விசிக அன்னபோஸ்ட்டாக சிதம்பரம் மக்களவை தொகுதியை கைப்பற்ற வாய்ப்பு?
அன்னபோஸ்ட் என்பது ஒரு தமிழ் வார்த்தையாகவே கருதப்பட்டு புழக்கத்தில் இருக்கிறது. ஒரு தேர்தலில் ஒரு வேட்பாளர் மட்டும் நிற்கிற சூழலில் அவர் அன்னபோஸ்டில் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்படுகிறது. மேற்கொண்டு இதற்கான விளக்கத்தை பின்னால் பார்க்கலாம்.
“விஜய்யின் தலைமையில் தவெக ஆட்சி அமைப்பதற்கு சனிக்கிழமை ஆதரவு கடிதம் அனுப்பப்படும்” என செய்திகள் பரபரக்கின்றன. இதனிடையே, “ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு; இது திருமா காலம் - இனி உயர்வோம் மேலும் மேலும்!” என்று வன்னியரசு ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
"திருமாவளவன் அமைச்சராகிறார்" என தினமலர் செய்தி ஒன்று கூறுகிறது. விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்யும்போது அதில் திருமாவளவன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் எந்த செய்திகளின் மீதும் நம்பிக்கை வரவில்லை.
இப்போது அன்னபோஸ்ட் சமாச்சாரத்திற்கு வருவோம்.
1952 மற்றும் 1953 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் 5 பேர் அன்னபோஸ்டில் போட்டியிற்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.
அன்னபோஸ்ட் என்றால், அதற்கு"எந்தவித எதிர்ப்பும் இல்லாத" என்று பொருள் கொள்ளப்படுகிறது.
திருமாவளவன் தற்போது சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் MP ஆக இருக்கிறார். அவர் தமிழக அமைச்சரவையில் சேரும்போது அவர் தனது MP பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்பதால் அப்போது அங்கு இடைத்தேர்தல் நடக்கும்.
திமுக - விசிக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை என்பதைத் திருமாவளவன் தெளிவுபடுத்திய நிலையில், திமுகவுடனான அதன் உறவு தொடர்கிறது. இந்த சூழ்நிலையில் திமுக விசிகவை எதிர்த்து சிதம்பரத்தில் போட்டியிடாது என நம்பலாம். அவரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் தவெக.
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதிமுகவும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுவதால் "விசிக அன்னபோஸ்ட் ஆக சிதம்பரம் தொகுதியை கைப்பற்றுமா?" என்ற கேள்வி எழுகிறது. மேலும் சி.வி. சண்முகம் மயிலம் தொகுதியில் வென்றதால் தனது MP பதவியை அவர் ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளது. அப்போது அந்த இடத்தினை தவெக வெல்வது சாத்தியமாகும்!
அன்னபோஸ்ட் என்பதை அனேகம் பேர் அன்ன + போஸ்ட் என்றுதான் பிரித்து அறிகிறார்கள். ஆனால், அன்னபோஸ்ட் என்பது "Unopposed" என்ற ஆங்கில வார்த்தையின் அப்பட்டமான தமிழாக்கம் ஆகும்.
அதாவது அன்னபோஸ்ட் என்றால் 'போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்படுதல்' என பொருள்படுகிறது. பஸ் (Bus), பேனா (Pen), ஆபீஸ் ரிசல்ட் டிக்கட் போன்று பல ஆங்கிலச் சொற்கள் மட்டுமன்றி பிற மொழிச் சொற்களும் அப்படியே தமிழில் புழக்கத்தில் உள்ளன.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
Limitless Ego, Limited Time!
The ancient economic proverb that "human wants are unlimited" finds a modern, vivid personification in the expansive aspirations of Donald Trump. His list of desires reads like a fusion of historical conquest and divine entitlement:
- a Nobel Peace Prize to cement his legacy,
- a seat in the England King’s Buckingham Palace in London,
- and even the improbable spiritual heights of the Papacy.
Geopolitically, these wants translate into a vision of "Greater America" that defies traditional sovereignty:
- from the recurring proposal to purchase Greenland to the hypothetical annexation of Canada, his ambitions treat the global map as a real estate portfolio.
