதி பதினெட்டும் தன்னாற்கே டாகுமட்டும்
நீதி யழியாதே நீசாபங் கூறாதே
.
விளக்கம்
==========
சாதி பதினெட்டும் தன்னைத் தன்னால் அழித்து மாயும்வரை நீ நீதி தப்பி நடந்துவிடாதே. யாரையும் நீ சாபம் கூறிச் சபித்துவிடாதே.
.
.
அகிலம்
========
மகனே வுனக்கு வைத்தவிஞ்சை மனதி லறிந்து கொண்டாயோ
அகமே வைத்த சட்டமெல்லாம் அதுபோல் நடந்து அல்லாமல்
உகமே யழியு முன்னாக ஒருசொல் லிதிலே குறைவானால்
சகமோ ரறியத் தீமூழ்கிச் சதியாய் மறுத்து முழிப்பாயே
.
.
விளக்கம்
==========
மகனே, உனக்குச் சொன்ன உபதேசங்களை எல்லாம் உன் மனதில் விளக்கமாக அறிந்து கொண்டாயா? உன் மனம் புரியும்படி சொன்ன சட்டவிதி முறைகளை எல்லாம் அப்படியே பின்பற்றிச் செயல்படுத்து, அப்படியல்லாமல், இந்தக் கலியுகம் அழியும் முன்பாக இந்த உபதேசங்களில் ஏதாவது ஒரு சொல்லாவது குறைவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுமானால் இந்த உலகோர் அறியும்படியாக நீ தீயில் மூழ்கி விரைவாக உயிர்த்து எழுந்து வருவாயாக.
.
.
அகிலம்
========
நல்லோர் மகனே சொல்வதுகேள் நானோ வுரைத்த விஞ்சையெல்லாம்
வல்லோ னான திருமகனே மனதி லறிந்து அறிந்துநட
எல்லாம் நமதுள் ளாச்சுதென்று எண்ணி நடப்பொன் றுன்னாலே
சொல்லால் தாண்டி நடப்பீரால் தீயே குளித்து வருவாயே
.விளக்கம்
==========
சிறந்து மகனே, வல்லவனே, நான் சொல்லுவதை இன்னும் கேள். நான் உன்னிடம் சொன்ன உபதேசங்களை எல்லாம் உன் மனதில் நன்றாக ஆராய்ந்து செயல்படு. எல்லாம் நமக்குள் ஆகி விட்டது என்று ஆணவத்தோடு நினைத்துத் தவறான வழியில் செயல்பட்டால், நீயாகவே தீயில் மூழ்கிவிட்டு என்னை வந்து சேர்வாயாக.
.
.
அகிலம்
========
கொடுக்கும் வரங்களு னக்கீந்தேன் கொடுத்த வரத்தை பறிப்பதற்கு
உடக்கு வரமுந் தந்தேனான் உன்ற னாணைத் திருவாணை
அடக்கு முடக்குந் தந்தேனான் ஆதி சிவனா ரவராணை
நடக்கும் படியே சட்டமெல்லாம் நாரா யணனே தந்தேனே
.
விளக்கம்
==========
நீ வரம் கொடுப்பதற்குரிய வரமும், அதே வரத்தை மீண்டும் பறிப்பதற்குரிய வரமும், இப்படியாக எல்லாவகை இரகசியங்களையும் வரங்களையும் உனக்குத் தந்துவிட்டேன். உன்மேல் ஆணை. என் இலட்சுமியின் மேல் ஆணை. ஆதி சிவன்மேல் ஆணை. நீ ஒழுங்காகச் செயல்படுத்தவே இச்சட்ட விதிகள் எல்லாவற்றையும் நாரணனாகிய நான் உனக்குத் தந்தேன்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
இன்னமொரு விஞ்சை இயம்புவேன் கேள்மகனே
முன்னம்வகைக் காரனொடு மோதிப் பகையாதே
பகைத்தா லிருக்க வொட்டான்கா ணவ்விடத்தில்
உகத்தடக்கு முன்னே ஒருவரையுஞ் சீறரிது
.
