D Muthu Prakash, Kanchipuram 💐
1K views
23 days ago
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 19.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== முன்னடந்து யாமம் மொழிந்துநட என்மகனே பின்னடந்து நானும் யாமம் பிசகாமல் நடத்திவைப் பேன்மகனே நல்லமணி மரகதமே அடத்திவிட்ட யாமமது அனுப்போல் பிசகாமல் காட்டுவிப்பேன் மகனே கண்ணேநீ முன்னடநீ . விளக்கம் ========== நீ எனக்கு முன்னால் நடந்து சென்று யுகமுடிவு பற்றிக் கூறிச் செல்லு. உன் பின்னாலே வரும் நான் உன் யுகமுடிவு உபதேசச் சொல் தவறாதபடி எல்லாவற்றையும் நடத்தி வருவேன். மகனே, நல்ல மரகதமே, நீ கூறுகின்ற யுக முடிவு உபதேசங்களை ஓர் அணு அளவு கூட மாறுபடாமல் நான் நடத்திக் காட்டுவேன். மகனே, என் கண்ணே, நீ முன்னால் நடந்து செல்லுவாயாக. . . அகிலம் ======== தாட்டிமையா யுன்வாக்கால் தானுரைத்த யாமமெல்லாம் நடத்திவைக்க வாறேன் நன்மகனே வுன்பிறகே கடல்திரைவாய்ப் பதிகள் கண்டுசென்று தானிருநீ தண்ணீர் மண்ணீந்து தானிருபோ என்மகனே . விளக்கம் ========== நீ உனது மிகுந்த சக்திகளினாலும் உன் வாக்கினாலும் உரைத்த யுக முடிவு உபதேசங்களை நடத்தி வைக்க உன்னோடு நான் பின்னால் வருகிறேன். இந்தக் கடலின் திரை சந்திக்கும் இடத்திலிருக்கும் பதிகளுக்குச் சென்று விட்டுப் போ மகனே. நீ பூமியில் சென்றதும், மக்களுக்குத் தண்ணீரும் மண்ணும் கொடுத்து மனச்சஞ்சலம், பிணி ஆகிய நோய்களைத் தீர்த்து வா. . . அகிலம் ======== கண்ணி லுருக்காணும் கைக்குளொரு கிள்ளைவரும் பகைவன் மடிவன் பைங்கிள்ளை யங்காகும் உகவன் வருவன் ஒருவ னறிவான்காண் பகவான் சுழற்றும் பாருலக மும்பழுக்கும் அகங்காணும் பாந்தள் அஞ்சாட்சரங் காணும் மூசிர சீர்சிரசு முகாசிரசு முன்காணும் பார்சிரசு கண்டு வாறேனென் பாலகனே . விளக்கம் ========== அப்போது, உன் ஞானக்கண்ணில் அழகு காட்சி ஒன்று தோன்றும். உன் கைக்குள் முப்பத்திரண்டு அறங்களாலாகிய கிளி ஒன்று அடைக்கலம் தேடிவரும். அதன் பகைவனாகிய கலி அழிந்து, அறம் முப்பத்திரண்டும் உன்னோடு தங்கி இருக்கும். உனக்கு உகந்தவன் ஒருவன் வருவான். அவனைப் பற்றி நான் ஒருவன் மட்டுமே அறிவேன். காண்பாயாக. பகவான் சக்தியினால் சுழன்று கொணடிருக்கும் இவ்வுலக மக்கள் முதிர்ச்சி நிலை ஏங்துவர். இவ்வாறு முதிர்ச்சி அடைந்த மக்களின் அகத்தில் காணும் குண்டலினி சக்தி சிவாய நம என்னும் ஐந்து எழுத்துக்களின் தன்மையைக் காட்டித்தரும். அப்பொழுது மூசிரசு, ஈர்சிரசு, முகாசிரசு ஆகிய தத்துவத் தலைகள் உனக்கு காட்சியளிக்கும். நான் எல்லாவற்றையும்விட உயர்வான பார்சிரசு கண்டு வந்தவன் என் மகனே. . . அகிலம் ======== திகையாதே முன்னடநீ சந்தமுனி தன்கூட பகையாதே என்மகனே பஞ்சவரைக் காத்துக்கொள்ளு அஞ்சுபூக் கொண்டு