- in the Middle East, his focus remains singular: securing Iran's enriched uranium — what he has colloquially termed "nuclear dust" — to ensure a world where only his terms dictate security.
However, these limitless wants now collide with the hard reality of finite means. As of early 2026, domestic support is no longer a guaranteed reservoir. The relentless drive for unconditional European backing in global conflicts faces a stonewall increasingly wary of unilateralism.
With a presidency governed by the ticking clock of constitutional limits and dwindling approval, the "restless and relentless" leader faces the ultimate paradox: an infinite will trapped within the very finite boundaries of time and democracy. The world watches to see if these ambitions will reshape reality or remain the grand echoes of an era defined by the pursuit of the impossible.
#Trump
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
தமிழக அரசியலில் இளமைப் புரட்சி: கோட்டையைப் பிடித்த டிவிகே (TVK) இளைஞர் படை!
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 தேர்தல் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் பிடியில் இருந்த தமிழகம், இன்று மாற்றத்தின் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் (TVK) அடைந்துள்ள வெற்றி, வெறும் அரசியல் வெற்றியல்ல; அது இளமையின் வெற்றி, மாற்றத்தின் தோற்றம்!
திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் வெற்றி பெற்ற பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் 60 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். பலமுறை பதவியில் இருந்த இவர்களுக்குப் பதிலாக, புதிய ரத்தம் பாய வேண்டும் என்ற மக்களின் ஏக்கம் வாக்குகளாக மாறியுள்ளன. பழம் தின்று கொட்டை போட்ட தலைவர்களை விட இளைஞர்களை தொடர்பு கொள்வது எளிது.
திமுகவில் சுமார் 40% எம்.எல்.ஏ-க்கள் முதியவர்களாக இருக்கும் நிலையில், அதிமுகவிலும் 50-70 வயதுடையவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்களால் இன்றைய தலைமுறையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பொதுவெளியில் வேலை பார்க்க முடியாது என்பதே நிதர்சனம்.
தமிழக வெற்றிக் கழகம் வரலாறு காணாத வகையில் சுமார் 14 இளம் எம்.எல்.ஏ-க்களை (30 வயதிற்குட்பட்டோர்) சட்டமன்றத்திற்கு அனுப்பியுள்ளது. அனுபவம் என்ற பெயரில் காலங்காலமாக பதவியில் அமர்ந்திருப்பவர்களைத் தவிர்த்து, துடிப்பான இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த டிவிகே யின் வியூகம் இன்று அக்கட்சியை தனிப்பெரும் கட்சியாக உயர்த்தியுள்ளது.
உதாரணமாக அஷ்விதா (Ashweetha), விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய பெண் நிர்வாகி ஆவார். பீடி தொழிலாளியின் மகளாகப் பிறந்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து, தற்போது தவெக-வில் இணைந்து, சமூக மாற்றத்திற்காக உழைப்பவர், இவர் ஒரு கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர் என அறியப்படுகிறார்.
தமிழக மக்களின் ஓட்டுக்களை ஒருக்காலும் விலைபேச முடியாது என்பதை திராவிடக் கட்சிகளுக்கு உணர்த்திய தேர்தல் இது. முதியவர்கள் மற்றும் வாரிசுகளின் பிடியில் இருந்த தமிழக அரசியல், இன்று இப்பேர்ப்பட்ட துடிப்பான மற்றும் தகுதியுள்ள இளைய தலைமுறையினரின் கைகளுக்கு மாறியுள்ளது. இதுதான் புதிய தமிழகத்திற்கான உண்மையான விடியல்!
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு?
தேர்தல் முடிந்த ஈரம்கூடக் காயவில்லை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டணி அமைத்தால் அது என்ன ஜனநாயகம்?
AI படம்: A historic handshake of DMK with ADMK!
2026 தேர்தலுக்கு முன் திமுக ஆளும் கட்சியாகவும் அதிமுக எதிர்க்கட்சியாகவும் இருந்தது. தமிழகத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் திரைமறைவில் எப்போதுமே நல்லுறவு இருந்ததாக சொல்லப்பட்டது இன்று வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.