விளக்கம்
==========
என் மகனே, இன்னும் ஓர் உபதேசம் கூறுகின்றேன். கேட்பாயாக. ஏற்கெனவே, உரிமையுள்ள ஒருவனிடம் அவன் உரிமையைப் பறிக்க அவனோடு மோதிப் பகைத்துக் கொள்ளாதே. அப்படி நீ பகைத்துக் கொண்டால் உன்னை அந்த இடத்தில்கூட இருக்கவிட மாட்டான். கலியுகத்தை அடக்கும் முன்னர் யாரிடமும் கோபப்படாமல் இரு.
.
.
அகிலம்
========
தாழ்ந்திருக்க வென்றால் சர்வதுக்குந் தாழணுமே
ஓர்ந்திருக்க வென்றால் ஒருவர்பகை யாகாதே
ஆனதால் நீயும் அவனைப் பகையாதே
நானவனைக் கேட்பேன் ஞாயக்கே டாகிடினும்
.
விளக்கம்
==========
கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பது எல்லாருக்கும் கீழ்படிந்து நடப்பதே ஆகும். எல்லாருடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் ஒருவரின் பகையும் ஆகாதே. எனவே, நீயும் யாரையும் பகைக்காதே. அவர்கள் நியாயக் கேடு செய்தால் நான் நியாயம் கேட்பேன்.
.
.
அகிலம்
========
வலியோர்க் கொருவழக்கு வைத்துநீ பேசாதே
மெலியோர்க் கொருவழக்கு வீணாய்ப் பறையாதே
சொத்தாஸ்தி வஸ்து சுகமென்று எண்ணாதே
வத்தாஸ்தி பெண்ணு வகையென்று எண்ணாதே
.
விளக்கம்
==========
வலியோருக்காக ஒருவகை நீதி செய்தும் வலியற்றோர்க்காக இன்னும் ஒரு வகை நீதி செய்தும் பேசாதே. சொத்து சுகம் பெண் சுகம் போன்ற சுகங்களைச் சுகம் என்று எண்ணாதே.
.
.
அகிலம்
========
நீயெண்ணா தேயிருந்தால் நீணிலங்க ளுமயங்கும்
தானிதின்மே லெண்ணம் தங்குதங் காதேயிரு
சத்துரு வோடும் சாந்தமுட னேயிருநீ
புத்திர ரோடும் பேசியிரு என்மகனே
.
விளக்கம்
==========
இவ்வாறு நீ எண்ணாது இருந்தால் உனக்கு இந்த உலகமே பணிந்து நிற்கும். எனவே, இப்படிப்பட்ட எண்ணத்தையுடைய இவ்வுலகத்தில் வாழ்ந்து வந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல் ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்வாயாக. உன் சத்துருவோடும் சாந்தமாகப் பழகு. உன் புத்திரருக்கும் நல்லவற்றை உபதேசித்துக் கொண்டிரு.
.
.
அகிலம்
========
அன்போர்க்கு மீந்திருநீ ஆகாப்பேர்க்கு மீந்திருநீ
வன்போர்க்கு மீந்திருநீ வழிபோவார்க்கு மீந்திருநீ
சகலோர்க்கு மீந்து தானிருநீ யென்மகனே
வலியோர்க்கு மீயு வழிபோவார்க்கு மீயு
மெலியோர்க்கு மீயு மேன்மையா யென்மகனே
.
விளக்கம்
==========
உன்னிடம் அன்புள்ளோருக்கும் உனக்கு ஆகாத பேர்களுக்கும், வன்மைக்குணம் உள்ளோர்க்கும், வழிப்போக்கர்களுக்கும், வலிமை இல்லாதவருக்கும் இப்படியாகச் சகல மக்களுக்கும் உன்னால் கொடுக்க முடிந்ததைக் கொடுத்து உதவு.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
என்மகனே நானுனக்கு இன்னமொரு விஞ்சைசொல்வேன்
பொன்மகனே யுன்னுடைய புத்தியிலே வைத்திருநீ
இச்சட்டந் தன்னில் எள்ளளவு தப்பினதால்
தீச்சட்டம் காய்க்கத் தேதிவரு மென்மகனே
.
