ஃபாலோவ்
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
@mahicbe
20,300
போஸ்ட்
18,352
பின்தொடர்பவர்கள்
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
605 காட்சிகள்
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #தெரிந்து கொள்வோமா 🤔 #நலம் வாழ ஸ்ரீ மத்வாச்சாரியார்... துவைத வேதாந்த தத்துவத்தை நிலைநாட்டியவர். கர்நாடகாவில் பிறந்த இவர், வாயுவின் மூன்றாவது அவதாரமாகப் போற்றப்படுகிறார். அத்வைதத்தை மறுத்து, பிரம்மம் (விஷ்ணு) மற்றும் ஆத்மா முற்றிலும் வேறுபட்டவை என்ற துவைதக் கொள்கையை வலியுறுத்தினார். உடுப்பியில் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலை நிறுவியவர். கி.பி 1238ஆம் ஆண்டு, விளம்பி என்ற பெயருடைய வருடத்தில் 32 லக்ஷணங்களும் கூடிய ஒர் ஆண் குழந்தை வேதவதி-மத்யகேஹ பட்டர் என்னும் தம்பதியினருக்குப் பிறந்தது. இக் குழந்தைக்கு வாசுதேவன் என்று பெயரிட்டு வளர்த்தனர். குழந்தை சிரிப்பும், விளையாட்டுமாய் வளர்ந்து வந்தான். ஒருநாள் மத்யகேஹ பட்டர் வாங்கியிருந்த கடனை திரும்பக் கேட்டு வந்தான் ஒருவன். அந்த சமயத்தில் மத்யகேஹ பட்டர் ஊரில் இல்லை. கடன்காரனோ கடனை திருப்பி கொடுத்தாலே ஒழிய இங்கிருந்து போகமாட்டேன் என்று தொல்லை செய்கிறான். அப்போது 6 வயதே ஆன குழந்தை வாசுதேவன் வேகமாக சமயலறைக்குச் சென்று அங்கிருந்த சில புளியங்கொட்டைகளை தனது சிறுகையில் அள்ளிக் கொண்டுவந்து உனக்கு பணம்தானே வேண்டும் இதோ வாங்கிக் கொள் என்று கடன்காரன் கையில் அளிக்கிறான். புளியங்க்கொட்டைகள் எல்லாம் தங்க காசுகளாக மின்னியதாம். 7 வயதில் குழந்தைக்கு உபநயனம் செய்வித்து குருகுலத்திற்கு அனுப்பினர். குருகுலத்தில் பாடம் பயிலும் சமயத்தில் ஒரு நாள் ஓர் மலைப்பாம்பு வழியில் படுத்திருக்க, வாசுதேவன் தனது காலால் அழுந்தச் செய்தே அந்த பாம்பை கொன்றான். இவ்வாறாக ஒருசில அதிசயமான செய்கைகள செய்த வாசுதேவனது கைரேகைகளை பார்த்த ஒரு பெரியவர் திகைப்படைகிறார். பின்னர் அன்னை வேதவதியிடம் "அம்மா உங்கள் திருக்குமரன் ஓர் அவதார புருஷன். முன்பு வாயுகுமாரனாக ராமயண காலத்திலும், பாண்டவர்களில் பீமனாகவும் இருந்தவர் இவர். இப்பிறவியில் சிறந்த ஞானியாக பாரதம் முழுவதும் ஒளிவிசுவார்" என்றார். வாசுதேவனுக்கும் தனது 15 ம் வயதிலேயே சன்யாசியாகும் எண்ணம் வந்தது. ஆனால் பெற்றோர் பாசம் அவரைக் கட்டுப்படுத்த, ஒருநாள் தன் பெற்றோரிடம், "நான் ஒரே மகனாக இருப்பதால் தானே என்னை சன்யாசம் கொள்ள தடுக்கிறீர்கள்?, உங்களுக்கு இன்னொரு மகன் பிறப்பான் அதன் பின் நான் சன்யாசம் ஏற்கிறேன் என்று கூறுகிறார். அது போலவே வேதவதி-மத்யகேஹ பட்டருக்கு இன்னொரு ஆண் மகவு பிறக்கிறது. அப்போது வாசுதேவன் வயது 16. காஷாயம் தரித்து, இல்லத்தை துறந்து உடுப்பி வந்து அச்சுதப்பிரக்ஞர் என்னும் மகானை குருவாக ஏற்கிறார். அனந்தேஸ்வரர் கோவிலில் சன்யாச தீக்ஷை அளித்து பூரணபிரக்ஞர், ஆனந்த தீர்த்தர் என்ற தீக்ஷா நாமம் பெறுகிறார். தனது 23 ம் வயதில் கீதைக்கு பாஷ்யம் எழுதி, அதனை வேதவியாசரிடம் சமர்பணம் செய்வதற்காக பத்ரிநாத் சென்று, பின்னர் ப்ரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் செய்திருக்கிறார். இவர் கன்னடம், சம்ஸ்கிருதம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் இருந்திருக்கிறார். தசபிரகரணங்கள், உபநிஷத் விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனுவியாக்கியானம் என்று 37 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் கனவிலேயே உடுப்பி கிருஷ்ணன் விக்ரஹம் தான் இருக்கும் இடம் பற்றிக் கூறி, அதனை மீட்கச் செய்து உடுப்பியில் கோவில் கட்டி எழுந்தருளுகிறார். இன்றும் இவர் ஸ்தாபித்த அஷ்ட மடங்களைச் சார்ந்த சன்யாசிகளே இங்கு பூஜை செய்கின்றனர். இறைவனிடம் அழியாத அன்பு கொள்வதும், எல்லாரிடமும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்டுவதும், தனக்குரிய கடமைகளை பணிவுடன் செய்வதும், பக்தி உள்ளத்துடன் வாழ்வதும், வாழ்கையை நல்ல பணிகள் செய்ய அர்பணிப்பதுமே வாழ்வின் தத்துவம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். 'மத்வர்' என்று, அதாவது 'யாராலும் வெல்ல முடியாதவர்' என்று அழைக்கத் தொடங்கினர் சிஷ்யர்கள். இவர் அளித்த ப்ரம்ம ஞான தத்துவமே த்வைதம் எனப்படுகிறது. இவரது கூற்றுப்படி பரமாத்மாவும்-ஜீவாத்மாவும் என்றும் ஐக்கியமாகாது. இவரது தத்துவங்களை பின்பற்றியவர்களை மாத்வர் என்று கூறும் வழக்கம் ஏற்பட்டது. இன்றும் மாத்வர்களுக்கு ஹரியும் வாயுவும் ப்ராதான்யம், ஏனென்றால் மாத்வர் ஹரிபக்தியில் சிறந்தவர், அதே சமயத்தில் அவரே வாயுகுமாரன் என்பதால். மாத்வர் மற்ற சன்யாசிகள் போல ப்ருந்தாவனப் பிரவேசம் செய்யவில்லை. 1317 ம் வருஷம் மாக சுக்லபக்ஷ நவமியில் அனந்தேஸ்வரர் கோவிலில் தனது சிஷ்யர்களுக்கு பாடம் நடத்தும் போது திடீரென அவர் மீது புஷ்பங்களால் விருஷ்டி நடந்து அவரை மூடி ஒரு பூங்குன்று உருவாகிறது. இதை அவரிடம் பாடம் கற்ற மாணவர்கள், கோவிலுக்கு வந்தவர்கள் எல்லாம் பார்க்கிறார்கள். பிறகு புஷ்பங்களை விலக்கிப் பார்த்தால் மத்வரை காணவில்லை. இவர் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் வேதவியாசர் அருகில் அமர்ந்து பாடம் கேட்பதாக நம்பிக்கை. மத்வர் வாழ்ந்த வீடு, கல்வி கற்ற இடம், விளையாடிய இடம் நீராடிய குளம், மலைப்பாம்பு இறந்த இடம் எல்லாம் பாஜகம் என்ற கிராமத்தில் கர்னாடகத்தின் தென் பகுதியில் இருக்கிறது. இவரின் வாழ்க்கை வரலாறு ஸ்ரீ ஸுமத்வ விஜய மஹா காவியம் என்று அழைக்கப் படுகிறது.
