திருச்சி திருவெறும்பூரில் எல் ஏ சினிமாவின் டோல்பி சினிமா தியேட்டர் வந்துள்ளது. மைக்கேல் ஜாக்சன் படம் அங்கு பார்த்தேன் (அவருடைய fan frenzy நமக்கும் தொற்றிக் கொள்கிறது!! யார் அவர்?! எப்படி அவருக்கு இப்படி ஒரு எனர்ஜி பவர் என்று நினைக்கத் தோன்றியது!! நேரம் போனதே தெரியவில்லை; உங்களுக்கு மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம்!!). படம் ஆரம்பிக்கும் முன் டோல்பி சினிமாவை பற்றிய விளக்கம் கொடுக்கும் போது ஒரு வரிகள்: "இதுவரை நீங்கள் பார்த்த கருப்பு நிறம் இது. ஆனால், உண்மையான கருப்பு நிறம் எப்படி இருக்கும் தெரியுமா?! அது இப்படி இருக்கும்" என்று கான்ட்ராஸ்ட் காண்பித்த போது, எனக்கு வேறொரு உள்ளுணர்வு பற்றிய நினைவு வந்தது: அது நாத்திகம் பற்றியது - யாரோ உள்ளுணர்வில் ஒரு முறை கூறியது: "இது வரை நாம் தமிழகத்தில் பார்த்தது நாத்திகமே அல்ல. உண்மையான நாத்திகம் இனிமேல் தான் வரப்போகிறது". திராவிட இயக்கங்கள் பேசிய நாத்திகம் முற்றிலும் சமூக சீர்திருத்தங்களுக்காக பேசப்பட்டது. அவற்றால் உண்மையில் மக்களிடையே அவ்வளவு நாத்திகம் ஏற்படவில்லை. மக்கள் கோவில்களுக்கு சென்று கொண்டு தான் இருந்தனர். பக்தி தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், மேற்கூறிய இந்த புதிய நாத்திகம் கடவுளுக்கு எதிரான ஆபத்தான வெறுப்பு உணர்வை நம் மனதுக்குள் திணிக்கும். கடவுள் தேவையில்லை என்பது வேறு. கடவுளுக்கு எதிரான வெறுப்பு உணர்வு என்பது வேறு. அத்தகைய ஒரு உணர்வு மேலெழுப்பப் படுகின்றது என்று நினைக்கிறேன். இது மிகவும் அபாயகரமானது; நமது கலாச்சாரத்தையே வீழ்த்தக் கூடியது. முக்கியமாக இது முற்றிலும் தேவையற்றது. இது உண்மையா?! அப்படி ஒரு நிழல் இயக்கம் நடைபெறுகிறதா?! நாட்டில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை!! ஆனால், என் வாழ்க்கையில் அப்படித் தான் இருக்கிறது. ஆம், என் ஆன்மீக வாழ்க்கையில் இதை நான் உணர்கிறேன்!! கோவிலுக்கு போனால் டார்ச்சர்; பாட்டு பாடினால் டார்ச்சர், விரதம் இருக்க முடியவில்லை; போன மூன்று வாரங்களாக சனிக்கிழமை விரதம் மீண்டும் ஆரம்பித்து இருக்கிறேன். ஆனால், விரதத்திற்கு அடுத்த நாள் விரதம் இருந்த சுவடே இல்லை; மேலும் மேலும் நாத்திக உணர்வு தூண்டப்படுகிறது!! இது என்னுடைய தனிப்பட்ட சூழ்நிலை, தனிப்பட்ட கர்மமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அப்படியல்லாமல் எல்லாருக்கும் இத்தகைய பிரச்னைகள் உருவாக்கப் படுகிறது என்றால் இதை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் பௌதீக உலகம் வேறு; ஆன்மீக (துறவற) உலகம் வேறு என்று இருந்தது. ஆனால் இப்போது பௌதீக உலகம் ஆன்மீக உலகத்தால், அல்லது நிழல் உலகத்தால் ஆளப்படுகிறது. திராவிட கட்சிகள் நாத்திகத்தில் ஆரம்பித்தவை; அவற்றால் இந்த சமுதாயத்திற்கு ஆபத்தான புதிய நாத்திகத்தை எதிர்க்கவும் முடியாது; ஏற்றுக் கொள்ளவும் முடியாது; ஆன்மீக ரீதியாகவும் கையாளவும் முடியாது! இதெல்லாம் உண்மையென்றால் உண்மையான ஆன்மீகத்தை மீட்டெடுக்கும் வரையில் நமக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை தான்!! சனாதனம் இதற்கு அப்பாற்பட்டதா?! அல்லது அதற்கும் இந்த பிரச்சினை இருக்குமா தெரியவில்லை!! சனாதனம் இதை எப்படி சமாளிக்கிறது என்று பார்ப்போம்!! எனினும் இப்போதைக்கு இது என் ஆன்மீக வாழ்வின் தனிப்பட்ட பிரச்சினை என்றே நான் கருத விழைகிறேன்!!
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம