#தாய்
அழகிய வரிகள்
தாய் இருக்கும் இடம் சொர்க்கம்...
பிறந்..தாய்... அழு..தாய்...
சிரித்..தாய்.. தவழ்ந்..தாய்...
நடந்..தாய்.. வளர்ந..தாய் கோபித்..தாய்...
புரிந்..தாய்.. உணர்ந்..தாய்...படித்..தாய்...
பணிபுரிந்..தாய்...சம்பாதித்..தாய்...
சேமித்..தாய்.. சாதித்..தாய்
இவை அனைத்திலும் .....
உன் தாய் இருக்கிறாள்....
மறந்து விடாதே.....
Beautiful lines.
The place where mother is, is heaven...
You were born... Cried... Laughed... Crawled... Walked... Grew up... Got angry... Understood... Felt... Studied... Worked... Earned... Saved... Achieved... In all of these... your mother is there... Don't forget...
உங்களுக்குள்ளேயே... #நமக்குள்
வரலாற்றில், மனித மனதின் வலிமையை மிக ஆழமாக உணர்த்திய ஒருவர்
பால் ரிச்சர்ட் அலெக்சாண்டர்.
போலியோவால் ஆறு வயதில் மூச்சே விட முடியாமல் போன அவர்,வாழ்நாள் முழுவதும் ஒரு இயந்திரத்துக்குள் இருந்தார்
ஆனால்
அவர் உடல் அந்த இயந்திரத்தில் அடைபட்டு கிடந்தாலும்
அவரது மனம் ஒருபோதும் முடங்கிவிடவில்லை.
அவர் படித்தார்
வழக்கறிஞரானார்
புத்தகம் எழுதினார்
வாழ்வை பயப்படாமல் எதிர்கொண்டார்
சாதாரண மனிதன் கண்கலங்கும் இடத்தில் அவர் துணிச்சலோடு நின்றார்
அவரின் வாழ்க்கை நமக்கு சொல்வது ஒன்று மட்டுமே.
உடல் எல்லைகளை முடிவு செய்யலாம்.
ஆனாலும் மனத்தின் எல்லைகளை நீங்கள் தான் முடிவு செய்கிறீர்கள்.
ஒவ்வொரு நாளும் நம்மை சிறைபிடிப்பது வெளிப்புற சிக்கல்கள் இல்லை
நம்முடைய “என்னால் முடியாது” என்ற எண்ணங்கள்தான்.
அந்த எண்ணத்தை மாற்றினால், உங்கள் வாழ்க்கை. இயந்திரத்தின் எல்லைகளையும் தாண்டி முன் செல்லும்.
எத்தனை தடைகள் வந்தாலும், உங்களை நிறுத்த முடியாத ஒரு வலிமை உங்களுள்ளேயே இருக்கிறது
#தவறு
எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே.. தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே.
மற்றவர்களுக்கு தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள்ளூங்கள் உங்களுக்கான துன்பத்தை இன்றே நீங்கள் விதைத்துக் கொள்கிறீர்கள்.
பிறந்த பிறகு நல்ல முகம் வாங்குவது*_ _*உங்கள் கையில் இல்லை.
ஆனால்
இறப்பதற்குள் நல்ல பெயர் வாங்குவது உங்கள் கையில் தான் உள்ளது.
யார் கண்ணீரையும் நீங்கள் துடைக்க வேண்டாம். யார் கண்ணீருக்கும், நீங்கள் காரணம் இல்லாமல் இருங்கள் அதுவே போதும்.
#தனிப்பட்ட வாழ்க்கையில்
தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவர்
சிக்கனமா?
செலவழியா?
கோபமா?
சாந்தமா?
சைவமா?
அசைவமா?
என்பது பிரச்சனை இல்லை.
சம்மதத்துடன் ஆண், பெண் சகவாசம் கூட இருந்து தொலைக்கட்டும். அதனால் பொதுமக்களுக்கு கேடு இல்லை கேடு இல்லை.
ஆனால்,
மது நுண்ணறிவை கெடுக்கும். அது கூடாது. தன்னைவிட ஒருவர் கீழ் அல்லது மேல் என்று பிறப்பு அடிப்படையில் கற்பிக்கக் கூடாது.
ஒரு இனம் இன்னொரு இனத்தை ஏமாற்றி ஆதிக்கம் செய்வதற்கு,கருத்தால், செயலால் துணை போகக்கூடாது.
தொண்டு செய்ய வந்த இடத்தில் பொதுப்பணத்தை திருடக்கூடாது.தொழில், வாரிசு முறை செய்யக்கூடாது.
இவைதான் நல் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.
#நம் செயல்
நாம் என்ன செய்கின்றோம் என்பதை விட,
எதற்காக செய்கிறோம் என்பதே முக்கியம்.
நம் செயல்கள் சிலருக்கு கோபத்தையும், சிலருக்கு அன்பையும், சிலருக்குமரியாதையையும் தரக்கூடும்
நம்மை நேசிப்பவர்ளுக்காக வாழ்வதை விட.
நம்மை நேசிப்பவர்ளுக்காக வாழ்ந்து விட்டு போவோம்.
What matters more than what we do, is why we do it.Our actions might bring anger to some, love to some, and respect to others.
Instead of living for those who love us, let's live and leave for those who love us.
Happy evening greetings.....மகிழ்வான மாலை வணக்கங்களுடன்.
#செம்பருத்தி பூ டீ... #செம்பருத்தி பூ டீ
திங்கள் – செம்பருத்தி
அகத்தையும், புறத்தையும் அழகுற செய்யும் மலர்களில் செம்பருத்தி பூவும் ஒன்று. காலை வேளைகளில் வெறும் வயிற்றில் இரண்டு செம்பருத்தி பூ இதழ்களை இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
ஆரோக்கிய பலன்கள்
இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு இவ்விரண்டுக்கும் செம்பருத்தி சாறு உதவும்.
தலை முதல் அடிவரை பளபளப்பாகும், குறிப்பாக முகம் பொலிவு பெறுவதுடன், கேசம் நன்கு நீளமாக வளரும்.
இதயம் சம்பந்தமான நோய் போன்றவை நீங்கிவிடும்
பெண்களுக்கு மிகவும் ஏற்ற சாறு. இது மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, கர்ப்பப்பை கோளாறு போன்றவையாவும் சரியாகும்.
#அருமை
உங்கள் அருமை புரியாதவர்களுக்கு, நீங்கள் கவலைப் பட்டு உங்கள மதிப்பையும் சுய மரியாதையையும் இழந்து விடாதீர்கள்.
யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை*
யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை*
யாரும் உங்களை வலிகளை பார்ப்பதில்லை*
ஆனால்
எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்*
இனிய திங்கட்கிழமை காலை வணக்கம்
இன்றைய நாள் இனியதாக அமையட்டும்.
#புயல் பற்றி தெரிந்துக்கொள்வோம்
புயல் என்றால் என்ன என்றும், அது எவ்வாறு உருவாகிறது என்றும் நம் அறிவியலாய்வர்கள் கூறியிருப்பதை நாம் முழுவதுமாகத் தெரிந்து
கொள்வோம்.
Cyclone என்பது, ‘சுருண்டு கிடக்கும் பாம்பு’ என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து உருவான வார்த்தையாம்.
பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் (Equator), வெப்பத்தால் கடல் நீர் சூடாகிறது.
இதனால் ஆவியாகும் நீர், கடலின் மேற்பரப்பில் சூழ்ந்துள்ள காற்றுடன் கலக்கிறது. இந்த சூடான ஈரக்காற்று, செங்குத்தாக நேர் மேலே செல்கிறது. கடலின் மேற்பரப்பில் இருந்த பெரும்பாலான காற்று மேலே சென்று விடுவதால், அந்த இடத்தில் குறைவான காற்றே மீதம் உள்ளது. இதனால், அந்த வளிமண்டலப் பகுதியில், காற்றழுத்தம் குறைகிறது.
இந்தக் குறை அழுத்தத்தை நிரப்ப, அதன் சுற்றுப் பகுதியில் உள்ள வளி மண்டலக் காற்று சுழன்று விரைகிறது.
இவ்வாறு, மேலே சென்று தங்கும் சூடான ஈரக் காற்று, குளிர்ந்து, நீர்த்திவலைகள் உறைந்த மேகமாகிறது . இந்த மேகமானது, காற்றுடன் சேர்ந்து சுழல்கிறது.
மேலே உள்ள படிப்படியான நிகழ்வுகள் 1 முதல் 4 வரை, மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது.
இப்படித் தொடர்ந்து, ஏற்படும் நீராவிப்போக்கால் அந்தப் பகுதியை மையமாகக் கொண்டு பெரிய அளவில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது. அதற்கேற்றபடி, இந்தக் குறை அழுத்தப் பகுதியை நிரப்ப, வலிமையான காற்று தேவைப்படுகிறது. இந்தக் காற்று, குறை அழுத்த மையப் பகுதியைச் சுற்றிச் சுழன்று அதி வேகத்துடன் சென்று, அந்தப் பகுதியை நிரப்ப முயலுகிறது.