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
307 காட்சிகள்
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க 😟 ஒண்ணு தெரிஞ்சு போச்சுறா... 😒 இந்த பிரபஞ்சத்தில, உங்க மத்தியில, இந்த உசிர காப்பாத்துறது ரொம்ப சிரமம்!! 😳😔🥺
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
659 காட்சிகள்
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 இது ஃப்ரெஷ்ஷா நல்லா இருக்கே... 🤔 சொல்லி சொல்லி பாத்தான், 🙄 கேக்கற மாதிரி இல்ல... 😳 உடனே அதோட level க்கு இறங்கிட்டான். 😎 இப்ப அது பதறி அடிச்சு சொன்ன பேச்சு கேக்குது!! 😉😏
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
547 காட்சிகள்
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க இது எப்படி இருக்கு...?? ஒரு மரியாதைக்குரிய பள்ளி ஆசிரியர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவரும் அவரது மனைவியும் ஒரு பிளாட்டில் வசித்து வந்தனர். 🏠 தசரா பண்டிகைக்கு, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்தனர். 💥🔥 புறப்படுவதற்கு முன், ஆசிரியர் தனக்குள் நினைத்துக் கொண்டார். “நாம் இல்லாதபோது, ​​ஒரு திருடன் உள்ளே நுழைந்தால் என்ன செய்வது...?? வீட்டில் பணம் இல்லாவிட்டாலும், அலமாரிகளை உடைத்து எல்லா இடங்களிலும் குழப்பம் விளைவிக்கலாம்...!!” 😅 எனவே, தனது வீடு சேதமடையாமல் இருக்க, அவர் ₹1000 மேசையில் 💸 வைத்து... இப்படி ஒரு கடிதம் எழுதினார்... 📝 "அன்புள்ள தெரியாத திருடனே, என் வீட்டிற்குள் நுழைய நீங்கள் எடுத்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...!! 🥰 ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நான் ஒரு நடுத்தர வர்க்க மனிதன், என் ஓய்வூதியத்தில் மட்டுமே வாழ்கிறேன்... 😅 எனவே இங்கே மதிப்புமிக்க பொருள்கள் எதுவும் இல்லை. உங்கள் கடின உழைப்பும், விலைமதிப்பற்ற நேரமும் வீணாகிவிடும் என்று நான் வருத்தப் படுகிறேன். 😔 எனவே, உங்கள் முயற்சிக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக, இந்த சிறிய தொகையை ஏற்றுக்கொள்ளுங்கள். 🙏 மேலும், உங்கள் தொழிலில் (திருட்டு 😜) நீங்கள் மேலும் வெற்றி பெற உதவ, நான் கீழே சில குறிப்புகளை தருகிறேன்... 👇" மாஸ்டரின் “அறிவுரை” பின்வருமாறு வாசிக்கப்படுகிறது : 😂👇 8வது மாடியில் - ஒரு ஊழல் மந்திரி வசிக்கிறார் 💼💰 7வது மாடியில் - ஒரு வைர வியாபாரி 🏢 6வது மாடியில் - ஒரு கூட்டுறவு வங்கித் தலைவர் 🏦 5வது மாடியில் - ஒரு பெரிய தொழிலதிபர் 🏭 4வது மாடியில் - ஒரு பிரபல வழக்கறிஞர் ⚖️ 3வது மாடியில் - ஒரு ஊழல் அரசியல்வாதி 😏💍💵 “அவர்களிடம் மலையளவு தங்கமும், பணமும் உள்ளன. உங்கள் ‘வணிக வெற்றி’ அவர்களை சிறிதும் தொந்தரவு செய்யாது! ஏனென்றால் அவர்கள் போலீசில் புகார் கூட செய்ய மாட்டார்கள்!” 😂 தசராவுக்குப் பிறகு, மாஸ்டர் வீடு திரும்பிய போது,மேசையில் ஒரு பெரிய பையைக் கண்டார். 🎒😲 உள்ளே ₹10 லட்சம் ரொக்கம் 💸 மற்றும் ஒரு கடிதம் இருந்தது...!! அதில்... மதிப்பிற்குரிய குருஜி, 🙏 உங்கள் வழிகாட்டுதலுக்கும், போதனைக்கும் மனமார்ந்த நன்றி! 👏👏 நான் உங்கள் ஆலோசனையைப் பின்பற்றினேன், என் பணி வெற்றி பெற்றது! 😄 நன்றியின் அடையாளமாக இந்தச் சிறிய தொகையை விட்டுச் செல்கிறேன். எதிர்காலத்திலும் உங்கள் ஆசீர்வாதங்களையும், ஞானத்தையும் நான் தொடர்ந்து பெற விரும்புகிறேன்... இப்படிக்கு, உங்கள் சீடர் - திருடன் 😄" 😂 மாஸ்டர் அதைப் படித்து சிரித்தார்..., "அடடா! நான் ஓய்வு பெற்றேன் என்று நினைத்தேன். ஆனால் என் கற்பித்தல் பணி இன்னும் தொடர்கிறது போலிருக்கிறதே...!!" 📚
See other profiles for amazing content