பகவான் ரமணர்

ரவிசங்கர் ராஜா, ஆரணி
593 views
1 days ago
AI indicator
🌹பகவான் ரமண மகரிஷி கிருபை வாழ்க 🙏🙏 ☘️☘️அக்ஷரமணமாலை 39. ஞமலியிற் கேடா நானென் னுறுதியா னாடிநின் னுறுவே னருணாசலா (அ) 🌹🌹பொருள்🌹🌹 அருணாசலா! அறிவில் நாயினுங் கடையான நான் உன் அருள் வலி (பலம்) அல்லாத வேறெந்த வலி கொண்டு உன்னைத் தேடியடைய வல்லேன். (அருணாசலா! நான் நாயினும் இழிவானவனா? நிச்சயமாய் இல்லை. என்னுடைய சொந்த பலத்தால் நான் உன்னைத்தேடி அடைவேன் மற்றொரு பொருள்) அப்பனே அருணாச்சலா 🌹 ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻 ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️
E.MAGESH.
2.8K views
2 days ago
குரு பகவான் போற்றி 🙏🙏🙏 தஷ்ணாமூர்த்தி நமக #குரு பகவான் 🙏
ரவிசங்கர் ராஜா, ஆரணி
596 views
2 days ago
AI indicator
குருவாசகக்கோவை 128. எதிர்ந்தவுல கேதப்பா டெய்துவித்த லெண்ணா திதந்தருமெய் யாப்பற்றி யிட்டார் - மிதந்த உளியம் புணையெனக்கொண் டூர்ந்தாற்போ லாழ்ந்து விளிவர் பிறவி வெளத்து. பதச்சேதம்:- எதிர்ந்த உலகு ஏதப்பாடு எய்துவித்தல் எண்ணாது இதம் தரு மெய்யாப் பற்றியிட்டார் மிதந்த உளியம் புணை எனக்கொண்டு ஊர்ந்தால்போல் ஆழ்ந்து விளிவர் பிறவி வெளத்து. அரும்பதவுரை:- எதிர்ந்த - தன்முன் இருக்கின்ற; ஏதப்பாடு - கேடு; பற்றியிட்டார் - பற்றிக்கொண்டவர்கள்; உளியம் - கரடி; புணை - தெப்பம்; ஊர்ந்தால் - மிதந்துசென்றால்; விளிவர் - அழிவர். ஶ்ரீ சாதுஓம் சுவாமிகள் உரை:- கண்முன் காணப்படும் உலகம் தனக்குக் கேட்டை யுண்டுபண்ணுவதை அறியாமல் அது நன்மை தரக்கூடியதோர் உண்மையான பொருள் என்று கருதி அதைப் பற்றி நிற்போர் மிதந்து வரும் கரடியைத் தெப்பமெனப் போய்ப் பற்றிக் கொண்டு அதனுடன் மிதந்து சென்ற ஒருவனைப் போல், பிறவிக் கடலில் மூல்கி யழிவர். விளக்கக் குறிப்பு:- நல்லதோர் தெப்பமென்று அறியாமையால் முதலில் எண்ணிப் பற்றிக் கொண்ட பின் 'அது கரடி' என்றறிந்தாலும், அதை விட்டுவிடக் கருதி முயன்றாலுங்கூடி அது நம்மை விடாதது போல், உலகம் சத்தியம் என்ற அறியாமையால் அதன்பால் விசுவாசத்தோடு வளர்க்கப் பெற்ற வாசனைகளின் வலிவானது, மெய்யுணர்ந்த பெரியோர்களால் பிறகு "அது அசத்தியக் கற்பிதம்" என்று போதிக்கப்படும்போது கூட அதை விட நினைத்தாலும் மீண்டும் மீண்டும் நம்மைப் பகிர்முக விருத்திகளிலேயே இழுத்து ஆழ்த்தி வருத்தும் என்றவாறு. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏽 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
ரவிசங்கர் ராஜா, ஆரணி
601 views
2 days ago
AI indicator
🌹பகவான் ரமண மகரிஷி கிருபை வாழ்க 🙏🙏 ☘️☘️அக்ஷரமணமாலை 38. சௌரியங் காட்டினை சழக்கற்ற தென்றே சலியா திருந்தா யருணாசலா (அ) 🔥🔥பொருள்:🔥🔥 அருணாசலா! ஞானசூரனான அருணாசலா! நின்னருட் சௌரியங்காட்டினை; என் அவித்தையிருள் அற்றொழிந்தது; நீயும் நின்னிலையில் அமைதியாய் அசைவற்றிருந்தாய் அப்பனே அருணாச்சலா 🌹 ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻 ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய 🚩🕉🪷🙏🏽 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.5K views
6 days ago
AI indicator
பகவான் ரமண மகரிஷி கிருபை வாழ்க 🙏🙏 ☘️☘️அக்ஷரமணமாலை 36. சொல்லாது சொலிநீ சொல்லற நில்லென்று சும்மா விருந்தா யருணாசலா (அ) 🌹🌹பொருள்:🌹🌹 அருணாசலா! பேச்சறச் சும்மா இரு, என்று வாய் வார்த்தையாற் கூறாது மோன முத்திரையால் கூறி, (அதற்கேற்பவே நீயும்) பேச்சுமூச்சற்றுச் சும்மாவிருந்தாய். அப்பனே அருணாச்சலா 🌹 ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻 ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி