திருநீற்றுச் சுவடு
723 views
25 days ago
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏கோவில் வழிபட்ட திருத்தலங்களை வணங்கி சரஸ்வதியின் அருள் பெறுவோம் திருக்காளத்தி சரஸ்வதி வழிபட்ட தலங்களில்‌ முதன்மை யானது காளத்தியாகும்‌ ஒரு முனிவரின்‌ சாபத்தால்‌ ஊமையாகிப்போன சரஸ்வதி இங்கு வந்து வழிபட்‌ டாள்‌. அவள்‌ இங்கு சரஸ்வதி தீர்த்தம்‌ என்ற பெயரில்‌ காளத்தீசுவரர்‌ ஆலயத்திற்குள்ளேயே ஒரு தீர்த்‌தத்தை உண்டாக்கி அதில்‌ நீராடி சிவவழிபாடு செய்து வந்தாள்‌ அதனால்‌ அவளுடைய ஊழைைத்துவம்‌ நீங்கி விட்டது. மேலும்‌ பலர்‌ இங்கு வந்து இதில்‌ மூழ்கி இதனை அருந்தியதால்‌ தனது ஊமைத்தன்மை நீங்கி அறிவு பெற்றுள்ளனர்‌ இங்குள்ள தீர்த்தத்தை அருந்தினால்‌ நல்ல கல்வியறிவு உண்டாகும்‌ என்று நம்புகின்றனர்‌ பெருவேளூர் வாக்தேவி ஓசையாக வெளிப்படும்போது வாணி  என்றும்‌, அறிவாக வெளிப்படும்போது சரஸ்‌வதி என்றும்‌ அழைக்கப்படுகின்றாள்‌ பிரம்மதேவனின்‌ வலப்புறம்‌ அவள்‌ வாணியாகவும்‌ இடது புறத்‌தில்‌ சரஸ்வதியாகவும்‌ வீற்றிருக்கின்றாள்‌ இந்த இரண்டு உருவத்துடனும்‌ அவள்‌  சிவபெருமானை  பெருவேளூரில்‌ வழிபட்டாள்‌ அதனால்‌ அந்த சிவ லிங்கம்‌ வாணிசரஸ்வதீசுவரர்‌ அழைக்கப்படுகிறது திருப்பூந்துருத்தி தஞ்சை மாவட்டம்‌ திருப்பூந்துருத்தி புஷ்வனேசுவரர்‌ ஆலயத்தில்‌ கருவறைக்‌ கோட்ட தேவதையாக சரஸ்வதி அமைந்துள்ளதைக்‌ காண்கிறோம்‌ இவள்‌ மேலிரண்டு கரங்களில்‌ அட்ச மாலையுடன்‌ சுவடியையும்‌ முன்னிரு கரங்களில்‌ அபய ஊரு முத்திரைகளையும்‌ கொண்டுள்ளாள்‌ இராமேசுவரம் இராமேசுவரத்தில்‌ சரஸ்வதி மூன்று வடிவங்‌களில்‌ இருந்து வழிபட்டு அமைத்த தீர்த்தங்கள்‌ முறையே காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி தீர்த்தங்கள்‌ என்ற பெயரில்‌ வரிசையாக உள்ளன திருவீழிமிழலை வாக்தேவி, மூன்று காலங்களில்‌ (சந்தியா தேவதையாக விளங்குகையில்‌) காயத்திரி, சாவித்திரி சரஸ்வதி என்ற மூன்று வடிவங்களைக்‌ கொள்கின்‌றாள்‌ இந்த மூன்று வடிவுடன்‌ அவள்‌ வழிபட்ட தலம்‌ திருவீழிமிழலை ஆகும்‌  இங்குள்ள மூன்று லிங்கங்‌ கள்‌ காயத்ரீஸ்வரர்‌, சாவித்திரீஸ்வரர்‌, சரஸ்வதீசுவரர்‌ என்று அழைக்கப்படுகின்றன திருநெய்த்தானம்‌ திருநெய்த்தானம்‌ சரஸ்வதி பூசித்துப்‌ பேறு பெற்றதலமாகும்‌. இது  திருவையாறு சப்தத்தானத்‌ தலங்‌களில்‌ ஒன்றாகும்‌. இங்கு சரஸ்வதி அமைத்த தீர்த்தம்‌ உள்ளது குருகாவூர் குருகாவூரில்‌ பிரமதேவன்‌ வழிபட்டபோது அவனுடன்‌ சரஸ்வதியும்‌ சிவலிங்க பூசைசெய்தாள்‌ அங்கு அவள்‌ உண்டாக்கிய தீர்த்தம்‌ சரஸ்வதி தீர்த்தம்‌ இந்நாளில்‌ (வடக்குக்குளம்‌) என்று அழைக்‌கப் படுகின்றது காஞ்சிபுரம் கல்வி கரையிலா கச்சி என்று புகழப்‌ பெறும்‌ காஞ்சியில்‌ அமைந்திருப்பது கச்சபேசுவரர்‌ ஆலயமாகும்‌ இது சரஸ்வதி சிவபூசைச்‌ செய்து பேறுபெற்றத்‌ தலங்களில்‌ ஒன்றாகும்‌ இங்குச்‌ சரஸ்வதி தேவிக்கான தனிச்‌ சந்நிதி உள்ளது |