ஃபாலோவ்
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
@mahicbe
20,251
போஸ்ட்
18,073
பின்தொடர்பவர்கள்
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
319 காட்சிகள்
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 மஹா சிவராத்திரி... மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி இரவில் சிவபெருமானை வழிபடும் மிக முக்கிய சிவ உற்சவம் ஆகும். லிங்கோத்பவர் தோற்றம், சிவன்-பார்வதி திருமணம், விஷமருந்தி உலகைக் காத்தல், மற்றும் தாண்டவ நடனம் ஆகியவற்றைப் போற்றும் வகையில், இரவு முழுவதும் விழித்திருந்து சிவலிங்க வழிபாடு செய்வது, பாவங்களைப் போக்கி, ஞானத்தையும், மோட்சத்தையும் அளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. மஹா சிவராத்திரியின் சிறப்பும், பல பிறவி பாவம் நீக்கும் வழிபாட்டு முறையும்... மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் சிவனை வழிபட்டு பூஜை நடத்திய நாள் இது. பிப்ரவரி 15ம் தேதியன்று மாலை 05.51 மணிக்கு தான் சதுர்த்தசி திதி துவங்குகிறது. பிப்ரவரி 16ம் தேதி மாலை 06.26 மணியுடன் சதுர்த்தசி திதி நிறைவடைகிறது. இந்த நேரத்தில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள், மஹா சிவராத்திரி ஆகும். ஒருசமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், நாதா உங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள் எது? என்று கேட்டாள். சிவன் அவளிடம், மாசி மாத தேய்பிறை 14ம் நாளான அமாவாசை நாளே எனக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் என் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றார். இவ்வாறு, சிவபெருமானே சொல்லிய விசேஷ விரதம் இது. சிவராத்திரியன்று இரவு முழுதும் சிவன் கோயில்கள் திறந்திருக்கும். விடிய, விடிய நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். முதல் காலத்தில் பால், இரண்டாம் காலத்தில் தயிர், மூன்றாம் காலத்தில் நெய், நான்காம் காலத்தில் தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். சிவராத்திரியின் சிறப்புகள் : மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை மஹா சிவராத்திரி என்பார்கள். ஒவ்வொரு தமிழ் மாதத்திலுமே வெவ்வேறு திதியை ஒட்டி மாத சிவராத்திரி வரும். மாத சிவராத்திரியின் மகிமையை சிவபெருமான் நந்திக்குச் சொன்னார். நந்தி மற்றவர்களுக்குச் சொன்னதாக புராணங்கள் சொல்கின்றன. சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியன்று வரும் சிவராத்திரியில் உமாதேவி சிவனை வழிபட்டாள். வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் வரும் சிவராத்திரியில் சூரியன் ஈசனை வழிபட்டார். ஆனி மாதம் வளர்பிறை சதுர்த்தசி சிவபெருமான் சிவராத்திரியில் தன்னைத் தானே வழிபட்டார். ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகன் வழிபட்ட நாள். ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சந்திரன் வழிபட்ட தினம். புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி சிவராத்திரியில் ஆதிசேஷன் சிவனை வழிபட்டார். ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி சிவராத்திரி இந்திரன் வழிபட்ட தினம். கார்த்திகை மாதத்தில் வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி என இரண்டு சிவராத்திரிகள். இவை இரண்டிலும் சரஸ்வதி வழிபட்டாள். மார்கழி மாதமும் இரண்டு சிவராத்திரிகள். வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசிகள். இது லட்சுமி வழிபட்ட நாள். தை மாதம் வளர்பிறை த்ரிதியை சிவராத்திரியில் நந்திதேவர் வழிபட்டார். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் தேவர்கள் வழிபட்டனர். பங்குனி வளர்பிறை த்ரிதியை சிவராத்திரியன்று குபேரன் வழிபட்டார். இவ்வளவு பெருமைக்கு உரிய சிவராத்திரி விரதத்தினை நாம் கடைப்பிடித்தால், சிவன் அருளோடு அத்தனை தெய்வங்களின் அருளும் கிட்டும். 🛕🚩 ஓம் நமசிவாய 🙏🔱⚜️ 15 February 2026 Happy Maha Shivratri May the divine energy of Bhagawan Shiva always be with you, protecting and guiding you through every challenge. Wishing you a blessed Maha Shivratri! 🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
552 காட்சிகள்
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sarvam Sivarpanam 🙏🔱⚜️ திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண்புக அவனைக் கொல்லவந்த வலிமை பொருந்திய கூற்றுவனைச் சினந்து, `என் அடியவன் உயிரைக் கவராதே` என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
591 காட்சிகள்
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 The Pulwama attack occurred on February 14, 2019, when a convoy of vehicles carrying Indian security personnel was attacked by a vehicle-borne suicide bomber on the Jammu-Srinagar National Highway in Lethapora, Pulwama district, Jammu and Kashmir. The attack killed 40 Central Reserve Police Force (CRPF) personnel, including the perpetrator, Adil Ahmad Dar, a local Kashmiri youth from Pulwama. India observes Black Day on February 14 to commemorate the victims of the 2019 Pulwama terror attack, highlighting national unity and the country's commitment to security and peace. Jai Hind 🇮🇳 Jai Jawan 🇮🇳
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
791 காட்சிகள்
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Siva Siva 🙏🔱⚜️ திருநெடுங்களம் மேவிய இறைவனே, ஆரவாரித்து எழுந்த, வெண்மையான அலைகளால் சூழப்பட்ட கடல் நஞ்சினைத் தினையளவாகச் செய்து உண்டு கண்டத்தே நிறுத்திய மேம்பட்ட தேவனே, நின்னை மனத்தகத்தே நிறுவியவர்களின் ஆடல், பாடல்களை விரும்பி, இரவும் பகலும் நின்னையே நினைத்து எழும் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
See other profiles for amazing content