காற்றின் வலிமை அதிகரித்துக் கொண்டே செல்வதால், அது புயலாக மாறுகிறது. இதனால் தான் இந்த சுழலும் மேகக்கூட்டங்கள், செயற்கைக் கோள் படத்தில் வட்டமான துளை கொண்ட மையப் பகுதியை உடைய மேகச் சுருள் போல் காட்சி அளிக்கிறது. இந்த வட்டமான மையப் பகுதிக்கு கண் என்று பெயர்.
செயற்கைக் கோள் படத்தில் உள்ள சுழலும் மேகச்சுருளின் வேகத்தையும், அடர்த்தியையும், பரப்பளவையும் பொருத்து அதன் வலிமையைப் புரிந்து கொள்ள இயலும். இந்தச் சுழலும் மேகக் கூட்டத்தை உள்ளடக்கிய காற்று, நகர்ந்து கரையை அடையும் போது, நிலப் பகுதியை சூறாவளிப் புயலுடன் கூடிய மழையாகத் தாக்குகிறது. நிலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் போது இந்தப் புயல் காற்று வலுவிழக்கிறது.
தண்ணீரின் இயல்பு பள்ளத்தை நோக்கிப் பாய்வது. காற்றின் இயல்பு மேல்நோக்கி எழுவது. வெப்பக் காற்று விரைவாக மேலெழும். ஈரக்காற்று மெல்ல மெல்ல மேல் நோக்கிச் செல்லும். காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் வைத்துள்ள பெயர் சலனம்.
ஈரக்காற்று வெகு உயரம் செல்லாமல் வானில் தங்கிவிடுவதால் அது தாழ்வுநிலை. அந்தத் தாழ்வுநிலை காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரித்தால் காற்றழுத்தத் தாழ்வுநிலை.
காற்றழுத்தத் தாழ்வு நிலையின்போது காற்று சாதாரணமாக மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் வீசும். மணிக்கு 32 கி.மீட்டரிலிருந்து 51 கி.மீ. வரை காற்று வீசினால் அதற்கு அழுத்தம் என்று பெயர். அதுவே வேகம் அதிகரித்து 52-லிருந்து 61 கி.மீ. வேகத்தில் வீசினால் அது தீவிர அழுத்தம் . 62.கி.மீட்டரிலிருந்து 88 கி.மீ.வரை வீசினால் புயல் .அதற்கு மேல் கடும்புயல் (89 முதல் 118 கி.மீ.), மிகக் கடும் புயல் (119 முதல் 221 கி.மீ.), சூப்பர் புயல் (222 கி.மீ.க்கு மேல்).
புயல் வீசும்போது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப் பகுதிகள். குறிப்பாக துறைமுகங்கள். துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள், கப்பல்கள். கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்களை, மீனவர்களை எச்சரிக்க விடுக்கப்படும் ‘சிக்னல்’தான் இந்தக் கூண்டுகள்.
இந்த எச்சரிக்கையைத் தெரிவிக்க, கடலில் இருந்து காண ஏதுவாக, துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும் இரவு நேரத்தில் சிகப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். கொடி ஏற்றினால் காற்றில் கிழிந்துவிட வாய்ப்புண்டு. அதனால் கூண்டு.
இந்த எச்சரிக்கையில் 11 நிலைகள் இருக்கின்றன. நிலைமையின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க எண்ணிக்கை உயர்ந்துகொண்டு போகும். இந்த நிலைக்கு இந்தக் கூண்டு என்பதை இந்திய வானிலைக் கழகம் தீர்மானித்து வைத்திருக்கிறது.
#சூயஸ் கால்வாய்(Suez Canal) திறக்கப்பட தினம் இன்று
நவம்பர் 17, 1869*
சூயஸ் கால்வாய்
(Suez Canal) திறக்கப்பட்டது.
இது மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கும் ஒரு செயற்கைக் கால்வாய் ஆகும்.
இதன் மூலம் ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து மிக எளிதாகிறது.
இந்தக் கால்வாயின் திறப்பு, கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டிய தேவையை நீக்கியது.
இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்திற்கு ஒரு முக்கிய வழியாக அமைந்தது.
2015 ம் ஆண்டில், கால்வாயின் விரிவாக்கம் செய்யப்பட்டது. இது கப்பல்களின் போக்குவரத்தை மேலும் அதிகரித்துள்ளது.
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் நவம்பர் 17 #தேசிய வலிப்பு நோய் தினம்.*
*தேசிய வலிப்பு நோய் தினம்.*
வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இது மூளையின் ஒழுங்கற்ற செயல்பாட்டால் ஏற்படும் ஒரு நரம்பியல் நிலையாகும்.
இந்த நாளில், பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து, கால்-கை வலிப்பு பற்றிய விழிப்புணர்வு திட்டங்களை நடத்துகின்றன.