இருந்தாலும் இன்று வெளிப்படையாக திமுக-அதிமுக கூட்டணி என்ற செய்திகளைப் படிக்கும்போது திகைப்பாக இருக்கிறது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்காக இப்படியா? EPS எதற்கெடுத்தாலும் "MGR ஆவி மன்னிக்காது" என்று சொல்துண்டு. திமுகவுடன் கூட்டணி வைத்த அவரை அது மன்னிக்குமா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்பது?
அதிமுகவை பாஜக ஆட்டுவிப்பதாகக் திமுக கூறிய கட்டுக் கதைகளை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா பாஜகவுக்கு அதிமுகவினர் அடிமைகளாகச் செயல்படுவதாகக் கூறிவந்த திமுக தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக் கட்டிலில் அமர நினைப்பது ஏன்?
அதே போல, காங்கிரசார் பதவி வெறி பிடித்து அலைவதாகவும் முதுகில் குத்திவிட்டதாகவும் குற்றம் சாட்டும் இரண்டு கழங்கங்களும் மக்களுடைய விருப்பத்திற்கு மாறாக அவர்களுடைய முதுகில் குத்தி ஆட்சிக் கட்டிலில் அமரத் துடிப்பது ஏன்?
மக்களுக்கு எப்படியாவது சேவை செய்தே தீர்வது என கங்கணம் கட்டிக்கொண்டு இரண்டு கழகங்களும் கூட்டணி அமைக்கின்றன. இது மிகவும் பொருத்தமான கூட்டணி. இதே புரிதல் அவர்களுக்குள் எப்போதும் இருந்திருக்கிறது.
திமுக அமைச்சர்கள் மீது வண்டி வண்டியாக ஊழல் புகார்கள் என்றால், அதிமுக அமைச்சர்கள் மீது அதைவிட மோசமான புகார்கள். இனம் இனத்துடன் சேர்வதுதானே முறை?
முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு? அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தாய்க் கழகமான திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் வைக்கலாம். 'கள்ள உறவு' என்று மற்ற கட்சிகளை விமர்சனம் செய்து வந்த திமுக, இப்போது யாரை குறை சொல்லப் போகிறது?
கழகங்கள் ஜனநாயகத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவை என்று அவர்களே சொல்லிக்கொள்வார்கள். விலை கொடுத்து மக்களின் ஓட்டுக்களை இவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்க நினைத்தது ஊடகங்களில் சந்தி சிரித்தது.
இனி என்னென்ன கர்மங்களை எல்லாம் தமிழக மக்கள் காண வேண்டுமோ தெரியவில்லை. நாளை ஒருவேளை காங்கிரஸ் கட்சி பாஜக கூட்டணிக்கு வந்தாலும் வரலாம். அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை!
அது போகட்டும் -
* தவெகவினர் திமுக-அதிமுக கூட்டணியை எதிர்த்து மறுதேர்தலுக்கு தயாராக இருக்கிறார்கள்.
* மக்களும் மறுதேர்தலுக்கு தயாராக இருக்கிறார்கள்.
* இரண்டு கழகங்களும் மறுதேர்தலுக்கு தயாரா?
#திமுகசெய்திகள் #அதிமுகசெய்திகள் #தவெகசெய்திகள் #TVK #BJP #DMK #ADMK #Elections2026 #TamilnaduNews
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
An Eye for Two Eyes: The Illusion of Power in a Fractured World
The unveiling of Poseidon — a nuclear-powered, nuclear-armed autonomous underwater vehicle designed to trigger radioactive tidal waves — signals a chilling shift in warfare. This is no longer about battlefield dominance; it is about annihilation without confrontation. Weapons like Poseidon do not merely deter — they threaten to erase entire coastal civilizations. In such a world, the phrase “balance of power” begins to sound dangerously outdated.
Yet, the contradictions run deeper. The global order continues to pressure Iran over its nuclear ambitions, while Israel — widely believed to possess nuclear capabilities — remains outside formal scrutiny. This selective enforcement erodes the moral authority of so-called guardians of peace. When rules apply unevenly, they cease to be rules and become instruments of power.
Meanwhile, the arms race has evolved beyond traditional metrics. The United States continues to invest in advanced systems such as the Long-Range Hypersonic Weapon, capable of striking targets at extreme speeds with minimal warning. China, on the other hand, has tested systems like the DF-17, which combines maneuverability with velocity, making interception nearly impossible. These are not defensive tools; they are instruments designed to outpace reaction itself.
In such a landscape, nuclear deterrence appears increasingly fragile. When control lies in volatile political environments — as often debated in the context of Pakistan — the risk is not just intentional use, but miscalculation or loss of command. Deterrence assumes rational actors; history suggests that assumption is not always safe.
At the same time, warfare itself has transformed. Cyberattacks, economic sanctions, supply chain disruptions, and information warfare now rival missiles in their impact. The cost of a line of code can outweigh that of a fleet. Traditional symbols of power — aircraft carriers like the USS Abraham Lincoln or USS Gerald R. Ford — appear increasingly vulnerable in a world of asymmetric threats.
Ironically, nations under prolonged pressure have adapted faster. Iran, despite decades of sanctions, has leveraged technological innovation to build resilient and unconventional capabilities. This underscores a critical truth: superiority in scale does not guarantee superiority in outcome.
The real cost of this arms obsession is borne elsewhere — in rising poverty, environmental degradation, displacement, and neglected public health. Every dollar spent on escalation is a dollar diverted from survival.
The question, then, is stark: are we willing to blind ourselves if it ensures our enemy is blinded twice over? Because that is where this path leads — a world of diminished vision, where no one truly wins.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
எங்களுக்கு (DMK) 96 போதும், உங்களுக்கு (TVK) 108 போதாது!
"அதையும் பாத்துரலாம்" என்கிறார் விஜய்!
திமுக 96 MLA க்களை மட்டும் வைத்துக்கொண்டு காங்கிரஸ் (வெளியில் இருந்து) தந்த ஆதரவுடன் தமிழகத்தை 5 வருடங்கள் கத்தி முனையில் நின்று ஆண்டது வரலாறு. அதனை ஜெ மைனாரிட்டி அரசு என்றே குறிப்பிட்டு வந்தார். அதே திமுக, இன்று 108 சட்டமன்ற உறுப்பினர்களுடன் இருக்கும் தவெக ஆட்சி அமைக்கக்கூடாது என்று செயல்படுவதாக பேச்சு.
ஏற்கனவே தவெகவுடன் காங்கிரஸ் சேர்ந்திருப்பது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரமாகப் பார்க்கப் படுகிறது. இந்த பின்புலத்தில், VCKவும் கம்யூனிஸ்டுகளும் தவெக ஆட்சி அமைப்பதற்கு இன்று ஆதரவு கொடுத்து விட்டால் நாளை அதுவே பாராளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என திமுக அஞ்சுகிறது.
இன்றைக்கு நிலவுகிற அரசியல் சூழ்நிலையில், உதிரிக் கட்சிகள் தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்கும்போது அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரவேண்டும் என உடன்படிக்கை செய்துகொள்வது நல்லது. அதைத்தான் காங்கிரஸ் செய்துள்ளது. அதற்குக் காரணம், திராவிடக் கட்சிகளுக்கு இனிமேல் தமிழக அரசியலில் மறுமலர்ச்சி கிடையாது என்பதால்தான்.
திமுகவைப் பொறுத்த வரை, அதிமுக ஆட்சி அமைத்தாலும் பரவாயில்லை, தவெக ஆட்சி அமைப்பதை தடுத்துவிட வேண்டும் என முயன்று பார்க்கிறது. முயலலாம், ஆனால் முடிவது சந்தேகமே! அப்படி ஒருவேளை முடிந்தால் அதுவே திராவிடக் கட்சிகளின் கடைசி ஆட்சியாக இருக்கும். அதுவும் நீண்ட நாட்கள் நீடிக்காது.
மேலும் இது, "பதவி வெறி பிடித்த திராவிடக் கட்சிகள்" என்று சொல்லி நாளை களத்தில் கழகங்களின் சோலியை முடிப்பது தவெகவிற்கு எளிதாக இருக்கும். இருப்பினும், தவெகவை இன்று ஆட்சி அமைப்பதற்கு விட்டுவிட்டால் தானாகவே அடுத்து வரும் தேர்தலில் திமுக தனிமைப் படுத்தப்படும் என்ற பயம்தான் திமுகவை இப்போது ஆட்டிப் படைக்கிறது.