விளக்கம்
==========
பொன்மகனே, உனக்கு இன்னும் ஓர் உபதேசம் சொல்லுகிறேன். உன்னுடைய புத்தியில் இதை எப்பொழுதும் நினைவோடு பாதுகாத்து வைத்துக் கொள். நான் சொல்லிய இந்தச் சட்டங்களில் சிறிதளவு நீ தப்பினாலும் உனக்கு தண்டனை தரத் தீச்சட்டம் காய்த்து அதில் உன்னை இட்டுத் தண்டிக்கும் நாள் வரும் என்மகனே.
.
.
அகிலம்
========
அனுப்போல் மறவாதே யான்வைத்த சட்டமதில்
மனுப்போ லென்றிராதே மனதெண்ண மாயிருநீ
பஞ்சமிர்தே யென்னுடைய பாதைதப்பி நீநடந்தால்
கொஞ்சுங் கிளியே கொன்னெழுப்பு வேனுனையும்
.
விளக்கம்
==========
ஒரு அணு அளவு கூட மறந்துவிடாதே. மனு சாத்திரம் போன்று இதை எண்ணி இருந்துவிடாது எப்பொழுதும் இந்த உபதேசங்களை எண்ணியவாறு இரு. பஞ்சாமிர்தம் போன்றவனே, என் இனிய பாதை தப்பி நீ செயல்பட்டால் உன்னையும் பிறரைப் போன்று கொன்று எழுப்பிடுவேன்.
.
.
அகிலம்
========
பதறியிரு என்மகனே பம்மியிரு கண்மணியே
பொறுதி மகனே பெரியோரா யாகுவது
உறுதி மகனே உலகமதை யாளுவது
மகனேநா னெத்தனையோ மகாபெலங்கள் கற்றவன்காண்
உகமீதே சொல்லித் தொலையுமோ வுத்தமனே
.
விளக்கம்
==========
எனவே. தவறு நேராவண்ணம் பதறியிரு. அதே சமயம், அடக்கம் உடையவனாக வாழ்ந்து வா. பொறுமையாய் இரு. அந்த பொறுமை உன்னைப் பெரியோனாக்கி விடும் மகனே. நீ உலகத்தை ஆளுவது மிகவும் உறுதி ஆகும்.
மகனே, நான் எத்தனையோ பெரிய பலங்கள் எல்லாம் கற்றுள்ளேன். அதை யுகம் யுகமாகச் சொன்னால்கூட அது சொல்லித் தீருமா? உத்தம மகனே,
.
.
அகிலம்
========
எவ்வுகங் களுக்கும் இப்படியே தர்மமில்லை
செவ்வுமகா விஷ்ணுதான் என்றுசொல்லார் தேசமதில்
இப்போது என்மகனே இக்கலியன் மாய்மாலம்
செப்ப எளிதல்லவே செயிக்க ஏலாதாராலும்
.
விளக்கம்
==========
எல்லா யுகங்களுக்கும் இப்படிப்பட்ட தருமம் இல்லை. ஒவ்வொரு யுகத்துக்கும் தருமநிலை வித்தியாசப்படும். இதுவரை செம்மையான மகாவிஷ்ணுதான் யுகம் அழித்தது என்று தேச மக்கள் சொல்லுவார்கள். ஆனால் இப்பொழுது இக்கலி யுகத்தில் இக்கலியின் மாய மாலத்தின் தன்மை பற்றிச் சொல்ல எளிதான காரியம் இல்லை. கலியினை வெற்றி கொள்ள யாராலும் முடியாது.
.
.
அகிலம்
========
இப்போதுன்னோ டுரைத்த இயல்விஞ்சைக் ககப்படுங்காண்
அப்பனே பம்மலிலே அகப்படுங்கா ணிக்கலியும்
கலியென்றால் எலியல்லவே கணையாளி வேண்டாமே
வலிமாய நினைவு மாய்மால மென்மகனே
.
விளக்கம்
==========
ஆனால், உன்னோடு உரைத்த உபதேசம் வெற்றி கொள்ள உதவிடும். என்மகனே, நீ அடங்கிப் போனால் உன் கட்டுப்பாட்டில் கலி அகப்படும். கலி என்று சொன்னால் அது சாதாரண எலி அன்று. அதை வெல்ல கணை, அம்பு போன்றவை தேவையில்லை. கலியானது வலிமையான மாய நினைவாகிய மாய்மாலம் ஆகும்.