ஆசாரஞ் செய்தோர்க்கு வஞ்சக மில்லாத வாழ்வுகொடு என்மகனே மகனே நீவாற வழியின் பவிசுகண்டு தவமுடித்து நீயும் தாண்டியிரு என்மகனே . விளக்கம் ========== எனவே, சோர்வில்லாது சந்த முனிவரோடு நடந்து செல்லுவாயாக. யாரையும் பகைத்துக் கொள்ளாதே. பஞ்சவர்களையும் காத்துக் கொள்ளு. என்மகனே, தமது ஐம்புலனாகிய ஐந்து பூக்களையும் சேர்த்துப் பூஜை ஆசாரம் செய்பவர்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்தவிதத் துன்பமும் இல்லாத வாழ்வு கொடு. நீ செல்லுகின்ற வழியில் அங்கு நடக்கின்ற செல்வச் செழிப்பு முதலியவற்றைக் கண்டு அறிந்து கொள். நீ தவத்தை முடித்த பிறகு அத்தகைய செழிப்புகளைத் தாண்டி வாழ்வாயாக என்று திருமால் கூறி முடித்தார். . . அகிலம் ======== என்றுவை குண்டருடன் இசைந்தமுனி ரண்டுவிட்டு கொண்டயச்சுக் காத்திருங்கோ குண்டருட பக்கமதில் சாட்சியாய்ப் பார்த்திருங்கோ தரணி வளப்பமெல்லாம் காட்சி கொடுத்திடுங்கோ கண்ணரியோன் முன்னிருந்து கோபங்காட் டாதேயுங்கோ குணமுனிவ ரேகேளும் சாபங் கொடாதேயுங்கோ சாஸ்திர முனிவர்களே நாரா யணர்பெலங்கள் நன்றா யறிவீர்களே . விளக்கம் ========== இவ்வாறு திருமால் வைகுண்டரிடம் கூறிவிட்டு அங்கிருந்த கலைமுனி ஞானமுனி இருவரையும் அழைத்து, அவர்களை நோக்கி, சாத்திரம் அறிந்த முனிவர்களே, வைகுண்டர் பக்கத்தில் அமர்ந்து அவரைக் காத்தும், அவர் செயல்களைச் சாட்சியாய்ப் பார்த்தும் இருங்கள். அவர் முன்னால் அவர் காணும்படி அமர்ந்திருங்கள். கண் போன்ற வைகுண்டர் முன் கோபப்படாது இருங்கள். நீங்கள் யாருக்கும் சாபம் கொடுக்காதீர்கள். நாராயணராகிய என்னுடைய சக்தியை நீங்கள் அறீவீர்கள் அல்லவா? . . அகிலம் ======== சீரான பொறுதி செய்வதுநீர் கண்டிருங்கோ வைகுண்ட மாமுனிதான் வாழுந் தலத்தருகே மெய்குண்டமாய் மேற்கு மேன்மூலை யோர்தனுக்கு வடகீழ் மூலை மாமுனியே ஓர்தனுக்கு இடமிதுவே சொன்னேன் யார்க்குந்தெரி யாதிருங்கோ இந்தப் படிகாத்து இருங்கோ தருணம்வரை சிந்த முனிவர்களே செல்லு மிவர்கூட என்று முனிகளுக்கு இயம்பச் சிவநாதன் நன்றுநன் றென்று நன்முனிவர் சம்மதித்தார் . விளக்கம் ========== குள்ளமான முனிவர்களே, அவர் செய்கின்ற செயல்கள் முழுவதும் நீங்கள் மிகப்பொறுமையுடன் பார்த்திருங்கள். வைகுண்டமாமுனி வாழுகின்ற தலத்து அருகே மெய்க்குண்டம் ஒன்று உண்டு. அதற்கு மேற்கு மூலையில் காணப்படும் உயர்ந்த பகுதியில் உங்களில் ஒரு முனிவரும் வடகிழக்கு மூலையில் உங்களில் ஒரு முனிவருமாக அமர்ந்து வைகுண்டரைக் காத்து வாருங்கள். தருமயுகத் தருணம் வரும்வரை வைகுண்டருடனே இருங்கள் என்று சிவனுக்கு மைத்துனராகிய திருமால் கட்டளை இட்டார். உடனே முனிவர்கள் நன்று நன்று என்று கூறிச் சம்மதம் தெரிவித்தனர். . . தொடரும்... அய்யா உண்டு.