திமுகவின் தயவில் ஆட்சி நடக்கும்போது அது தனக்கு உகந்த நேரத்தில் ஆதரவை வாபஸ் வாங்கி அடுத்த தேர்தலுக்கு வழிகோல முடியும். அதே சமயம் தவெக ஆட்சியில் இருந்தால், அது தனக்கு சாதகமான நேரத்தில் சட்டசபையை கலைத்துவிட்டு மக்கள் நலத்திட்டங்களை வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்ற, எமக்கு முழு மெஜாரிட்டியை தாருங்கள்" மறு தேர்தலுக்காக மக்களிடம் செல்லலாம்.
திமுக - அதிமுக கூட்டணியின் சாத்தியக்கூறுகள் மற்றும் அதன் அவசியம் பற்றி "திமுக - அதிமுக கூட்டணி அமையுமா?" என்ற தலைப்பில் நேற்று ஒரு பதிவினைப்போட்டோம். தற்போது திமுகவின் நிலைப்பாடும் அதனையே பிரதிபலிக்கிறது.
திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் யதார்த்தத்தை உணர்ந்து தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்கும் என நம்புகிறோம். ஒரு வேளை ஆட்சி அமைப்பதற்கு தவெகவிற்கு வாய்ப்பே கிடைக்காமல் போனால், மக்களுடைய கோபத்தினால் அடுத்த தேர்தலில் கழகங்களுக்கு ஓரிரண்டு தொகுதிகள் கிடைத்தாலே அது பெரிய விஷயம். தவெக 210 தொகுதிகளுக்கும் மேலாக கைப்பற்றும். உதிரிக் கட்சிகளின் நிலையை சொல்ல வேண்டியதே இல்லை! உஷார்!
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
திமுக - அதிமுக கூட்டணி அமையுமா?
வேறு வழியில்லை. வீரமணி எதற்கு இருக்கிறார்? சொல்லப் போனால், இந்தக் கட்சிகள் இணைவது நல்லது. இல்லாவிட்டால் இந்தக் கட்சிகளுடன் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்க முன் வராது. திமுக - திமுக கூட்டணி அல்லது இணைப்பு நடந்தாலும்கூட
அடுத்த தேர்தலில் TVK Vs BJP என்பதுதான் களநிலவரமாக இருக்கும்.
பாஜக ஒரு சீட்டில் வென்றது, ஓட்டு சதவீதம் 3% என்ற விமர்சனங்கள் ஒரு புறம் இருந்தாலும், இனி வரும் காலங்களில் தமிழகத்தின் அரசியல் களம் TVK Vs BJP என்றுதான் இருக்கப் போகிறது என்று அதிமுக மற்றும் திமுக கட்சியினரே கலக்கத்தில் இருக்கிறார்கள்.
திமுகவும் அதிமுகவும் மாறி மாறி அமோகமாக வெல்வதும் அடுத்த தேர்தலில் அதல பாதாளத்தில் விழுவதும் வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் வீறுகொண்டு மீண்டு வந்தது தனிக்கதை. ஆனால், 1967க்குப்பின் தவெகவிடம் இரண்டு கட்சிகளும் அடி வாங்கியதில் திராவிடக் கட்சிகளின் சகாப்தமே தமிழகத்தில் முடிந்து விட்டது.
கூட்டணி அரசியலில் BJPயின் உண்மையான பலம் தெரியவில்லை. ஆனால், வளர்ச்சி இல்லை என்று சொல்ல முடியாது. அடுத்த தேர்தலில் திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்துப் போட்டி போட்டாலும் அந்தக் கூட்டணிமூன்றாம் இடத்தில்தான் நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழக அரசியலில் நடந்து முடிந்தது சாதாரண மாற்றம் இல்லை. அது ஒரு யுகப்புரட்சி. இரண்டு திராவிடக் கட்சிகளும் இணைந்தால் ஒருவேளை அது சில காலம் அரசியலில் தொடரலாம். பிரிந்தே கிடந்தால் அது திராவிடக் கொள்கைக்கு மேலும் பலவீனம். எனினும் மீண்டும் ஒரு திராவிடக்கட்சி ஆட்சிக்கு வருவது துர்லபம்.
திராவிடம் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் தேசியக் கட்சிகளான BJP, காங்கிரஸ் மட்டுமல்லாமல் கம்யூனிஸ்டு கட்சியினரும் கவனமாக இருப்பார்கள். நேற்று எப்படி BJP தீண்டத்தகாத கட்சியாகத் தமிழகத்தில் இருந்ததோ, அந்த நிலைக்கு திராவிடக் கட்சிகள் இன்று தள்ளப்பட்டுவிட்டன.
நாளைய கூட்டணிகள் தவெக மற்றும் BJP தலைமைகளில் அமையப்போகும் கூட்டணிகளே. இன்றே அதற்கான முஸ்தீபுகளைக் காண முடிகிறது. பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தவெகவுடன் சேர்வதற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாமக மதிமேல் பூனையாக உள்ளது.
விஜய் புண்ணியத்தில் தமிகத்தில் இன்று இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்ச்சி காணப்படுகிறது. அரசியல் விழிப்புணர்ச்சி அதிகமாகும்போது இயற்கையாகவே அரசியவ் விசுவாசங்கள் மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இந்தப் பின்புலத்தில் இற்றுப்போன திராவிடக் கட்சிகள் புத்துயிர் பெறுவது சாத்தியம் இல்லை.
இரண்டு கட்சிகளும் இணைவதில் கொள்கை முரண்பாடுகள் எதுவும் இல்லை. சொல்லப்போனால் இன்றைய திமுகவின் முன்னணித் தலைவர்களில் பாதிக்கு மேல் அதிமுகவில் இருந்து வந்தவர்களே. பெரியாரும் அண்ணாவும்தானே இரண்டு கட்சிகளின் பிதாமகர்கள்? பின்னே, இணைவதில் கூச்சம் என்ன வேண்டிக் கிடக்கிறது?
#TNElections2026 #TamilnaduElections #DMK #ADMK #TVK #TamilnaduBJP
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
The End of the West? Finland Crowns India, Brazil, and South Africa the New Global Architects
In a landmark address at the Raisina Dialogue 2026 in New Delhi, Finnish President Alexander Stubb declared that the era of Western-dominated global politics is ending. He identified "middle powers" like India, Brazil, and South Africa as the primary architects of the next world order.
Commentary on the Triad's Leadership
The rise of these nations marks a shift toward a multilateral system rooted in "value-based realism". Their collective ascent is bolstered by three key pillars:
Economic & Developmental Momentum: India, with a growth rate exceeding 7%, is projected to be a central economic force through 2047. Brazil’s sophisticated capital markets and South Africa’s demographic potential provide the Global South with significant economic leverage to tackle 21st-century challenges like climate change and sustainable development.
Stability & Demographic Advantage: Unlike many Western nations facing stagnation, these countries possess young, vibrant populations. Their stability is not just internal but strategic; India, for instance, is increasingly viewed as a "trusted mediator" capable of brokering peace in complex regional conflicts, such as those in the Middle East.
Legal & Institutional Advocacy: Stubb’s speech specifically highlighted the need for UN Security Council reform, advocating for permanent seats for India, Brazil, and African representatives. By championing a rules-based order that respects state sovereignty and territorial integrity, these nations provide a legal counterweight to traditional power blocs.
The Global South is no longer a passive player. The strategic choices made by these nations — balancing multilateralism with multipolarity — will define whether the future global system is cooperative or confrontational. By endorsing S. Jaishankar's famous critique of Eurocentrism, Stubb acknowledged that global solutions must now be forged in partnership with these emerging powers.
Conclusion
The super powers of the day deeply involved in the ongoing endless wars with ulterior motives can't lead the world. The rise of India, Brazil, and South Africa represents more than just economic growth. By advocating for a "New Delhi Moment" — a collaborative effort to reform global institutions like the UN — they offer a peaceful alternative to the zero-sum games played by traditional powers.
#Eurocentrism #JaiShankar #ZeroSumGame #UN #US #Raisina Dialogue
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
பேசிப் பேசியே, பேரம் பேசியே...
பேரம் பேசுவதில் EPS ஓர் அசகாய சூரர் என்று அதிமுக தலைவர்களில் சிலரும், அவரிடம் அனுபவப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களில் சிலரும் மேடைகளிலேயே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள். அடிப்படையில் ஒரு விவசாயி என்பதை விட வியாபாரி என்பதால் பேரம் பேசுவது, அமெரிக்க அதிபர் டிரம்பைப் போல அவருக்கு கைவந்த கலை.
வாழ்க்கையே ஒரு வியாபாரம் என்றாகிவிட்டதால், பொதுவாழ்வில் பெருந்தன்மை வேண்டும் என இன்று யார் நினைக்கிறார்கள்? அதேசமயம், அரசியலிலும்கூட, சோரம் போவது என்பது ஏற்புடையது அல்ல. சோரம் போதல் என்பதற்கு நம்பிக்கை துரோகம், வஞ்சனை செய்தல் என்றும் பொருள் கொள்ளலாம்.
நடந்து முடிந்த தேர்தலில், ஆரம்பத்தில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு ஓரளவு இருந்தது. சசிகலா, மற்றும் OPS ஆகியோரை உதாசீனம் செய்தது மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமும் EPS பெருந்தன்மையாக நடந்து கொள்ளவில்லை. சிலரிடம் வஞ்சனை பாராட்டியது வெளிப்படையாகத் தெரிந்ததால் களத்தில் கூட்டணிக் கட்சிகளிடையே ஒத்துழைப்பின்மை நிலவியது.
உதாரணமாக, அண்ணாமலைக்குத் தோதான ஒரு தொகுதியை EPS நினைத்தால் ஒதுக்கியிருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யாததால் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். எனினும் அவர் அதிமுக வேட்பாளர்களுக்காக கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டார். அது அவரின் பெருந்தன்மை.
பாஜக செல்வாக்குடன் இருக்கும் கோவை மற்றும் சென்னையில் தொகுதிகளை தராமல், வெற்றி பெற வாய்ப்பில்லாத புதுக்கோட்டை மற்றும் தஞ்சையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதனால் கடைசி நிமிடம் வரை பேச்சுவார்த்தை நீடித்தது. EPS சற்றும் விட்டுக் கொடுக்காமல் கடைசிவரை பிடிவாதம் பிடித்து வென்றது ஒரு சாதனை இல்லை.
அதை ராஜதந்திரம் என்றும் சொல்ல முடியாது. "இது ஒரு நல்ல கூட்டணி அமைவதற்கு முழுமனதுடன் பாடுபட்ட பாஜகவிற்கு செய்த நம்பிக்கை துரோகம். அதில் அவருக்கு தனது கட்சி வெற்றிபெற வேண்டும் என்பதை விட, தொடர்ந்து உதவி வந்த கூட்டணி கட்சி தோல்வி அடையட்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது" என பாஜகவில் சிலர் கூறுவதை மறுக்க முடியவில்லை.
திமுக வலிமையான கூட்டணி அமைத்திருக்கிறது என்று கருதப்பட்ட நிலையில் அதை மேலும் பலப் படுத்தும் விதமாக கூட்டணி பேச்சுவார்தைகளின் போது EPS தேமுதிகவை அவமதிக்கும் வகையில் பேசியதால் அது திமுக பக்கம் சாய்ந்தது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் அதே போல கைவிடப்பட்டார். EPS தன்னை MGR மற்றும் ஜெ போல மக்கள் தலைவராக நினைத்துக் கொண்டு அதிகாரத்துடன் செயல் படுவதாக கட்சித் தொண்டர்கள் பொருமுகிறார்கள்.
வைகைச்செல்வன், 'மாஃபா' பாண்டியராஜன், சேவூர் ராமசந்திரன், தனபால் போன்ற செல்வாக்கான தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுப்பதிலேயே EPS கண்ணும் கருத்துமாக இருந்ததாக சொல்லப் படுகிறது. கட்சிக்குத் தலைவராக இருப்பவரே கோஷ்டி மனப்பான்மையுடன் செயல்படலாமா? MGR மற்றும் ஜெ அந்த மாதிரி செயல்பட்டதில்லை என தொண்டர்கள் அங்கலாய்க்கிறார்கள்.
முத்தாய்ப்பாக, ஆரம்ப கால கட்டத்தில் தனது அரசியல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய செங்கோட்டையனுக்கு EPS செய்தது மிகப்பெரிய துரோகம் என்கிறார்கள். "EPS யாருக்குமே விசுவாசமாக இருந்ததில்லை, துரோகம் செய்வது இவரது பிறவிக் குணம்" என்று கட்சியின் பல்வேறு தரப்பினரும் பேசுவதை காணமுடிகிறது.
விஜய் முதல்வரானதில் திமுக எதிர்க்கட்சி ஆனது. எடப்பாடி அதிமுகவிற்கும் திமுகவிற்கும்தான் போட்டி என்று சொல்லி அந்த போட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிகொடுத்ததுதான் மிச்சம். கடைசியில் கட்சியின் ஓட்டு சதவீதம் 21% ஆக குறைந்ததுதான் மிச்சம்.
தனது ஈகோ, பிடிவாதம், வஞ்சகம் ஆகியவற்றால் கட்சியை அழிவுப் பாதையில் அழைத்துச் சென்ற EPS, தனது தலைமைக்கு சசிகலா, OPS, செங்கோட்டையன் போன்றவர்களால் ஆபத்து நேரலாம் என்ற பயத்தில் அவர்களை திட்டமிட்டு ஒரம் கட்டியதாக சொல்லப் படுகிறது. ஆனால் தேர்தலுக்குப் பின் தலைமைப் பொறுப்பில் மாற்றம் தேவை என அதிமுகவின் அடிமட்டத்திலிருந்து எழும் குரலை சில தலைவர்களுடன் சமரசம் செய்து கொண்டு இனிமேலும் EPS ஆல் தடுக்க முடியாது எனத் தெரிகிறது.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
The American Mirage: Liberty for Sale, Trump for President
The notion of "American Exceptionalism" has long been the primary export of the United States — a glossy brochure promising liberty, democracy, and a rules-based global order. But today, that brochure is being shredded. The world is increasingly forced to ask: Does America stand for its founding principles, or has it become a mere vessel for the ambitions of Donald Trump and the narrow interests of the Israeli lobby?
For decades, the U.S. has operated under a veil of moral superiority while systematically dismantling the very freedoms it claims to protect. True freedom includes the right to economic self-determination, yet Washington weaponizes the global financial system through aggressive sanctions. These are not mere diplomatic tools; they are acts of economic warfare designed to stifle trade and deny prosperity to "disobedient" nations.
The "rules-based order" is equally illusory. Under the current trajectory, "rules" are things America applies to others while exempting itself and its chosen allies. The glaring double standard regarding the Nuclear Non-Proliferation Treaty (NPT) — where Iran is strangled by oversight while Israel’s nuclear opacity is met with a wink and a nod — is the ultimate proof of a discriminatory global hierarchy.
Historically, the U.S. has not been the guardian of democracy but its executioner. From the orchestrated coup in Iran in 1953 to more recent meddling in nations like Bangladesh, the American playbook is consistent: if a democracy doesn’t serve Washington’s immediate interests, it is destabilized. Leaders are ousted, revolutions are incited, and chaos is branded as "liberation."
Today, this pattern has culminated in a political landscape where "America First" has morphed into "Trump First," and "Trump First" is inextricably tied to an unconditional subservience to Israel. This brand of selfishness abandons the universal for the tribal. It sacrifices global stability on the altar of personal power and narrow geopolitical alliances.
America is at a crossroads. It cannot continue to lecture the world on human rights while underwriting their violation. It cannot champion "free trade" while blockading its rivals. If the United States continues to stand for the ego of one man and the interests of a single ally over the principles of universal justice, it will find itself standing alone. It is time for America to decide: does it stand for its soul, or does it stand for Trump?
#AmericaFirst #MAGA #Trump #USA #NPT
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴




