saravanan
763 views
1 months ago
#sathaana unavu. சாதம் செய்வது எப்படி.... தேவையானவை அ‌ரிசி - 2 ஆழா‌க்கு உளுந்தம்பருப்பு - 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 2 மேஜைக்கரண்டி முந்திரிப்பருப்பு - 15 கறிவேப்பிலை - 1 கைப்பிடி நெய் - 4 மேஜைக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செ‌ய்யு‌ம் முறை கறிவேப்பிலையைச் சிறிதளவு நெய்யில் வறுத்துத் தூளாக்கிக் கொள்ள வேண்டும். அரிசியைச் சாதமாக வடித்து உதிரியாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து மீதமுள்ள நெய்யை ஊற்றி அது காய்ந்ததும் கடுகையும், உளுந்தம் பருப்பையும் போட்டு தாளித்துக் கொண்டு முந்திரிப் பருப்பைப் பொடியாக நறுக்கி அதையும் கடலைப் பருப்பையும் போட்டுப் பொன்னிறமாக வறுத்து அடுப்பிலிருந்து இறக்குங்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் சாதத்தைக் கொட்டி கறிவேப்பிலைத் தூள், மிளகுத்தூள், வறுத்த முந்திரி பருப்பு, கடலைப்பருப்பு, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறினால் சுவையான கறிவேப்பிலை சாதம் தயார். 🟨🟨🟨🟥🟥🟥 *சமையல் குறிப்புகள்* 🟨🟨🟨🟥🟥🟥