பகவான் ரமணர்

ரவிசங்கர் ராஜா, ஆரணி
4K காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
பகவான் ரமண மகிரிஷியின் பொன்மொழிகள் 🌹 ரமண மகரிஷியின் போதனைகள் முகப்புப் பக்கம்ஸ்ரீ ரமண மகரிஷிரமண மகரிஷியின் போதனைகள் ஸ்ரீ ரமண மகரிஷிமகிழ்ச்சி எல்லா உயிரினங்களும் எப்போதும் மகிழ்ச்சியையே விரும்புகின்றன, துக்கத்தின் சாயல் இல்லாமல். அதே நேரத்தில் எல்லோரும் தன்னையே அதிகமாக நேசிக்கிறார்கள். அன்பிற்குக் காரணம் மகிழ்ச்சி மட்டுமே. எனவே, அந்த மகிழ்ச்சி ஒன்றில்தான் இருக்க வேண்டும். மேலும், மனம் இல்லாதபோது தூக்கத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அந்த மகிழ்ச்சியை தினமும் அனுபவிக்கிறார்கள். அந்த இயற்கையான மகிழ்ச்சியை அடைய ஒருவர் தன்னை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு, ' நான் யார் ?' என்ற சுயவிசாரணையே முக்கிய வழி. உணர்வு இருப்பு அல்லது உணர்வு மட்டுமே யதார்த்தம். உணர்வு மற்றும் விழிப்புணர்வை நாம் விழிப்பு என்று அழைக்கிறோம். உணர்வு மற்றும் தூக்கத்தை நாம் தூக்கம் என்று அழைக்கிறோம். உணர்வு மற்றும் கனவு, நாம் கனவு என்று அழைக்கிறோம். உணர்வு என்பது அனைத்து படங்களும் வந்து போகும் திரை. திரை உண்மையானது, படங்கள் அதன் மீது வெறும் நிழல்கள். மனம் மனம் என்பது ஆன்மாவில் உள்ளார்ந்த ஒரு அற்புதமான சக்தி. இந்த உடலில் 'நான்' என்று எழுவது மனம். மூளை மற்றும் புலன்கள் வழியாக நுட்பமான மனம் வெளிப்படும்போது, ​​மொத்தப் பெயர்களும் வடிவங்களும் அறியப்படுகின்றன. அது இதயத்தில் நிலைத்திருக்கும்போது பெயர்களும் வடிவங்களும் மறைந்துவிடும்... மனம் இதயத்தில் நிலைத்திருந்தால், அனைத்து எண்ணங்களுக்கும் மூலமான 'நான்' அல்லது அகங்காரம் போய்விடும், மேலும் உண்மையான, நித்தியமான 'நான்' என்ற சுயம் மட்டுமே பிரகாசிக்கும். அகங்காரத்தின் சிறிதளவு தடயமும் இல்லாத இடத்தில், சுயம் இருக்கிறது. "நான் யார்?" - விசாரணை எல்லா எண்ணங்களுக்கும் மூலம் 'நான்' என்ற எண்ணமே. 'நான் யார்?' என்ற சுய விசாரணையால் மட்டுமே மனம் ஒன்றிணையும். 'நான் யார்?' என்ற எண்ணம் மற்ற எல்லா எண்ணங்களையும் அழித்து, இறுதியில் தன்னைத்தானே கொன்றுவிடும். மற்ற எண்ணங்கள் எழுந்தால், அவற்றை முடிக்க முயற்சிக்காமல், இந்த எண்ணம் யாரிடம் எழுந்தது என்று ஒருவர் விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்கள் எழுந்தாலும் என்ன முக்கியம்? ஒவ்வொரு எண்ணமும் எழும்போது ஒருவர் விழிப்புடன் இருந்து இந்த எண்ணம் யாரிடம் ஏற்படுகிறது என்று கேட்க வேண்டும். பதில் 'எனக்கு' என்பதாக இருக்கும். 'நான் யார்?' என்று நீங்கள் விசாரித்தால், மனம் அதன் மூலத்திற்கு (அல்லது அது எங்கிருந்து வந்தது) திரும்பும். எழுந்த எண்ணமும் மூழ்கிவிடும். நீங்கள் இப்படி மேலும் மேலும் பயிற்சி செய்யும்போது, ​​மனம் அதன் மூலமாகவே இருக்கும் சக்தி அதிகரிக்கிறது. சரணடையுங்கள் சரணடைதலை அடைவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று 'நான்' என்பதன் மூலத்தைப் பார்த்து அந்த மூலத்தில் இணைவது. மற்றொன்று 'நானே உதவியற்றவன், கடவுள் மட்டுமே சக்தி வாய்ந்தவர், அவர் மீது என்னை முழுமையாகத் தூக்கி எறிவதைத் தவிர, எனக்குப் பாதுகாப்புக்கு வேறு வழி இல்லை' என்று உணர்ந்து, கடவுள் மட்டுமே இருக்கிறார், ஈகோ ஒரு பொருட்டல்ல என்ற நம்பிக்கையை படிப்படியாக வளர்த்துக் கொள்வது. இரண்டு முறைகளும் ஒரே இலக்கை நோக்கி இட்டுச் செல்கின்றன. முழுமையான சரணடைதல் என்பது ஞானம் அல்லது விடுதலைக்கான மற்றொரு பெயர். மூன்று நிலைகள்: விழிப்பு, கனவு, தூக்கம் கனவுக்கும் விழித்திருக்கும் நிலைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் கனவு குறுகியது, விழித்திருக்கும் நிலை நீண்டது. இரண்டும் மனதின் விளைவு. நமது உண்மையான நிலை துரியா எனப்படும் விழித்திருக்கும், கனவு மற்றும் தூக்க நிலைகளுக்கு அப்பாற்பட்டது . ஸ்ரீ ரமண மகரிஷிஅருள் மற்றும் குரு குரு தேவையில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் குரு எப்போதும் மனித உருவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் ஒருவர் தன்னைத் தாழ்ந்தவர் என்றும், உயர்ந்த, எல்லாம் அறிந்த, எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் தனது சொந்த விதியையும் உலகத்தின் விதியையும் கட்டுப்படுத்தி அவரை வணங்குகிறார் அல்லது பக்தி செய்கிறார் என்றும் நினைக்கிறார். அவர் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்து ஞானம் பெறத் தகுதியானவராக மாறும்போது, ​​அவர் வழிபட்டு வந்த அதே கடவுள் குருவாக வந்து அவரை வழிநடத்துகிறார். அந்த குரு அவரிடம் 'கடவுள் உங்களுக்குள் இருக்கிறார், உள்ளே மூழ்கி உணருங்கள்' என்று சொல்ல மட்டுமே வருகிறார். கடவுள், குரு மற்றும் சுயம் ஒன்றுதான். பகவான் ரமண மகரிஷி 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.5K காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
பக்தர்: சமய உபதேசங்களை வெளியிட்டு நான் பிரச்சாரம் செய்கிறேன்.. ஜபம், கடவுள் புகழைப் பாடுதல், படித்தல் ஆகியவை செய்கிறேன்.. இதை தொடர்ந்து செய்யலாமா? வேறுவிதமாக சொன்னால், 'நான் யார்?' என்ற விசாரத்தைச் செய்யும் போது மேலே சொன்னவற்றைத் தொடர்ந்து செய்யலாமா? பகவான்: ஆத்ம விசாரத்தை விடாமல், இவற்றைத் தொடர்ந்து செய்ய முடியுமானால் நீங்கள் செய்யலாம்... பிராரப்தப்படி வேலை நடக்கும்... முதலில் ஜபம் போன்றவற்றின் காரணத்தை நீங்கள் அறிதல் வேண்டும்... இருந்தபடி இருங்கள்... உண்மை இயல்பு தான் ஜபம்... ஜபமும் கடவுளும் ஒன்றே.... பெயருக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் இடையே ஒற்றுமை உண்டு... *ஸ்ரீ ரமண மகரிஷி...🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.1K காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
❤️ரமணாஷ்ரமத்திற்கு திருமதி.எலியனார் பாலின் நோயீ வந்தார். ❤️ரமணாஷ்ரமத்திற்கு வந்தபோது சர்வாதிகாரி நிரஞ்ஜானந்த ஸ்வாமி அவரை வரவேற்று,நேராக பகவானிடம் அழைத்துச் சென்றார். ❤️அந்த அனுபவத்தை பற்றி நோயீ பகவானுடைய தூய்மையும்,அருளும் அந்த சூழலில் நிரம்பி இருந்ததை நான் உணர்ந்தேன். ❤️அந்த ஞானியின் ஸந்நிதியில், தெய்வீகத்தை ஒருவரால் உணர முடியும். ❤️அவர் புன்னகை செய்தப் பொழுது இறைவனது சாம்ராஜ்யத்தின் தெய்வீக கதவுகள் திறக்கப்பட்டது, போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. ❤️அவருடையதைப் போன்ற தெய்வீக ஒளி பொருந்திய கண்களை நான் அதுவரை கண்டதில்லை. ❤️பகவான் என்னை அன்புடன் வரவேற்று,என்னைப் பற்றி விசாரித்தப் போது என் மனச்சுமை வெகுவாக இறங்கியதோடு, அன்பும்,கருணையும் ததும்பும் பார்வையினால் அவர் வெளிப்படுத்திய ஆசிகள் நேராக என் இதயத்தைத் தொட்டன. ❤️எனக்கு அவர் எத்துணை தேவை என்பதே அவர் உணர்ந்திருந்தார். ❤️நான் உடனே பகவானிடம் ஈர்க்கப்பட்டேன். ❤️அவரது பெருமையும்,தயையும் அனைவரையும் தழுவி அணைத்தது. ❤️அவரது அமைதியான அன்பு,அறிவு இவற்றின் பாதிப்பு,வார்த்தைகளை விட அதிக சக்தி வாய்ந்தவையாக இருந்தன. ❤️அவரிடம் வருபவர்கள் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே. ❤️அவரது உள்ளத்தில் ஒளி வீசிய பேரமைதியை எல்லோராலும் உணர முடிந்தது என்று கூறினார். ❤️அந்த நொடியில் இருந்து ஓராண்டுக்கு பின் பகவானிடம் விடை பெற செல்லும் வரை,நோயீன் விழிகள் கண்ணீரை பெருக்கியவாறு இருந்தன. ❤️பகவான் அவர் மீது செலுத்திய கவனம் இடைவெளி இன்றி தொடர்ந்து இருந்தது. ❤️நோயீ பகவானுடைய ஸந்நிதிக்கு வந்த கணத்திலேயே பகவானது கவனம் நோயீடம் திரும்பி விடும். ❤️பகவானுடைய வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த இந்த அற்புதமான உறவு நம்பகத்தக்கதாக இல்லை,ஆனால் அது உண்மை. ❤️ஒரு பெண்ணின் எளிமையும், உள்ளத்தையும் உருக்கும் கண்ணீரும் மூத்த பக்தர்களையும் அவரிடம் அன்பு கொள்ளச் செய்தது. ❤️ஆரம்பத்தில்,அவர் பெருக்கிய கண்ணீருக்கு காரணம் கவலை, துன்பம்,வேதனை இவைகளாக இருந்தன. ❤️ஆனால் அவர் பின்னர் பெருக்கிய கண்ணீரோ அவரது விவரிக்க இயலாத ஆனந்தம்,ஆன்மீக நிறைவு இவற்றின் இயல்பான வெளிப்பாடாக இருந்தது. ❤️பகவானை பார்த்த பிறகுதான் பல ஆண்டுகளாக உறங்காத அவர், ஆழ்ந்து உறங்கினார். ❤️அப்போதிருந்து,தான் வழக்கமாக உட்கொண்டிருந்த தூக்க மாத்திரைகளை நிரந்தரமாக நிறுத்திவிட்டார். ❤️பகவானின் நேரடியான ஆசிகளே அதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார். ❤️அவரால் எப்படி அதை சமாளிக்க முடிந்தது என்று கேட்ட பொழுது மருந்துக்கெல்லாம் மருந்தான, எப்போதும் கைவிடாத,பகவானுடைய அருளைப் பெற்றது தான் இதற்கு காரணம் என்று அவர் கூறியது, பகவான் தனது பாடலில் அருணாசலத்தை மருந்துக்கெல்லாம் மருந்து என பாடி இருப்பதை எதிரொளிப்பதாக உள்ளது. 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.1K காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
சிவமணியம் கேள்வி: ஹடயோகம் அவசியமா? பகவான்: அது ஒரு சகாயம். அவசியம் கிடையாது. சாதகனைப் பொறுத்தது. விசாரணையிலே பிராணன் அடங்கிடும். பிராணனை அடக்கியோ, மனசை அடக்கியோ உண்மைக்குப் போயிடலாம். ஹடயோகம் பிராணனை அடக்கும். விசாரம் மனசை நாசம் பண்ணிடும். கேள்வி: ஞானத்துக்கு அப்புறம் ஞானிக்கு தனித்தன்மை இருக்குமா? பகவான்: எப்படி வச்சுக்கொள்ள முடியும்! கேள்வி: 'நேதி நேதி'ன்னு நான் தியானம் பண்றேன். அது சரியா? பகவான்: இல்லே. அது முதல்லே தியானமே இல்லே. நான்கறதோட மூலத்தைக் கண்டுபிடிங்கோ. தவறாம அங்கே போகணும். போலியா இருக்கற 'நான்'கறது போய், எப்போதும் இருக்கற 'தான்' மாத்ரம் மிஞ்சும். 'தான்'கறது இல்லாம... போலியா நான் இருக்காது. கேள்வி: எனக்கு சில சமயங்கள்ல ஆத்மானுபவம் ஏற்படுது. அதை எப்படி திரும்பப் பெறுவது? எப்படி தக்க வைக்கறது? எப்படி நீடித்து இருக்கறது? இதுக்கு அப்பியாசம் என்ன? அந்த அப்பியாசத்துக்கு தனி இடம் தேவையா? பகவான்: நீங்க திரும்பப்பெறுவது எப்படின்னு கேக்கறேள்...ஆனா... ஆத்மா எப்போதும் நித்ய சித்தமாக இருக்கு. அஞ்ஞான நீக்கமே ஆத்மாவை அடையறதா சொல்லப்படறது. நீங்க தக்க வைக்கறது எப்படின்னுகேக்கறேள்... ஆனா... ஒருமுறை அடைஞ்சா.... அது இங்கேயே இப்போவே இருக்குன்னு தெரிஞ்சுடும். அது தொலையறதே இல்லே. நீங்க நீடித்து ஆத்மானுபவத்திலே இருக்கறது எப்படின்னு கேக்கறேள்...ஆனா... அதை நீட்டிக்க, சுருக்கிக்க முடியாது. அது இருக்கற வஸ்து. நீங்க தனியிடம் தேவையான்னு கேக்கறேள்...ஆத்மாவிலே இருக்கறதுக்கு பெயர்தான் ஏகாந்தம். ஆத்மாவிற்கு அன்னியமா இடம் இல்லை. நீங்க இதுக்கு என்ன அப்பியாசம்ன்னு கேக்கறேள்..... ஆத்ம விசாரணையே அப்பியாசம். கேள்வி: மனதை அடக்குவது எப்படி? பகவான்: இரண்டு வழியிருக்கு - ஒண்ணு மனசுன்னா என்னன்னு பாக்கறது. அப்படிப் பாத்தா அடக்கறதுக்கு மனசுன்னு ஒண்ணும் இருக்காது. இல்லே... மனசை ஏதோ ஒண்ணுலே நிலை நிறுத்தணும். அப்போ மனசு அமைதியா இருக்கும். கேள்வி: நாங்கள்லாம் உலகத்துல உழல்றவங்க. ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதாவது பிரச்சனை இருந்துகிட்டேயிருக்கு! எப்படி வெளியே வர்றதுன்னே தெரியலை. இறைவன் கிட்டே எவ்வளவு முறையிட்டாலும் ஒண்ணும் திருப்தியா இல்லை. என்ன செய்யறது? பகவான்: இறைவன்கிட்டே முறையிடாதேள்! சரணடைங்கோ! கேள்வி. சரணடைஞ்சாலும் ஒண்ணும் மாறமாட்டேங்குது! பகவான்:சரணடைஞ்சாலும் ஒண்ணும் மாறமாட்டேன்றது..... அப்படின்னெல்லாம் குறை சொல்லக் கூடாது. சரணடைஞ்சுட்டா... அவர் எப்படி நடத்தறாரோ நடத்தட்டும்ன்னு... அவரிஷ்டத்துக்கு விட்டுடணும். நம்மளோட இஷ்டப்பிரகாரம் நடக்க வேண்டாம். உங்க இஷ்டப் பிரகாரமே நடத்துங்கோன்னு விட்டுடணும் அதுக்கு வருத்தப்படக் கூடாது. துன்பமா இருக்கறமாதிரி இருக்கும். முடிவிலே வேறுவிதமா இருக்கும். நமக்கு அதெல்லாம் பிடிபடாது. கேள்வி: நாங்க உங்கள மாதிரி இல்லை! எங்களுக்கு எல்லாம் குடும்பம் சொந்தம் பந்தம்னு நிறைய இருக்கு. அவங்கள்லாம் எக்கேடும் கெட்டுப் போகட்டும்! உன் இஷ்டம்ன்னு இருக்க முடியல பகவானே! பகவான்: அப்போ நீங்க சொன்ன மாதிரி சரணடையலேன்னுதான் அர்த்தம். எல்லாத்தையும் இறைவன் பாரம்ன்னு ஒப்படைச்சுடுங்கோ. கேள்வி: உடம்பில ஒரு பூச்சி ஏறுறது தெரியாம... ஏதாவது ஒரு யோசனையிலேயே மூழ்கி இருக்கலாம். ஆனா யோசனையே இல்லாம இருக்கலாம்னு சொல்றீங்களே... மனசைக் கடந்து இருக்க முடியுமா? பகவான்: முடியும். இருக்கறது ஆத்மா ஒண்ணுதான். அதுதான் மூணு நிலைமைலேயும் இருக்கு... மாறாம இருக்கு. தூக்கத்துலே நான்கற எண்ணம் இல்லை. அது வந்த உடனே விழிச்சுக்கறோம். உடலுலகம் வந்துடறது. தூங்கும்போது இந்த ராமமூர்த்தி எங்கே போனார்? நீங்க தூங்கும்போது இருந்தேளா? இல்லையா? தூங்கும்போது ராமமூர்த்தி இருந்திருக்கணும். ஆனா..... இப்போ இருக்கற ராமமூர்த்தியா இல்லே. இப்போ இருக்கறதுக்கு பெயர் 'நான்'கற முதல் எண்ணம். தூங்கும்போது இருக்கறதுக்கு பெயர்தான் உண்மையான 'நான்'. இந்த 'நான்'... மூணு நிலைமைலேயும் மாறாம இருக்கு. அது அறிவாவும் இருக்கு. 'நான்'கறது என்னன்னு தெரிஞ்சுகொண்டா... அது நினைப்புக்கு அப்பால்ன்னு தெரியும். கேள்வி: சிந்திக்காம இருக்க முடியுமா? பகவான்: மற்ற உடலியக்கங்கள் மாதிரி அதுவும் ஒரு இயக்கந்தான். அது இயங்கினாலும், இயங்கலேன்னாலும் நான்கற அறிவைப் பாதிக்காது. கேள்வி: பிறர் என்ன நினைக்கறாங்கன்னு தெரிஞ்சுக்க முடியுமா? பகவான்: மத்தவாளப் பத்தி நமக்கென்ன... நம்மளோட கதையப் பாப்போம். நாமதான் எல்லோரும். நமக்கு அன்னியமா யாரும் இல்லே. பக்கம்: 52 - 55. அப்பனேஅருணாசலம். 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
5.8K காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
அருணாசலத்தைப்பற்றி அதிற் கூறியிருந்ததைப்பற்றி பின்வருமாறு பகவான், சிவ புராணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் சுருங்கக் கூறியருளினார்: சிவபெருமான் நிஷ்கலம், இரண்டுமாவான். அனைத்திற்கும் அதீதமான நிர்க்குண ஸ்வரூபமே நிஷ்கலமென்றும் அனைத்தின் அந்தர்யாமியா இருக்கும் பான்மையே ஸகலமென்றும் சொல்லப்படும். ஆதியில் அருணாசல வடிவிற் தோன்றியது லிங்கம் இன்றும் விளங்கிக் கொண்டுள்ளது. இவ்வருணாசல லிங்கம் முதன் முதற் தோன்றியது மார்கழி மாத ஆருத்ரா (திருவாதிரை) நக்ஷத்ர நன்னாளில்; அதனை அதில தேவர்களும் முதன் முதல் வழிபட்டேத்தியது மாசி சிவராத்திரியின் போது. சிவராத்திரியின் மஹத்துவம் இதனால் விளக்கமாம். பிரணவம் சிவனது நிஷ்கல ஸ்வரூபத்தையும் பஞ்சாக்ஷ மஹாமந்த்ரம் பஞ்சகிருத்யங்களையும் செய்தருளும் அவனது பாவன ஸகல ஸ்வரூபத்தையும் குறிப்பவனாம் பகவானுக்குத் தொண்டு புரிந்து வந்த பழவடியா ரொருவர் (பகவானால் அருளப்பெற்ற) 'அருணாசல பஞ்சரத்ன'த்தின் இரண்டாவது பா வின் பொருளைப்பற்றி வினவினார். பகவான் அதைப் பின்வருமாறு விளக்கியருளினார். ப: உலகம் திரைமீது இலகும் சித்திரம் போன்றது. அத்திரையே அருணாசலம். எதனின்றும் இவ்வுலகாம் சித்திரம் தோன்றுகிறதோ, எதனில் அது மறைகிறதோ, அதற்கன்னியமாம் இருப்பேதும் இச்சித்திரத்திற் கில்லை. உலகின் உண்மை எதுவென்று பார்த்தால் அது அருணாசலமாய் முடிகிறது. அதாவது, இவ்வுலகைக் காண்பவன் யாரென்று உள்ளே நாடினால், அனைத்தையும் காண்பவன் 'நான்' ஒருவனே என்ற முடிவுக்கு வருவோம். அந்த 'நான்' எங்கிருந்து உதிக்கின்றதென்று ஒருமுகமாய் கூர்ந்து கவனித்தால், அவ்வகந்தை 'நான்' மறைந்து, அவ்விடத்தே அகண்டமாய் நான் நானென்று ஒன்று தானே யொளிர்கிறது. இத்தகையதென்று அதைப்பற்றி ஏதும் சொல்லவே முடியாது; தாகார அனுபவமாம் அதை விஷயீகரிக்க முடியாது. ஆனந்த அதுவே அனைத்துயிரின் மையம். ஆதலால் அது வழங்கப்பெறும். அந்தர்முகப்பட்டு அதை உணர்வதே ஒருவனே சிவஞானப் பெருங்கடலாவான்) - ஆன்றோர் வாக்கு நமோ ரமணா 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
3.9K காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
சிவமணியம் கேள்வி: அதை எப்படி செய்யறது? பகவான்: நமக்கு மனசு இருக்குன்னு எப்படித் தெரியறது? அதோட செயல்களாலே. அதாவது நினைப்புகளாலே. எப்பெல்லாம் நினைப்பு வருதோ... அப்போல்லாம் நினைப்பு பெருமாளோடதுன்னு மறக்காம இரும்! பெருமாளை விட்டு நினைப்பு தனியா இருக்காது. இதுதான் மனசை ஒப்படைக்கறது ஓய். ஏதாவது இங்கே பெருமாளை விட்டு இருக்குமா? எல்லாம் பெருமாள்தான். எல்லார் மூலமாவும் செயல் படறார். நாம ஏன் கவலைப்படணும் ஓய்? கேள்வி: காலம்ன்னா என்ன? பகவான்: ஒரு நிலைக்குள்ளே, நம்மளாலே அறியப்பட்டு, மாற்றங்களுக்கு ஆளாவதே காலம். இரண்டு நிகழ்ச்சிகளுக்கு, இடையிலே இருக்கற இடைவெளிதான் காலம். மனம் இல்லேன்னா நிலை ஏற்படாது. மனம் ஆத்மாவிலே இருந்து வர்றது. தேசம் காலம் இரண்டும் மனசோட கற்பனை. ஆனா நம்மளோட சொரூபம் மனம் கடந்தது. அதனாலே காலத்தைப் பற்றிய கேள்வியே.. நாம ஸ்வபாவத்திலே இருந்தா ஏற்படாது. கேள்வி: பகவான் சொல்றது, கேக்கறதுக்கு அவ்வளவு சந்தோசமாயிருக்கு. ஆனா அதோட பொருள் எங்களோட அறிவுக்கு அப்பாற்பட்டு இருக்கு. ஞானமடைய நினைக்கறதுக்கு கூட, ரொம்பத் தூரம் நானெல்லாம் போகணும். அப்பொழுது இன்னொருத்தர். கேள்வி: எங்களுக்கு புரியறது எல்லாம புத்தியிலதான். ஏதாவது பகவான் அப்பியாசம் சொன்னா... எங்களுக்கு ரொம்ப உதவியாயிருக்கும். பகவான்: உண்மையைத் தேடறவா, எதையாவது, அதைச் செய்... இதைச் செய்ன்னு சொல்றவன், உண்மையான குரு கிடையாது. அவாளே அதையும், இதையும் செஞ்சு, இளைச்சுப் போய்தான் வந்துருக்கா. அவாளுக்குத் தேவையெல்லாம் அமைதியும், சுகமும்தான். அவாளே எல்லாம் ஓயணுங்கறா. அவாளைச் சும்மாயிருன்னு சொல்லி சுகப்படுத்தாமே... எதையாவது செய்யச் சொன்னா, அவன் குரு இல்லை. கொலைகாரனோ, பிரம்மனோ, யமனோதான் அவன் ரூபத்திலே வந்திருக்கான். அவன் சாதகாளை விடுவிக்க மாட்டான். மாட்டித்தான் விடுவான். கேள்வி: நாங்க சும்மாயிருக்கணும்னு நினைச்சா, அதுவே பெரிய வேலையாயிடுது. சும்மாயிருக்க முடியலை. பகவான்: உண்மைதான். குரங்கை நினைக்காமே மருந்தைக் குடின்னா... மருந்தைக் குடிக்க முடியுமா? அப்படித்தான் சும்மாயிருக்கறதும். சும்மாயிருக்கணும்ன்னு நினைச்சாலே போச்சு... நினைப்பு வந்துடும். கேள்வி: அப்போ எப்படிதான் சும்மாயிருக்கறது? பகவான்: சும்மாயிருந்து எதையோ அடையப் போறாம்ன்னு நினைக்கறேள். என்ன இருக்கு இங்கே அடையறதுக்கு! அடையணும்னா ஏற்கனவே அடையலேன்னுதான் அர்த்தம். நாம இருக்கறதேதான் 'அது' கேள்வி: அப்போ ஏன் எங்களுக்குத் தெரிய மாட்டேங்குது? அப்பொழுது அண்ணாமலைசுவாமி. கேள்வி: நான் ஆத்மாங்கறதை மறக்காம இருக்க எப்பவும் முயற்சி பண்றேன். பகவான்: ஏன் ஒருத்தன் நான் ஆத்மான்னு நினைக்கணும்? அவன் அதுவேதான். நான் மனுஷன்... நான் மனுஷன்னு ஒருத்தன் நினைக்கறானா? கேள்வி: நா மனுஷன்கறது நல்லா ஆழமாயிருக்கு! அதனால தேவையில்லை! பகவான்: ஒருத்தன் ஏன் தன்னை 'நான் மனுஷன்னு' நினைக்கணும். அதுக்கு மாறான 'நான் மிருகம்' ன்னு நினைப்பு வந்தாத்தான்... 'இல்லே... நான் மனுஷன்'ன்னு நினைக்கணும். அதே மாதிரி 'நான் அது' ங்கற நினைப்பு... 'நான் மனுஷன்'கற நினைப்பு இருக்கற வரைக்கும்தான். கேள்வி: நான் மனுஷன்கற நினைப்பு திடமாயிருக்கு. போக்க முடியலை. பகவான்: நீ இருக்கறதா இரு! ஏன் மனுஷன்னு நினைக்கறே! கேள்வி: நான் மனுஷன்கற நினைப்பு இயல்பா இருக்கு. பகவான்: இல்லே. நான் இருக்கேங்கறதுதான் ஸ்வபாவமா இருக்கு. அதை ஏன் மனுஷன்ல சேக்கறே! கேள்வி: நான் மனுஷன்கறது தெளிவாயிருக்கு. 'நான் அது'ங்கறது புத்திபூர்வமா புரிஞ்சுக்கறதாத்தான் இருக்கு. அனுபவமா இல்லை. பகவான்: நீ இதுவும் இல்லை... அதுவும் இல்லை... நான் இருக்கேன்கறதுதான் உண்மை. நான் நானா இருக்கேன். (I Am that I Am) -ன்னுதான் பைபிள்லே சொல்றது. இருக்கறதுதான் ஸ்வபாவம். அதை நான் இந்த உடம்புதான்கற நினைப்புதான் மறைக்கறது. கேள்வி: வோட்டு எடுத்தா என் கட்சிக்குதான் மெஜாரிட்டி கிடைக்கும். பகவான்: நானும் உன் கட்சிக்கே ஓட்டு போடறேன். நானும் நான் மனுஷன்னுதான் சொல்றேன். ஆனா நான் இந்த உடம்பிலே இல்லை. இந்த உடம்புதான் என் மேல இருக்கு. அதுதான் வித்தியாசம். கேள்வி: மனுஷ உபாதியை போக்கணும்லையா. பகவான்: தூங்கும்போது எப்படி இருக்கே? அப்போ மனுஷ உபாதி என்ன ஆச்சு? கேள்வி: அப்போ தூங்கும்போது இருக்கற மாதிரி இப்போ இருக்கணும்... பகவான்: ஆமாம். அதுதான் ஜாக்ர சுஷுப்தி. ஒரு பெண்மணி பகவான் முன்னாடி ஒரு பக்தி பாடல் பாடினார். த்வமேவ மாதா (நீயே அம்மா) பிதா த்வமேவ (நீயே அப்பா) த்வமேவ பந்து (நீயே சொந்தம்) த்வமேவ சர்வம் (நீயே எல்லாம்) பகவான்: ஆமா... ஆமா... எல்லாம் நீ... நான் மட்டும் நீ இல்லை. நானே நீ...ன்னு முடிச்சுட வேண்டியதுதானே. பக்கம்:570 - 574. அப்பனேஅருணாசலம். 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.3K காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
🧡ஒரு நாள் சூரி நாகம்மா,பகவானை வணங்கியப் போது நடுங்கிய குரலில் பகவானே...!நான் முக்தியடைய வழிக் காட்ட வேண்டும், என்றார். 🧡கருணையே உருவான பகவான், திரும்பி,அவரை நோக்கி தலையை அசைத்து ஒப்புதல் அளித்தார். 🧡பகவானின் இச்செயல் விசித்திரமானதாக இருந்தது. 🧡ஏனென்றால் இத்தகைய கேள்விக்கு எதிர்க்கேள்வியாக,யார் முக்தியை விரும்புகிறார்❓ 🧡யார் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்❓ 🧡என்பதாகவோ,அல்லது மௌனமாகவேத்தான் இருக்கும் அவரது பதில். 🧡இதுப்பற்றி நாகம்மா எச்சம்மாளிடம் கூறியப் போது, நீ எத்தனை பாக்கியசாலி! 🧡பகவான் விரைவிலேயே உனக்கு அபயம் கொடுத்துள்ளார்,என்று எச்சம்மாள் கூறினார். 🧡அவர் கூறியதன் பொருளென்ன❓ என்று நாகம்மா வினவியப் போது 🧡இப்போதிலிருந்து உனக்கு பிறப்பும்,இறப்பும் இல்லை. 🧡பகவான் உன்னை ஏற்றுக் கொண்டு விட்டார். 🧡உனக்கு இனி பயம் இல்லை. அதுவே தான் உனக்கு முக்தி என்று விளக்கிக் கூறினார். 🧡பகவான் தன் முழு கவனத்தையும் நாகம்மா மீது செலுத்தினார். 🧡ஒரு நல்ல மாணவியைப் போன்று அவரும்,பகவானுடைய உபதேசமான ஆத்ம விசாரத்தில் மூழ்கினார். 🧡அவ்வப்போது அவரால் ஆழ்ந்த தியானத்தில் இருக்க முடிந்தது, என்றாலும்,இடையிடையே அவரை எண்ணங்களும் திசை திருப்பின. 🧡குறிப்பாக பகவான் முன் அமர்ந்து கண்களை மூடி தியானிக்கும் போது,இந்த எண்ணங்கள் என்னை சூழ்ந்துக் கொள்ளும். 🧡நான் கண்களை திறந்துப் பார்த்தால் பகவானுடைய கவனம் என் மீது பதிந்திருக்கும்,என்று கூறியதோடு எனது எண்ணங்களையெல்லாம் பகவான் விரட்டினார்,என்று தெரிவித்தார். 🧡நாகம்மா இயற்கையாகவே சிறந்த கவியாகவும்,எழுத்தாளராகவும் இருந்தார். 🧡பகவான் தடைகள் ஏதும் பிறப்பிக்காதப் போதும்,அந்த நாட்களில்,பெண்கள் பகவானை அணுகி சகஜமாக பேசத் தயங்குவார்கள். 🧡கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில்,அது மேலும் கடினமாக இருக்கும். 🧡அத்தகைய தினங்களில்,தியானம் பற்றித் தனக்கு அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் கோரி, நாகம்மா,பகவானுக்கு ஒரு சீட்டு எழுதி அனுப்பி வைப்பார். 🧡அந்த சந்தேகங்களையெல்லாம் நீங்கள் எதற்காக கவனிக்கிறீர்கள்❓ அவ்வாறு செய்வாதால் நீங்களே அவற்றிற்க்கு சக்தி அளிக்கிறீர்கள்,பதிலாக இதயத்தில் ஆழ்ந்து மூழ்குங்கள்,என்று பகவான் அவரை கடிந்துக் கொள்வார். 🧡ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்து,என்னுடைய அக நோக்கை வலுப்படுத்தியப் போது, சுற்றி வளைக்காமல்,நேரடியாக அதை நிலைப்படுத்தினார். 🧡பகவான்,அது காய்ந்து போன நிலத்தில் தண்ணீர் பாய்ந்து, பூக்களை மலர்விப்பது போன்று இருந்தது. 🧡என்னுடைய ஆன்மீக வாழ்கை அத்தகையது என்று கவிதை நடையில் சூரி நாகம்மா கூறுவார். 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
*பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் – 146 ஆவது ஜயந்தி வைபவம்* ஞானச் சுடர் உதித்த நன்னாள் கௌண்டின்ய நதிக்கரையில், பூமிநாதரும் ஸஹாயவல்லியும் அருள்பாலிக்கும் புண்ணியத் தலமான திருச்சுழி, ஒரு ஞானப் புரட்சிக்கு வித்திட்டது. 1879-ஆம் ஆண்டு, மார்கழித் திருவாதிரை நன்னாளில் (டிசம்பர் 30), நடராஜப் பெருமானின் வீதியுலா முடிந்த அந்த அமைதியான நள்ளிரவில், சுந்தரமய்யர் - அழகம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் வேங்கடராமன். அக்குழந்தை நிலவுலகில் உதித்த அந்த விநாடியில், அங்கிருந்த கண்பார்வையற்ற மூதாட்டி ஒருவர் பேரொளியைக் கண்டு கண்பார்வை பெற்றார். அந்தச் சிறு சுடரே பின்னாளில் உலகிற்கு ‘நான் யார்?’ எனும் தத்துவத்தை வழங்கிய அத்வைத ஞானி பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி! திருச்சுழியில் நிகழ்ந்த அந்த அதிசய ஜனனம் எவ்வாறு ஒரு ஞானப் பேரொளியைத் தோற்றுவித்ததோ, அதே பேரொளி இன்றும் மாறாத அருளுடன் ஸ்ரீ ரமணாச்ரமத்தில் ஜயந்தி விழாவாக பக்தர்களின் இதயங்களைக் கொண்டாட்டத்தில் நனைக்கிறது. அருணாசல ரமணரின் 146-ஆவது ஜயந்தி விழா “ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், அன்பர்களின் இதயங்களில் ஆனந்த வெள்ளத்தைப் பாய்ச்சும் ஒரு மகா சங்கமம் - ரமண ஜயந்தி!” பகவான் ரமணரின் அணுக்கத் தொண்டர் எஸ்.எஸ். கோஹன் குறிப்பிடுவது போல, பழைய பக்தர்கள் பகவானின் மௌன மாற்றத்தையும், புதிய பக்தர்கள் தங்களின் ஆன்மீகத் தேடலுக்கு அவர் அளிக்கும் உத்வேகத்தையும் இன்றும் அனுபவப்பூர்வமாக உணர்கின்றனர். அவர் உடலைத் துறந்தாலும், அந்த ஞானப் பேரொளி இன்றும் பக்தர்களின் வழித்துணையாகவே இருக்கிறது. இன்றைய வைபவம் (4/1/2026): ஸ்ரீ ரமணாச்ரமத்தில் இன்று 146-ஆவது ஜயந்தி விழா பக்திப் பெருக்குடன் அரங்கேறியது. வைகறைப் பொழுதில் ஒலித்த தனுர் மாதப் பாக்களும், ஆச்ரமத்தின் திசையெங்கும் எதிரொலித்த மஹன்யாச ருத்ரஜப மந்திரங்களும், ஜயந்தி பாராயணங்களும் பக்தர்களின் உள்ளங்களில் ஒரு தெய்வீகப் பேரமைதியை நிலைநாட்டின. வண்ண மலர்களின் எழிலாலும், நறுமணத் திரவியங்களின் நறுமணத்தாலும் குரு ரமணனுக்கு நிகழ்த்தப்பட்ட விமரிசையான அபிஷேக அலங்காரங்கள், காண்போர் கண்களுக்கு ஒரு தெய்வீக விருந்தாக அமைந்தன. பக்தர்கள் தங்கள் இதயங்களில் ஊறிய பாமாலைகளையும், கரங்களால் தொடுத்த பூமாலைகளையும் கொண்டு ‘அருணாசல ரமணனை’ மனம் உருகி வழிபட, மகா தீபாராதனையின் ஒளிவெள்ளத்தில் இவ்விழா இனிதே நிறைவுற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையால் ஆச்ரமமே விழாக்கோலம் பூண்டிருந்த வேளையில், குருவருளின் பிரசாதமாக அனைவருக்கும் மனநிறைவளிக்கும் சிறப்பு உணவு விருந்து உபசரிக்கப்பட்டது. 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
❤️1967-ல் பகவானுடைய ஸமாதிக் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, இரண்டாவது முறையாக ஜானகி மாதாவிற்கு முழு அங்கீகாரம் அளித்ததை காண முடிந்தது. ❤️இந்து மத சம்பிரதாயப்படி, இம்மாதிரியான வைபவங்களில் ஞானி ஒருவர் விழாவிற்கு அழைத்தது,அவர் அந்த இடத்தைத் தொட்டு புனிதப்படுத்தச் செய்வது வழக்கம். ❤️பகவானது காரியங்களை நிர்வகிக்க ஆஷ்ரமத்தில் அறங்காவலர்கள் குழு ஒன்று இருந்தது. ❤️எனது தந்தை அதன் தலைவராக இருந்தார். ❤️இந்தக் குழு என்னை அழைத்து பகவானது ஸந்நிதியில் அமைந்துள்ள லிங்கத்தை புனிதப்படுத்த,ஜானகி மாதாவை அழைக்குமாறு கேட்டுக் கொண்டது. ❤️லிங்கத்தை தொட்டவுடனே பரவச நிலையை எய்தினார் ஜானகி மாதா. ❤️"ஜய் ரமணேசா...!"ரமண குரு" ரமணப்பா...!ரமண தேவா...!குரு ரமணா...!என்றெல்லாம் அவர் உரக்க விளித்தப் போது,அங்கிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களும்,விருந்தினர்களும் முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பேரானந்தத்தை அடைந்தனர். ❤️கும்பாபிஷேக விழாவில் அவரை சந்தித்த நான்,அவரது பாதங்களில் என் தலையை வைத்து வணங்கி, ஓ...!மாதா என்னை ஆசிர்வதியுங்கள், என்னை வழிநடத்துங்கள் என்று பிராத்தித்தேன். ❤️அவருடைய உபதேசங்கள் எனக்கு மிகவும் புனிதமானவை, பூஜிக்கத்தக்கவை. ❤️அவர் என்னிடம்,ஸத்குரு ரமணரின் திருப்பாதங்கள் இரண்டையும் இறுகப் பிடித்துக் கொள்! ❤️துன்பத்தில் உழலும் ஜீவன்களை காப்பாற்றுபவர் அவரே. ❤️அவருடைய உபதேசங்களை கடைபிடி. ❤️பகவானுடைய இரண்டு பாதங்கள் என்று குறிப்பிடும் போது அது, அவருடைய உபதேசங்களை அனுதினமும் பழகுவதேயாகும். ❤️அத்திருப்பாதங்கள் உன் இதயத்தில் எப்போதும் பதிந்திருக்க வேண்டும். ❤️இதயமே ரமணர்! என்று ஜானகி மாதா உபதேசித்தார். 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்