saravanan
553 views
4 days ago
#innraya SINTHANAY சிந்தனை* 🌷04.05.2026🌷 கடினமான பாதைகள் தான்.. அழகான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது..!! 🔸🔹உலகியல் வாழ்வில் நாம் ஒரு சிறு துரும்பு கூட இல்லை என்பதை உணர்ந்து கொண்டோமா.... "இழந்ததை" மறந்து விடு..! "இருப்பதை" இழக்காமல் இருக்க..!! 🔹🔸நம்மை எதிர்பார்த்து உலகம் இயங்கிக் கொண்டிருப்பதில்லை 🔸🔹நாம் தான் எல்லாம் நம் கையில் உள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம் கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறோம். 🔸🔹இந்தக் காலம் சிக்கலான முடிச்சுகளை சுமந்தபடி மாறாத தேகத்தில் மாறுகின்ற காலம் 🔹🔸எதற்குமே சஞ்சலமின்றி சரணம் என்றே சுழன்று கொண்டிருக்கின்ற காலம்.... தன்னுள் அடக்கியபடி இயல்பாய் இயங்குகின்றது.... 🔸🔹வாழ்வின் அவசர ஓட்டத்தில் இதைப் புரிந்து கொள்ளத் தான் நமக்கு நேரம் இருப்பதில்லை... காலம் கடந்து புரிந்து கொள்கின்றோம்..... 🔹🔸எனவே நிச்சயமில்லாத இந்த வாழ்வில் பெருமையடித்துக் கொள்வதற்கு எதுவுமில்லை, 🔸🔹உலகில் நானே அறிவாளி... என்னால் எல்லாம் முடியும்... என்று தம்பட்டம் அடித்தவர்கள் எங்கு என்று தேடிக் கொண்டிருக்கின்றோம்... உண்மை இது தான்..... 🔹🔸நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வரை .. நிம்மதியாய்.... மகிழ்ச்சியாய்... கொண்டாட்டமாய்.... குதூகலத்தோடு... அமைதியாய்... ஆனந்தத்தோடு.... துள்ளல் குறையாமல்... இயந்திரத்தனமாக வாழாமல்..... வாழ்வினை அனுபவித்து..... நண்பர்கள், சுற்றார்கள், உற்றார் உறவினர்கள் என்று அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்வோம்... 🔸🔹இந்தத் தெளிவும் புரிதலும் மட்டுமே வாழ்வை எளிதாய் இன்பத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.... இயல்பையும் காலத்தையும் நேரத்தையும் ஆழ்ந்த புரிதல் கொண்டே அவற்றை அனுபவிக்க இயலும் 😊😊😊