.
.
அகிலம்
========
ஆனதா லாயுதங்கள் அம்புதடி வேண்டாமே
மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே
.
விளக்கம்
==========
எனவே, கலியினை அழிக்க ஆயுதங்களோ, அம்போ, தடியோ தேவை இல்லை. ஒரே மன நினைவோடு இருந்தால் கலி தன்னாலே தானே அழிந்து விடும்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 04.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
விள்ளாத ஞாயம் மேல்ஞாய மென்மகனே
துள்ளாத யானை துடியானை யென்மகனே
அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே
கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே
.
விளக்கம்
==========
சொல்லாமலே சொல்லும் மௌன மார்க்கம் மிகவும் உயர்ந்த மார்க்கம் ஆகும். துள்ளாத யானை மிகுந்த துடிப்புள்ள யானையாக இருக்கும். அதுபோல அறிவுள்ள என்மகனே, அடக்கம் மிகவும் பெரியது ஆகும். உலக நியாயத்தைப் புறக்கணித்துக் கடந்து செல்ல நினையாதே. கற்றவர்களைப் புறக்கணிக்காதே.
.
.
அகிலம்
========
நன்றி மறவாதே நான்பெரிதென் றெண்ணாதே
அண்டின பேரை அகற்ற நினையாதே
ஆபத்தைக் காத்து அகலநீ தள்ளாதே
சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும்
.
விளக்கம்
==========
செய்த நன்றியை மறக்காதே. நான் தான் பெரியவன் என்று எண்ணாதே. உன்னைச் சார்ந்து வாழத் துடிப்பவரை அகற்றிவிட எண்ணதே. ஆபத்தைக் காத்து, அவர்களைப் புறக்கணிக்காது வாழ்வு கொடு. தான் அழியக்கூடிய அளவு துன்பம் வந்தாலும் எந்தவிதமான சாபத்தையும் யாருக்கும் கொடுக்காதே.
.
.
அகிலம்
========
கோபத்தைக் காட்டாதே கோளோ டிணங்காதே
பாவத்தைக் காணாதே பகட்டுமொழி பேசாதே
பசுவை யடைத்துப் பட்டினிகள் போடாதே
விசுவா சமதிலே விரோதம் நினையாதே
.
விளக்கம்
==========
உன் கோபத்தை யாரிடமும் காட்டாதே. பிறருடைய கோள் வார்த்தையால் தவறு செய்துவிடாதே. பாவச் செயல்களையும் பாவிகளையும் பார்க்காதே. வெளி வேசமான மொழிகளைப் பேசாதே. பசுவை அடைத்து வைத்துப் பட்டினி போடாதே. உன்னையே நம்பி உன்னிடத்தில் விசுவாசமாக இருப்பவரிடம் எந்தவித விரோத மனப்பான்மையையும் காட்டாதே.
.
.
அகிலம்
========
எளியோரைக் கண்டு ஈந்து இரங்கிடுநீ
அழிவென்ற பேச்சு அனுப்போல் நினையாதே
தொட்டுப் பிடியாதே தோர்வைவைத்துக் காணாதே
விட்டுப் பிடியாதே வெட்கமதைக் காணாதே
.
விளக்கம்
==========
எளிய மனிதர்களைக் கண்டால் அவர்களுக்காக இரங்கி ஏதாவது பொருளைக் கொடுத்து உதவி செய். எந்த வகையிலும் எவருக்கும் எந்தப் பொருளுக்கும் அழிவைக் கொடுக்கும் வகையில் எண்ணத்தைச் செலுத்தாதே. தீயவர்களிடம் தொட்டுப் பிடித்துப் பேசவோ அதிக நேரம் பார்த்துக் கொண்டே பேசவோ செய்யாதே. யாரையாவது விட்டு யாரையாவது அழைத்து வந்து வீண் பேச்சுப் பேசாதே.
.
.
அகிலம்
========
வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே
பரம்பூமி கண்டு பாவித் திருமகனே
இத்தனை புத்தி எடுத்துரைத்தே னென்மகனே
.
விளக்கம்
========
பிறர் வெட்கப்படும் காரியங்களை நீ கண்ணால் காணாதே. மனித வரம்பு முறைகளையும் சிறந்த வழி முறைகளையும் தவற விட்டு வாழாதே. நீ பரம்பொருள் வாழும் தருமபூமியைக் கண்டு அதே நினைவில் நல்ல நிலை நிற்பாயாக. இத்தனை புத்திமதிகளையும் உனக்கு எடுத்துரைத்தேன்.
.
.
அகிலம்
========
புத்தி விபரீதமாய்ப் பின்னுமா ராயாதே
சட்ட மறவாதே தன்னளவு வந்தாலும்
நட்டங் காணாதே நாடாள்வா யென்மகனே
.
விளக்கம்
==========
நான் சொன்ன புத்திமதிகளை விபரீதமாக ஆராய்ந்து பார்க்காதே. உன் உயிர் அழியும் அளவு துன்பம் வந்தாலும்கூட நான் கூறிய சட்ட முறைகளை மறந்துவிடாதே. எந்தக் காரியத்தையும் தோல்விவரும் என்று எண்ணாதே. நீ தருமபூமியை ஆட்சி புரிவாய் என் மகனே.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 04.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
விள்ளாத ஞாயம் மேல்ஞாய மென்மகனே
துள்ளாத யானை துடியானை யென்மகனே
அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே
கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே
.
விளக்கம்
==========
சொல்லாமலே சொல்லும் மௌன மார்க்கம் மிகவும் உயர்ந்த மார்க்கம் ஆகும். துள்ளாத யானை மிகுந்த துடிப்புள்ள யானையாக இருக்கும். அதுபோல அறிவுள்ள என்மகனே, அடக்கம் மிகவும் பெரியது ஆகும். உலக நியாயத்தைப் புறக்கணித்துக் கடந்து செல்ல நினையாதே. கற்றவர்களைப் புறக்கணிக்காதே.
.
.
அகிலம்
========
நன்றி மறவாதே நான்பெரிதென் றெண்ணாதே
அண்டின பேரை அகற்ற நினையாதே
ஆபத்தைக் காத்து அகலநீ தள்ளாதே
சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும்
.
விளக்கம்
==========
செய்த நன்றியை மறக்காதே. நான் தான் பெரியவன் என்று எண்ணாதே. உன்னைச் சார்ந்து வாழத் துடிப்பவரை அகற்றிவிட எண்ணதே. ஆபத்தைக் காத்து, அவர்களைப் புறக்கணிக்காது வாழ்வு கொடு. தான் அழியக்கூடிய அளவு துன்பம் வந்தாலும் எந்தவிதமான சாபத்தையும் யாருக்கும் கொடுக்காதே.
.
.
அகிலம்
========
கோபத்தைக் காட்டாதே கோளோ டிணங்காதே
பாவத்தைக் காணாதே பகட்டுமொழி பேசாதே
பசுவை யடைத்துப் பட்டினிகள் போடாதே
விசுவா சமதிலே விரோதம் நினையாதே
.
விளக்கம்
==========
உன் கோபத்தை யாரிடமும் காட்டாதே. பிறருடைய கோள் வார்த்தையால் தவறு செய்துவிடாதே. பாவச் செயல்களையும் பாவிகளையும் பார்க்காதே. வெளி வேசமான மொழிகளைப் பேசாதே. பசுவை அடைத்து வைத்துப் பட்டினி போடாதே. உன்னையே நம்பி உன்னிடத்தில் விசுவாசமாக இருப்பவரிடம் எந்தவித விரோத மனப்பான்மையையும் காட்டாதே.
.
.
அகிலம்
========
எளியோரைக் கண்டு ஈந்து இரங்கிடுநீ
அழிவென்ற பேச்சு அனுப்போல் நினையாதே
தொட்டுப் பிடியாதே தோர்வைவைத்துக் காணாதே
விட்டுப் பிடியாதே வெட்கமதைக் காணாதே
.
விளக்கம்
==========
எளிய மனிதர்களைக் கண்டால் அவர்களுக்காக இரங்கி ஏதாவது பொருளைக் கொடுத்து உதவி செய். எந்த வகையிலும் எவருக்கும் எந்தப் பொருளுக்கும் அழிவைக் கொடுக்கும் வகையில் எண்ணத்தைச் செலுத்தாதே. தீயவர்களிடம் தொட்டுப் பிடித்துப் பேசவோ அதிக நேரம் பார்த்துக் கொண்டே பேசவோ செய்யாதே. யாரையாவது விட்டு யாரையாவது அழைத்து வந்து வீண் பேச்சுப் பேசாதே.
.
.
அகிலம்
========
வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே
பரம்பூமி கண்டு பாவித் திருமகனே
இத்தனை புத்தி எடுத்துரைத்தே னென்மகனே
.
விளக்கம்
========
பிறர் வெட்கப்படும் காரியங்களை நீ கண்ணால் காணாதே. மனித வரம்பு முறைகளையும் சிறந்த வழி முறைகளையும் தவற விட்டு வாழாதே. நீ பரம்பொருள் வாழும் தருமபூமியைக் கண்டு அதே நினைவில் நல்ல நிலை நிற்பாயாக. இத்தனை புத்திமதிகளையும் உனக்கு எடுத்துரைத்தேன்.
.
.
அகிலம்
========
புத்தி விபரீதமாய்ப் பின்னுமா ராயாதே
சட்ட மறவாதே தன்னளவு வந்தாலும்
நட்டங் காணாதே நாடாள்வா யென்மகனே
.
விளக்கம்
==========
நான் சொன்ன புத்திமதிகளை விபரீதமாக ஆராய்ந்து பார்க்காதே. உன் உயிர் அழியும் அளவு துன்பம் வந்தாலும்கூட நான் கூறிய சட்ட முறைகளை மறந்துவிடாதே. எந்தக் காரியத்தையும் தோல்விவரும் என்று எண்ணாதே. நீ தருமபூமியை ஆட்சி புரிவாய் என் மகனே.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 03.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
உவமையொன்று சொல்லுகிறேன் உற்பனமாய்க் கேள்மகனே
புத்திரனுக் கேகுருவும் புகன்றதெல்லாம் புகன்றாலும்
சுற்றுமொரு சூட்சத் தொழிலுண்டு மாயானுள்
அத்தனையு மென்னுள் அடக்கமில்லை யென்மகனே
.
விளக்கம்
==========
இவற்றை எல்லாம் வளக்க உவமைக் கதை ஒன்றைச் சொல்லி விளக்குவேன். உண்மையுடன் மகனே, நீ கேட்பாயாக. சீடனுக்குக்கூட குரு கூறுவன எல்லாவற்றையும் கூறிவிட்டாலும் எல்லாக் கலைகளைவிடவும் மேலான சூட்சுமக்கலை ஒன்று அக்குருவிடம் இருக்கும். அதுபோல்கூட நான் என்னிடம் எதையும் மறைத்து வைத்துக் கொள்ளவில்லை.
.
.
அகிலம்
========
முத்தியெனை யீன்றோர் முதனாளோர் விஞ்சைவைத்தார்
அவ்விஞ்சை மாத்திரமே யானுனக் கீயவில்லை
.
விளக்கம்
==========
ஆனால் எனக்கு ஈசர் முத்தி கொடுத்தபொழுது ஒரு விஞ்சை மட்டும் உபதேசிக்காது விட்டுவிட்டார். பின்னால் உபதேசிக்கப்பட்ட அந்த மௌன விஞ்சை மட்டுமே உனக்கு நான் இங்கு உபதேசிக்கவில்லை.
.
.
அகிலம்
========
இவ்விஞ்சை யீவதுதான் எப்போதெனக் கேளு
சீமை யரசு செலுத்தவரும் நாளையிலே
மேன்மை முடிதரிக்கும் வேளையி லென்மகனே
சொல்லுகிற விஞ்சை சுத்தமனே கேட்டிடுநீ
பல்லுயிர் களுக்கும் படியளக்கும் விஞ்சையது
எல்லா முனக்களித்தேன் என்னுடைய நாரணனே
.
விளக்கம்
==========
அவ்வுபதேசத்தை அருளுவது எப்போது என்று கூறுகிறேன். கேட்பாயாக. நீ தருமபூமியில் அரசு செலுத்தவரும் போது மேன்மையான தங்க நவரத்தின முடி சூட்டும் சமயத்தில் உபதேசிக்கும் விஞ்சை அது அப்பொழுது அதை நீ கேட்டுக் கொள்வாயாக. தருமயுகத்தில் கூறும் அந்த விஞ்சை பல உயிர்களுக்கும் சக்தி கொடுக்கும் விஞ்சை ஆகும். என்னுடைய நாரணனே, வேறு எல்லா முக்கிய விஞ்சைகளையும் உனக்குக் நான் கூறி விட்டேன்.
.
.
அகிலம்
========
அல்லாமல் நானுனக்கு அருளுகிற விஞ்சையைக்கேள்
பெரியோர்க்கு வாழ்வு பெருகிச் சிறந்தாலும்
மரியாதை யேயிருக்கும் மகனேநீ கேட்டிடுநீ
சற்றோலே வாழ்வு சகடருக் கேவருகில்
கற்றோரே யாகிடினும் கண்டறிவேன் போநீயென்பான்
.
விளக்கம்
==========
இன்னும் சில விஞ்சைகள் உள்ளன. கேட்பாயாக.
பெரியோர்களுக்கு வாழ்வு பெருகி உயர்ந்து கொண்டே இருந்தாலும் அவர் உள்ளத்தில் மரியாதைதான் நிறைந்து இருக்கும். ஆனால் கீழ்த் தரமானவனுக்குச் சிறிதளவு வாழ்வு வந்தால்கூட கற்றவரை மதிக்காமல் எல்லாம் நான் கண்டறிந்து கொள்வேன் நீ போய் விடு என்று அவமதிப்பான்.
.
.
அகிலம்
========
முள்முருக்கம் பூவு மினுக்குமூன் றுநாளை
கள்ளருக்கு வாழ்வு காணுமது போல்மினுக்கு
நல்லோர்க்கு வாழ்வு நாளுங் குறையாமல்
வல்லோர்க்கும் நல்லோராய் வாழ்ந்திருப்பார் கண்டிருப்பாய்
.
விளக்கம்
==========
முள் மருக்கைப் பூவின் அழகு மூன்று நாட்களே பரிணமிக்கும். அதுபோலக் கள்ளர்களுக்குச் சிவகாலமே வாழ்வு நீடிக்கும். ஆனால் நல்லவர்கள் என்றும் குன்றாப் புகழோடு வல்லவர்க்கும் நல்லவராய் வாழ்ந்து கொண்டிருப்பார். இதை நீ கண்டு கொள்வாயாக.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 02.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
கோல விளையாட்டுக் கொஞ்ச மெடுப்பேனான்
தூல மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும்
அன்போர்க ளெல்லாம் ஆவியே தான்மறுகி
இன்ப முடனே ஏங்கியேங்கி யழுவார்
.
விளக்கம்
==========
பலவகையான உருவங்களை நான் எடுத்து இந்த உலகில் தோன்றி விளையாடுவேன். எனது தூலதேகத்தின் மகிமையை அறியாமல் உலக மக்கள் மயங்குவர். அன்பர்கள் எல்லாரும் என்னைக் கண்டதும் இன்பத்தில் என்னைக் கட்டிப்பிடித்து ஏங்கி ஏங்கி அழுவர்.
.
.
அகிலம்
========
இத்தனை நாளும் இவரைநம்பி நாமிருந்து
புத்தியது கெட்டோம் என்றுமிகப் பேதலிப்பார்
அப்போது ஆகா அன்னீத மாபாவி
இப்போது கண்டுதென்பார் ஏலமே சொன்னதெல்லாம்
.
விளக்கம்
==========
சிலர் இவ்வளவு காலமும் இவரை நம்பி இருந்தோம், புத்தி கெட்டோமே? என்று பேதலிப்பார். அச்சமயம் தீயோர்கள் எல்லாரும் மன்னர் பலர் சொன்னவற்றை ஏமாற்றி இவன் கண்டதாகச் சொல்லுகிறான்? என்று கூறுவர்.
