#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏
🕉️🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️
நீர்த்துளிகளைத் தூவும் கரிய மேகங்கள் வானத்தில் நின்றவாறு இடி முழக்கத்தைச்செய்ய, அதனைக் கேட்டு அஞ்சியகாட்டுப் பசுக்களின் மந்தைகளான வரிசைகள் வந்து ஒருங்கிணையும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை இறைவர், அடியவர்கள் பொலிவுமிக்க நறுமலர்களைத் தூவி வழிபடவும், வானோர்கள் புகழ்ந்து போற்றவும், அழியா வரம் பெற்ற அசுரர்களின் முப்புரங்களை எரித்து அழித்து அவ்வசுரர்களில் மூவர்க்கு அருளையும் வழங்கிய பெருமையுடையவர்.
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்.
திருமுறை : தேவாரம், முதல் திருமுறை.
பண் : தக்கேசி.
நாடு : நடு நாட்டுத் திருத்தலம்.
தலம் : திருஅண்ணாமலை.
சுவாமி : அருணாசலேசுவரர், அண்ணாமலையார்.
அம்பாள் : அபீதகுசாம்பாள், உண்ணாமுலை.