#🤔 ஆன்மீக சிந்தனைகள் ##ஆன்மீக தகவல்கள் 🕉️ #🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 காகிதமும் ரூபாய் நோட்டும்!*
*சிவ-சக்தி குறியீடான திரு & திருமதி!*
சிவம், சக்தி என்ற பிரபஞ்ச தத்துவத்தை நம் கையில் இருக்கும் ஒரு ரூபாய் நோட்டின் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்று என்றாவது நினைத்ததுண்டா?
*வெள்ளைக் காகிதம் தான் சிவம்:*
அது எதுவுமற்ற வெற்று வெளி. ஆதாரம். அது இல்லையென்றால் சக்தியால் எதன் மீதும் அமர முடியாது.
*ரூபாய் மதிப்பு தான் சக்தி:*
அந்தக் காகிதத்திற்கு மதிப்பு தருவது அதன் மேல் இருக்கும் ஆற்றல். சக்தி இல்லையென்றால் சிவத்திற்கு உலகியல் மதிப்பே இல்லை! சிவமும் சக்தியும் ஒன்றிணைந்தால் தான் அது "பயனுள்ள ரூபாய் நோட்டு".
இதே தத்துவத்தைத்தான் நம் இல்லறத்தில் "திரு மற்றும் திருமதி" என்று வைத்திருக்கிறோம். மகாகவி பாரதியின் வரிகள் இதற்குச் சான்று.
*திரு (தந்தை):*
ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன். குடும்பத்தைத் தாங்கி நிற்கும் அசைவற்ற ஆதாரமான 'சிவம்'.
*திருமதி (அன்னை):*
மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள். இல்லறத்தை இயக்கும் மதிப்புமிக்க பேரொளியான 'சக்தி'.
கருவில் நம் பஸ் ரூட்டைத் தீர்மானித்த அந்தப் பரம்பொருள், நம் இல்லறத்திலும் சிவ-சக்தியாய் இணைந்து வாழும் தத்துவத்தை "திரு-திருமதி" என்ற வார்த்தைகளுக்குள் மறைத்து வைத்திருக்கிறது!
*"சிவமே தந்தை... சக்தியே அன்னை... இல்லறமே நல்லறம்!"*