.
.
அகிலம்
========
எய்த்தானென்பா னன்போரை இடுக்கஞ்செய் தேயடிப்பான்
சூட்ச முடனே சொரூபமொன்று நானெடுப்பேன்
அதுதா னொருகாலம் அதிகமக னேகேளு
இதுபெரிய சூட்சம் என்மகனே கேட்டிடுநீ
அதின்மேலே அன்போர் அதிகப் பெரியோராய்
இதின்மேலே தாண்டும் எல்லோரும் வல்லோரே
.
விளக்கம்
==========
அத்தகையோர் என் அன்போரைத் துன்பம் உண்டாக்கி அடிப்பர். மகனே சூட்சமமான சொரூபம் ஒன்று நான் எடுக்கும் காலம்தான் முக்கியமானது. உண்மையில் இது சூட்சுமம் நிறைந்தது. இதற்குப் பிறகு அன்பர்கள் மிகவும் பெரியோராய் ஆவர். இதை தாண்டிச் செல்லுகின்றவர் எல்லாரும் வல்லவரே.
.
.
அகிலம்
========
பின்னுமொரு சூட்சம் பிரமாண மாயெடுப்பேன்
பன்னு மணியே பராபரமே கேட்டிடுநீ
.
விளக்கம்
==========
இன்னும் ஒரு சூட்சுமம் சொருபத்தைச் சரியான அளவுள்ள வடிவத்துடன் எடுப்பதைச் சொல்லுகிறேன். மணியே, பராபரமே, நீ கேட்பாயாக.
.
.
அகிலம்
========
குளத்தைத் தடதடெனக் கொந்துகொந் தாயுடைத்து
சுழற்றக்கன லக்கினியும் துர்க்கைமா துர்க்கையையும்
விட்டயச்சு மாநிலத்தில் விளையாடி யேதிரியும்
கட்டணங்க ளாக கனமாய்க் குழுகுழென
ஓடுவார் பதறி விழுவா ரறமெலிந்து
நாடும் பெரியோர் நலமாக வாழ்ந்திருப்பார்
.
விளக்கம்
==========
குளத்தை விரைவாக ஆங்காங்கே வெட்டி உடைக்கவும், அக்கினியை எங்கும் சுழற்றி வீசி எறியவும், துர்க்கையை அனுப்புவோம் பூமியில் அவள் விளையாடிக் கொண்டிருப்பாள். கட்டிடங்கள் எல்லாம் அசைந்து ஆடி அழியும். தீயோர்கள் எல்லாரும் பதறி அறம் மெலிந்து ஓடிடுவர். பொறுமையை விரும்பும் பெரியோர்கள் நலமாக வாழ்ந்திருப்பர்.
.
.
அகிலம்
========
என்மகனே வுன்காலம் இன்னும் வகுப்பேன்கேள்
பொன்மகனே பூமியிலே பின்னுமொரு காரணங்கேள்
கெட்ட நசுறாணி கெம்பிக் கடைக்காலம்
மொட்டைத்தலை யன்வருவான் முளையனவ னோடிடுவான்
ஆடிக் கொண்டாடி அங்குமிங்குந் தானலைந்து
ஓடிக் கொண்டோடி ஒன்றுபோ லேமாள்வான்
மகனே யுன்காலம் மகிழ்ந்திரு என்மகனே
.
விளக்கம்
==========
பொன்மகனே உன் காலத்தை இன்னும் கூறுகிறேன் கேட்பாயாக. கெட்ட புத்தியுள்ள நசுறாணி அச்சமயத்தில் எழும்பித் தெச்சாணாபூமியில் ஆட்சியைப் பிடித்திட விரைந்து வந்து தோற்று ஓடுவான். பிறகு மொட்டைத் தலையையுடைய ஒருவன் வந்து ஆளத் துடிப்பான். முனையன் ஆகிய அவனும் தோற்று ஓடி ஆங்காங்கே அலைந்து திரிவான். பிறகு நசுறாணியும் இவனும் ஒரே மாதிரியாக அழிவர். இச்சமயம் உனது நல்ல காலம். மகிழ்ந்து இரு என் மகனே.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩











