D Muthu Prakash, Kanchipuram 💐
617 views
1 days ago
#அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== விஞ்சையருளல் தொடர்ச்சி ======================== என்மகனே நானுனக்கு இன்னமொரு விஞ்சைசொல்வேன் பொன்மகனே யுன்னுடைய புத்தியிலே வைத்திருநீ இச்சட்டந் தன்னில் எள்ளளவு தப்பினதால் தீச்சட்டம் காய்க்கத் தேதிவரு மென்மகனே . விளக்கம் ========== பொன்மகனே, உனக்கு இன்னும் ஓர் உபதேசம் சொல்லுகிறேன். உன்னுடைய புத்தியில் இதை எப்பொழுதும் நினைவோடு பாதுகாத்து வைத்துக் கொள். நான் சொல்லிய இந்தச் சட்டங்களில் சிறிதளவு நீ தப்பினாலும் உனக்கு தண்டனை தரத் தீச்சட்டம் காய்த்து அதில் உன்னை இட்டுத் தண்டிக்கும் நாள் வரும் என்மகனே. . . அகிலம் ======== அனுப்போல் மறவாதே யான்வைத்த சட்டமதில் மனுப்போ லென்றிராதே மனதெண்ண மாயிருநீ பஞ்சமிர்தே யென்னுடைய பாதைதப்பி நீநடந்தால் கொஞ்சுங் கிளியே கொன்னெழுப்பு வேனுனையும் . விளக்கம் ========== ஒரு அணு அளவு கூட மறந்துவிடாதே. மனு சாத்திரம் போன்று இதை எண்ணி இருந்துவிடாது எப்பொழுதும் இந்த உபதேசங்களை எண்ணியவாறு இரு. பஞ்சாமிர்தம் போன்றவனே, என் இனிய பாதை தப்பி நீ செயல்பட்டால் உன்னையும் பிறரைப் போன்று கொன்று எழுப்பிடுவேன். . . அகிலம் ======== பதறியிரு என்மகனே பம்மியிரு கண்மணியே பொறுதி மகனே பெரியோரா யாகுவது உறுதி மகனே உலகமதை யாளுவது மகனேநா னெத்தனையோ மகாபெலங்கள் கற்றவன்காண் உகமீதே சொல்லித் தொலையுமோ வுத்தமனே . விளக்கம் ========== எனவே. தவறு நேராவண்ணம் பதறியிரு. அதே சமயம், அடக்கம் உடையவனாக வாழ்ந்து வா. பொறுமையாய் இரு. அந்த பொறுமை உன்னைப் பெரியோனாக்கி விடும் மகனே. நீ உலகத்தை ஆளுவது மிகவும் உறுதி ஆகும். மகனே, நான் எத்தனையோ பெரிய பலங்கள் எல்லாம் கற்றுள்ளேன். அதை யுகம் யுகமாகச் சொன்னால்கூட அது சொல்லித் தீருமா? உத்தம மகனே, . . அகிலம் ======== எவ்வுகங் களுக்கும் இப்படியே தர்மமில்லை செவ்வுமகா விஷ்ணுதான் என்றுசொல்லார் தேசமதில் இப்போது என்மகனே இக்கலியன் மாய்மாலம் செப்ப எளிதல்லவே செயிக்க ஏலாதாராலும் . விளக்கம் ========== எல்லா யுகங்களுக்கும் இப்படிப்பட்ட தருமம் இல்லை. ஒவ்வொரு யுகத்துக்கும் தருமநிலை வித்தியாசப்படும். இதுவரை செம்மையான மகாவிஷ்ணுதான் யுகம் அழித்தது என்று தேச மக்கள் சொல்லுவார்கள். ஆனால் இப்பொழுது இக்கலி யுகத்தில் இக்கலியின் மாய மாலத்தின் தன்மை பற்றிச் சொல்ல எளிதான காரியம் இல்லை. கலியினை வெற்றி கொள்ள யாராலும் முடியாது. . . அகிலம் ======== இப்போதுன்னோ டுரைத்த இயல்விஞ்சைக் ககப்படுங்காண் அப்பனே பம்மலிலே அகப்படுங்கா ணிக்கலியும் கலியென்றால் எலியல்லவே கணையாளி வேண்டாமே வலிமாய நினைவு மாய்மால மென்மகனே . விளக்கம் ========== ஆனால், உன்னோடு உரைத்த உபதேசம் வெற்றி கொள்ள உதவிடும். என்மகனே, நீ அடங்கிப் போனால் உன் கட்டுப்பாட்டில் கலி அகப்படும். கலி என்று சொன்னால் அது சாதாரண எலி அன்று. அதை வெல்ல கணை, அம்பு போன்றவை தேவையில்லை. கலியானது வலிமையான மாய நினைவாகிய மாய்மாலம் ஆகும். . . அகிலம் ======== ஆனதா லாயுதங்கள் அம்புதடி வேண்டாமே மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே . விளக்கம் ========== எனவே, கலியினை அழிக்க ஆயுதங்களோ, அம்போ, தடியோ தேவை இல்லை. ஒரே மன நினைவோடு இருந்தால் கலி தன்னாலே தானே அழிந்து விடும். . . தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